என் மலர்
அழகுக் குறிப்புகள்
உதடுகள் வேகமாக வறட்சி அடைவதை தவிர்க்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம். அதனை வீட்டிலேயே தயார் செய்வது பற்றி பார்ப்போம்.
அலுவலகத்திலோ, வீட்டிலோ குளிர்சாதன வசதி கொண்ட அறையில் அமர்ந்திருந்தாலும் கூட உதடுகளில் வறட்சி நிலவக்கூடும். ஏனெனில் குளிர்சாதன பெட்டிகளில் இருந்து வெளியேறும் காற்றில் குளிர்ச்சி நிலவினாலும் அது சருமத்தை உலரும் தன்மைக்குத்தான் மாற்றக்கூடும். உதடுகள் வேகமாக வறட்சி அடைவதை உணரமுடியும். அதை தவிர்க்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம். அதனை வீட்டிலேயே தயார் செய்வது பற்றி பார்ப்போம்.
ஒரு டேபிள்ஸ்பூன் வாஸ்லைனை மைக்ரோ ஓவனில் வைத்து உருகவைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதனை குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.
தேங்காய் எண்ணெயுடன் கற்றாழையை சேர்த்தும் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் தேன் மெழுகு கலந்து கொள்ளவும். அதனை மைக்ரோ ஓவனில் வைத்து நன்றாக உருகவிடவும். பின்னர் அதனை சிறிய பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.
வாணலியில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறவும். அவை அனைத்தும் உருகி ஒன்றாக கலந்ததும் இறக்கி பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டுக்கு பயன்படுத்தலாம்.
ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகை வாணலியில் உருக்கி அதனுடன் அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். இந்த கலவையில் லாவண்டர் எண்ணெய் 10 சொட்டுகள் ஊற்றி நன்றாக கலக்கவும். அதனை பாட்டிலில் ஊற்றி குளிரவைத்தும் உதட்டுக்கு உபயோகிக்கலாம்.
ஒரு டேபிள்ஸ்பூன் வாஸ்லைனை மைக்ரோ ஓவனில் வைத்து உருகவைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதனை குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.
தேங்காய் எண்ணெயுடன் கற்றாழையை சேர்த்தும் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் தேன் மெழுகு கலந்து கொள்ளவும். அதனை மைக்ரோ ஓவனில் வைத்து நன்றாக உருகவிடவும். பின்னர் அதனை சிறிய பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.
வாணலியில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறவும். அவை அனைத்தும் உருகி ஒன்றாக கலந்ததும் இறக்கி பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டுக்கு பயன்படுத்தலாம்.
ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகை வாணலியில் உருக்கி அதனுடன் அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். இந்த கலவையில் லாவண்டர் எண்ணெய் 10 சொட்டுகள் ஊற்றி நன்றாக கலக்கவும். அதனை பாட்டிலில் ஊற்றி குளிரவைத்தும் உதட்டுக்கு உபயோகிக்கலாம்.
மேக்கப் போடாமல் உங்கள் முகம் அழகாக தெரிய வேண்டுமானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் அழகியாக ஜொலிக்கலாம்.
* பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.
* தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்.
* ஆரஞ்சு பழ தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கவும். மேலும் அதோடு கடலைமாவு -2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும்.
* சிறிதளவு வெண்வெண் எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.
* நன்கு கனிந்து பழுத்த நிலையில் இருக்கும் வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.
* பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.
* தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
* உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
* செம்பருத்தி இலை, பயத்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.
* அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.
* தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்.
* ஆரஞ்சு பழ தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கவும். மேலும் அதோடு கடலைமாவு -2கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும்.
* சிறிதளவு வெண்வெண் எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.
* நன்கு கனிந்து பழுத்த நிலையில் இருக்கும் வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து, அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.
* பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.
* தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
* உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
* செம்பருத்தி இலை, பயத்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.
* அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.
