என் மலர்
அழகுக் குறிப்புகள்
உங்கள் அனைத்து கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக கூடிய மற்றும் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை உடனடியாக மாற்றிக்காட்டும் ஆற்றலும் கொண்ட ஒரு அற்புத பொருள் தான் நெல்லிக்கனி.
உங்கள் அனைத்து கூந்தல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக கூடிய மற்றும் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை உடனடியாக மாற்றிக்காட்டும் ஆற்றலும் கொண்ட ஒரு அற்புத பொருள் தான் நெல்லிக்கனி. உங்கள் கூந்தலுக்கு எண்ணற்ற விதங்களில் உதவி செய்யக்கூடியதாக இருக்கிறது. தலைமுடி உதிர்வதை தடுப்பது முதல் பொடுகை போக்குவது வரை இந்த கனி உங்களுக்கு உதவி கூந்தலின் மங்கலான தன்மையை மாற்றி பளபளக்க வைக்க கூடியது. எப்படி என் பார்கக்லாம் வாருங்கள்...
* உங்கள் உச்சந்தலையை நெல்லிக்கனி எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது தலைமுடியை வலுவாக்கி, முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். இது இரத்த ஓட்டத்தையும் சீராக்கி, உச்சந்தலைக்கு ஊக்கம் அளித்து, தலைமுடி வளர்ச்சியை அதிகமாக்குகிறது. இதன் கிருமி எதிர்ப்பு தன்மை பொடுகு மற்றும் உச்சந்தலை அரிப்பை கட்டுப்படுத்துகிறது. இந்த எண்ணெயை பயன்படுத்தும் முன், கொஞ்சம் சூடாக்கி, வாரம் இரு முறை உச்சந்தலையில் மசாஜ் செய்து கொள்ளவும்.
* தலைமுடியை வலுவாக்கும் மாஸ்க்கான நெல்லிக்கனி- யோகர்ட் மாஸ்க் உங்கள் கூந்தலில் மகத்தான மாற்றங்களை நிகழ்த்தக்கூடியது, இரண்டு ஸ்பூன் நெல்லி பொடியை எடுத்துக்கொண்டு அதில் சூடான நீர் ஊற்றி கலந்து கொள்ளவும். இப்போது ஸ்பூன் தேன் அல்லது 2 ஸ்பூன் யோகர்ட் ஊற்றி நன்றாக கலந்து கூந்தலில் பூசிக்கொள்ளவும். 30 நிமிடம் அப்படியே வைத்திருந்து பின்னர் இதமான நீரில் அலசவும்.
* உங்கள் மயிர்கால்களில் ஆம்லா சாறை பயன்படுத்துவது தலை முடியில் கொலாஜன் அளவை அதிகமாக்கி, தலை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையை ஐந்து நிமிடம் மசாஜ் செய்து கொள்ளவும். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பு கொண்டு மிதமான நீரில் அலசிக்கொள்ளவும்.
* இப்போது முன்கூட்டியே நரை முடி தோன்றுவது சகஜமான பிரச்சனையாக இருக்கிறது. தலைமுடி நரைப்பதை சீராக்கி, மங்கலான கூந்தலை பளபளக்க வைக்கும் ஆற்றல் நெல்லிக்கனிக்கு இருக்கிறது. நெல்லிக்கனி துண்டு மற்றும் அதன் சாற்றை எடுத்துக்கொண்டு, தண்ணிர் கலந்து 30 நிமிடம் கொதிக்க வைக்கும். பின்னர் இந்த கலவையை குளிர வைத்து, அதில் உள்ள திடமான பொருட்களை நீக்கிவிட்டு, மிச்சமுள்ள கலவை கொண்டு கூந்தலை அலசவும்.
வேட்டி... இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது.
வேட்டி... இது தமிழக ஆண்கள் அணியும் ஆடைகளின் பாரம்பரிய அடையாளம். ஆனால், அந்த பாரம்பரியம் இப்போது அடையாளம் தெரியாமல் போய்விட்டது. முன்பு தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வேட்டி கட்டும் பழக்கம் இருந்தது. வேட்டியை ஒடிசாவில் தோத்தி, குஜராத்தில் தோத்தியு, அசாமில் சூரியா, மேற்கு வங்காளத்தில் தூட்டி, கர்நாடகாவில் கச்சே பான்ச்சே, கேரளாவில் முந்த்து, ஆந்திராவில் பன்ச்சா, மராட்டியத்தில் தோத்தர், பஞ்சாப்பில் லாச்சா, உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் மர்தானி என்று அழைக்கிறார்கள். கடல் தாண்டியும் வேட்டி அணியும் கலாசாரம் இலங்கை, வங்காளதேசம், மாலத்தீவு போன்ற நாடுகளிலும் இருந்தது. நாளடைவில், மேற்கத்திய உடை கலாசாரம் மேலோங்கியதால், தமிழகத்தில் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் வேட்டிக்கு மவுசு குறைந்துபோய்விட்டது.
இந்த நிலையில், உலக பாரம்பரியத்தை பறைசாற்றும் ‘யுனெஸ்கோ’ நிறுவனம், கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச வேட்டி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 6-ந்தேதி (இன்று) கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதன்பிறகுதான் இன்றைய இளைஞர்களுக்கு வேட்டியின் மகத்துவம் தெரியத்தொடங்கியது. ஆனாலும், வேட்டியை முறையாக கட்டி பழக்கம் இல்லாததால், அதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லை. சொல்லப்போனால், அரசியல்வாதிகளின் அடையாளமாக மட்டுமே வேட்டி இருந்து வருகிறது.
