என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.85 அடியாக இருந்தது.

    பவானிசாகர் அணை நீர்மட்டம்

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 86.85 அடியாக இருந்தது.

     அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 233 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 200 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 2380 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 80 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 21-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது.

    அதிலிருந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 24-ந் தேதி மட்டும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. பின்னர் தொடர்ந்து அதிகரி த்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

     ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் ரூ.107.18&க்கு விற்பனையானது. இன்று வரலாறு காணாத வகையில் மேலும் 75 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93-க்கு விற்பனையானது.

    இதேபோல் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.97.26-க்கு விற்பனையானது. இன்று மேலும் 76 காசுகள் உயர்ந்து 98.02 காசுக்கு விற்பனை ஆனது.

    தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள், சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருவதால் இதன் தாக்கம் எதிரொலியாக மற்ற பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    அந்தியூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது.
    ஈரோடு:


    அந்தியூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டி நடைபெற்றது.

    தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டி அந்தியூர் வட்டாரம் வேம்பத்தி கிராமம் தம்மநாயக்கனு£ரில் நடை பெற்றது.

    மோகன்குமார் என்பவரது வயலில் நடைபெற்ற இந்த போட்டியில் ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) ஆசைத்தம்பி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், பவானி வேளாண்மை உதவி இயக்குநர் குமாரசாமி மற்றும் விவசாயி பவானந்தம் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் 50 சென்ட் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிரில் காய் களின் எடை கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் சராசரியாக ஒரு சதுர மீட்டரில் இருக்கும் பயிர் எண்ணிக்கை, ஒரு செடியில் உள்ள காய்களின் எண்ணிக்கை, காய்கள் மற்றும் பயிரின் எடை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன.

    அதனைத் தொடர்ந்து பயிர் சாகுபடி முறைகள், இடுபொருள் விவரங்கள், பூச்சி, நோய் விவரங்கள் உள்ளிட்டவற்றை நடுவர்கள் விவசாயிடம் கேட்டறிந்தனர். ஈரோடு மாவட்டத்தில் நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை அந்தியூர் வேளாண்மை உதவி இயக்குநர் கார்த்திகேயன், அத்தாணி துணை வேளாண்மை அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
    ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்யும் பணி மீண்டும் தொடங்கியது.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்யும் பணி மீண்டும் தொடங்கியது.

    ஈரோடு மாநகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரியும் தெரு நாய்க்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய, நவீன வசதிகளுடன் கூடிய கருத்தடை மையம் சோலாரில் அமைக்கப்பட்டு உள்ளது. நாய் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவினர், மாநகராட்சியில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்து ஆபரேசன் செய்து அங்கே விட்டனர். 

    இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அப்பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு சுதா மருத்துவமனை செய்துள்ளது.சோலாரில் அமைந்துள்ள மையத்தில் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யும் நிகழ்ச்சியை மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்ட விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் ஈரோடை அமைப்பு தலைவர் டாக்டர் சுதாகர்  கூறுகையில்,

    ஈரோடு மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஆங்காங்கே சுற்றித்திரியும் ஆண் மற்றும் பெண்  நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு செய்யப் படுகிறது. கொரோனா தொற்று காரணமாக சில மாதங்களாக அவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 
    கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக, நாய்களுக்குகுடும்ப கட்டுப்பாடு செய்யும் பணி மீண்டும் துவங்கப்பட்டு உள்ளது. 

    நாய்களுக்கு எவ்வித தொந்தரவு ஏற்றபடாத வகையில், நாய்களை பிடிக்கும் அனுபவமிக்க குழு மூலம் நாய்கள் பிடிக்கப்படுகிறது. பிடிக்கப்படும் நாய்கள் மாநகராட்சி வாகனத்தில் ஏற்றப்பட்டு, சோலாரில் நவீன வசதிகளுடன் அமைக்கப் பட்டுள்ள  மையத்தில் கருத்தடை செய்யப்படுகிறது. 

    தற்போது 2 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டது. இவற்றை மாநகாட்சிஅதிகாரிகள், கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்டது. மாதந்தோறும் 100 நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யஇலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துணை இணை இயக்குனர் பழனிவேல், துணை இயக்குனர் பிரிசில்லாமணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    ஈரோடு அறிவியல் பூங்கா பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அறிவியல் பூங்கா பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சூரம் பட்டியில் உள்ள ஸ்ரீகார்டன் பகுதியில் ரூ.10.42 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கடந்த வருடம் அறிவியல் பூங்கா பணி தொடங்கி நடந்து வந்தது. சுமார் 48 ஆயிரத்து 900 சதுரஅடியில் மிகப் பிரம்மாண்டமாக இந்த அறிவியல் பூங்கா தயாராகி வருகிறது. மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையிலும், தற்போது இருக்கும் புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் அறிவியல் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. 

