என் மலர்tooltip icon

    ஈரோடு

    மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு, சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு, சி.சி.டி.வி கேமரா காட்சிகள் மூலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்து.விவசாயி. இவருடைய மனைவி சகுந்தலா (வயது 65). இவர் நேற்று மாலை வீட்டுக்கு அருகே உள்ள மாவு அரைக்கும் கடைக்கு சென்றார்.அங்கிருந்து பின்னர் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். 

    அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென சகுந்தலாவை கீழே தள்ளிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார். பின்னர் சகுந்தலா  வீட்டிற்கு வந்து தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறினார்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    மேலும் வழிப்பறி நடந்த இடத்துக்கு அருகே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     ஈரோட்டில் கடந்த சில மாதங்களாக நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெறாமல் இருந்து வந்தது. தற்போது மீண்டும் தொடங்கியிருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோட்டில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு சூரம்பட்டி வேலா வீதியை சேர்ந்தவர் குப்புசாமி (31). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார்.   கடந்த சில ஆண்டுகளாக குப்புசாமி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

     இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக குப்புசாமி கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் மரச்சட்டத்தில் கயிற்றால் தூக்குபோட்டு கொண்டார்.

     இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குப்புசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியி லேயே குப்புசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

     இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர் அருகே இளம்பெண் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே இளம்பெண் தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர் தவிட்டு பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி திவ்யதர்ஷினி (19). நேற்று இரவு இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    இதனையடுத்து வீட்டிற்கு வந்த திவ்யதர்ஷினி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் அந்தியூர் தவிட்டுபாளையம் பழனியப்பா குறுக்கு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (39). இவர் நகலூரில் முடிதிருத்தும் கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி சுகந்தி என்ற மனைவி உள்ளார். ஆனால் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

    ஈஸ்வரன்  மற்றும் அவரது மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை நகலூரில் ஈஸ்வரன் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஈரோடு மாவட்டத்தில் நாளை பிளஸ்- 2 தேர்வு 104 மையங்களில் நடக்கிறது. காப்பி அடிப்பவர்களை பிடிக்க 423 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நாளை பிளஸ்- 2 தேர்வு 104 மையங்களில் நடக்கிறது. காப்பி அடிப்பவர்களை பிடிக்க 423 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் பிளஸ்- 2, பிளஸ் -1, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வரும் 31-ந் தேதி வரை  நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் செய்து வருகின்றனர். நாளை (வியாழக்கிழமை) பிளஸ் - 2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வினை 24,909 மாணவ-மாணவிகளும் எழுதுகின்றனர். இவர்களுக்கு 104 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேப்போல் பிளஸ்- 2 தேர்வை தனி தேர்வர்கள் 416 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கு 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் 423 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

    இவர்கள் மாணவர்கள் தேர்வு எழுதுவதை கண்காணிப்பார்கள். மாணவர்கள் தேர்வு அறைக்கு 30 நிமிடத்திற்கு முன்பே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் தேர்வு அறையில் தனிமனித இடைவெளி கடைப்பிடித்து ஒரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

    தேர்வறையில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
    பிளஸ்-1 பொதுத்தேர்வு வரும் 10-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி நிறைவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு வரும் 6-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    பிளஸ்- 1 பொதுத்தேர்வினை 27,656 மாணவ-மாணவிகளும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை 28,365 மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர். பிளஸ்-1 பொதுத்தேர்வை 203 தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு தேர்வை 871 தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர். பிளஸ்-1 பொதுத் தேர்வுக்கு மாவட்டத்தில் 107 தேர்வு மையங்களும். எஸ். எஸ்.எல். சி தேர்வுக்கு மாவட்டத்தில் 118 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    பெருந்துறை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னிமலை பகுதியை  சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவர் தனது மோட்டார் சைக்கிளில் காஞ்சிக்கோவில் ரோடு, செங்காடு பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது எதிரே மற்றொரு மொபட்டில் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவில் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடாஜலம் (40). என்பவர் வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு மோதியது.

    இதில் பழனிச்சாமிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

    இதில் வெங்கடா ஜலபதிக்கு காயம் ஏற்பட்டு அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
    இது குறித்து பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    ஆப்பக்கூடல் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



    ஆப்பக்கூடல்:

    ஆப்பக்கூடல் அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி பாரதி தாசன் வீதியை சேர்ந்த சண்முகம். இவரின் மகன் விமல்ராஜ் (வயது 17). இவர் கோபிசெட்டி பாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று விமல்ராஜ்  மோட்டர் சைக்களில் அத்தாணியில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது கீழ்வாணி ஆஞ்சநேயர் கோவில் பிரிவுக்கும், செங்காட்டு புதூர் பிரிவுக்கும் இடையே உள்ள வளைவில் விமல்ராஜ் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன் மற்றும் சக்திவேல் ஆகியோருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. 

    விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த விமல்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டி பாளை யத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விமல்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து  ஆப்பக்கூடல் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு ரங்கம்பாளையம் அன்னை சத்யா நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் விஜயகுமார் (வயது 26). இவர் அந்த பகுதியில் ஒர்க்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.

     கடந்த ஒரு வாரமாக விஜயகுமார் மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இதுபற்றி அவரது தந்தை கிருஷ்ணசாமி கேட்டபோது அவர் ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார். 

    இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் விஜயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். கிருஷ்ணசாமி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. 

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது விஜயகுமார் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். 

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி, விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே விஜயகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோபிசெட்டிபாளையம் அருகே வெங்கடரமண பெருமாள், கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே வெங்கடரமண பெருமாள், கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

    கோபி செட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையம் விசாலாட்சி உடனமர் விஸ்வநாத சுவாமி,ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடரமண பெருமாள், கரியகாளியம்மன் கோவிில் கும்பாபிஷேகம், இன்று காலை நடைபெற்றது. 

    இதையொட்டி 29-ந் தேதி மகாகணபதி ஹோமம் நவகிரக ஹோமம் நடைபெற்றது. 2-ந் தேதி முதல் கால யாக பூஜை நடந்தது. 3-ந் தேதி இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று 4-ந் தேதி புதன்கிழமை 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது.
     
    அதைத்தொடர்ந்து காலை 7 மணியளவில் விசாலாட்சி உடனமர் விசுவநாத சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் வெங்கடரமண பெருமாள், ஸ்ரீ கரிய காளியம்மன் ஆகிய கோவில்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றன. 
     
    அதைத் தொடர்ந்து மகா அபிஷேகம், தசதானம், தச தரிசனம், மகாதீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சியில் கோபி, காசிபாளையம், அரசூர், அக்கரை கொடிவேரி, அழுக்குளி, குருமந்தூர்,  நல்லகவுண்டன்பாளையம் கரட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழா 8-ந் தேதி நடக்கிறது.
    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர விழா 8-ந் தேதி நடக்கிறது.

    சென்னிமலை முருகன் கோவிவில் ஒவ்வொரு ஆண்டும் உலக நன்மை, மழை வேண்டியும், நாடு செழிக்கவும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடம் அக்னி நட்சத்திர விழா நாளை (வியாழக்கிழமை) மாலை சென்னிமலை மலை அடிவாரத்தில் உள்ள இடும்பன் கோவிலில் விஷேச அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் தொடங்குகிறது.

    இதையொட்டி வரும் 7-ந் தேதி (சனிக்கிழமை)  அதிகாலை 5 மணிக்கு  சென்னிமலை மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்காவடி மற்றும் தீர்த்தக் குடங்கள் எடுத்து வரப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தட்டாங்காட்டுபுதூர், வெப்பிலி, அய்யம்பாளை யம், புதுப்பாளையம், தோப்புப்பாளையம், மேலப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகள் வழியாக  தீர்த்தம் எடுத்து மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர்.

    அன்று காலை 7 மணிக்கு சென்னிமலை மலைக் கோவிலில் கணபதி ஹோமம், திரவியாகுதி, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் அன்று மாலை  விநாயகர் வழிபாடு, கலச ஸ்தாபனம், தேவார திருமுறை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

    வரும் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சுப்பிரமணியசுவாமிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சப்த நதி தீர்த்த அபிஷேகம் மற்றும் முக்கடல் தீர்த்த அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.

    தொடர்நது அன்று காலை 7.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜை, விநாயகர் வழிபாடு, வேதிகார்ச்சனை, மகா லஷ்மி, மகா ஜெய சுப்ரமண்ய யாக ஹோமம் ஆகியவை நடைபெறுகிறது. 

    அதைத்தொடர்ந்து காலை 10.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனை, அதைத்தொடர்ந்து 1  மணிக்கு உற்சவமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை முருகன் அடிமை சுப்புசாமி தலைமையில் அக்னி நட்சத்திர அன்ன தான வழிபாட்டு மன்ற நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.–
    வெள்ளோடு அருகே மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    வெள்ளோடு அருகே மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் வெள்ளோடு சி.எஸ்.ஐ. காலனியை சேர்ந்தவர் மரகதம் (வயது 85).இவரது கணவர் ராஜீ. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மரகதம் தனது தம்பி குடும்பத்துடன் வசித்து வந்தார். 

    கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரகதம் குளியலறையில் வழுக்கி விழுந்து அவரது இடுப்பு பின்பக்கம் முதுகு தண்டுவடத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மெதுவாகத் தவழ்ந்து சென்று கொண்டிருந்தார். 

    இந்நிலையில் சம்பவத்தன்று மரகதத்தின் தம்பி மகன் மரகதத்திற்கு காலை உணவு கொடுத்தார். பின்னர் மதிய உணவு கொடுப்பதற்காக வந்து பார்த்தபோது மரகதத்தை காணவில்லை.  அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வீட்டிற்கு கிழக்கு புறம் உள்ள ஊரின் பொது கிணற்றில் மரகதம் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து வெள்ளோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரகதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    மரகதம் உடல்நலக்குறைவால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு என்ன காரணம் என்பது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஆன்லைன் வர்த்தகத்தால் கடன் தொல்லை செல்போனில் மனைவிக்கு தகவல் அனுப்பிவிட்டு மாயமான வாலிபர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    அம்மாபேட்டை:

    ஆன்லைன் வர்த்தகத்தால் கடன் தொல்லை செல்போனில் மனைவிக்கு தகவல் அனுப்பிவிட்டு மாயமான வாலிபர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அம்மாபேட்டை அருகே உள்ள சின்னபள்ளம், மேல் வீதியை சேர்ந்தவர் ரோஸ்லின் ஜெனிபர் (25). இவரது கணவர் அந்தோணி சார்லஸ் (31). இவர்கள் இருவருக்கும் கடந்த 2019-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

    அந்தோணி சார்லஸ் தனது குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார். கடந்த 2021-ல் வேலை விஷயமாக சென்னை செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அந்தோணி சார்லஸ் சில நாட்களுக்குப் பிறகு தனது மனைவியை தொடர்பு கொண்டு செல்போனில் பேசியுள்ளார். 

    அப்போது எனக்கு ஆன்லைன் வர்த்தக கடன் ரூ 4.1/2லட்சம் உள்ளது. என்னால் சமாளிக்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். என்னை தேட வேண்டாம் எனக் கூறியுள்ளார். 

    உடனே ரோஸ்லின் ஜெனிபர் தனது கணவரை சமாதானப்படுத்தி வீட்டிற்கு வந்த பின்னர் கடனை அடைத்துவிடலாம் எனக்கூறி தனது கணவரை வரவழைத்துள்ளார். அதன்பின் தான் அணிந்திருந்த நகைகளை விற்று கடன்களை அடைத்ததனர்.

    பிறகு அந்தோணி சார்லஸ் தனது மனைவி வீட்டிலேயே தங்கி ஈரோடு அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் செயல்படும் காட்டன் மில் ஒன்றில் கிராபிக் டிசைனராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 25-ந் தேதி காலை பணிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. மேலும் அன்று இரவு ரோஸ்லின் ஜெனிபர் செல்போனுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

     அதில் தான் வாங்கிய கடன்கள் இன்னும் முடியவில்லை என்றும் கேரளா பக்கம் செல்வதாகவும் தன்னை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

    அதன்பின்னர் ரோஸ்லின் ஜெனிபர் தனது கணவருக்கு போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது, தொடர்ந்து அவரைப் பற்றி உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு ரோஸ்லின் ஜெனிபர் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தெங்குமரஹடா அருகே கோவில் விழாவில் குண்டம் இறங்க வரிசையில் நின்ற வாலிபர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த காளிதிம்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (38), இவரது மனைவி சரஸ்வதி (30), இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று கார்த்திக் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பவானி சாகர் அடுத்த தெங்குமரஹடா அருகே உள்ள தொட்ட கொம்பை மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்கு வந்தார்.

    பின்னர் காலை 7 மணியளவில் கார்த்திக் குண்டம் இறங்குவதற்காக வரிசையில் நின்றார். அப்போது அவர் தனது மனைவியிடம் திடீரென தனக்கு நெஞ்சு எரிச்சல் இருப்பதாகவும், பதட்டமாகவும், முச்சுவிட சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து சரஸ்வதி தனது கணவர் கார்த்திக்கை மீட்டு கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அப்போது கார்த்திக்கை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×