என் மலர்
அழகுக் குறிப்புகள்
முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். கீழ்வரும் சில உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, குளிர்கால மாதங்களில் உங்கள் கால்களை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்து கொள்ளுங்கள்.
பொதுவாக, சருமம் வறண்டு போகும் போது பாத வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் அதிகம் வறண்டு போகும். அதனால் பாதங்களில் வெடிப்புகள் உண்டாகும். இதனை பொதுவாக நாம் ‘பித்த வெடிப்பு’ என்று நடைமுறையில் சொல்வோம்.
குளிர்காலத்தில் ஏற்படும் பாதவெடிப்புகள் மேலும் பல உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமாக அமைந்துவிடுகிறது. இதற்கு சரியான முறையில் ஊட்டமளிக்காவிட்டால், விரிசல், இரத்தப்போக்கு ஆகியவையும் ஏற்படுகிறது. எனவே முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதங்களுக்கும் கொடுக்க வேண்டும். கீழ்வரும் சில உதவிக்குறிப்புகளைப் பின்பற்றி, குளிர்கால மாதங்களில் உங்கள் கால்களை மென்மையாகவும், மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்து கொள்ளுங்கள்.
1. இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் எடுத்துக்கொண்டு அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சேர்த்து அந்த நீரில் கால்களை 10 நிமிடங்களுக்கு வைத்த பிறகு நீரில் இருந்து கால்களை வெளியே எடுத்து துடைக்க வேண்டும். இதேபோல் சுடுநீரில் ஷாம்பு கலந்தும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் பாதங்கள் மற்றும் விரலிடுக்கில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனால் பாதங்கள் மென்மையாகும்.
2. முகத்திற்கு மாய்ஸ்சுரைசர் கிரீம் இருப்பது போல, கடினமாக தோள்களை கொண்ட பாதங்களுக்கு சில கிரீம்கள் கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி தினமும் உங்கள் கால்களில் தடவிக் கொள்ளலாம். இதனால் உங்கள் கால்கள் மிருதுவாகவும் ஈர்ப்பத்துடனும் இருக்கும். மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்தும் போது சருமம் சற்று ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். எனவே குளித்த உடன் ஈரப்பதம் இருக்கும் போதே மாய்ச்சரைசரை தடவ வேண்டும். அப்போது தான் இது தோலின் அடி ஆழம் வரை சென்று நல்ல பலனைக் கொடுக்கும்.
3. ஒரு மசாஜ் உலர்ந்த மற்றும் விரிசல் உள்ள கால்களுக்கு மட்டுமல்லாமல், உங்கள் கால்களில் இருக்கும் அனைத்து சோர்வுகளும் நீங்க உதவும். தேங்காய் எண்ணெய், நெய், பாதாம் எண்ணெய் அல்லது எள் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு மசாஜ் செய்யலாம். இதனால் உங்கள் கால்கள் ஈரப்பதமாகவும், ரத்தஓட்டம் சீராகவும் இருக்கும்.
4. மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை படிக்கல்லால் (Pumice stone) பாதங்களின் ஓரம் மற்றும் அடிப்பகுதியில் தேய்த்து மசாஜ் செய்வதால், ரத்த ஓட்டம் சீராவதோடு வெடிப்புகளும் நீங்கும். மசாஜ் செய்த பின்பு வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவிக் கொள்ள வேண்டும்.
5. வாசலின் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை தூங்குவதற்கு முன்பாக பாதங்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் பாதங்களில் மாய்ச்சரைசிங் க்ரீம்களை தடவிக் கொள்ளும்போது சருமத்தின் ஈரப்பதம் காக்கப்படுவதால் வெடிப்புகள் உண்டாகாது.
அக்குளில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தினாலே போதுமானது. எளிமையான முறையில் கருமையை போக்கிவிடலாம்.
அக்குளில் ஏற்படும் கருமையை போக்குவதற்கு வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தினாலே போதுமானது. எளிமையான முறையில் கருமையை போக்கிவிடலாம்.
* ஆப்பிள் சிடேர் வினிகர், இறந்த செல்களை அகற்றுவதற்கும், வடுக்களை குறைப்பதற்கும் உதவும். அதில் இருக்கும் ஆஸ்ட்ரிஜெண்ட் மூலக்கூறுகள் சரும துளைகளை அகற்றி கருமையை குறைக்க உதவும். பருத்தி பஞ்சுவில் வினிகரை ஊற்றி அக்குள் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். நன்றாக உலர்ந்ததும் கழுவிவிடலாம். தினமும் ஒருமுறை தொடர்ந்து இவ்வாறு செய்துவந்தால் கருமை நீங்கிவிடும்.
* இயற்கையான சன்ஸ்கிரீன் என்று அழைக்கப்படும் கற்றாழை, பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை கொண்டது. கற்றாழையை வெட்டி அதனுள் இருக்கும் கூழை அக்குள் பகுதியில் தடவி, கால் மணி நேரம் உலரவைத்துவிட்டு பின்னர் கழுவிவிடலாம். கடைகளில் வாங்கும் கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதனை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
* பேக்கிங் சோடா, சரும துளைகளை திறக்கவைத்து கருமையை போக்கச்செய்யும் தன்மை கொண்டது. ஒரு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், அதே அளவு எலுமிச்சை சாறு கலந்து பசை போல் குழப்பி அக்குள் பகுதியில் தடவ வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவிவிடலாம். வாரத்திற்கு மூன்று, நான்கு முறை செய்து வரலாம்.
* இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் அதே அளவு சர்க்கரையை கலந்து அக்குள் பகுதியில் இரண்டு நிமிடங்கள் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் கால் மணி நேரம் கழித்து நீரில் கழுவிவிடலாம்.
