என் மலர்
காஞ்சிபுரம்
- தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ரூ.8 லட்சத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.
- எண்ணெய் உற்பத்தி செய்து "ஸ்ரீ-காஞ்சி" எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் ஆரம்பிக்கபட்ட மகளிர் உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 1947 உறுப்பிளர்களை ஒருங்கிணைத்து வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்து மதிப்புகூட்டு பொருட்களாக மாற்றி விற்பனை செய்திட, வேகவதி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி. துவக்கி வைத்து தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ரூ.8 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.
இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகளிடம் நேரடியாக உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் வேர்கடலை, எள்ளு மற்றும் தேங்காய் கொள்முதல் செய்து மதிப்பு கூட்டுதல் நடவடிக்கையாக எண்ணெய் உற்பத்தி செய்து "ஸ்ரீ-காஞ்சி" எனும் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் 113 உழவர் உற்பத்தியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- லோகநாதன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
- புள்ளலூர் கிராமத்துக்கு அடிக்கடி வந்து சென்றபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து மாணவியை பரிசோதனைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
இதனை கேட்டு மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மாணவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது கோவிந்தவாடி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் மாணவி நெருங்கி பழகி வந்தது தெரிந்தது. லோகநாதன் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
புள்ளலூர் கிராமத்துக்கு அடிக்கடி வந்து சென்றபோது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர் மாணவியுடன் நெருங்கி பழகியது தெரிந்தது.
இதையடுத்து மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் லோகநாதனை போலீசார் கைது செய்தனர். மாணவியின் கர்ப்பம் தொடர்பாக அடுத்தகட்ட முடிவு எடுக்க போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கட்டுமான பணிகளில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள்.
- போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க அனைத்து கடைகளிலும் போலீசார் கடுமையான சோதனை மேற்கொள்ள வேண்டும்.
காஞ்சிபுரம்:
போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் காவல்துறை மண்டலம் சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 70 பள்ளி-கல்லூரி நிர்வாகிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நடைபெற்றது. தமிழக கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், டி.ஐ.ஜி.பகலவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சுதாகர், பிரதீப் சீபாஸ் கல்யாண் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் உள்ள தொழிற்சாலை, கட்டுமான பணிகளில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். இதனை பார்க்கும் நமது மாணவர்களும், இளைஞர்களும் அதிக அளவில் இதை பயன்படுத்துகிறார்கள்.
இதனை பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்யும்போது காண முடிகிறது. எனவே போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க அனைத்து கடைகளிலும் போலீசார் கடுமையான சோதனை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் கட்டாயம் கண்ணில் தெரியும்படி வைக்க வேண்டும். காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் தடுப்பு குழு உருவாக்கப்படும். அதன் அடிப்படையில் போதை இல்லா காஞ்சிபுரம் மண்டலம் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நள்ளிரவு நேரங்களில் வீட்டின் கட்டிட கழிவுகள், தேவையற்ற பொருட்களை பொதுமக்கள் சாலையோரத்தில் வீசி விட்டு செல்கின்றனர்.
- தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி அந்தந்த பகுதி மண்டல அலுவலருக்கு அறிவுறுத்தியது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கியது. இதனை 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் பேரில் வீடுகளுக்கே சென்று தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கின்றனர்.
ஆனாலும் நள்ளிரவு நேரங்களில் வீட்டின் கட்டிட கழிவுகள், தேவையற்ற பொருட்களை பொதுமக்கள் சாலையோரத்தில் வீசி விட்டு செல்கின்றனர்.
இதையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி அந்தந்த பகுதி மண்டல அலுவலருக்கு அறிவுறுத்தியது. அதன்பேரில், காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியான ஐதர் பேட்டை பகுதியில் துப்புரவு ஆய்வாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பெயர் மற்றும் அவர்களது தொலைபேசி எண்களுடன், நகைச்சுவை நடிகரான வடிவேலுவின் 'வின்னர்' பட காமெடியான "இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது... நானும் வரமாட்டேன்..." எனும் காமெடி பாணியில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் 'வின்னர்' படத்தில் வரும் வடிவேலுவின் 'கைப்புள்ள' காதாபாத்திரத்தின் படத்துடன், "இங்கு குப்பை கொட்ட நீங்களும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்" என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தது. இது அந்த பகுதி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
- காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
- விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2023 மார்ச் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுனர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
ஆகவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13-வது தவணை தொகையை பெறும் பொருட்டு அனைவரும் பி.எம். கிசான் கணக்கை புதுப்பிக்க வேண்டும். பிரதம மந்திரி கிசான் பயனாளிகள் அனைவரும் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திடவும், நேரடி பயன் பரிமாற்றம் வசதி தங்களது வங்கி கணக்கில் செயல்பாட்டில் உள்ளதா என உறுதி செய்திடுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- திருமங்கலம் ஊராட்சியில் சுங்குவார் சத்திரம் செல்லும் சாலையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
- பொதுமக்கள் அந்த வழியாக கடந்து செல்லும் போது துர்நாற்றம் விசுகிறது.
