என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு மாவட்ட டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நாடார் சங்க அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • மாவட்ட தலைவர் ஞானபால் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஈரோடு:

    டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் திருநகர் காலனியில் உள்ள நாடார் சங்க அலுவலகத்தில் சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் நற்பணி மன்ற ஈரோடு மாவட்ட தலைவர் ஞானபால் பா.சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் உப தலைவரும், ஈரோடு நாடார் சங்க தலைவருமான உதயம் செல்வம், மாநகர தலைவர் சண்முகம், செயற்குழு உறுப்பினர் ராதா, நாடார் சங்க உப தலைவர் முருகையா, செல்லசாமி, மோகன்ராஜ், பேங்க் பாண்டி, ஜோசப், வேல்பாண்டி, வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 362 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • மொத்தமாக 16,717 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.11 லட்சத்து 99 ஆயிரத்து 809-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 362 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 73 ரூபாய் 39 காசுக்கும், அதிகபட்ச விலையாக 76 ரூபாய் 51 காசுக்கும், சராசரி விலையாக 75 ரூபாய் 92 காசுக்கும், இதேபோல் 2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 50 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 73 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 69 ரூபாய் 90 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 16,717 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.11 லட்சத்து 99 ஆயிரத்து 809-க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை.
    • இந்த அணையில் இருந்து வாய்காலுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு வலது கரை இடது கரை 2 மதகுகள் உள்ளன.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 42 அடியாகும். அணையின் மூலம் 2,498 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    இந்த அணைக்கு நீர்வரத்தானது குன்றி உள்பட அடர்ந்த வனப்பகு தியில் பெய்யும் மழையால் குண்டேரிப்பள்ளம் அணை நிரப்பப்பட்டு இங்கு கட்லா, லோகு, சிலேப்பி உள்ளிட்ட மீன் குஞ்சுகள் விடப்பட்டு பெரிதானதும் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அணைக்கு பண்டிகை காலங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் வருவர்.

    இந்த அணையில் இருந்து வாய்காலுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு வலது கரை இடது கரை 2 மதகுகள் உள்ளன. பொதுப்பணித்துறை அனுமதியுடன் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை விட்டு விட்டு விவசாய பாசனத்திற்கு இந்த அணையின் 2 மதகுகள் திறந்து விடப்பட்டு பாசன வசதி பெறுவது வழக்கமாகும்.

    இந்நிலையில் சில நாட்களுக்காகவே இந்த மதகுகள் திறந்த நிலையில் தண்ணீரானது மேட்டுக்காடு, ராமைய்யன் தோட்டம், ஆயா தோட்டம் வழியாக வாணிப்புத்தூர் வாய்க்கால் வந்து ஓடையில் வந்து தண்ணீர் வீணாக கலப்பதாக அப்பகுதி விவசாயிகள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

    இது குறித்து பொதுப்ப ணித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, தண்ணீர் திறந்து விட அனுமதி அளிக்கவில்லை என்றும், அதோடு மதகுகள் திறந்து விடப்பட்டு வாய்க்கால் வழியாக தண்ணீர் வருவதற்கு தற்போது வாய்ப்பில்லை என்று கூறினார்.

    அதன்பிறகு மதகுகள் திறந்த நிலையில் தண்ணீர் வீணாக வருவதாக தெரிவி த்ததுடன் ஊழியர்களை அனுப்பி மதகுகளை சரிசெய்து விட்டோம் என்று துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தார்.

    தண்ணீர் வீணாகி வருவது கூட பொதுப்ப ணித்துறை அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கு தெரியவில்லையா? சில நபர்களுக்காக மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படு கிறதா? என்று அப்பகுதியினரிடையே கேள்வி எழுந்துள்ளது.

    • கடந்த மாதம் தாலுகா அலுவலகத்தின் உள்பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தாசில்தார் விஜயகுமாரின் 2 சக்கர வாகனம் தாலுகா அலுவலகத்திலேயே மாயமானது.
    • சி.சி.டி.வி. கேமராவில் உள்ள காட்சி பதிவுகளை வைத்து யாரேனும் இருசக்கர வாகனங்கள் எடுத்து செல்கின்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள அந்தியூர் தாலுகா அலுவலகம், பஸ் நிலையம், தவிட்டுப் பாளையம் காய்கறி மார்க்கெட், ஜி ஹெச் கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் மளிகை கடைக்கு வருபவர்களும் வியாபாரிகளும் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்று வருவதற்குள் திருடு போகும் அவல நிலை நடந்து வருகிறது.

