என் மலர்tooltip icon

    அசாம்

    • நான்கு மாவட்டங்களில் பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் முறியடிப்பு.
    • அசாம் காவல்துறை, மத்திய விசாரணை அமைப்புகள் இணைந்து கூட்டு நடவடிக்கை.

    சர்வதேச பயங்கரவாத அமைப்புகளாக கருதப்படும் அல்கொய்தா மற்றும் பங்களாதேஷில் இயங்கும் அன்சருல்லா பங்களா அணி ஆகியவற்றுடன் தொடர்படையே 11 பேரை, அசாம் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் மதரசா பள்ளியின் ஆசிரியர் என்பதும் தெரிய வந்துள்ளது.

    அந்த மாநிலத்தின் பார்பெட்டா, குவகாத்தி, கோல்பாரா மற்றும் மொரிகான் மாவட்டங்களில் இந்த பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

    மத்திய விசாரணை அமைப்புகள் மற்றும் மாநில காவல்துறையின் ஒருங்கிணைந்த முயற்சியால் பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக அசாம் முதலமைச்சர் ஹிமந் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் இருந்து ஏராளமான மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 122.22 கிராம் போதைப் பொருள் மற்றும் ரூ.5000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
    • பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சர்வதேச சந்தையில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பு.

    அசாம் மாநிலத்தில் உள்ள கர்பி அங்லாங் மாவட்டத்தில் கிட்டதட்ட 80 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

    டோகோக என்ற இடத்தில் நேற்று மாலை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாகாலாந்தின் டியாம்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடமிருந்து சோப்புப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 122.22 கிராம் போதைப் பொருள் மற்றும் ரூ.5000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    கைது செய்யப்பட்ட நபர் பீகாரின் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றோருவர் அசாமின் மோரிகான் மாவட்டத்தில் உள்ள புராகான் பகுதியைச் சோர்ந்த பெண் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் சர்வதேச சந்தையில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பாகும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    கவுகாத்தி :

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதையடுத்து, நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், அசாம் மாநிலத்திற்கு சென்று எதிர்கட்சிதலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

    அப்போது அவர் பேசுகையில், நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், "அசாமின் முக்கிய பிரச்சனை குடியுரிமையாகும். இந்த சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர அரசு விரும்பியது. ஆனால் இன்னும் அதை கொண்டு வர முடியவில்லை. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக இந்த சட்டத்தை அமல்படுத்தவில்லை என கூறினார்கள். ஆனால் இப்போது வரை இந்த சட்டத்ததை அமல்படுத்த முடியவில்லை.

    ஏனெனில், இது அவசரமாக கொண்டு வரப்பட்ட முட்டாள்தனமான வரைவு. அரசியலமைப்பிற்கு வெளியில் இருப்பவர்களால் ஆபத்து வரவில்லை. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களால் ஆபத்து உள்ளது. நாங்கள் அதனை பாதுகாக்க வேண்டும். நான் ராஷ்டிரபதி பவனில் இருந்தால் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்".

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மாவட்ட அதிகாரிகளை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
    • நிலைமையை சமாளிக்க வரும் 16ம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு வலியுறுத்தல்.

    அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியா பரவி பலரது உயிரை எடுக்கிறது. குறிப்பாக, மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவும் இந்த காய்ச்சல் மே மாதத்தில் தொடங்கி அக்டோர் மாதம் வரையில் நீடிக்கிறது.

    ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார இயக்கம் தெரிவித்துள்ளது .

    இந்நிலையில், மாவட்ட விரைவுப் பதில் குழுக்களை அமைக்கவும், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மாவட்ட அதிகாரிகளை சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

    இதுகுறித்து அசாம் மாநில சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர் அவினாஷ் ஜோஷி மறஅறும் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் எம்.எஸ்.லட்சுமி பிரியா ஆகியோர் நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், நிலைமையை சமாளிக்க வரும் 16ம் தேதிக்குள் மாவட்ட விரைவுப் பதில் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    • 24 லட்சத்துக்கும் அதிகமான அசாம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சில மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்று ஆற்றுக்குள் மூழ்கியது குறித்த வீடீயோ வெளியாகி உள்ளது.