இதற்கிடையே, பல வேட்டி தயாரிக்கும் நிறுவனங்கள், இளைஞர்களை கவரும் வகையில், வேட்டியை ஒட்டிக்கொள்ளும் வகையிலும், செல்போன் வைக்க பைகளை வைத்தும், சட்டை நிறத்தில் வேட்டிக்கு ‘பார்டர்’ வைத்தும் விற்பனைக்கு கொண்டுவருகின்றனர். என்றாலும், வேட்டிக்கு எதிர்பார்த்த அளவு மவுசு கிடைக்கவில்லை. இன்றைக்கு சர்வதேச வேட்டி தினம் என்பதால், அலுவலகம் செல்லும் பலர் வேட்டி அணிந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர்.
புதுச்சேரி அரசாங்கம், ஆண் ஊழியர்கள் வேட்டி அணிந்துவர வேண்டுகோள் விடுத்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எது எப்படி என்றாலும், இன்று ஒரு நாள் மட்டும் ஆண்களின் ‘வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்’ போன்ற சமூக வலைதள பக்கங்களில், வேட்டி அணிந்த படங்கள் அலங்கரிக்கப்போகின்றன. அதன்பிறகு, பழைய நிலையே தொடரும் என்றாலும், வேட்டி அணிவதை ஆண்கள் மிடுக்காக கருத வேண்டும். தமிழனின் அடையாளம் இது என்பதை உணர்ந்து, தொடர்ந்து அணிவதில் ஆர்வம் காட்ட வேண்டும். கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை கைதூக்கிவிட வேண்டும் என்றால், ஆண்கள் வேட்டி அணிவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். பெண்களும் அதற்கு உந்து சக்தியாக இருக்க வேண்டும்.
ஆந்திர மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட இந்தப் பட்டுச் சேலைகள் அதன் அடர்த்தியான வண்ண பார்டர்கள் மற்றும் தங்க நிற ஜரிகைகளால் ஆன பல்லுவால் மங்கையர் மனதில் நீங்காத இடத்தை பல காலமாக பிடித்து உள்ளது என்று சொல்லலாம்.
ஆந்திர மாநிலத்தை பிறப்பிடமாக கொண்ட இந்தப் பட்டுச் சேலைகள் அதன் அடர்த்தியான வண்ண பார்டர்கள் மற்றும் தங்க நிற ஜரிகைகளால் ஆன பல்லுவால் மங்கையர் மனதில் நீங்காத இடத்தை பல காலமாக பிடித்து உள்ளது என்று சொல்லலாம். எம்பிராய்டரி செய்யப்பட்டு சிக்கலான வடிவங்களை ஜரிகையில் பார்டர்கள் மற்றும் பல்லுவில் நெய்வதால் இந்தச் சேலைகள் மணமகள் அணியும் சேலையாகவும் உள்ளது. பாரம்பரிய அழகு மற்றும் நவீன வடிவமைப்புடன் இருக்கும் தர்மாவரம் பட்டுச்சேலைகள் பட்டு குடும்பத்திலும், பேஷன் உலகிலும் புகழ் பெற்றவையாகக் கருதப்படுகின்றன.
தோற்றம் மற்றும் வரலாறு
ஆந்திராவின் ராயல்சீமா பகுதியில் அமைந்துள்ள அனந்தபூர் மாவட்டத்தின் கிராமப்புறத்தில் அமைந்துள்ள தர்மாவரம் என்ற சிறிய கட்டமைக்கப்பட்ட நகரத்திலிருந்துதான் இந்தப் பட்டுச்சேலைகள் உருவாகின்றன. இந்தப் பட்டுச் சேலைகள் நூற்று இருபது ஆண்டுகள் பழமையானவை.
மஞ்சள் மற்றும் மெரூன் வண்ணச் சேர்க்கையில் நெசவாளர்களால் முதன் முதலில் நெசவு செய்யப்பட்ட சேலைகள் திருமணப் புடவையாகவே கருதப்பட்டது. இந்த இரண்டு வண்ணங்களும் இணைந்த ஷேட்டுகளுடன் வரும் இந்தப் பட்டுச்சேலைகள் ஒரு தனித்துவமான தோற்றத்தை வெளிப்படுத்தி மக்களின் பேராதரவைப் பெற்ற என்றே சொல்லலாம்.
இன்றைய நிலை
குறைந்த எண்ணிக்கையில் துவங்கப்பட்ட தர்மாவரம் நெசவு உற்பத்தியானது இன்று ஆயிரத்து ஐநூறு பட்டு உற்பத்தியாளர்களுடன் ஒரு லட்சம் கைநெசவையும் கொண்டுள்ளது. இந்தப் பட்டுச் சேலைகளின் தூய்மையான ரகம் மற்றும் வடிவமைப்பால் இன்று உலகளவில் லட்சக்கணக்கான மக்களிடையே புகழ் மற்றும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டுச் சேலைகளின் விலை வரம்பானது ரூபாய் இரண்டாயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை இருப்பதும் இதன் புகழுக்கு மற்றொரு காரணியாகும்.
புடவையில் இடம் பெறும் வடிவமைப்புகள், ஜரிகை மற்றும் எம்பிராய்டரி போன்றவை அதன் விலையைத் தீர்மானிக்கின்றன. தர்மாவரம் புடவையின் இரண்டு வண்ணங்கள் இணைந்து தரும் ஷேடுகள் தர்மாவரம் பட்டின் தனிச்சிறப்பாகக் கருதப்படுகின்றது.
வகைகள்
தங்க முலாம் பூசப்பட்ட ஜரிகை, பார்டர்கள் மற்றும் அவற்றில் பிரிண்ட் செய்யப்பட்ட கலைப் படைப்புகளுக்கு தர்மாவரம் புடவைகள் மிகவும் பிரபலமானவை. இவை தவிர கோயில்களிலும் பிற மத வழிபாட்டுத் தலங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ள மதச் சின்னங்களை ஒத்த தங்க ப்ரோக்கேட் வடிவங்கள் மற்றும் உருவங்களும் இந்த பட்டுச் சேலைகளில் பொரிக்கப்படுகின்றன.
