என் மலர்
அழகுக் குறிப்புகள்
- பொலிவான சருமத்தை வழங்குகிறது.
- கரும்புள்ளிகள் மறைந்து பளிச்சென்று இருக்கும்.
இந்த கேழ்வரவு ஃபேஸ் பேக் உங்களது முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தப்படுத்தி, இறந்த சரும செல்களை நீக்கி, பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது. இது முகப்பருவை தடுக்கிறது. உங்களுக்கு பொலிவான சருமத்தை வழங்குகிறது. உங்கள் சருமத்திற்கு தீவிர ஊட்டச்சத்தை அளிக்கிறது. உங்களது சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பொலிவை அளிக்கிறது.
ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் கேழ்வரகு எடுத்து அதனை பால் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அரைமணிநேரம் கழித்து அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் முகத்தை பாலில் பஞ்சு தொட்டு முகத்தை துடைத்துவிட்டு இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் போட்டு அந்த பேக் காய்ந்தவுடன் ஈரமான துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து பளிச்சென்று இருக்கும்.
பயன்கள்
* ஸ்க்ரப் கம் ஃபேஸ் மாஸ்க்
* சருமத்தை நன்றாக எக்ஸ்ஃபோலியேட் செய்கிறது
* அதிகப்படியான எண்ணெய், அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்குகிறது
* சருமத்தை இயற்கையாக புத்துணர்ச்சியடையச் செய்கிறது
* சாதாரண மற்றும் எண்ணெய் சருமத்திற்கு ஏற்றது
- நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது.
- பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.
சமையலுக்கு உபயோகிக்கும் நெய், கூந்தல் பராமரிப்புக்கு பல வழிகளில் பயன்படுகிறது. நெய்யில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. முடி உதிர்வை தடுத்து, வளர்ச்சியை தூண்டக்கூடிய வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ ஆகியவை நெய்யில் நிறைந்திருக்கின்றன. நெய்யுடன் தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, தேன் மற்றும் வேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வீட்டிலேயே ஹேர் மாஸ்க் தயாரித்து உபயோகிக்கலாம்.
நெய் ஹேர் மாஸ்க்
போதுமான அளவு நெய்யை எடுத்து தலையிலும். கூந்தலிலும் நன்றாக பூசவும். 20 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். நுனி முடி பிளவுப்படும் பிரச்சினைக்கு இது சிறந்த தீர்வாகும். நெய், வறண்ட தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும், முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.
நெய், வேப்பம்பூ ஹேர் மாஸ்க்:
ஒரு கிண்ணத்தில் 3 டீஸ்பூன் நெய், 1 டீஸ்பூன் தேன், 10 முதல் 15 வேப்பிலைகள் கலந்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில் அதை சிறு தீயில் வைத்து 3 முதல் 4 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பின்பு அதில் இருந்து வேப்பிலைகளை வெளியே எடுக்கவும், பின்பு அந்த நெய் கலவையை மிதமான சூட்டில் எடுத்து தலை முழுவதும் பூசவும். 30 நிமி டங்கள் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். வேப்பிலையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பொடுகு பிரச்சினையை நீக்கும், உடல் சூட்டை குறைக்கும், இளநரை உண்டாகாமல் தடுக்கும்.
நெய், தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்:
2 டீஸ்பூன் நெய்யுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சிறு தீயில் 10 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். பின்பு அதில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு எசன்ஷியல் எண்ணெய்யை சில துளிகள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தலை பகுதியிலும், கூந்தலிலும் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகை நீக்கி, முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
நெய், எலுமிச்சம் பழச்சாறு ஹேர் மாஸ்க்:
2 டீஸ்பூள் நெய்யை உருக்கி, அதனுடன் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலக்கவும். இதை மித மான சூட்டில் எடுத்து தலையில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.
நெய், தேன் ஹேர் மாஸ்க்:
போதுமான அளவு நெய்யுடன் சில துளிகள் தேன் கலந்து தலையில் பூசவும். சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த ஹேர்மாஸ்க் முடியின் வேர்க்கால்களுக்கு புத்துயிர் அளிக்கும். தலைமுடியை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
- குளிர்காலங்களில் சருமம் அதிக வறட்சியாக காணப்படும்.
