என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • சித்தூர் உழவர் சந்தையில் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை வெளி சந்தையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • நீண்ட வரிசையில் நின்று சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை தக்காளியை வாங்கி சென்றனர்.

    சித்தூர்:

    தக்காளி வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு மானிய விலையில் உழவர் சந்தைகளில் 1 கிலோ தக்காளியை ரூ.50-க்கு பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.

    ஆந்திர விவசாயிகளிடம் இருந்து. தக்காளிகளை கொள்முதல் செய்து வெளிமாநிலங்களான டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.

    இதுவரை 100 டன் தக்காளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்தூர் உழவர் சந்தையில் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை வெளி சந்தையை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சித்தூரில் உள்ள உழவர் சந்தைகளில் மானிய விலையில் நேற்று ஒருவருக்கு 1 கிலோ தக்காளி விற்பனை செய்வதால் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

    இதனால் நீண்ட வரிசையில் நின்று சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை தக்காளியை வாங்கி சென்றனர்.

    நேற்று 3 மணி நேரத்தில் 3 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    • லேண்டர் கலனில் அது துல்லியமான நவீன கேமரா கருவிகள் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
    • கடந்த முறை லேண்டர் கலன் தரையிறங்க 5 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    நிலவுக்கு ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் புதுமைகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கடந்த முறை நிலவில் வேகமாக தரையிறங்கியதால் லேண்டர் கலன் தொடர்பை இழந்தது. இந்த முறை லேண்டர் கலன்களின் கால்களை மிக திடமாக வடிவமைத்ததுடன் அதனை பல்வேறு பரிசோதனைகள் மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

    லேண்டர் கலன் தரையிறங்கும்போது சம தளத்தில் இறங்க ஏதுவாக அதன் கால்களில் டெலஸ்கோப் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இம்முறை லேண்டர் கலனில் அது துல்லியமான நவீன கேமரா கருவிகள் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

    அதன் மூலம் எடுக்கப்படும் படங்கள் உடனுக்குடன் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு கிடைக்கும் வகையில் புதிய கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. லேண்டர் கலன் தரையிறங்கும் வேகத்தை கணக்கிடுவதற்கான லேசர் டாப்ளர் வெலாசிட்டி சென்சார் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திட்டமிட்டதைவிட வேகமாக தரையில் இறங்குகிறது என்பதை அறியலாம். கடந்த முறை லேண்டர் கலன் தரையிறங்க 5 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு என்ஜின் புழுதிகளை தணிப்பதற்காக கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சில எதிர் விளைவுகள் ஏற்படலாம் என கருதி தற்போது அந்த என்ஜின் நீக்கப்பட்டு நான்கு என்ஜின்களுடனேயே லேண்டர் செல்கிறது. லேண்டர் கலனில் உள்ள 7 வகை சென்சார்கள், கேமரா நுட்பங்கள் மூலம் மென்மையான தரையிறக்கத்துக்காக வழி காட்டுதல்கள் தரப்பட்டுள்ள என்ஜின்களின் வேகக் கட்டுப்பாட்டு விதத்திலும் சில நுட்பமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இறுதி நிலை தரையிறக்க வேகம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    • சந்திரயான்-3 விண்கலம் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடையும்.
    • இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதில் கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் திட்டம் வெற்றி பெற்றது. 2019-ம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வெற்றி பெறவில்லை. லேண்டர் நிலவில் வேகமாக தரையிறங்கியதால் தொடர்புகளை இழந்தது.

    இதற்கிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ததற்காக சந்திரயான்-3 விண்கலம், நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண் கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு ஏவப்பட்டது.

    தீப்பிழம்பை கக்கியபடி சென்ற ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.

    பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலத்தை இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு நிலையம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது. சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதையை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. அதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    பூமியின் சுற்று வட்ட பாதையை சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலம் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடையும்.

    புவியின் ஈர்ப்பு விசையும், நிலவின் ஈர்ப்பு விசையும் சமமாக இருக்கும் பகுதியில் புவி வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் வட்ட பாதையில் சந்திரயான்-3 விண்கலம் புதிய பயணத்தை தொடங்கும். அப்போது நிலவின் ஈர்ப்பு விசையின் துணையுடன் அந்த சுற்று வட்டப் பாதையில் விண்கலம் பயணிக்கும்.

    அதன்பின் நிலவின் சுற்றுப் பாதையை சுற்றி வந்து ஆகஸ்டு 23-ந்தேதி நிலவில் விண்கலம் தரையிறங்கும்.

