என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிபேட்டை, மேல் புவனகிரி, கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில், மங்களூர், குமராட்சி, கீரப்பாளையம், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், நல்லூர் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த மாதம் 27, 30 ஆகியே தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற்றது.
29 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு மொத்தம் 155 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
விடிய விடிய ஓட்டுகள் எண்ணப்பட்டதால் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று காலையும் பல்வேறு இடங்களில் ஓட்டுகள் எண்ணப்பட்டு அதன்பின்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் விபரம் வருமாறு:-
இதில் அ.தி.முக. வேட்பாளர்கள் 12 இடங்களில் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. வேட்பாளர் 2 பேரும், தே.மு.தி.க. வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
தி.மு.க. வேட்பாளர்கள் 11 பேரும் வெற்றி பெற்றனர். தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர்கள் 2 பேரும், ம.தி.மு.க. வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அ.தி.மு.க. கூட்டணி 15 இடங்களை கைப்பற்றி உள்ளது. தி.மு.க. கூட்டணி 14 இடங்களை கைப்பற்றியது.இதன் மூலம் மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர் பதவி அ.தி.மு.க. கூட்டணி தக்கவைத்துக் கொண்டது. ஏற்கனவே கடலூர் மாவட்ட ஊராட்சிகுழு தலவராக அ.தி.மு.க.வை சேர்ந்த மல்லிகா வைத்தியலிங்கம் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குண்டு உப்பலவாடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மதியழகன் என்பவரின் மனைவி சாந்தி போட்டியிட்டார். இவர் 145 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தாழங்குடா கிராமத்தை சேர்ந்த பிரவீனா என்பவர் தோல்வி அடைந்தார்.
வெற்றி பெற்ற வேட்பாளரின் கணவர் மதியழகனை பார்த்து ஒரு கும்பல், நீ கிராமத்துக்குள் எப்படி வருகிறாய்? என்று பார்ப்போம், ஊருக்குள் வந்தால் உன்னை வெட்டி விடுவோம் என மிரட்டினர்.
இதனால் மதியழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயந்து விட்டனர். இரவு 11 மணிக்கு மேல் கிராமத்துக்கு செல்லாமல் வாக்கு எண்ணும் மையத்தில் தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எதற்காக இங்கே இருக்கிறீர்கள்? வெற்றி பெற்ற பிறகு வெளியில் செல்ல வேண்டியதுதானே என்று கூறினர். அப்போது நடந்த சம்பவத்தை மதியழகன் போலீசாரிடம் தெரிவித்தார்
இதனை தொடர்ந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தியிடம் பாதுகாப்பு கோரி மதியழகன் புகார் மனு அளித்தார். இதையடுத்து மதியழகன் மற்றும் அவரது ஆதரவாளர்களை 5 போலீசாருடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அவர் உத்தரவிட்டார். ஆனால் தொடர்ந்து பயத்தால் அவர் வாக்கு எண்ணும் மையத்தில் தங்கினார். காலையில் போலீஸ் பாதுகாப்புடன் அவர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றும் கிராமத்திற்கு செல்ல அச்சப்பட்டு இரவு விடிய விடிய வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளரின் கணவர் காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி யூனியன் பதவிக்கான தேர்தல் கடந்த 27-ந் தேதி நடந்தது.
பதிவான ஓட்டுகள் அனைத்தும் பண்ருட்டியில் உள்ள அண்ணா பல்கலைகழக என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. வெற்றிபெற்ற கட்சிகள் விவரம் வருமாறு:-
தி.மு.க- 12
அ.தி.மு.க- 6.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையையொட்டி இன்று காலை முதலே அனைத்து வேட்பாளர்களும், ஏஜெண்டுகளும் வாக்குச்சாவடி முன்பு வந்தனர்.
பின்பு அவர்கள் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணும்பணி நடந்து கொண்டிருந்த போது, ஒரு வேட்பாளரின் ஏஜெண்டான பரமேஷ்வரன் (வயது 30) திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மயங்கி விழுந்த பரமேஷ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு கடந்த மாதம் 27-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இங்கு 66 ஊராட்சி தலைவர் பதவிக்கு 230 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 1030 பேரும், ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 107 பேரும், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 11 பேரும் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான ஓட்டுபெட்டிகள் திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை ஓட்டு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன் பின்பு ஓட்டு சீட்டுகளை தனித்தனியாக பிரித்து கட்டும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின்பு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.