- சருமம் எரிச்சலின்றி பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும்.
பொதுவாகவே குளிர்காலங்களில் சருமம் அதிக வறட்சியாக காணப்படும். இந்த சமயங்களில் சிலர் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துகின்றனர். சிலர் இதற்கென பேசியல் செய்து சருமத்தை பேணுகின்றனர். சரும வறட்சி பிரச்சினைகளில் இருந்து விடுபட ஒவ்வொரு முறைகளை பெண்கள் பின்பற்றினாலும் கிளிசரின் சோப் அதற்கு நல்ல தீர்வாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
தற்போது சமூக வலைதளங்களில் பலரும் ஆர்கானிக் சோப்புகளை தயார் செய்து விற்று வருகின்றனர். ஆனால் செலவு அதிகம் இருக்கும் என எண்ணி அதனை வாங்கி உபயோகம் செய்ய மக்கள் தயங்குகின்றனர். குறைந்த செலவில் நாமே வீட்டில் ஆர்கானிக் சோப்புகளை செய்ய முடியும். கிளிசரின் சோப் எளிய முறையில் செய்யக் கூடியது. நாம் வீட்டிலேயே சோப்களை தயார் செய்து பயன்படுத்தலாம். திரவ வடிவில் இருக்கும் கிளிசரின் சருமத்தை அழகுபடுத்துவதோடு ஈரப்பதமாகவும் வைக்கிறது. இதனை சோப்பாக செய்து பயன்படுத்தும் சருமம் எரிச்சலின்றி பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும். இதனை வீட்டிலேயே செய்து உபயோகம் செய்ய முடியும்.
கிளிசரின் சோப் செய்ய சில வாசனை திரவியங்கள் (ரோஸ் ஆயில், லாவெண்டர் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய்), கிளிசரின் பேஸ், இயற்கை நிறமூட்டிகள் ஆகியவை தேவை. இயற்கை நிறமூட்டியாக மஞ்சள் தூள், குங்குமப்பூ பயன்படுத்தலாம். சோப் தயார் செய்ய சிலிக்கான் மோல்ட் எனும் அச்சுகளை வாங்க வேண்டும்.
கிளிசரின் பேசை எடுத்து குட்டி துண்டுகளாக நறுக்கி வையுங்கள். ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதனை மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். நல்ல கைபிடியுடன் வாட்டமான பாத்திரத்தில் நறுக்கிய கிளிசரினை எடுத்து ஏற்கனவே சூடாகி கொண்டிருக்கும் நீரில் வைக்க வேண்டும். கவனமாக இருங்கள் பாத்திரம் மூழ்க கூடாது. இதை தான் டபுள் பாயிலிங் என்பார்கள். இந்த கிளிசரின் துண்டுகள் நன்கு உருகும் வரை சுத்தமான கரண்டியால் கிளறிவிடுங்கள். உருகிய பிறகு அதனை இறக்கி வையுங்கள். இதனுடன் தேவையான வாசனை திரவியங்களை ஊற்றி கொள்ள வேண்டும். இந்த செயல்முறைக்கு பிறகு அறை வெப்பநிலையில் 2 மணி நேரம் குளிர விடவேண்டும். சருமத்திற்கு ஏற்ற ஆர்கானிக் சோப் தயார்.
வாசனை திரவியங்கள் கலந்த கிளிசரின் கலவையினை தாமதிக்காமல் சோப் மோல்டில் ஊற்ற வேண்டும். கிளிசரின் தன்மையே உடனடியாக குளிர்வதுதான். ஆகவே அடுத்தடுத்த செய்முறைகளுக்கு கிளிசரின் உறையும் முன்பு தயாராக இருப்பது அவசியம். சோப் மோல்டில் ஊற்றிய பிறகு நமக்கு தேவைப்பட்டால் ரோஜா, பன்னீர் சோப், நலங்கு மாவு சோப், கற்றாலை சோப், சந்தனம் சோப், வேப்பிலை சோப், துளசி சோப் ஆகியவற்றை செய்யலாம்.
