search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    மெனோபாஸ் காலம் பெண்களுக்கு நிஜமாகவே சவாலானதாக? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? மனதளவில் எவ்வாறு தயாராக வேண்டும் என பார்க்கலாம்.
    பெண்களுக்கு 40 வயது தொடங்கும் போதே மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலமும் தொடங்கி விடுகிறது. மெனோபாஸ் காலம் பெண்களுக்கு நிஜமாகவே சவாலானதாக? அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? மனதளவில் எவ்வாறு தயாராக வேண்டும் என பார்க்கலாம்.

    மெனோபாஸ் காலம் எப்போது தொடங்கும்-

    பெண்களுக்கு 40 வயதில் இருந்து 55 வயதிற்குள் மெனோபாஸ் காலம் தொடங்குகிறது. மாதவிடாய் காலத்தில் இருக்கும் உடற்சோர்வும், மனச்சோர்வும்மெனோபாஸ் காலத்தில் தொடக்கத்தில் இருக்கும். இதை கடந்து வருவதும் அதற்கு தயாராக இருப்பதும் எளிதானதுததான். பயம், கொள்ள வேண்டாம் என்கிறார்கள் மருத்தவர்கள்.

    மெனோபாஸ் காலத்தில் என்ன நடக்கும்?

    பெண்கள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கருமுட்டை உருவாதல், மாதவிடாய் போன்ற செயல்பாடுகளில் முக்கயி பங்காற்றுகிறது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் சுரப்பு வெகுவாக குறைவதால் மேற்கண்ட செயல்கள் நிற்கத்தொடங்குகின்றன. இதனையே மெனோபாஸ் காலம் என்கிறோம்.

    இதன் மூலம் பெண்களுக்கு முடி உதிர்வு, உடல் எடை அதிகரித்தல், ரத்த சோகை, மூட்டுவலி, தூக்கமின்மை, இதய நோய்கள், எலும்புகள் அடர்த்தி குறைவது, சருமப்பிரச்சனைகள் போன்றவை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

    உணவுகளில் கவனம்

    கால்சியம் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் தேய்வதையும் உடைவதையும் தடுக்கலாம்.

    கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகள், எண்ணெணில் பொரித்த பதார்த்தங்களை தவிர்த்து நார்ச்சத்து புரதங்கள் நிறைந்த உணவுகள், பயிறு வகைகள் போன்றவற்றை உண்பது நன்மை தரும்.

    கீரை வகைகள், பழங்கள் உடல் சூட்டை தணிக்கும். இளநீர், நுங்கு போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துகொள்ள வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது முக்கியமானது.

    மனநலனும் முக்கியம்

    மெனோபாஸ் காலத்தில் எரிச்சல்இ கோபம், கவலை போன்ற எதிர்மறை உணர்புகள் வெளிப்படுவது இயல்பானது. இவற்றில் இருந்து விடுபடுவதற்கு எளிய உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடலாம்.

    பிடித்தமான செயல்களில் கவனம் செலுத்துவது, மனநல ஆலோசனைகள் பெறுவதும் முக்கியமானது. வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதும் மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதும் அவசியமானது.

    ஹார்மோன்களின் சுரப்பு சீராக அமையாதபோது உடலில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்திலும், கர்ப்பக்காலத்திலும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
    உடலில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக விளங்குவது ஹார்மோன்கள். இவை ரத்தத்தின் மூலமாக சமிக்ஞைகளை கொண்டு போய் உறுப்புகளுக்கு வழங்குபவையாகும். தகவல்களை கடத்தி உறுப்புகள் தங்கள பணியை ஒழுங்காக செய்வதற்கு தூண்டுவதால் இவற்றை வேதியியல் கடத்திகள் என்றும் அழைக்கிறோம். உடலில் உள்ள சுரப்பிகள் மூலம் ஹார்மோன்கள் சுரக்கப்பப்டுகின்றன.

    ஹார்மோன்களின் சுரப்பு சீராக அமையாதபோது உடலில் பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்திலும், கர்ப்பக்காலத்திலும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். மேலும் உடல் பருமன், முடி உதிர்தல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளும் சீரற்ற ஹார்மோன் சுரப்பால் ஏற்படுகின்றன. ஹார்மோன்களின் சுரப்பை சீராக்குவதற்கு எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.

    ஒரே வகையான சமையல் எண்ணெய்யை பயன்படுத்துவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், அவகோடா எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சுத்தமான நெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்தவற்றை பயன்படுத்தலாம். வைட்டமின் டி, ஏ, ஈ மற்றும் கே2 கொண்ட உணவுப்பொருட்கள், ஆளி விதை, சியா எனும் சப்ஜா விதை, நார்ச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் ஆகியவற்றை உட்கொள்வதால் உடலில் ஹார்மோன் சுரப்பை சீராக்கலாம். மேலும் பாதாம், வால்நட், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை ஹார்மோன்களின் சீரான இயக்கத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்களை கொண்டவையாகும்.

    ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் உணவுகளான ப்ராக்கோலி, முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்த்து கொளவ்து அவசியமாகும். இது பெண்களின் பருவகால வளர்ச்சிக்கும், மாற்றங்களுக்கும் உதவுகிற ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோனின் சீரான சுரப்புக்கு உதவும். மேலும் இந்த உணவுப்பொருட்களில் உள்ள கால்சியம், மாதவிடாய்க்கு முன் ஏற்படும் வலியை குறைக்கும்.

    பெண்களின் உடலில் ஹார்மோன்களின் சுரப்பை சீராக்குவதில் முக்கிய பங்கு வகிப்பது மக்னீசியம். அவகேடோ, பட்டாணி, சோயா பீன்ஸ், பூசணி விதைகள், முழு தானிய வகைகள் போன்றவற்றில் மக்னீசியம் நிறைந்ததுள்ளது. மஞ்சள், லங்கப்ட்டை தூள், சோம்பு மற்றும் இஞ்சி ஆகிய நான்கையும், நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தாலும் ஹார்மோன்கள் சீராக சுரக்கும்.
    குழந்தை பேறுக்கு முன் ஒரு பெண் தாங்க இயலாத துயரையும், குழந்தை பாக்கியம் பெற்ற பின் அளவில்லாத பெரு மகிழ்ச்சியையும் அடைகிறாள்.
    காரைக்குடி கவிதா கருத்தரிப்பு மையத்தின் டாக்டர் கவிதா ரமேஷ் கூறியதாவது:-

    இன்றைய சமுதாயத்தில் குழந்தையின்மை என்பது ஒரு பாவமாகவும், குறையாகவும், தவறாகவும் பார்க்கப்படுகிறது. குழந்தை பேறுக்கு முன் ஒரு பெண் தாங்க இயலாத துயரையும், குழந்தை பாக்கியம் பெற்ற பின் அளவில்லாத பெரு மகிழ்ச்சியையும் அடைகிறாள். அந்த மகிழ்ச்சியை அளிப்பதில் காரைக்குடி கவிதா கருத்தரிப்பு மையம் பெருமையும், நிறைவும் கொள்கிறது.

    கவிதா கருத்தரிப்பு மையம் காரைக்குடி என்ற சிறிய நகரில் பெரு நகரங்களில் வசிக்காத சிறு, குறு நகரம் மற்றும் கிராம மக்களுக்கும் இந்த ஐவிஎப், ஐசிஎஸ்ஐ போன்ற குழந்தையின்மைக்கான மேற்சிகிச்சை முறைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.

    எங்களது உண்மைத் தன்மை, வெளிப்படைத்தன்மை, துறை சார்ந்த அனுபவ அறிவு மற்றும் நோயாளிகளின் நலனில் சிறப்பு கவனம் போன்ற பண்புகளால் கவிதா கருத்தரிப்பு மையம் பல நாடுகளில் அறியப்பட்டு அங்கிருந்து சிகிச்சைக்காக வந்து பலரும் பலன் பெற்றுள்ளனர்.

    ஒவ்வொரு தம்பதியருக்கும் தலைமை மருத்துவரின் தனிப்பட்ட நேரடி மருத்துவ கவனிப்பால் தேவையற்ற பரிசோதனைகளையும், மருந்துகளையும் தவிர்த்து தேவையான வைத்திய முறைகளை மட்டும் உலக தரத்தில் கொடுப்பதனால் நாங்கள் எங்கள் மருத்துவமனையில் கருத்தரிப்பு சதவீதத்தில் அதிக வெற்றி வாய்ப்பை தொய்வின்றி தொடர்ந்து கொடுப்பதில் பெருமை கொள்கிறோம், கருவுற்ற பின் தொடர் கவனிப்பால் அந்தப் பெண் குழந்தை பிரசவிக்கும் வரை நாங்கள் அவர்களுக்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் நிற்கிறோம்.