வீட்டில் அலுவலகப் பணியை செய்வதால் உங்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் இன்னும் அதிகமாக உதிர்வதற்கு அடிப்படைக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன அழுத்தம். இதை சரி செய்யும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் பலரது வாழ்க்கை முறையையே சிதைத்துள்ளது. தூக்கம், உணவு , உடல் உழைப்பு என அனைத்தும் தலைகீழாகிவிட்டது. இதனால் பல பக்கவிளைவுகளையும் சந்தித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் தலை முடி உதிர்வு. தலை முடி உதிர்வது வழக்கமான பிரச்னைதான் என்றாலும் இந்த லாக்டவுனில் உங்களுக்கு வழக்கத்தைக் காட்டிலும் இன்னும் அதிகமாக உதிரும் உடையும். இதற்கு அடிப்படைக் காரணம் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன அழுத்தம். இதை சரி செய்ய தீர்வுகள் என்ன..?
வளர்ச்சிதை மாற்றத்தைத் தூண்டுவதற்கு வைட்டமின் B சத்து மிகவும் அவசியம். எனவே வைட்டமின் B சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. அதேபோல் ஸிங்க் ஊட்டச்சத்து தலை முடி வளர்ச்சியை தூண்டி ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
வீட்டில் இருப்பதால் முடிந்தவரை ஹேர் டிரையர் , ஹேர் ஸ்டிக், ஸ்ட்ரெய்ட்னர் போன்ற தலைமுடி அழகுசாதனப் பொருட்களை தவிர்த்தல் நல்லது. அதேபோல் தலைமுடியை சிம்பிளாகப் பின்னல் போடுவதே போதுமானது. கூடுதல் ஸ்டைலிங், ஹேர் ஸ்பிரே போன்றவற்றையும் தவிருங்கள்.
உங்கள் தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பூ, கண்டிஷ்னர் என பயன்படுத்துங்கள். தலை முடி வறட்சி அடையாமல் இருக்க தேங்காய் எண்ணெய் தடவுவதை மறவாதீர்கள். வீட்டில் இருப்பதால் கெமிக்கல் ப்ராடெக்டுகளை தவிர்த்து இயற்கை முறையிலான ஹேர் பேக் போடுவது, பராமரிப்பது என முயற்சி செய்தல் ஆரோக்கியமான வழி.
உணவில் புரோட்டின் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். மீன், முட்டை, சிக்கன் போன்றவை புரோட்டின் நிறைந்த உணவுகள்தான். அதேபோல் வைட்டமின் C நிறைந்த ஆரஞ்சு , கிவி, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.
வைட்டமின் D சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே உடல் நிலைக் காரணமாக தலைமுடி உதிர்வு ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாலும் இதைத் தடுக்கலாம். கால்சியம் சத்தும் முக்கிய ஊட்டச்சத்தாகும்.
உடலில் நீர் வற்றாமல் பார்த்துக்கொள்வதும் முக்கிய பொறுப்பு. எனவே அடிக்கடி தண்ணீர் அருந்துவதை மறவாதீர்கள்.
வளர்ச்சிதை மாற்றத்தைத் தூண்டுவதற்கு வைட்டமின் B சத்து மிகவும் அவசியம். எனவே வைட்டமின் B சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. அதேபோல் ஸிங்க் ஊட்டச்சத்து தலை முடி வளர்ச்சியை தூண்டி ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
வீட்டில் இருப்பதால் முடிந்தவரை ஹேர் டிரையர் , ஹேர் ஸ்டிக், ஸ்ட்ரெய்ட்னர் போன்ற தலைமுடி அழகுசாதனப் பொருட்களை தவிர்த்தல் நல்லது. அதேபோல் தலைமுடியை சிம்பிளாகப் பின்னல் போடுவதே போதுமானது. கூடுதல் ஸ்டைலிங், ஹேர் ஸ்பிரே போன்றவற்றையும் தவிருங்கள்.
