என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 36). இவர் செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில் 17-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த நிலையில் காளிதாஸ்க்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு நீதிபதி அம்பிகா, 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
வண்டலூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 41). கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இவர் ஊரப்பாக்கம் அருகே சாலையை கடக்கும்போது கார் மோதி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண் ரமேஷ் (19), இவர் திருச்சியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா தொற்று காலத்தில் கல்லூரி மூடப்பட்டு இருப்பதால் வண்டலூர் அருகே உள்ள தாழம்பூர் பகுதியில் உள்ள கார் பழுது பார்க்கும் மையத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் நல்லம்பாக்கம் கூட்ரோடு அருகே செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் ரமேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருண் ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
காஞ்சீபுரத்தை அடுத்த திருப்புட்குழி, திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (57). நெசவு தொழிலாளி. இவர் தனது உறவினரின் மகனான விஜயகவினை (13) அழைத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து திருப்புட்குழி நோக்கி சென்று கொண்டிருந்தார். காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பி ஜங்ஷன் என்ற இடத்தில் இவர்கள் சென்றபோது வேலூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த ஒரு தனியார் நிறுவன பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மூர்த்தி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுவன் விஜயகவின் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, மோதிய தனியார் நிறுவன பஸ்சை பறிமுதல் செய்து பஸ் டிரைவரான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் (25) என்பவரை கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சார் பதிவாளர் வீட்டில் ரூ.11½ லட்சம், 114 பவுன் நகை சிக்கியது.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று முன்தினம் திடீரென காஞ்சீபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனைகளில் ஈடுபட்டனர். சுமார் 8 மணி நேரம் நடந்த சோதனையில் அலுவலகத்தின் கணக்கில் வராத ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
இதனையடுத்து கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் தாணுமூர்த்தியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் துருவி துருவி தீவிரமாக விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து மறைமலைநகர் அடுத்த மகேந்திரா சிட்டியில் உள்ள சார்பதிவாளர் தாணுமூர்த்தி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.11½ லட்சம், 114 பவுன் தங்க நகை போன்றவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் தாணு மூர்த்தியிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
8 மாதங்களுக்கு பிறகு வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் முன்பு சுற்றுலா வந்த பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சென்னை:
கொரோனா தொற்று காரணமாக உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்கள் கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் 8 மாதங்களாக மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு நேற்று தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்கள் வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி அளித்திருந்த நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்களும் நேற்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டது.
ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தபிறகு, முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
தொல்லியல் துறை பார்வையாளர் கட்டண கவுண்ட்டர்களில் பணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறமுடியாது என்பதால் நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டிருந்தது. நேற்று வந்த பயணிகள் ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி அங்குள்ள பார் கோடு பலகையில் ஸ்கேன் செய்து அதனை புராதன சின்ன நுழைவு வாயில் மையங்களில் காண்பித்து புராதன சின்னங்களை கண்டுகளித்தனர். முதல் நாளான நேற்று குறைவான பயணிகளே காணப்பட்டனர்.
குறிப்பாக 8 மாதங்களுக்கு பிறகு வந்த பயணிகள் பலர் மகிழ்ச்சியுடன் புராதன சின்னங்கள் முன்பு தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக புராதன சின்னங்கள் நேற்று காலை 8 மணிக்கு திறப்பதற்கு முன்பாக மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் அனைத்து புராதன மையங்களிலும் கொரோனா தொற்று பரவாத வகையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்கள் கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் 8 மாதங்களாக மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு நேற்று தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்கள் வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி அளித்திருந்த நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்களும் நேற்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டது.
ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தபிறகு, முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
தொல்லியல் துறை பார்வையாளர் கட்டண கவுண்ட்டர்களில் பணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறமுடியாது என்பதால் நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டிருந்தது. நேற்று வந்த பயணிகள் ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி அங்குள்ள பார் கோடு பலகையில் ஸ்கேன் செய்து அதனை புராதன சின்ன நுழைவு வாயில் மையங்களில் காண்பித்து புராதன சின்னங்களை கண்டுகளித்தனர். முதல் நாளான நேற்று குறைவான பயணிகளே காணப்பட்டனர்.