யானை வடிவமைப்புகள், மயில்கள் அல்லது அழகிய கோயில் எல்லைகளாக இருந்தாலும், இந்த கருக்கள் மற்றும் வடிவமைப்புகள் இந்த புடவைகள் மூலம் மதக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. இதனால் இவை உலகளவில் மட்டுமல்லாமல், மத ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்படுகின்றன.
இன்றைய தர்மாவரம் புடவைகள் அலங்காரக்கற்கள், சம்கிகள், சீக்வின்ஸ்கள் மற்றும் குந்தன்கள் ஆகியவற்றால் புதுமையாக அலங்கரிக்கப் படுகின்றன. அவை ஒரே நிறத்திலோ அல்லது பல வண்ணங்களைக் கொண்டோ புடவையின் வண்ணத்திற்கு ஏற்றாற்போல் வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த கலைப்படைப்பானது தர்மாவரம் பட்டுப் புடவைகளில் மட்டுமல்லாமல் தர்மாவரப் பட்டில் தயாரிக்கப்படும் சல்வார் கமீஸ், குர்திஸ், ஸ்கார்ஃப்ஸ் மற்றும் ஸ்டோல்களிலும் இருப்பதைக் காண முடியும்.
பொருந்தக்கூடிய தன்மை
தர்மாவரத்தில் தயாராகும் பட்டுப்புடவைகள் முக்கியமாக தென்னிந்திய மணப்பெண்களுக்கான ‘திருமணப் புடவை’ என்ற அடையாளத்துடனும் குறிப்பிடப்படுகின்றது. இந்தப் பட்டுப்புடவைகளின் கம்பீரமான தோற்றமும், பாரம்பரிய வடிவமைப்பும் மத விழாக்கள், திருமணங்கள், குடும்ப விழாக்கள், பூஜைகள் என அனைத்திற்கும் அணிந்து கொள்ளும் விதமாக உள்ளது.
இந்தப் பட்டுச் சேலைகள் இந்திய அளவில் மட்டுமல்லாமல், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் என சர்வதேச அளவிலும் கால் பதித்துள்ளன. பல வெளிநாடுகள் தர்மாவரம் பட்டு வெளிப்படுத்தும் ராயல்டி மற்றும் நேர்த்தியைப் பாராட்டுகின்றன. அத்துடன் இந்த பட்டுப்புடவைகளின் பாரம்பரிய அம்சத்தையும் அங்கீகரித்து வருகின்றன.
இந்தப் பட்டுப்புடவைகள் தங்கம் மற்றும் வைர நகைகளுடன் அணிய ஏற்றவை என்று சொல்லலாம்.
தர்மாவரம் பட்டுத்துணியானது கனமாகவும், அதே நேரத்தில் மென்மையாகவும் இருப்பதால் இவற்றை உலர் சலவை செய்து இஸ்திரி போடுவதே உகந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்தச் சேலைகளின் பிரத்யேக வண்ணச் சேர்க்கைகள் மற்றும் பல்வேறு வகையான இன வடிவமைப்புகளால் ராஜ்வாடி புடவைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இயந்திரம் மற்றும் கைநெசவின் மூலம் தயாரிக்கப்படும் இந்தப் பட்டுப் புடவைகளில் அடிப்படையாக இருபத்தி ஆறு டிசைன்கள் உள்ளன.
ஒரு புடவையை கைநெசவின் மூலம் உருவாக்க இரண்டு நெசவாளர்கள் தொடர்ச்சியாக நான்கிலிருந்து எட்டு நாட்கள் வரை தங்கள் உழைப்பைத் தர வேண்டியுள்ளது. பிரம்ம கமலம் மற்றும் நட்சத்திர டிசைன்கள் இந்தச் சேலைகளில் மிகவும் பிரபலம் என்றே சொல்லலாம்.
எழிலான தோற்றம் தரும் தர்மாவரம் பட்டுச்சேலைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் தன்னுடைய புகழைப் பரப்பியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவது என்பது ஒரு கடினமான வேலையாகும். குளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு வராமல் முடியைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவது என்பது ஒரு கடினமான வேலையாகும். குளிர்காலங்களில் தலைமுடியை அலசுவதற்கு மிகவும் சோம்பலாக இருக்கும். இதனால் தலைமுடி பிசுபிசுப்பாக மாறும். குளிர்காலத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு வராமல் முடியைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
* உங்கள் தலைமுடியை அடிக்கடி தொடாதீர்கள். ஏனென்றால் உங்கள் விரல்களிலிருந்து அழுக்கை உங்கள் உச்சந்தலைக்கு கொண்டு செல்வது இதுதான்.
* உங்கள் தலைமுடியை சரியான இடைவெளியில் கழுவுங்கள். ஆனால் உடலானது உலர்ந்த உச்சந்தலையை ஈடுசெய்ய முயற்சிக்கும் போது, அதிகப்படியாக தலைமுடியை அலசினால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மறுபுறம், குறைவான முறை தலைமுடியை அலசுவதால் எண்ணெய்கள் மற்றும் பூஞ்சை தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.
* உங்கள் தலையணைகள் மற்றும் சீப்புகளை சுத்தமாக வைத்திருங்கள் மற்றும் இறுக்கமாக முடியைக் கட்டுவதைத் தவிர்க்கவும். கெமோமில் க்ளென்சரைப் பயன்படுத்துங்கள், இது உங்கள் தலைமுடியை உள்ளே இருந்து வலிமையாக்கும்.
* அதிகமான முடி பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். மேலும், உங்கள் தலைமுடிக்கு வழக்கமான ஷாம்பூவுடன் எதிர்பார்த்த தீர்வுகள் கிடைக்கவில்லை என்றால், உங்கள் தோல் மருத்துவரை அணுகவும். இல்லையெனில், அதிகப்படியான எண்ணெய் பசையுடனான முடி காரணமாக உங்களுக்கு உச்சந்தலையில் தடிப்புத் தோல் அழற்சி மற்றும் செபொர்ஹெக் டெர்மடிடிஸ் இருக்கலாம், அதன் பிறகு உங்களுக்கு சிகிச்சை தேவைப்படலாம்.
* ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறுடன், கற்றாழை ஜெல்லைக் கலந்து ஒரு கண்டிஷனரைத் தயாரிக்கவும். இந்தக் கலவையை கண்டிஷனராகப் பயன்படுத்துங்கள். இந்தக் கலவை கூந்தலில் இருந்து எண்ணெயைக் குறைக்க உதவும்.
குறிப்பாக எண்ணெய் பசை முடிக்கு ஏற்ற ஷாம்பூக்களைத் தேர்ந்தெடுக்கவும். ஷாம்பூவின் சாதாரண ஜீபி நிலை 4.5, 6.7 ஆகும். அத்தகைய சூழ்நிலையில், எண்ணெய் பிசுபிசுப்பு உள்ளவர்களுக்கு, அதிக பி.எச் கொண்ட ஷாம்பு தேவை. கண்டிஷனர்கள் கூந்தலில் பூசப்படுகின்றன, எனவே எண்ணெய் நிறைந்த முடிக்கு கண்டிஷனர் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கக்கூடிய ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பெர்ரிப் பழங்களை சாப்பிடுங்கள்.
குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என பருவ காலங்கள் மாறும்போது நம்முடைய உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும அழகும் அதே அளவுக்குப் பாதிக்கப்படுகிறது.
பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்சினை சரும வறட்சி தான். அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிற்நத தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. பொதுவாக மஞ்சள் கிழங்கை பச்சையாகவோ அல்லது வேகவைத்து அரைத்தோ முகத்துக்குப் பூசினால் அழகு கூடும் என்பது நமக்குத் தெரியும்.
பெண்கள் மஞ்சள் தேய்த்து குளித்துவிடுவார்கள். மூன்று கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்க தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ஞ் அளவுக்கு எடுத்து அரைத்து அதில் கலந்து சிறிது நேரம் கலந்து கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்கிற தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடியுங்கள். சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
இந்த ஆவி பிடிக்கிற தண்ணீருக்குள் வெறுமனே மஞ்சள் கிழங்கு மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனுடன் சேர்த்து ஒரு கைப்பிடி அளவுக்கு துளசி இலைகளையும் போட்டுக் கொள்ளலாம்.
ஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச் சிறந்த பொருள். பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது, அதனுள் சிறிதளவு எலுமிச்சை இலைகளைப் போடுங்கள். ஜலதோஷம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகள் கூட குணமாகியிருக்கும். எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் அரை மூடி எலுமிச்சை சாறைக்கூட சேர்த்துக் கொள்ளலாம்.நீங்கள் எலுமிச்சை கழத்தை சாறெடுத்துவிட்டு, தோல்களைத் தூக்கி கீழே போட்டு விடாதீர்கள். அதை பத்திரப்படுத்தி வைத்து அந்த தோல்களைக் கூட தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.
ஆவி பிடித்த பின்னால் நாம் அப்படியே டவலில் துடைத்துக் கொண்டு, அடுத்த வேலை பார்க்கக் கிளம்பிவிடுகிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது. ஆவி பிடித்து முடித்த பின்பு, துண்டால் துடைத்துக் கொண்டு பின் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும்.ஆவி பிடித்த பின்னர், நம்முடைய முகத்தில் உள்ள சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது அவசியம். அதன்பின் ஏதாவது ஒரு பேஸ்பேக் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள். உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்கும்.
வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. வேப்ப எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் மாறும்.
வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. அதாவது, இந்த எண்ணெய் முதலில் உச்சந்தலையை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. அத்துடன் வேப்ப எண்ணெய் உச்சந்தலையில் இருக்கும் நுண்ணுயிரிகளிடமிருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் முடியின் வேர்பகுதியை நன்கு வளரச் செய்கிறது. மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடியை சேதமடையாமல் பாதுகாக்கின்றன.வேப்ப எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் மாறும்.
தேவையான பொருட்கள்:
வேப்ப எண்ணெய் - 1/2 தேக்கரண்டியளவு
தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டியளவு
லாவெண்டர் எண்ணெய் - 10 சொட்டுகள்
முதலில் வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை நன்கு கலந்து கொள்ளுங்கள். கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க லாவெண்டர் எண்ணெயை சேர்த்து கலக்கி அந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசுங்கள். பொடுகு மற்றும் நமைச்சல் கேண்டிடா இது பொடுகுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.
பல பூஞ்சைகளுக்கு எதிராக போராட வேப்ப எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பொடுகுத் தொல்லை ஏற்படும் போது அத்துடன் தலையில் சிவப்பு நிற காயங்கள், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. வேப்ப எண்ணெயில் நிம்பிடின், பூஞ்சை காளான், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. இந்த பண்புகள் தலையில் உள்ள பொடுகு மற்றும் நமைச்சல்களை நீக்க சிறந்த தீர்வாக அமையும்.
பொதுவாக உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும். ஆனால் இந்த பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிய வழியில் வெள்ளையாக்க முடியும்.
பொதுவாக உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும். இதற்கு அப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் இறந்த செல்கள் தேங்கி இருப்பது தான். இப்படி கருப்பாக இருப்பதால், ஃபேஷனான பல உடைகளை உடுத்த முடியாமல் பல பெண்கள் வருத்தப்படுவார்கள். ஆனால் இந்த பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிய வழியில் வெள்ளையாக்க முடியும்.
* 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முழங்கையில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்யுங்கள். இதனால் முழங்கால் விரவில் வெள்ளையாகும்.
* மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முழங்கையில் தடவி நன்கு காய்ந்த பின், சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்க, வாரத்திற்கு பலமுறை செய்யுங்கள்.
* 1 டேபிள் ஸ்பூன் தேனில், பால் மற்றும் மஞ்சள் தூளை சரிசம அளவில் கலந்து, முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். வேண்டுமானால் தேனுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.
* தினமும் பாலை பஞ்சுருண்டை பயன்படுத்தி முழங்கையில் தடவி ஊற வைத்து கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், விரைவில் முழங்கையில் உள்ள கருமை நீங்கி, முழங்கை வெள்ளையாகும்.
* தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சிறிது சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இப்படி 2 நாளைக்கு ஒருமுறை செய்து வர, முழங்கை கருமை காணாமல் போகும்.
* எலுமிச்சை சாற்றை நேரடியாக முழங்கை பகுதியில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் என 1-2 வாரம் தொடர்ந்து செய்து வாருங்கள். முழங்கையில் இருக்கும் கருமை போய்விடும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முழங்கையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள். இதனால் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் நீங்கா கருமையை அகற்றும். 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி மென்மையாக சிறிது நேரம் தேய்த்து பின் நீரில் கழுவுங்கள். இதனால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, கருமையைப் போக்கும்.
* வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் சரும கருமையைப் போக்க வல்லது. இத்தகைய வினிகருடன் தயிர் சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, முழங்கை கருமை மாயமாகும்.
* கடுகு எண்ணெய் ஒரு ஆன்டி-செப்டிக் பொருள். இதை முழங்கையில் தினமும் தடவி வந்தால், முழங்கை மேலும் கருமையாவதைத் தடுக்கலாம். அதுவும் கடுகு எண்ணெய் மற்றும் வெதுவெதுப்பான நீரை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும்.
கடுகு எண்ணெயை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.
கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களை காட்டிலும் ஆரோக்கியம் கொண்டது. இதனை உணவாக சமைக்க பயன்படுத்தினாலும், முக அழகை மேம்படுத்த பயன்படுத்தினாலும் இதன் பயன் அதிகம். காரணம், இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.
முதலில் கடுகு எண்ணெய்யுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் மசாஜ் செய்த பின்னர் முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இது முகத்தை பளபளவென மாற்றி அழகான சருமத்தை தரும்.
கடலை மாவுடன் தயிர் மற்றும் கடுகு எண்ணெய்யை சேர்த்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து முகம் மற்றும் கழுத்தில் பூசி மெல்ல மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முகத்தின் அழகை கெடுக்கும் பருக்களை ஒழிக்க எளிய வழி உள்ளது. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவினால் பருக்கள் மறையும். மேலும், பருக்களினால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்து போகும்.
மஞ்சள் தூள், சந்தன தூள், குங்குமப்பூ ஆகியற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். அதன்பின் கடலை மாவு மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகள் நீங்கி விடும்.
குங்குமப்பூவை தினமும் பயன்படுத்தினால் முகத்திற்கு பிரகாசத்தை அளிக்கும். முகப்பரு, வடுக்கள், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
குங்குமப்பூ சரும ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. தினமும் பயன்படுத்தினால் முகத்திற்கு பிரகாசத்தை அளிக்கும். குங்குமப்பூ நீரை பருகுவதன் மூலம் சருமத்தின் கட்டமைப்பை மேம்படுத்தலாம். இயற்கையாகவே சருமத்தை ஜொலிக்கவைக்கலாம். முகப்பரு, வடுக்கள், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம்.
* காலை வேளையில் வெறும் வயிற்றில் குங்குமப்பூ நீரை பருகுவது நல்லது. இது காபிக்கு மாற்றான ஆரோக்கிய பானமாகவும் கருதப்படுகிறது. ஒரு டம்ளர் குங்குமப்பூ நீர் பருகினால் அந்த நாளை உற்சாகத்துடன் தொடங்கலாம். பார்க்கும் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வைக்கும் தன்மை கொண்டது. அது உடல்நிலையிலும், மன நிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
* குங்குமப்பூவில் இருக்கும் சில ஆன்டி ஆக்சிடன்டுகள் முடி உதிர்வதை தடுக்க உதவும். கூந்தலை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க துணைபுரியும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
* உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் குங்குமப்பூ நீர் பருகிவரலாம். பசியை போக்கி உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு துணைபுரியும்.
* மாதவிடாய் காலத்தில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்பவர்களுக்கு குங்குமப்பூ நீர் பலன் தரும். வலியைக் குறைத்து, உடல் இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும்.
* ஐந்து, ஆறு குங்குமப்பூ இழைகளை ஒரு டம்ளர் சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து பருகலாம். டாக்டரிடம் ஆலோசனை பெற்று பருகுவது நல்லது.
* காலை வேளையில் வெறும் வயிற்றில் குங்குமப்பூ நீரை பருகுவது நல்லது. இது காபிக்கு மாற்றான ஆரோக்கிய பானமாகவும் கருதப்படுகிறது. ஒரு டம்ளர் குங்குமப்பூ நீர் பருகினால் அந்த நாளை உற்சாகத்துடன் தொடங்கலாம். பார்க்கும் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வைக்கும் தன்மை கொண்டது. அது உடல்நிலையிலும், மன நிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
* குங்குமப்பூவில் இருக்கும் சில ஆன்டி ஆக்சிடன்டுகள் முடி உதிர்வதை தடுக்க உதவும். கூந்தலை வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க துணைபுரியும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
* உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் குங்குமப்பூ நீர் பருகிவரலாம். பசியை போக்கி உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கு துணைபுரியும்.
* மாதவிடாய் காலத்தில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்பவர்களுக்கு குங்குமப்பூ நீர் பலன் தரும். வலியைக் குறைத்து, உடல் இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யும்.