* வெள்ளரிக்காயின் சாறுவை அக்குள் பகுதியில் இரண்டு நிமிடங்கள் தேய்த்துவிட்டு அது உலர்ந்ததும் தண்ணீரில் கழுவிவிடலாம். தினமும் இவ்வாறு செய்து வந்தால் கருமை குறையத்தொடங்கும்.
* உருளைக்கிழங்கும் சருமத்தை நிறமாற்றம் செய்யும் தன்மை கொண்டது. அதனை தோலுரித்து விழுதாக அரைத்து சாறு எடுத்துக்கொள்ளவும். அந்த சாறை அக்குளில் தடவி கால் மணி நேரம் கழித்து கழுவி விடலாம். உருளைக்கிழங்கை வெட்டியும் அக்குளில் தடவி வரலாம்.
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இப்போது கஸ்தூரி மஞ்சளை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
அழகு, நறுமணம் தரும் பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள், வாசனைப் பொருட்கள், சோப்புகள், தைலங்கள் ஆகியவை தயாரிக்கப்படுவதில் கஸ்தூரி மஞ்சள் முக்கிய இடம் பெறுகின்றது.
தோல் நோய்கள் தீர கஸ்தூரி மஞ்சள் தூளை வெந்நீரில் குழைத்து மேல் பூச்சாகப் பூசிவர வேண்டும் அல்லது கஸ்தூரி மஞ்சள், துளசி ஆகியவற்றைச் சம அளவாகச் சேர்த்து, அரைத்து, உடலில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு. இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து அல்லது குழைத்து முகத்தில் பூசிக் கழுவி வந்தால் முடி வளர்வது தடைப்படும். முகத்தில் பொலிவு ஏற்படும்.
பெண்கள் இந்த மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கஸ்தூரி மஞ்சளை வெங்காயச் சாற்றில் குழைத்துக் கட்டிகள் மீது பூசினால் கட்டிகள் உடையும். சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வாராமல் தடுக்கும்.
இந்த மஞ்சளையும். பூலாங்கிழங்கையும் சம அளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வரவேண்டும். மஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகம் பளபளக்க இது ஒரு சிரந்த பேஸ் பேக் ஆகும்.
பாடி ஸ்பா போன்று கூந்தலுக்கு ஹேர் ஸ்பா செய்கிறார்கள். இதை செய்வதால் முடிக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முடி சேதமடையாமல் காக்கலாம். முடி வளர்ச்சி, முடி ஷைனிங் என எல்லாமே பெறலாம்.
கொரோனாவால் எல்லோரும் வீட்டிலிருக்கும் இந்த காலத்தில் ஹேர் ஸ்பாவுக்கு வெளியே செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே செய்துகொள்ளலாம். எப்படி வீட்டில் ஹேர் ஸ்பா செய்வது என்று ஒவ்வொரு ஸ்டெப் தெரிந்துகொள்வோம்.
நீங்கள் வீட்டில் ஹேர் ஸ்பா செய்வதாக இருந்தால் உங்கள் முடியின் தன்மைக்கேற்ற ஷாம்பு வகைகளை முதலில் தேர்ந்தெடுங்கள். பொடுகு அதிகமாக இருந்தால் அதற்கென பிரத்யேகமான பியூரி ஃபையிங் ஷாம்பு பயன்படுத்தலாம். மற்றவர்கள் டீடாக்ஸ் ஷாம்பு பயன்படுத்தலாம். ஷாம்பு பயன்படுத்திய பிறகு முடிக்கு தேவையான க்ரீம் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.
உங்கள் கூந்தலுக்கேற்ற க்ரீம் வகைகளை உங்களது அழகு கலை நிபுணரோடு கலந்து தேர்வு செய்யுங்கள். அதே நேரம் முடி கனமா இருந்தாலோ அல்லது அதிகமாக சிதைந்து இரூந்தாலோ அதற்கான க்ரீம் வகைகளை தேர்வு செய்யும் போது அதிக கவனமாக செய்ய வேண்டும்.
கடைகளில் ஹேர் ஸ்பாவுக்கு தேவையான ஷாம்பு, கண்டிஷனர் கிடைக்கும் என்றாலும் உங்களுக்கு தேவையானதை மட்டும் நிபுணரின் ஆலோசனையோடு பயன்படுத்த தவற வேண்டாம்.
ஆலிவ் எண்ணெய் - 5 டீஸ்பூன் அளவு - உங்கள் கூந்தலின் நீளத்துக்கேற்ப தேவையான அளவு எடுத்துகொள்ளலாம். இப்போது எப்படி செய்வது பார்க்கலாம்.
ஸ்டெப்- 1 முதலில் உங்கள் கூந்தலை சிக்கில்லாமல் சீவி வைத்துகொள்ளுங்கள்.
ஸ்டெப் -2 கூந்தலை நன்றாக விரித்து செளகரியமாக உட்கார்ந்து எண்ணெயை விரல்களால் தொட்டு உச்சந்தலையிலிருந்து முடியின் நுனிவரை மசாஜ் செய்யுங்கள். வட்ட வடிவ இயக்கத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். 10 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள்.
ஸ்டெப்-3 மண் பானையில் கொதிக்க வைத்து நீர் ஊற்றி வாயை மெல்லிய துணியால் கட்டி, வெளிவரும் ஆவி முடி மீது படும்படி முடியை காண்பிக்க வேண்டும். முகத்தின் மிது படியாமல் இருக்க முகத்தில் ஒரு துண்டு கட்டி கொள்ளலாம். தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை இதை செய்ய வேண்டும். முடியின் ஆழம்வரை நீராவி சென்று உள்ளே போக வேண்டும்.