- ஹோம்மேட் ஆர்கானிக் சோப்புகளில் பல நன்மைகள் இருக்கிறது.
- வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் தயார் செய்யலாம்.
குளிர்காலமோ, வெயில் காலமோ எந்த காலமாக இருந்தாலும் சிலருக்கு எந்த குளியல் சோப்பும் ஒத்துக் கொள்வதே இல்லை அவர்களும் தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டப்படும் அத்தனை நிறங்களிலான சோப்புகளையும் ஒன்று விடாமல் பயன்படுத்தி ஓய்ந்திருப்பார்கள். சிலர் கலர், கலராக சோப் எதற்கு என்று வெள்ளை நிற சோப்புக்கு மாறிய பின்னரும் கூட சருமம் என்னவோ அவர்களது ஆசைப்படி பளபளக்காமல் மேலும் பொலிவிழந்து வறண்டும், வெடித்தும் தோற்றமளிப்பதைக் கண்டு மனச்சோர்வில் வீழ்ந்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள்.. சோப்போடு நிறுத்திக் கொள்வதில்லை. சோப்பில் கிடைக்காத சரும மென்மை மாய்சரைசர்களில் கிடைக்கிறதா பார்க்கலாம் என பல்வேறு நிறங்களில் மாய்சரைசர்களைப் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள முயன்று கொண்டிருப்பார்கள்.
இந்த தொல்லைகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமானால் கடைகளில் விற்கப்படும் விதம், விதமான செங்கல் கட்டிகளை தூக்கிக் கடாசி விட்டு நமக்கே, நமக்கேயான நேச்சுரல் பாடி வாஷ் மற்றும் சோப்களை நாமே தயாரித்துக் கொள்வது ஒன்று தான் சிறந்த வழி.
திரவ சோப்பின் சிறப்பு என்னவென்றால் அது சருமத்தோடு ஒட்டி உறவாடி பின் பிரிய மாட்டேன் என்று படிந்து சரும வறட்சிக்கு காரணமாவதில்லை. அதனால் தான் நட்சத்திர விடுதிகளில் பெரும்பாலும் திரவ சோப்களையே தங்கள் விருந்தினர்களுக்கு காம்ப்ளிமெண்ட்டரியாகத் தருகிறார்கள். ஆர்கானிக் முறையில் ஹோம்மேட் சோப்களின் கை வண்ணத்தில் அனைவரது சருமமும் விரும்பிய வண்ணம் பொலிவு பெற்றால் சரி தான்.
ஹோம்மேட் ஆர்கானிக் சோப்புகளில் பல நன்மைகள் இருக்கிறது. ஆயில் சருமம், உலர் சருமம்... என சரும வகைகளுக்கு ஏற்ற சோப்புகளை நாமே நம் சருமத்திற்கு ஏற்றவாறு வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் தயார் செய்யலாம். குப்பைமேனி இலையில் தயாராகும் சோப்புக்கு சரும அலர்ஜிகளை கட்டுப்படுத்தும் திறன் உண்டு. உருளைக்கிழங்கு சோப் 'பிளிச்' செய்த உணர்வை தரும்.
ரோஜா இதழ் சோப் சருமத்தை மென்மையாக்கும். கற்றாழை முகத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும். இப்படி, சரும தேவைக்கு ஏற்ப, தக்காளி, கேரட், வேப்பிலை-துளசி, அஸ்வகந்தா, ஆவாரம் பூ, ஆட்டுப்பால், தேங்காய்ப்பால்... என பலவிதமான மூலிகைகளில் சோப்புகளை தயாரிக்கலாம். இதனால்தான், ஆர்கானிக் ஹோம்மேட் சோப்புகளை டீன்-ஏஜ் வயதினர் விரும்பி வாங்குகிறார்கள்.
