என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் மறைமலை நகர் நகர தி.மு.க. அவைத் தலைவராக சுப்பிரமணி.
    • திருநின்றவூர் நகர தி.மு.க. அவைத் தலைவராக அன்பழகன்.

    தி.மு.க. 15-வது பொதுத் தேர்தலையொட்டி நகர கழக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர கழக நிர்வாகிகளை தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் மறைமலை நகர் நகர தி.மு.க. அவைத் தலைவராக சுப்பிரமணி, செயலாளராக சண்முகம், துணை செயலாளர்களாக சீனிவாசன், வினோத்குமார், தேவி கோகுலகிருஷ்ணன், பொருளாளராக வெங்கிட்டு, மாவட்ட பிரதிநிதிகளாக மூர்த்தி, சுந்தர், இரா.கருணாநிதி, அரங்க கிரிச்சந்திரன், இரா.அசோகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கண்டோன்மெண்ட் நகர தி.மு.க. அவைத் தலைவராக ஆனந்தராஜ், செயலாளராக பாபு, துணை செயலாளர்களாக மோகன சுந்தரம், கவிச்சக்கரவர்த்தி,. தமிழ்ச் செல்வி, பொருளாளராக கோவிந்தராஜ், மாவட்ட பிரதிநிதிகளாக முத்து, நாராயணன், மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    குன்றத்தூர் நகர தி.மு.க. அவைத் தலைவராக சங்கர், செயலாளராக சத்திய மூர்த்தி, துணை செயலாளர்களாக என்.கருணாநிதி, கந்தசாமி, அபிபுன்னிசா, பொருளாளராக அருள் மொழி, மாவட்ட பிரதிநிதிகளாக குணசேகர், சிதம்பரம், மணிமாறன், திருநாவுக்கரசு தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

    மாங்காடு நகர தி.மு.க. அவைத் தலைவராக மகேந்திரன் செயலாளராக ஜபருல்லா, துணை செயலாளர்களாக சங்கர், வில்லியம்ஸ், சுசிலாதேவி, பொருளாளராக வீரராகவன், மாவட்ட பிரதிநிதிகளாக ராமு, வெங்கடேசன், பாஸ்கரன், அப்துல்ரகுமான் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர தி.மு.க. அவைத் தலைவராக அச்சுதாஸ், செயலாளராக காார்த்திக் தண்டபாணி, துணை செயலாளர்களாக ராமமூர்த்தி, அரி, ஸ்ரீமதி, பொருளாளராக அப்துல்காதர், மாவட்ட பிரதிநிதிகளாக குமரவேல், டில்லி, சதீஷ்குமார், ரவி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் பூந்தமல்லி நகர தி.மு.க. அவைத் தலைவராக தாஜிதீன், செயலாளராக திருமலை, துணை செயலாளர்களாக துரைபாஸ்கர், அப்பர் ஸ்டாலின், டில்லிராணி, பொருளாளராக அசோக்குமார், மாவட்ட பிரதிநிதிகளாக சுதாகர், புண்ணியகோட்டி, அன்பழகன், சவுந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    திருவேற்காடு நகர தி.மு.க. அவைத் தலைவராக பெஞ்சமின், செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர்களாக குமார சாமி, நடராஜன், பானு, பொருளாளராக சரவணன், மாவட்ட பிரதிநிதிகளாக செல்லதுரை, ஜோதிநாதன், பாண்டுரங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    திருநின்றவூர் நகர தி.மு.க. அவைத் தலைவராக அன்பழகன், செயலாளராக தி.வை.ரவி, துணை செயலாளர்களாக கமலக் கண்ணன், நாகராஜ், பேபி, பொருளாளராக ஆர்.ரவி, மாவட்ட பிரதிநிதிகளாக பாபு, குணசேகரன் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி.
    • கணவன்- மனைவி இருவரும் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்போட்டு மூடி இருந்தது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சுங்குவார்சத்திரம் அடுத்த பொடவூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் வீட்டின் கதவை பூட்டாமல் மூடி வைத்துவிட்டு மனைவியுடன் அருகில் உள்ள ரேசன் கடைக்கு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து கணவன்- மனைவி இருவரும் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்போட்டு மூடி இருந்தது. மேலும் வீட்டின் உள்ளே மர்ம வாலிபர் ஒருவர் பொருட்களை கொள்ளையடித்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்து கூச்சலிட்டனர்.

    சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் வீடு புகுந்து திருடிய வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவனை சுங்குவார்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் பரந்தாமன் விசாரணை நடத்தினார். இதில் பிடிபட்ட வாலிபர் ஆவடி வீராபுரம் பகுதியை சேர்ந்த தனுஷ் (23) என்பது தெரிந்தது. அவன் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கைதான தனுசை போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைததனர்.

    • புதிய நிறுவனம் வேலைக்கு எடுத்துக் கொள்ள முன்வர வில்லை என்ற கூறப்படுகிறது.
    • வாகன நிறுத்தும் இடங்களில் ஊழியர்களை பணிய மர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தின் முன்பகுதியில் 3.36 லட்சம் சதுர மீட்டரில், ரூ.250 கோடியில், 6 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த வளாகத்தில் ஒரேநேரத்தில் 2,200 கார்கள் வரை நிறுத்தமுடியும். மேலும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பல்வேறு நவீன வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த அடுக்குமாடி கார் நிறுத்தத்தில் இருந்து விமான நிலையத்திற்கு நடந்து செல்லும் வகையில், இணைப்பு மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் முழுவதும் முடிந்து வருகிற 1-ந்தேதி திறப்பு விழா நடைபெற்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில், வாகனங்களை நிறுத்த அரை மணி நேரத்திற்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கலாம் என திட்டமிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் பல்வேறு காரணங்களால் இந்த அடுக்குமாடி கார் நிறுத்தும் இடம் திறப்பு தாமதமாகும் என்று தெரிகிறது. அடுக்கு மாடி வாகன நிறுத்தத்துக்கு தீயணைப்புத் துறையில் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே, கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்காக ஒப்பந்தப் பணிகளை எடுத்த நிறுவனங்களில் 123 பேர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களை, புதிய நிறுவனம் வேலைக்கு எடுத்துக் கொள்ள முன்வர வில்லை என்ற கூறப்படுகிறது.

    இதனால் இதில், பணியாற்றும் ஊழியர்கள், புதிய நிறுவனத்தில் தங்களை பணியமர்த்த உத்தரவிடக் கோரி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். அடுத்த விசாரணை வரும் வரை, தற்போதைய நிலை தொடர நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

    எனவே வாகன நிறுத்தும் இடங்களில் ஊழியர்களை பணிய மர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    தீயணைப்புத் துறையில் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய அடுக்குமாடி வாகன நிறுத்தம் திறப்பது தாமதமாகி உள்ளது என்றார்.

    • மாணவன் நேற்று இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கினான். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.
    • தூங்கிக் கொண்டு இருந்த மாணவன் நேதாஜி பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தான்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் நேதாஜி (வயது 9). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று இரவு மாணவன் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கினான். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.

    இதில் தூங்கிக் கொண்டு இருந்த மாணவன் நேதாஜி பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தான். வீட்டில் இருந்த மற்றவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    மாணவன் நேதாஜியின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டின் மேற்கூரை விழுந்து மாணவன் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த போரூர் கார்டன் பகுதியில் இன்று அதிகாலை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் சிவ ஆனந்த் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்தனர். இதை கண்டு சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் மதுரவாயல் தனலட்சுமி நகரை சேர்ந்த அஸ்வின், பரணி என்பதும் இருவரும் அந்த பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த மஸ்தான் கனி (வயது 28), கலந்தர் ஷாஜகான் (30), சுல்தான் (30) ஆகிய 3 பேரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.

    அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசினர். இதனால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

    அப்போது 3 பேரும் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த பாக்கெட்டுகளில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடம் இருந்தும் ரூ.59 லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 81 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 கோடியே 34 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.
    • காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட 81 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 கோடியே 34 லட்சம் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதாஞானசேகரன் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய குழு துணைத்தலைவர் வசந்திகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார். கடனுதவி பெற்ற அனைவரும் வாழ்வில் முன்னேற்றம் அடைந்திட வேண்டும் என்றார். இதில் உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் பொன்.சசிக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பது அவசியமாகும்.
    • நல்ல தரமான நல்ல முளைப்பு திறன் உள்ள விதைகளே உயர் விளைச்சலை தரக்கூடிய விதையாகும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் விதை பரிசோதனை நிலைய அலுவலர் ராஜகிரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளின் தரத்தை அறிந்து விதைப்பது அவசியமாகும். ஏனென்றால் நல்ல தரமான நல்ல முளைப்பு திறன் உள்ள விதைகளே உயர் விளைச்சலை தரக்கூடிய விதையாகும். எனவே, விவசாயிகள் தங்களிடம் இருப்பில் உள்ள விதை குவியல்களில் இருந்து விதை மாதிரி எடுத்து விதைபரிசோதனை அலுவலர், விதைபரிசோதனை நிலையம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு ரூ.80 கட்டணத்துடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி பரிசோதனை முடிவுகளை பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்
    • தொழிற்சாலைகள் தங்கள் வளாகத்திற்குள் இயன்றவரை மரக்கன்றுகளை வைக்க வேண்டும்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5 சிப்காட், 2 சிட்கோ தொழிற் பூங்கா மற்றும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுடன் இயங்கி வருகின்றன.