ஸ்டெப் -4 கூந்தலில் நீராவி பிடித்தது போக இப்போது மெல்லிய துணியை குளிர்ந்த நீரில் நனைத்து அதை கூந்தலில் மென்மையாக இலேசாக இறுக்கி கட்டவும். ஸ்டெப் - 5 ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி முடியை கழுவி எடுக்கவும். ஹேர் ஸ்பா க்ரீம் உங்கள் கூந்தலுக்கேற்றதை பயன்படுத்தவும். வாரத்துக்கு ஒரு முறை கூட இதை செய்யலாம்.
நன்மைகள்
முடியின் மயிர்கால்கள் வலுவடையகூடும். உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்துகிறது.இதனால் பொடுகு, அரிப்பு, நமைச்சல் பிரச்சனையும் இருக்காது. பொலிவிழந்த முடிக்கு சிகிச்சையாக இதை செய்யலாம்.
இது முடியை வலுவாக்குவதால் முடி அடர்த்தி அதிகரிக்கும். முடி இழப்பை ஊக்குவிக்காது. முடிக்கு ரத்த ஓட்டம் கொடுப்பதால் முடி வளர்ச்சி அதிகரிக்க கூடும். முடி வளர்ச்சிக்கான சிகிச்சையும் கூட. முடியின் வேர்களுக்கு ஊட்டமளிப்பதன் மூலம் முடி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும்.
முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும் என்பதற்காக தேய்த்து கழுவுவார்கள். அவ்வாறு செய்து, முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும்.
ஆகவே அத்தகையது வராமல், மென்மையாக இருக்க முகத்தில் இருக்கும் இறந்த செல்களை, அழுக்குகளை, கிருமிகளை நன்கு கழுவ, ஒரு சில வழிகள் இருக்கிறது. அதைப் பின்பற்றினால் முகத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். முகத்தை கழுவுவதற்கு முன்னால், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.
பிறகு சிறிது காட்டனை எடுத்து, கிளின்சரில் நனைத்துக் கொண்டு, முகத்தை நன்கு துடைத்து விட வேண்டும். ஆனால் அப்படி கிளின்சர் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு ஏற்றதாக பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.உதாரணமாக, வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் போன்று இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்த வேண்டும்.
அதுவே எண்ணெய் சருமம் உள்ளவர்கள், வழுவழுப்பாக இருக்கும் கிளின்சரை பயன்படுத்த வேண்டும். அத்தகைய கிளின்சரை தினத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது முகத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெயையும் அகற்றிவிடும்.
எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அதனால் முகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் குழிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிவிடும். பின் கழுவியதும் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எளிதில் போய்விடும்.
அதுவும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே செய்ய வேண்டும். பின் கழுவி விட வேண்டும். இவ்வாறெல்லாம் முகத்தை கழுவினால் முகமானது அழகாக, பொலிவோடு இருப்பதோடு, ஆரோக்கி யமாகவும் இருக்கும்.
பெண்களின் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி நிரந்தர தீர்வு காண முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
* எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.
* எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
* ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.
* ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
முட்டை வெள்ளைக்கரு - 1
ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை தனியாக எடுத்து, அதில், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் பிரகாசமாக இருக்கும்.
தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை.
இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் கூந்தலுக்கு அக்கறை செலுத்த யாருக்கு நேரம் இருக்கிறது. அதுவும், பெரும்பாலானவர்களுக்கு தலையை சீவுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. தலைக்கு குளித்தோமா, ஹேர் ட்ரையர் யூஸ் பண்ணி முடியை காய வைத்தோமா அத்தோடு நமது வேலை முடிந்தது என்று பலர் இருக்கின்றனர்.
முந்தைய காலத்தை காட்டிலும் இன்றைய காலக்கட்டத்தில் நீளமான கூந்தல் உள்ள பெண்களை காண்பதே அரிதாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம் சீரற்ற பராமரிப்பு முறை.
தலைக்கு எண்ணெய் தேய்ப்பது தான் கூந்தலுக்கு நாம் செய்யும் பெரிய பராமரிப்பு பணி என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த எண்ணெயை எப்படி தேய்ப்பது என்று பலருக்கு தெரிவதில்லை. வழிய வழிய எண்ணெய் தேய்த்து, சீவி கொண்டால் முடியே கொட்டாது என்று எண்ணுவது முட்டாள்தனம் என்றே கூற வேண்டும்.
கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்தால், எனக்கு முடி கொட்டுகிறது என்று பலர் புலம்புவதுண்டு. அதற்காக எண்ணெய் தேய்க்காமல் இருக்கக்கூடாது. கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பதில் பல விஷயம் உண்டு. இதை முழுவதுமாக படித்தால் நீங்கள் இனி முடி உதிர்வு பற்றி கவலை கொள்ளவே தேவையில்லை.
அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பது தெரியுமா உங்களுக்கு? கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது என்பது மிகவும் நல்லது. அதுவே, அளவிற்கு அதிகமாக எண்ணெய் தேய்த்தால் அதுவே பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தேவைக்கு அதிகமான எண்ணெயை தலையில் தடவும் போது, ஸ்கால்ப்பில் உள்ள சரும துளைகள் மூடிக்கொள்ளும்.
அதனால், அந்த இடத்தில் முடி வளர்ச்சி என்பது தடைப்படக் கூடும். முக்கியமாக, வாரத்திற்கு 2 முறை தான் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். அதுவும், தலைக்கு குளிப்பதற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்தால் தான் கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமான வளர்ச்சி ஏற்படும்.
கூந்தலை வலுவாக்குவதற்கு எண்ணெய் தேய்க்க வேண்டியது அவசியம். அதுவே, நீண்ட நாட்களுக்கு தலையில் எண்ணெயை அப்படியே விட்டு விட்டால் அது கூந்தலை பாதிக்கக்கூடும். தலையின் சருமமானது இயற்கையாகவே, தலையில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்காக ஒருவித எண்ணெய் பசையை உற்பத்தி செய்யக்கூடியது.
