search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள புதினாவை அறுவடை செய்யும் கூலித்தொழிலாளர்களை படத்தில் காணலாம்.
    X
    சூளகிரி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள புதினாவை அறுவடை செய்யும் கூலித்தொழிலாளர்களை படத்தில் காணலாம்.

    சூளகிரி பகுதியில் புதினா விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியில் விவசாய சார்ந்த தொழில்கள் அதிகம் நடைபெறுகிறது.
    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் புதினா பயிரிடப்படுகிறது. 

    இங்கு விளையும் புதினா சென்னை, திருச்சி, மதுரை, பெங்களூர், சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

    மருத்துவ குணங்கள் கொண்ட புதினா 50 கட்டு கொண்ட ஒரு மூட்டை 50 ரூபாய்க்கு விலை போகிறது. இதற்கு அறுவடைக்கூலி, லாரி வாடகை உள்பட ஒரு மூட்டைக்கு 35 ரூபாய் செலவாகிறது. 

    இதனால் ஒரு மூட்டைக்கு 20 ரூபாய் மட்டுமே வருவாய் கிடைப்பதால் புதினா பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். 

    சூளகிரி தாலுகா பகுதியில் ஒட்டர்பாளையம், பிண்டே கானப்பள்ளி, கீரனப்பள்ளி, நஞ்சேநட்டி, பங்காநத்தம், மாரண்டஅள்ளி உள்பட பல பகுதிகளில் புதினா விளை விக்கப்படுகிறது.

    இங்கு விளையும் புதினாவை அறுவடை செய்து ஒரு மூட்டையில் 50 கட்டுகளை கட்டிய சூளகிரி கொண்டு வந்து லாரிகள்  மூலம் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. தொடர்ந்து புதினா விலை குறைந்து வருவதால் அதை பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் இருந்து வருகின்றனர். 

    இதுகுறித்து சூளகிரி பகுதியைச் சேர்ந்த புதினா விவசாயிகள் கூறியதாவது:-

    சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் புதினாவை பயிரிட்டு வருகிறார்கள். குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு இங்கு இல்லாததால் அறுவடை செய்யப்பட்ட உடனே புதினாவை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும். 

     மேலும் விலை மிகவும் குறைந்து இருந்தாலும் விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில்தான்  வியாபாரிகள் உள்ளனர். எனவே சூளகிரி பகுதியில் குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்கை திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும்
    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×