என் மலர்tooltip icon

    ஈரோடு

    சுதந்திர திருநாள் அமுதா பெரு விழாவையொட்டி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கியது.
    ஈரோடு:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இணைந்து 75-வது சுதந்திர தினவிழா சுதந்திர திருநாள் அமுதா பெரு விழாவையொட்டி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கியது.

    மாரத்தான் போட்டியை கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    விளையாட்டு விடுதி மாணவிகள் 80&க்கும் மேற்பட்டோர் இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர்.

    மாரத்தான் ஓட்டமானது ஈரோடு வ. உ. சி. பூங்கா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. வீரபத்திர வீதி, சக்தி ரோடு, சம்பத் சாலை, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக மீண்டும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நிறை வடைந்தது. 

    மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
    பெருந்துறை மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடத்திய மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

    பெருந்துறை கோவை மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் லாட்ஜ் மற்றும் ரிசார்ட்ஸ் சென்டர்,  மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து காஞ்சி கோவில் போலீஸ் நிலை யத்தில் பணியாற்றும் ராஜா என்ற போலீஸ்காரர் சாதாரண உடையில் பெருந்துறை யில் உள்ள மசாஜ் சென்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு மசாஜ் சென்டர் மேலாளர் தினேஷ் குமார் என்பவரிடம் மசாஜ் செய்து கொள்ள வேண்டும் என்று ராஜா கூறினார்.

    இதற்கு மேலாளர் மசாஜ் செய்ய ரூ.2 ஆயிரம் என்றும்,  மேலும் ரூ.2 ஆயிரம் கொடுத்தால் பெண்களுடன் உல்லா சமாக இருக்கலாம் என்று கூறினார்.

    இதையடுத்து ராஜா இதற்கு சம்மதம் என கூறி பணத்தை கொடுத்தார்.இதை தொடர்ந்து அவர் அங்கு இருந்த 3 பெண்களில் ஒரு பெண்ணை அழைத்து கொண்டு சென்றார்.

    பின்னர் அவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வரு வதாக கூறி விட்டு தனியாக வந்து இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து உடனடியாக தயார் நிலையில் இருந்த தனிப்படை போலீ சார் மசாஜ் சென்டருக்குள் புகுந்தனர்.

    அவர்கள் மேலா ளர் தினேஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி னர். இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து அந்த மசாஜ் சென்டரில்  இருந்த 3 பெண்களையும் மீட்டு மகளிர் காப்பகத்துகு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட தினேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.

    டி.என்.பாளையம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே பங்களாப் புதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே பங்களாப்புதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அந்த வாலிபர் கொங்கர் பாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த பிரவீன் குமார் (22) என்பது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் பிரவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் பவானி அடுத்த காடப்பநல்லூர் கோவில்பாளையம் காவிரி ஆற்று ஓரம் கஞ்சா விற்பனை நடப்பதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன், சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் பாபு, சரவணன் ஆகியோர் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்தவர் பால குருநாதன் (59) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் பாலகுருநாதனை கைது செய்து அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    தாளவாடி நகர் பகுதியில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    தாளவாடி:

    தாளவாடி நகர் பகுதியில்  சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி  வனச் சரகத்துக்கு உட்பட்ட தாள வாடி நகர் பகுதியில்  சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்தி ருப்பதாக தாளவாடி வனச்சரகர் சதீஷிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனத்துறையினர் தாளவாடி பகுதியில் ஆய்வு செய்து சோதனையிட்டனர். அப்போது ஒரு வீட்டில்  சோதனை செய்த போது அங்கு 35 கிலோ சந்தன மரத்துண்டுகள், நாட்டுத் துப்பாக்கி, துப்பாக்கி மருந்து, கோடாரி ஆகிய வை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி னர். இதில் சந்தன மரத்துண்டுகள் பதுக்கி வைத்தது சபியுல்லா, காசிம் ஷரிப் என தெரிய வந்தது. அவர்கள் வனத்துறையினர் வருவதை அறிந்து அங்கு இருந்து தப்பி சென்று விட்டனர்.