ஆனால், நீங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயை அப்படியே விடுவதால் தலையில் அதிகப் படியான எண்ணெய் பசை சேரக்கூடும். அதனால், முகப்பரு மற்றும் தடிப்புகள் ஏற்படக்கூடும்.தலைக்கு குளிப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக எண்ணெய் தேய்க்கவும் அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து விட்டு காலை எழுந்தவுடன் குளித்து விடவும்.
இதற்கு மேல் எண்ணெய் பசை தலையில் இருக்குமேயானால், அவை கூந்தலுக்கு பாதிப்பை தான் ஏற்படுத்தக் கூடும். இது போன்ற அதிகப் படியான எண்ணெய் பசை தலையில் சேருவதால் தான் முகத்தில் பரு போன்ற பிரச்சனை உருவாகிறது. எண்ணெய் தேய்ப்பதற்கான நேரத்தை நிர்ணயித்து கொண்டால், தேய்க்கும் அளவையும் நிர்ணயிப்பது தான் சிறந்தது.
போதுமான அளவு எண்ணெய் தேய்த்தால் மட்டுமே கூந்தல் ஈரப்பதத்தை ஈர்த்துக் கொள்ளும். ஒருவேளை எண்ணெய் அதிகமாகி விட்டால் உடனே துடைத்து விடுங்கள். பெரும்பாலான பெண்கள், தலைக்கு எண்ணெய் தேய்த்த உடனேயே மசாஜ் செய்ய ஆரம்பித்து விடுவர். அப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும்.
முதலில் எண்ணெய் தேய்ப்பதற்கு முன்பு கூந்தலை சிக்கலின்றி சீவிக் கொள்ளவும். பின்னர், எண்ணெய் தொட்டு மெதுவாக கைகளால் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் முடி கொட்டுவது குறையும் அல்லது முடி கொட்டாது. தலையை சீவி பிறகு எண்ணெய் தேய்ப்பதால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராகி, வேர்கள் வலுபெற்று, கூந்தலையும் ஆரோக்கியமாக வளரச் செய்யும்.
பெரும்பாலானோர், எண்ணெயை கையில் ஊற்றி உள்ளங்கைகளில் தேய்த்து அப்படியே தலையில் தேய்ப்பதை வழங்கமாக கொண்டிருப்பர். இப்படி செய்தால் முடி கொட்ட தான் செய்யும். எப்போதும், எண்ணெயை ஒரு பவுளில் ஊற்றி அதை விரல்களால் தொட்டு, மெதுவாக ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் முடி கொட்டாமல் இருப்பதோடு, அனைத்து ஊட்டச் சத்துக்களும், கூந்தலுக்கு முழுவதுமாக கிடைக்கப்பெறும்.
மேலும். எண்ணெயால் கிடைக்கக்கூடிய ஈரப்பதமும் முழுமையாக கிடைத்திடும். அது மட்டுமல்லாது, இப்படி எண்ணெய் தேய்த்தால் பொடுகு தொல்லை எனும் பேச்சுக்கே இடமிருக்காது. இந்த பழக்கம் அனைத்து பெண்களுக்கு இருக்கும். எண்ணெய் தேய்த்து கூந்தலுக்கு மசாஜ் செய்தவுடன் முடியை தூக்கி கட்டிக் கொண்டு பிற வேலைகளை பார்க்க சென்று விடுவர்.
இது மிகவும் தவறான செயல். எண்ணெய் தேய்த்தவுடன் ஸ்கால்ப்பானது மிகவும் மிருதுவாக இருக்கும். அதுபோன்ற சமயத்தில் கூந்தலை இறுக்கமாக தூக்கி கட்டும் போது, கூந்தல் அதிகமாக உதிர தான் செய்யும். தேய்க்கும் எண்ணெய்வேர்களால் உறிஞ்சப்பட்டு, கூந்தலை மிருதுவாக்க வேண்டுமென்றால், எண்ணெய் தேய்த்தவுடன் கூந்தலை கட்டாமல் ஃப்ரீயாக விட்டு விடுங்கள்.
சரியான புள்ளிகளில் மசாஜ் செய்யப்படும்போதுதான் ரத்தம் புத்துணர்வு பெற்று தேகமெங்கும் அழகு படர அனுமதிக்கும். எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொண்டால், இளமையை பாதுகாக்கலாம்.
இளமையை அப்படியே தக்க வைக்க மிக சிறந்த வழிகளில் ஒன்றுதான் ஆயில் மசாஜ்கள். இப்போது ஆயில் மசாஜ் என்றால் கேரளா செல்ல வேண்டாம். அதற்கென கேரளாவே தமிழகம் வந்திருக்கிறது. அதாவது பல கேரளா ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் தமிழகம் எங்கும் கிளை பரப்பி உள்ளன. அதுமட்டும் இல்லாமல் ஸ்பா சிகிச்சையிலும் எண்ணெய் மசாஜ்கள் தரப்படுகின்றன. நிறைய அழகு நிலையங்கள் தற்போது இந்த ஆயில் மசாஜ்களில் ஈடுபட்டுள்ளன.
தரமான மற்றும் சரியான மசாஜ் மையத்தை நீங்கள் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் ஆரோக்யம் மற்றும் அழகு பாதுகாக்கப்படும். சரியான புள்ளிகளில் மசாஜ் செய்யப்படும்போதுதான் ரத்தம் புத்துணர்வு பெற்று தேகமெங்கும் அழகு படர அனுமதிக்கும்.
திருமணம் வரை அழகை பரமரிக்கும் பெண்களால், அதன் பிறகு குழந்தை, குடும்பம் என இவற்றில் கவனம் செல்ல, சரும பாதுகாப்பு என்பது இல்லாமல் போய் விடுகிறது. சருமம் கடினமாக மாறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், இது முதுமையின் அடையாளம்.
