search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அசாம் வெள்ளத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளித்தார் தலாய் லாமா
    X

    தலாய் லாமா

    அசாம் வெள்ளத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளித்தார் தலாய் லாமா

    • அசாமில் பெய்த கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    • அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் 30க்கு மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அசாம் மாநிலத்துக்கு நிதியுதவி அளிப்பதாக திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அசாம் மாநில முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வாவுக்கு தலாய் லாமா எழுதியுள்ள கடிதத்தில், அசாமில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்

    Next Story
    ×