    தலைமறைவாக உள்ள சபியுல்லா, காசிம் ஷரிப், ஆகியோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டது. வனத்துறையினர் அவர் களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலும் சந்தன மரத் துண்டுகள் எந்த பகுதிக்கு கடத்தப்படுகிறது. இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் குறித்தும் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின் றனர்.
    பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
    பவானிசாகர்:

    பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 86.51 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1413 கன அடியாக அதிகரித்து உள்ளது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 200 கன அடியும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 2380 கன அடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 80 கன அடி தண்ணீர் வெறியேற்றப்பட்டு வருகிறது.  
    ஓட்டப்பாறை ஊராட்சி சரவணா நகர் பகுதியில் வெளியூரை சேர்ந்த சிலர் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வேண்டுமென திடீரென குடிசை அமைக்க முயன்றனர். இதற்கு உள்ளூர் பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே ஓட்டப்பாறை ஊராட்சி சரவணா நகர் பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 90 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழ்ங்கப் பட்டது.

    ஆனால் அங்கு ஒரு சிலரை தவிர வேறு யாரும் வீடு கட்டவில்லை. 

    இதனால் வெளியூரை சேர்ந்த சிலர் தங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வேண்டுமென திடீரென குடிசை அமைக்க முயன்றனர். 

    இதற்கு உள்ளூர் பகுதி பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை தாசில்தார் கார்த்திக் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

    அப்போது முதல் கட்டமாக உள்ளூரை சேர்ந்த தகுதியுள்ள நபர்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தார். 

    அதைத்தொடர்ந்து இரு தரப்பு மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் 16 நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் என மொத்தம் 24 பேர் திடீரென பெரிய மாரியம்மன் கோவில் முன்பு தடையை மீறி தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரி நேற்று 5001 சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவர் என்றும் எச்சரித்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் நேற்று காலை பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் முன்பு திரண்டனர். இந்நிலையில் மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் 16 நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் என மொத்தம் 24 பேர் திடீரென பெரிய மாரியம்மன் கோவில் முன்பு தடையை மீறி தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் டவுன் போலீசார் மொடக்குறிச்சி பா.ஜனதா எம்.எல்.ஏ. சரஸ்வதி உள்பட 24 நிர்வாகிகளை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தடையை மீறி தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சரஸ்வதி எம்.எல்.ஏ. உள்பட 24 பேர் மீது டவுன் போலீசார் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் கோவை, திருப்பூருக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இருந்து தினமும் கோவைக்கு காலை 7.15 மணிக்கு திருப்பூர் வழியாக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதேபோல் கோவையில் இருந்து மீண்டும் மாலை 6.30 மணிக்கு ஈரோட்டுக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

    இந்த ரெயிலில் திருப்பூர் மற்றும் கோவைக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் சென்று வந்தனர். பஸ் கட்டணத்தைவிட குறைந்த கட்டணம் என்பதாலும் சிரமமின்றி பயணம் செய்யலாம் என்பதாலும் இந்த ரெயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த பயணிகள் ரெயில் நிறுத்தப்பட்டது. இதனால் கோவை, திருப்பூருக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

    இதனால் வேறு வழியின்றி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்களில் சென்று வந்தனர் . திருப்பூருக்கு ரூ.35, கோவைக்கு ரூ.80-ம் பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதாலும் ரெயில் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாலும் நிறுத்தப்பட்ட ஈரோடு -கோவை பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்ததால் மத்திய அரசு கொரோனா காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி உத்தரவிட்டது. இதனால் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில்கள் படிப்படியாக மீண்டும் விடப்பட்டன.

    இதைத்தொடர்ந்து ஈரோடு-கோவை பயணிகள் ரெயிலும் இன்று முதல் ஓடத் தொடங்கியது. இந்த ரெயிலில் இன்று திருப்பூர், கோவைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்தனர். இந்த பயணிகள் ரெயிலில் முன்பு 10 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது 6 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டு உள்ளது.

    இதுபற்றி ரெயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்டபோது இரண்டு வருடமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த ரெயில் இன்று முதல் மீண்டும் ஓடத் தொடங்கி உள்ளது. பயணிகளின் வருகையையொட்டி மீண்டும் அதிகமான பெட்டிகளை இணைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினர்.

    இந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கூறியதாவது:-

    கடந்த 2 வருடமாக நிறுத்தப்பட்டிருந்த ஈரோடு கோவை பயணிகள் ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று முதல் இந்த ரெயில் ஓடத் தொடங்கியதால் நிறைய பேருக்கு இந்த ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது தெரியவில்லை. மேலும் பஸ்சில் சென்று பழகிவிட்டதால் திருப்பூர், கோவை செல்லும் தொழிலாளர்கள் பஸ்சிலேயே செல்கின்றனர். மேலும் முன்பு ரெயிலில் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு செல்வதற்கு ரூ.15 ம் கோவை செல்வதற்கு ரூ.25ம் கட்டணம் இருந்தது. ஆனால் தற்போது திருப்பூர் செல்வதற்கு ரூ.35ம் கோவை செல்வதற்கு ரூ.50ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணத்தை முன்பு இருந்ததை போல குறைத்தால் அதிகமான பயணிகள் இந்த ரெயிலில் சென்று வர வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஈரோடு-கோவை பயணிகள் ரெயில் இன்று முதல் ஓட தொடங்கியதால் ரெயில் என்ஜினுக்கு திருஷ்டி சுத்தப்பட்டது. மேலும் பயணிகளுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது.

    இதையும் படியுங்கள்... ரஷிய நாணயத்தில் எரிவாயு வாங்காவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து: உலக நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை

    கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலில் பழங்குடி பிரிவில் முதலாவது இடத்தில் சந்திரன் இருந்தார். இருப்பினும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
    ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி சுண்டப்போடு பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் உடுமுட்டு. இவரது மகன் சந்திரன் (21). குழந்தை தொழிலாளியாக மாடு மேய்த்து கொண்டிருந்த சந்திரனை அதிகாரிகள் மீட்டு குழந்தை தொழிலாளர்களுக்கான சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அங்கு 2 ஆண்டுகள் படித்த அவர் பர்கூர் மலைப்பகுதி குன்றி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார்.

    பின்னர் கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை செயல்பாடுகள் தொழிற்பாடப்பிரிவில் சேர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு படித்து முடித்தார். சுண்டப்போடு கிராமத்தில் இருந்து இதுவரை ஒருவர் கூட கல்லூரி படிப்பில் சேராத நிலையில் முதல் நபராக பிளஸ்-2 முடித்ததும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கும், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்துக்கும் சந்திரன் விண்ணப்பித்து இருந்தார்.

    கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலில் பழங்குடி பிரிவில் முதலாவது இடத்தில் சந்திரன் இருந்தார். இருப்பினும் அவருக்கு கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் வேளாண்மை பல்கலைக்கழகத்திலும் இடம் கிடைக்கவில்லை.

    இதையடுத்து குடும்ப வறுமையால் சந்திரன் மாடு மேய்த்து கொண்டிருந்தார். நடப்பாண்டு மீண்டும் சந்திரன் கால்நடை மருத்துவ படிப்புக்கும், வேளாண்மை பாடப்பிரிவுக்கும் விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து சந்திரனுக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது. அதில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கத்துக்கு நேரில் வருமாறு தெரிவித்து இருந்தனர்.

    அங்கு சென்றபோது சந்திரனுக்கு வேளாண்மை பாடப்பிரிவில் (சுயநிதி) இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் உள்ள ஒரு தனியார் வேளாண் கல்லூரியில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து மாணவர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    நான் பிளஸ்-2 வில் வேளாண்மை செயல்பாடுகள் தொழிற் பாடப்பிரிவில் 444 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். இதையடுத்து உயர்கல்வி பயில தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திலும், கால்நடை மருத்துவ படிப்பிலும் சேர விண்ணப்பித்தேன். ஆனால் இடம் கிடைக்கவில்லை.