மங்களூர் ஒன்றியம் 1-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு விருத்தகம்மாள் (அ.தி.மு.க.), அமுதா (சுயே), கற்பகம் (காங்), சத்யா (சுயே), ரமா (தி.மு.க.) ஆகிய 5 பேர் போட்டியிட்டனர்.
இதில் அ.தி.மு.க. வேட்பாளர் விருத்தகம்மாள் 380 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
2-வது வார்டில் அபிராமி (சுயே), செல்லம்மாள் (அ.தி.மு.க.), பாப்பாத்தி (தி.மு.க.) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. வேட்பாளர் பாப்பாத்தி 630 ஓட்டுகள்பெற்று வெற்றிபெற்றார்.
3-வது வார்டில் பாலகற்பகம் (அ.தி.மு.க.), சாந்தி (தி.மு.க.), மல்லிகா (சுயே) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் பாலகற்பகம் 306 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆலடியை அடுத்து உள்ள கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27) இவரது மனைவி ப்ரியா (24). இவர்கள் கடந்த 11.5.2018 காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது ப்ரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த 27 -ந் தேதி இரவு ப்ரியாவுக்கு பிரசவ வலிஏற்பட்டது. உடனே அவர் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரவு 11. 40 மணிக்கு சிசேரியன் மூலம் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து 4 நாட்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை கடந்த 31-ந் தேதி மோசமடைந்தது மேலும் வயிறு வீக்கம் ஆக இருந்ததால் அவரது உறவினர்கள் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற ப்ரியா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ப்ரியாவின் வயிற்றில் பழைய துணி மற்றும் பஞ்சுகள் இருந்ததாகவும், இதனால் அவரது வயிறு வீங்கி உடல் நிலை மோசமடைந்து இறந்துவிட்டதாகவும், டாக்டர்களின் அஜாக்கிரதை காரணமாக ஒரு உயிரை கொன்று விட்டதாகவும், கூறி சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதிக்கப்பட்ட ப்ரியா குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கூறி உறவினர்கள் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விருத்தாச்சலம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தாசில்தார் கவியரசு மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். ப்ரியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் செவிலியர்கள் வந்து சிகிச்சை தவறால் தான் பிரியா இறந்தார் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். மேலும் தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உறுதியளிக்க வேண்டும் என கூறி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரிடம் பிரியாவின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி புகார் கொடுத்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதில் சி.சாத்தமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அருள்பிரகாசம் என்ற தமிழ் ஒளி, திருமுகம், இளங்கோவன், செல்லையா, மேனன் ஆகிய 5 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் கொண்டு செல்லப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இதனைத்தொடர்ந்து ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெற்றபோது, துணை வேட்பாளர் பட்டியலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அருள்பிரகாசம் என்ற தமிழ்ஒளியின் பெயர் இல்லை.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் உடனடியாக மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் சி.சாத்தமங்கலம் பஞ்சாயத்து தலைவருக்கான வாக்கு எண்ணும் பணியை நிறுத்தும்படி உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து சி.சாத்தமங்கலம் பஞ்சாயத்து தலைவருக்கான வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணும் பணி திடீர் என்று நிறுத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள நெத்தனாங்குப்பம், தங்கராசு நகரை சேர்ந்தவர் காந்தாராவ் (வயது 55) அ.தி.மு.க பிரமுகர். இவர் என்.எல்.சி சொசைட்டியில் வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி பார்வதி (50). இவர்களுக்கு சந்தியா(30), சுகந்தி (20) ஆகிய மகள்களும், செல்வமணி (24), செல்வகுமார்(21) ஆகிய மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் செல்வகுமாருக்கும் அதேபகுதியை சேர்ந்த வாலிபர் அருள்(20) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
நெத்தனாங்குப்பம், தங்கராசு நகரில் நேற்று இரவு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள். அவர்கள் மைக்செட் வைத்து விழா நடத்தினார்கள். இந்த விழாவில் காந்தாராவ் மகன் செல்வகுமார், அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கேக் வெட்டுவதற்காக காந்தாராவ் வீட்டில் இருந்து சிலர் பெஞ்சை அங்கு தூக்கிகொண்டு வந்தனர்.
நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே தனது மகன் செல்வகுமார் புத்தாண்டு விழாவில் கலந்துகொள்ள சென்றிருக்கும் தகவல் காந்தாராவ்வுக்கு தெரியவந்தது. உடனே அவர் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றார்.
