search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பக புற்றுநோய் என்பதும் தெரியவந்துள்ளது..
    இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பக புற்றுநோய் என்பதும் தெரியவந்துள்ளது.. இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகமாக காணப்பட்ட இந்நோய், தற்போது முப்பது வயதிலேயே வருகிறது.

    பெண்களை அதிக அளவில் தாக்கும் மற்றொரு நோய் கருப்பைவாய் புற்று நோய் ஆகும்.ஒவ்வொரு நாளும் இந்தியாவில் இருநூறு பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உலக அளவில் வருடத்துக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பெண்கள் இந்த புற்றுநோயால் இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

    அறிகுறிகள்:

    * மாதவிடாயின் போது அதிக ரத்தம் வெளியேறுதல்

    * வெள்ளைப்படுதல்

    * இடுப்பு, முதுகு,கால்களில் கடுமையான வலி

    * வாந்தி

    * அதிக சோர்வு.

    நோய் கண்டறிதல்- சிகிச்சை:

    பாப்ஸ்மியர் சோதனை மூலமாக புற்றுநோய்க்கு முந்தைய நிலையை கண்டறிந்து, அதற்கு தகுந்த சிகிச்சை அளிக்கலாம்..

    தடுப்பு மருந்துகள் :

    இந்தத் தடுப்பு மருந்துகள்,ஒன்பது முதல் பதிமூன்று வயதுள்ள சிறுமிகளுக்கு கொடுப்பதன் மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் காப்பாற்ற முடியும்..

    கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து தப்பிக்க சில யோசனைகள்:

    * தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    * அதிக அமிலத்தன்மை உடைய உணவுகளை தவிர்க்க வேண்டும். ஒமேகா 3, பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

    * குழந்தைப் பேற்றுக்கு மத்தியில் போதிய இடைவெளி இருக்க வேண்டும்.

    * பிறப்புறுப்பை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்..மாதவிடாயின் போது சானிட்டரி நாப்கின்களை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

    * கழிப்பறை மற்றும் வசிக்கும் இடத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்.
    பெண்களுக்கு யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் லேசர் முறைகள், வேக்சிங் செய்தல் போன்றவற்றால் சருமம் சிவந்து போய் அரிப்புடன் காணப்படும்.
    பொதுவாக பெண்கள் கெமிக்கல் நிறைந்த வெஜினல் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அதிலுள்ள ஆல்கஹாலால் அரிப்பு, எரிச்சல், வறட்சி ஏற்படுதல், நாப்பின்களால் அரிப்பு, அந்த பகுதியில் ஏற்படும். அதிகப்படியான வியர்த்தல், உடல் பருமன் போன்றவற்றால் அந்தரங்கப்பகுதியில் அரிப்பு ஏற்படுகின்றது.

    இதற்கு மேலும் பல காரணிகள் சொல்லப்படுகின்றது. குறிப்பாக பெண்களுக்கு யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் லேசர் முறைகள், வேக்சிங் செய்தல் போன்றவற்றால் சருமம் சிவந்து போய் அரிப்புடன் காணப்படும்.

    இதனை போக்க கண்ட கண்ட கிரீம்களை தான் போட வேண்டும் என்ற அவசியமில்லை. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தினால் போதும்.

    கொஞ்சம் தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட சருமத்தில் ஒரு இரண்டு தடவை என போட்டு வந்தால் போதும் யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பு எல்லாம் காணாமல் போகும்.

    ஓட்ஸ் உடன் 1 டேபிள் ஸ்பூன் சூடான நீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

    1 டீஸ்பூன் பட்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இது ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்.

    வேப்பிலையில் அல்கலைடு இருப்பதால் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி வைரல் தன்மை கொண்டுள்ளது. எனவே இதை சருமத்திற்கு வெளியேவும் உள்ளேயும் கூட பயன்படுத்தலாம்.

    யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பை போக்க ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு திரும்பவும் செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

    கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

    வேறு வழிகள்

    இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து நல்ல காற்றோட்டமான ஆடைகளை அணியுங்கள்.
    குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்புப் பகுதியில் கொஞ்சம் பேபி பவுடர் போட்டுக் கொள்ளுங்கள்.
    நன்றாக அந்தப் பகுதியை உலர்த்தி விடுங்கள்.
    உடலுறவின் போது உராய்வு ஏற்படாமல் இருக்க எண்ணெய் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
    கோடை காலத்தில் ரொம்ப தூரம் நடந்து செல்லாதீர்கள்.
    ஈரமான துணியை வெகுநேரம் அணியாதீர்கள்.
    பிறப்பிறுப்பில் முடிகளை நீக்கும்போது கவனமாக எடுங்கள்.
    மாதவிடாய் சுழற்சியில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் மாதவிடாய் சுழற்சியில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
    பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்து அலட்சியமாக இருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. வீட்டு நிர்வாகம், வேலை என இரட்டை பொறுப்பை சுமக்கும் பெண்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். வயது அதிகரிக்கும்போது முன்பை விட உடல் பலவீனம் அடைந்துவிடும் என்பதை கருத்தில் கொள்ளாமல் அசட்டையாக இருந்துவிடுகிறார்கள்.