    கடந்த மாதம் தாலுகா அலுவலகத்தின் உள்பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த தாசில்தார் விஜயகுமாரின் 2 சக்கர வாகனம் தாலுகா அலுவலகத்திலேயே மாயமானது.

    அதற்கு அடுத்த நாள் வேறொரு நபரின் இரு சக்கர வாகனமும் தாலுகா அலுவலக வளாகத்திற்கு உள்ளேயே திருடு போனது. இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் அருகே தேநீர் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனது.

    இதனை தொடர்ந்து சம்பவத்தன்று காலை அந்தியூர் பஸ் நிலைய வளாகத்திற்குள் தனியார் பேருந்து நடத்துனர் தனது 2 சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார் மீண்டும் அந்த வாகனத்தை ஒரு மணிக்கு அந்தியூர் பஸ் நிலையம் வந்தபோது பார்த்துள்ளார்.

    அப்போது அவர் நிறுத்தி விட்டு சென்ற தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதனை அடுத்து அக்கம் பக்கம் தேடிப் பார்த்துள்ளார். வண்டியை காணவில்லை. இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி அந்தியூர் பஸ் நிலையம், ஜி ஹெச் கார்னர், அண்ணா மடுவு உள்ளிட்ட இடங்களில் உள்ள சி.சி.டி. கேமராவில் உள்ள காட்சி பதிவுகளை வைத்து யாரேனும் இருசக்கர வாகனங்கள் எடுத்து செல்கின்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றார்.

    இதனால் அந்தியூர் பகுதியில் இருசக்கர வாகன திருடர்கள் சுற்றித் திரிகிறார்கள் எனவே போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தி இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆதலால் இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.
    • சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஈரோடு:

    புரட்டாசி மாதம் பெருமாள் மற்றும் ஆஞ்ச நேயர், மகா விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக கருதி பெருமாள் வழிபாடு செய்வர். பலரும் விரதமி ருந்து பெருமாளை வழிபாடு செய்வது வழக்கம், புரட்டாசியில் வரும் சனிக்கிழமை மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இன்று இந்த வருடத்தில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆதலால் இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது. இதனால் சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையம் ஆதிநாரயணப்பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.

    முருங்கத்தொழுவு கிராமம் வடுகபாளையம் அடுத்துள்ள மலை மீது அமைந்துள்ள அணியரங்கப்பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வெள்ளோடு பெருமாள் கோவில், தண்ணீர்பந்தல் கிருஷ்ண பெருமாள் கோவில், கவுண்டம் பாளையம் வெங்கடேஷ பெருமாள் கோவில் மற்றும் சென்னிமலை டவுன், ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வ ரூப மகா விஷ்ணு ஆலயத்தில் காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணு விற்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

    அதை தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

    ஈரோடு கோட்டை பெருமாளுக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. இதை யொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.

    முன்னதாக மங்களகிரி பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபுஷேகம் செய்ய ப்பட்டது.

    இதையொட்டி இன்று காலை பவானி, ஈரோடு, சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பலர் வந்து மலை மீது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    அதேபோல் சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதி கேசவப் பெருமாள் சன்னதியில் உள்ள உற்சவர் மற்றும் மூலவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி முதல் சனிக்கிழ மையையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள மூல வாய்க்கால் மலை ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 7 மணி அளவில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவி யங்கள் அடங்கிய அபி ஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடை பெற்றன. அதை தொடர்ந்து மலையை சுற்றி சிறிய தேர் மூலம் சுவாமி திருவீதி உலா வந்தது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி வரதராஜ பெருமாள் கோவில், மேட்டு வளவு பெருமாள் கோயில், மொடச்சூர் பெருமாள் கோவில்,கூகலூர் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை–பெற்றன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர். மேலும் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவி லில் இன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு திருப்பதி அலங்கா ரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதே போல் அந்தியூர் அழகுராஜ பெருமாள், தவிட்டு பாளையம் வரத ராஜ பெருமாள், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வீரநாராயண பெருமாள், பெருந்துறை பிரசன்ன வெங்கட்ட ரமண பெருமாள், சத்தியமங்கலம் கேகாட்டு வீராம்பாளையம் பெருமாள், ஈரோடு சத்தி ரோடு கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அலங்காரம் செயய்ப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதியில் ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானிசாகர் ஆகிய 4 தொகுதியில் எவ்வித திருத்தமும் இல்லை.
    • தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

     ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளில் இருந்து வரப்பெற்ற ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு முன்மொழிவு–கள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதி களுடனான ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா பேசியதாவது:-

    4 தொகுதியில் திருத்தமும் இல்லை

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதியில் ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானிசாகர் ஆகிய 4 தொகுதியில் எவ்வித திருத்தமும் இல்லை.

    ஈரோடு கிழக்கில், மாநகராட்சி ஆரம்ப பள்ளி பி.மாரியம்மன் கோவில் வீதியில் இருந்து வந்த பழைய கட்டடம் பழுதடை–ந்ததால், கருங்கல் பாளையத்தில் உள்ள டிவைன் ஆரம்ப பள்ளியின் முதல் அறை க்கும், கருங்கல்பாளையம் விநாயகர் கோவில் வீதி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையத்தில் சிமெண்ட் சீட்டை எடுத்து தார்சு கட்டடமாக கட்டட வகை மாற்றம் செய்யப்ப ட்டுள்ளது.

    ஈரோடு மரப்பாலம் ரோடு, பி.மாரியம்மன் கோவில் வீதி, மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் மேற்கு பார்த்த சிமெண்ட் சீட்டால் வேயப்பட்ட கட்டடத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையம், அதே கட்டடத்தின் சிமெண்ட் சீட்டை எடுத்து தார்சு கட்டடமாக மாற்றப்ப ட்டுள்ளது. இதுபோன்ற 4 சட்டசபை தொகுதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தாண்டு, 'எனது வாக்கு எனது உரிமை', 'ஒரு வாக்கின் மகிகை' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு மகளிர் குழுவினர், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும்.

    இதற்கான போட்டிகளை பள்ளி, கல்லூரிகளில் வரும் அக்டோபர் 10-ந் தேதிக்குள் நடத்தி போட்டியாளர்களின் படைப்புகளை 30-ந் தேதிக்குள் பி.டி.எப். வடிவில் கலெக்டர் அலுவலக மின்னஞ்சல் முகவரியான ecuerode@gmail.com-க்கு அனுப்ப வேண்டும். பள்ளி நிர்வாகம் மூலம் பரிசுகள் வழங்கப்படும்.

    மாவட்ட அளவில் மூவர் கொண்ட குழு அமைத்து, அதில் சிறந்த போட்டி யாளர்களின் படைப்பு தேர்வு செய்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினத்தன்று சிறப்பு பரிசு வழங்கப்படும்.

    மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்றவர்கள், மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். மாநில அளவில் முதல் 3 பரிசாக, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் என வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) குமரன், (சத்துணவு) மணிவண்ணன், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டனர்.
    • போலீசார் அக்கம் பக்கத்தில் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஈரோடு:

    கோவை, பொள்ளாச்சியில் பா.ஜனதா அலுவலகம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். மேலும் கார், ஆட்டோக்களையும் உடைத்து சென்றனர்.

    இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பா.ஜனதா, இந்து முன்னணி அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் மற்றும் வழிபாட்டு தலங்கள், தலைவர்கள் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விடிய விடிய ரோந்தும் சுற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மூலப்பாளையம் பகுதியில் பா.ஜனதா பிரமுகர் தட்சிணாமூர்த்தி என்பவர் பர்னிச்சர் கடைக்குள் மர்ம நபர்கள் பெட்ரோல் வீசி ஜன்னல் வழியாக தீ வைத்து வீசினர். இதில் கடைக்குள் மேஜை மற்றும் ஜன்னல் லேசாக எரிந்து அணைந்து விட்டது.