சுங்குவார்சத்திரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே உள்ளது திருமங்கலம் ஊராட்சி. இங்கு 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுங்குவார் சத்திரத்தை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. திருமங்கலம் ஊராட்சியில் சுங்குவார் சத்திரம் செல்லும் சாலையில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது. பொதுமக்கள் அந்த வழியாக கடந்து செல்லும் போது துர்நாற்றம் விசுகிறது. மேலும் இங்கு கொட்டப்படும் குப்பையால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது:-
ஊராட்சியில் பல பகுதிகளில் இது போல ஆங்காங்கே குப்பைகள் கொட்டி கிடக்கின்றன. ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றமல் அலட்சியம் காட்டுகிறது. பல முறை புகார் அளித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
- நாளை காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரிக்கு வந்து வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்
காஞ்சிபுரம்:
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணைந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நாளை (17-3-2023) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்கு நேர்முகத் தேர்வினை நடத்த உள்ளனர். அதேசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
18 வயது முதல் 35 வயது வரை உள்ள வேலைநாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நாளை (17-3-2023) காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறும், இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன்பெறுமாறும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
- ஜெயந்தன் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
- ஜெயந்தனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சோமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் லிங்ககுமார். இவருடைய வீட்டில் இவருடைய மருமகன் ஜெயந்தன் (வயது 20) தங்கியிருந்து செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஜெயந்தன் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயந்தனின் தாய், தந்தை இருவரும் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் மாமாவின் வீட்டில் வசித்து வந்ததாகவும், ஒரு தலை காதலால் இந்த சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
- தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 மாணவர்கள், 7023 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 114 பேர் 53 மையங்களில் தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளி மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே திருப்புட் குழி அரசு மேல் நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் இதுபற்றி மாணவி அப்போது மற்ற ஆசிரியர்களிடம் தெரிவிக்கவில்லை.
தேர்வு முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி பள்ளியில் தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவிக்கு ஆசிரியர் ஜெகன்நாத் தேர்வு எழுத உதவியபோது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரியர் ஜெகன்நாத்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- சரவணன் குழந்தைகள் லாவண்யா மற்றும் புவனேஷை தனது மனைவி வீட்டாரிடம் விட்டுவிட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
- திடீரென மாட்டுவண்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கி வேகமாக சுற்றியது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட விச்சாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் காண்டீபன். இவரது மனைவி லதா. இவர்கள் தங்களுடைய 3-வது மகள் காஞ்சனாவை சென்னையை சேர்ந்த கூலிதொழிலாளி சரவணன் என்பவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்தனர்.
இவர்களது மகள் லாவண்யா (13). மகன் புவனேஷ் (9). இந்த நிலையில் காஞ்சனா குடும்பத்தகராறு காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சரவணன் குழந்தைகள் லாவண்யா மற்றும் புவனேஷை தனது மனைவி வீட்டாரிடம் விட்டுவிட்டு சென்னையில் பணிபுரிந்து வருகிறார். தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்த லாவண்யா 7-ம் வகுப்பும், புவனேஷ் 4-ம் வகுப்பும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விச்சாதாங்கலில் உள்ள அங்காளம்மன் கோவிலில் கடைசி நாள் விழா நடைபெற்றது. அன்று இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதற்கென மாட்டு வண்டியில் சாமி அலங்கரிக்கப்பட்டு வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அவை ஒளிர்வதற்கென மினி ஜென்ரேட்டர் வைக்கப்பட்டு சாமி புறப்பாடானது மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.
அப்போது லாவண்யா மாட்டுவண்டியில் அமர்ந்து இருந்தார். திடீரென மாட்டுவண்டியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் லாவண்யாவின் தலைமுடி சிக்கி வேகமாக சுற்றியது. சிறுமி கதறி துடித்தாள். கதறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த அனைவரும் உடனடியாக ஜெனரேட்டரின் இயக்கத்தை நிறுத்தி சிறுமி லாவண்யாவை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
- விமான பணிப்பெண்களும் விமான ஊழியர்களும் அவசர கால ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர்.
ஆலந்தூர்:
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம், வந்து கொண்டு இருந்தது. 147 பயணிகள் இருந்தனர். கவுகாத்தியை சேர்ந்த ஹேம்நாத் என்பவர் தனது 8 வயது பேத்தி உள்பட குடும்பத்தினர் 4 பேருடன் பயணம் செய்தார்.
விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் அவசரகால சைரன் ஒலி விமானத்துக்குள் கேட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விமான பணிப்பெண்களும் விமான ஊழியர்களும் அவசர கால ஒலி எழுந்தது குறித்து ஆய்வு செய்தனர்.
இதில் பயணி ஹேம்நாத்தின் பேத்தி தான் அமர்ந்திருந்த, விமான இருக்கைக்கு கீழே உள்ள அவசரகால உபயோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த, லைப் ஜாக்கெட்டை பட்டனை அழுத்தி எடுத்து அணிந்து கொண்டிருந்தார்.
இதை அடுத்து விமான பணிப்பெண்கள் சிறுமியிடம் விசாரித்து அவசர கால ஒலியை நிறுத்தினர். இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
இதற்கிடையே அவசர கால ஒலி எழுந்தது தொடர்பாக சென்னையில் உள்ள விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் விமானம் தரையிறங்கியதும் விமான நிலைய அதிகாரிகள் ஹேம் நாத்தின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை அதிகாரிகள் எச்சரித்து விடுவித்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விமான ஊழியர்கள் கூறும்போது, விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் கீழே லைப் ஜாக்கெட் இருக்கும்.
ஆபத்து நேரத்தில் மட்டுமே அதில் உள்ள பட்டன் அழுத்தி எடுக்க வேண்டும். இது தவிர மற்ற நேரங்களில் யாராவது உபயோகப்படுத்தினால், இதைப்போல் அபாய சைரன் கேட்கும் என்றனர்.
- மனவேதனை அடைந்த ஹரிஹரன் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
படப்பை அருகே உள்ள ஆதனூர் டி.டி.சி. நகரை சேர்ந்தவர் செல்வி. கணவரை இழந்த அவர், அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஹரிஹரன் (வயது 25). வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றி வந்தார். இதனை தாய் செல்வி கண்டித்தார். இதில் மனவேதனை அடைந்த ஹரிஹரன் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