    நீடித்த தலைவலி, அடிக்கடி ஏற்படும் உடல் வலி, உடல் சோர்வு, சருமத்தில் ஏற்படும் மாற்றங்கள், உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை சாதாரணமாக தோன்றும் சில அறிகுறிகளாகும். அவற்றை புறக்கணிப்பது நாளடைவில் கடும் உடல் நல பிரச்சினைகளை உண்டாக்கிவிடும். அதற்கு இடம் கொடுக்காமல் பெண்கள் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சில அறிகுறிகள் பற்றி பார்ப்போம்.

    மூச்சுத்திணறல்:

    அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. சுவாசிப்பதற்கு கடினமாக இருப்பதாக உணர்ந்தால், அது தீவிரமான அறிகுறியாகும். திடீரென்று மாரடைப்பு ஏற்படுவதற்கு அது காரணமாக அமையலாம். மார்பு வலியும் சேர்ந்து இருந்தால், நுரையீரல் நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். அதனால் அலட்சியம் செய்யக்கூடாது. சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டால் உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது ஆவசியமானது.

    மார்பு வலி:

    இதயம் வேகமாக துடிப்பது, மார்பில் வலி ஏற்படுவது, அடிக்கடி கை வலி, தோள்பட்டை வலியால் அவதிப்படுவது, மூச்சுத் திணறல் பாதிப்பை எதிர்கொள்வது இவையாவும் இதயத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணமாக அமையலாம். இதயத்தில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனி எனும் குழாய் நாளங்களில் அடைப்போ, சிதைவோ ஏற்பட்டால் கடும் பாதிப்புகள் உண்டாகும். ஆண்களை விட பெண்களுக்குத்தான் இத்தகைய பாதிப்புகள் அதிகம் நேரும்.

    திடீர் பலவீனம்:

    கை, கால்கள், முகம் போன்ற பகுதிகள் திடீரென்று பலவீனமாக இருப்பதாக உணர ஆரம்பித்தால், அது பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். நடைப்பயிற்சி செய்வதில் சிரமம், மங்கலான பார்வை, மனக் குழப்பம், கவனக்குறைவு, பேச்சில் தெளிவின்மை போன்ற சமிக்ஞைகளும் பக்கவாதத்திற்கு வித்திடும். ஆரம்ப நிலையிலேயே இதனை தடுக்க உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்:

    மாதவிடாய் சுழற்சியில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்படுவது இயல்பானது. ஆனால் மாதவிடாய் சுழற்சியில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மாதவிடாய் காலத்தில் கடும் வலி, அதிக உதிரப்போக்கு போன்ற பிரச்சினையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கருப்பையில் நீர்க்கட்டிகள் உள்ளிட்ட கருப்பை தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். எனவே மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது முக்கியமானது.

    சருமத்தில் ஏற்படும் மாற்றம்:

    தோல் கருமையாதல், புதிய மருக்கள் தோன்றுதல், மச்சம் அதிகரித்தல் உள்பட சருமத்தில் ஏற்படும் மாற்றங்களும் எச்சரிக்கை அறிகுறிகளை வழங்கக்கூடியவை.

    ஏதேனும் உடல்நல பிரச்சினை ஏற்படும்போது சருமமும் பாதிக்கப்படும். இந்த அறிகுறிகள் நீரிழிவு நோய் மற்றும் சரும நோய் பிரச்சினைகளுக்கு ஆரம்ப நிலையாக இருக்கலாம். ஆதலால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது.

    எடையில் திடீர் மாற்றம்:

    திடீர் உடல் எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு பிரச்சினையை எதிர்கொண்டால் உடலில் ஏதோ பாதிப்பு நிகழப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், திடீர் எடை அதிகரிப்பு தைராய்டு மற்றும் நீரிழிவு நோக்கான சமிக்ஞையாக அமையும். இதேபோல் கல்லீரல் நோய், சிறுநீரக நோய், வளர்சிதை மாற்றத்தில் கோளாறு, புற்றுநோய் காரணமாக திடீரென உடல் எடையை இழக்க நேரிடும். நீண்ட காலமாக உணவு முறை, உடற்பயிற்சி வழக்கத்தை மாற்றாத சூழலிலும் உடல் எடையில் மாற்றங்களை சந்தித்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.