    இஸ்ரோ விஞ்ஞானிகள் வரும் நாட்களில் நிலவுக்கு செல்லும் பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தை கொண்டு வர சுற்றுப்பாதையை உயர்த்தும் பணிகளை மேற்கொள்வார்கள்.

    நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டதும், ஆகஸ்டு மாத இறுதிக்குள் தரையிறங்கும் வரிசை பணி தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு எம்.ஜி.எம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • படுகாயம் அடைந்த ராமபிரம்மம் குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், வாரங்கல் மாவட்டம், கோர்ரெகுண்டாவை சேர்ந்தவர் ராமபிரம்மம். இவரது மனைவி ரமாதேவி. மகன் ஹரிஷ் குமார் ஆகியோர் மச்சிலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மூலம் விஜயவாடாவுக்கு செல்வதற்காக வாரங்கல் ரெயில் நிலையத்திற்கு வந்து ரெயிலுக்காக காத்திருந்தனர்.

    இதேபோல் ஏராளமான பயணிகளும் ரெயிலுக்காக அங்குள்ள பிளாட்பாரத்தில் நின்றனர்.

    இந்நிலையில் ரெயில்வே பிளாட்பாரத்திற்கு மேலே இருந்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திடீரென உடைந்து விழுந்தது.

    அதன் அருகில் இருந்த ராமபிரம்மம், அவரது மனைவி ரமாதேவி, மகன் ஹரிஷ் குமார் ஆகியோர் மீது விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    மேலும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 5 பயணிகளும் லேசான காயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு எம்.ஜி.எம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேற்கு வங்க பயணிகள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் ரெயிலில் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    படுகாயம் அடைந்த ராமபிரம்மம் குடும்பத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தெற்கு மத்திய ரெயில்வேயின் செகந்தராபாத் கோட்ட மேலாளர் அபய் குமார் குப்தா சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • சந்த் பாஷாவிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
    • சிறிது நாட்களாக சபிஹா வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் சந்த் பாஷா. இவர் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்க்காவல் படை வீரராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி சபிஹா. இவர்களது திருமணம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 3 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

    மனைவிக்கு அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் பிறந்ததால் சந்த் பாஷாவுக்கு மனைவி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

    சந்த் பாஷா அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் என குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சபிஹாவை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.

    இதனால் சபிஹா அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். மேலும் கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்வது குறித்து அவரது பெற்றோர் போலீசில் 3 முறை புகார் அளித்தனர்.

    போலீசார் 3 முறையும் இவரது குடும்பத்தாரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் சந்த் பாஷா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களுக்கு ஆண் வாரிசு ஒன்று தேவை என்ற கட்டாயத்திற்கு வந்தனர். இதனால் சந்த் பாஷாவிற்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

    சபிஹாவை மொட்டை மாடியில் உள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்று கைவிரல்களை உடைத்தனர். பின்னர் அந்த அறையிலேயே அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்தனர். சபிஹா கழிவறையில் தண்ணீரை குடித்து உயிர் பிழைத்து வந்தார்.

    சிறிது நாட்களாக சபிஹா வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்த் பாஷா வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய போது சபிஹாவை சிறிய அறையில் அடைத்து வைத்து கை விரல்களை உடைத்து உணவு கூட வழங்காமல் சித்ரவதை செய்தது தெரியவந்தது.

    மனைவியை சித்ரவதை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து சந்த் பாஷா அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கிருஷ்ண வாசு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடனமாடியபடி மலையேறி வருவதாக வேண்டிக்கொண்டார்.
    • பக்தர்கள் கிருஷ்ணா வாசு நடனமாடியபடி சென்றதை தங்கள் செல்போன்களில் வீடியோ, போட்டோ எடுத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவ்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணவாசு. பரதநாட்டிய கலைஞரான இவர் கொட்டப்பகொண்டா பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத விஞ்ஞான பீடத்தில் சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    பரத நட்டியத்தில் வல்லமை படைத்த கிருஷ்ண வாசு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நடனமாடியபடி மலையேறி வருவதாக வேண்டிக்கொண்டார்.

    அதன்படி நேற்று ஸ்ரீவாரிமெட்டுப் மலைப்பாதையில் நடனமாடி திருமலைக்கு சென்றார். வழக்கமாக இந்த மலைப்பாதையில் நடந்தபடி திருமலையை அடைய 2 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

    ஆனால் கிருஷ்ண வாசு சங்கீத மகான்களான அன்னமய்யா, தியாகராஜர் கீர்த்தனைகளுக்கு ஏற்ப பாடல்களை பாடியபடி படிக்கட்டுகளில் நடனமாடியபடி 75 நிமிடத்தில் ஏறி சென்றார்.