    இதில் மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான  வீடியோக்கள் காண் பிக்கப்பட உள்ளது. மேலும் மாதிரி ராக்கெட் தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராக்கெட் பற்றிய தகவல்கள் அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான அனைத்து வீடியோக்கள் மாணவர்களுக்கு போட்டு காண்பிக்கப்பட உள்ளது. 

    இங்கு அறிவியல் தொடர்பான கண்காட்சியும் மாணவர் பார்வைக்கு வைக்கப்படும். முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அறைகள் உள்ளன. இங்கு ஒரே நேரத்தில் 40 மாண வர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.  விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகள் அப்படியே நம் கண்முன் நிறுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

    தற்போது இதன் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து பணிகளும் முடிந்து மாணவ மாணவிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பெருந்துறை அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு பதிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    பெருந்துறை பகுதியை சேர்ந்த 24 வயதான பி.எஸ்.சி. பேஷன் டிசைனிங் பட்டதாரி பெண் படிப்பை முடித்து விட்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 

    இவர் வீட்டின் அருகே சேக் முகமது என்பவர் குடியிருந்து வருகிறார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.  

    பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த பெண்ணுடன் பலமுறை சேக் முகமது தனிமையில் இருந்து வந்துள்ளார்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷேக் முகமதுவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் மனம் உடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவர் உயிர் பிழைத்தார்.

    இதேபோல் கடந்த வாரம் அந்த பெண் சேக் முகமது வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத் தியுள்ளார். அப்போது சேக் முகமது மற்றும் அவரது தந்தை காஜா மைதீன், தாய் ராபியா பேகம் சேர்ந்து இங்கு எதுக்கு வந்தாய், உன்னை திருமணம் செய்து கொண்டால் எங்களுக் குத்தான் அசிங்கம். மீண்டும் இங்கே வந்தால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். 

    இந்த நிலையில் சேக் முகமதுவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்து கொண்டு இருப்பதாக அந்த பெண்ணிற்கு தகவல் தெரிய வந்தது. 

    பின்னர் அந்த பெண் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  இது தொடர்பாக பெருந்துறை சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் சேக் முகமது, அவரது தந்தை காஜா மைதீன், தாய் ராபியா பேகம் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். மேலும் இந்த வழக்கை பெருந்துறை ஏ.எஸ்.பி கவுதம் கோயல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    அம்மாபேட்டை அருகே டிரான்ஸ்பார்மர் செம்பு கம்பிகள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே டிரான்ஸ்பார்மர் செம்பு கம்பிகள் திருடிய 3 பேர் கைது
    செய்யப்பட்டனர்.

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே குருவ ரெட்டியூர் நீரேற்று பாசன சங்கத்தினர் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு ஆங்காங்கே நீரேற்று நிலையங்கள் அமைத்து வருகின்றனர். அதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது.

    இந்த நிலையில் அம்மா பேட்டை அருகே உள்ள படவல் கால்வாய் கிராமத்தில் சின்னசாமி என்பவர் தோட்டத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக் கும் பணி நடந்து வரு கிறது.
    இதையொட்டி அந்த பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக செம்பு கம்பிகள் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் இருந்த சுமார் ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள செம்பு பட்டா கம்பிகள் காணவில்லை. இதை சிலர் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து குருவ ரெட்டியூர் நீரேற்று பாசன சங்க செயலாளர் தினேஷ் சேகர் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கோனேரிப் பட்டி பிரிவில் சந்தேகப்படும் படி 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசா ரணை செய்தனர். இதில் அவர்கள் சித்தார் பகுதியை சேர்ந்த தமிழரசன் (26), கோபால் (23) மற்றும் ஒருவர் என்பதும், செம்பு பட்டா கம்பிகளை திருடியதும் தெரிய வந்தது.  

    இதையடுத்து அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்மாபேட்டையில் கரிய காளியம்மன், மாரிய ம்மன், ஓம்காளியம்மன், கிட்டம்பட்டி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    அம்மாபேட்டை:-

    அம்மாபேட்டையில் கரிய காளியம்மன், மாரிய ம்மன், ஓம்காளியம்மன், கிட்டம்பட்டி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக கடந்த மார்ச் 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து கிராம சாந்தி செய்தல், கம்பம் நடுதல், குண்டத்திற்கு பூங்கரும்பு கொண்டு வருதல், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த 15 நாட்களாக இரவு சாமிக்கு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.  28-ந் தேதி இரவு 8 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து நேற்று இரவு குண்டத்திற்கு அக்னி மூட்டுதல் நிகழ்ச்சியும் இன்று அதிகாலை கரிய காளியம்மனுக்கு முப்போடு, படைக்களம் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அம்மாபேட்டை அருகே உள்ள பொங்கபாலி கரட்டுக்கு சென்று அம்மை அழைத்து வந்து குண்டம் இறங்கும் பக்தர்களுடன் ஊர்வலமாக வந்து கரிய காளியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தீ மிதித்தனர்.  இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். 