    மார்பகத்தில் கட்டி:

    சுய மார்பக பரிசோதனை மேற்கொள்வது மார்பக புற்றுநோயை தடுக்க உதவும் சிறந்த வழிமுறையாக கருதப்படுகிறது. மார்பு தசைகளில் கட்டிகளோ, தோலில் மாற்றமோ தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுவது அவசியமானது. இவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

    தூக்கம் மற்றும் குறட்டை:

    வழக்கமாக தூங்கும் நேரத்தை விட கூடுதலாக தூங்கினாலோ, பகல் பொழுதிலும் அடிக்கடி தூங்கி எழுவதற்கு விரும்பினாலோ, குறட்டை பழக்கம் புதிதாக தொற்றிக்கொண்டாலோ அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தூங்கும்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அது காலப்போக்கில் இதய நோய்களுக்கு வழிவகுத்துவிடும்.

    மன அழுத்தம்-பதற்றம்:

    இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது. ஆனால் அதிகப்படியான மன அழுத்தத்துடன் பதற்றத்தை எதிர்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆதலால் மன அழுத்தம் நீண்ட நேரம் நீடிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். அசவுகரியமான சூழலையோ, அறிகுறிகளையோ உணர்ந்தால் அதனை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். பெண்களை பொறுத்தவரை தங்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்தால்தான் குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
    பெண்கள் அனைவரும் பொதுவாகவே அந்தரங்க உறுப்புகளில் ரோமங்கள் இருப்பதை விரும்ப மாட்டார்கள். மாதவிடாய் முடிந்து ஒருவாரத்திற்கு பிறகே அந்தரங்க பாகங்களில் வாக்ஸ் செய்வது நல்லது.
    அந்தரங்க உறுப்புகளில் வளரும் முடிகளை அகற்ற பல வழிமுறைகளை பெண்கள் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஷேவிங், வாக்ஸிங், சுகரிங், எலெக்ட்ரோலைசிஸ், லேசர் மற்றும் கிரீம் போன்று பலவற்றை செய்கிறார்கள். இதில் சிலது பார்லர், ஸ்பா மற்றும் காஸ்மெடால ஜிஸ்டிடம் செய்யப்படும். ஒருமுறை கூட வாக்ஸ் செய்யாதவர்களுக்கும், செய்து நெடுநாட்கள் ஆனவர்களுக்கும் முதலில் எலெக்ட்ரி ரேசர் அல்லது கத்திரிக்கோல் கொண்டு முடிகளை வெட்டிவிட வேண்டும்.

    தொடையின் மேல்புறத்தில் பேட்ச் பரிசோதனைக்கு பிறகே பிகினி வாக்ஸ் செய்யப்படும். நமக்கு ஒவ்வாமை ஏதேனும் இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளதான் இந்த பரிசோதனை. நம் உடலிலே மிக முக்கியமான பகுதி என்பதால் வாக்ஸிங் செய்யும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பிகினி வாக்ஸ் செய்யும்போதும் செய்தபிறகும் பல நிமிடங்களுக்கு அங்கு வலியுடன் கூடிய வீக்கம் இருக்கும். உடலின் மற்ற இடங்களில் பயன்படுத்தும் வாக்ஸை நாம் பிகினி வாக்ஸுக்கு பயன்படுத்த முடியாது. ஏனென்றால் அங்குள்ள ரோமம் அடர்த்தியாக இருக்கும். ஆதலால் பீஸ் வாக்ஸ் மற்றும் டால் ஆயில் கொண்டு தயார் செய்யப்படும் வாக்ஸால் மட்டுமே ரோமங்களை அகற்ற முடியும்.

    எப்போதுமே மாதவிடாய் முடிந்து ஒருவாரத்திற்கு பிறகே அந்தரங்க பாகங்களில் வாக்ஸ் செய்வது நல்லது. மாதவிடாய்க்கு முன்பும், மாதவிடாய் காலத்திலும் செய்தோமானால் அதீத வலி உண்டாகும் என்பதால் அந்நாட்களில் தவிர்ப்பது நல்லது. மேலும் வாக்ஸிங் செய்வதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு ஷேவ் செய்யக்கூடாது. பெண்கள் அனைவரும் பொதுவாகவே அந்தரங்க உறுப்புகளில் ரோமங்கள் இருப்பதை விரும்ப மாட்டார்கள்.

    ஷேவ் செய்யும்போது ஏற்படும் சில காயங்களால் எளிதில் பாக்டீரியா, வைரஸ்களால் சில தொற்று நோய்கள் எளிதில் உடலுக்குள் ஊடுருவி விடும். ஷேவ் செய்வதற்கு பதிலாக ட்ரிம் செய்துகொள்வதும் நல்லது அல்லது வாக்ஸ் செய்தும் கொள்ளலாம். இதனால் நம் உறுப்பு சுத்தமாக இருக்கும்.