    பக்தர்கள் கிருஷ்ணா வாசு நடனமாடியபடி சென்றதை தங்கள் செல்போன்களில் வீடியோ, போட்டோ எடுத்தனர்.

    இளைய சமூகத்தினரிடையே நமது கலாச்சார சங்கீதம், நடனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.
    • சந்திரயான்- 3 வரும் ஆகஸ்டு 23, மாலை 5.47க்கு நிலவில் தரையிறக்க திட்டம்.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.

    இந்நிலையில், அனைத்தும் சரியாக இருந்தால், சந்திரயான் விண்கலம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

    ரூ.600 கோடி மதிப்பீட்டில் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "சந்திரயான்- 3 ஆகஸ்ட் 1ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக இருந்தால், சந்திரயான்- 3 வரும் ஆகஸ்டு 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தொழில்நுட்ப ரீதியாக சவாலான மென்மையான தரையிறக்க முயற்சிக்கும்" என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.
    • சந்திரயான் 3 வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை இன்று செலுத்தி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.

    சந்திரயான் 3 வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    இதையடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது என்றும், எல்.வி.எம்.3- எம்4 ராக்கெட் சந்திரயான்-3 விண்கலத்தை துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாகவும் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் தொடங்கியது.
    • சந்திரயான்-3 விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பூமியில் இருந்து நிலவு சுமார் 3.84 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.

    பூமிக்கு மிக அருகில் உள்ள இந்த கோளில் அரிய வகை கனிம வளங்கள் இருப்பதாக விண்வெளி ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இதையடுத்து அங்கு மனிதர்களை வாழ வைக்க முடியுமா என்பது தொடர்பான ஆராய்ச்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பிரபஞ்சத்தில் நீண்ட தொலைவில் உள்ள மற்ற கிரகங்களை ஆய்வு செய்ய மிக எளிதாக நிலவில் இருந்து விண்கலங்களை அனுப்ப முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எனவே நிலவில் செய்யப்படும் ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.

    நிலவில் இதுவரை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே தங்களது விண்கலன்களை இறக்கி ஆய்வு பணிகளை செய்து உள்ளன. இந்தியாவும் 4-வது நாடாக அந்த வரிசையில் இடம் பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங் கின. முதல் சந்திரயான் விண்கலம் செலுத்தப்பட்டபோது அது நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. அதற்கான படங்கள் ஆதாரத்தையும் உலக நாடுகளுக்கு வழங்கி சந்திரயான் பிரமிக்க வைத்தது.

    நிலவில் மிக எளிதான பகுதிகளில்தான் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் ஆய்வு நடத்தி வருகின்றன. நிலவின் தென் துருவத்தில்தான் அதிக கனிம வளங்களும், நீர்ச்சத்துக்களும் உள்ளன. எனவே அங்கு முதல் கட்ட ஆராய்ச்சியை முதல் நாடாக தொடங்கும் நடவடிக்கைகளில் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22-ந் தேதி விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பிறகு, சந்திரயான்-2 விண்கலம் 2019 செப்டம்பரில் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கலன் தரையிறங்காமல், நிலவில் மோதி செயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.-3 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

    ராக்கெட் ஏவுதலுக்கான 25.30 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து, எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை சந்திரயான்-3 விண்கலத்தில் திரவ எரிபொருள் நிரப்பும் பணிகள் நடந்தன. சில மணி நேரங்களில் இந்த பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றது. கிரையோஜெனிக் எந்திரத்தில் அடுக்கடுக்காக திரவ எரிபொருள் நிரப்பப்பட்டது.

    இதையடுத்து இறுதி கட்ட ஆய்வுகள் நடந்தன. அதில் சந்திரயான்-3ல் உள்ள அனைத்து கருவிகளும் திருப்திகரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதுபோல சந்திரயா-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் பாகங்களும் திட்டமிட்டபடி இயங்கி வருவது உறுதிப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து திட்டமிட்டபடி சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது தளத்தில் இருந்து இன்று பிற்பகல் சந்திரயான்-3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்திரயான்-3 விண்கலம் தனது பயணத்தை திட்டமிட்டபடி இன்று தொடங்கியது. சந்திரயான்-3  விண்கலம் ஏவுதலை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.