* ஐந்து, ஆறு குங்குமப்பூ இழைகளை ஒரு டம்ளர் சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து பருகலாம். டாக்டரிடம் ஆலோசனை பெற்று பருகுவது நல்லது.
கொரோனா பீதியால் பெண்கள் மாஸ்க், கையுறை போன்றவைகளை அணிவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பெண்கள் கையுறைகளை அணியத் தொடங்கிவிட்டால் உங்கள் கைகளின் 50 சதவீத பாதுகாப்புக்கும், அழகுக்கும் உத்தரவாதமாகிவிடும்.
கொரோனா பீதியால் பெண்கள் மாஸ்க், கையுறை போன்றவைகளை அணிவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். கொரோனா நெருக்கடி முடிந்ததும் அவர்கள் ‘மாஸ்க்’ அணிவதை தவிர்த்தாலும், தொடர்ந்து அவர்கள் வீட்டு வேலைகளை பார்க்கும்போது கையுறைகளை அணிவது நல்லது. அதனை அவர்கள் சமையல் அறையில் வைத்துக்கொண்டு சமையல் வேலைகள் செய்யும்போதும், வீட்டு வேலைகள் செய்யும்போதும் அதை அணிந்துகொள்ள வேண்டும். டிடர்ஜென்ட், வாஷிங்பவுடர், லோஷன்கள் பயன்படுத்தும்போதும், கார்டனிங் செய்யும்போதும் அந்த கையுறைகளை அணிவது அவசியம். கையுறைகளை நீங்கள் அணியத் தொடங்கிவிட்டால் உங்கள் கைகளின் 50 சதவீத பாதுகாப்புக்கும், அழகுக்கும் உத்தரவாத மாகிவிடும்.
நகங்கள்தான் கைகளுக்கு அதிக அழகைத் தரும். அதனால் அழுக்கு சேராத அளவுக்கு சுத்தமாக்கி, நகங்களை நன்றாக பராமரியுங்கள். நகங்கள் குறைபாட்டுடனோ, அழகின்றி யோ காணப்பட்டால் அதை நினைத்து வருந்தவேண்டியதில்லை. அழகு சிகிச்சை நிபுணர்கள் குறை தெரியாத அளவுக்கு அதனை மேம்படுத்தி அழகாக்கிவிடுவார்கள்.
நகத்தின் வெளியே பூசக்கூடிய பலவிதமான ‘கோட்டிங்’குகள் உள்ளன. பேஸ் கோட், டாப் கோட், எனாமல் ஆகிய மூன்று விதங்கள் அதில் உள்ளன. நகத்தின் முனைப்பகுதியை மினு மினுக்கச் செய்வது பேஸ் கோட். அதிக தொந்தரவு தராத ஜெலட்டின் வகையை சார்ந்தது அது. செல்லுலோஸ் நைட்ரேட் என்ற அழகு ரசாயனப் பொருளில் பிக்மென்ட்டுகள் சேர்த்து நெயில் எனாமல் தயாராகிறது. பேஸ் கோட், நெயில் எனாமல் பயன்படுத்தும்போது பளிச்சென்ற அழகை மெருகூட்டித் தருவதற்காக டாப் கோட் பயன்படுத்தப் படுகிறது. இது நிறமற்றது. சூரிய ஒளிபட்டு நகத்தின் நிறம் மாறாமல் இருக்க சன்ஸ்கிரீனும் பயன்படுத்த லாம்.
பாலீஷை நீக்கம்செய்யும்போது கவனியுங்கள். அதிகமாக ரிமூவரை பயன்படுத்தும்போது நகத்தின் இயற்கைத்தன்மை மாறி, நகம் பலகீனமாகிவிடும். அதனால் ரிமூவரை தேவைக்கு மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்துங்கள். பெரும்பாலான நேரம் கைகளை நீரில் நனைத்து வேலைபார்ப்பவர்களுக்கு நகங்களின் ஓரம் சிவந்து, வீங்கி வலி தோன்றலாம். கவனிக்காமலே விட்டு விட்டால் சீழ்பிடித்துவிடும். அதனால் தண்ணீரில் கைகளை நனைத்து வேலைபார்ப் பவர்கள் கைவிரல்கள் மீது அதிக கவனத்தைக் காட்டவேண்டும்.
நகங்களின் ஆரோக்கியத்திற்கு ‘பயோட்டின்’ என்ற சத்து அவசியம். இது பப்பாளி, கேரட், வாழைப்பழம் போன்றவைகளில் இருக்கிறது.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கைகளில் கருப்பு புள்ளிகள், நிறமாற் றம், சுருக்கம் போன்றவை தோன்றும். அவர்கள் இளம் சுடுநீரில் உப்பு போட்டு அதில் கைகளை சிறிது நேரம் முக்கிவைக்கவேண் டும். பின்பு கைகளை நன்றாக துடைத்துக் கொண்டு பப்பாளி சாறு அல்லது தக்காளி சாறு பூசி மசாஜ் செய்யவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். சருமத்தின் வறட்சியை போக்க, பழச்சாற்றை சருமத்தில் பூசவேண்டும்.
பெண்கள் 45 வயதுக்கு பிறகு கை பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கைகளால் அதிக வேலை களை செய்வதால், கை எலும்புகள் பலம்பெறும் விதத்தில் கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்ணவேண் டும். கைகளுக்கு தொடர்ச்சியாக அதிக நேரம் வேலைகொடுக்கக்கூடாது. எழுதும் போதும், கீபோர்டில் வேலை செய்யும்போதும் இடைஇடையே கை களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.
நகங்கள்தான் கைகளுக்கு அதிக அழகைத் தரும். அதனால் அழுக்கு சேராத அளவுக்கு சுத்தமாக்கி, நகங்களை நன்றாக பராமரியுங்கள். நகங்கள் குறைபாட்டுடனோ, அழகின்றி யோ காணப்பட்டால் அதை நினைத்து வருந்தவேண்டியதில்லை. அழகு சிகிச்சை நிபுணர்கள் குறை தெரியாத அளவுக்கு அதனை மேம்படுத்தி அழகாக்கிவிடுவார்கள்.
நகத்தின் வெளியே பூசக்கூடிய பலவிதமான ‘கோட்டிங்’குகள் உள்ளன. பேஸ் கோட், டாப் கோட், எனாமல் ஆகிய மூன்று விதங்கள் அதில் உள்ளன. நகத்தின் முனைப்பகுதியை மினு மினுக்கச் செய்வது பேஸ் கோட். அதிக தொந்தரவு தராத ஜெலட்டின் வகையை சார்ந்தது அது. செல்லுலோஸ் நைட்ரேட் என்ற அழகு ரசாயனப் பொருளில் பிக்மென்ட்டுகள் சேர்த்து நெயில் எனாமல் தயாராகிறது. பேஸ் கோட், நெயில் எனாமல் பயன்படுத்தும்போது பளிச்சென்ற அழகை மெருகூட்டித் தருவதற்காக டாப் கோட் பயன்படுத்தப் படுகிறது. இது நிறமற்றது. சூரிய ஒளிபட்டு நகத்தின் நிறம் மாறாமல் இருக்க சன்ஸ்கிரீனும் பயன்படுத்த லாம்.
பாலீஷை நீக்கம்செய்யும்போது கவனியுங்கள். அதிகமாக ரிமூவரை பயன்படுத்தும்போது நகத்தின் இயற்கைத்தன்மை மாறி, நகம் பலகீனமாகிவிடும். அதனால் ரிமூவரை தேவைக்கு மட்டும் குறைந்த அளவில் பயன்படுத்துங்கள். பெரும்பாலான நேரம் கைகளை நீரில் நனைத்து வேலைபார்ப்பவர்களுக்கு நகங்களின் ஓரம் சிவந்து, வீங்கி வலி தோன்றலாம். கவனிக்காமலே விட்டு விட்டால் சீழ்பிடித்துவிடும். அதனால் தண்ணீரில் கைகளை நனைத்து வேலைபார்ப் பவர்கள் கைவிரல்கள் மீது அதிக கவனத்தைக் காட்டவேண்டும்.
நகங்களின் ஆரோக்கியத்திற்கு ‘பயோட்டின்’ என்ற சத்து அவசியம். இது பப்பாளி, கேரட், வாழைப்பழம் போன்றவைகளில் இருக்கிறது.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு கைகளில் கருப்பு புள்ளிகள், நிறமாற் றம், சுருக்கம் போன்றவை தோன்றும். அவர்கள் இளம் சுடுநீரில் உப்பு போட்டு அதில் கைகளை சிறிது நேரம் முக்கிவைக்கவேண் டும். பின்பு கைகளை நன்றாக துடைத்துக் கொண்டு பப்பாளி சாறு அல்லது தக்காளி சாறு பூசி மசாஜ் செய்யவேண்டும். 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். சருமத்தின் வறட்சியை போக்க, பழச்சாற்றை சருமத்தில் பூசவேண்டும்.
பெண்கள் 45 வயதுக்கு பிறகு கை பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கைகளால் அதிக வேலை களை செய்வதால், கை எலும்புகள் பலம்பெறும் விதத்தில் கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்ணவேண் டும். கைகளுக்கு தொடர்ச்சியாக அதிக நேரம் வேலைகொடுக்கக்கூடாது. எழுதும் போதும், கீபோர்டில் வேலை செய்யும்போதும் இடைஇடையே கை களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.
தூக்கமின்மை முதல் சரும சுருக்கங்கள் வரை பல்வேறு விதமான உடல்நல கோளாறுகளை குணப்படுத்துவதற்கு ‘ஒளி தெரபி’ எனப்படும் சிகிச்சை முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது.
தூக்கமின்மை முதல் சரும சுருக்கங்கள் வரை பல்வேறு விதமான உடல்நல கோளாறுகளை குணப்படுத்துவதற்கு பல்வேறு சிகிச்சைகள் நடைமுறையில் இருக்கின்றன. ‘ஒளி தெரபி’ எனப்படும் சிகிச்சை முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது. வெள்ளை, நீலம், மஞ்சள் ஆகிய நிறங்கள் ஒளி சிகிச்சை யில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மன நிலையை மேம்படுத்த வெள்ளை ஒளி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் ஒளி கதிர்களை வெளியிடும் விளக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விளக்கின் அருகில் காலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருப்பது மனநிலையை மேம்படுத்தும். வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை நிலையாக வைத்திருக்கவும் உதவும். குளிர்காலத்தில் ஐந்தில் ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படும். அப்போது இந்த ஒளியின் பிரகாசத்தில் அமர்ந்திருப்பது அரு மருந் தாக அமையும் என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.
நீல ஒளி சிகிச்சை தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டது. நீல நிற வெளிச்சத்தை உமிழும் பல்புகளில் பகல் பொழுதில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடும்போது இரவில் நல்ல தூக்கம் வரும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதுதொடர்பாக தீவிர ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிவப்பு ஒளி சிகிச்சை சரும சுருக்கத்தை குறைக்க உதவும் என்பது 2013-ம் ஆண்டு நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிவப்பு ஒளி தோல் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளது. கொலோஜன் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. சருமத்தின் அமைப்பை மேம்படுத்த வும் துணைபுரிகிறது. இத்தகைய ஒளி சிகிச்சையை டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்வது பலன் தரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மன நிலையை மேம்படுத்த வெள்ளை ஒளி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் ஒளி கதிர்களை வெளியிடும் விளக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விளக்கின் அருகில் காலையில் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருப்பது மனநிலையை மேம்படுத்தும். வேறு எந்த சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் மனதை நிலையாக வைத்திருக்கவும் உதவும். குளிர்காலத்தில் ஐந்தில் ஒருவரின் மனநிலையில் மாற்றம் ஏற்படும். அப்போது இந்த ஒளியின் பிரகாசத்தில் அமர்ந்திருப்பது அரு மருந் தாக அமையும் என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.