    நல்பாரி மாவட்டத்தில் இரண்டு அடுக்குமாடி கொண்ட காவல்நிலையத்தை சுற்றி வெள்ளநீர் அதிகரித்து வந்த நிலையில், அரிப்பு காரணமாக அந்த கட்டிடம் இடிந்து விழுந்து ஆற்றுக்குள் மூழ்கியது. இதை அங்கிருந்த கிராம மக்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். அந்த காவல்நிலைய கட்டிடம் நீண்ட நாட்களாக காலியாக இருப்பதால் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை.

    பிரம்மபுத்திரா ஆற்றின் அருகே அமைந்துள்ள பல பகுதிகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், கச்சார், கரீம்கஞ்ச் மற்றும் ஹைலகண்டி மாவட்டங்க ளில் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

    28 மாவட்டங்களில் 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரம் உள்ளிட்ட பல பகுதிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் வெள்ள பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

    • மகாராஷ்டிரா அரசை கவிழ்க்கும் குதிரை பேரத்தில் அசாம் மாநில பா.ஜனதா அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
    • மகாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டல் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கவுகாத்தி:

    ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர்.

    இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அசாமை விட்டு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வெளியேற கோரி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மகாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டல் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசாம் காங்கிரஸ் தலைவர் பூபன்குமார் போரா, ராஜ்புல் உசேன் எம்.எல்.ஏ. எதிர்கட்சி தலைவர் சைதாலியா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது.

    மகாராஷ்டிரா அரசை கவிழ்க்கும் குதிரை பேரத்தில் அசாம் மாநில பா.ஜனதா அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அசாமில் போராட்டம் நடத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 30க்கு மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
    • காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காட்டு விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறை தெரிவித்துள்ளது.

    கவுகாத்தி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    தொடர்மழையால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில், அசாம் மாநிலத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதையுண்டும் பலியானோர் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது என மாநில பேரிடர் மீட்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

    கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்துச் செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்தனர்.

    மேலும், மாநிலம் முழுவதும் 20 பாலங்கள், 173 சாலைகள் சேதமடைந்துள்ளன என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

    • அசாமில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    • அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் 30க்கு மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் மாநிலத்துக்கு நிதியுதவி அளிப்பதாக திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வாவுக்கு தலாய் லாமா எழுதியுள்ள கடிதத்தில், அசாமில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்

    • உத்தவ் தாக்கரே அரசு பங்களாவை காலி செய்தார். பாந்த்ராவில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடியேறினார்.
    • 35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே துணை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து இருந்தார்.

    கவுகாத்தி:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அசாகி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    சமீபத்தில் நடந்த மேல்சபை எம்.பி. தேர்தல் மற்றும் எம்.எல்.சி. தேர்தல்களில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக கட்சி மாறி ஓட்டு போட்டனர். இதனால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனாவில் அதிருப்தி குழு உருவானது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திடீரென மாயமானார்கள்.

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜனதா ஆதரவு அளித்தது. இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலம் சூரத்துக்கு சென்றனர்.

    அப்போது 14 சிவசேனா எம்.எல்.ஏ.க்களும், 7 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் அவருடன் இருப்பதாக அதிருப்தி குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அவர்களை சிவசேனா தலைவர்கள் சிலர் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா ஆட்சி நடைபெறும் மற்றொரு மாநிலமான அசாமுக்கு சென்றார். கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் ஆதரவாளர்களுடன் தஞ்சம் அடைந்துள்ளார்.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தனக்கு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்பட 46 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

    இதனால் பெரும்பான்மையை இழந்து உத்தவ் தாக்கரே அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். இதில் எந்த பலனும் ஏற்படவில்லை.

