என் மலர்
காஞ்சிபுரம்
- இ-சேவை மையம் மூலமாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.
- விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் போக மீதமுள்ள விண்ணப்பங்கள் கள ஆய்வுக்குட்படுத்தி அதன் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்து விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு 29.9.2023 வரை குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரமறிய, மாவட்ட கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் தங்களுடைய விண்ணப்பம் பற்றிய விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி அறிந்து கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மகளிர் உரிமைத் திட்டத்தில் தான் தகுதியானவர் என கருதும்பட்சத்தில் இ-சேவை மையம் மூலமாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்யலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் குறித்த நிலை அறியவோ, மேல்முறையீடு செய்யவோ எந்த கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும்.
தகுதியற்ற பயனாளிகள் ஒருவேளை தவறுதலாக தேர்வாகி இருந்தால் அது குறித்த குறிப்பான தகவல்களையும் தெரிவிக்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த தகவல்களை மாவட்ட கலெக்டர் அலுவலக உதவி மைய எண் 9003758638-யை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்தில் சிக்கிய யூடியூபர் டி.டி.எப்.வாசன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
- வழக்குகள் பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மக்களை அச்சுறுத்தும் விதமாக மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்தில் சிக்கிய யூடியூபர் டி.டி.எப்.வாசன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவர் மீது பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டுதல் பிரிவு 279, மரணம் விளைவிக்கும் விதத்தில் குற்றம் செய்தல் பிரிவு 308, மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துதல் பிரிவு 336, மோட்டார் வாகன சட்டத்தின்படி ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் பிரிவு 184 மற்றும் குற்றங்களை தூண்டுதலுக்கான தண்டனை பிரிவு 188 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுபோன்று மக்களை அச்சுறுத்தும் விதமாகவும், போக்குவரத்து விதிகளை மீறியும் வாகனங்களை ஓட்டி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது நடைமுறையில் உள்ள சட்டவிதிகளின்படி குற்ற வழக்குகள் பதிவு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத, அனுமதிக்கப்படாத ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஹெல்மெட்டை பயன்படுத்தியதால் சர்ச்சை.
- பிரத்யேகமான வெளிநாட்டு ஹெல்மெட்டை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.
பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கினார். இதில், டிடிஎஃப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது.
பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து, யூ டியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவரை புழல் சிறையில் டிடிஎஃப் வாசன் அடைக்கப்படுகிறார்.
இந்நிலையில், வெளிநாட்டு ஹெல்மெட்டை அனுமதியின்றி பயன்படுத்தியதாக டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
டிடிஎஃப் வாசனின் நண்பர் அஜீஸ் இந்த ஹெல்மெட்டை வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அஜீஸ் வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த ஹெல்மெட்டை உரிய அனுமதி பெறாமல் எவ்வாறு கொண்டு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத, அனுமதிக்கப்படாத ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஹெல்மெட்டை பயன்படுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பிரத்யேகமான வெளிநாட்டு ஹெல்மெட்டை இந்தியாவில் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அனுமதி சான்று பெறாத காரணத்தினால் அந்த ஹெல்மெட்டை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்த முடியாது.
- விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.
- அக்டோபர் 3ம் தேதி வரை புழல் சிறையில் டிடிஎஃப் வாசன் அடைக்கப்படுகிறார்.
பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்தபோது விபத்தில் சிக்கினார். இதில், டிடிஎஃப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது.
பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், யூ டியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, அக்டோபர் 3ம் தேதி வரை புழல் சிறையில் டிடிஎஃப் வாசன் அடைக்கப்படுகிறார்.
- சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது விபத்து
- இவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக்கில் செல்ல முடிவு செய்தார். அதன்படி சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு காரை முந்தி செல்ல வேண்டிய நிலையில், சாகசம் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. டிடிஎஃப் வாசம் பைக்கில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார்.
அப்போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையே, அவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவரது லைசென்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நண்பர் வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில்தான் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
- சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது விபத்து
- கையில் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்
பைக் ரேஸரும், பிரபல யூ டியூபருமான டிடி எஃப் வாசன் அம்பத்தூரில் உள்ள அவரது வீட்டில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பைக்கில் செல்ல முடிவு செய்தார். அதன்படி சென்னை- பெங்களூரு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு காரை முந்தி செல்ல வேண்டிய நிலையில், சாகசம் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்தது. டிடிஎஃப் வாசம் பைக்கில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார்.
அப்போது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் கையில் முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. பின்னர், கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, அவருடைய பைக் பறிமுதல் செய்யப்பட்டு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரர் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் ஏற்கனவே கார் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், தற்போது பைக் விபத்தில் சிக்கியுள்ளார்.
