என் மலர்
செய்திகள்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பண வீக்கம் ஏற்படும்: காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பால் பணவீக்கம் ஏற்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடி:
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இன்று காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை நாடு முழு வதும் அமல்படுத்தி உள் ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் முன்னோடி காங்கிரஸ் கட்சிதான். தற் போது அமலுக்கு வந்து இருப்பது ஜி.எஸ்.டி. அல்ல. வரி விதிப்பு முறைகளில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன.
பல பொருட்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் வரவில்லை. அதாவது 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை பொருளாதாரம் ஜி.எஸ்.டி.க்குள் வரவில்லை. இதனால் பழைய வரி முறையும், புதிய வரி முறையும் அமலில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மின்சாரம், பெட்ரோலிய பொருட்கள் போன்றவை ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் வரவில்லை. ரியல் எஸ்டேட்டும் பாதி உண்டு. பாதி இல்லை.
இந்திய பொருளாதாரத்தில் பெட்ரோலிய பொருட்கள், மின்சாரத்தை ஒதுக்கி வைத்த பின்னரும் 40 சதவீதம் பொருளாதாரம் ஜி.எஸ்.டி.க்குள் வரவில்லை.
ஒரு நாடு, ஒரு பொருளாதாரம், ஒரு வரி விதிப்பு என்று சொல்லிவிட்டு பழைய வரி முறையும், புதிய வரி முறையும் கலந்துள்ளன. பழைய வரி முறை மாறி, புதிய வரி முறைகள் வந்ததாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக அதிக லாபம் ஈட்டக்கூடாது. அதை மேற்பார்வை செய்வதற்கு அதிகார மையத்தை உருவாக்கப் போகிறர்கள். இதைவிட மோசமான ஒரு சரத்து மசோதாவில் இருக்க முடியாது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக சிறு-குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் விளைவுகள் போகபோகத்தான் தெரியும். கண்டிப்பாக பணவீக்கம் ஏற்படும். இதை மத்திய அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பது தெரியவில்லை. 80 சதவீத பொருட்களின் விலை உயரும். சந்தை பொருளாதாரம் பற்றி அறியாமல் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்தி உள்ளது.
தற்போது 90 சதவீத வியாபாரிகள் மாநில அரசின் கட்டுபாட்டுக்குள் இருக்கிறார்கள். 10 சதவீத வியாபாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஒரு மாநிலத்தில் தொழில் செய்யும் வியாபாரி 36 வரி தாக்கல்களையும், வேறு மாநிலங்களில் தொழில் செய்பவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தலா 36 வரி தாக்கல்களை செய்ய வேண்டும். இதற்கே தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும். இதுவே மிகப்பெரிய குறைபாடு.
எந்த அரசு எந்த வியாபாரியை கண்காணிக்கும் என்று தெரியவில்லை. சமரசம் என்ற பெயரில் கீழ்தரமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இன்று காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை நாடு முழு வதும் அமல்படுத்தி உள் ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் முன்னோடி காங்கிரஸ் கட்சிதான். தற் போது அமலுக்கு வந்து இருப்பது ஜி.எஸ்.டி. அல்ல. வரி விதிப்பு முறைகளில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன.
பல பொருட்கள் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் வரவில்லை. அதாவது 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை பொருளாதாரம் ஜி.எஸ்.டி.க்குள் வரவில்லை. இதனால் பழைய வரி முறையும், புதிய வரி முறையும் அமலில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மின்சாரம், பெட்ரோலிய பொருட்கள் போன்றவை ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் வரவில்லை. ரியல் எஸ்டேட்டும் பாதி உண்டு. பாதி இல்லை.
இந்திய பொருளாதாரத்தில் பெட்ரோலிய பொருட்கள், மின்சாரத்தை ஒதுக்கி வைத்த பின்னரும் 40 சதவீதம் பொருளாதாரம் ஜி.எஸ்.டி.க்குள் வரவில்லை.
ஒரு நாடு, ஒரு பொருளாதாரம், ஒரு வரி விதிப்பு என்று சொல்லிவிட்டு பழைய வரி முறையும், புதிய வரி முறையும் கலந்துள்ளன. பழைய வரி முறை மாறி, புதிய வரி முறைகள் வந்ததாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எல்லாவற்றுக்கும் மேலாக அதிக லாபம் ஈட்டக்கூடாது. அதை மேற்பார்வை செய்வதற்கு அதிகார மையத்தை உருவாக்கப் போகிறர்கள். இதைவிட மோசமான ஒரு சரத்து மசோதாவில் இருக்க முடியாது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக சிறு-குறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் விளைவுகள் போகபோகத்தான் தெரியும். கண்டிப்பாக பணவீக்கம் ஏற்படும். இதை மத்திய அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பது தெரியவில்லை. 80 சதவீத பொருட்களின் விலை உயரும். சந்தை பொருளாதாரம் பற்றி அறியாமல் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்தி உள்ளது.
தற்போது 90 சதவீத வியாபாரிகள் மாநில அரசின் கட்டுபாட்டுக்குள் இருக்கிறார்கள். 10 சதவீத வியாபாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஒரு மாநிலத்தில் தொழில் செய்யும் வியாபாரி 36 வரி தாக்கல்களையும், வேறு மாநிலங்களில் தொழில் செய்பவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தலா 36 வரி தாக்கல்களை செய்ய வேண்டும். இதற்கே தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும். இதுவே மிகப்பெரிய குறைபாடு.
எந்த அரசு எந்த வியாபாரியை கண்காணிக்கும் என்று தெரியவில்லை. சமரசம் என்ற பெயரில் கீழ்தரமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






