search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படப்பை அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
    X

    படப்பை அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

    • ஜெயந்தன் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • ஜெயந்தனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சோமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் லிங்ககுமார். இவருடைய வீட்டில் இவருடைய மருமகன் ஜெயந்தன் (வயது 20) தங்கியிருந்து செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜெயந்தன் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஜெயந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயந்தனின் தாய், தந்தை இருவரும் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் மாமாவின் வீட்டில் வசித்து வந்ததாகவும், ஒரு தலை காதலால் இந்த சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×