உதாரணத்திற்கு, சோப் போன்ற பொருட்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்போது, அதற்கென ஒருசில ரசாயனங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதை தவிர்க்க வேண்டுமானால், அந்த கெமிக்கலுக்கு ஒத்துபோகும், இயற்கை பொருளை சரிவர சேர்க்க வேண்டும். அப்போதுதான், அது 100 சதவிகித ஆர்கானிக் பொருளாகிறது.
- முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.
- முகத்தில் உள்ள வறட்சியான நிலை மாறும்.
தேவையான பொருட்கள்:
கடலை பருப்பு- 25 கிராம்
மைசூர் பருப்பு- 25 கிராம்
அரிசி- 25 கிராம்
பாசிப்பயறு- 25 கிராம்
கெட்டி தயிர்- 25 கிராம்
செய்முறை:
கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பருப்பு வகைகளையும் ஒரு பவுலில் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் உற்றி அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இதனை க்ரீம் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மிக்சியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையை கொஞ்சம் தண்ணீர் உற்றி கலக்கி அதனை ஒரு வெள்ளை துணியில் வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
வடிகட்டிய கலவையை வேறு ஒரு டப்பாவில் சேர்த்து அதில் கெட்டி தயிரையும் இதேபோன்று ஒரு வெள்ளை துணியில் வடிகட்டி அதனையும் இந்த கலவையுடன் சேர்க்க வேண்டும். இதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக்கை திருமணம் நடக்க இருக்கும் பெண்கள் உடல் முழுவதும் தொடர்ந்து தினமும் இதனை தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து மிதமான தண்ணீரால் கழுவி வந்தால் நல்ல மாற்றத்தை உண்மையாக பார்க்கலாம்.
முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். முகத்தில் உள்ள வறட்சியான நிலை மாறும். தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது முகம் பளபளப்பாக இருப்பதை பார்க்கலாம்.
- அழகு கலையில் புதுமையான பேஷியல் முறைகள் வந்துகொண்டே இருக்கிறது.
- இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது.
`பேஷியல்' என்று பேச தொடங்கினால், நிறைய வகைகளையும், நிறைய முறைகளையும் பேச வேண்டியிருக்கும். அந்தளவிற்கு, அழகு கலையில் புதுமையான பேஷியல் முறைகள் வந்துகொண்டே இருக்கிறது. அப்படி ஒன்றாக, இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது, ஹைட்ரா பேஷியல். இதுதான், இளம் வயதினரின் அபிமான பேஷியல் முறையாகி இருக்கிறது. காரணம், மற்ற பேஷியல் முறைகளை விட, முகப்பொலிவும், சரும ஆரோக்கியமும் இதில் அதிகம் என்பதால், இளம் வயதினர், அதிகமாக விரும்புகின்றனர்.
அது என்ன ஹைட்ரா பேஷியல், இதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? ஹைட்ரா பேஷியல் என்பது சருமத்தை சுத்தப்படுத்தவும், நீரேற்றமாகவும் (ஹைட்ரேட்) வைத்துக்கொள்ள பயன்படும் நவீன பேஷியல் முறை. இதற்கு என பிரத்தியேக கருவிகள் உண்டு. அந்த கருவிகள், சரும நுண் துளைகளை சுத்தம் செய்து, அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்றும் பணிகளை செய்யும். மேலும் சருமத்தை அழகுகூட்ட, பல்வேறு `சீரம்' வகைகளை பயன்படுத்துவதால், முகம் பொலிவாகிறது.
இதுதான் அடிப்படை என்றாலும், டீன்-ஏஜ் வயதினரின் தேவைக்கு ஏற்ப, சீரம் வகைகளும், பூஸ்டர் வகைகளும் மாறுபடும்.
பொதுவாக மூன்று விதமான முறைகளில் இந்த பேஷியல் செய்யப்படுகிறது. அதில் ஒன்று சிக்னேச்சர். இது 30 நிமிடங்கள் செய்யக்கூடியது. அடுத்தது, டீலக்ஸ். இது 45 நிமிடங்கள் செய்யக்கூடியது. இறுதியாக, பிளாட்டினம் வகை பேஷியல் 1 மணிநேரம் செய்யக்கூடியது. இந்த மூன்று பேஷியலிலும், சீரம் எனப்படும் முகப்பொலிவு எண்ணெய்களும், பூஸ்டர் எண்ணெய்களுமே மாறுபடும். மேலும், எண்ணெய் சருமம், வறண்ட சருமம்... இப்படி சருமத்தின் தன்மைக்கு ஏற்பவும், சில நுணுக்கங்கள் மாறுபடும்.
