search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரத்தில் ரூ.54 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி- கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்
    X

    காஞ்சிபுரம் கலெக்டர்

    காஞ்சிபுரத்தில் ரூ.54 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி- கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்

    • சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.48 ஆயிரத்து 710 மதிப்பில் இஸ்திரி பெட்டிகளை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.
    • வாலாஜாபாத் வட்டத்தை சார்ந்த 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 208 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டம், நெமிலி கிராமத்தை சார்ந்த நரிக்குறவர் இன 38 குடும்பங்களுக்கு ரூ.54 லட்சத்து 29 ஆயிரத்து 710 மதிப்பில் இலவச பட்டாக்களையும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.48 ஆயிரத்து 710 மதிப்பில் இஸ்திரி பெட்டிகளையும், வாலாஜாபாத் வட்டத்தை சார்ந்த 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பிரகாஷ் வேல் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×