    அமெரிக்கா, ரஷியா, சீனா அனுப்பிய விண்கலன்கள் சக்தி வாய்ந்தவை. எனவே அவை விரைவில் நிலவை சென்று அடைந்தன. ஆனால் சந்திரயான்-3 விண்கலத்தை 10 கட்டங்களாக நிலவுக்கு அருகே கொண்டு செல்ல இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    எனவே சந்திரயான்-3 விண்கலம் நிலவை சென்றடைய 40 நாட்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவரை அதன் பயணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெங்களூர் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்களது கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிப்பார்கள்.

    40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 23-ந் தேதி நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். அன்று மாலை 5.47 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரை இறங்கும் என்று விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.

    சந்திரயான்-3 விண்கலத்தின் பயணத்தில் ஏதேனும் மாற்றங்களை விஞ்ஞானிகள் செய்தால் மட்டுமே நிலவில் அது தரை இறங்குவதில் சில மணி நேரம் மாறுபடலாம். எனவே திட்டமிட்டபடி அனைத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர்.

    சந்திரயான்-3 விண்கலம் 3,895 கிலோ எடை கொண்டது. ஏற்கெனவே ஆர்பிட்டர், நிலவை சுற்றி வருவதால், இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன. இவை 14 நாட்கள் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும்.

    இந்த திட்டம் வெற்றி அடையும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதன் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மனைவி இறந்ததை உறுதி செய்த போஷம் அங்கிருந்து தப்பி சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள போஷத்தை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் மஞ்சரியாலா மாவட்டம் சென்னூரு மண்டலம் கிஷ்டம்பேட்டையை சேர்ந்தவர் போஷம். கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கரம்மா. இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று வந்த போஷம் தனது மனைவியிடம் கோழி கறி குழம்பு வைக்க வேண்டும் என தெரிவித்துவிட்டு வெளியே சென்றார்.

    பின்னர் மது போதையில் வீட்டிற்கு வந்த போஷம் சாப்பாட்டிற்கு கோழி கறி குழம்பு கேட்டார். ஆனால் சங்கரம்மா கத்திரிக்காய் குழம்பு ஊற்றினார். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த போஷம் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    நள்ளிரவு சங்கரம்மா வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து வந்து சங்கரம்மா தலையில் பலமாக வெட்டினார்.

    இதில் தலை இரண்டாக பிளந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சங்கரம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மனைவி இறந்ததை உறுதி செய்த போஷம் அங்கிருந்து தப்பி சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சங்கரம்மா வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு சங்கரம்மா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சென்னூரு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கரம்மா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள போஷத்தை தேடி வருகின்றனர்.

    • வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர்.
    • 17-ந்தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் விடுமுறை நாட்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.

    இதனால் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் சிரமம் அடைந்தனர். சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் ஒரு பக்தருக்கு 4 லட்டுக்கள் மட்டுமே வழங்கப்பட்டன

    இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டம் ஓரளவு குறைந்து காணப்பட்டது. நேற்று மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதனால் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் காத்திருந்தனர். 24 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர்.

    ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 3 மணி நேரத்திலும், இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஏழுமலையான் கோவிலில் வரும் 17-ந்தேதி ஆனி வார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் அதற்குண்டான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    திருப்பதியில் நேற்று 67,300 பேர் தரிசனம் செய்தனர். 32,802 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.83 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • சந்திரயான்-2 தரையிறக்கம் தோல்வி அடைந்தது. தோல்விக்கு வழிவகுத்த காரணிகள் பற்றிய தரவுகளை பெற்றோம்.
    • சென்சார்கள் மற்றும் பிற உபகரணங்களின் உதவியுடன் லேண்டர் தரையிறங்குகிறது. அதில் சவால்கள் உள்ளன.

    சந்திரயான்-3 இன்று விண்ணில் ஏவப்படுகிறது- சந்திரனின் மேற்பரப்பில் கால் தடம் பதிக்க தயாராகும் இந்தியா

    சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் ஏவப்படுகிறது. அது ஆகஸ்ட் 23 அல்லது 24-ந்தேதி நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சந்திராயான்-3 குறித்து விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் டாக்டர் உன்னிகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:-

    பணியில் பயன்படுத்தப்படும் லாஞ்ச் வெஹிக்கிள் மார்க்-3 ராக்கெட்டின் தனித்தன்மைகள் என்ன?