வயதான பிறகும், முகத்தை இளமையாக காட்டக்கூடிய சக்தி, இந்த பேஷியலுக்கு உண்டு. சரும வெடிப்புகளை நீக்கி, சருமத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். முகப்பருக்கள், வடுக்கள் போன்றவற்றையும் போக்கக்கூடியது. மேலும் இதில் 5-6 படிநிலைகள், 9 படி நிலைகள், 10, 11 என நிறைய படி நிலைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தேவையை பூர்த்தி செய்வதாகவும், சரும அழகை மெருகேற்றுவதாகவும் அமைந்திருக்கிறது.
அந்தவகையில், வெயில் பாதிப்பினால் கருப்பாகும் சருமத்தை மீட்டெடுப்பது, பிக்மென்டேஷன் பாதிப்பை சீர்செய்வது, தீக்காயங்களை மறைய வைப்பது... போன்ற பல நன்மைகள் இருப்பதினால் தான், எல்லா வயதினரும் இதனை விரும்புகின்றனர். பெண்களை விட ஆண்களே அதிகம் விரும்பி, இதை செய்கின்றனர்.
கொஞ்ச நாட்களிலேயே இது பிரபலமாகி விட்டது என்பதால், நிறைய இடங்களில் இந்த பேஷியல் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம், முறையாக பயிற்சி பெற்றவர்களா...? என்பதை உறுதி செய்வது நல்லது. இது எளிமையான பிராசஸ்தான் என்றாலும், சருமத்தோடு சாலிஸ் லைக், கிளைகாளிக் போன்றவை பூசுவதால், முறையான கல்வியறிவு பெற்றவர்களிடம் பேஷியல் செய்வது நல்லது.
சிலர் சுயமாகவே, வீட்டிலேயே செய்கிறார்கள். அதுவும் நல்லதுதான் என்றாலும், இதை அழகு நிலையங்களில் செய்துகொள்ளும்போது 100 சதவிகித முகப்பொலிவு கிடைக்கும். மேலும் சரும வல்லுநர்களின் ஆலோசனையும் கிடைக்கும்.
- வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம்.
- பணிபுரிய விரும்பும் பெண்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
முதலில் நீங்கள் உங்கள் உடலுக்கு ஏற்ற அல்லது உங்கள் சருமத்திற்கு ஏற்ற சோப்புகளில் எந்த சோப்பை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்று முடிவெடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் சிகப்பழகையும், உடல் நறுமணத்தையும், மென்மையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியதாக அந்த சோப் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தேவையான பொருட்களை சேர்த்து வீட்டிலேயே சோப் தயாரிக்கலாம். அதை நீங்கள் சந்தைப்படுத்தவும் செய்யலாம். வீட்டில் இருந்து பணிபுரிய விரும்பும் பெண்களுக்கு இது பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்கள், அருகில் உள்ளவர்கள் என கொடுத்து பரிசோதித்துவிட்டு பின்னர் சந்தைப்படுத்த தயார் ஆகலம். இப்படி விதவிதமான சோப்புகள் உள்ளன. வீட்டிலேயே தயாரிக்க கூடிய சில சோப் வகைகளை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்...