    கூட்டணி அரசை காப்பாற்ற அதிருப்தி குழு தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல் மந்திரி பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவார் யோசனை தெரிவித்தார். இதனை உத்தவ் தாக்கரேவும் ஏற்றுக்கொண்டார்.

    இதை தொடர்ந்து அவர் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அறிவித்தார். இதை தொடர்ந்து உத்தவ் தாக்கரே அரசு பங்களாவை காலி செய்தார். பாந்த்ராவில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு குடியேறினார்.

    ஆனால் இதை ஏக்நாத் ஷிண்டே நிராகரித்தார். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா விலக வேண்டும் என்றார்.

    இதுதொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

    மகா விகாஸ் கூட்டணி இயற்கைக்கு மாறானது. அதில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மட்டும் தான் கூட்டணியில் பலன் அடைந்துள்ளனர். அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியினர் கடந்த 2½ ஆண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மகா விகாஸ் கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேற வேண்டும். முதல் மந்திரி பதவியை நான் விரும்பவில்லை. மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பிரதாப் சர்நாயக் கூறும்போது, "பா.ஜனாவுடனான கூட்டணியை சிவசேனா மீண்டும் புதுப்பிக்க வேண்டும். காங்கிரஸ் கூட்ட ணியில் இருந்து வெளியேற வேண்டும்" என்றார்.

    இந்த நிலையில் மேலும் 3 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் சாய்ந்துள்ளனர். தீபக் கேசகர், மங்கேஷ் குதால்கர், சதா சர்வான்கர் ஆகியோர் இன்று காலை மும்பையில் இருந்து புறப்பட்டு கவுகாத்தி சென்றனர். அவர்கள் ஏக்நாத் ஷிண்டேயை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் அவரது கை ஓங்கி உள்ளது.

    35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே துணை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து இருந்தார். அதில் கட்சியின் தலைமை கொறடாவாக இருக்கும் சுனில் நீக்கப்பட்டு இருப்பதாகவும், புதிய கொறடாவாக பரத் கோகோவாலே நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    சிவசேனா கட்சியில் மொத்தம் 55 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் 36 எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் உள்ளனர். இதனால் மகாராஷ்டிர அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.

    ஏக்நாத் ஷிண்டே இன்று காலை 11 மணியளவில் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கவுகாத்தியில் இருந்து மும்பைக்கு திரும்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதே போல் உத்தவ் தாக்கரேயும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்தடுத்த ஆலோசனையால் மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது.
    • சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் பட்சத்தில் மகாராஷ்டிரத்தில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும்.

    கவுகாத்தி:

    மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கட்சிகளை கொண்ட மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ.) கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக இருக்கிறார்.

    சமீபத்தில் நடந்த மேல்சபை தேர்தலில் பா.ஜனதா 3 இடத்தை பிடித்தது. கூடுதலாக ஒரு இடத்தை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த மகாராஷ்டிர எம்.எல்.சி. தேர்தலிலும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு போட்டனர். பா.ஜனதாவின் 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் தோல்வி அடைந்தார். மொத்தம் உள்ள 10 இடங்களில் சிவசேனா கூட்டணி, பா.ஜனதா தலா 5 இடங்களில் வெற்றி பெற்றன. பா.ஜனதாவுக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைத்தது.

    மேல்சபை எம்.பி. தேர்தலை போல எம்.எல்.சி. தேர்தலிலும் திடீர் திருப்பம் ஏற்பட்டதால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி கோஷ்டி உருவானது. அவருடைய தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் இருந்து பா.ஜனதா ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு சென்றனர். அங்குள்ள சொகுசு ஓட்டலில் அவர்கள் தங்கி இருந்தனர். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களான பட்னாவிஸ் நாராயணரானே ஆகியோர் ஏக்நாத் ஷிண்டே தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானது.