உங்கள் தலைமுடிக்கு ஏற்ற ஷாம்பூ, கண்டிஷ்னர் என பயன்படுத்துங்கள். தலை முடி வறட்சி அடையாமல் இருக்க தேங்காய் எண்ணெய் தடவுவதை மறவாதீர்கள். வீட்டில் இருப்பதால் கெமிக்கல் ப்ராடெக்டுகளை தவிர்த்து இயற்கை முறையிலான ஹேர் பேக் போடுவது, பராமரிப்பது என முயற்சி செய்தல் ஆரோக்கியமான வழி.
உணவில் புரோட்டின் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். மீன், முட்டை, சிக்கன் போன்றவை புரோட்டின் நிறைந்த உணவுகள்தான். அதேபோல் வைட்டமின் C நிறைந்த ஆரஞ்சு , கிவி, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிடலாம்.
வைட்டமின் D சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எனவே உடல் நிலைக் காரணமாக தலைமுடி உதிர்வு ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாலும் இதைத் தடுக்கலாம். கால்சியம் சத்தும் முக்கிய ஊட்டச்சத்தாகும்.
உடலில் நீர் வற்றாமல் பார்த்துக்கொள்வதும் முக்கிய பொறுப்பு. எனவே அடிக்கடி தண்ணீர் அருந்துவதை மறவாதீர்கள்.
சருமத்தில் வழக்கத்தை விட அதிகமாக எண்ணெய் பசை தன்மை இருப்பதற்கு ஒரு சில தவறான அழகியல் முறைகளை பின்பற்றுவதும் காரணமாக அமைந்திருக்கிறது.
பெண்களில் சிலருடைய சருமத்தில் எண்ணெய் வழிந்து கொண்டிருக்கும். சருமத்தில் வழக்கத்தை விட அதிகமாக எண்ணெய் பசை தன்மை இருப்பதற்கு ஒருசில தவறான அழகியல் முறைகளை பின்பற்றுவதும் காரணமாக அமைந்திருக்கிறது.
* நிறைய பேர் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும் மாய்ச்சுரைசர்களை பயன்படுத்துவார்கள். அதனை எண்ணெய் வழியும் சமயத்தில் மட்டுமே பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்தான் எண்ணெய் சுரப்பது கட்டுப்படும்.
*முகத்திற்கு அதிகம் மேக்கப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் முகத்தில் ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை அதிகம் உபயோகிப்பதும் எண்ணெய் சுரப்பதற்கு காரணமாக இருக்கும்.
* பெண்களில் பலர் சோப்பை பயன்படுத்தி அடிக்கடி முகம் கழுவும் வழக்கத்தை பின்பற்றுவார்கள். அப்படி கழுவுவதும் எண்ணெய் சுரப்புக்கு வழிவகுத்துவிடும்.
*மன அழுத்தமும் எண்ணெய் பசைத்தன்மைக்கு காரணமாகும். ஏனெனில் மன அழுத்தத்தில் இருக்கும்போது ஹார்மோன்கள் சுரப்பு சீரற்ற தன்மையில் இருக்கும். அதன் காரணமாகவும் எண்ணெய் சுரக்க தொடங்கும்.
* போதுமான அளவு தண்ணீர் பருகுவதை தவிர்ப்பதும் சருமத்தில் எண்ணெய் சுரக்க காரணமாகி விடும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் பருக வேண்டியது அவசியமானது.
* நிறைய பேர் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும் மாய்ச்சுரைசர்களை பயன்படுத்துவார்கள். அதனை எண்ணெய் வழியும் சமயத்தில் மட்டுமே பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்தான் எண்ணெய் சுரப்பது கட்டுப்படும்.
*முகத்திற்கு அதிகம் மேக்கப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் முகத்தில் ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை அதிகம் உபயோகிப்பதும் எண்ணெய் சுரப்பதற்கு காரணமாக இருக்கும்.
* பெண்களில் பலர் சோப்பை பயன்படுத்தி அடிக்கடி முகம் கழுவும் வழக்கத்தை பின்பற்றுவார்கள். அப்படி கழுவுவதும் எண்ணெய் சுரப்புக்கு வழிவகுத்துவிடும்.
