search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the Perumal temples"

    • புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆதலால் இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது.
    • சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ஈரோடு:

    புரட்டாசி மாதம் பெருமாள் மற்றும் ஆஞ்ச நேயர், மகா விஷ்ணுவிற்கு உகந்த மாதமாக கருதி பெருமாள் வழிபாடு செய்வர். பலரும் விரதமி ருந்து பெருமாளை வழிபாடு செய்வது வழக்கம், புரட்டாசியில் வரும் சனிக்கிழமை மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இன்று இந்த வருடத்தில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆதலால் இன்று பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிேஷகம் மற்றும் வழிபாடு, பஜனைகள் நடந்தது. இதனால் சென்னிமலை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையம் ஆதிநாரயணப்பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.

    முருங்கத்தொழுவு கிராமம் வடுகபாளையம் அடுத்துள்ள மலை மீது அமைந்துள்ள அணியரங்கப்பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வெள்ளோடு பெருமாள் கோவில், தண்ணீர்பந்தல் கிருஷ்ண பெருமாள் கோவில், கவுண்டம் பாளையம் வெங்கடேஷ பெருமாள் கோவில் மற்றும் சென்னிமலை டவுன், ஈங்கூர் ரோட்டில் உள்ள செல்வ ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வ ரூப மகா விஷ்ணு ஆலயத்தில் காலை 7 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணு விற்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.

    அதை தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.

    ஈரோடு கோட்டை பெருமாளுக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு இருந்தது. இதை யொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி அருகே உள்ள பெருமாள் மலை பகுதியில் மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடை பெற்றது.

    முன்னதாக மங்களகிரி பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபுஷேகம் செய்ய ப்பட்டது.

    இதையொட்டி இன்று காலை பவானி, ஈரோடு, சித்தோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பலர் வந்து மலை மீது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

    அதேபோல் சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆதி கேசவப் பெருமாள் சன்னதியில் உள்ள உற்சவர் மற்றும் மூலவருக்கு இன்று சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி முதல் சனிக்கிழ மையையொட்டி கோபி செட்டிபாளையம் அருகே உள்ள மூல வாய்க்கால் மலை ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 7 மணி அளவில் பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவி யங்கள் அடங்கிய அபி ஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடை பெற்றன. அதை தொடர்ந்து மலையை சுற்றி சிறிய தேர் மூலம் சுவாமி திருவீதி உலா வந்தது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி வரதராஜ பெருமாள் கோவில், மேட்டு வளவு பெருமாள் கோயில், மொடச்சூர் பெருமாள் கோவில்,கூகலூர் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடை–பெற்றன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர். மேலும் அந்தியூர் பேட்டை பெருமாள் கோவி லில் இன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டு திருப்பதி அலங்கா ரம் செய்யப்பட்டு இருந்தது.

    இதே போல் அந்தியூர் அழகுராஜ பெருமாள், தவிட்டு பாளையம் வரத ராஜ பெருமாள், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள வீரநாராயண பெருமாள், பெருந்துறை பிரசன்ன வெங்கட்ட ரமண பெருமாள், சத்தியமங்கலம் கேகாட்டு வீராம்பாளையம் பெருமாள், ஈரோடு சத்தி ரோடு கொங்கு பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அலங்காரம் செயய்ப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.

    ×