    அதிவேக தொழில் வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக, மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி, ஊரணிகளில் இருந்து தொழிற்சாலைகளின் நீர் தேவைகளுக்காக தண்ணீர் எடுக்கப்படுகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றது.

    கடந்த ஆண்டு அதிகபடியான மழையால் காஞ்சீபுரம் மாவட்டம் பெரும் வெள்ளத்தை சந்தித்தது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குவதற்கு இடம் மற்றும் மருத்துவ வசதிகள் தொழில் நிறுவனங்களின் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தியது.

    மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அனைத்து உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    நீர்நிலைகளை மறுசீரமைத்தல் தொடர்பான இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பேசியதாவது:-

    தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களை பயன்படுத்தவேண்டும்.

    மஞ்சப்பை போன்ற துணிப்பைகளின் பயன்பாட்டை அதிகபடுத்த வேண்டும். தொழிற்சாலைகள் தங்கள் வளாகத்திற்குள் இயன்றவரை மரக்கன்றுகளை வைத்து பசுமைபோர்வையை அதிகப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையில் உருவாகும் திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி முறையாக கையாளவேண்டும்.

    தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையின் அருகில் உள்ள குடியிருப்புகளில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியகொடியை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். தொழிற்சாலைகள் அருகில் உள்ள நீர் நிலைகளை புதுப்பித்து பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் இருந்த பொருட்களும் நொறுக்கப்பட்டு இருந்தது.
    • மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.

    போரூர்:

    மதுரவாயல், பாரதிநகர், 3-வது தெருவில் வசித்து வருபவர் கருணாநிதி பாண்டே. எலக்ட்ரீசியன். இவரது சொந்த ஊர் உத்தர பிரதேச மாநிலம் ஆகும்.

    இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் கருணாநிதி பாண்டே திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பீரோவும் உடைக்கபட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் நொறுக்கப்பட்டு இருந்தது.

    வீட்டில் நகை-பணம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பொருட்களை நொறுக்கி சூறையாடிவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆகாஷ் என்கிற விக்னேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சகோதரி நடத்தும் காய்கறி கடையில் வேலை செய்து வந்தார்.
    • ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைகைப்பற்றி விசாரணை.

    ஸ்ரீபெரும்புதூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ்(வயது35). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சகோதரி நடத்தும் காய்கறி கடையில் வேலை செய்து வந்தார்.

    அவர் அதே பகுதி மகாத்மா காந்தி தெருவில் 3-வது மாடியில் உள்ள அறையில் தங்கி இருந்தார். தினமும் அதிகாலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க ஏசுதாஸ் செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை ஏசுதாஸ் மார்க்கெட்டுக்கு செல்ல வில்லை. இதையடுத்து அவரது செல்போனுக்கு சகோதரி தொடர்பு கொண்டபோது எடுக்க வில்லை. சந்தேகம் அடைந்த அவர் அருகில் வசிக்கும் ஒருவரிடம் தெரிவித்து ஏசுதாசை பார்க்குமாறு கூறினார்.

    அப்போது ஏசுதாஸ் வீட்டின் முன்பு இறந்து கிடப்பது தெரிந்தது. அவரது மூக்கு, காதில் இருந்து ரத்தம் வழிந்து இருந்தது.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைகைப்பற்றி விசாரணை நடத்தினர். ஏசுதாசின் முகத்தில் காயங்கள் இருப்பதால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    நேற்று இரவு ஏசுதாசுக்கும் சிலருக்கும் இடையே பெண் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    எனவே மோதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அவரை அடித்து கொன்று வீட்டின் 3 வது மாடியில் இருந்து வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

    • சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் நேற்று இரவு 10 மணியளவில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதேபோல் இன்று காலை வரை கன மழை கொட்டியது. ஓரிக்கை, விலிமேடு, மாகரல், தாமல், பாலுசெட்டி சத்திரம், பரந்தூர், ராஜகுளம், வாலாஜாபாத், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்தது.

    இதனால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

    ×