என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- சோபூர் என்கவுண்டரில் இருந்து தப்பிய அதே பயங்கவாதக் குழு ஆகும். அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
- கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஃபியான் என்கிற அடில் ஹூசைன் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி உள்பட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் கூறியதாவது:-
ஸ்ரீநகர் நகரின் பெமினா பகுதியில் நடந்த என்கவுண்டரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் நடவடிக்கையில் போலீஸ் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
என்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து ஆவணங்கள் மற்றும் பிற பொருட்களை ஆராய்ந்ததில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தில் வசிக்கும் அப்துல்லா கவுஜ்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏற்கவனே நடந்த சோபூர் என்கவுண்டரில் இருந்து தப்பிய அதே பயங்கவாதக் குழு ஆகும். அவர்களின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஃபியான் என்கிற அடில் ஹூசைன் மிர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சமீப காலமாக ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள், காஷ்மீர் பண்டிட்டுகள் மீது நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது.
- நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் 100 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் திராப்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேரத்திற்கும் கூடுதலாக நடந்த இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் எண்ணிக்கை 100 ஆகியுள்ளது.
இதுதொடர்பாக காஷ்மீர் போலீசார் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:
காஷ்மீரில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு படை தொடர்ந்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும், பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் முயற்சி மற்றும் இளைஞர்களை பயங்கரவாதத்திற்கு இழுக்கும் செயலும் தொடருகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 158 பயங்கரவாதிகள் இன்னும் உள்ளனர்.
அவர்களில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்க உறுப்பினர்கள் (83 பயங்கரவாதிகள்) அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் தவிர ஜெய்ஷ் பயங்கரவாதிகள் (30 பேர்) மற்றும் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதிகள் (38 பேர்) உள்ளனர் என பதிவிட்டுள்ளனர்.
- புல்வாமா மாவட்டம் டிராப்கம் பகுதியில் கிட்டத்தட்ட 12 மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது
- கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில தினங்களாக சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவம் மற்றும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
அவ்வகையில் நேற்று புல்வாமா மாவட்டம் டிராம்கம் பகுதியில் நேற்று இரவு பயங்கரவாகிகளை போலீசார் சுற்றிவளைத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீடித்த இந்த என்கவுண்டரில்,
லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் அவர்கள் மூவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த ஆண்டுதான் இவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைந்ததும் தெரியவந்தது.
இந்த ஆண்டில் இதுவரை 99 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக ஐஜி விஜய குமார் தெரிவித்தார்.
- ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது.
- புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டம் கந்திப்போரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அங்கிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், புல்வாமா மாவட்டம் டிராப்காம் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
- கண்டிபோரா பகுதியில் இன்று அதிகாலை என்கவுன்டர் நடந்தது.
- பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் என்கவுன்டரின்போது தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதியை என்கவுன்டரில் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறையினர் பதிவிட்ட டுவிட்டர் பதிவில், " கண்டிபோரா பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேற்கொண்டு நடவடிக்கை நடந்து வருகிறது" என்றார்.
- தோடா, கித்வார் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் சமீபகாலமாக வெளிமாநிலத்தவர்கள் மற்றும் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் பள்ளி ஆசிரியை, வங்கி மேலாளர் உள்ளிட்டோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, காஷ்மீரின் பதேர்வா நகரில் மோதலைத் தூண்டும் வகையிலான வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவியதால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது. இதுகுறித்து போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதி நிலவுவதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
- பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
- முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக வெளிமாநிலத்தவர்கள் மற்றும் இந்து பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.
அவர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்கி வருகிறாரகள். இதில் பள் ளி ஆசிரியை, வங்கி மேலாளர் உள்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்
இந்த நிலையில் அங்குள்ள பதேர்வா நகரில் உள்ள ஒரு மசூதியில் இருந்து மோதலை தூண்டும் வகையில் வீடியோ வெளியானது. சமுக வலை தளங்களில் இது வேகமாக பரவியதால். பதேர்வா நகரில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இது தொடர்பாக போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்
இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் தோடா,கித்வார் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை இணைப்புகள் அனைத்தும் துண்டிக்க்பட்டு உள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதி நிலவுவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜிஜேந்திரசிங் கூறும் போது மூத்த மத தலை வர்கள் ஒன்று கூடி பேசி அமைதியை கடைபிடிக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளார்.
சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க யாராவது முயற்சி செய்தால் அவர்கள் மீ து கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- காற்றின் வேகம் காரணமாக காட்டுக்குள் தீ மளமளவென பரவியது.
- தீயணைப்புத்துறையினர், வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் உள்ள உதம்பூா் மாவட்டம் நுக்ல்டா கிராமத்தில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக காட்டுக்குள் தீ மளமளவென பரவியது. இதனால் பல மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த காட்டுத்தீ இயற்கையாக ஏற்பட்டதா, அல்லது ஏதேனும் சமூக விரோதிகளால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- காஷ்மீர் எல்லையில் இன்று டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- டிரோன் பறந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஜம்மு:
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள். சமீபகாலமாக பாகிஸ்தானின் டிரோன்கள் இந்திய எல்லையில் பறந்து போதை பொருள், வெடிபொருள் உள்ளிட்டவற்றை வீசி வருகின்றன. இதற்கு எல்லை பாதுகாப்பு வீரர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் காஷ்மீர் எல்லையில் இன்று டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீரின் சர்வதேச எல்லையில் அதிகாலை 4.15 மணியளவில் டிரோன் பறந்தது.
இந்த டிரோன் பாகிஸ்தானைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரரகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அந்த டிரோன் அங்கிருந்து மாயமானது.
டிரோன் பறந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆயுதம் அல்லது ஏதாவது வெடிபொருளை விட்டு சென்றார்களா? என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
- பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக சிறுபான்மையினர் மீது பயங்கராவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். இதில் 8 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டனர். இதையடுத்து பயங்கரவாதிகளை தடுப்பதற்காக, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் அப்பகுதியில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
சக்ரதாஷ் கண்டி என்ற பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியான துபைல், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் என இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இன்னும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