குறிப்பாக 8 மாதங்களுக்கு பிறகு வந்த பயணிகள் பலர் மகிழ்ச்சியுடன் புராதன சின்னங்கள் முன்பு தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக புராதன சின்னங்கள் நேற்று காலை 8 மணிக்கு திறப்பதற்கு முன்பாக மாமல்லபுரம் பேரூராட்சி சார்பில் அனைத்து புராதன மையங்களிலும் கொரோனா தொற்று பரவாத வகையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று ஊரடங்கால் மூடப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோவில் புராதன சின்னங்கள் 8 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்படும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
மாமல்லபுரம்:
கொரோனா தொற்று காரணமாக உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்கள் கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்களை வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட உள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தபிறகு, முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியும். இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி இல்லை. தொல்லியல் துறை பார்வையாளர் கட்டண கவுண்டர்களில் பணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறமுடியாது என்றும், ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி செல்போனில் பதிவாகியுள்ள நுழைவு சீட்டை காண்பித்து உள்ளே செல்ல முடியும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
புராதன சின்னங்கள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் அவற்றை தூய்மைப்படுத்தும் பணி தொல்லியல் துறை பணியாளர்கள் மூலம் நடைபெற்றது. 8 மாதங்களாக மூடப்பட்ட புராதன சின்னங்கள் இன்று திறக்கப்பட உள்ளதால் சுற்றுலாவை நம்பி உள்ள வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், விடுதி உரிமையாளர்கள், வாடகை ஆட்டோ டிரைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்கள் கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்களை வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட உள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும், நுழைவு வாயில் பகுதியில் கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்தபிறகு, முக கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியும். இரவில் மின் விளக்கு வெளிச்சத்தில் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதி இல்லை. தொல்லியல் துறை பார்வையாளர் கட்டண கவுண்டர்களில் பணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறமுடியாது என்றும், ஆன்லைன் மூலமே பணம் செலுத்தி செல்போனில் பதிவாகியுள்ள நுழைவு சீட்டை காண்பித்து உள்ளே செல்ல முடியும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
புராதன சின்னங்கள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் அவற்றை தூய்மைப்படுத்தும் பணி தொல்லியல் துறை பணியாளர்கள் மூலம் நடைபெற்றது. 8 மாதங்களாக மூடப்பட்ட புராதன சின்னங்கள் இன்று திறக்கப்பட உள்ளதால் சுற்றுலாவை நம்பி உள்ள வியாபாரிகள், சுற்றுலா வழிகாட்டிகள், விடுதி உரிமையாளர்கள், வாடகை ஆட்டோ டிரைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரெயில் மோதி பலியானார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமம் குப்பக்காரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி அஞ்சலாட்சி (வயது 65). இவர் சிங்கப் பெருமாள் கோவிலில் உள்ள ஒருவரது வீட்டில் வேலை செய்து விட்டு, தனது வீட்டுக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது சென்னை எழும்பூரிலிருந்து மதுரை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
சிறைக்காவலரை கொலை செய்த வழக்கில் 5 பேரையும் பாலூர் போலீசார் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த பழையசீவரம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை புழல் சிறை போலீஸ்காரர் இன்பரசு அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இக்கொலையில் தொடர்புடைய அதே பகுதியைச் சார்ந்த வரதராஜன் (வயது 25 ), ராஜதுரை (23), செந்தில்குமார் (24) விக்னேஷ் (22) ஜான்சன் (23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் பரிந்துரையின் பேரில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, திருச்சி சிறையில் இருந்த 5 பேரையும் பாலூர் போலீசார் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
அச்சரப்பாக்கம் அருகே மது விற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.அந்தோனிஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.விஜயகுமார் மற்றும் போலீசார் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்று கொண்டிருந்த தேன்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்தி (45) மற்றும் சூணாம்பேடு பகுதியை சேர்ந்த சாந்தி (35) ஆகிய 2 பெண்களை கைது செய்து செய்யூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
திருவாரூரில் ஆலை உரிமத்தை புதுப்பிக்க லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயரின் வீட்டில் ரூ.57 லட்சம் பணம் சிக்கியது.
வண்டலூர்:
திருவாரூர் சாமி மடத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி (வயது 58). அரிசி ஆலை அதிபர். இவருடைய ஆலை செயல்பாட்டிற்கான காற்று மற்றும் நீர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக நாகை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த உரிமத்தை புதுப்பிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் தருமாறு மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் தனராஜ் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் லஞ்சம் தர விரும்பாத துரைசாமி, இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், நேற்று முன்தினம் ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரத்தை துரைசாமி லஞ்சமாக என்ஜினீயர் தனராஜிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில், செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள தனராஜூக்கு சொந்த வீட்டில் லஞ்சமாக பெற்ற பணத்தை பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
அதன் பேரில், திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு 10 பேர் கொண்ட சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊரப்பாக்கம் சத்யபிரியா நகரில் உள்ள தனராஜ் வீட்டில் விடிய, விடிய சோதனை செய்தனர்.