நீல ஒளி சிகிச்சை தூக்கத்தை தூண்டும் தன்மை கொண்டது. நீல நிற வெளிச்சத்தை உமிழும் பல்புகளில் பகல் பொழுதில் குறிப்பிட்ட நேரத்தை செலவிடும்போது இரவில் நல்ல தூக்கம் வரும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதுதொடர்பாக தீவிர ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிவப்பு ஒளி சிகிச்சை சரும சுருக்கத்தை குறைக்க உதவும் என்பது 2013-ம் ஆண்டு நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிவப்பு ஒளி தோல் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டுள்ளது. கொலோஜன் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. சருமத்தின் அமைப்பை மேம்படுத்த வும் துணைபுரிகிறது. இத்தகைய ஒளி சிகிச்சையை டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்வது பலன் தரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சூரிய கதிர்வீச்சில் சருமத்திற்கு பாதிப்பு நேராமலும், பளபளப்பு தன்மை குறையாமலும் இருப்பதற்கு சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
காலை வேளையில் வெளிப்படும் சூரிய கதிர்வீச்சுக்கள்தான் உடலுக்கு நல்லது. சூரிய கதிர்வீச்சில் சருமத்திற்கு பாதிப்பு நேராமலும், பளபளப்பு தன்மை குறையாமலும் இருப்பதற்கு சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் தோல் மருத்துவரை அணுகி சரும பொருட்களை பயன்படுத்துவது நல்லது. அதுபோல் புதிய பொருட்களை பயன்படுத்த முயற்சிப்பவர்களும் உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்புடைய பொருட்களை தேர்வு செய்து உபயோகிப்பதுதான் சிறந்தது. ஒப்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒப்பனை அதிகமாக இருந்தால் அவை சரும துளைகளை அடைத்துவிடும். அதிக வெப்பமும், ஈரப்பதமும் சருமத்தின் சுவாச திறனை பாதிக்கும். சரும செல்களில் இருந்து வெளியாகும் இயற்கையான ஆக்ஸிஜனேற்றியான குளுட்டாதையோன் போன்றவை சருமத்தின் நிறமிக்கு உதவும்.
“குளுட்டாதையோன் நம் உடலில் மெலனின் செயல்பாட்டை சீர்படுத்தும். அதனால் சருமம் கருமை நிறத்திற்கு மாறுவது தடுக்கப்படும். மேலும் குளுட்டாதையோன் சருமத்தில் கருமையான புள்ளிகள் தோன்றாமலும் தடுக்கும். சருமத்தில் அல்ட்ரா வயலெட் கதிர்களால் உருவாகும் நச்சுகளை அகற்றவும் உதவும்” என்கிறார் தோல் மருத்துவர் சுஷாந்த் ரோரேன்.
சூரிய கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் லோஷனை தவறாமல் உபயோகிக்க வேண்டும். சன்ஸ்கிரீன் கண்ணாடி அணிவதும் நல்லது. ஒப்பனையை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக வண்ணமயமான மாய்ச்சரைசர், லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத தன்மை கொண்டதா? என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டியதும் அவசியம். அது சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவும்.
கதிர்வீச்சுக்களில் இருந்தும் பாதுகாப்பு தரும். உடலில் உள்ள நச்சுக்களையும் அவ்வப்போது வெளியேற்றிவிடும். கோடை காலத்தில் இறந்த செல்களை சுத்தப்படுத்தும் விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். ஏனெனில் வெப்பம் காரணமாக வறட்சி, தூசி சருமத்தில் படிந்திருக்கும். சுத்தப்படுத்தும்போது அவை நீங்கிவிடும். பச்சைக்காய்கறிகள், ப்ளூபெர்ரி, முலாம் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது கொலொஜன் வளர்ச்சியை தூண்டும். அவை சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகை செய்யும்.
“குளுட்டாதையோன் நம் உடலில் மெலனின் செயல்பாட்டை சீர்படுத்தும். அதனால் சருமம் கருமை நிறத்திற்கு மாறுவது தடுக்கப்படும். மேலும் குளுட்டாதையோன் சருமத்தில் கருமையான புள்ளிகள் தோன்றாமலும் தடுக்கும். சருமத்தில் அல்ட்ரா வயலெட் கதிர்களால் உருவாகும் நச்சுகளை அகற்றவும் உதவும்” என்கிறார் தோல் மருத்துவர் சுஷாந்த் ரோரேன்.
சூரிய கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் லோஷனை தவறாமல் உபயோகிக்க வேண்டும். சன்ஸ்கிரீன் கண்ணாடி அணிவதும் நல்லது. ஒப்பனையை குறைத்துவிட்டு அதற்கு பதிலாக வண்ணமயமான மாய்ச்சரைசர், லிப் பாம் போன்றவற்றை பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத தன்மை கொண்டதா? என்பதையும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் பருக வேண்டியதும் அவசியம். அது சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவும்.
கதிர்வீச்சுக்களில் இருந்தும் பாதுகாப்பு தரும். உடலில் உள்ள நச்சுக்களையும் அவ்வப்போது வெளியேற்றிவிடும். கோடை காலத்தில் இறந்த செல்களை சுத்தப்படுத்தும் விஷயத்தில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். ஏனெனில் வெப்பம் காரணமாக வறட்சி, தூசி சருமத்தில் படிந்திருக்கும். சுத்தப்படுத்தும்போது அவை நீங்கிவிடும். பச்சைக்காய்கறிகள், ப்ளூபெர்ரி, முலாம் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது கொலொஜன் வளர்ச்சியை தூண்டும். அவை சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகை செய்யும்.