    காரைக்குடி போன்ற சிறிய நகரத்தில் 900-க்கும் மேல் ஐவிஎப் மற்றும் ஐசிஎஸ்ஐ முறையில் குழந்தைகள் நலமாக பிறந்துள்ளன என்பதை தெரிவித்துக் கொள்வதில் எங்கள் மருத்துவமனை பெருமை கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாக்டர் கவிதா ரமேஷ்
    புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் புற்று நோய் நம்மை தாக்காமல் இருக்க, நாம் செய்ய வேண்டியது என்ன,, இதற்கான பிரத்தியேகமான பரிசோதனைகள் ஏதேனும் உள்ளனவா என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்..
    இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பக புற்றுநோய் என்பதும் தெரியவந்துள்ளது..இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகமாக காணப்பட்ட இந்நோய், தற்போது முப்பது வயதிலேயே வருகிறது. அதிலும் டெல்லி., சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம், புனே போன்ற பெரு நகரங்களை சேர்ந்த பெண்கள்தான் அதிகப்படியாக மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவதாக தகவல்களைத் தந்துள்ளது மருத்துவ ஆராய்ச்சி நிறுவன புள்ளிவிவரங்கள்.

    புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் புற்று நோய் நம்மை தாக்காமல் இருக்க, நாம் செய்ய வேண்டியது என்ன,, இதற்கான பிரத்தியேகமான பரிசோதனைகள் ஏதேனும் உள்ளனவா என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்..

    காரணங்கள்:

    உறவினர்களில்,குறிப்பாக தாய் அல்லது சகோதரிக்கு மார்பகப் புற்று நோய் இருந்தால் அந்த குடும்பத்து பெண்ணுக்கு இந்தப் புற்று நோய் வர வாய்ப்புகள் அதிகம் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன..அதேபோல் மிகச் சிறு வயதிலேயே பூப்படைவது, ஏதாவது உடல் நலக் கோளாறுகளுக்காக அதிக அளவில் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும்,உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, புகை மற்றும் மதுப் பழக்கம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஒவ்வாத மேற்கத்திய உணவு பழக்கங்கள், அதிக கொழுப்பு உணவுகள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் மார்பக புற்றுநோய்க்கு காரணங்களாக கூறப்படுகின்றது..

    தடுக்கும்வழிமுறைகள்:

    பெண்கள், மாதம் ஒருமுறையாவது தங்களது மார்புகளை தாங்களாகவே சோதனை செய்து கொள்ளும் ‘ சுய மார்பக பரிசோதனை’ அவசியமான ஒன்றாகும். பரிசோதனையின்போது,மார்பில் வீக்கம், மார்பக தோலில் அதீத சுருக்கம் ,மார்பகத்தில் ரத்தக் கசிவு போன்ற வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவேண்டும். அதன்பிறகு. ‘ மேமோகிராம்’ என்ற எக்ஸ்ரே டெஸ்ட் ஆனது குறைந்த அளவிலான கதிர் வீச்சின் மூலம் மார்பகத்தில் புதிதாகத் தோன்றும் மாற்றங்களைக் கண்டறிந்து விடும்..

    மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும்கூட, கட்டிகள் வருவதற்கான அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்களை இந்த பரிசோதனையானது காட்டிக்கொடுத்துவிடும். இதன் மூலம் நோய் வருமுன் கண்டறிந்து சிகிச்சை கொடுக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை ‘ மேமோகிராம்’ பரிசோதனையை செய்து கொள்வது அவசியம்..
    கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம், கோபம், பயம், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு ஏற்படும். தகுந்த ஆலோசனைகள் பெறுவதன் மூலம் இவற்றில் இருந்து வெளிவர முடியும்.
    கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான தருணமாகும். அதேசமயத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால், கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம், கோபம், பயம், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு ஏற்படும். தகுந்த ஆலோசனைகள் பெறுவதன் மூலம் இவற்றில் இருந்து வெளிவர முடியும்.

    வேலூரைச் சேர்ந்தவர் அனிதா பாரதி. ரசாயன பொறியியல் துறையில் பட்டப்படிப்பை முடித்து இருக்கிறார். பத்து வருட காலம் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்த இவரது வாழ்க்கை, முதல் குழந்தையை கருவில் சுமந்தபோது மாறியது. கர்ப்ப காலத்தில், குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றி தெரிந்து கொள்வதற்காக தனது தேடலை ஆரம்பித்தார். அதைத்தொடர்ந்து அவர் அறிந்து கொண்ட பல விஷயங்கள் அவரை ஆச்சரியப்படுத்தின.

    அவற்றை தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக குழந்தை பிறப்பு பயிற்சியாளருக்கான படிப்பை முடித்தார். 2018-ம் ஆண்டு தனது மையத்தைத் தொடங்கினார். அதன் மூலம் கர்ப்பிணிகளுக்கும், புதிதாக குழந்தை பெற்ற பெற்றோர்களுக்கும், குழந்தை பிறப்பு மற்றும் குழந்தை வளர்ப்பைப் பற்றி கற்பிக்கவும், ஊக்கம் கொடுக்கவும் ஆரம்பித்தார். இதுவரை இவரது வழிகாட்டுதல் மூலம் பலர்  பயனடைந்துள்ளனர். இதுகுறித்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் அனிதா பாரதி.

