என் மலர்tooltip icon

    செய்திகள்

    எப்போது வேண்டுமானாலும் தமிழகத்தில் தேர்தல் வரலாம்: திருமாவளவன்
    X

    எப்போது வேண்டுமானாலும் தமிழகத்தில் தேர்தல் வரலாம்: திருமாவளவன்

    தமிழகத்தை இப்போது பாரதிய ஜனதாதான் ஆள்கிறது. ஆகவே தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் என ஈரோட்டில் திருமாவளவன் கூறியுள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் திருமணம் நடந்தது.

    இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு எனக்கு அதிகமாக வர வாய்ப்பு கிடைக்கவில்லை. திருமணம் மூலம் இங்கு வர இப்போது வாய்ப்பு கிடைத்து உள்ளது.

    ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஒரு நிலையான ஆட்சி இல்லை. தமிழகத்தை இப்போது பாரதிய ஜனதாதான் ஆள்கிறது. ஆகவே தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்.


    இந்தியா முழுவதையும் நாம்தான் ஆள வேண்டும் என்று பாரதிய ஜனதா நினைக்கிறது. தமிழகத்தை ஆள நாம்தான் ஆளப் பிறந்தவர்கள். நாம்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும். நமக்கு ஆள தகுதி இல்லையா என்ன?

    இனி தமிழ்நாட்டில் யார் ஆட்சி அமைத்தாலும் விடுதலை சிறுத்தைகளின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. மேற்கு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை வலுப்படுத்தி நமது கோட்டையாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
    Next Story
    ×