    இதுபற்றி தெரிய வந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பா.ஜனதா பிரமுகரின் கார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி 4-வது வீதியை சேர்ந்தவர் சிவசேகர் (51). இவர் பு.புளியம்பட்டி நகர பா.ஜனதா பிரச்சார அணி முன்னாள் துணை தலைவராக பதவி வகித்தார். தற்போது இவர் பா.ஜனதாவில் இருந்து கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இவர் தனக்கு சொந்தமான 5 கார்களை தனது வீட்டிற்கு அருகில் உள்ள காலி இடத்தில் நேற்று இரவு நிறுத்தி இருந்தார். இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு சிவசேகர் வெளியே ஓடி வந்தார். அப்போது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    பின்னர் பு.புளியம்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் மற்ற 4 கார்களும் தப்பியது.

    இதுபற்றி தெரிய வந்ததும் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஏ.டி.எஸ்.பி, டி.எஸ்.பி.க்கள் நீலகண்டன், சேகர், இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், குருசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மர்ம நபர்கள் யாரோ காருக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அக்கம் பக்கத்தில் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே தடயவியல் நிபுணர்களும் தீ வைத்து எரிக்கப்பட்ட காரை சோதனை செய்தனர்.

    இது தொடர்பாக பா.ஜனதா பிரமுகர் சிவசேகர் பு.புளியம்பட்டி போலீசில் காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார். பா.ஜனதா பிரமுகர் காருக்கு தீ வைத்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் திரண்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது.

    இதையடுத்து பு.புளியம்பட்டி நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 200 போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • கவுந்தப்பாடி- சிறுவலூர் ரோட்டில் கண்ணாடிப்புதூர் பழனிச்சாமி தோட்டம் அருகில் உள்ள வளைவில் திரும்பினர்.
    • திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த நம்பியூர் செட்டியாம்பதி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கார்த்திக் (22). பாத்திர வியாபாரி. நம்பியூர் அடுத்த எலத்தூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கர் குமார். இவரது மகன் சங்கர் (23). இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

    நேற்று இரவு கார்த்திக் மற்றும் சங்கர் 2 பேரும் கவுந்தப்பாடி குருமூர்த்தி காலனியில் உள்ள கார்த்திக் மாமா ரவிக்குமார் என்பவர் வீட்டுக்கு வந்தனர்.

    அங்கு இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் கார்த்திக், சங்கர் ஆகியோர் நம்பியூர் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை கார்த்திக் ஓட்ட பின்னால் சங்கர் அமர்ந்து சென்றார்.

    அவர்கள் கவுந்தப்பாடி- சிறுவலூர் ரோட்டில் கண்ணாடிப்புதூர் பழனிச்சாமி தோட்டம் அருகில் உள்ள வளைவில் திரும்பினர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் கார்த்திக் மற்றும் சங்கர் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுபாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவியது.
    • கடந்த 5 ஆண்டுகளாக அவர் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து வந்தார்.

    பவானி :

    ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் அந்த பகுதியில் உள்ள சாயப்பட்டறையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மகன் சந்தோஷ்குமார். இவர் உடற்பயிற்சி ஆசிரியருக்கான பட்டய படிப்பு முடித்துவிட்டு விளையாட்டு இயக்குனருக்கான மேல்படிப்பை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி இருந்து படித்து வருகிறார்.

    இவருக்கு விலையுயர்ந்த மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. இதற்காக அவர் தன்னுடைய உழைப்பினால் கிடைத்த பணத்தால் மட்டுமே மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டும் என வைராக்கியமாக இருந்தார்.

    அப்போது ஈரோடு மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவியது. இதனால் 10 ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்கவும் மாட்டார்கள், கொடுக்கவும் மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டது.

    எனவே 10 ரூபாய் நாணயங்களாக சேகரித்து வைத்து மோட்டார்சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது.. இதற்காக கடந்த 5 ஆண்டுகளாக அவர் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து வந்தார்.

    இதைத்தொடர்ந்து 10 ரூபாய் நாணயங்களின் மதிப்பு நேற்று ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆனது. இதையடுத்து முழு தொகையையும் கொண்டு அதிநவீன மோட்டார்சைக்கிள் வாங்குவதற்காக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் மோட்டார்சைக்கிள் விற்பனை நிலைய ஷோரூமுக்கு வந்தார்.

    இதற்காக அவர் தான் சேகரித்து வைத்திருந்த 7 கிலோ 750 கிராம் எடையிலான 10 ரூபாய் நாணயங்களை தனது நண்பர்கள் மூலம் 2 கார்களில் ஏற்றிக்கொண்டு வந்தார். பின்னர் அவர் அந்த நாணயங்களை கொடுத்து புதிதாக மோட்டார்சைக்கிளை வாங்கினார்.

