என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழைகால நோய் தொற்றை தடுக்க ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு வெந்நீர் வழங்க வேண்டும்- காஞ்சிபுரம் மாநகராட்சி உத்தரவு
- மழைநீர் தேங்காத வண்ணம் உபயோகமற்ற பொருட்களை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
- வடிகால்வாயில் குப்பைகள் தேங்கி நிற்பது மற்றும் தெருவிளக்கு தொடர்பான புகார்களை மாநகராட்சியில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தினமும் குடிநீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
மழைநீர் தேங்காத வண்ணம் உபயோகமற்ற பொருட்களை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். வியாபார நிறுவனங்கள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதி நடத்துவோர் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சிய குடிநீரை வழங்க வேண்டும்.
மாநகராட்சி குடிநீர் குழாய்களில் ஏதேனும் கசிவு, சாலைகளில் மழைநீர் தேக்கம், வடிகால்வாயில் குப்பைகள் தேங்கி நிற்பது மற்றும் தெருவிளக்கு தொடர்பான புகார்களை மாநகராட்சியில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். கட்டண மில்லா தொலைபேசி எண் 1800-425-2801 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