    “நான் இயற்கையான முறையில் தாய்மை அடைவது பற்றி பெண்களுக்கு விரிவான விளக்கங்களை வழங்குகிறேன். என்னுடைய நோக்கம், பெண்கள் இயற்கையான முறையில் மகப்பேறு பெற வேண்டும் என்பதுதான். கர்ப்ப காலம் மற்றும் பிரசவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு, பதற்றம் அடையாமல் தீர்வு காண்பது பற்றி அறிவுறுத்துகிறேன். தாய்மையடைந்த பெண்கள் மூன்றாவது மாதம் முதல் எட்டாவது மாதம் வரை எவ்வாறு செயல்பட வேண்டும்? கர்ப்ப காலத்தில் என்னென்ன உணவுகளைச் சாப்பிட வேண்டும்? கருவை சுமக்கும் காலத்தில் மனநிலையை எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும்? கர்ப்பிணியின் செயல்களால் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை அடைய இருக்கும் நன்மை மற்றும் தீமைகள் என்ன? கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய ஆசனங்கள் மற்றும் பயிற்சிகள் எவை? பிரசவம் எளிதாக நடைபெற என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றியும் கற்றுக் கொடுக்கிறேன்.

    குழந்தை வளர்ப்பு என்பது அற்புதமான கலை. அதை நாம் எப்படி கையாள வேண்டும்? அதாவது எப்படி தாய்ப்பால் கொடுக்க வேண்டும், தாய்ப்பால் போதுமான அளவு சுரக்க என்ன செய்ய வேண்டும்? குழந்தைகளுக்கு தேவையான சத்தான உணவு முறைகள், கற்பித்தல் முறைகள், குழந்தைகளின் மன எண்ணங்கள் பற்றி அறியவும்  பெற்றோர்களுக்கு கற்றுக் கொடுக்கிறேன். குழந்தை பிறந்தது முதல் 10 வயது ஆகும் வரை, நல்ல முறையில் வளர்க்க என்னென்ன செய்ய வேண்டும்? என ஆலோசனை அளிக்கிறேன்.

    கர்ப்ப காலத்தில் பெண்கள் எத்தகைய மனம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்?

    கர்ப்ப காலம் பெண்களின் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான தருணமாகும். அதேசமயத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளால், கர்ப்ப காலத்தில் மனஅழுத்தம், கோபம், பயம், பதற்றம், குழப்பம் போன்ற உணர்வுகள் பெண்களுக்கு ஏற்படும். தகுந்த ஆலோசனைகள் பெறுவதன் மூலம் இவற்றில் இருந்து வெளிவர முடியும்.
    திருமண வயதுடைய பெண்களில் ஐம்பத்தி இரண்டு சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்..ரத்த சோகைக்கான முதன்மை காரணம் இரும்புச்சத்து குறைபாடு.
    உலக அளவில் 800 மில்லியனுக்கும் அதிகமான பெண்களை ரத்தசோகை நோய் பாதிக்கிறது என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன..இந்தியாவில், இது ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில், திருமண வயதுடைய பெண்களில் ஐம்பத்தி இரண்டு சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்..ரத்த சோகைக்கான முதன்மை காரணம் இரும்புச்சத்து குறைபாடு.

    ரத்த சோகை அறிகுறிகள்:

    மிகுந்த சோர்வு, பலவீனம், வெளிறிய தோல், மார்பு வலி, வேகமான இதயத்துடிப்பு அல்லது மூச்சுத் திணறல், தலைவலி, தலைசுற்றல், கை கால்களில் சில்லென்ற உணர்வு, நாக்கில் புண் அல்லது வீக்கம், பலமற்ற உடையக்கூடிய நகங்கள், பசியற்ற உணர்வு..இதுபோன்ற பிரச்சனைகளில் ஏதாவது ஒன்று இருந்தாலும் உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தடுக்கும் வழிமுறைகள்:

    இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் ரத்தசோகை நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும்..இறைச்சி, கடல் உணவு, பீன்ஸ்,அடர் பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள் கீரைகள் , திராட்சை மற்றும் ஆப்ரிகாட் போன்ற உலர்ந்த பழங்கள், இரும்பு செறிவூட்டப்பட்ட தானியங்கள்..உங்கள் உடல் மற்ற மூலங்களிலிருந்து பெறுவதைவிட இறைச்சியிலிருந்து அதிக அளவு இரும்புச் சத்தை உறிஞ்சுகிறது.. நீங்கள் இறைச்சி சாப்பிடாதவராக இருக்கும் பட்சத்தில் தாவர அடிப்படையிலான உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டியிருக்கும். ஆரஞ்சு பழச்சாறு போன்ற சிட்ரஸ் பழச்சாறுகளில் உள்ள வைட்டமின் சி, உணவில் உள்ள இரும்புச்சத்தை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உங்கள் உடலுக்கு உதவுகிறது.ப்ராக்கோலி, திராட்சைப்பழம், கிவி, கீரைகள், முலாம் பழங்கள், ஆரஞ்சு, மிளகு, ஸ்ட்ராபெரி மற்றும் தக்காளியில் வைட்டமின் ‘சி’ ஆனது காணப்படுகின்றது..
    இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தையை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பைக் கொடுத்திருப்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரம்.
    இன்றைய சூழலில், அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச் சினைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நவீன வாழ்க்கை முறையே!

    நவீன வாழ்க்கை எந்த அளவிற்கு நமக்கு வாழ்க்கை சூழலை வசதியாகவும், சுலபமாகவும் ஆக்கி இருக்கிறதோ, அந்த அளவிற்கு எதிர்மறை விளைவுகளையும் தந்துள்ளது.

    வாழ்க்கை முறை என்று எடுத்துக் கொண்டால், நம் தாத்தா, பாட்டிகள் வாழ்ந்த காலத்தைப் போல அமைதியான வாழ்க்கை முறையோ சூழ்நிலையோ இன்று இல்லை. காரணம் இன்றைய சூழ்நிலையில், ஆண், பெண் இருவரும் பொருளாதார தேவைக்காக வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவில் காலம் கடந்து உறக்கத்திற்கு செல்லும் அவர்களுக்கு, இயற்கையான, இயல்பான உடலுறவு குறைய வாய்ப்புள்ளது. சில குடும்பங்களில் ஆண் வெளிநாடுகளிலும், பெண் ஒரு ஊரிலும் இருந்து கொண்டு, வருடத்திற்கு ஒரு மாதமோ, இரண்டு மாதமோ சேர்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அப்படி இருக்கும் பொழுதும் குடும்ப பிரச்சினைகளை கவனிக்க வேண்டி இருப்பதால், மனஅழுத்தமான வாழ்க்கை முறைக்கே தள்ளப்படுகிறார்கள். ஆக நவீன வேகம் நிறைந்த வாழ்க்கை முறை அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக ஆணுக்கும், பெண்ணுக்கும் குழந்தை பெறும் தன்மை குறைந்து கொண்டே வருகிறது என்பதே உண்மை.

    இன்றைய நவீன உணவுப் பழக்கமும் வாழ்வு முறையைப் போலவே, துரித உணவுகளாகவும், ரெடிமேடாகவும் மாறி வருகிறது. நேரத்திற்கு ஏற்றவாறும் சீதோஷ்ண பருவ மாற்றங்களுக்கு தகுந்தவாறு உண்ணப்பட்ட நமது பாரம்பரிய உணவுமுறை, இப்பொழுது இல்லை. இயற்கையான காய்கறி, பழங்களைக் காட்டிலும் பதப்படுத்தபட்ட ரசாயனம் கலந்த உணவுகள் இன்று வழக்கத்திற்கு வந்து விட்டது. அவற்றை சமைப்பதை எளிதாக கருதுகிறார்கள். அதேபோல் உடனடியாக சமைக்ககூடிய, எண்ணெயில் பொறிக்கக் கூடிய ரெடிமேட் மசாலா, ரெடிமேட் உணவு வகைகள் போன்றவை உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாக இருக்கிறது. மொத்தத்தில் இவ்வகை உணவு வகைகளால் ஏற்படும் உடல்பருமன், ரத்தத்தில் அதிகரிக்கும் கொழுப்பு சத்துக்களால், ஆண், பெண் இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.

    முறையான திட்டமிடல், முறையான எளிய உடற்பயிற்சி இருபாலருக்கும் வேண்டும். பெண்களுக்கு திருமண வயது 30-ஐ கடக்கும் போது, இயற்கையாகவே மையோமா என்ற கருப்பைக் கட்டி, எண்டோமெட்ரியமா ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண வயது 30-ஐ கடக்கும் போது, மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

    இன்றைய விஞ்ஞான வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தையை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பைக் கொடுத்திருப்பது மனித சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரம். நாம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது நம் கையில் தான் உள்ளது. அதாவது பெண் 21 வயது முதல் 35 வயதிற்குள் கருத்தரித்தல் என்பது ஏற்ற வயதாகும். திருமணமாகி 2 முதல் 3 வருடங்களில் குழந்தைபேறு இல்லையெனில் தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம். தற்பொழுது அதிநவீன தொழில் நுட்பங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் வந்துள்ளன. அதனால் காலதாமதமின்றி மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டு பயன்பெறுங்கள். அமைதியான வாழ்க்கைமுறை, இயற்கையான உணவுமுறை மற்றும் எளிய சீரான உடற்பயிற்சி இருந்தால் குழந்தையில்லா தம்பதியினருக்கு மழலை எனும் மகத்தான செல்வம் கிடைக்கும்.