    எல்.வி.எம்-3 இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் ஆகும். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட் 4 அல்லது 5 டன் எடையுள்ள செயற்கைக்கோளை பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்டது. நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணியான ககன்யானை எளிதாக்கும் வகையில் அதே ராக்கெட் மாற்றியமைக்கப்படும். இது எல்.வி.எம்-ன் 3-வது பணியாக இருக்கும். ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், ராக்கெட் அடிப்படையில் அதே தான்.

    ககன்யான் பணிக்கு ஏற்றவாறு ராக்கெட்டில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?

    பணியாளர்களுக்கு இடமளிக்க ஒரு குழு தொகுதி மற்றும் விபத்து ஏற்பட்டால் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு வசதியை நாங்கள் சேர்த்துள்ளோம். மின்னணு அமைப்பு, மூட்டுகள் மற்றும் முத்திரைகள் பலப்படுத்தப்பட்டன. மேலும் ராக்கெட்டை மிகவும் பயனுள்ளதாக மாற்ற மாற்றங்களைச் செய்தது. ககன்யான் ஏவுகணையை விஎஸ்எஸ்சி தயாரிக்கிறது. ககன்யான் தொகுதியை 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கு விஎஸ்எஸ்சி பொறுப்பாகும். பெங்களூருவில் விஎஸ்எஸ்சி இதற்கென பிரத்யேகமாக ஒரு மையம் உள்ளது. திட்டத்தின் 66 சதவீத பணிகள் விஎஸ்எஸ்சி-ல் செயல்படுத்தப்படுகிறது. பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்டால் பயன்படுத்த வேண்டிய பாதுகாப்பு தொகுதி சோதனை செய்யப்பட்டுள்ளது.

    2019-ல் சந்திரயான்-2 திட்டம் ஓரளவு தோல்வியடைந்தது. இதனால் சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்க முடியவில்லை. முந்தைய பணியிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன?

    சந்திரயான்-2 தரையிறக்கம் தோல்வி அடைந்தது. தோல்விக்கு வழிவகுத்த காரணிகள் பற்றிய தரவுகளை பெற்றோம். அதன்படி சந்திரயான் 3-ல் மாற்றங்களை செய்தோம். உந்துவிசை அமைப்பு, மென்பொருள் மற்றும் அல்காரிதம்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும் புதிய சென்சார்களை சேர்ந்துள்ளோம். சோலார் பேனலின் பரப்பளவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 2-ல் இருந்து கற்றுக்கொண்ட அனைத்து பாடங்களையும் நாங்கள் பயன்படுத்தினோம்.

    உந்துவிசை தொகுதிக்கு அடுத்ததாக லேண்டர் உள்ளது. இந்த லேண்டர் சந்திரயான் 2-ஐ விட 300 கிலோ கிராம் அதிக எடை கொண்டது. லேண்டரில் அதிக அவன செலுத்த உந்துவிசை தொகுதியின் எடையை விகிதாசாரமாக குறைத்தோம், மேலும் லேண்டரின் உந்துவிசை அமைப்பும் மாற்றப்பட்டுள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் மோதினாலும் பத்திரமாக தரையிறங்கும் வகையில் அதன் கால்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. லேண்டரின் தரையிறங்கும் வேகம் மற்றும் திசையை கண்காணிக்க சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. தவறுகளை சரி செய்துவிட்டதால் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

    சந்திரயான்-3 திட்டத்திற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள சந்திர சூழலை செயற்கையாக உருவாக்கியுள்ளீர்கள். அவை என்னவாக இருந்தன?

    த்ரஸ்டரை இயக்காமல் ஹெலிகாப்டரில் இருந்து லேண்டரை நிறுத்திவிட்டோம். சென்சார்கள் சரியாக வேலை செய்து தரவை அனுப்புகிறதா என்பதை நாங்கள் சோதித்தோம். பெங்களூருவில் செயற்கையான சூழல் உருவாக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் கிரேனில் இருந்து லேண்டரை நிறுத்திவிட்டு, த்ரஸ்டர்களை இயக்கினோம். இது சென்சார்கள் மற்றும் பிற செயல்பாடுகளை சோதிக்க இருந்தது. கூடுதலாக, லேண்டர் மற்றும் மென்பொருள்-வன்பொருள் அம்சங்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியுமா என்பதை நாங்கள் சோதித்தோம்.

    நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும்போது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னவாக இருக்கும்?

    நிலவில் இறங்குவது ஒரு சிக்கலான செயல். ஒரு விமானி தனது விமானம் தரையிறங்குவதைக் கட்டுப்படுத்துவார். குழ்நிலைக்கு ஏற்ப லேண்டரை கட்டுப்படுத்த யாரும் இல்லை. சென்சார்கள் மற்றும் பிற உபகரணங்களின் உதவியுடன் லேண்டர் தரையிறங்குகிறது. அதில் சவால்கள் உள்ளன. பூமியின் இருக்கும்போது ஏதாவது நடந்தால் மனித தலையீடு என்பது சாத்தியமாகும்.

