என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    அச்சரப்பாக்கம் அருகே சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ஈ.சி.ஆர்.சாலை ஓதியூர் கிராமத்தில் அதிரடி சாராய வேட்டை நடத்தினர். இதில் ஓதியூர் கிராமத்தை சேர்ந்த விஜயா (வயது44), காமாட்சி (42), கோபு (38) ஆகியோர் தங்கள் வீட்டின் அருகே சாராயம் விற்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை செய்யூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோபுவை மதுராந்தகம் கிளை சிறையிலும், விஜயா, காமாட்சி ஆகியோரை சென்னை புழல் சிறையிலும் அடைத்தனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,888-ஆக உயர்ந்தது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,106 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 707-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 928 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 50 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,888-ஆக உயர்ந்தது. 9 ஆயிரத்து 891 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 519 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 865-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 57 ஆயிரத்து 315 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 15 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 983 -ஆக உயர்ந்துள்ளது. 5,567 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திலுள்ள மண்ணிவாக்கம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    செங்கல்பட்டு:

    முகாமுக்கு செங்கல்பட்டு மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி கிருஷ்ணன், பாபு, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மனோஜ் குமார், கண்காணிப்பாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆராமுதன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் எம்.டி.சண்முகம், ஊராட்சி மன்ற செயலர் டி.ராமபக்தன், வட்டார மருத்துவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,194 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 37 பேர் உயிரிழந்தனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,194 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 263 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 981 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1789- ஆக உயர்ந்தது. இதில் 11493 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 664 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 912- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    நேற்று சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 948-ஆக உயர்ந்துள்ளது. 6,614 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
    குடிநீர் ஆலையில் பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்கள் 10 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் காட்டங்கொளத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிப்பட்டுள்ளனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலையில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு தென் சென்னை பகுதியில் உள்ள ஈஞ்சம்பாக்கம், பெருங்குடி, அடையார், திருவான்மியூர், சோழிங்கநல்லூர், மயிலாப்பூர், கந்தன்சாவடி, மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. குடிநீர் ஆலையில் பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்கள் 10 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் காட்டங்கொளத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிப்பட்டுள்ளனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,314 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,314 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1748 ஆக உயர்ந்தது. 12 ஆயிரத்து 905 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 711 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 54 ஆயிரத்து 492 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 26 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 932 ஆக உயர்ந்துள்ளது. 6 ஆயிரத்து 902 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,379 பேர் பாதிப்புக்குள்ளானார்கள். 29 பேர் உயிரிழந்தனர்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,379 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 664 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 170 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,669 ஆக உயர்ந்தது. 13 ஆயிரத்து 795 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 788 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 593 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 53 ஆயிரத்து 695 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 905 ஆக உயர்ந்துள்ளது. 6 ஆயிரத்து 993 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    அச்சரப்பாக்கம் அருகே கருப்பு பூஞ்சை நோயால் டாஸ்மாக் மேலாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அச்சரப்பாக்கம்:

    செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம் அச்சரப்பாக்கத்தை அடுத்த அமைந்தங்கருணையை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற புருஷோத்தமன் (வயது49). இவர் டாஸ்மாக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மேல்மருவத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மேல்மருவத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ரமேஷுக்கு கொரோனா தொற்று மற்றும் கருப்பு பூஞ்சை நோய் இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். ரமேஷுக்கு மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர்.
    மதுராந்தகம் அருகே விதிகளை மீறி திருவிழா நடத்தியதாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் சூணாம்பேடு அடுத்த புத்திரன் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெறுவது வழக்கம், இந்த ஆண்டு கொரோனா தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் புத்திரன் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா சம்பந்தமாக முன்னேற்பாடாக திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக செய்யூர் தாசில்தார் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் வந்தது

    அங்கு கிராம நிர்வாக அலுவலர் சுமன் சென்று ஆய்வு நடத்தி அவர் சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசனிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் விதிகளை பின்பற்றாமல் கூட்டம் நடத்தியதாக அதே ஊரைச் சேர்ந்த குமரன் (வயது 40), நிர்மல்குமார் (55), சுகுமார் (37), செல்வராஜ் (63), கோதண்டராமன் (44), மணிமாறன் (35) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அடுத்தடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் மாமல்லபுரம் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகள் குறித்து கணக்கெடுக்க மாவட்ட வருவாய்துறைக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டு பெண் சுற்றுலா பயணி பார்பரா (வயது80). கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதே போல் பிரிட்டனை சேர்ந்த சுற்றுலா பயணி லியோனல் குரூஸ் (90) என்பவரும் கடந்த 21-ந்தேதி உயிரிழந்தார்.

    அடுத்தடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் மாமல்லபுரம் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகள் குறித்து கணக்கெடுக்க மாவட்ட வருவாய்துறைக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது 9 வெளிநாட்டு பயணிகள் தங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து 9 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்துள்ளதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த உள்ளூர் நபர்களையும் பரிசோதணை செய்ய விசாரித்து வருகிறார்கள்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை ஆய்வு செய்தார். உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய அவர் வலியுறுத்தினார்.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி ஆய்வகத்தை நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் விஜயன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஏ.ஜான் லூயிஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசிகளின் தேவை அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை உடனடியாகத் தொடங்குவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    மேலும், மத்திய அரசின் நிறுவனமான எச்.எல்.எல். நிறுவனத்திற்கு உற்பத்தியை தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் தங்கி இருந்த இங்கிலாந்து நாட்டு பயணி கொரோனா தொற்று பாதிப்பால் பரிதாபமாக இறந்தார்.
    சென்னை:

    இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகரைச் சேர்ந்தவர் லியோரிகுரூஷ் (வயது 90). இவர், இங்கிலாந்து, இந்தியா என இரு நாட்டில் தங்குவதற்கான இரட்டை குடியுரிமை பெற்றவர். லண்டனில் உள்ள ஒரு கம்பெனியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு கொல்கத்தா வந்து தங்கி இருந்தார்.

    அங்கிருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகருக்கு சுற்றுலா வந்த அவர், அங்குள்ள கோவளம் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

    லியோரிகுரூசுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் அதிகமாகி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதற்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நுரையீரலில் வைரஸ் தொற்று அதிகம் பரவியதால் நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

    டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்துக்கு அவரது இறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடல் கொரோனா நோயாளிகளை எரியூட்டும் மறைமலைநகரில் உள்ள இடுகாட்டில் எரியூட்டப்பட்டது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×