search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர் வரத்து அதிகரிப்பு"

    • நேற்று 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை அணையில் இருந்து 933 கன அடி வெளியேற்றப்படுகிறது.
    • பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து வரும் தமிழக - கேரள எல்லை வனப்பகுதிகளிலும், கேரளாவின் உள் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று முன்தினம் வினாடிக்கு 822 கன அடி நீர் வந்த போது அணையின் நீர் மட்டம் 119.65 அடியாக இருந்தது. நேற்று வினாடிக்கு 1708 கன அடியாக இருந்த நீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் 120.25 அடியாக உயர்ந்தது. இன்று காலை அணைக்கு 2593 கன அடி நீர் வருகிறது.

    இதனால் அணையின் நீர் மட்டம் 121.20 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 400 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை அணையில் இருந்து 933 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2886 மி.கன அடியாக உள்ளது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நீர் திறப்பு அதிகரிப்பின் காரணமாக பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    71 அடி உயரமுள்ள வைகை அணை நீர் மட்டம் 48.69 அடியாக உள்ளது. நீர் வரத்து 139 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 1826 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.50 அடி. வரத்து 11 கன அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 90.20 அடி. வரத்து 5 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 49.43 மி.கன அடி.

    பெரியாறு 49.4, தேக்கடி 21.6, கூடலூர் 1.2, உத்தமபாளையம் 2.6, சண்முகாநதி அணை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையின் போது தேனி மாவட்டம் மற்றும் முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர் மட்டம் உயராமல் இருந்தது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய பணிகள் மேற்கொண்ட விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் மழையை எதிர்பார்த்து இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று 822 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 1709 கன அடியாக அதிகரித்தது. மேலும் 119.65 அடியாக இருந்த நீர் மட்டம் 120 அடியை கடந்து 120.25 அடியாக உள்ளது. ஒரே நாளில் ½ அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 48.65 அடியாக உள்ளது. 148 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.45 அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 90.03 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 39, தேக்கடி 38, கூடலூர் 3.6, உத்தமபாளையம் 2.2, சண்முகாநதி அணை 3.4, வீரபாண்டி 1.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையின் நீர்மட்டம் 74.58 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ள ளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்ப ட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதே நேரம் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.58 அடியாக உள்ளது. நேற்று அணைக்கு வினாடி 1,534 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 4,887 கனடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. காளிங்க ராயன் பாசனத்திற்கு 550 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,950 கனஅடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. 

    • விவசாயிகள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட போதிலும் இந்த மழையால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • விவசாயிகள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட போதிலும் இந்த மழையால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    திருப்பூர்:

    கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. வயல்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.விவசாயிகள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்க முடியாமல் அவதிப்பட்ட போதிலும் இந்த மழையால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    ஒரு சில குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.மா, வாழை, தென்னை உள்ளிட்ட மரப் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை பேருதவியாக அமைந்துள்ளது.

    கார்த்திகை பட்டம் துவங்க உள்ளதால் விவசாயிகள் மக்காச்சோளம், நிலக்கடலை, சூரியகாந்தி, சின்ன வெங்காயம், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த ஆண்டு சின்ன வெங்காயத்திற்கு போதுமான விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர்.இந்த சீசனில் நல்ல விலை கிடைப்பதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

    பயிர் சாகுபடிக்கு போதுமான மழை பெய்துள்ளதாலும், குளம், குட்டைகளுக்கு நீர் வரத்துவங்கி உள்ளதாலும் கார்த்திகை பட்ட சாகுபடி பரப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது
    • நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 1 வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியாறு, வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரியகுளம், மஞ்சளாறு, தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தேனி ரெயில் நிலையத்துக்குட்பட்ட தண்டவாளத்தில் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி பாதையை சீரமைத்தனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 135.60 அடியாக உள்ளது. வரத்து 969 கன அடி. திறப்பு 1866 கன அடி. இருப்பு 6017 மி.கன அடி.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 69.42 அடியாக உள்ளது. வரத்து 1784 கன அடி. திறப்பு 2069 கன அடி. இருப்பு 5681 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 55 அடி. வரத்து 15 அடி. சோத்துப்பாறை நீர் மட்டம் 126.37 அடி. வரத்து 40 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    பெரியாறு 7.2, தேக்கடி 23.8, கூடலூர் 4.6, உத்தமபாளையம் 10.7, வீரபாண்டி 8.2, வைகை அணை 3, மஞ்சளாறு 4, சோத்துப்பாறை 6, ஆண்டிபட்டி 7.2, அரண்மனைபுதூர் 14, போடி 3.6, பெரியகுளம் 15 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • முல்லைபெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 166 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
    • முல்லைப் பெரியாற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளை குளிப்பாட்டவோ ஆற்றுக்கு செல்லக்கூடாது என்று ஒவ்வொரு கிராம பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது.

    மேலும் முல்லைப் பெரி யாறு அணைப்பகுதியில் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 137 அடியை எட்டி உள்ளது. அணையில் இருந்துவினாடிக்கு 2 ஆயிரத்து 166 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் சுருளி அருவியில் இருந்து வரும் தண்ணீர் நீர்நிலைகள் நிரம்பி வருகின்ற தண்ணீர் என அனைத்தும் முல்லைப் பெரியாற்றில் கலக்கின்றன.இதனால் ஆற்றில் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில் உத்தமபாளையம் தாசில்தார் அர்சுணன் தலைமையில் துணை தாசில்தார்கள் கண்ணன், முருகன் மற்றும் வருவாய் துறையினர் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகள், பேரூராட்சி கள், நகராட்சி ஆகிய பகுதி மக்கள் யாரும் முல்லைப் பெரியாற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆடு, மாடுகளை குளிப்பாட்டவோ ஆற்றுக்கு செல்லக்கூடாது என்று ஒவ்வொரு கிராம பகுதிகளிலும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

    நேற்று மாலை உத்தம பாளையம் தாசில்தார் தலைமையில் வருவாய்த் துறையினர் உத்தமபாளை யம் முல்லைப் பெரியாற்று தடுப்பணை,கம்பம், காமயகவுண்டன்பட்டி, கருநாக்க முத்தன்ப ட்டி,கூடலூர் என முல்லைப் பெரியாறு ஆற்றங்கரை யோரங்களில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டுவருகின்றனர்.

    ×