என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1000 கன அடியாக குறைந்தது
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கன மழை கொட்டி வருகிறது.
- ஏரிமுழுவதும் தண்ணீர் நிறைந்து கடல்போல் காட்சி அளிக்கிறது.
திருவள்ளூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கன மழை கொட்டி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில பெய்து வரும் பலத்த மழை காரணமாக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து முன்எச்சரிக்கையாக கடந்த வாரம் உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மழை குறைந்து உள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. நேற்று 2131 கன அடியாக வந்த தண்ணீர் இன்று காலை 1003 கன அடியாக குறைந்தது. ஏரியில் இருந்த 945 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2835 மி.கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 20.91 அடிக்கு தண்ணீர் உள்ளது.
ஏரிமுழுவதும் தண்ணீர் நிறைந்து கடல்போல் காட்சி அளிக்கிறது. தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றர்.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 513 கனஅடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில்2794 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 710 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.