    தண்ணீர் அல்லது வெஜைனல் வாஷ் கொண்டு சுத்தம் செய்யலாம். ஆனால் அதிகளவில் வாஷ் உபயோகிக்கும்போது வறண்டு போய்விடும். ஷேவ் செய்வதற்கு பதில் வாக்சிங் செய்வதனால் நம் ரோமங்கள் தோலின் அடியில் இருந்து அதாவது வேருடன் வெளிவருவதால், மீண்டும் முடி வளருவதற்கு அதிக நாட்கள் ஆகும்.

    மேலும் எந்தவித காயமோ கீறலோ இன்றி ரோமங்களை அகற்றுவதில் சிறந்தது வாக்சிங். நம் தோலின் நிறத்தையும் கருக்க செய்யாது. சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்களுக்கு ஷேவ் செய்யும்போது ரேஷஸ் வரும் வாய்ப்புள்ளது.மேலும் தோல் வறண்டு அதிகப்படியான ரோம வளர்ச்சி இருக்கும்.

    வாக்சிங் செய்வதால் நம் ரோமத்தின் அடர்த்தி குறையும். நம் சருமத்தை மிருதுவாக்கும்.
    கர்ப்பம் தரிப்பதற்கு முன்பும், கர்ப்பம் தரித்த பிறகும் போடக் கூடிய தடுப்பூசிகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக அவசியமானது.
    குழந்தை பிறந்ததும் 10 முதல் 12 மாதங்களுக்குள் எம்.எம்.ஆர் தடுப்பூசி போடப்பட வேண்டும். தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, புட்டாலம்மை உள்ளிட்ட பல அம்மைத் தொற்றுகளுக்கு எதிராகப் போராடக் கூடியது இந்தத் தடுப்பூசி. ஒருவேளை 10 முதல் 12 மாதங்களில் இந்த ஊசி போடப்படாவிட்டால், 13 வயதுக்குள் போடப்பட வேண்டும். பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியம். அதைத் தவிர்த்து, திருமண வயதில் போட நினைக்கக் கூடாது. தவிர்க்க முடியாமல் அப்படிப் போட நேர்ந்தால், அந்த ஊசியைப் போட்டதை அடுத்து, 4 மாதங்கள் முதல் 1 வருடம் வரை கருத்தரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    அந்தக் காலக்கட்டம் வரைக்கும் அந்தத் தடுப்பூசியின் தாக்கம் உடலுக்குள் இருக்கும் என்பதே காரணம். இந்த ஊசி போடப்படாத பட்சத்தில் அந்தப் பெண்ணுக்குக் பிறக்கும் குழந்தைக்கு கண்பார்வை பாதிப்பு, காது கேளாமை, மூளைக் காய்ச்சல், மூளை பாதிப்பு, வலிப்பு நோய் போன்றவை வரலாம். நரம்பில் உருவாகும் செல்கள் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக பல நோய்களும் வரலாம். கர்ப்பிணிகள் தவிர்க்கக் கூடாத இன்னொரு ஊசி டெட்டனஸ் டாக்சைட். பிரசவ காலத்தில் ஏற்படுகிற டெட்டனஸ் தொற்றானது, நஞ்சுக் கொடியைத் தாக்கி, குழந்தை இறந்து போகும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

    தாயின் உயிருக்கும் ஆபத்து உண்டு. கர்ப்ப காலத்தில் 2 டோஸ் போடக் கூடிய இந்த தடுப்பூசியானது பாதுகாப்பானது. டைஃபாய்டு, நிமோனியா காய்ச்சல், ஹெபடைட்டிஸ் பி போன்றவற்றுக்கான தடுப்பூசிகளை கர்ப்ப காலத்தில் போடவே கூடாது. கணவருக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று இருப்பது தெரிந்தால், அதன் மூலம் மனைவிக்கும் பாதிப்பு வரலாம். எனவே அதற்கெதிரான தடுப்பூசியை அந்தப் பெண் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த ஊசியையும் போட்டுக் கொண்டு 2 மாதங்களுக்கு கர்ப்பம் தரிக்காமலிருப்பது பாதுகாப்பானது.

    கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வீட்டில், வேறு யாருக்காவது பறவைக் காய்ச்சல், அம்மை போன்ற தொற்று வந்தால், கர்ப்பிணிப் பெண்ணுக்கு தடுப்பூசி போட முடியாது. தொற்று ஏற்பட்டவர்களிடமிருந்து, கர்ப்பிணிப் பெண்ணைப் பிரித்து வைப்பதுதான் தீர்வு. கர்ப்பிணிப் பெண்ணை நாய் கடித்தால், அதன் பாதிப்பிலிருந்து காப்பாற்ற, ரேபிஸ் ஊசி போடப்பட வேண்டும். அந்த நேரத்தில் கர்ப்பிணியின் உயிர்தான் பெரிதாகப் பார்க்கப் பட வேண்டுமே தவிர, கருவைக் காப்பாற்றும் எண்ணத்தில் ஊசியைத் தவிர்க்க நினைப்பது ஆபத்தானது.
    சுகப்பிரசவம் அடைந்தவர்களைக் காட்டிலும், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் மனதளவிலும், உடலளவிலும் குணமாவதற்கு சில காலம் பிடிக்கும்.
    இன்றைய பிஸியான வாழ்கை முறையில், குழந்தை பெற்றுக்கொள்வோர் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. அதிலும், சுகப்பிரசவத்தின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதில், கிராமப்புறங்களை காட்டிலும், நகர்புறங்களில் குறைந்து வருகிறது.

    இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. உடல் உழைப்பில்லாமை, போதிய உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது. நவீன உணவு பழக்க வழக்கம், வேலையில் பிஸியாக இருப்பது உள்ளிட்டவை முதலானவை. அதனால், இன்றைய நவீன கால கட்டத்தில் பெண்கள் அதிக அளவில் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஆனால், பிரசவத்திற்கு பிறகு சுகப்பிரசவம் அடைந்தவர்களைக் காட்டிலும் சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் அதிக பாதுகாப்புடன் இருத்தல் வேண்டும். அப்போது,தான் நீங்கள் விரைவில் குணமடைய முடியும். எனவே, நீங்கள் சீக்கிரம் குணமடைய பின்பற்ற வேண்டிய சில ஈஸியான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    சிசேரியன் மூலம் குழந்தை பெற்று கொண்டவர்கள். தையல் பிரிந்து விடுமோ என்ற பயத்தில், சில நாட்கள் வரை கட்டிலில் இருந்து எழுந்திருக்கவே மாட்டார்கள். ஆனால், அப்படி இருக்காமல் காலையில் எழுந்து பாத்ரூம் செல்வது போன்ற உங்களுக்கான ஈஸியான வேலைகளை நீங்களே செய்து கொள்ள முயற்சி செய்து கொள்ளுங்கள்.

    குழந்தை பிறந்த சில நாட்கள் வரை உதிரப் போக்கு இருந்து கொண்டு தான் இருக்கும். நன்றாக ஓய்வு எடுக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக உதிரப் போக்கு குறைந்து நின்று விடும்.

    ஆனால் ஓய்வு இல்லாமல் கடினமாக ஏதேனும் வேலை செய்தால் உதிரப் போக்கு அதிகரிக்கும். அதனால், நீக்கும் வரை உடலுக்கு போதிய ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம்.

    சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்களுக்கு, வயிற்றின் அடிப்பகுதியில் சிசேரியன் செய்யப்பட்ட இடத்தில் மருத்துவர்கள் தையல் போட்டிருப்பார்கள். சிலர், வீட்டிற்கு வந்ததும் அந்த புண் ஆறுவதற்குள், தையலை பிரித்து விடுவார்கள். ஆனால் அப்படி செய்யாமல், அந்த புண் ஆறுகிற வரையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். அந்த இடத்தில், குளிர்ந்த தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    சிசேரியனுக்குப் பிறகு, நீர்ச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே, நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிப்பது புண்களை விரைவில் குணமாக்கும். குறிப்பாக மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

    சுகப்பிரசவம் அடைந்தவர்களைக் காட்டிலும், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் மனதளவிலும், உடலளவிலும் குணமாவதற்கு சில காலம் பிடிக்கும். எனவே, புண்கள் மற்றும் பிறப்புறுப்புப் பாதை ரணங்கள் முழுமையாக சரியாகும் வரை உடலுறவைத் தவிர்ப்பது நல்லது.

    மேலும், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் உடலில் காய்ச்சல், உடல் வலி அதிகரித்து காணப்பட்டால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.
    தம்பதியினர் இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்றபோதே கருத்தடை செய்து கொள்ளவேண்டும். ஆண், பெண் இருவருக்கும் செய்யும் நிரந்தர கருத்தடை முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    நிரந்தரமாக செய்து கொள்ளும் கருத்தடை முறையில் கரு அணு அல்லது கரு முட்டையை எடுத்து செல்லும் குழாயை தடுப்பது அல்லது வெட்டி எடுப்பது போன்ற முறைகள் கையாளப்படுகிறது. இம்முறையில், தம்பதியினர் இனி குழந்தையே வேண்டாம் என்பதில் உறுதியாய் இருக்கின்றபோதே செய்து கொள்ளவேண்டும்.

    ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை

    வாசக்டமி என்பது ஆண்கள் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் சிறிய மாறுதல். இந்த அறுவை சிகிச்சையை செய்வதன் மூலம் கரு அணு செல்வது தடைபடுவதால், பெண்கள் கருத்தரிப்பதை தவிர்க்கலாம். ஆனால் அறுவை சிகிச்கை முடிந்து 48 மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு வாரம் வரையில் அதிக பளுவுள்ள பொருட்களை துாக்கக் கூடாது. அறுவை சிகிச்சைக்கு பின் வீக்கம், வலி, ரத்தப்போக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    பெண்களுக்கான நிரந்தர கருத்தடை

    இந்த முறையில், பெண்களின் பிறப்புறுப்பில் செய்யும் சிறிய அறுவை சிகிச்சையால், ஒவரியில் வளரும் கருமுட்டை கரு அணுவுடன் இணைவது தடுப்கப்படுகிறது. சரியான முறையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை முறை சிறந்த கருத்தடை முறையாகும். ஒரு சில நேரங்களில் இன்பெக்ஷன், ரத்தக்கசிவு ஏற்படலாம். அதிக வலி மற்றும் உதிரம் போக்கு இருக்கும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அறுவை சிகிச்கை முடிந்து 48 மணி நேரம் ஓய்வும், 2-3 நாட்களுக்கு அதிகபளுவோ துாக்கக் கூடாது.
    கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவில் இருந்து தான் குழந்தைக்கு அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. மருத்துவரின் அனுமதி பெற்ற பின்னர் நீங்கள் இதனை உண்பது மிக மிக சிறந்ததாகும்.
    கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் உணவுகள் தான் குழந்தைக்கு அதிகமாக சத்துக்களை கொடுக்கின்றன. குழந்தைகளின் மூளை, எலும்புகள் போன்ற ஒவ்வொரு பகுதிகளும் வலுப்பட தாய் சாப்பிடும் உணவுகள் முக்கியப்பங்கு வகிக்கிறது. நாம் உண்ணுகின்ற உணவானது, உடலுக்கும், உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதாக இருக்க வேண்டும். நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், விதைகள், பருப்பு வகைகள் ஆகியவை சைவப் பிரியர்களின் அன்றாட உணவில் அவசியம் இருக்க வேண்டும்.

    அசைவப் பிரியர்கள் இறைச்சி, இறால், மீன், நண்டு, முட்டை முதலியவை மூலம் முழுமையாக உண்கிறார்கள். சைவமோ, அசைவமோ எதுவாக இருப்பினும், அந்த உணவு வகைகளில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து, மாவுச்சத்து முதலியவை முக்கிய பங்கை வகிக்க வேண்டும். முட்டை என்பது ஒரு ஆரோக்கியமான உணவாகும். இதில் அதிகளவு புரோட்டின் சத்துக்கள் அடங்கியுள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை முட்டை அள்ளித்தருகிறது.

    கர்ப்ப காலத்தில் எந்த காரணத்தை கொண்டும் முட்டை வேண்டாம் என்று சொல்லாதீர்கள். கர்ப்ப காலத்தில் முட்டை, நிலக்கடலை, மீன் போன்றவற்றை சாப்பிடுவதால், பிறக்க போகும் உங்களது குழந்தைக்கு எந்த விதமான உணவு அலர்ஜியும் ஏற்படாமல் இருக்கும்.

    நீங்கள் சாப்பிடும் உணவில் இருந்து தான் குழந்தைக்கு அனைத்து சத்துக்களும் கிடைக்கின்றன. மருத்துவரின் அனுமதி பெற்ற பின்னர் நீங்கள் இதனை உண்பது மிக மிக சிறந்ததாகும்.
    மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலமான ப்ரீ மெனோபாஸ் (pre - menopause) பருவத்தில் பெண்களுக்கு சொற்களை நினைவில் கொள்வதில் சிரமம் ஏற்படும்.
    மாதவிடாய் நிற்கும் காலத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி தடைபடுவதால், ஹிப்போகாம்பஸ் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் சில செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும்.

    பருவம் அடைந்த பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிடாய் உதிரப்போக்கு, குறிப்பிட்ட வயதை கடந்தப் பின்பு நிரந்தரமாக நின்றுவிடும். இதையே மாதவிடாய் நிறுத்தம் (மெனோபாஸ்) என்கிறோம். பெரும்பான்மையான பெண்களுக்கு 45 முதல் 55 வயதிற்குள் மாதவிடாய் நிற்கிறது.

    இந்தக் காலகட்டத்தில், பெண்கள் பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். மாதவிடாய் நின்ற காலத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியில் சரிவு ஏற்படுவதால், எலும்புகளில் உள்ள கால்சியத்தின் அளவு குறையும். இதன் காரணமாக எலும்புகள் வலுவிழத்தல், தசை மற்றும் மூட்டு வலி, இதயத் துடிப்பில் மாற்றம் என பல பிரச்சினைகள் ஏற்படும். இதில் நரம்பியல் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமானவை. அதைப் பற்றிய தொகுப்பு இதோ…

    மெனோபாஸ் ஏற்படுவதால் மனநிலை மாற்றங்கள், கோபம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் மூளை அமைப்பு, நரம்பு இணைப்பு மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றம் ஆகியவை குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்படும்.

    மூளையின் ஹிப்போகேம்பஸ் (hippocampus) எனும்  பகுதியில் பல ஈஸ்ட்ரோஜன் ரெசெப்டர்கள் உள்ளன. இந்தப் பகுதி நினைவுத் திறனுக்கு முக்கியமான ஒன்று.

    மாதவிடாய் நிற்கும் காலத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி தடைபடுவதால், ஹிப்போகாம்பஸ் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தின் சில செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். அத்துடன் நடுத்தர வயது மற்றும் வயதான காலத்தில் பெண்களை பாதிக்கும் பல நரம்பியல் கோளாறுகள், நினைவாற்றல் இழப்பு, லேசான அறிவாற்றல் குறைபாடு, இஸ்கிமிக் பக்கவாதம், பார்கின்சன் மற்றும் அல்சைமர் நோய் போன்ற பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

    மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலமான ப்ரீ மெனோபாஸ் (pre - menopause) பருவத்தில் பெண்களுக்கு சொற்களை நினைவில் கொள்வதில் சிரமம் ஏற்படும். ஒரே நேரத்தில் பல பணிகளில் கவனம் செலுத்துவதிலும், பேசுவதிலும் சிரமம் உண்டாகும்.

    தீர்வுகள்:

    மெனோபாஸ் ஏற்படுவதற்கு முன்னதாகவே உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். தினமும் மாதுளம் பழம் சாப்பிடுவதன் மூலம், உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சீராக சுரக்கும். மென்மையான உடற்பயிற்சிகளை செய்யுங்கள். மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.
    கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடாதது, சில வகை மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.
    உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமான சத்துக்களில் ஒன்று கால்சியம். பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதிக்கும், ரத்தம் உறைவதற்கும், இதயத் தசைகள் சீராக சுருங்கி விரிவதற்கும், நரம்புகளின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும் கால்சியம் முக்கியமானது.

    ஆண்களை விட பெண்களுக்கு கால்சியம் அதிகமாக தேவைப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பெண்கள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கிராமப் புறங்களில் வாழும் பெண்களிடையே, கால்சியம் குறைபாட்டால் வரும் நோய்கள் அதிகமாக காணப்படுகின்றன.

    கால்சியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடாதது, சில வகை மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவது, ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.

    இதனால் உடல் சோர்வு, எலும்புகள் வலுவிழத்தல் மற்றும் உடைதல், தசைப்பிடிப்பு, சருமம் மற்றும் நகங்கள் பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகள், பற்கள் பாதிப்பு, மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன.

    பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், காய்கறிகள், கீரை வகைகள், முழு தானியங்கள், முளைவிட்ட தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், கால்சியம் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

    குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் போன்றவர்களுக்கு, சராசரி தேவையை விட அதிகமாக கால்சியம் தேவைப்படும்.
    35 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். இதற்கு காரணம், எலும்பு தேய்மானம்.
    35 வயதைக் கடந்த பெண்களுக்குத்தான் இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி எனப் பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். காரணம், எலும்பு தேய்மானம். 35 வயதைத் தாண்டியதும் எலும்பு தேய்மானம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எதனால் எலும்பு தேய்மானப் பிரச்சனை வருகிறது... அதற்கு என்ன தீர்வு என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

    எலும்பு தேய்மானத்துக்கு முக்கியக் காரணம், உடல் உழைப்பு இல்லாததே. அந்தக் காலத்துப் பெண்கள் நன்றாக ஓடி, ஆடி வேலை செய்தனர். ஆனால் இப்போது, துணி துவைக்க, சட்னி அரைக்க, மாவு அரைக்க எல்லாவற்றுக்குமே மெஷின்கள் வந்துவிட்டன. அதோடு, வீட்டு வேலைகள் செய்வதற்கு ஆட்களையும் வைத்துக்கொள்கிறார்கள். மார்க்கெட்டுக்குச் சென்று மளிகைப் பொருட்கள், காய்கறிகளைத் தூக்கி வருவது இல்லை. எல்லாவற்றுக்கும் ஆட்டோ, டூ வீலர் பயன்படுத்துகிறார்கள். இதனால் உடல் இயக்கம் இன்றி இருப்பதால், கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) கிரகிக்கப்படுவது பாதிக்கப்பட்டு, எலும்பு தேய்மானம் அடைவதற்கு முக்கியக் காரணமாகிவிடுகிறது.

    இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், மேற்சொன்ன வேலைகளையெல்லாம் செய்ய முடியவில்லை என்றால், தினமும் காலையில் 20 முதல் 40 நிமிடங்கள் வரை ரெஸிடன்ஸ் பயிற்சி (Resistance exercise...) செய்வது நல்லது. அதாவது, நம் உடலை நாமே தாங்கிச் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

    தண்ணீர் பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு மேலே, கீழே தூக்கி கைகளை இயக்குவதால், தோள்களுக்கு வலுசேர்க்கும். தோப்புக்கரணம் போடுவது, கால்களுக்கு வலு சேர்க்கும். அதோடு ஏரோபிக் போன்ற உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது  நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது. அதனால், காலை நேரங்களில், வாரத்தில் மூன்று நாட்கள் மிதமான வெயிலில் 15 நிமிடங்களாவது இருப்பது நல்லது. இதன் மூலம் எலும்பு தேய்மானத்தைத் தடுக்கலாம்.

    எலும்புகள் என்றால் உறுதியானதுதானே... அது என்ன செய்யப்போகிறது என்று நினைக்கக் கூடாது. உடலுக்கு ஆக்டிவ் தரக்கூடிய வேலைகளைச் செய்துவந்தால்தான், எலும்புகள் கால்சியத்தை நன்றாக கிரகித்துக்கொள்ள முடியும். `அய்யோ, எனக்கு 50 வயது ஆகிவிட்டதே... இதை எல்லாம் எப்படிச் செய்வது?’ என்று வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தால், எலும்புகளுக்கு சரிவர கால்சியம் சத்துக் கிடைக்காமல், எலும்பு தேய்மானம்தான் ஏற்படும். இதனால் பெண்களுக்கு இடுப்பு, தோள், மணிக்கட்டு, மூட்டு, முதுகு, கழுத்துப் பகுதிகளில் வலி ஏற்படும்.
    பெண்களுக்கு 30 வயதுக்கு பின்னர் எலும்பில் இருக்கும் கால்சியம் குறைய தொடங்குவதினால், அவர்கள் எலும்புகள் சார்ந்த பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர்.
    கடந்த சில வருடங்களாக எலும்பு சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எலும்பு பிரச்சனையை தொடக்கத்திலேயே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் அமைப்பை கட்டமைப்பது, உறுப்புகளை பாதுகாப்பது, தசையினை வலுப்படுத்துதல், கால்சியத்தை சேமித்தல் போன்றவை எலும்புகளின் நலனுக்கும், உடல் நலனுக்கும் முக்கியமானது.

    குழந்தை பருவத்தில் இருந்து வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவது அவசியமாகிறது. பெண்களுக்கு 30 வயதுக்கு பின்னர் எலும்பில் இருக்கும் கால்சியம் குறைய தொடங்குவதினால், அவர்கள் எலும்புகள் சார்ந்த பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர். இந்திய பெண்கள் எலும்பு பிரச்சனையால் சமீபத்தில் அதிகளவில் பாதிக்கவும் தொடங்கியுள்ளனர்.

    ஈஸ்டிரோஜனின் செயல்பாடால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறும் நிலையில், இதே ஹார்மோன் பெண்களின் எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமைக்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. இதே சமயத்தில், ஈஸ்டிரோஜனின் அளவு குறைவதால் மெனோபாஸ் நிலை எட்டத்தொடங்குகின்றனர். மேற்கத்திய பெண்களை காட்டிலும், இந்திய பெண்கள் முன்னதாகவே மெனோபாஸ் நிலையை அடைகின்றனர். இதனால் எலும்பின் வலிமை விரைந்து குறைகிறது.

    எலும்புகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவுகளை இந்திய பெண்கள் குறைவாக சாப்பிட்டு வருகின்றனர். கால்சியம் சத்துக்கள் நிறைந்த பால், தயிர் போன்ற உணவுகளை பெண்கள் அதிகளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனைப்போல இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும். உணவுப்பழக்க வழக்கத்துடன் உடற்பயிற்சி, வைட்டமின் சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுதல், புகை, மது பழக்கத்தை தவிர்த்தல் போன்றவற்றை குறைக்கவும் வேண்டும்.
    ×