*மன அழுத்தமும் எண்ணெய் பசைத்தன்மைக்கு காரணமாகும். ஏனெனில் மன அழுத்தத்தில் இருக்கும்போது ஹார்மோன்கள் சுரப்பு சீரற்ற தன்மையில் இருக்கும். அதன் காரணமாகவும் எண்ணெய் சுரக்க தொடங்கும்.
* போதுமான அளவு தண்ணீர் பருகுவதை தவிர்ப்பதும் சருமத்தில் எண்ணெய் சுரக்க காரணமாகி விடும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் பருக வேண்டியது அவசியமானது.
மெனிக்யூர் என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல.. நமது கைகளை.. கைவிரல் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கும் கைகளுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பது எனலாம்.
மெனிக்யூர் என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல.. நமது கைகளை.. கைவிரல்களை.. எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கும் கைகளுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பது எனலாம். புத்துணர்ச்சி கிடைப்பதன் மூலமாகவே கை மற்றும் விரல்கள் சுருக்கம் நீங்கிய நிலையில் பார்க்க மிகவும் அழகாக மினுமினுப்பாக வெளிப்படுகிறது.
கைகளுக்கு மெனிக்யூர் செய்வதற்கு நாம் செலவழிக்கும் பணத்தைப் பொறுத்து நிறைய வகைகள் உள்ளது. சுருக்கமாக மெனிக்யூரில் நான்கு விதமான பிரிவுகளைச் சொல்லலாம்.
* க்ளீன் அப்(clean up)
* பேசிக் (basic)
* டீலக்ஸ் (deluxe pack)
* ஸ்பா(Spa)
* ஸ்டார் (star pack)
க்ளீன் அப்
வெதுவெதுப்பான நீரில் நமது இரண்டு கைகளையும் நனைத்து, அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி நகங்களை வடிவமைப்பது.
பேசிக்
வெதுவெதுப்பான நீரில் அழுக்கை நீக்குவதற்கென உள்ள உப்பை இட்டு, அவற்றில் கைகளை சற்றே ஊறவைத்து சுத்தம் செய்யப்படும். இதற்கென க்யூட்டிகல் க்ரீம் (cuticle cream) உள்ளது. அதை பயன்படுத்தும்போது அழுக்கு வெளியில் வரத் துவங்கும். நகங்களைச் சுற்றி வளர்ந்திருக்கும் தேவையற்ற இறந்த தோல்கள் நீக்கப்பட்டு, நகங்கள் புஷ் செய்யப்படும்போது விரல் நகங்கள் வெளியில் நீண்டு பெரிதாகத் தெரியும். பிறகு வேண்டிய வடிவில் சீர் செய்யலாம்.
டீலக்ஸ் மற்றும் ஸ்டார்
பெரும்பாலும் இரண்டும் ஒரே மாதிரிதான். இதில் ப்யூட்டி புராடக்ட்கள் மட்டுமே வேறுபடும். பேசிக் மெனிக்யூர் செய்த பிறகு கைகளை ஸ்க்ரப் செய்தபின் பேக்(pack) அப்ளை செய்து அதன் பிறகு மசாஜ் கொடுக்கப்படும்.
ஸ்பா
இதில் மசாஜ் கூடுதலாகக் கிடைப்பதுடன், நெயில் ஆர்ட் கூடுதலாக செய்யப்படும். நெயில் ஆர்ட்டுக்கென மெஷின்கள் வந்துள்ளன. ரெடிமேட் ஸ்டிக்கர்களும் கிடைக்கிறது.
கைகளுக்கு மெனிக்யூர் செய்வதற்கு நாம் செலவழிக்கும் பணத்தைப் பொறுத்து நிறைய வகைகள் உள்ளது. சுருக்கமாக மெனிக்யூரில் நான்கு விதமான பிரிவுகளைச் சொல்லலாம்.