- டிடிஎஃப் வாசன் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
பைக் ரேஸரும், பிரபல யூடியூபருமான டிடி எஃப் வாசன் சாலை விபத்தி சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவைக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது, காஞ்சிபுரம் பாலுசெட்டி அருகே வீலிங் செய்ய முயன்றபோது விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
டிடிஎஃப் வாசன் சுயநினைவின்றி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வௌியாகி உள்ளது.
கை எலும்பு உடைந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிளேட் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
முன் சென்ற வாகன்ததை முந்தி செல்ல முயன்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
சென்னையில் ஏற்கனவே கார் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன், தற்போது பைக் விபத்தில் சிக்கியுள்ளார்.
டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கிய நிலையில், அவர் நடித்து வரும் மஞ்சள் வீரன் படத்தின் நிலை என்ன என்பதும் கேள்வி குறியாக உள்ளது.
- 3 நிமிடங்கள் வரையில் ஓடும் இந்த வீடியோவை குள்ள விஷ்வாசென்றவரில் ஒருவரே எடுத்துள்ளார்.
- காவல் நிலையத்தில் ஆய்வாளர் சொன்னால் தான் கையெழுத்து வாங்குவோம் என நிறுத்தி வைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மப்பேடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட திருப்பந்தியூர் கிராமத்தில் பதுங்கி இருந்த ரவுடி குள்ள விஷ்வா போலீசாரின் என் கவுண்டருக்கு பலியானான்.
ரவுடி விஷ்வாவை பிடிக்கச் சென்றபோது போலீசாரை வெட்டியதால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி விஷ்வா உயிரிழந்து விட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
ஏ பிளஸ் வகையை சேர்ந்த ரவுடியான குள்ள விஷ்வா மீது 3 கொலை, 3 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 24 வழக்குகள் இருப்பதாகவும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் நிறுவனங்களை மிரட்டி விஷ்வா மாமூல் வாங்கி வந்ததாகவும் இதுதொடர்பான மோதல் காரணமாகவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசார் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்துக்கு கையெழுத்து போட சென்ற ரவுடி விஷ்வாவின் முன்னிலையிலேயே சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் போனில் பேசியபடியே சுட்டு விடவா? என்று கேட்கும் மிரட்டல் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 நிமிடங்கள் வரையில் ஓடும் இந்த வீடியோவை குள்ள விஷ்வாவுடன் சென்றவரில் ஒருவரே எடுத்துள்ளார். செல்போனில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ காவல் நிலையத்தின் உள்ளேயே வைத்து போலீசுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
போலீஸ் நிலையத்தில் வைத்து விடுக்கப்பட்ட இந்த என்கவுண்டர் மிரட்டலால் கடும் அதிர்ச்சி அடைந்த குள்ள விஷ்வா அது தொடர்பாக உடனடியாக தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த மாதம் அடைக்கப்பட்டிருந்தேன். அப்போது வழக்கில் பிடிவாரண்டில் ஸ்ரீபெரும்புதூர் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி ரிமாண்ட் செய்யப்பட்டேன். இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி பிணை பெற்றேன்.
நான் சிறையை விட்டு வெளியே வந்தவுடன் காவல் நிலையத்தில் கையெழுத்து போடவில்லை. எனது பிணை மனுவை ரத்து செய்யச் சொல்லி காவல் துறையினர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி வழக்கு போட்டனர்.
நான் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ந்தேதி முதல் சிவகங்கையில் தங்கி அந்த காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தேன். ஆனாலும் எனது பிணை மனு ரத்து செய்யப்பட்டது. அதை எதிர்த்து நான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். எனது வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் நான் தினமும் காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று கடந்த மாதம் 1-ந்தேதி அன்று உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் நகல் கோரி எனது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சில காரணங்களால் அந்த நகல் 24-ந்தேதி அன்று கிடைத்தது.
அந்த நகலை வழக்கறிஞரிடம் இருந்து நான் 26-ந்தேதி பெற்றுக்கொண்டேன். நீதிமன்ற உத்தரவின்படி நான் 27-ந்தேதி அன்று காலை 10.20 மணிக்கும் மாலை 5.30 மணிக்கும் ஸ்ரீபெரும்புதூர் புதூர காவல் நிலையத்தில் கையெழுத்திட்டேன்.
28-ந்தேதி அன்று காலை 10.20 மணிக்கு நான் கையெழுத்தட சென்றபோது என்னிடம் கையெழுத்து வாங்காமல் காவல் துறையினர் என்னை காவல் நிலையத்திற்குள் நிறுத்தி வைத்தனர்.
காவல் நிலையத்தில் ஆய்வாளர் சொன்னால் தான் கையெழுத்து வாங்குவோம் என நிறுத்தி வைத்தனர். காவல் துறையினரின் சிறப்பு படையினர் என்னிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் மதியம் 12 மணியளவில் காவல் ஆய்வாளரிடம் பேசிய சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்ன செய்வது என்று கேட்டார்.
அப்போது அவர் கையெழுத்து வாங்கவா 'சுட்டு விடவா' என்று கேட்டார். இதனால் நான் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன். தயாளன் ஆய்வாளர் பரந்தாமனிடம் பேசிய வீடியோ ஆதாரம் உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி நான் கையெழுத்திட சென்றபோது என்னிடம் கையெழுத்து வாங்காமல் என்னை சுட்டு விடலாமா? என சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆய்வாளரிடம் பேசியதில் இருந்து என்னை ஆய்வாளர் என்கவுண்டரில் சுட திட்டமிட்டுள்ளதாக அஞ்சுகிறேன்.
எனவே என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் உள்ளிட்ட காவல் துறையினரே பொறுப்பு என்பதை இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே என்னை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்ய ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் திட்டமிட்டுள்ளது தொடர்பாக தக்க விசாரணை நடத்த வேண்டுகிறேன்.
இவ்வறு அந்த புகாரில் ரவுடி விஷ்வா கூறியிருக்கிறார்.
இந்த கடிதமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்டு உள்ள விஷ்வா, ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வயலூர் கிளாஸ் கிராமத்தில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கடந்த 28-ந்தேதியன்று ரவுடி விஷ்வா எழுதியதாக தகவல் வெளியாகி வருகிறது.
- காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, கையெழுத்து வாங்காமல் சுட்டு விடலாமா? என கேட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரில் நேற்று என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வா இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் எழுதி உள்ள கடிதத்தில், என்மீது போலி என்கவுண்ட்டர் நடந்தால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன், உதவி காவல் ஆய்வாளர் தயாளன் தான் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கடிதம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு கடந்த 28-ந்தேதியன்று ரவுடி விஷ்வா எழுதியதாக தகவல் வெளியாகி வருகிறது.
காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது, கையெழுத்து வாங்காமல் சுட்டு விடலாமா? என கேட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரவுடி விஷ்வா கடிதம் எழுதியதாக கூறப்படும் தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது.
- போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார் ரவுடி விஷ்வா.
- ரவுடி நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், சுங்கவார்சத்திரத்தில் ரவுடி மீது போலீசார் என்கவுண்டர் நடத்தினர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார் சத்திரம் என்ற பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரவுடி விஷ்வா என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விஷ்வாவை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர்.
ரவுடி நடத்திய தாக்குதலில் உதவி ஆய்வாளர் முரளிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
- கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வெடி குண்டு வைத்து மிரட்டுதல் போன்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
மணிமங்கலம்:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). ஆட்டோ டிரைவர். இவரை கடந்த மாதம் கரசங்கால் மருந்து கடை அருகே வைத்து கத்தியால் வெட்டி கொல்ல முயன்றனர். அதே போல் சமத்துவபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவரையும் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். கொலை முயற்சியில் ஈடுபட்டது. கரசங்கால் பகுதியை சேர்ந்த கோபி என்ற கோபிநாத் (வயது 35), சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (வயது 29) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கரசங்கால் ஏரிக்கரையில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
போலீஸ் விசாரணையில் கோபி மீது ஒரு கொலை, 8 கொலை முயற்சி, 7 அடிதடி வழக்குகள், கொள்ளையடித்தல் போன்ற வழக்குகள் மணிமங்கலம், சோமங்கலம், ஓட்டேரி, கானாத்தூர் போலீஸ் நிலையங்களில் உள்ளது தெரியவந்தது.. விக்னேஷ் மீது மணிமங்கலம், சோமங்கலம் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, கொள்ளையடித்தல், வெடி குண்டு வைத்து மிரட்டுதல் போன்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
- மகாராஜன் வீட்டில் ஆய்வு செய்தனர்.
- பதுக்கி வைத்திருந்த ஒரு டன் 80 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
சுங்குவார்சத்திரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே சந்தவேலூர் ஈ.பி.காலணி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மகாராஜன் வயது (40). இவர் பொதுமக்களிடம் இருந்து இலவச ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி தன் வீட்டில் பதுக்கி வைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதாக ஸ்ரீபெரும்புதூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் குடிமை பொருள் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையில் அதிகாரிகள் ஈ.பி. காலணி பகுதியில் உள்ள மகாராஜன் வீட்டில் ஆய்வு செய்தனர். போலீசார் நடத்திய ஆய்வின்போது அவரது வீட்டில் சுமார் 40 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளும், 20 கிலோ எடை கொண்ட 14 மூட்டைகளும் என மொத்தம் 1080 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்து வந்த மகாராஜனை போலீசார் கைது செய்து பதுக்கி வைத்திருந்த ஒரு டன் 80 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.