    பின்னர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனைகள் நடை பெற்றது. பக்தர்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று மாலை 4 மணிக்கு கரியகாளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் மாரியம்மன் கோவில் வரை அலகு குத்தி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

    தொடர்ந்து நாளை ஓம் காளி அம்மன் கோவிலுக்கு அம்மை அழைத்து வருதல் நிகழ்ச்சியும் அன்று இரவு கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. பின்னர் மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
    கவுந்தப்பாடி அருகே தோட்டத்தில் கட்டி இருந்த ஆட்டை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே தோட்டத்தில் கட்டி இருந்த ஆட்டை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் அடுத்த அய்யன் வலசு போடி காடு பகுதியை சேர்ந்த வர் நடராஜ். இவரது மனைவி சுலோசனா (48). இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வருகிறார். 

    மேலும் ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார்.
    இந்த நிலையில் சம்பவத் தன்று சுலோசனா அந்த பகுதியில் ஆடுகளை கட்டி விட்டு தனது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர்.

    அவர்கள் அங்கு கட்டி வைத்து இருந்த ஒரு ஆட்டை திருடி கொண்டு மோட்டார் சைக்கிளிளில் தப்பி சென் றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுலோ சனா சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்கள் 3 பேரையும் துரத்து சென்று சுற்றி வளைத்து பிடித்தனர்.
    இது குறித்து சுலோசனா கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்தார். 

    போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் கள் 3 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கள் கவுந்தப்பாடி  அய்யன் காடு பகுதியை சேர்ந்த அருண்குமார், திருவள்ளு வர் நகர் ஆனந்த், பி. மேட்டு பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு ஆடு மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறி முதல் செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம் அருகே கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கிராவல் மண் கடத்திய 2 பேர் கைது  செய்யப்பட்டனர். 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள உக்கரம் மில்மேடு எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரி சபரிவாசன் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் கிராவல் மண் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் இண்டியம் பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன், அரசூர் பகுதியை சேர்ந்த பிரபா கரன் என தெரிய வந்தது. மேலும் அவர்கள் அனுமதி இல்லாமல் கிராவல் மண் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து கிராவல் மண் கடத்திய 2 லாரி களையும் கிராம நிர்வாக அதிகாரி பறிமுதல் செய்து சத்தியமங்கலம் தாசில் தாரிடம் ஒப்படைத்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேந்திரன், பிரபா கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் லாரி உரிமை யாளர்கள் இண்டியம் பாளையத்தை சேர்ந்த ராமசாமி மற்றும் அரசூர் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் ஆகிய 2 பேர் தலைமறைவாகி விட் டனர். அவர்களை போலீ சார் வலைவீசி தேடி வரு கிறார்கள்.
    2 ஆண்டுகளுக்கு பின்பு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    அந்தியூர்:

    2 ஆண்டுகளுக்கு பின்பு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகை நடைபெறவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் பண்டிகை தொடங்கியது. இதனை தொடர்ந்து மகிஷாசுர வதம் எனும் எருமைக்கிடாய் வெட்டும் நிகழ்வும், 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனையடுத்து குண்டம், தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இன்றைய தினத்திலிருந்து அம்மன் பூத வாகனம், நரி வாகனம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், யானை வாகனம், சட்டத்தேர் புஷ்ப பல்லாக்கு வாகனங்களில் தினந்தோறும் வீதி உலா அந்தியூர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    தொடர்ந்து ஏப்ரல் மாதம் 6-ந் தேதி காலை குண்டம் திருவிழா நடைபெறும். இதில் அந்தியூர், சங்கராபாளையம், புதுப்பாளையம், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பிபாளையம், எண்ணமங்கலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து குண்டம் இறங்குவார்கள். குண்டம் திருவிழாவிற்காக பக்தர்கள் நேர்த்திகடனாக விறகுகளை குவித்து வருகின்றனர்.

    அதனைத் தொடர்ந்து 8-ந் தேதி மாலை தேர் திருவிழா தொடங்கி 11-ந் தேதி வரை அம்மன் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மாலை தேர் நிலையை வந்து அடையும். அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி பரிவேட்டை வெகு விமர்சையாக நடைபெறும். 13-ந் தேதி வசந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் பண்டிகை நிறைவடையும்.

    கோபிசெட்டிபாளையத்தில் இன்று காலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பள்ளி முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் கச்சேரி மேடு பகுதியில் அரசு நிதி உதவி பெறும் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆசிரியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் போராட்டத்துக்கு முயன்றனர். இதுப்பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்துக்கு கோபிசெட்டி பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் பழனி நேரில் வந்து மாணவர்களின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்.

    அப்போது அவரிடம் மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் மனுவாக எழுதி கொடுங்கள் பள்ளிகல்வித்துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் மாவட்ட கல்வி அலுவலரிடம் மனுவாக எழுதி கொடுத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பள்ளி முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுப்பற்றி தெரிய வந்ததும் கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. ஆறுமுகம், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களின் போராட் டம் காரணமாக பரபரப்பு நிலவியது.

    ×