இதற்கு, முக்கிய காரணம் உண்ணும் உணவு முறைகள் தான். இப்படி வாழ்க்கை ஒருபுறம் போக, மனதில் இளமையை காக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே தான் இருக்கும். எண்ணெய் மசாஜ் எடுத்துக் கொண்டால், இளமையை பாதுகாக்கலாம். என்னென்ன எண்ணெய்களால் மசாஜ் செய்யலாம்?
திராட்சை எண்ணெய்: இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளது. ஆகவே, சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். அது மட்டுமல்லாமல், திராட்சை எண்ணெயில் மசாஜ் செய்தால், சரும தளர்ச்சி நீங்குவதோடு ஏதேனும் தழும்புகள் இருந்தால், நாளடைவில் மறைந்து விடும். முகம் நன்கு பொலிவோடு இருக்கும். எந்த வயதிலும் இளமையாக இருக்க விரும்புபவர்கள், இந்த மசாஜை செய்தால் முகச் சுருக்கம் நீங்கி, இளமை நிலைக்கும்.
அவகோடா எண்ணெய்: நமது உடலில் சருமம் தளர்ந்து காணப்படுவதற்கு காரணம், உடலில் இருக்கும் கொலாஜெனின் உற்பத்தி குறைவாக இருப்பதுதான். ஆனால் இந்த அவகோடா எண்ணெயில் இருக்கும், ஒமேகா 3 பேட்டி ஆசிட் அந்த கொலாஜெனின் உற்பத்தியை அதிகரித்து, தளர்ச்சியை குறைத்து விடும். ஆகவே இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்தால், சருமம் இறுக்கமடைந்து முகத்தில் சருமத்துளைகள் அதிகம் காணப்பட்டாலும், அவற்றை விரைவில் போக்கி விடும்.
நல்லெண்ணெய்: மசாஜ்க்கு பயன்படுத்தும் எண்ணெயில் மிகவும் சிறந்தது நல்லெண்ணெய் தான். சில நேரங்களில் எண்ணெய் மசாஜ், பருக்களை ஏற்படுத்தும். ஆனால் நல்லெண்ணெயை பயன்படுத்தினால், எந்த ஒரு பிரச்னையும் வராது. இந்த எண்ணெய், சருமத்தில் ஏற்படும் பருக்களை நீக்கி விடும்.
ஆலிவ் எண்ணெய்: எண்ணெய் வகைகளில் மிகச்சிறந்த எண்ணெய், ஆலிவ் எண்ணெய். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஓமேகா பேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது. முக்கியமாக, இந்த எண்ணெயை வைத்து மசாஜ் செய்யும் போது, எண்ணெயை எக்காரணம் கொண்டும் சூடேற்றக்கூடாது. அவ்வாறு சூடேற்றினால் அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். ஆயில் மஜாஜ் செய்து, உங்கள் இளமையை தக்க வைத்துக்கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது. முதுமைக்கு குட்பை சொல்ல, ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்.
தினமும் கூந்தலுக்கு இதை செய்து வந்தால் கூந்தல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்க உதவும்.
கூந்தலுக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமானது. அதுதான் கூந்தல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகாமல் தடுக்க உதவும். நிறைய பேர் ஸ்டைலுக்காக மேலோட்டமாக தலையில் எண்ணெய் தடவுவார்கள். அது தவறான பழக்கம். உச்சந்தலையிலும் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். ஏனெனில் உச்சந்தலையில் எண்ணெய் தடவினால்தான் முடிக்கு ஊட்டம் கிடைக்கும். கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். எண்ணெய்யை லேசாக சூடுபடுத்தி கூந்தலில் தடவுவது நல்லது. குளிப்பதற்கு முன்பு தலையில் எண்ணெய் தடவுவதற்கு நிறைய பேர் விரும்புவார்கள். ஆனால் கூந்தலில் அழுக்கு படிந்திருந்தால் எண்ணெய் தடவுவதை தவிர்க்க வேண்டும். ஷாம்பு, சிகைக்காய் போன்றவற்றை கொண்டு நன்றாக கழுவி சுத்தப்படுத்தியபிறகு எண்ணெய் தேய்ப்பதுதான் முடியின் வளர்ச்சிக்கு நல்லது. உள்ளங்கையில் எண்ணெய்யை ஊற்றி உச்சந்தலையில் வைத்து நன்றாக அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு முடியின் வேர்ப்பகுதிகளில் லேசாக எண்ணெய் தடவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது கூந்தலுக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தலைமுடியில் நீண்ட நேரம் எண்ணெய் இருந்தால் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அது தவறானது. தலைமுடியில் அதிக நேரமோ, அதிக அளவிலோ எண்ணெய் இருக்கக் கூடாது. குளிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக தலைக்கு எண்ணெய் தேய்த்து ஊறவைத்துவிட்டு பிறகு குளிக்கலாம். தலைமுடியில் எண்ணெய் தேய்த்த பிறகு கூந்தல் சார்ந்த மற்ற பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தலைமுடிக்கு குறைவான அளவிலேயே எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். எண்ணெய் தடவும்போதெல்லாம் மென்மையாக மசாஜ் செய்துவிடுவதும் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும். தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வைத்துக்கொள்வதற்கு வீட்டு உபயோக பொருட்களை கொண்டு கிரீம் கலந்த ‘ஹேர் மாஸ்க்’ தயார் செய்வது நல்லது. கறிவேப்பிலை, வேப்ப இலை, வெந்தயம், கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு ஹேர் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம். குளித்ததும் தலைமுடியை உலர்த்துவதற்கு மென்மையான காட்டன் டவல்களை பயன்படுத்த வேண்டும். கனமான, அடர்த்தியான டவல்களை பயன்படுத்தக்கூடாது. அதுபோல் ஈரமான தலையில் சீப்பு கொண்டு சீவக்கூடாது. அது முடி உடைந்துபோவதற்கு வழிவகுத்துவிடும். இளம் வயதிலேயே ரசாயனம் கலந்த ‘ஹேர் டை’களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அது தலைமுடியை விரைவில் சேதப்படுத்திவிடும். தேங்காய் எண்ணெய்யை நிறைய பேர் கூந்தலுக்கு மட்டும்தான் உபயோகிப்பார்கள். அதனை சருமத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் அழகும் ஜொலிக்கும். தேங்காய் எண்ணெய்யுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து முகத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து வரலாம். தொடர்ந்து அவ்வாறு செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், முடிகள், திட்டுகள் நீங்கி முகம் பளிச்சென்று பிரகாசிக்கும். குழந்தைகளை குளிப்பாட்டியதும் தலைக்கு மட்டுமின்றி கழுத்து, முதுகு பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தடவி வருவது நல்லது. ஒவ்வாமை பிரச்சினை காரணமாக சிலரது சருமம் பாதிப்புக்குள்ளாகும். தேங்காய் எண்ணெய் அதற்கு நிவாரணம் தரும். அதில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் சரும அழகை மேம்படுத்தும் தன்மை கொண்டவை. தேங்காய் எண்ணெய் பூஞ்சை தொற்று கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் கிருமிகளில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவும். வியர்வை, நீரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உடலில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் நீர்ச்சத்தை மீட்டெடுத்து சருமத்திற்கு நலம் சேர்க்கும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் முகம் கழுவுவதற்கு பதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்துவிட்டு பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவலாம். முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமம் பளிச்சிடும்.
பெண்கள் நிறைய பேருக்கு கழுத்தை சுற்றி கருமை தென்படும். இதை எளிய வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கிவிடலாம்.
பெண்கள் நிறைய பேருக்கு கழுத்தை சுற்றி கருமை தென்படும். நகைகள் அணிவது, உடல் வெப்பம், ஒவ்வாமை காரணமாக இந்த பிரச்சினை தோன்றும். எளிய வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே கழுத்தை சுற்றி படர்ந்திருக்கும் கருமையை போக்கிவிடலாம். உருளைக்கிழங்கு கழுத்தில் இருக்கும் கருமையை போக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து சாறு எடுத்து கழுத்தை சுற்றி தேய்த்து வரலாம்.
தயிரும் கருமையை போக்கி பிரகாசம் சேர்க்கக்கூடியது. சிறிதளவு தயிருடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்தை சுற்றி தடவலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதும். நல்ல மாற்றம் தென்படும். இரண்டு டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன் மஞ்சள் அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன், சிறிதளவு ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து பசை போல் தயார் செய்யுங்கள். அதனை கழுத்தை சுற்றி தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் கருமை நீங்க தொடங்கிவிடும்.
ஆப்பிள் சிடேர் வினிகரையும் பயன்படுத்தலாம். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகருடன் நான்கு டேபிள்ஸ்பூன் தண்ணீர் கலந்து பஞ்சில் முக்கி கழுத்தை சுற்றி தேய்த்துவரலாம். விரைவில் கருமை நீங்கிவிடும். பேக்கிங் சோடாவையும் உபயோகிக்கலாம். சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசைபோல் குழைத்து கழுத்தில் தடவி வரலாம். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
மாசு மட்டுமின்றி உணவுப்பழக்கமும் முகப்பருக்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. காபியை அதிகமாக பருகினால் கூட முகப்பரு பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லாத சருமத்தைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு முகப்பருமுதல் எதிரியாக அமைந்து விடுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் அழுக்கு முகத்தில் படர்வது முகப்பருக்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன. மாசு மட்டுமின்றி உணவுப்பழக்கமும் முகப்பருக்கள் தோன்றுவதற்கு மற்றொரு காரணமாக இருக்கிறது. பால் பொருட்கள், பிரெட்டுகள், காரமான மற்றும் எண்ணெய்யில் வறுத்த, பொரித்த உணவுகள் உள்பட பலதரப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் முகப்பருக்கள் தோன்றும். காபியை அதிகமாக பருகினால் கூட முகப்பரு பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா கூறுகையில், “ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மைதான் முகப்பருக்கள் தோன்றுவதற்கு அடிப்படை காரணியாக அமைந்திருக்கின்றன. காபியை அதிகமாக பருகும் பழக்கம் கொண் டவர்களுக்கு முகப்பரு வருவதற்கு வாய்ப்புள்ளது. காபியில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹார்மோன்களை தூண்டிவிடுகிறது. அவை தேவையற்ற கலோரிகளை உடலில் சேர்வதற்கு வழிவகுப்பதோடு முகப்பருகள் தோன்றுவதற்கும் காரணமாகிவிடுகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்பு அதிகம் கொண்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது. காய்கறிகள், பழங்களை உட்கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு உதவும்” என்கிறார்.
“அதிகமான அளவு காபி பருகுவதும், போதுமான அளவு உணவு உட்கொள்ளாததும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். அப்போது உடலில் உள்ள அமிலத்தின் அளவு அதிகமாகிவிடும். அதாவது உடலில் அமிலத்தின் அளவு எவ்வளவு அதிகரிக்கிறதோ அதற்கேற்ப நீரிழப்பு ஏற்படும். காபியை அதிகமாக உட்கொள்ளும்போது அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் நீரில் கரையக்கூடிய தாதுக்கள் உடலில் இருந்து வெளியேறும். இதன் விளைவாகத்தான் நீரிழப்பு ஏற்படுகிறது. அத்துடன் அதிக காபி குடிக்கும் போது நிறைய சிறுநீர் வெளியாகும். அப்போது இயல்பாகவே உடலில் உள்ள நீர்சத்து குறைந்து அமில அளவு அதிகமாகும். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் போவது கூட முகப்பருவுக்கு காரணமாக அமையும்” என்கிறார் மற்றொரு ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா.
