search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளத்தில் மூழ்கி பலி"

    பொன்னமராவதி அருகே குளத்தில் மூழ்கி கோவில் குருக்கள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வலையப்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). கோவில் குருக்கள். இவர் அப்பகுதியில் உள்ள கோவிலில் பூஜைகள் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள குளத்தில் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர் விக்னேஷ் (23) ஆகிய 2 பேரும் குளிக்க சென்றுள்ளனர். குளத்தில் குளித்தபோது 2 பேரும் தண்ணீருக்குள் திடீரென மூழ்கினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பினர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி விக்னேசை காப்பாற்றி வெளியே கொண்டு வந்தனர். ஆனால் பிரகாசை வெகு நேரம் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் குளத்தில் நங்கூரம், கயிறு உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்தி பிரகாஷ் உடலை மீட்டனர். இதற்கிடையே போலீசார் பிரகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாஷ் தந்தை கணேஷ் இறந்து 15 நாட்கள் ஆவதற்குள் பிரகாஷ் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    முத்துப்பேட்டை அருகே தி.மு.க. எம்.எல்.ஏ.கார் டிரைவர் குளத்தில் மூழ்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள பண்ணைபொதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). இவருடைய மனைவி செந்தமிழ்செல்வி. இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஜீவானந்தம், திருத்துறைப்பூண்டி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ. ஆடலரசனின் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் ஜீவானந்தம் நேற்று முன்தினம் அருகில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் குளத்திற்கு சென்று பார்த்தபோது கரையில் மோட்டார் சைக்கிள் மட்டும் நின்றது.

    இதையடுத்து உறவினர்கள் குளத்தினை சுற்றி பார்த்தபோது ஜீவானந்தத்தின் உடல் தண்ணீரில் மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்த எடையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், ஜீவானந்தம் குளத்தில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பலியானது தெரிய வந்துள்ளது. 
    முத்துப்பேட்டை அருகே எம்.எல்.ஏ கார் டிரைவர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள பண்ணைபுதூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 35). இவரது மனைவி செந்தமிழ்செல்வி.

    இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஜீவானந்தம் திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ ஆடலரசனிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததால் ஜீவானந்தம் விடுமுறை எடுத்து கொண்டு வீட்டில் இருந்தார்.

    நேற்று ஜீவானந்தம் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் அவரை தேடி உறவினர்கள் சென்றனர். அப்போது அவர் குளத்தில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது.

    இதுபற்றி எடையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜீவானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழந்தை பிறந்த 10 நாட்களில் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ×