என் மலர்tooltip icon

    பெண்கள் மருத்துவம்

    கர்ப்பப்பையின் உட்பகுதியிலோ நடுப்பகுதியிலோ அல்லது வெளிப்புற பகுதியிலோ கட்டி ஏற்படலாம். 50 சதவீதம் கட்டிகள் எவ்வித அறிகுறியுமின்றி இருக்கலாம். பரிசோதனை செய்து ஸ்கேன் மூலமும் இக்கட்டியை கண்டறியலாம்.
    கர்ப்பப்பை கட்டிகள்:

    (Fibroid uterus) கர்ப்பப்பையின் உட்பகுதியிலோ நடுப்பகுதியிலோ அல்லது வெளிப்புற பகுதியிலோ கட்டி ஏற்படலாம். மாதந்தோறும் அதிக ரத்தபோக்கு, வலி, குழந்தையின்மை, அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவு, அடிவயிற்றுவலி, அடிவயிற்றில் இருக்கும் கட்டியை உணர்தல், கட்டியின் அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய சிறுநீரக பிரச்சினைகள் ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். 50 சதவீதம் கட்டிகள் எவ்வித அறிகுறியுமின்றி இருக்கலாம். பரிசோதனை செய்து ஸ்கேன் மூலமும் இக்கட்டியை கண்டறியலாம்.

    Adenomyosis: கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய endometrial glands என்று அழைக்கக்கூடிய சுரப்பிகள் கர்ப்பப்பை உள்ளே இல்லாமல் வெளியில் இருந்தால் இப்பிரச்சினை உண்டாகும்.

    Endometriosis: கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய endometrial glands என்று அழைக்கப்படும் சுரப்பிகள் கர்ப்பப்பை உள்ளே இல்லாமல் வெளியில் இருந்தால் இப்பிரச்சினை உண்டாகும்.

    இதன் அறிகுறிகள்:

    மாதவிடாய் கோளாறுகள் குழந்தையின்மை, தொடர்ந்து இருக்கும் அடி வயிற்றுவலி மாதவிடாய் ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்பே தாங்க முடியாத வயிற்று வலி போன்ற அறிகுறிகள் மூலம் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உணரலாம். இவ்வலி மாதவிடாய் ஆரம்பிக்கும் வரையோ அல்லது முடியும் வரையோ நீடிக்கலாம்.

    சினை முட்டை கட்டிகள்:

    சிறு எலுமிச்சை பழம் அளவில் இருந்து பூசணி அளவில் இக்கட்டிகள் இருக்கலாம். 70 சதவீத கட்டிகள் கேன்சர் இல்லாத கட்டிகளாகவும், 30 சதவீதம் கேன்சர் கட்டிகளாகவும் இருக்கலாம். கேன்சர் கட்டிகளாக இருப்பின் எடை குறைதல், பசி குறைதல், வயிற்றில் நீர் சேருதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    இடம் மாறி கருத்தரித்தல்:

    சில நேரங்களில் கர்ப்பப்பையில் கர்ப்பம் தங்காமல் கர்ப்பப்பை வெளியில் கருமுட்டை குழாயில் கருத்தரிக்கலாம். இவ்வகை கர்ப்பத்தினால் அதிக வயிற்றுவலியுடன் மயக்கம் மற்றும் கருமுட்டை குழாய் வெடித்தால், வயிற்றுக்குள் ரத்த கசிவால் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே கர்ப்பம் என அறிந்த பின் ஸ்கேன் மூலம் கண்டறிதல் மிக அவசியம்.

    அடி இறங்குதல்:(vaginal prolapse)

    அடி இறங்குதல் என்பது குழந்தை பிறப்புறுப்பு வழியாக கர்ப்பப்பை இறங்குதல் மற்றும் மூத்திரப்பை, மலக்குடல் இறங்குதல் ஆகும். இதன் அறிகுறிகள் பெண்ணின் பிறப்புறுப்பில் கட்டி போன்று இருத்தல் மற்றும் மூத்திரகோளாறுகள் வெள்ளைப்படுதல் ஆகும்.

    மகளிருக்கான சிறப்பு பரிசோதனை:

    1.பேப் ஸ்மியர் என்பது கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயை முன்பாக அறிந்து கொள்ள செய்யப்படும் பரிசோதனை ஆகும்.

    2.எண்டோ மெட்ரியல் பையாப்சி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் திசுக்களுக்கான சிறப்பு பரிசோதனை.

    3.கால் போஸ்கோ தபி என்பது கர்ப்பப்பை வாய்பகுதியை கண் கூடாக பரிசோதனை செய்தல் ஆகும்.

    4.சர்வைக்கல் பையாப்சி என்பது கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோய் கண்டறிதலுக்கான பரிசோதனை ஆகும்.

    Dr. லதா லட்சுமி மகப்பேறு நிபுணர்
    மாதவிடாய் காலத்தில் கடினமான உடற்பயிற்சிகளை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எந்தெந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்? எதை தவிர்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
    மாதவிடாய் காலத்தில் ரத்தப்போக்கு மட்டுமின்றி தசைப்பிடிப்பு, வயிற்று வலி, சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. அந்த சமயத்தில் உடலுக்கும், மனதுக்கும் முழு ஓய்வு தேவைப்படும்.

    உடற்பயிற்சி மீது நாட்டம் கொண்டவர்கள் கூட உடலுக்கு ஓய்வு கொடுக்க விரும்புவார்கள். அப்படி அறவே உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டியதில்லை. கடினமான உடற்பயிற்சிகளை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். எந்தெந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்? எதை தவிர்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    இலகுவான நடை: வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியின் வேகத்தை குறைக்க வேண்டும். இந்த நடைப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டியதும் இல்லை. இயல்பாக வெளியே செல்லுங்கள். கால்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக நடங்கள். மனதுக்கு பிடித்தமான இடங்களை சுற்றி பாருங்கள். கால்கள் சோர்வு அடையும் வரை நடக்காதீர்கள். சிறிது நேரம் நடந்துவிட்டு இளைப்பாறுங்கள்.

    வலிமைப் பயிற்சி: உடலுக்கு வலிமை சேர்க்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது கட்டுடலை பேண உதவும். சரும அழகையும் மேம் படுத்த வழிவகுக்கும். மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியத்துடன் செயல்படுவதற்கும் உதவும். எனினும் மாதவிடாய் காலத்தில் அத்தகைய கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதில்லை. அதிக எடை கொண்ட உபகரணங்களை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். உடல் ஒத்துழைக்கும் என்றால் குறைந்த எடை கொண்ட சாதனங்களை பயன்படுத்தி இலகுவான பயிற்சிகளை செய்யலாம்.

    கார்டியோ பயிற்சி: மாதவிடாய் முடிவடையும் கால கட்டம் நெருங்கும்போது நீச்சல், ஜாகிங் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற லேசான கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது என்று கருதப்படுகிறது. இந்த பயிற்சிகள் நுரையீரல் சிறப்பாக செயல்படுவதற்கு வழிவகுக்கும்.

    யோகா: மாதவிடாய் சமயத்தில் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளுள் ஒன்று யோகா. இது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பலன் தரக்கூடியது. அதிலும் மாதவிடாய் காலத்தில் கூடுதல் நன்மைகளை வழங்கும். குறிப்பாக அந்த சமயத்தில் உடலையும், மனதையும் சுறு சுறுப்பாக வைத்திருக்க உதவும். தசைகளுக்கும் வலிமை சேர்க்கும். மனநிலை மாற்றம், பசி, சோர்வு, எரிச்சல், மன அழுத்தம் உட்பட பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்தும். மாதவிடாய்க்கு முந்தைய நோய் அறிகுறியான பி.எம்.எஸ். பாதிப்பின் தன்மையை குறைக்க உதவும்.

    இந்த லேசான பயிற்சிகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசை வலி, தசை பிடிப்பு மற்றும் சோர்வு ஆகியவற்றைக் குறைக்க உதவும்.
    மாதவிடாய் நாட்களில் வெகுநேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது, பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.
    * ஓய்வின்றி வேலை செய்வது, ரத்தப்போக்கையும் வலியையும் அதிகரிக்கக்கூடும். மாதவிடாய் நாள்களில் போதுமான அளவு ஓய்வும் தூக்கமும் அவசியம்.

    * உடற்பயிற்சி செய்வதன் மூலம், ஹார்மோன் சுரப்பை சமநிலையில் வைத்துக்கொள்ளலாம். மாதவிடாயின்போது மட்டுமன்றி தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. மாதவிடாய்க் காலத்தில் செய்யும் உடற்பயிற்சிகள் மிகவும் எளிமையானதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

    * மாதவிடாயின்போது கார்போஹைட்ரேட், புரதம் நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். திரவ வடிவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெந்நீர் அருந்துவது, சூடான நீரைக்கொண்டு வயிற்றுப்பகுதியில் ஒத்தடம் கொடுப்பது போன்றவை வலி உணர்வைக் குறைக்கும்.

    * மாதவிடாயின்போது பலரும் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை, `மூட் ஸ்விங்க்ஸ்'. அதைக்கட்டுபடுத்த, உணவில் ஒமேகா 3 போன்ற, நல்ல கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளலாம். தியானம் செய்வது, மனதை ஒருநிலைப்படுத்தும்.

    * அடிக்கடி நாப்கினை மாற்றிக்கொள்ள வேண்டும். அதிகபட்சமாக நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை நாப்கின் மாற்ற வேண்டும். வெகுநேரம் நாப்கின் மாற்றாமல் இருப்பது, பிறப்புறுப்பில் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வலி அல்லது எரிச்சல் உணர்வை ஏற்படுத்தக்கூடும்.
    மாரடைப்பு என்பது உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது. பெண்களுக்கு இது எத்தகைய அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்பது குறித்து பார்ப்போம்.
    நெஞ்சு வலி: இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும். ஆனால் பாதிப்பின் தன்மை மாறுபடும். பொதுவாக பெண்கள் மார்பை அழுத்தும் வலியை அனுபவிக்கிறார்கள். மார்பும் இறுக்கமடையும். ஆண்களை பொறுத்தவரை மார்பில் கடும் இறுக்கம் ஏற்படும். மார்பு வலியும் உண்டாகும்.

    ஆனால் சில பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது மார்பு வலி கூட இருக்காது. மார்பு பகுதியில் சிறு அசவுகரியத்தை உணரலாம். அதனை சாதாரண வலியாக இருக்கும் என்று தவறாக கருதக்கூடாது.

    பலவீனம்: மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளை ஒரு வாரத்திற்கு முன்பே அனுபவிக்க நேரிடும். அதனை கருத்தில் கொண்டால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவிடலாம். முதல் அறிகுறியாக உடல் பலவீனமாக இருப்பதை உணரலாம்.

    சில சமயங்களில் திடீர் பலவீனம் காரணமாக உடல் நடுங்கலாம். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மாரடைப்பு வருவதற்கு முன்பு பதற்றம், தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் லேசான தலைச்சுற்றல் போன்றவற்றை உணரலாம். அவற்றை அலட்சியப்படுத்திவிடக்கூடாது.

    மூச்சுத் திணறல்: பெண்களை பொறுத்தவரை மாரடைப்பு ஏற்படப்போவதை உணர்த்தும் தெளிவான அறிகுறி இதுவாகும். சுவாசம் அதிகரிப்பதோடு மார்பு வலியும் உண்டாகும். இதயப்பிரச்சினை அல்லது கடுமையான நோய் பாதிப்பு இருந்தால் மூச்சுத்திணறல் நிகழக்கூடும். அதை கடுமையாக எடுத்துக்கொள்ள வேண்டும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு நடக்கும்போதோ, படுத்திருக்கும்போதோ, எழும்போதோ மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அத்தகைய மூச்சுத்திணறலை உணர்ந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

    உடல் வலி: கடுமையான வேலைகளை செய்தாலோ, உடல் சோர்வு அடைந்தாலோ உடல் வலியை உணரலாம். பொதுவாக முதுகின் இரு புறமும் வலி இருந்து கொண்டிருக்கும். ஆனால் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு பெண்களின் உடலின் மேல் பகுதியில் வலியை சந்திக்க நேரிடும்.

    அதாவது முதுகின் மேல் பகுதி, கைகள், கழுத்து, தாடை போன்ற பகுதிகளில் வலி ஏற்படும். மிகவும் அசவுகரியமாகவும், மன அழுத்தமாகவும் இருக்கும். அப்படி உடலின் ஒரு பகுதியில் வலி ஏற்பட தொடங்கி பின்பு மற்ற பகுதிகளுக்கு படிப்படியாக பரவும். அப்படி மேல் பகுதியில் வலி ஏற்படத்தொடங்கும்போதே மருத்துவரை அணுகுவது அவசியமானது.

    அதிகமாக வியர்த்தல்: பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான முக்கிய அறி குறிகளில் ஒன்று அதிகப்படியான வியர்வை வெளிப்படுவதாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மாரடைப்பு ஏற்படும்போது ஆண்களுக்கு வியர்வை அதிகமாக வெளியேறுவதில்லை. வேலை செய்யும் போதோ அல்லது படுத்திருக்கும் போதோ திடீரென்று வியர்வை ஏற்படலாம். வியர்வையுடன் திடீர் குளிர்ச்சி அல்லது குளிர் வெப்ப நிலையை உணரலாம். இது மாரடைப்புக்கான தெளிவான அறிகுறியாகும்.

    சோர்வு: பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வியர்வை, உடல் பலவீனம் ஆகியவற்றுடன் சோர்வும் ஏற்படும். இந்த மூன்று அறிகுறிகளும் பெண்களுக்கு மட்டுமே இருக்கும். மாரடைப்பு ஏற்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு பெண்கள் கடும் சோர்வுடன் காணப்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற நிலையில் விரைவாக மருத்துவ சிகிச்சை பெறுவது நல்லது.

    வயிற்று பிரச்சினைகள்: வயிற்றுப் பகுதியில் வலி, அசவுகரியம் மற்றும் அழுத்தத்தை உணரக்கூடும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு இந்த அறிகுறிகள் பெண்களுக்கு மட்டுமே வெளிப்படும். குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புகளும் உண்டாகலாம். வயிற்றில் ஏற்படும் வலி செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உடல் சோர்வு அடைந்துவிடும். எதையும் சாப்பிட முடியாது.

    தூக்கமின்மை: மாரடைப்புக்கு ஆளாகும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தூங்குவதில் சிக்கல் காணப்படும். மாரடைப்பு ஏற்படுவதற்கு சில இரவுகளுக்கு முன் தூக்கத்தில் பிரச்சினைகள் வரலாம். ஒன்று தூங்க முடியாமல் போகலாம் அல்லது நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக பல முறை எழுந்திருக்கலாம். அதிக ஓய்வு எடுத்தாலும், போதுமான அளவு தூங்கி இருந்தாலும் உடல் சோர்வாக இருப்பதை உணரலாம். இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
    பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் சமயத்தில், திட உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு செல்லக்கூடாது. பசியாக இருந்தால் பால், கஞ்சி போன்ற திரவ உணவு வகைகளை கொஞ்சமாக சாப்பிடலாம்.
    பிரசவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெண்கள், 9-வது மாதம் தொடங்கிய ஓரிரு நாட்களுக்குள் மருத்துவமனைக்குச் செல்லும் வகையில் தயாராக இருப்பது நல்லது.

    தனிக்குடித்தனங்கள் பெருகி விட்ட தற்போதைய காலகட்டத்தில், எந்தச் சூழலையும் சமாளிப்பதற்கு கர்ப்பிணிகள் தயாராக இருக்க வேண்டும். வீட்டில் இருந்து மருத்துவமனை அமைந்துள்ள தூரம், பயண நேரம், மருத்துவரின் தொடர்பு எண், மருத்துவரை போனில் தொடர்பு கொள்ளும் நேரம், மருத்துவமனைக்கு வாகனத்தில் செல்வதற்கான சரியான வழித்தடம் உள்ளிட்ட தகவல்களை கர்ப்பிணிகள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

    மருத்துவ அறிக்கைகள், துணிமணிகள், தேவையான பணம், காப்பீட்டு அட்டை, மாத்திரைகள் மற்றும் இதுவரை மேற்கொண்ட மருத்துவ பரிசோதனை சான்றுகள் ஆகியவற்றை தேதி வாரியாக, ஒரு பைலில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும்.

    காட்டன் நைட்டிகள், சானிட்டரி நாப்கின், பல் துலக்கும் பிரஷ் மற்றும் பற்பசை, பழைய காட்டன் சேலைகள், பிளாஸ்க் ஆகியவற்றை மருத்துவமனைக்குச் செல்லும்போது உடன் கொண்டு செல்லவேண்டும். கர்ப்பிணிகள் அவசியமான ஆபரணங்களை மட்டுமே அணிந்திருக்கலாம். மோதிரம் உள்ளிட்ட கூடுதல் ஆபரணங்களையும், ஸ்மார்ட் போன் வகைகளையும் சில காலம் தவிர்ப்பதே நல்லது.

    பிறந்த குழந்தையின் பராமரிப்புக்காக டயாப்பர்கள், உடலை துடைப்பதற்கு ஏற்ற மெல்லிய பருத்தி துணிகள், கொசுவலை, குழந்தைக்கு அணிவிப்பதற்கான பருத்தி ஆடைகள், பேபி பவுடர் ஆகியவற்றையும் மருத்துவமனைக்குச் செல்லும்போது எடுத்துச்செல்ல வேண்டும்.

    9-வது மாதம் தொடங்கியவுடன் கர்ப்பிணிகளுக்கு உதவியாகவும், துணையாகவும் உறவினரோ அல்லது நம்பிக்கைக்கு உரிய பெண்மணியோ எப்போதும் உடன் இருக்க வேண்டும். அதற்காக ஒரு தற்காலிகப் பணியாளரைக்கூட அமர்த்திக்கொள்ளலாம்.
    மருத்துவமனைக்கு சென்ற பின்னர் வீட்டை கவனிக்கவும், வீட்டில் இருந்து தேவையான பொருட்களை மருத்துவமனைக்கு எடுத்து வந்து தருவதற்காகவும் அவரது உதவி தேவையாக இருக்கும்.

    பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் சமயத்தில், திட உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு செல்லக்கூடாது. பசியாக இருந்தால் பால், கஞ்சி போன்ற திரவ உணவு வகைகளை கொஞ்சமாக சாப்பிடலாம்.

    தற்போது பேபி சேப்டி கிட், மதர்ஸ் கிட் என்ற பெயர்களில் அன்னையும், குழந்தையும் பிரசவத்தை எதிர்கொள்வதற்குத் தேவையான ரெடிமேடு பொருட்கள் அடங்கிய பைகள் மருந்து கடைகளில் கிடைக்கின்றன. அவசர பயன்பாட்டுக்கு அவற்றை வாங்கியும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
    பெண்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், சோடா பானங்கள் அல்லது அதுபோன்ற பழசாறு கலந்த பானங்களை பருகி வருவதை கவனத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    பதப்படுத்தப்பட்ட சோடா குளிர் பானங்கள் மற்றும் அது தொடர்புடைய பழ சாறுகளை தொடர்ந்து பருகும் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதயநோய் வருவதற்கான வாய்ப்பும் 16 சதவீதம் அதிகரிக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வுக்கு 81,714 பெண்கள் உட்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் 50 வயதை கடந்தவர்கள். 12 ஆண்டுகளாக அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், சோடா பானங்கள் அல்லது அதுபோன்ற பழசாறு கலந்த பானங்களை பருகி வருவதை கவனத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறிப்பிட்ட ‘பிராண்ட்’ குளிர் பானத்தை பற்றி நடத்தப்பட்ட ஆய்வு அல்ல!

    உடல் பருமமான பெண்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பெண்களை விட அவர்களுக்கு பக்கவாத பாதிப்பு இருமடங்கு அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக மாதவிடாய் சுழற்சி முடிவடையும் காலகட்டத்தில் இருக்கும் பெண்கள் கூடுமானவரை பதப்படுத்தப்பட்ட பானங்களை பருகுவதை தவிர்ப்பது நல்லது. சுவைக்காக ரசாயனம் சேர்க்கப்படும் பானங்களையும் பருகக்கூடாது. கலோரிகள் அல்லாத பானங்களை பருகுவதே நல்லது. எத்தகைய ரசாயனமும் கலக் காத தண்ணீர் பருகுவதே சிறப்பானது என்று அமெரிக்க இதய நோய்த்துறைக்கான அமைப்பு கூறியுள்ளது.
    கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம்.
    பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு தலைவலி,  முதுகுவலி, இடுப்பு வலி, போன்ற பல வலிகள் வருவது சகஜமான ஒன்று. கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம். மேலும், கர்ப்ப காலத்தின்போது Relaxin என்ற ஹார்மோன் சுரப்பதாலும் முதுகு இடுப்பு தசைகள் மற்றும் ஜவ்வுகள் வலுவிழந்து வலி உண்டாகிறது. வயிறு பெரிதாக ஆக, கீழ் முதுகின் எலும்பு முன்னோக்கி வளைகிறது.

    இதனால் முதுகு எலும்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அதிக அழுத்தத்தின் காரணமாகவே முதுகுவலி வருகிறது. கர்ப்பகாலத்தின்போது 25 முதல் 35 பவுண்ட் வரை கர்ப்பிணியின் உடல் எடை அதிகரிப்பதால் முதுகில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. வளர்ந்து வரும் கருவினால் கர்ப்பப்பை பெரிதாகி முதுகு அல்லது இடுப்பு ரத்தக்குழாய்கள் மற்றும் நரம்புகளை அழுத்துவதாலும் வலி ஏற்படலாம்.

    * பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான பொசிஷன்.

    * உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் இருக்கும்படிப் பார்த்து உட்காருங்கள்

    *  உட்கார்ந்து இருக்கும்போது டவலை நான்காக மடித்து முதுகுக்கு பின் வைத்து உட்காருவதன்மூலம் முதுகுக்கு ஏற்படும் அழுத்தத்தை பெருமளவு குறைக்கலாம்.

    * தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.

    * பளுவான பொருட்களை உங்கள் உடலோடு அணைத்தபடி பிடித்துத் தூக்குங்கள்.

    * முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள்.

    * முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும்.

    * கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம்.
    உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது. அந்த வகையில் இந்த பதிவில் உடல் எடையை குறைக்க என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.
    இன்று உடல் எடையை பற்றிய விழிப்புணர்வு வந்து கொண்டுதான் இருக்கின்றது. அதனால் பலரும் பல விதமான வழிமுறைகளில் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். இதற்கு இயற்கை மற்றும் செயற்கையான வழிகள் உள்ளன. இருப்பினும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது. அந்த வகையில் இந்த பதிவில் உடல் எடையை குறைக்க என்னென்ன வழிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

    உடற்பயிற்சி

    உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைய உடல் உழைப்பு மிக மிக அவசியம். இன்று பலரின் வேலை பல மணி நேரங்கள் உட்கார்ந்து செய்வதாகவே உள்ளது. இதனால் அவர்களுக்கு உடல் எடை அதிகரித்துக் கொண்டே உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலமே உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள், நச்சுக்கள் வியர்வை வழியே வெளியேறும்.ஆக தினமும் தேவையான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறிதளவாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். இதை தொடர்ந்து செய்வதன் மூலமே உடல் எடையை நல்ல வழியில் குறைத்துக் கொள்ளலாம்.

    சாப்பிடும் முறை

    சாப்பிடும்பொழுது டிவி மொபைல் போன் போன்ற வற்றை பார்ப்பது கூடாது. இப்படி சாப்பிடும் பொழுது நாம் கவனம் இல்லாமல் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆக இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு உணவின் மீது கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும்.

    தூக்கம் தேவை

    சரியான அளவு தூக்கம் உடலுக்கு கிடைக்காத பொழுது கூட உடல் எடை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆக ஒரு நாளுக்கு 8 முதல் 10 மணி நேரங்கள் தூங்குவது சிறந்தது. அதே போல மதிய தூக்கத்தைத் தவிர்த்து விடுங்கள். மதியம் சாப்பிட்ட உடனே அதிக நேரம் உறங்கும் பொழுது உடல் எடை உள்ளது.

    எண்ணெய் பண்டங்கள் கூடாது

    எண்ணெயில் வறுத்து எடுத்த பண்டங்கள் சாப்பிடவே கூடாது. சிக்கன் 65 போண்டா பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை கையில் எடுக்காமல் இருப்பது நல்லது.

    இனிப்பு வேண்டாம்

    இனிப்பு பலகாரங்கள் சாக்லேட் போன்றவற்றை தொடவே கூடாது. இவற்றை சாப்பிட்டால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டால் இந்த வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    நடந்தே செல்லுங்கள்

    பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு செல்வதற்கு எல்லாம் வண்டியை பயன்படுத்தாதீர்கள். முடிந்தவரை அடி அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து போங்கள். அதைப்போல மேல் தலங்களுக்கு செல்லும் விழுது லிப்டை பயன்படுத்தாதீர்கள். படிகளின் வழியே நடந்து செல்லுங்கள்.

    மன அழுத்தம் வேண்டாம்

    வீட்டிலோ அல்லது வெளியிலோ ஏதாவது குறைகள் இருந்தால் அதற்காக சதா கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். இந்த மாதிரியான தேவையில்லாத மன அழுத்தங்களை உடல் எடையை சாத்தியப்படுத்தி விடுகின்றன. மனவளக் கொள்வதும் ஒரு சிறந்த கலை தான். அதை இயன்றவரை கடைப்பிடிக்க பாருங்கள்.

    யோகாசனம்

    உடல் எடையை குறைப்பதற்கு என்றே யோகாவில் குறிப்பிட்ட ஆசனங்கள் உள்ளன. இவற்றை முறையாக கற்றுக் கொண்டு நாள் தவறாமல் செய்வதன் மூலம் வியத்தகு பலனை அடைய முடியும்.
    ஒழுங்கற்ற மாதவிடாய், முகம் மற்றும் மார்பில் அதிக அளவு முடிகள் வளருதல், உடல் எடை அதிகரித்தல், முடி உதிர்தல், எண்ணெய் வடியும் சருமம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) எனும் கருப்பை நீர்கட்டி பிரச்சினையால், பெரும்பாலான பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தாய்மை அடைவதில் சிக்கல், முறையற்ற மாதவிடாய், அதிகமான உதிரப்போக்கு, உடல் பருமன், மனஅழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    இந்த பிரச்சினை பருவ வயது பெண்கள் முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கும் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் வாழ்வியல் மாற்றங்கள் காரணமாகவே உண்டாகிறது.

    காரணம்:

    மரபு வழியாகவும், மாறுபட்ட பழக்கவழக்கங்கள், உணவு முறைகள், உடல் பருமன் ஆகியவற்றின் மூலமும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் ஏற்படுகிறது.

    நோய்க்கான அறிகுறிகள்:

    ஒழுங்கற்ற மாதவிடாய், முகம் மற்றும் மார்பில் அதிக அளவு முடிகள் வளருதல், உடல் எடை அதிகரித்தல், முடி உதிர்தல், எண்ணெய் வடியும் சருமம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

    கட்டுப்படுத்தும் வழிகள்:

    ஆரோக்கியமான உணவு முறை, உடற்பயிற்சி, சீரான தூக்கம், நேர்மறையான வாழ்வியல் மாற்றங்களின் மூலம் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமைக் கட்டுப்படுத்தலாம்.

    பி.சி.ஓ.எஸ்-சை கட்டுப்படுத்தும்  உணவுப் பொருட்கள்:

    நார்சத்து உள்ள கோதுமை, பச்சை கேரட், கடலை, பட்டாணி, முழு தானியங்கள், காலிபிளவர், பீன்ஸ், பயறு வகைகள், ஆப்பிள், ஆரஞ்சு, பேரிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம். இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.

    புரதச்சத்து முக்கியமானது. கோழி, மீன், முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, விதைகள் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளான தக்காளி, மஞ்சள், வால்நெட் போன்றவை பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமைக் குறைக்கக்கூடிய தன்மை கொண்டவை. மேலும் கறிவேப்பிலை சட்னி, எள் சட்னி, பீட்ரூட் சட்னி ஆகியவற்றை தொடர்ந்து வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வரலாம்.

    தவிர்க்க வேண்டியவை:

    * காபி, சோயா, உருளைக்கிழங்கு, பால் பொருட்கள், மாவுச் சத்து நிறைந்த உணவுகள், மைதா போன்றவற்றை முழுவதும் தவிர்க்க வேண்டும்.

    * பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து, பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்களைச் சாப்பிடக்கூடாது.

    தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது உடற்பயிற்சியோடு, நடைப்பயிற்சியும் மேற்கொள்ள வேண்டும்.
    சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம்.
    இப்போது இருக்கின்ற நிறைய பெண்களுக்கு PCOS / PCOD கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை இருக்கிறது. இந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களின் உணவு முறை மற்றும் வாழ்கை முறை என்று தான் சொல்ல வேண்டும்.

    சினைப்பை நீர்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் சினைமுட்டைகள் வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு தகுந்தாற்போல சிகிச்சையளிக்க வேண்டும்.

    மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை இருந்தால் சினைப்பையின் ஹார்மோன் குறைவினால் மாதவிடாய் தாமதம் ஏற்படும். மாதம் ஒரு சினை முட்டையை சினைப்பை விடுவிப்பது இயற்கையான நிகழ்வு. இந்நிகழ்வில் தடை ஏற்படும் போது சினைப்பையில் சிறு, சிறு, நீர் கட்டி தோன்றி விடுகின்றன.

    பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது. இது குறிப்பாக குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த கருப்பை நீர்கட்டி உள்ளது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், கர்ப்பபையில் நீர்கட்டி பிரச்சனைகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

    கருப்பை நீர்கட்டி அறிகுறிகள் (Ovarian Cyst Symptoms) (Neer Katti Symptoms in Tamil):

    பெரும்பாலானவர்கள் கூறும் ஓரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி.

    இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், முடி கொட்டுதல், குரல் வேறுபடுதல், முகத்தில் பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    கர்ப்பப்பை நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் குணப்படுத்தும் மருத்துவத்தை நாம் இங்கு காண்போம்.

    கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம்:- நீர்கட்டி கரைக்கும் உணவுகள் இந்த கழற்சிகாய் நாட்டு மருத்துவ கடையில் கிடைக்கும். இந்த கழற்சிகாய் காயாகவும், பொடியாகவும் கிடைக்கும்.

    இந்த கழற்சிகாய் பார்ப்பதற்கு ஒரு கோலிகுண்டு போல் இருக்கும். இவற்றின் மேல் புறம் மிகவும் கடினமாக இருக்கும்.

    இவற்றின் மேல் புற ஓட்டை ஒரு பக்கவாட்டில் உடைத்தால் அவற்றின் உள்ளே ஒரு பருப்பு இருக்கும்.

    இந்த கழற்சிகாயை ஒரு மாதம் வரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இதை சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக தான் இருக்கும்.

    இருந்தாலும் இந்த பருப்புடன் 3 அல்லது 4 மிளகு சேர்த்து உட்கொண்ட பிறகு கொஞ்சம் மோர் சாப்பிடலாம். இவ்வாறு ஒரு மாதம் வரை சாப்பிடுவதால் கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) பிரச்சனைகள் குணமாகும்.

    நீர்க்கட்டி வர காரணம்:

    இந்நோய்க்கான காரணத்தை உறுதியாக கூற முடியாது பருவமடைந்த பெண்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படலாம். ஆனால் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில் தான் வெளியில் தெரிகிறது.

    மரபணு மூலமாக, பரம்பரை பரம்பரையாகக் கூட வரலாம். அதே போல ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பது, டெஸ்டோஸ்டிரோன் அதிகமாக சுரப்பது, புரோலாக்டின் அதிகரிப்பது தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.

    இந்த கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையை அன்றாடம் நம் வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே வராமல் தடுக்க முடியும்.
    உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதமாவது உடற்பயிற்சியையும், உணவுப் பழக்கவழக்கத்தையும் முறையாக பின்பற்றி தொடர்ந்து கடைப்பிடித்து வர வேண்டும்.
    பெண்கள் அனைவரும் கவர்ச்சியான, எடுப்பான, கட்டுக்கோப்பான உடல்வாகுவைப் பெற ஆசைப்படுகிறார்கள். அது அவர் களது மனதுக்கும், உடலுக்கும் அழகு சேர்க்கும். எந்தவிதமான உடை அணிந்தாலும் உடலுக்கு பொருத்தமாகவும் இருக்கும். ஆடி, பாடி வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க வித்திடும். ஆரோக்கியத்திற்கும் பலம் சேர்க்கும். கட்டுக்கோப்பான உடல் என்பது சரியான அளவுள்ள உடல். மெலிந்தும், இளைத்தும், ஒல்லியாகவும் இருக்கக்கூடாது. அதுபோல் குண்டாகிவிடவும் கூடாது. சராசரி உடல் வாகுவை கொண்டிருக்க வேண்டும்.

    கட்டுக்கோப்பான உடலைப்பெற இரண்டு வழிகளை அவசியம் பின்பற்ற வேண்டும். முதலாவது, சரியான உணவை தேர்ந்தெடுத்து, சரியான அளவு சாப்பிடுவது. இரண்டாவது, முறையான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்து முடங்காமல் தொடர்ந்து அதனை செய்து வருவது. இந்த இரண்டும்தான் கட்டுடலுக்கு அச்சாரமிடுபவை.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதமாவது உடற்பயிற்சியையும், உணவுப் பழக்கவழக்கத்தையும் முறையாக பின்பற்றி தொடர்ந்து கடைப்பிடித்து வர வேண்டும்.

    ஒருவருடைய கட்டுக்கோப்பான உடல்வாகு என்பது அவருடைய உயரத்தையும், உடல் தன்மையையும் வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது. பெண்கள் பலர் இயல்பாக குண்டான உடல்வாகுவை கொண்டிருப்பார்கள். அல்லது ஒல்லியாக இருப்பார்கள். சிலர் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுவார்கள். இவை கட்டுக்கோப்பான உடலுக்கு எதிரானவை.

    கட்டுக்கோப்பான உடல் அமைப்புக்கு மாறுவதற்கு முயற்சிப்பவர்கள் முதலில் தங்கள் எடை, முன்பக்க, பின்பக்க அளவு, மார்பளவு போன்றவற்றை துல்லியமாக அளவிட வேண்டும். உடையின் அளவு என்ன? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உடல் பருமனாக இருந்த போதும், உடல் எடை குறைந்த பின்னரும் உடல் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை கணக்கிட தற்போதைய போட்டோ ஒன்றை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அது பின்னாளில் ஏற்படும் மாற்றத்தை கணக்கிட உதவும்.

    உடல் பருமனாக இருப்பவர்கள் முதலிலேயே எவ்வளவு எடையை குறைக்க வேண்டும் என்று தெளிவாக முடிவு செய்துவிட வேண்டும். அதுபோல் ஒல்லியாக இருப்பவர்களும் எவ்வளவு எடையை அதிகரிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்க வேண்டும். அதனை முடிவு செய்வதற்கு முன்பு ஊட்டச்சத்தியல் நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். அத்துடன் உடற்பயிற்சியை வீட்டில் செய்யப்போகிறீர்களா? அல்லது ஜிம்முக்கு செல்லப்போகிறீர்களா? என்பதையும் முடிவு செய்துவிட வேண்டும்.

    வீட்டில் செய்வதாக இருந்தால் உடற்பயிற்சி ஆலோசகரிடம் முறையான ஆலோசனை பெற்று தொடங்க வேண்டும். அவர் உடலின் தன்மை, கட்டுக்கோப்பான உடலை பெற தடையாக இருக்கும் விஷயங்கள், உடல் ஆரோக்கிய குறைபாடு, வயது போன்ற எல்லா பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு எந்தமாதிரியான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று பரிந்துரை செய்வார். குடும்ப டாக்டரின் கருத்தை கேட்டறிவதும் முக்கியமானது.

    பொதுவாக குண்டாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் உடற்பயிற்சி அவசியமானது என்பது தவறான கருத்து. குண்டாக இருந்தாலும், ஒல்லியாக இருந்தாலும் அதற்கான முறைப்படுத்தப்பட்ட உடற்பயிற்சியை பெற்றால்தான் உடல் உறுப்புகளின் செயல்பாடு முழுமையாக இருக்கும். ஜீரண சக்தியும் நன்றாக இருக்கும். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால் அதிகமாக உடலில் சேரும் கலோரி கொழுப்பாக மாறி வயிற்று பகுதியில் சேர்ந்துவிடும்.

    உடற்பயிற்சி செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டால் சவுகரியமான உடைகள், ஷூக்கள் போன்றவற்றை வாங்க வேண்டும். அவை உடற் பயிற்சி மீது முழுமையான ஈடுபாட்டை உருவாக்கும். டிரட்மில், டிரம்பல் போன்ற உபகரணங்களை வாங்கிவிட்டால் வீட்டில் வைத்தே உடற் பயிற்சி செய்யலாம்.

    குண்டாக இல்லாமல் இருந்தாலும் வயிறு மட்டும் தொப்பையாக இருக் கிறதே? என்று கவலைப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குறிப்பாக பெண்களிடம் இத்தகைய வருத்தங்கள் எட்டிப்பார்க்கும். தொப்பை இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க தொப்புள் பகுதியில் டேப் வைத்து அளந்து பார்க்கலாம். அளவெடுக்கும்போது நிமிர்ந்து நிற்க வேண்டும். சுவாசமும் சீராக தொடர வேண்டும். சுவாசத்திற்கு இடையூறு விளைவிக்காமல் டேப்பை இறுக்கி பிடிக்காமல் அளவெடுக்க வேண்டும். வயிற்றின் அளவு 85 செ.மீட்டருக்கு அதிகமாக இருந்தால் ‘அப்டோமினல் ஒபிசிட்டி’ என்ற தொப்பை இருப்பதாக அர்த்தம். 80 செ.மீட்டருக்கு மேல் இருந்தாலே தொப்பை என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டும். சரியான உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்து தொப்பையில் இருந்து மீளலாம்.

    ‘பாடி மாஸ் இன்டெக்ஸ்’ (பி.எம்.ஐ) என்ற பரிசோதனையை செய்து பார்த்தால் அந்தந்த வயதுக்கு ஏற்ப உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது தெரிந்து விடும். கட்டுக்கோப்பான உடல் இருப்பதற்கு பி.எம்.ஐ. அளவு 19-க்கும் 24-க்கும் இடையே இருக்க வேண்டும். பி.எம்.ஐ. அளவு 25 முதல் 27-க்குள் இருந்தால் அதிக எடை இருப்பதாக அர்த்தம். 27-க்கு மேல் இருந்தால் குண்டான உடல்வாகுவுடன் இருப்பதை உறுதி செய்துவிடலாம். பி.எம்.ஐ. 18-க்கு கீழ் இருந்தால் உடல் மெலிந்து இருப்பதாக அர்த்தம். உடனே டாக்டரை சந்தித்து நோய் பாதிப்பு எதுவும் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.

    உணவு கட்டுப்பாட்டை தொடருவதற்கு முன்பாக ஊட்டச்சத்தியல் நிபுணரின் ஆலோசனையையும் பெற வேண்டும். பசி இல்லாமல் இருந்தால் பசியை தூண்டும் மருந்துகளையும், ஜீரணமாகும் மருந்துகளையும் டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும். பி.எம்.ஐ. 19-க்கு மேல் இருக்கும்போது உணவு மீதான விருப்பமும், பசியும் அதிகரிக்கும்.

    உணவை தேர்ந்தெடுக்கும்போது எவ்வளவு கலோரி உடலுக்கு தேவை என்பது முக்கியம். சாதாரண வேலை செய்பவர்களுக்கு தினமும் 2 ஆயிரம் கலோரிகள் தேவை. ஆனால் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் இந்த கலோரி அளவை குறைத்தால்தான் எடையை குறைக்க முடியும். உடல் எடை குறைவாக இருப்பவர்கள் மூன்று வேளை உணவை 6 வேலையாக பிரித்து 3 ஆயிரம் கலோரி அளவுக்கு சாப்பிட வேண்டும். அப்படி தொடர்ந்து சத்தான உணவை சாப்பிட்டு வந்தால் வாரத்திற்கு 2 கிலோ வரை எடை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட எடை வந்த பிறகு உணவை சராசரி அளவாக குறைத்துவிட வேண்டும்.

    ஒல்லியாக இருந்தவர்கள் சாப்பிட்டு பி.எம்.ஐ. அளவை 22 முதல் 24-க்குள் இருக்கும்போது என்ன எடை இருக்கிறதோ அந்த எடையை 3 மாதங்கள் கூடாமல், குறையாமல் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் கனவு காணும் கட்டுடல் பெறுவதற்கு வழி வகுக்கும்.

    அதுபோல் கட்டுடலை சீராக பராமரிப்பதற்கு நல்ல தூக்கமும், ஓய்வும் மிக அவசியம். 5 மணி நேரத்திற்கு குறைவாகவோ, 8 மணி நேரத்திற்கு அதிகமாகவோ தூங்குபவர்கள் எடை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் பெண்கள் போதுமான அளவு ஆழ்ந்து தூங்க வேண்டும்.

    உணவு, உடற்பயிற்சி, உடல் நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாழ்வியல் நெறிமுறைகளை கவனமாக கடைப்பிடித்தால் கனவு காணும் கட்டுடல் எல்லா பெண்களுக்கும் சாத்தியம்தான்!
    பொதுவாக பெண்களுக்கு மாத விடாய் 51 வயதுக்கு பிறகுதான் முடிவுக்கு வரும். தாயாருக்கு மாதவிடாய் சுழற்சி முன்கூட்டியே நின்றிருந்தால் மகளுக்கும் அதே காலகட்டத்தில் மாதவிடாய் நிற்க வாய்ப்புள்ளது.
    மரபணுக்கள் மூலம் குடும்பத்தின் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நோய் பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக தாயிடம் இருந்த நோய் மகளுக்கு எதிர்காலத்தில் ஒருவேளை வரலாம். சில மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் மரபணு நோய்களை கட்டுப்படுத்தலாம்.

    புற்றுநோயும் ஒருவகையில் மரபணு நோயுடன் தொடர்புடையதாகும். ஏனெனில் இது உடலில் உள்ள செல்களை நேரடியாக பாதிக்கும் தன்மை கொண்டது. ஒரே ரத்த உறவை சேர்ந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் புற்றுநோய் இருந்தால் அது அடுத்த தலைமுறையினருக்கும் வரலாம். ஆதலால் குடும்பத்தில் யாரேனும் மார்பக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருந்தால் மற்றவர்கள் 35 வயதுக்கு பிறகு இரண்டு வருடங் களுக்கு ஒருமுறை ‘மேமோகிராம்’ பரிசோதனையை செய்ய வேண்டியது அவசியம்.

    ஒற்றை தலைவலியும் அடுத்த தலைமுறையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. தாய்க்கு ஒற்றை தலைவலி இருந்தால் அவரது குழந்தைகளுக்கு 70 முதல் 80 சதவீதம் வரை ஒற்றை தலைவலி பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நிறைய பெண்கள் ஒற்றை தலைவலி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். கர்ப்ப காலங்கள் மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் ஒற்றை தலை வலிக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

    பொதுவாக பெண்களுக்கு மாத விடாய் 51 வயதுக்கு பிறகுதான் முடிவுக்கு வரும். தாயாருக்கு மாதவிடாய் சுழற்சி முன்கூட்டியே நின்றிருந்தால் மகளுக்கும் அதே காலகட்டத்தில் மாதவிடாய் நிற்க வாய்ப்புள்ளது. 20 பெண்களில் ஒரு பெண்ணுக்கு 46 வயதிலோ அதற்கு முன்போ மாதவிடாய் சுழற்சி நின்றுவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மரபணு தாக்கம் கொண்டவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலத்தை நீட்டிக்க முடியாது என்றாலும், மாதவிடாய் நிற்கும் போது உருவாகும் பாதிப்பு நேராமல் தற்காத்துக்கொள்ள முடியும். அதற்கு முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

    இதய செயலிழப்பு, மாரடைப்பு போன்ற இதயம் சார்ந்த நோய்கள் அடுத்த தலைமுறைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தாயார் இதய நோய் பாதிப்புக்கு ஆளானால் மகளுக்கும் அத்தகைய நோய் ஏற்பட 20 சதவீதம் வாய்ப்புள்ளது. அதுபோல் இதயநோய் பாதிப்புக்குள்ளான குடும்பத்தினருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். இதய நோய்களும், பக்கவாதமும் ஏற்படுவதற்கு தமனிகளில் அடைப்பு, தமனிகள் சுருங்குவது போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

    ஞாபக மறதி, மன நல பாதிப்பு போன்றவையும் மரபணுக்கள் மூலம் அடுத்த தலைமுறையை சென்றடையக்கூடிய நோய் பாதிப்புகளாகும். தாயாருக்கு இத்தகைய நோய் பாதிப்பு உண்டானால் பிள்ளைகளுக்கும் 30 முதல் 50 சதவீதம் வரை அத்தகைய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. அவர்கள் சத்துணவுகளை சாப்பிட்டு உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    ×