பின்பு அங்கிருந்த தனது மகன் செல்வகுமாரை வீட்டிற்கு வரும்படி அழைத்தார். மேலும் அங்கு கேக் வெட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த தனது வீட்டின் பெஞ்சை தூக்க முயன்றார். அப்போது அங்கு நின்ற வாலிபர்கள் கேக்வெட்டும் முன்பே பெஞ்சை ஏன் தூக்குகிறீர்கள் என்று தட்டிகேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அந்த வாலிபர்கள் திடீரென்று அவரை தாக்கினர். கல்லாலும் அங்கிருந்த கட்டையாலும் காந்தாராவ் நெஞ்சில் சரமாரியாக தாக்கினார்கள்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் நெஞ்சை பிடித்தபடி வீட்டிற்கு சென்றபோது கீழே விழுந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் காந்தாராவ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலஹாசன், பூவராகவன், இருதயராஜ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த கொலை தொடர்பாக அந்தபகுதியை சேர்ந்த சதீஷ்குமார், அருள், ரஞ்சித்குமார் ஆகிய 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அ.திமு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம்அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனம் ஆகிய திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவ ஆச்சாரியார் சிதம்பர சபாபதி தீட்சிதர் கொடியேற்றி வைத்தார்.
இதையொட்டி கோவிலில் உள்ள நடராஜர் உள்பட அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து 2-ந் தேதி சந்திர பிரபை வாகனத்தில் வீதிஉலா, 3-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 4-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதிஉலா, 5-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச் சான் வீதி உலாவும் நடக்கிறது.
6-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலாவும், 7-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும், 8-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ் கந்தர் வெட்டுக் குதிரையில் வீதிஉலாவும் நடைபெறுகிறது. 9-ந் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது.
10-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 10-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
உற்சவ விழா நடைபெறும் 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாய ரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்க வாசகரை எழுந்தருள செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மேல்பாதி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 28), கூலி தொழிலாளி. இவரது மனைவி சவுமியா (26). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
அம்பேத்கார் நகரை சேர்ந்தவர்களுக்கும், மேல்பாதி காலணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு அங்குள்ள இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாடினார்கள். அவர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கினர்.
அப்போது அம்பேத்கார்நகரை சேர்ந்தவர்களுக்கும் மேல்பாதி காலணியை சேர்ந்தவர்களுக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுபற்றிய தகவல் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்டினர். அனைவரும் அங்கிருந்து ஓடினர்.
சிறிதுநேரம் கழித்து வேல்முருகன் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. மேலும் அரிவாளால் வெட்டியது. இதில் தலையில் வெட்டுக்காயம் அடைந்த வேல்முருகன் அங்குள்ள முள்புதரில் ரத்தவெள்ளத்தில் சாய்தார். சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதை அறிந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் புதரில் வேல்முருகன் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அவரது மனைவி சவுமியா மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அலறியடித்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த வேல்முருகன் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வாலிபர் கொலை செய்யப்பட்டது குறித்து நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். வேல்முருகன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
வேல்முருகனை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று அண்ணா கிராமம், நல்லூர், கீரப்பாளையம் உள்பட 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
நல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருமங்கலம் கிராமத்தில் 1,300 வாக்காளர்கள் உள்ளனர்.
திருமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு பெரியசாமி, ராமச்சந்திரன், மணிகண்டன் ஆகியோர் போட்டியிட்டனர்.
நேற்று திருமங்கலத்தில் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.
இந்த நிலையில் திருமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பெரியசாமி நேற்று இரவு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் விருத்தாசலத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் சிலர் பெரியசாமியின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அவர்கள் பெரியசாமியின் படுக்கை அறைக்கு சென்றனர். அங்கு சில பில்லி-சூனிய பொருட்களை வைத்து பூஜை செய்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இன்று காலை பெரியசாமி தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
உள்ளே சென்று பார்த்தபோது தனது படுக்கை அறையில் எலுமிச்சம் பழம், தேங்காய், பழம், மை டப்பா, பூக்கள் போன்ற பொருட்கள் இருந்தன. அவற்றை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பெரியசாமி வெற்றி பெறக்கூடாது என்பதற்காக யாரோ நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து பில்லி-சூனிய பொருட்களை வைத்தது தெரிய வந்தது.
இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. ஏராளமான ஆண்களும், பெண்களும் பெரியசாமி வீட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்த்து சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