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் ஆகியோர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருப்பதால் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை என்று தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தெரிவித்துள்ளன.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை உத்தவ் தாக்கரே சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இந்த நிலையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குஜராத்தில் இருந்து இன்று அதிகாலை அசாம் மாநிலம் கவுகாத்தி சென்றனர். அங்கும் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    மும்பையில் இருந்து சிவசேனா தலைவர்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்ததால் அவர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

    சிவசேனாவின் இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அசாம் பா.ஜனதா தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள். முதல்-மந்திரி ஹேமந்த் பிஸ்வாசும் அவர்களை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தனக்கு 46 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதில் 40 பேர் சிவசேனாவை சேர்ந்தவர்கள். 6 பேர் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆவார்கள்.

    இதுதொடர்பாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

    சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் உள்பட 46 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது. நான் பால்தாக்கரேயின் சிவசேனாவை விட்டு செல்ல மாட்டேன். நாங்கள் இந்துத்துவாவை நம்ப கூடியவர்கள். சிவசேனாவை ஒருபோதும் இரண்டாக உடைக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கவுகாத்தியில் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் சிவசேனாவுக்கு 55 உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரசுக்கு 53 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 உறுப்பினர்களும் உள்ளனர். சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் 12 பேர் அரசுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசின் ஆதரவு 164 உள்ளது.

    எதிர்கட்சியான பா.ஜனதாவுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் 15 பேர் ஆதரவாக உள்ளனர். இதனால் பா.ஜனதா கூட்டணி பலம் 121 ஆக உள்ளது. மஜ்லிஸ் கட்சிக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    பெரும்பான்மைக்கு 144 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. தற்போது சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் பெரும்பான்மை இழந்து ஆட்சி கவிழும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் சிவசேனாவின் முயற்சி தொடர்ந்து தோல்வி அடைந்தது. இதனால் பெரும்பான்மையை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது.

    இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர சட்டசபையை கலைக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    மகாராஷ்டிர சட்டசபை கலைக்கப்படும் சூழல் தற்போது நிலவி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த நிலையில் மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று பிற்பகல் மகாராஷ்டிர மந்திரி சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முடிவில் உத்தவ் தாக்கரே தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் பட்சத்தில் மகாராஷ்டிரத்தில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றும். சிவசேனா அதிருப்தி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் பா.ஜனதா ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
    • மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்து செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    கவுகாத்தி:

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக அசாம், மேகாலயா மாநிலங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.

    தொடர்மழை காரணமாக அணைகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவில் புதையுண்டும் அசாமில் இதுவரை 82 பேர் பலியாகி உள்ளனர். இதனை மாநில பேரிடர் மீட்புத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 பேர் பலியாகி உள்ளனர். தர்ராங், நாகோன், கச்சார், திப்ரூகர், ஹோஜாய், ஹைலகண்டி போன்ற பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.

    மழை, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகிறார்கள். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதும் 2.31 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் காட்டு விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி அவை இழுத்து செல்லப்பட்டன. இதில் 8 விலங்குகள் இறந்துள்ளதாக கால்நடை துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    இதுபோல தேசிய விலங்குகள் பூங்காவிலும் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள விலங்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக பூங்கா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    அசாம் வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவை டெலிபோனில் அழைத்து நிலவரங்களை கேட்டறிந்தார்.

    மேலும் அசாமில் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் கேட்டுக்கொண்டார்.

    • வெள்ள பாதிப்பு பகுதிகளில் இருந்து 4,500 உள்ளூர்வாசிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
    • பிரம்மபுத்திரா ஆற்றில் 9 பேர் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கினர்.

    கவுகாத்தி:

    கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டள்ள அசாம் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் ராணுவ வீரர்கள் 4வது நாளாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். வெள்ள பாதிப்பு பகுதிகளில் சிக்கியிருந்த நோயாளிகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 4500 உள்ளூர்வாசிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், நிவாரண முகாம்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப் பட்டதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    கச்சார் மாவட்டத்தில் உள்ள போராகாய் தேயிலைத் தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும் அசாம் முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே திப்ருகரின் ரோமோரியாவில் பிரம்மபுத்திரா ஆற்றில் 9 பேர் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கினர். 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


    ×