* க்ளீன் அப்(clean up)
* பேசிக் (basic)
* டீலக்ஸ் (deluxe pack)
* ஸ்பா(Spa)
* ஸ்டார் (star pack)
க்ளீன் அப்
வெதுவெதுப்பான நீரில் நமது இரண்டு கைகளையும் நனைத்து, அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி நகங்களை வடிவமைப்பது.
பேசிக்
வெதுவெதுப்பான நீரில் அழுக்கை நீக்குவதற்கென உள்ள உப்பை இட்டு, அவற்றில் கைகளை சற்றே ஊறவைத்து சுத்தம் செய்யப்படும். இதற்கென க்யூட்டிகல் க்ரீம் (cuticle cream) உள்ளது. அதை பயன்படுத்தும்போது அழுக்கு வெளியில் வரத் துவங்கும். நகங்களைச் சுற்றி வளர்ந்திருக்கும் தேவையற்ற இறந்த தோல்கள் நீக்கப்பட்டு, நகங்கள் புஷ் செய்யப்படும்போது விரல் நகங்கள் வெளியில் நீண்டு பெரிதாகத் தெரியும். பிறகு வேண்டிய வடிவில் சீர் செய்யலாம்.
டீலக்ஸ் மற்றும் ஸ்டார்
பெரும்பாலும் இரண்டும் ஒரே மாதிரிதான். இதில் ப்யூட்டி புராடக்ட்கள் மட்டுமே வேறுபடும். பேசிக் மெனிக்யூர் செய்த பிறகு கைகளை ஸ்க்ரப் செய்தபின் பேக்(pack) அப்ளை செய்து அதன் பிறகு மசாஜ் கொடுக்கப்படும்.
ஸ்பா
இதில் மசாஜ் கூடுதலாகக் கிடைப்பதுடன், நெயில் ஆர்ட் கூடுதலாக செய்யப்படும். நெயில் ஆர்ட்டுக்கென மெஷின்கள் வந்துள்ளன. ரெடிமேட் ஸ்டிக்கர்களும் கிடைக்கிறது.
தினம் ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். ஒரு மாதத்தில் உங்களிடமிருக்கும் மாற்றத்தை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
இளமையான தோற்றம் ஒரு வரம். அது எளிதில் எல்லாருக்கும் கிடைக்காது. இயற்கையாகவே சிலருக்கு அமைந்தாலும் நாம் பராமரிப்பதும் இருக்கிறது. தினம் ஒரு 10 நிமிடங்கள் ஒதுக்கி இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி பாருங்கள். ஒரு மாதத்தில் உங்களிடமிருக்கும் மாற்றத்தை கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
திங்கள் கிழமை : முதல் நாள் தேனிலிருந்து தொடங்குங்கள். தேன் ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் 2 துளி எலுமிச்சை கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். முகம் அழுக்கில்லாமல் ஜொலிக்கும்.
செவ்வாய் கிழமை : ஸ்ட்ரா பெர்ரி சதைப் பகுதியை மசித்து அதனுடன் பால் ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் தேயுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகம் சுருக்கம் போய், இள்மையாக இருக்கும்.
புதன் கிழமை : யோகார்ட் ஈரப்பதம் அளிக்கும். யோகார்டை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருமை, அழுக்கு அகன்று மென்மையாக மாறும்.
வியாழக் கிழமை : கடலை மாவில் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவுங்கள். சருமம் தளர்வடைவது குறைந்து இறுகும். வயதான தோற்றத்தை தடுக்கும்.
வெள்ளிக்கிழமை : முல்தானி மட்டியில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் முகம் தொய்வடையாமல் பாதுகாக்கும்.
சனிக் கிழமை : சுத்தமான தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து குளித்தால் என்றும் இளமை உங்கள் வசம்.
ஞாயிற்றுக் கிழமை : ஞாயிறுகளில் அரிசி வேக வைத்த நீரில் அல்லது அரிசி கஞ்சியை எடுத்து முகத்தில் தடவுங்கள். முகம் கெட்டியாக இறுகியதும் முகம் கழுவினால் சருமம் பளபளக்கும்.