முகப்பரு பாதிப்புக்கு தொடர்ந்து ஆளாகுபவர்கள் காபி அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.
முகத்தில் அதிகமான பருக்கள், சுருக்கம், கருமை வருவதால் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அதிக கவனம் செலுத்த வேண்டும். முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
சூரியகதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நம் தோலிலுள்ள மெலனின் நிறமி சுரப்பிகளை அதிகமாக சுரபிப்பதால் தோலின் நிறம் மாறுபடுகிறது.
உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் தோலிலுள்ள வியர்வைகோள துளைகள் விரிவடைந்து இருப்பதால் பருக்கள், கட்டிகள், கிருமி தொற்றுகள் உண்டாகின்றது. இதனால் சரும நோய்களின் தாக்கம் அதிகரிக்கிறது. குறிப்பாக தேமல், படை, கரப்பான், சொரியாசிஸ், உடலில் நிறம் மாறுபாடுகள் உண்டாகின்றன. எனவே நாம் சருமங்களையும் மற்றும் முகங்களையும் பராமரித்து கொள்வது அவசியம்.
முகப்பராமரிப்பு
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்‘ என்ற பழமொழிக்கேற்ப ஒவ்வொருவருடைய முகம் தான் உலகத்தின் முக்கியமான அடையாளம். அதனால் முகத்தை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முகங்களில் அதிகமான பருக்கள், வியர்க்குரு வருவதால் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தினமும் தூய்மையான குளிர்ந்த நீரினால் 3-4 முறை கழுவ வேண்டும்.
சருமபராமரிப்பு
முகபராமரிப்பும், சரும பராமரிப்பும் மிக முக்கியம். ஏனெனில் தோலின் இயற்கைநிலை வேறுபடுவதால் தோலில் அரிப்பு, படை, தேமல் உண்டாகிறது. தினமும் தூய்மையான குளிர்ந்த நீரினால் காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும். இப்போது மக்கள் வாசனையுள்ள சவுக்கார கட்டிகளை உபயோகின்றார்கள். அவைகளில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் மேனி கெட்டுவிடுகிறது. உப்புச்சத்து அதிகம் உள்ள நீரில் குளிப்பதால் எண்ணெய் சிக்கு நீங்காது. இவைகளை எல்லாம் தவிர்க்க சிறந்த வழி பண்டைய காலங்களில் பாரம்பரியமாக உபயோகித்து வந்த குளியல் பொடிகளை உபயோகிப்பது நன்று.
நம் பதினெட்டு சித்தர்கள் கூறியுள்ள குளியல் பொடி ‘நலுங்குமா’ உபயோகிப்பதனால் சருமபிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
நலுங்குமா என்றால் என்ன?
பாசிபயிறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, விலாமிச்சுவேர், கிச்சலிக்கிழங்கு. இவைகளை சரிபங்கு அரைத்து பொடியாக வைத்துக்கொண்டு தினமும் தேய்த்து குளிக்க உபயோகிக்கலாம். இதனால் வியர்க்குரு, நமைச்சல், படை, கரப்பான், சொரியாசிஸ் போன்ற சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.
வீட்டில் செய்யக்கூடிய எளிய முறைகள்
முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள்:-
ஓட்ஸ் 2 ஸ்பூன் எடுத்து இரவு குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இதனை எடுத்து அரைத்து தயிரில் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து சுத்தமான நீரினால் கழுவிக் கொள்ளவும்.
உருளைகிழங்கு 1 எடுத்து வேகவைத்து தோல் நீக்கி விட்டு அரைத்து பாதம் எண்ணெய் (அ) பாலுடன் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும். இது முகத்திற்கு பொலிவு உண்டாக்கும்.
தேவையான அளவு புதினாவை எடுத்து அரைத்துக் கொண்டு அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வரவேண்டும். இதனால் முகத்திற்கு அழகு உண்டாவதுடன் கிருமி தொற்றுகளை தவிர்க்கலாம்.
ஆரஞ்சு தோலை எடுத்து நன்றாக வெயிலில் காயவைத்து நன்கு அரைத்து வைத்துக்கொண்டு இதில் 2 ஸ்பூன் பொடியுடன் 1 கப் தயிர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவிவர முகம் பளபளப்பாக மிகவும் பொலிவுடன் இருக்கும்.
10 பாதாம் பருப்பை எடுத்து இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை தோல் நீக்கி பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும்.
வாழைப்பழம் 1 எடுத்து 1 கப் தயிரில் கலந்து அரைத்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உண்டாகும் பருக்கள் மற்றும் கட்டிகள் வராமல் தடுக்கலாம்.
தேனுடன் சமபங்கு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து முகத்தில் தடவ 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள முகத்தில் உள்ள தேவையற்ற செல்கள் நீங்கிவிடும்.
வெள்ளரிபிஞ்சை அரைத்து முகத்தில் பூசி பின்பு 20 நிமிடம் கழித்து கழுவி கொள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி தோல் மென்மையாகும்.
கடலைமாவு 2 ஸ்பூனுடன் பால் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்த பசையுடன் முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளவும்.
மஞ்சள்தூள், கோதுமை மாவு மற்றும் நல்லெண் ணெயுடன் ஒன்று சேர்த்து உடலில் தேவையற்ற இடங்களில் முடிவளரும் இடத்தில் தடவ தேவையற்ற முடிகள் நீங்கிவிடும்.