    கல்லூரியில் படித்துக்கொண்டே தனது சொந்த உழைப்பில் அதிநவீன மோட்டார்சைக்கிளை வாங்கிய சந்தோஷ்குமாரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.

    • மாணவி கீர்த்தனா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.
    • மனம் உடைந்த மாணவி கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத போது பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப் பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு துளசிமணி (19), கீர்த்தனா (17) ஆகிய 2 மகள்களும், கவின் (14) என்ற மகனும் உள்ளனர்.

    மூத்த மகள் துளசிமணி படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். 2-வது மகள் கீர்த்தனா நம்பியூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகன் கவின் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கீர்த்தனா நம்பியூர் அரசு மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் கீர்த்தனா வீட்டிலேயே இருந்து வந்தார்.

    மாணவி கீர்த்தனா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதை அவரது தந்தை கண்டித்து உள்ளார். வழக்கம் போல் நேற்றும் மாணவி செல்போனில் பேசி உள்ளார். இதை பார்த்த அவரது தந்தை செல்போனை பிடுங்கிக் கொண்டு வேலைக்கு சென்று விட்டார்.

    இதனால் மனம் உடைந்த மாணவி கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத போது பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை 5 மணி அளவில் லட்சுமணன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. பலமுறை சத்தம் போட்டும் கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் லட்சுமணன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது கீர்த்தனா தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அப்போது கீர்த்தனாவை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கீர்த்தனா உடலை அனுப்பி வைத்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
    • அதன்படி இன்று பவானியில் 100-க்கு மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    பவானி:

    பவானி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் வழக்கறி ஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் தாண்டவன், செயலாளர் கண்ணுசாமி, பொருளாளர் விஜயகுமார் உள்பட நிர்வாகிகள் கூட்டாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    பவானி வழக்கறிஞர் சங்க உறுப்பினர் மற்றும் பொருளாளருமான விஜயகுமார் 22-ம் தேதி காலை அவரது சொந்த ஊரான ரெட்டிபாளையம் பொது வழியில் வழிமறித்து வழக்கின் எதிர் தரப்பிரான ஒருவர் தகாத வார்த்தைகள் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனையடுத்து வக்கீல் விஜயகுமார் வெள்ளி திருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

    வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலைய அதிகாரிகளின் அலட்சிய போக்கினை கண்டித்தும், வழக்கறிஞர்களின் தொழிலுக்கு எவ்வித பாதுகாப்பும், உத்தரவா தமும் இல்லாத நிலையை கண்டித்தும், நமது செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பா ளர்களின் கருத்தினை கேட்டு அதன் அடிப்ப டையில் இன்று ஒரு நாள் மட்டும் பவானி வழக்கறிஞர் சங்க வக்கீல்கள் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பார்கள் என முடிவு செய்யப்பட்டு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    அதன்படி இன்று பவானியில் 100-க்கு மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    • சிறுமியின் வீட்டிற்கு இளங்கோவன் வந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் இளங்கோவனை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி யின் 16 வயது மகள் 8-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் டி.ஜி.புதூர் பகுதியை சேர்ந்த இளங்கோ வன் (22). கூலி தொழிலாளி. இவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் பழகி வந்ததை சிறுமியின் தாயார் கண்டித்தார்.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சிறுமியின் தாயார் வேலைக்கு சென்று விட்டார். அப்போது சிறுமி யின் வீட்டிற்கு இளங் கோவன் வந்து சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 15-ந்தேதி இளங்கோவன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இளங்கோவன் டி.ஜி. புதூர் பகுதியில் வாடகை வீட்டில் அந்த சிறுமியுடன் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் நேற்று அந்த சிறுமி மயக்கம் அடைந்தார். இதனால் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்த தகவல் சிறுமியின் தாயிக்கு கிடைத்தது. இதையடுத்து சிறுமியின் தாய் ஆஸ்பத்தி ரிக்கு சென்று பார்த்த போது சிறுமி கர்ப்பமாக இருநதது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் பங்களாப் புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இளங்கோவன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் இளங்கோவனை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடை த்தனர்.

    ×