என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாமண்டூர் ஏரி"

    • 30 அடி ஆழம் கொண்ட ஏரியில் இருந்து இரண்டு ஷட்டர் வழியாக மற்றும் கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகிறது.
    • முதல் ஷட்டரில் 485 கன அடியும், இரண்டாவது ஷட்டரில் 200 கன அடியும் என 685 கன அடி நீர் வெளியேறுகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதற்கிடையே தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம் அருகே உள்ள மிகப்பெரிய ஏரியான மாமண்டூர் ஏரி முழுவதும் நிரம்பி வழிகிறது.

    30 அடி ஆழம் கொண்ட ஏரியில் இருந்து இரண்டு ஷட்டர் வழியாக மற்றும் கலங்கள் வழியாக நீர் வெளியேறி வருகிறது.

    முதல் ஷட்டரில் 485 கன அடியும், இரண்டாவது ஷட்டரில் 200 கன அடியும் என 685 கன அடி நீர் வெளியேறுகிறது.

    ராணிப்பேட்டை மாவட்ட பாலாறு அணைக்கட்டில் இருந்து நீர் வெளியேறி மாமண்டூர் ஏரிக்கு தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் 4118 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×