    பிளஸ்-2 அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு வேளாண்மை, கால்நடை பல்கலைக்கழகங்களில் 95 சதவீத ஒதுக்கீடும், தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு வெறும் 5 சதவீதம் மட்டுமே சேர்க்கைக்கான ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு 50 சதவீதம், வேளாண்மை தொழிற்பிரிவு பாடப்பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் வேளாண்மை, கால்நடை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    மேலும் இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திலும் மனு கொடுக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்தேன். அப்போது அவர் சட்ட ரீதியாக உதவுவதாக தெரிவித்தார். இறுதிவரை உனக்கு துணை இருப்பேன் என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நான் விண்ணப்பித்து இருந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் வேளாண்மை பாடப்பிரிவில் சுயநிதி கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்கழகத்தில் 5 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. ஆனால் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தனியார் கல்லூரிகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு கடைப்பிடிப்பது இல்லை. என்னைபோல பல மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனியார் கல்லூரிகளிலும் 5 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதன் மூலம் தொழிற்பாடப்பிரிவில் படிப்பவர்களுக்கு கூடுதலாக 140 இடங்கள் கிடைக்கும். மேலும் இந்த ஆண்டு முதல் வேளாண் பல்கலைக் கழகத்தில் தமிழ்வழி பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் காத்திருந்த நிலையில் எனது வேளாண் கல்வியை நனவாக்கிய முதல்-அமைச்சர் மற்றும் எனக்காக போராடிய சுடர் அமைப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு மாணவர் சந்திரன் கூறினார்.
    ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் தடையை மீறி தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் ஒவ்வொரு வருடமும் பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

    அதன்படி இந்த வருடம் இன்று பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்க கோரி பெரிய மாரியம்மன் கோவில் முன்பு 5 ஆயிரம் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படும் என்றும் எச்சரித்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் முன்பு திரண்டனர். மொடக்குறிச்சி பா.ஜனதா எம்.எல்.ஏ. சி.கே.சரஸ்வதி தலைமையில் 16 நிர்வாகிகள் திடீரென பெரிய மாரியம்மன் கோவில் முன்பு தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் டவுன் போலீசார் சரஸ்வதி எம்.எல்.ஏ உட்பட 16 நிர்வாகிகளை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதேநேரம் ஈஸ்வரன் கோவிலில் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திரண்டு இருந்தனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று ஈஸ்வரன் கோவிலில் தேங்காய் உடைத்தனர்.

    இன்னும் சில குழுவினர் எல்லை மாரியம்மன் கோவில், நடு மாரியம்மன் கோவில், வீரபத்திர மாரியம்மன் கோவில் உட்பட 10-க்கும் மேற்பட்ட கோவில்களில் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 
    ஈரோடு மாவட்டத்தில் 5-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 5-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 3-ம் அலை கட்டுக்குள் வரத் தொடங் கியுள்ளது. உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தினசரி பாதிப்பு அதிகமாக பரவியது.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வந்தது. ஒருநாள் தினசரி பாதிப்பு ஆயிரத்து 400 வரை பதிவானது. தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டதால் 3-ம் அலையில் பெரும்பாலான மக்களுக்கு லேசான அறிகுறியே இருந்தது. 

    இதனால் அவர்கள் மருத்துவர் அறிவுரைப்படி வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். ஒரு சிலர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற நேர்ந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிக்கப்பட்டது.

    இதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்கள் உடனு க்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது போன்று பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
    கடந்த 25-ந் தேதி மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் யாருக்கும் ஏற்படவில்லை. தொடர்ந்து 5 நாட்களாக மாவட்டத்தில் யாருக்கும் புதிய பாதிப்பு ஏற்பட வில்லை.

    இதுவரை மாவட்டத்தில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 ஆக பதிவாகியுள்ளது. 
    இதுவரை மாவட்டத்தில் குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளனர். 
    தற்போது மாவட்டம் முழுவதும் ஒருவர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்டத்தில் பாதிப்பு வெகுவாக குறைந்தாலும் மக்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.

    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 21-ந் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கியது.

    அதிலிருந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 24-ந் தேதி மட்டும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. பின்னர் தொடர்ந்து அதிகரி த்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

     ஈரோட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் ரூ.107.18-க்கு விற்பனையானது. இன்று வரலாறு காணாத வகையில் மேலும் 75 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.93-க்கு விற்பனையானது.

    இதேபோல் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.97.26-க்கு விற்பனையானது. இன்று மேலும் 76 காசுகள் உயர்ந்து 98.02 காசுக்கு விற்பனை ஆனது.

    தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள், சிறு வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து வருவதால் இதன் தாக்கம் எதிரொலியாக மற்ற பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
    ×