என் மலர்tooltip icon

    ஈரோடு

    • 4 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாம் இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து வருவதன் காரணமாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்ச லுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து தமிழகத்தில் பருவமழை காரணமாக டெங்கு மற்றும் காய்ச்சல் அதிகரிப்பதை தொடர்ந்து முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் தினமும் 1000 இடங்களில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்க ளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் காய்ச்சல் அதிகரி க்கும் இடங்களை கண்ட றிந்து இன்று முதல் ஒரு வாரத்திற்கு தினந்தோறும் 46 இடங்களில் 15 மருத்துவ குழுக்களை கொண்டு டெங்கு மற்றும் மழைக்கால நோய்காளுக்கான காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்ட மாநகராட்சி பகுதியில் வில்லரசம்பட்டி, ராயபாளையம், இ.பி.பி. நகர், வெண்டிபாளையம் ஆகிய 4 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    வில்லரசம்பட்டி பகுதி மக்களுக்கு திண்டலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ராயபாளை யம் பகுதி மக்களுக்கு வீரப்பன்சத்திரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், இ.பி.பி. நகர் பகுதி மக்களுக்கு பெரிய சேமூர் ஆரம்ப சுகாதார நிலை யத்திலும், வெண்டி பாளை யம் பகுதி மக்களுக்கு நேதாஜி தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தி லும் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது.

    இதேபோல் கோபியில் 3 இடங்களிலும், சத்தியமங்கலத்தில் 3 இடங்களிலும், நம்பியூரில் 3 இடங்களிலும், டி. என். பாளையம் பகுதியில் 3 இடங்களிலும், சென்னி மலை, மொடக்கு றிச்சி, கொடுமுடி, தாள வாடி, அந்தியூர், அம்மா பேட்டை, பவானி, பவானிசாகர், பெருந்துறை ஆகிய பகுதி களில் தலா 3 இடங்களிலும் இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற்றது.

    முகாம் நடைபெறும் இடங்கள் காய்ச்சல் அதிகம் பரவ கூடிய இடங்களை கண்டறியப்பட்டு அங்கு நடத்தப்படுகிறது. இன்று காய்ச்சல் முகாமில் வந்த ஒரு சிலருக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது.

    அவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் சிலரை அருகே உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

    இந்த முகாம் இன்னும் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் சோம சுந்தரம் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்ட பொது மக்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகில் நடைபெறும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை அணுகி காய்ச்சல் இருப்பின் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    சுய மருத்துவமாக கடை களில் தாமாகவே காய்ச்சலு க்கான மருந்து, மாத்திரை களை வாங்கி உட்கொ ள்வதை தவிர்க்க வேண்டும்.

    மழைக்கால ங்களில் தங்கள் வீடுகளை சுற்றியுள்ள பகுதி களில் உள்ள தேவையற்ற பொரு ட்களை அகற்றி மழை நீர் தேங்கா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    கொசு உற்பத்தியை தடுப்பதற்காக தினந்தோறும் தங்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் பிடித்து வைக்க க்கூடிய தொட்டிகள், குடங்கள் ஆகியவற்றை வாரம் ஒரு முறை சுத்தம் செய்து தண்ணீரை மூடி வைத்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    கொதிக்க வைத்து, ஆறவைத்து, வடிகட்டிய தண்ணீரை குடிநீராக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கார் எதிர்பாராத விதமாக பிரியா மீது மோதியது.
    • பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி மறை மலை அடிகளார் வீதியை சேர்ந்தவர் பர்கத்துல்லா. இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    பிரியா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பிரியா திருவண்ணாமலைக்கு சென்று விட்டு பு.புளியம்பட்டி வந்தார். இதை தொடர்ந்து அவர் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது சத்தியமங்கலம் சாலை அய்யப்பன் கோவில் அருகே ரோட்டை கடந்து சென்றார். அப்போது சத்தியமங்கலம் சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக பிரியா மீது மோதியது.