ஆரஞ்சு பழச்சாறு உடலில் தடவிவர தோல் அழகாகவும், மென்மையாகவும் மாறும்.
தக்காளியை நன்றாக அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவிக்கொண்டு வந்தால் முகம் பளபளப்புடன் பொலிவுடன் இருக்கும்.
உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் தோலிலுள்ள வியர்வைகோள துளைகள் விரிவடைந்து இருப்பதால் பருக்கள், கட்டிகள், கிருமி தொற்றுகள் உண்டாகின்றது. இதனால் சரும நோய்களின் தாக்கம் அதிகரிக்கிறது. குறிப்பாக தேமல், படை, கரப்பான், சொரியாசிஸ், உடலில் நிறம் மாறுபாடுகள் உண்டாகின்றன. எனவே நாம் சருமங்களையும் மற்றும் முகங்களையும் பராமரித்து கொள்வது அவசியம்.
முகப்பராமரிப்பு
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்‘ என்ற பழமொழிக்கேற்ப ஒவ்வொருவருடைய முகம் தான் உலகத்தின் முக்கியமான அடையாளம். அதனால் முகத்தை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முகங்களில் அதிகமான பருக்கள், வியர்க்குரு வருவதால் அதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தினமும் தூய்மையான குளிர்ந்த நீரினால் 3-4 முறை கழுவ வேண்டும்.
சருமபராமரிப்பு
முகபராமரிப்பும், சரும பராமரிப்பும் மிக முக்கியம். ஏனெனில் தோலின் இயற்கைநிலை வேறுபடுவதால் தோலில் அரிப்பு, படை, தேமல் உண்டாகிறது. தினமும் தூய்மையான குளிர்ந்த நீரினால் காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் குளிக்க வேண்டும். இப்போது மக்கள் வாசனையுள்ள சவுக்கார கட்டிகளை உபயோகின்றார்கள். அவைகளில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் மேனி கெட்டுவிடுகிறது. உப்புச்சத்து அதிகம் உள்ள நீரில் குளிப்பதால் எண்ணெய் சிக்கு நீங்காது. இவைகளை எல்லாம் தவிர்க்க சிறந்த வழி பண்டைய காலங்களில் பாரம்பரியமாக உபயோகித்து வந்த குளியல் பொடிகளை உபயோகிப்பது நன்று.
நம் பதினெட்டு சித்தர்கள் கூறியுள்ள குளியல் பொடி ‘நலுங்குமா’ உபயோகிப்பதனால் சருமபிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
நலுங்குமா என்றால் என்ன?
பாசிபயிறு, வெட்டிவேர், சந்தனம், கோரைக்கிழங்கு, கார்போகரிசி, விலாமிச்சுவேர், கிச்சலிக்கிழங்கு. இவைகளை சரிபங்கு அரைத்து பொடியாக வைத்துக்கொண்டு தினமும் தேய்த்து குளிக்க உபயோகிக்கலாம். இதனால் வியர்க்குரு, நமைச்சல், படை, கரப்பான், சொரியாசிஸ் போன்ற சரும நோய்கள் வராமல் தடுக்கலாம்.
வீட்டில் செய்யக்கூடிய எளிய முறைகள்
முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள்:-
ஓட்ஸ் 2 ஸ்பூன் எடுத்து இரவு குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் இதனை எடுத்து அரைத்து தயிரில் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து சுத்தமான நீரினால் கழுவிக் கொள்ளவும்.
உருளைகிழங்கு 1 எடுத்து வேகவைத்து தோல் நீக்கி விட்டு அரைத்து பாதம் எண்ணெய் (அ) பாலுடன் கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும். இது முகத்திற்கு பொலிவு உண்டாக்கும்.
தேவையான அளவு புதினாவை எடுத்து அரைத்துக் கொண்டு அதனுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவி வரவேண்டும். இதனால் முகத்திற்கு அழகு உண்டாவதுடன் கிருமி தொற்றுகளை தவிர்க்கலாம்.
ஆரஞ்சு தோலை எடுத்து நன்றாக வெயிலில் காயவைத்து நன்கு அரைத்து வைத்துக்கொண்டு இதில் 2 ஸ்பூன் பொடியுடன் 1 கப் தயிர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் தடவிவர முகம் பளபளப்பாக மிகவும் பொலிவுடன் இருக்கும்.
10 பாதாம் பருப்பை எடுத்து இரவு ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை தோல் நீக்கி பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளவும்.
வாழைப்பழம் 1 எடுத்து 1 கப் தயிரில் கலந்து அரைத்து தினமும் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வர முகத்தில் உண்டாகும் பருக்கள் மற்றும் கட்டிகள் வராமல் தடுக்கலாம்.
தேனுடன் சமபங்கு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து முகத்தில் தடவ 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள முகத்தில் உள்ள தேவையற்ற செல்கள் நீங்கிவிடும்.
வெள்ளரிபிஞ்சை அரைத்து முகத்தில் பூசி பின்பு 20 நிமிடம் கழித்து கழுவி கொள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி தோல் மென்மையாகும்.
கடலைமாவு 2 ஸ்பூனுடன் பால் மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்த பசையுடன் முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து கழுவிக்கொள்ளவும்.
மஞ்சள்தூள், கோதுமை மாவு மற்றும் நல்லெண் ணெயுடன் ஒன்று சேர்த்து உடலில் தேவையற்ற இடங்களில் முடிவளரும் இடத்தில் தடவ தேவையற்ற முடிகள் நீங்கிவிடும்.
ஆரஞ்சு பழச்சாறு உடலில் தடவிவர தோல் அழகாகவும், மென்மையாகவும் மாறும்.
தக்காளியை நன்றாக அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவிக்கொண்டு வந்தால் முகம் பளபளப்புடன் பொலிவுடன் இருக்கும்.






