என் மலர்
காஞ்சிபுரம்
- காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
- 221 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 244 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 181 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 263 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
221 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 244 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 181 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- மழைநீர் தேங்காத வண்ணம் உபயோகமற்ற பொருட்களை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
- வடிகால்வாயில் குப்பைகள் தேங்கி நிற்பது மற்றும் தெருவிளக்கு தொடர்பான புகார்களை மாநகராட்சியில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தினமும் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
மழைநீர் தேங்காத வண்ணம் உபயோகமற்ற பொருட்களை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதி நடத்துவோர் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சிய குடிநீரை வழங்க வேண்டும்.
மாநகராட்சி குடிநீர் குழாய்களில் ஏதேனும் கசிவு, சாலைகளில் மழைநீர் தேக்கம், வடிகால்வாயில் குப்பைகள் தேங்கி நிற்பது மற்றும் தெருவிளக்கு தொடர்பான புகார்களை மாநகராட்சியில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். கட்டண மில்லா தொலைபேசி எண் 1800-425-2801 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பார்ப்பதற்கு கடல்போல் காட்சி அளிக்கிறது.
- செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றர்.
பூந்தமல்லி:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தது.
இதனால் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்தானது அதிகரிக்க தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதற்கட்டமாக 100 கன அடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பலத்த மழை இல்லாததால் ஏரிக்கு நீர்வரத்து 2131 கன அடியாக குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் 1000 கன அடியில் இருந்து 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ள ளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2830 மி.கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 20.90 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பார்ப்பதற்கு கடல்போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றர். பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபட்டு வருகிறார்கள்.
+2
- அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருவதால் எந்த சேதாரமும ஏற்படாது.
- வரும் 16ம் தேதி மிகப்பெரிய மழை வரும் என கூறியிருக்கிறார்கள்
சென்னை:
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில்வ நீரின் இருப்பு குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இப்போது 2786 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினையில்லை. இன்னும் தண்ணீர் வந்தாலும் தாங்கும் சக்தி ஏரிக்கு உண்டு. இன்னும் மழை வரும் என எதிர்பார்க்கிறோம். 16ம் தேதி மிகப்பெரிய மழை வரும் என கூறியிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கணித்து, நீர் வரத்து, நீர் வெளியேற்றுதல், பருவநிலை, மழை அளவு ஆகியவற்றை அதிகாரிகள் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள். ஆகவே எந்த சேதாரமும ஏற்படாது.
ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் அனகாபுத்தூர் வழியாக அடையாற்றில் கலக்கிறது. ஏரியின் கரைகள் கட்டப்பட்டுள்ளதால் கரையோர கிராமங்கள் பாதுகாப்பாக உள்ளன. தண்ணீர் வரத்து அதிகமாகி, கரையோர பகுதிகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றாலும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ஆர்த்தி மற்றும் நீர்வளத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்,
- குடும்ப நல நீதிமன்ற வழக்கு என 700 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 520 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
- தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ.8 கோடியே 59 லட்சத்து 96 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட சட்ட பணிகள் குழு சார்பில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சார்பில் (லோக் அதாலத்) நடை பெற்றது.
மாவட்ட நீதிபதி எம். இளங்கோவன் தலைமை தாங்கினார்.இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி வாரா கடன் வழக்கு, காசோலை வழக்கு, நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு, குடும்ப நல நீதிமன்ற வழக்கு என 700 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 520 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
தீர்வு காணப்பட்டவர்களுக்கு ரூ.8 கோடியே 59 லட்சத்து 96 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் நீதிபதி திருஞானசம்பந்தம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, கூடுதல் உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வாசுதேவன், வக்கீல்கள் சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் ஹரிகரன் வழக்கறிஞர் சங்கத் தலைவர் டி கார்த்திகேயன் செயலாளர் கார்த்திகேயன் அட்வகேட் சங்க தலைவர் ஜான், செயலாளர் துரை முருகன் அரசு வழக்கறிஞர்கள் பி. கார்த்திகேயன் சத்தியமூர்த்தி கலந்து கொண்டனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 1155 ஏரிகள் உள்ளன.
- ஏரிகளுக்கு நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 141 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.
143 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 360 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 265 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிறைந்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 1155 ஏரிகள் உள்ளன. இதில் 145 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பி உள்ளது. 227 ஏரிகள் 75 சதவீதமும், 332 ஏரிகள் 50 சதவீதமும், 293 ஏரிகள் 25 சதவீதமும், 152 ஏரிகள் 25 சதவிகிதத்திற்கும் கீழும் நிரம்பி இருக்கிறது.
ஏரிகளுக்கு நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
- பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் சேர்ந்த கழிவு நீரால் சிலர் சளி, தலைவலி, காய்ச்சல், வாந்தி-பேதி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 23-வது வார்டு நேதாஜி தெருவில் கழிவு நீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இந்த பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் மாநகராட்சிக்கு சென்று கழிவுநீரை அகற்றுவது தொடர்பாக புகார் மனு அளித்தனர்.
சுமார் 4 மாதங்கள் கடந்த பின்பும் இந்த பகுதியில் வெளியேறும் கழிவு நீரை அகற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் சேர்ந்த கழிவு நீரால் சிலர் சளி, தலைவலி, காய்ச்சல், வாந்தி-பேதி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட 15-வது வார்டு பல்லவர் மேடு அருந்ததி பாளையம் என்ற பகுதியில் மழை நீர் தேங்கி வெளியேறாமல் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவமழை காலத்திலும் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் தேங்கும் மழை தண்ணீரை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மரம் மின்சார வயர் மீது விழுந்ததால் மின் வயரும் மரத்தோடு சேர்ந்து சாலையின் குறுக்கே கீழே விழுந்துள்ளது.
- ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ராட்சத மரம் வேருடன் சாய்ந்து முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இந்த மரம் மின்சார வயர் மீது விழுந்ததால் மின் வயரும் மரத்தோடு சேர்ந்து சாலையின் குறுக்கே கீழே விழுந்துள்ளது. இதனால் ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்துக் கிடந்தன. மேலும் திருவள்ளூரிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாததால் அவதியுற்று வருகின்றனர். சாலையின் குறுக்கே விழுந்துள்ள மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
- காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- மின் மோட்டாரை மாநகராட்சி ஊழியர்கள் இயக்கியபோது மழை நீரை உறிஞ்சும் பகுதியிலிருந்து சரியாக மழை நீரை உறிஞ்ச முடியாததால் அதனுடன் மாநகராட்சி ஊழியர்கள் சில நிமிடங்கள் போராடினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதலே கன மழையானது பெய்ய தொடங்கி அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் எம்.ஆர்த்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியிலுள்ள லிங்கப்பன் பாளையம் தெருவில் காலையிலிருந்து பெய்த மழையினால் சாலையில் தேங்கி நிற்கும் மழை வெள்ள நீரை சிறிய மின் மோட்டார் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றும் பணியினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மின் மோட்டாரை மாநகராட்சி ஊழியர்கள் இயக்கியபோது மழை நீரை உறிஞ்சும் பகுதியிலிருந்து சரியாக மழை நீரை உறிஞ்ச முடியாததால் அதனுடன் மாநகராட்சி ஊழியர்கள் சில நிமிடங்கள் போராடினர்.
பின்னர் ஒரு வழியாக மோட்டாரின் ஒரு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த குழாய் மூலம் மழை வெள்ள நீரானது உறிஞ்சப்பட்டு மற்றொரு நீண்ட குழாய் மூலம் பக்கத்து தெருவிற்கு வெளியேறுவதற்கு முன்னதாகவே, குழாயில் இருந்த ஓட்டை வழியாக மழை வெள்ள நீரானது பீச்சி அடித்துக்கொண்டு வெளியேறி சாலையில் விழுந்தோடி மீண்டும் மழை நீர் தேங்கி நிற்கும் இடத்திற்கே வந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கலெக்டர், இவ்வாறு இருந்தால் மழை நீர் எவ்வாறு வெளியேறும், மின் மோட்டாரின் இயக்கத்தை நிறுத்தச் சொல்லுங்கள்.
பணியினை சரியாக மேற்கொள்ளுங்கள் என மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தார். இதை தொடர்ந்து உடனடியாக மின் மோட்டார் நிறுத்தப்பட்டது.
மாவட்ட கலெக்டரின் திடீர் ஆய்வின்போது மழை நீர் வெளியேற்றும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாகவே கையாண்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
- மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் டைட்டல் மேத்தா.
- பயணிகள் விமானத்தில், அவருடைய சொந்த ஊரான புனே செல்ல விருந்தாா்.
ஆலந்தூர்:
மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் டைட்டல் மேத்தா (வயது 61). இவர் மங்களூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தார்.
அதன் பின்பு அவா், இன்று அதிகாலை 3.15 மணிக்கு, சென்னையில் இருந்து புனே செல்லும் மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அவருடைய சொந்த ஊரான புனே செல்ல விருந்தாா். அதிகாலை 2.45 மணிக்கு திடீரென அவர் மாரடைப்பால் மயங்கி கீழே விழுந்து இறந்தார்.
- காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
- 138 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழ் நிறைந்துள்ளதாக பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
98 ஏரிகள் 75 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை, 256 ஏரிகள் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை, 328 ஏரிகள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை, 138 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழ் நிறைந்துள்ளதாக பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இடி, மின்னலின்போது வெட்டவெளியில் நிற்கக்கூடாது.
- மின்பெட்டி அருகில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்லக்கூடாது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மழைகாலத்தில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது. மழையாலும் பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்கம்பி அருகில் செல்லக்கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பியை தொடாதீர்கள். அவ்வாறு அறுந்து கிடந்தால் அதுபற்றி உடனே மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். மின்பெட்டி அருகில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்லக்கூடாது. அவ்வாறு தேங்கி இருந்தால் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இடி, மின்னலின்போது வெட்டவெளியில் நிற்கக்கூடாது. கான்கிரீட் கட்டிடம், வீடுகளிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடைய வேண்டும். இடி, மின்னலின்போது மரத்தின் அடியிலோ பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழோ நிற்க வேண்டாம்.
தஞ்சமடைய எதுவும் இல்லாத நிலையில் மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியை தேர்வு செய்ய வேண்டும். இடி, மின்னலின்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகல வேண்டும். டிவி, மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது.
திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் நிற்கக்கூடாது. ஸ்டேகம்பி மற்றும் மின் கம்பங்களில் கொடி கயிறு கட்டக்கூடாது. ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் கட்டக்கூடாது. மின்தடை புகார்களுக்கு 9498794987 என்ற 24 மணி நேரமும் செயல்படும் செல்போன் சேவையை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக் கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