அப்போது வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.57 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் இது தவிர அங்கு பணமதிப்பு இழப்புக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சுமார் ரூ.2½ லட்சமும் இருந்தது தெரியவந்தது.
இது சம்பந்தமாக என்ஜினீயர் தனராஜூவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் நாகை மாவட்டம் நாகூரை அடுத்த தெத்தி ஆண்டோ சிட்டி பகுதியில் அவர் குடியிருந்து வந்த வாடகை வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாரூர் சாமி மடத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி (வயது 58). அரிசி ஆலை அதிபர். இவருடைய ஆலை செயல்பாட்டிற்கான காற்று மற்றும் நீர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக நாகை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பித்து இருந்தார். இந்த உரிமத்தை புதுப்பிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் தருமாறு மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் தனராஜ் கேட்டுள்ளார்.
இந்த நிலையில் லஞ்சம் தர விரும்பாத துரைசாமி, இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், நேற்று முன்தினம் ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரத்தை துரைசாமி லஞ்சமாக என்ஜினீயர் தனராஜிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில், செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள தனராஜூக்கு சொந்த வீட்டில் லஞ்சமாக பெற்ற பணத்தை பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.
அதன் பேரில், திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு 10 பேர் கொண்ட சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊரப்பாக்கம் சத்யபிரியா நகரில் உள்ள தனராஜ் வீட்டில் விடிய, விடிய சோதனை செய்தனர்.
அப்போது வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.57 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் இது தவிர அங்கு பணமதிப்பு இழப்புக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சுமார் ரூ.2½ லட்சமும் இருந்தது தெரியவந்தது.
இது சம்பந்தமாக என்ஜினீயர் தனராஜூவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் நாகை மாவட்டம் நாகூரை அடுத்த தெத்தி ஆண்டோ சிட்டி பகுதியில் அவர் குடியிருந்து வந்த வாடகை வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த கல்லூரி காதல் ஜோடி மீது கார் மோதிய விபத்தில், காதலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மாமல்லபுரம்:
சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி கார்டனை சேர்ந்தவர் கிஷோர் (வயது 19). சென்னை பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் பகுதியை சேர்ந்த கவுதமி (19). இவர்கள் 2 பேரும் சென்னை அடையாரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு பயின்று வந்தனர். ஒரே கல்லூரியில் படித்த இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலர்களான இருவரும், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
கவுதமி பின்னால் அமர்ந்து கொள்ள, கிஷோர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் பேரூர் அருகே இடது பக்கமாக சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் சுக்குநூறாக அப்பளம் போல் நொறுங்கியதில், இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் கவுதமிக்கு தலையில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்த கிஷோரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி கார்டனை சேர்ந்தவர் கிஷோர் (வயது 19). சென்னை பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் பகுதியை சேர்ந்த கவுதமி (19). இவர்கள் 2 பேரும் சென்னை அடையாரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு பயின்று வந்தனர். ஒரே கல்லூரியில் படித்த இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காதலர்களான இருவரும், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
கவுதமி பின்னால் அமர்ந்து கொள்ள, கிஷோர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் பேரூர் அருகே இடது பக்கமாக சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி எதிரே வந்து கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கர சத்தத்துடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிள் சுக்குநூறாக அப்பளம் போல் நொறுங்கியதில், இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் கவுதமிக்கு தலையில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியபடி கிடந்த கிஷோரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் மாவட்ட திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு செய்தார்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனரும், ஊரக வளர்ச்சித்துறை முகமை அலுவலருமான செல்வகுமார் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அதன் பின்னர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பதிவேடுகளை ஊராட்சிகள் பராமரிப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களுக்கு தெளிவுரைகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சூணாம்பேடு ஊராட்சி, ஈசூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிகளை ஆய்வு செய்தார். இப்பணிகளின் அவசியம் குறித்து திட்ட பணியாளர்களுக்கு விளக்கவுரை ஆற்றினார்.
இந்த ஆய்வின் போது, சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, வீரமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருப்போரூர் அருகே நீச்சல் தெரியாததால் குளத்தில் மூழ்சி மூன்று சிறுமிகள் பலியான சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஆலத்தூரில் உள்ள குளத்தில் மூன்று சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆழமான இடத்திற்குச் சென்றதாக தெரிகிறது. ராகிணி (6), ரம்யா (4), சாதனா (5) ஆகிய மூன்று பேருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மூன்று சிறுமிகள் ஒரே நேரத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