அடர் நிற(டார்க்) ஜீன்ஸை அப்படியே நிறம் மாறாமல் பாதுகாக்க, சில விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் அவை என்வென்று அறிந்து கொள்ளலாம்.
ஆடைகளில் இருந்து நறுமணம் வீசும். அடர் நிற(டார்க்) ஜீன்ஸை அப்படியே நிறம் மாறாமல் பாதுகாக்க, துவைக்கும் போதெல்லாம் வாஷிங் மிஷினில் கடைசியாக வெள்ளை (ஒயிட்) வினிகரை சேர்க்கவும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜீன்ஸ் அப்படியே இருக்கும்.
அதே நேரத்தில் வெளிறிய நிறத்தில் ஜீன்ஸ் வேண்டும் என்றால் வெந்நீரில் ஜீன்ஸை துவைக்க நீங்கள் விரும்பியபடி வெளிர் நிறத்தில் ஜீன்ஸ் மாறி விடும். உடையில் மை (இங்க்) கறை பட்டால், அந்த இடத்தை மட்டும் பாலில் ஊற வைத்து, சோப்பு போட்டு துவைக்க கறை காணாமல் போய் விடும்.
கிளிசரினும் பயன்படுத்தலாம். எவ்வளவு சோப்பு போட்டும் ஆடைகளில் வாசனை இல்லையா? துணிகளை அதிக நேரம் ஊற வைக்காமல், நன்றாக உலர்த்தி எடுத்தாலே போதும்.
இன்றைய பியூட்டி டிரெண்ட் அடர்த்தியான மற்றும் தடிமனான புருவங்கள்தான். உங்களுக்கு இயற்கையான புருவ அடர்த்தி வேண்டுமெனில் இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
இன்றைய பியூட்டி டிரெண்ட் அடர்த்தியான மற்றும் தடிமனான புருவங்கள்தான். உங்களுக்கு இயற்கையான புருவ அடர்த்தி வேண்டுமெனில் இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க...
* தினமும் விளக்கெண்ணெய் கொண்டு இரவு மசாஜ் செய்துவிட்டு அப்படியே படுத்துவிடுங்கள். முடி அடர்த்தியாக வளரும்.
* தேங்காய் எண்ணெய் புருவங்களுக்கு வறட்சி இல்லாமல் எண்ணெய் பதம் அளிக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே தேங்காய் எண்ணெயை தடவி 30 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்.
* ஆலிவ் எண்ணெய் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ சத்து நிறைவாக உள்ளது. எண்ணெயை புருவத்தில் மசாஜ் செய்து 2 மணி நேரம் ஊற வைத்து பின் கழுவிவிடுங்கள்.
* வெங்காய சாறில் இருக்கும் சல்ஃபர், செலினியம், மினரல், வைட்டமின் பி மற்றும் சி முடி வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே அதன் சாறை புருவத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். 1 மணி நேரம் கழித்து கழுவுங்கள்.
* கற்றாழையும் முடி வளர்ச்சியை தூண்ட உதவும். எனவே அதன் சதையை எடுத்து புருவத்தில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்.
அழகு பராமரிப்பு என்பது முகம், கை கால்களோடு மட்டுமல்ல இப்படி அந்தரங்கப் பகுதிகளையும் பராமரித்து கவனித்துக்கொள்வதுதான் முழுமையான அழகுப் பராமரிப்பு.
அழகு பராமரிப்பு என்பது முகம், கை கால்களோடு மட்டுமல்ல இப்படி அந்தரங்கப் பகுதிகளையும் பராமரித்து கவனித்துக்கொள்வதுதான் முழுமையான அழகுப் பராமரிப்பு. எனவே வீட்டுக் குறிப்புகளை பயன்படுத்தி அந்தரங்கப் பகுதியில் உள்ள கருமையை நீக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
* தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் 1 ஸ்பூன் எடுத்துக்கொண்டு சூடாக்கி அது குளிர்ந்ததும் அந்த இடத்தில் தேய்த்து மசாஜ் செய்து வாருங்கள். 15 நிமிடங்கள் ஊறிய பின் தண்ணீர் கொண்டு துடைத்துவிடலாம்.