    டாக்டர்.டி.செந்தாமரைச்செல்வி, பாலாஜி கருத்தரித்தல் மையம்.
    உண்மையான ‘பிரசவ வலிக்கும், பொய்யான வலிக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. உங்களுக்கு வந்துள்ளது பொய் வலிதான் என்பதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். அவை பின்வருமாறு
    சில நேரங்களில் பொய் வலிக்கும், உண்மையான வலிக்கும் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது கடினமாகும். பிரசவ நேரத்தில் சிலருக்கு ‘பொய் வலி’ வரும். உண்மையான ‘பிரசவ வலிக்கும், பொய்யான வலிக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. உங்களுக்கு வந்துள்ளது பொய் வலிதான் என்பதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம். அவை பின்வருமாறு,

    1. கர்ப்பப்பை சுருங்கி விரிதலின் இடைவெளி

    உண்மை வலி: உண்மையான வலியானது 30-60 வினாடிக்கு ஒரு முறை வரும். அதே போல நேர இடைவெளியும் ஒரே சீராக இருக்கும். நேரம் அதிகமாக அதிகமாக வலி குறையும்.
    பொய் வலி: பொய் வலியானது உண்மை வலி போல ஒரே சீரான இடைவெளியில் இருக்காது. பொய் வலியானது எப்போதாவது வந்து போகும்.

    2. வெளியேற்றம்

    உண்மை வலி: பிறப்புறுப்பில் இருந்து கெட்டியான திரவம் வெளியேறும். மேலும் அதனுடன் ரத்த துளிகளும் கலந்திருக்கும்.
    பொய் வலி: மேற்சொன்ன எந்த நிகழ்வும் பொய் வலியின் போது ஏற்படாது.

    3. வயிற்றின் அசைவில் மாற்றம்:

    உண்மை வலி : நடந்தாலோ, உட்கார்ந்தலோ, கர்ப்பையின் சுருங்கி விரிதல் தன்மையின் இடைவெளி குறையாது.
    பொய் வலி : நடக்க ஆரம்பித்தாலோ, அல்லது உட்கார்ந்தாலோ கர்ப்ப பை சுருங்கி விரிவது நின்று விடும்.

    4. கர்ப்பபை சுருங்கி விரிதலின் வலிமை

    உண்மை வலி : உண்மை வலியின் போது சுருங்கி விரிதலின் வலிமை அதிகரித்து கொண்டே இருக்கும்.
    பொய் வலி : நேரம் செல்ல செல்ல வலிமையடையாது.

    5. வலி :

    உண்மை வலி : உண்மை வலியானது இடுப்பின் பின்புறத்தில் உணரப்பட்டு பின் முன்புறம் வரும். மேலும் இந்த வலியானது மேலும் கீழும் நகர்ந்து கொண்டே இருக்கும்.
    பொய் வலி : பொய் வலியானது அடிவயிற்றின் முன்பக்கம் மட்டுமே தெரியும்.
    உலக அளவில் வருடத்துக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
    பெண்களை அதிக அளவில் தாக்கும் மற்றொரு நோய் கருப்பை வாய் புற்றுநோய் ஆகும். ஒவ்வொரு நாளும் இந்தியாவில் இருநூறு பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உலக அளவில் வருடத்துக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் இந்த புற்றுநோயால் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

    அறிகுறிகள்:

    * மாதவிடாயின்போது அதிக ரத்தம் வெளியேறுதல்

    * வெள்ளைப்படுதல்

    * இடுப்பு, முதுகு, கால்களில் கடுமையான வலி

    * வாந்தி

    * அதிக சோர்வு.

    நோய் கண்டறிதல்- சிகிச்சை:

    பாப்ஸ்மியர் சோதனை மூலமாக புற்றுநோய்க்கு முந்தைய நிலையை கண்டறிந்து, அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கலாம்.

    தடுப்பு மருந்துகள்:

    இந்தத் தடுப்பு மருந்துகள், ஒன்பது முதல் பதிமூன்று வயதுள்ள சிறுமிகளுக்கு கொடுப்பதன் மூலம் கருப்பை வாய்ப்புற்றுநோய் வராமல் காப்பாற்ற முடியும்.

    கர்ப்பப்பை வாய்ப்புற்று நோயிலிருந்து தப்பிக்க சில யோசனைகள்:

    * தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    * அதிக அமிலத்தன்மை உடைய உணவுகளை தவிர்க்க வேண்டும். ஒமேகா 3, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    * குழந்தைப்பேற்றுக்கு மத்தியில் போதிய இடைவெளி இருக்க வேண்டும்.

    * பிறப்புறுப்பை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாதவிடாயின்போது சானிட்டரி நாப்கின்களை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

    * கழிப்பறை மற்றும் வசிக்கும் இடத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.
    டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம், புனே போன்ற பெரு நகரங்களை சேர்ந்த பெண்கள்தான் அதிகப்படியாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
    இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பக புற்றுநோய் என்பதும் தெரியவந்துள்ளது. இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகமாக காணப்பட்ட இந்நோய், தற்போது முப்பது வயதிலேயே வருகிறது. அதிலும் டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம், புனே போன்ற பெரு நகரங்களை சேர்ந்த பெண்கள்தான் அதிகப்படியாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தகவல்களைத் தந்துள்ளது மருத்துவ ஆராய்ச்சி நிறுவன புள்ளிவிவரங்கள்.

    புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் புற்றுநோய் நம்மை தாக்காமல் இருக்க, நாம் செய்ய வேண்டியது என்ன, இதற்கான பிரத்தியேகமான பரிசோதனைகள் ஏதேனும் உள்ளனவா என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்..

    காரணங்கள்:

    உறவினர்களில், குறிப்பாக தாய் அல்லது சகோதரிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தால் அந்த குடும்பத்து பெண்ணுக்கு இந்தப் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதேபோல் மிகச் சிறு வயதிலேயே பூப்படைவது, ஏதாவது உடல் நலக்கோளாறுகளுக்காக அதிக அளவில் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, புகை மற்றும் மதுப்பழக்கம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ஒவ்வாத மேற்கத்திய உணவு பழக்கங்கள், அதிக கொழுப்பு உணவுகள் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் மார்பக புற்றுநோய்க்கு காரணங்களாக கூறப்படுகின்றது.

    தடுக்கும் வழிமுறைகள்:

    பெண்கள் மாதம் ஒருமுறையாவது தங்களது மார்புகளை தாங்களாகவே சோதனை செய்து கொள்ளும் ‘சுய மார்பக பரிசோதனை’ அவசியமான ஒன்றாகும். பரிசோதனையின்போது, மார்பில் வீக்கம், மார்பக தோலில் அதீத சுருக்கம், மார்பகத்தில் ரத்தக்கசிவு போன்ற வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவேண்டும். அதன்பிறகு. ‘மேமோகிராம்’ என்ற எக்ஸ்ரே டெஸ்ட் ஆனது குறைந்த அளவிலான கதிர் வீச்சின் மூலம் மார்பகத்தில் புதிதாகத் தோன்றும் மாற்றங்களைக் கண்டறிந்து விடும்.

    மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும்கூட, கட்டிகள் வருவதற்கான அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்களை இந்த பரிசோதனையானது காட்டிக்கொடுத்துவிடும். இதன் மூலம் நோய் வருமுன் கண்டறிந்து சிகிச்சை கொடுக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை ‘மேமோகிராம்’ பரிசோதனையை செய்து கொள்வது அவசியம்.

    இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் ரத்தசோகை நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
    உலக அளவில் 800 மில்லியனுக்கும் அதிகமான பெண்களை ரத்தசோகை நோய் பாதிக்கிறது என்று கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இந்தியாவில், இது ஒரு பெரிய பொது சுகாதார பிரச்சனையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஏனெனில், திருமண வயதுடைய பெண்களில் ஐம்பத்தி இரண்டு சதவீதம் பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்த சோகைக்கான முதன்மை காரணம் இரும்புச்சத்து குறைபாடு.

    ரத்த சோகை அறிகுறிகள்:

    மிகுந்த சோர்வு, பலவீனம், வெளிறிய தோல், மார்பு வலி, வேகமான இதயத்துடிப்பு அல்லது மூச்சுத் திணறல், தலைவலி, தலைசுற்றல், கை கால்களில் சில்லென்ற உணர்வு, நாக்கில் புண் அல்லது வீக்கம், பலமற்ற உடையக்கூடிய நகங்கள், பசியற்ற உணர்வு. இதுபோன்ற பிரச்சனைகளில் ஏதாவது ஒன்று இருந்தாலும் உடனடியாக டாக்டரிடம் சென்று அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்வதுடன் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தடுக்கும் வழிமுறைகள்:

    இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதன் மூலம் ரத்தசோகை நோய் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இறைச்சி, கடல் உணவு, பீன்ஸ், அடர் பச்சை நிறத்தில் இருக்கும் காய்கறிகள் கீரைகள், திராட்சை மற்றும் ஆப்ரிகாட் போன்ற உலர்ந்த பழங்கள், இரும்பு செறிவூட்டப்பட்ட தானியங்கள். உங்கள் உடல் மற்ற மூலங்களிலிருந்து பெறுவதைவிட இறைச்சியிலிருந்து அதிக அளவு இரும்புச்சத்தை உறிஞ்சுகிறது.