    இதில் பிரியா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்க த்தினர் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலம் அன்னூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பு.புளி யம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த மோகன்ராஜ் என்ப வரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.
    • பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணையில் கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.

    இந்த கொட்டும் தண்ணீ ரில் குளிப்பதற்கும், ரசிப்ப தற்கும் தினமும் ஏராளமான சற்றுலா பயணிகள் தடுப்பணைக்கு வந்து செல்கி றார்கள். மேலும் விழா மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் பள்ளி காலாண்டு தேர்வு விடு முறை விடப்பட்டுள்ளது. மேலும் மிலாது நபி, சனி க்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருகிறது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 4 நாட்களாக மக்களின் கூட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.

    தொடர் விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களாக கொடிவேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    நேற்று (சனிக்கிழமை) மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வெளி மாவட்டங்களில் இருந்தும் பொது மக்கள் ஏராள மானோர் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளி த்து மகிழ்ந்தனர்.

    இதேபோல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொடிவேரிக்கு வழக்கத்ைத விட பொதுமக்கள் அதிகள வில் வந்தனர்.

    மேலும் இன்று வெளி மாவட்டங்களில் இருந்து கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் இருந்து கொடிவேரிக்கு ஏராள மானோர் வந்திருந்தனர். காலை முதலே கூட்டம் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் நேரம் செல்ல, செல்ல மக்களின் கூட்டம் அலை மோதியது.

    ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் மற்றும் மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இரு ந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கொடிவேரிக்கு தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என பலர் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் இளைஞர்கள் பலர் வந்து குளித்து குதுகளித்த னர். இதையடுத்து பொது மக்கள் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகள், வெளிப்பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன்களையும் ருசித்து விட்டு சென்றனர்.

    இதே போல் சத்தியமங்க லம் அருகே உள்ள பவானி சாகருக்கு இன்று பொது மக்கள் பலர் வந்திருந்தனர். இைத தொடர்ந்து குடும்பத்துடன் வந்திருந்த மக்கள் அணை பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.

    மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி குது களித்தனர். பெண்கள் பலர் சறுக்கு விளையாடி இயற்கையை ரசித்து சென்ற னர். இதே போல் அணையில் கொட்டும் தண்ணீரின் அழகை ரசித்தனர்.

    இதனால் பவானிசாகர் பகுதியில் இன்று எங்கு பார்த்தாலும் பொது மக்க ளின் கூட்டமாவே காண ப்பட்டது. மேலும் இன்று அணை பூங்காவின் வெளி பகுதியில் மீன் மற்றும் பல்வேறு கடைகள் அமைக்க ப்பட்டு இருந்தன. அங்கும் மக்களின் கூட்டம் அலை மோதியது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பண்ணாரியம்மன் கோவில் என கோபி, சத்தியமங்கலம் சுற் வட்டார பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் எங்கு பார்த்தாலும் மக்க ளின் கூட்டமாக காணப்பட்டது.

    இதே போல் அந்தியூர் வரட்டுபள்ளம் அணை பகுதிக்கும் பொதுமக்கள் பலர் வந்து இருந்தனர். அங்கு இயற்கை அழகை ரசித்து சென்றனர்.

    மேலும் பர்கூர் வன ப்பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் ஏராள மானோர் வந்திருந்தனர். இரு சக்கர வாகனங்களில் வந்த அவர்கள் மலைப்பகுதி யின் அழ கை ரசித்து விட்டு சென்ற னர்.

    ஈரோடு வ.உ.சி. பூங்கா விலும் இன்று மக்களின் கூட்டம் அதிகளவில் இரு ந்தது. குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் அங்கு ஊஞ்சல் மற்றும் சறுக்கு விளையாடி குதுகளித்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவு வகைகளையும் உண்டு மகிழ்ந்தனர்.

    • கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.1.53 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    பெருந்துறை:

    பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது.

    பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3,973 மூட்டைகளில் 1,92,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.75.11-க்கும், அதிகபட்சமாக ரூ.85.19-க்கும் விற்பனையாயின. 2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.30-க்கும், அதிகபட்சமாக ரூ.79.89 -க்கும் விற்பனையாயின.

    மொத்தம் ரூ.1.53 கோடிக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

    • அந்தியூர் அண்ணாமடுவில் இருந்து பஸ் நிலையம் வரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.
    • சாலை பணியாளர்கள் உதவியோடு அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அண்ணாமடுவில் இருந்து பஸ் நிலையம் வரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது.

    இதேபோல் அந்தியூர் தவிட்டுப்பாளையம் இணைக்கும் பாலம் அகலப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.

    இதனைத்தொடர்ந்து பாலத்தின் இருபுறங்களிலும் சாலையை அகலப்படுத்த நில அளவையாளர் நடராஜ், அம்மாபேட்டை நில அளவையாளர் மகேஸ்வரி, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறி யாளர் சதாசிவம், நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஐ. கிருஷ்ணசாமி, ரமேஷ், செல்வம் மற்றும் சாலை பணியாளர்கள் உதவியோடு அளவீடு செய்யப்பட்டு வருகிறது.

    இதனைத்தொடர்ந்து சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளவர் களையும், அதனை அகற்ற வலியுறுத்தி வருகின்றார்கள். இதனால் கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் ஒரு வித பரபரப்பு நிலவியது.

    • குழந்தைகள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையம் ரெயில் நகரை சேர்ந்தவர் யுவராஜ் (38). பிளம்பர். குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 28-ந் தேதி யுவராஜ் தனது குடும்பத்தினருடன் ஆர்.என்.புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அதன் பிறகு இன்று காலை 5 மணி அளவில் யுவராஜ் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்து 4½ பவுன் நகை மற்றும் ரொக்க பணம் ரூ. 20 ஆயிரம் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் குழந்தைகள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்களும் தடையங்களை சேகரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆள் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நம்பர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • சீனாபுரத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கால்டைகள் சந்தை கூடுகிறது.
    • மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை கால்டைகள் சந்தை கூடுகிறது. இதுபோல் நேற்று நடந்த சந்தைக்கு கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடைகளின் வரத்து அதிகமாக இருந்தது.

    குறிப்பாக சிந்து கறவை மாடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. அதன் விலையும் சற்று உயர்ந்து விற்பனையானது.

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், சேலம் மாவட்டம் முத்து நாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம் மோர்பாளைம் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 விர்ஜின் கலப்பின கறவை மாடுகளும், 120 கிடாரி கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

    இதோபோல் சிந்து மற்றும் ஜெர்சி இனத்தை சேர்ந்த 110 கறவை மாடுகளும், 150 கிடாரி கன்றுக்குட்டிகளும் விற்பனைக்கு வந்திருந்தன.

    இதில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல், ரூ.50 ஆயிரம் வரையிலும் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் விற்னையானது.

    முதல் தர சிந்து கறவை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் கிடாரி கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை போனது.

    சீனாபுரம் கால்நடை சந்தையில் கறவை மாடுகள் மற்றும் கிடாரி கன்றுக் குட்டிகள் என மொத்தம் ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை யானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கி சென்றனர்.

    • பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் களில் புரட்டாசி 2-ம் சனி க்கிழமையையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி 2-ம் சனிக்கிழ மையை யொட்டி பவானி அருகே உள்ள பெருமாள் மலையில் அமைந்துள்ள மங்களகிரி பெருமாள் கோவிலில் இன்று அதி காலை பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து மங்களகிரி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் மலை படிகளில் நீண்ட வர வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம் பகுதி பெருமாள் கோவில் களில் புரட்டாசி 2-ம் சனிக்கிழமை யொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    கோபி அருகே உள்ள மூல வாய்க்கா ல் ஸ்ரீதேவி பூதேவி கரி வரத ராஜ பெருமாள் கோவிலில் காலை 7 மணி அளவில் சாமி க்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், மற்றும் வாசனை திரவியங்கள் அடங்கிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

    அதை தொடர்ந்து சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் பக்தர்கள் மலையை சுற்றி சுவாமியை தேரில் இழுத்து வலம் வந்தனர்.