    விண்வெளியில் லேண்டர் அல்காரிதம்கள் மற்றும் மென்பொருளின் உதவியுடன் நிலைமையை எதிர்கொள்கிறது. உந்துவிசை தொகுதியிலிருந்து லேண்டர் பிரிக்கப்பட்டவுடன், 4 உந்துதல் தீக்காயங்கள் லேண்டரை பாதுகாப்பாக தரையிறக்க அனுமதிக்க ஒரு எதிர்சக்தியை வழங்குகிறது. உந்துவிசை தொகுதி சந்திர மேற்பரப்பில் இருந்து 100 இலோமீட்டர் தொலைவில் லேண்டரை வழங்கும். மேலும் அது 30 கிலோ மீட்டர் வரை குறைக்கப்பட்டு படிப்படியாக தரையிறங்கும். முழு செயல்முறையும் பல கட்டங்களைக் கொண்டுள்ளது.

    லேண்டரை தரையிறக்கும்போது நீங்கள் கவனம் செலுத்தும் பகுதிகள் என்ன?

    லேண்டர் சந்திர மேற்பரப்பில் ஒரு சந்திர நாளுக்கு இருக்க வேண்டும். இது 14 நாட்களுக்கு சமம். சந்திரனின் ஒரு பகுதியில் சூரிய ஒளி 14 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். லேண்டர் முக்கியமாக சூரிய ஆற்றலைச் சார்ந்தது. மேலும் அது 14 நாட்களுக்கு மட்டுமே சூரிய சக்தியைப் பெறும். எனவே 14 நாட்களுக்குப் பிறகு போதுமான மின்சாரம் கிடைக்காது. லேண்டருக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்துள்ளோம். லேண்டர் 1.4 டன் எடை கொண்டது. தூசி மற்றும் பாறைகள் சந்திரனின் மேற்பரப்பை 5 முதல் 10 மீட்டர் வரை மூடுகின்றன.

    லேண்டர் தரை இறங்கும்போது, தூசியை கிளப்பும். சந்திரனின் ஈர்ப்பு விசை பூமியின் விசையில் 1/6 ஆகும். இதனால் தூசி படியை அதிக நேரம் ஆகும். தூசி படியும் வரை காத்திருக்க வேண்டும். தூசி படிந்தவுடன் லேண்டரின் வளைவு திறக்கப்பட்டு ரோவர் உருளும். 25 கிலோ எடை உள்ள ரோவரில் 2 பேலோடுகள் உள்ளன. அவை சந்திர மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் லேண்டரிடம் ஒப்படைக்கப்படும். ரோவர் பூமிக்கு தரவுகளை அனுப்ப இயலாது.

    நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிட்டுள்ளோம். அந்த பகுதியில் நீர்ச்சத்து இருப்பதால் விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர். சூரிய ஒளி மற்றும் வெப்பநிலை கூட பொருத்தமானது.

    லேண்டரில் உள்ள மற்ற பேலோடுகள் என்ன?

    உந்துவிசை தொகுதியில் ஷேப் எனப்படும் பேலோட் உள்ளது. லேண்டரை வெளியேற்றிய பிறகு உந்துவிசை தொகுதி சந்திர மேற்பரப்பில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றும். ஷேப் என்பது சந்திரனின் சுற்றுப்பாதையில் இருந்து பூமியை ஆய்வு செய்வதாகும். உயரமான சுற்றுப்பாதையில் இருந்து நாம் வாழும் கிரகம் பற்றிய தகவல்களை சேகரிக்க முடியும். சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை அடையாளம் காணவும் ஷேப் உதவும். இந்த ராக்கெட் சந்திரயானை 170x36000 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்லும். பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட சந்திரயான் அதன் 4 உந்துதல்களை எரிக்கும். பின்னர் அது சந்திரனின் ஈர்ப்பு விசைக்குள் நுழையும்.

    ஆகஸ்டில் சூரியனைக் கண்காணிக்க ஆதித்யா எல்-1 என்ற பணியைத் தொடங்குவோம். இதை அடைய பூமிக்கும், சூரியனுக்கும் இடையே 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த வேண்டும். அது பூமியின் ஈர்ப்பு விசைக்கு வெளியே இருக்க வேண்டும்.

    ×