* பஞ்சை மோரில் மூழ்க வைத்து அதை கருமையாக உள்ள பகுதியில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.
* வெள்ளரி மற்றும் கற்றாழை சதை இரண்டையும் மிக்ஸியில் மைய அரைத்து அந்த இடத்தில் பேக் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் ஊறியதும் எடுத்துவிடுங்கள்.
* தயிரை தினமும் தடவி 7 நிமிடங்கள் ஊற வைத்து துடைத்துவிடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
* ஆலிவ் எண்ணெய்யை அந்தரங்கப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்து வர கருமை மட்டுமல்ல சுருக்கங்களும் நீங்கும்.
நிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும்போது சில விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமானது. அதுதான் கூந்தல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்க உதவும். நிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். உச்சந்தலையிலும் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். ஏனெனில் உச்சந்தலையில் எண்ணெய் தடவினால்தான் முடிக்கு ஊட்டம் கிடைக்கும். கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும்.
எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி கூந்தலில் தடவுவது நல்லது. குளிப்பதற்கு முன்பு தலையில் எண்ணெய் தடவுவதற்கு நிறைய பேர் விரும்புவார்கள். ஆனால் கூந்தலில் அழுக்கு படிந்திருந்தால் எண்ணெய் தடவுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்பு, சிகைக்காய் போன்றவற்றை கொண்டு நன்றாக கழுவி சுத்தப்படுத்தியபிறகு எண்ணெய் தேய்ப்பதுதான் முடியின் வளர்ச்சிக்கு நல்லது. உள்ளங்கையில் எண்ணெய்யை ஊற்றி உச்சந்தலையில் வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு முடியின் வேர்ப்பகுதிகளில் லேசாக எண்ணெய் தடவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
தலைமுடியில் நீண்ட நேரம் எண்ணெய் இருந்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அது தவறானது. தலைமுடியில் அதிக நேரமோ, அதிக அளவிலோ எண்ணெய் இருக்கக் கூடாது. குளிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊறவைத்துவிட்டு பிறகு குளிக்கலாம்.
தலைமுடியில் எண்ணெய் தேய்த்த பிறகு கூந்தல் சார்ந்த மற்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தலைமுடிக்கு குறைவான அளவிலேயே எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தடவும்போதெல்லாம் மென்மையாக மசாஜ் செய்துவிடுவதும் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும்.
தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வைத்துக்கொள்வதற்கு வீட்டு உபயோக பொருட்களை கொண்டு கிரீம் கலந்த ‘ஹேர் மாஸ்க்’ தயார் செய்வது நல்லது. கறிவேப்பிலை, வேப்ப இலை, வெந்தயம், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு ஹேர் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம்.
குளித்ததும் தலைமுடியை உலர்த்துவதற்கு மென்மையான காட்டன் டவல்களை பயன்படுத்த வேண்டும். கனமான, அடர்த்தியான டவல்களை பயன்படுத்தக்கூடாது. அதுபோல் ஈரமான தலையில் சீப்பு கொண்டு சீவக்கூடாது. அது முடி உடைந்துபோவதற்கு வழிவகுத்துவிடும். இளம் வயதிலேயே ரசாயனம் கலந்த ‘ஹேர் டை’களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அது தலைமுடியை விரைவில் சேதப்படுத்திவிடும்.
தேங்காய் எண்ணெய்யை நிறைய பேர் கூந்தலுக்கு மட்டும்தான் உபயோகிப்பார்கள். அதனை சருமத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் அழகும் ஜொலிக்கும். தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முடிகள், திட்டுகள் நீங்கி முகம் பளிச்சென்று பிரகாசிக்கும்.
குழந்தைகளை குளிப்பாட்டியதும் தலைக்கு மட்டுமின்றி கழுத்து, முதுகு பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தடவி வருவது நல்லது. ஒவ்வாமை பிரச்சினை காரணமாக சிலரது சருமம் பாதிப்புக்குள்ளாகும். தேங்காய் எண்ணெய் அதற்கு நிவாரணம் தரும். அதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் சரும அழகை மேம்படுத்தும் தன்மை கொண்டவை.
