search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு-திருவள்ளூர் மாவட்டத்தில் 289 ஏரிகள் நிரம்பின
    X

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு-திருவள்ளூர் மாவட்டத்தில் 289 ஏரிகள் நிரம்பின

    • திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 1155 ஏரிகள் உள்ளன.
    • ஏரிகளுக்கு நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 141 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    143 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 360 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 265 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிறைந்து இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 1155 ஏரிகள் உள்ளன. இதில் 145 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பி உள்ளது. 227 ஏரிகள் 75 சதவீதமும், 332 ஏரிகள் 50 சதவீதமும், 293 ஏரிகள் 25 சதவீதமும், 152 ஏரிகள் 25 சதவிகிதத்திற்கும் கீழும் நிரம்பி இருக்கிறது.

    ஏரிகளுக்கு நீர் வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×