என் மலர்
கடலூர்
- பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
- வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் கூறுகையில்,
வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 2 மாணவர்கள், ஒரு மாணவி என மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
- ரெயில்வே விபத்து குறித்து கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விசாரணையின் முடிவில் முழுவிவரம் தெரியவரும்.
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டனர். காயமடைந்த மாணவர்கள் மற்றும் வேன் டிரைவர், மாணவர்களை காப்பற்ற சென்ற செம்மங்குப்பத்தை சேர்ந்த அண்ணாதுரை ஆகியோரை அமைச்சர் சி.வெ. கணேசன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், டாக்டர் பிரவின் அய்யப்பன், ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன் ஆகியோர் இன்று கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அமைச்சர் சி.வெ. கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 2 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒரு மாணவன் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் முதலமைச்சர் என்னையும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தையும் செல்போனில் தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு உரிய உதவிகள் செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறினேன். காயமடைந்தவர்கள் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென அவர்களது பெற்றோர் விருப்பப்பட்டால் அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ரெயில்வே விபத்து குறித்து கடலூர் மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் முடிவில் முழுவிவரம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
- வேன் டிரைவர் கூறியதால்தான் ரெயில்வே கேட்டை திறந்தேன் என கேட் கீப்பர் கூறினார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி வேன் டிரைவர் சங்கர், கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரிடம், ரெயில்வே கேட் கீப்பரிடம் நீங்கள் கூறியதால் தான் ரெயில்வே கேட்டை திறந்தேன் என தெரிவித்ததாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறி உள்ளதாக கேட்டோம்.
அப்போது டிரைவர் சங்கர் பேச முடியாத நிலையிலும் அழுது கொண்டு நான் எதுவும் கூறவில்லை என தலையை ஆட்டி காண்பித்தார்.
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம்.
- லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் நிவாஸ் மற்றும் சாருமதி என்ற மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் உயிரிழந்த இரண்டு மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும் தென்னக ரெயில்வே கூறியிருப்பதாவது:-
உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கப்பதாகவும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
பாதுகாப்பு விதிகளை மீறியதால் கேட் கீப்பர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் பள்ளியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
- விபத்தில் வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் பள்ளியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 6-ம் வகுப்பு படிக்கும் நிவாஸ் (12) என்ற மாணவன் என்றும், 12-ம் வகுப்பு படிக்கும் சாருமதி (16) என்ற மாணவி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தில் வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. மேலும் இந்த விபத்தில் வேன் உருக்குலைந்தது. மாணவர்களின் புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறி கிடப்பது காண்போரின் மனதை பதைபதைக்க செய்தது.
- ரெயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
- ரெயில்வே கீப்பர் பங்கஜ் சர்மாவை சஸ்பெண்ட் செய்து தென்னக ரெயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில் மோதியதுடன் பள்ளி வேன் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்சென்றதால் வேன் சுக்குநூறானது.
ரெயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.ஜெயக்குமார், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதனிடையே, கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ரெயில் விபத்துக்கு பள்ளி வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
கேட்டை மூடத் தொடங்கியபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என தென்னக ரெயில்வே கூறியுள்ளது.
இதனிடையே ரெயில்வே கீப்பர் பங்கஜ் சர்மாவை சஸ்பெண்ட் செய்து தென்னக ரெயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- விபத்து நடந்த இடத்தில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
- கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார்,
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே, காவல்துறை முறையாக விசாரணை நடத்தும் என்றும் விசாரணைக்குப்பின் கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கச் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பணியில் அலட்சியமாக இருந்ததாகக்கூறி கேட் கீப்பர் பங்கச் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கடலூர் அருகே மூடப்படாத ரெயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரெயில் மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே, ரெயில் விபத்து காரணமாக முக்கிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், சிதம்பரம் ரெயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் ஆலப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் நடுவழியில் நிறத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ரெயில்வே கேட் கீப்பர் மீது அப்பகுதி பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே, காவல்துறை முறையாக விசாரணை நடத்தும்.
கேட் கீப்பர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குப்பின் கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
செம்மங்குப்பம் அருகே மூடப்படாமல் இருந்த ரெயில்வே கேட் பகுதியில் பள்ளி வேன் கடக்க முயன்ற நிலையில் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணமாக கூறப்படும் ரெயில்வே கேட் கீப்பர் மீது அப்பகுதி பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.
எப்போது சென்று கூப்பிட்டாலும் கண்ணை துடைத்துக்கொண்டு தூங்கிய நிலையிலேயே வெளியில் வருவார். விபத்து ஏற்பட்டதும் அழைத்து கேட்டபோது அண்ணா தூங்கிட்டேன் என எழுந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
- ரெயில் மோதியதில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.
- விபத்து நிகழ்ந்த இடத்தில் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் மோதியதில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.
ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறி ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட் கீப்பரை தாக்கினர்.

இதனிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, வேனில் 5 பேர் பயணித்ததாகவும், விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, விபத்து நிகழ்ந்த இடத்தில் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரெயில் மோதியதில் ஆச்சாரியா பள்ளி வேனில் இருந்த மாணவர்களின் புத்தகப்பைகள் தண்டவாளத்தில் சிதறிக்கிடந்ததை காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
- பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் மோதியது.
- வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் பலர் காயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரெயில் மோதியதில் வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ரெயில் மோதியதில் 50 மீட்டர் இழுத்து செல்லப்பட்டதில் பள்ளி வேன் சுக்குநூறாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- கள்ளச்சாராயம் குடித்து செத்தால் ரூ.10 லட்சம் கொடுக்கிறது.
- எளிய மகன் நானே எங்கள் அம்மாவுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கிறேன்.
கடலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
வரும் 8-ந்தேதி காலையில் அம்மாவை போய் பார்த்துவிட்டு எங்கள் போராட்டம் தொடரும்.
அரசே ரூ.5 லட்சம் தான் கொடுக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து செத்தால் ரூ.10 லட்சம் கொடுக்கிறது. காவலர்கள் அடித்து செத்தால் ரூ.5 லட்சம்தான் கொடுக்கிறது.
எளிய மகன் நானே எங்கள் அம்மாவுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கிறேன். என்னது இது... அவ்வளவுதான் உயிருக்கு மதிப்பா?
நிகிதா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவேன். இன்னும் 3 நாட்கள் இருக்கிறது.
த.வெ.க. தலைவர் விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு, என் அரசியலை தான் நீங்கள் என்னிடம் கேட்க வேண்டும் என்று கூறினார்.