தேங்காய் எண்ணெய் பூஞ்சை தொற்று கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் கிருமிகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும். வியர்வை, நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர்ச்சத்தை மீட்டெடுத்து சருமத்திற்கு நலம் சேர்க்கும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் முகம் கழுவுவதற்கு பதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவலாம். முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் பளிச்சிடும்.
முடி உதிர்வு பிரச்சனைக்கு எவ்வித இரசாயணங்களையும் பயன்படுத்த வேண்டாம். உருளைக்கிழங்கை கொண்டே எப்படி அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பதை பார்ப்போம்.
ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம், தண்ணீர், இரசாயணம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் முடி உதிர்வு ஏற்படும். மேலும் இரசாயணம் மிகுந்த ஹேர் ப்ராடக்ட்களை பயன்படுத்தும்போது மேலும் கூந்தல் உடைந்து, முடி கொட்ட ஆரம்பிக்கும். முடி உதிர்வு பிரச்சனைக்கு எவ்வித இரசாயணங்களையும் பயன்படுத்த வேண்டாம். இயற்கை பூக்கள், காய்கறிகள் கொண்டே எப்படி அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பதை பார்ப்போம்.
1. உருளைக்கிழங்கு சாறு முடி வளர்ச்சியை தூண்ட கூடியது. முடி வளர்ச்சிக்கு இது சிறந்த தீர்வு.
2. சருமம் மற்றும் கூந்தலின் வளர்ச்சிக்கு கொலாஜன் மிகவும் தேவையான ஒன்று. உருளைக்கிழங்கில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
3. உருளைக்கிழங்கு சாறு எடுத்து ஸ்கால்பில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சியடையும்.
4. கூந்தலில் அதிகபடியான எண்ணெய் இருந்தாலும் கூந்தல் உடையும். உருளைக்கிழங்கில் அதிகபடியான ஸ்டார்ச் இருப்பதால் கூந்தல் மற்றும் ஸ்கால்பிற்கு மிகவும் நல்லது.
5. ஸ்கால்ப் வறண்டு போனால் பொடுகு தொந்தரவு ஏற்பட்டு கூந்தலின் அடர்த்தி குறைந்துவிடும். உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்கால்பில் தடவி வந்தால் வறட்சி நீங்கிவிடும்.
6. முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் மயிர்கால்களில் படும்படி உருளைக்கிழங்கு சாற்றை தடவி வரலாம்.
ரோஜா இதழ்களை பயன்படுத்துவதினால் சருமத்திற்கு, நாள் முழுவதும் புது பொலிவினை கொடுக்கும். ரோஜா இதழ்களை வைத்து செய்யக்கூடிய பேஸ் பேக்குகளை தெரிந்து கொள்வோம்.
சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க, ஒரு பவுலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தமாக கழுவி, அதனை மிக்சி ஜாரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மைபோல் அரைக்கவும். பின்பு அந்த பேஸ்ட்டை சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால், சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் அப்ளை செய்யுங்கள். பின்பு 10 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவர நல்ல பலன் கிடைக்கும்.
சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க, ஒரு சுத்தமான பவுலில், ஒரு ஸ்பூன் அரைத்த ரோஸ் இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து, இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்பு சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சருமம் பளபளப்பாக காணப்படும்.
தேவையானவை:
ரோஜா – 3
தயிர்- கால் கப்
ஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
செய்முறை:
ரோஜா இதழ்களை தயிருடன் கலந்து மைய அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதனுடன் ஆலிவ் ஆயிலைக் கலந்து நன்கு 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.
அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பயன்படுத்தினால் ரோஜாப்பூ ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ரோஜாப் பூ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து முகத்தினை நன்கு கழுவினால் முக அழகு நிச்சயம் கூடும்.