    நீங்கள் இறைச்சி சாப்பிடாதவராக இருக்கும்பட்சத்தில் தாவர அடிப்படையிலான உணவுகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டியிருக்கும். ஆரஞ்சு பழச்சாறு போன்ற சிட்ரஸ் பழச்சாறுகளில் உள்ள வைட்டமின் சி, உணவில் உள்ள இரும்புச்சத்தை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உங்கள் உடலுக்கு உதவுகிறது. ப்ராக்கோலி, திராட்சைப்பழம், கிவி, கீரைகள், முலாம் பழங்கள், ஆரஞ்சு, மிளகு, ஸ்ட்ராபெரி மற்றும் தக்காளியில் வைட்டமின் ‘சி’ ஆனது காணப்படுகின்றது.
    பாதாம், பேரீச்சம்பழம், அக்ரூட் போன்ற உலர் பழங்களை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.
    நீர்க்கட்டி ஏற்படுவது என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு.

    உட்கொள்ள வேண்டிய உணவுகள்:

    * முட்டைகோஸ், காலிஃபிளவர், காளான்,பீன்ஸ், தக்காளி, வெண்டைக்காய், பூசணி, வாழைப்பூ, வாழைத்தண்டு, கோவக்காய் ப்ராக்கோலி போன்ற அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் அனைத்து வகையான கீரைகளை அன்றாட உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    * பப்பாளி, கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, கிரணி, செர்ரி,ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் மற்றும் சிறிதளவு மாதுளை.

    * முளைக்கட்டிய பயறு, பருப்பு வகைகள், கடலை வகைகள்.

    * பாதாம், பேரீச்சம்பழம், அக்ரூட் போன்ற உலர் பழங்களை அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

    * கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட பனீர், தயிர், நீர் மோர்.

    * கைக்குத்தல் அரிசி, பழுப்பு அரிசி, ஓட்ஸ், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு போன்ற சிறுதானியங்கள், கோதுமை மற்றும் பார்லி.

    * சிறிதளவு சிக்கன் அல்லது மீன் வாரத்தில் இரண்டு நாட்களும் , தினமும் ஒரு முட்டை எடுத்துக் கொள்ளலாம்.

    தவிர்க்க வேண்டிய உணவுகள்:

    * மைதா, சர்க்கரை, பிரெட், ரீஃபைன்ட் ஓட்ஸ் மற்றும் ரீஃபைன்ட் கோதுமை.

    * கொழுப்புள்ள பால், தயிர், சீஸ் மற்றும் வெண்ணெய்.

    * மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், பச்சை வாழைப்பழம்.

    * கிழங்கு வகைகள்.

    * முந்திரி, திராட்சை, பிஸ்தா பாக்கெட் பழ ஜூஸ், அனைத்து வகை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் பேக்கரி உணவுகள்.

    * எண்ணெயில் பொரித்த உணவு வகைகள்.

    * பதப்படுத்தப்பட்ட அசைவ மற்றும் சைவ உணவுப் பொருட்கள்.

    உணவுப் பழக்கத்தில் இவற்றை பின்பற்றுவதுடன் உடற்பயிற்சியையும் தினசரி வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தினமும் நாற்பது நிமிட விறுவிறுப்பான நடைபயிற்சி போதுமானதாகும். இதுபோன்ற கருப்பை நீர்க்கட்டி பிரச்சனைகளுக்கு ஆங்கில மருத்துவத்தைப் போலவே மாற்று மருத்துவத்திலும் மிகச் சிறந்த தீர்வு உள்ளதாக கூறப்படுகிறது.

    பிசிஓடி என்பது ஒரு நோயல்ல. மரபணு குறைபாடுகளால் ஏற்படும் பிரச்சனை. இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வைத் தேடுவதும் அவற்றை சரி செய்து கொள்வதும் முழுக்க முழுக்க நம் கைகளில் தான் இருக்கின்றது என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது அலுவலகத்துக்கு செல்லும் பெண்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய உடலை கவனித்துக்கொள்வதற்கு என்று சிறிது நேரத்தை ஒதுக்கி கவனித்துக் கொள்ளும் பொழுது தம்முடைய உடல்நலம் மட்டுமல்லாமல் குடும்பத்தின் நலனும் பாதுகாக்கப்படுகிறது.


    ×