    மேலும் கோபிசெட்டி பாளையம் வரதராஜ பெரு மாள் கோவில், பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி மொடச்சூர் பெருமாள் கோவில், கொளப்பலூர் பெருமாள் கோவில்,

    அழுக்குளி பெருமாள் கோவில், மேட்டுவளவு பெருமாள் கோவில் மற்றும் சுற்று வட்டாரபகுதியில் உள்ள பெருமாள் கோவில்க ளில் சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றன.

    இதையொட்டி பக்தர்க ளுக்கு துளசி தீர்த்தம் பிர சாதமாக வழங்கப்பட்டது.

    அந்தியூர் வரதராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், அழகுராஜ பெருமாள், அந்தியூர் திருப்பதி பேட்டை பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் புரட்டாசி 2-வது சனிக்கிழமையை யொட்டி சிறப்பு அலங்கார த்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் வெள்ளையம்பாளையம் சின்னத்தம்பி பாளையம் அண்ணா மடுவு கந்த ம்பாளையம், பச்சாம் பாளை யம்உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்த ர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இதையொட்டி கவுந்தப்பாடி சந்தைபேட்டை பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பலர் வந்து தரிசனம் செய்தனர். முன்ன தாக பக்தர்கள் கூடுதுறை யில் நீராடி பெருமாளை வழிபட்டனர்.

    ஆப்பக்கூடல் அருகே உள்ள கள்ளிப்பட்டி அடுத்த பெருமுகை சஞ்சீவிராயன் பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு தரிசனம் நடந்தது. இதில் சுற்று வடடார பகுதுகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் பு.புளி யம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனை த்து பெருமாள் கோவில்களி லும் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பலர் வழிபாடு நடத்தினர்.

    மேலும் ஈரோடு கோட்டை அழகிரிநாதர் (பெருமாள்) கோவிலில் இன்று அதி காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்கார செய்யப் பட்டு அழகிரி நாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களு க்கு அருள் பாலித்தார்.

    இதையொட்டி இன்று காலை முதலே ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரா ளமான பக்தர்கள் கோவி லுக்கு வந்திருந்தனர்.

    இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.

    இதேபோல் ஈரோடு சத்தி ரோட்டில் உள்ள பெரு மாள் கோவிலில் இன்று பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் பலர் வந்து பெருமாளுக்கு துளசி அணிவித்து தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் பலர் பெருமாளை குல தெய்வ மாக நினைத்து வணங்கி வருகிறார்கள். இதனால் பக்தர்கள் பலர் மஞ்சள், வேட்டி துண்டு அணிந்தும் மற்றும் மாலை அணிந்து விரதம் இருந்து வரு கிறார்கள்.

    தொடர்ந்து அவர்கள் 4-ம் சனிக்கிழமை அன்று குடும்பத்துடன் சென்று விரதத்தை முடிப்பார்கள். இதே போல் பக்தர்கள் பலர் வீடுகளில் அறுசுவை உணவு சமைத்து பெருமாளுக்கு படைத்து வணங்குகிறார்கள்.

    • அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
    • அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என அம்மாபேட்டை, பங்களாபுதூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுப ட்டனர்.

    அப்போது கொங்கர்பா ளையம், கணக்கம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த அந்தி யூர் ஏ.டி. காலனியை சேர்ந்த சாமிதுரை மகன் உத்தரசாமி (வயது 44),

    கொங்கர்பா ளையம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த ராக்கன் மகன் கிட்டன் (55), கோபி செட்டிபாளையம் கணக்கம்பாளையத்தை சேர்ந்த பெரிய தம்பி மகன் ரவி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த 18 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதைபோல் கோபி குப்பமேடு டாஸ்மாக் அருகே அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த திரு ப்பூர் மாவட்டம் பாரதிநகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அஜய்குமார் (25) என்பவர் மீது கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி.யை சந்தித்து பேசினர்.
    • கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் ஆகிய 4 மாவட்டங்களை வாழ வைத்துக் கொண்டுள்ள பவானி ஆறு மற்றும் பவானிசாகர் அணையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சியை எதிர்நோக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    சுமார் ஒரு கோடி பொதுமக்களின் குடிநீர், வாழ்வாதாரம் மற்றும் 4 லட்சம் ஏக்கர் பயிர்சாகு படிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    கோடை காலத்தில், தென்மேற்கு பருவமழை பெய்யாத காலங்களில் கூட 2000 கனஅடிக்கும் அதிகமான அளவு தண்ணீர் வீணாக கடலை நோக்கி செல்வதாக நேரில் பார்த்து வந்த விவசாய பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் வீணாக கடலுக்குள் செல்லும் பாண்டியாற்றை - பவானிசாகருக்கு வரும் மோயாற்றுடன் இணைக்க வேண்டும் என்ற 60 ஆண்டுகள் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

    இதனைத்தொடர்ந்து பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி.யை சந்தித்து பேசினர்.

    பாண்டியாறு-மோயாறு இணைப்பு திட்டத்தின் சாத்தியக்கூறுகள், அதனால் ஏற்படும் நன்மைகள், பாண்டியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேரடியாக பார்வையிட்ட போது ஓடிய தண்ணீர் அளவு உள்ளிட்ட விவரங்களை அப்போது விரிவாக எடுத்து கூறினர்.

    மேலும் இத்திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடி க்கைகள் மேற்கொள்ள வேண்டி பாண்டியாறு-மோயாறு இணைப்பு இயக்க கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    அப்போது பணி நிறைவு பெற்ற வேளாண்மை இணை இயக்குநர் ஆசைத்தம்பி, கீழ்பவானி முறைநீர்ப்பாசன சங்க கூட்டமைப்பின் இணைச்செயலாளர் வெங்கடாசலபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • பஞ்ச் பிபீ தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது.
    • பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சந்தனத்தை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பாத்திமா நகரில் அமைந்துள்ள பஞ்ச் பிபீ தர்காவில் 4 ஆண்டுகள் கழித்து சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடந்தது.

    இதில் காலை கொடியே ற்றத்துடன் தொடங்கிய சந்த னக்கூடு திருவிழாவானது இரவு 8 மணி அளவில் சந்தனக்கூடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இங்கு வருடம் தோறும் சந்தனக்கூடு திருவிழா நடப்பது வழக்கம். ஆனால் கொரோனா காலத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட சந்தனக்கூடு திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    இதில் சத்திய மங்கலம், டி.என்.பாளையம், அத்தாணி, கோபி, ஈரோடு, பவானி, திருப்பூர், மேட்டூர், உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து பக்தர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    4 ஆண்டுகள் கழித்து நடக்கும் சந்தனக்கூடு திருவிழா என்பதால் பொதுமக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் சந்தனத்தை பூசிக்கொண்டு மகிழ்ந்தனர்.

    • மன உளைச்சல் அடைந்த வெங்கடாசலம் வீட்டில் தூக்கு மாட்டி கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் இடையன்காட்டுவலசு ஆண்டவர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வெங்கடாசலம் (வயது 59). இவரது மனைவி சரோஜா (51). வெங்கடாசலம் சம்பத் நகர் உழவர் சந்தை அருகே தேங்காய் வியாபாரம் செய்து வந்தார்.

    இவர் உடல்நிலை பாதி க்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த வெங்கடாசலம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டார்.

    உடனே அக்கம் பக்க த்தினர் வெங்கடாசலத்தை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர்கள் வெங்க டாசலம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது மனைவி சரோஜா ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×