ஸ்கின் ஒயிட்டனிங் சோப்
மைசூர் பருப்பு 50 கிராம் எடுத்து மிக்சியில் பொடித்துக்கொள்ள வேண்டும். அதனுனர் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 விட்டமின் ஈ கேம்ஸ்யூல், ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ரெகுலர் சைஸ் டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் சோப் வாங்கி அதை மெல்லிய ஸ்லைஸ்களாக துண்டாக்கி கொள்ள வேண்டும். ஸ்லைஸ் செய்த சோப் துண்டுகளை டபுள் பாய்லிங் முறையில் நன்கு சூடாக்கினால் அது உருகிவிடும். உருகிய சோப் கலவையுடன் நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கலவையையும் சோப் கலவையில் சேர்த்து கலந்து அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். சூடு கைபொறுக்கும் பதமானதும் அதை உங்களுக்கு பிடித்த சோப் மோல்டுகளில் ஊற்றி அறைவெப்ப நிலையில் ஆறவிடவும். ஆறிய பிறகு மோல்டுகளில் இருந்து பிரித்து எடுக்கலாம்.
வேப்பிலை சோப்
ஒரு கைப்பிடி வேப்பிலைகளை எடுத்து அதனை நன்றாக கழுவி மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் இதனுடன் 2 வைட்டமின் ஈ எண்ணெய்யும் சேர்த்து கலந்து இதனை டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் எடுத்து டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கி இந்த கலவையை அதனுடன் கலந்து சோப் மோல்டில் ஊற்றி எடுத்தால் வேப்பிலை சோப் தயார். இது நாம் வீட்டிலேயே தயாரிக்கும் சோப் என்பதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. வேப்பிலை சோப் உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை விரட்டவும், சருமத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது.
கற்றாலை சோப்
சுத்தமான கற்றாலை ஜெல் ஒரு கப் எடுக்க வேண்டும். அதில் வைட்டமின் ஈ எண்ணெய் 2 கேப்ஸ்யூல் சேர்க்க வேண்டும், இதனுடன் பாதாம் ஆயில் ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் மற்றும் இதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து க்ரீம் பதத்து கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் எடுத்து டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கி இந்த க்ரீமையும் அதனுடன் கலந்து சோப் மோல்டில் ஊற்றி எடுத்தால் கற்றாலை சோப் தயார். இந்த சோப் ஸ்கின் ஒயிட்டனிங்கிற்கும் பயன்படும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது உடலுக்கு நல்ல சைனிங் மற்றும் குளோவாக இருப்பதற்கும் உதவுகிறது.
- உடம்பில் முக சருமம் மிகவும் சென்சிடிவ் ஆனது.
- முகத்திற்கு தினமும் ஃபேஸ் மசாஜ் செய்யுங்கள்.
நம்முடைய உடம்பில் முக சருமம் மிகவும் சென்சிடிவ் ஆனது என்பதால் எளிதாக தூசு, மாசுகளால் பாதிக்கப்படுகிறது. சருமத்திற்கு லேசாக நீங்கள் குளிக்க போகும் முன்பு இரண்டு நிமிஷம் தினமும் ஃபேஸ் மசாஜ் செய்யுங்கள். கன்னம், கண்களுக்கு கீழே இருக்கும் பகுதி, நெற்றி, மூக்கு ஆகிய இடங்களில் லேசாக அழுத்தி சர்குலர் மோஷனில் மசாஜ் செய்யுங்கள். கிளாக் மற்றும் ஆன்டி கிளாக் வைஸ் எல்லா இடங்களிலும் மிருதுவாக ஒரு விரலை வைத்து மசாஜ் செய்யும் பொழுது அல்லது முன்னிருந்து பின்னாக நீவி விடும் பொழுது சருமமானது இலகுவாகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் சருமம் முதிர்வை சந்திப்பதை காலதாமதம் செய்கிறது. இதனால் இளமையான தோற்றம் எப்பொழுதும் நமக்கு கிடைக்கும்.
அந்த வகையில் நாம் இன்று பலவகையான ஃபேஸ் மாஸ்க்குகளை பற்றி பார்க்கலாம்.
ஸ்கின் டோன் ஃபேஸ் பேக்
அரிசிமாவு- 2 ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், தயிர்- ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர்- ஒரு மூடி இவை அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு பேஸ்ட் மாதிரி கலந்து அதனை முகம், கை, கழுத்து பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி வர முகம் கண்ணாடி மாதிரி பளபளப்பாக இருக்கும். இதனை வாரத்திற்கு 2 முறை என்று தொடர்ந்து பயன்படுத்தி வர நல்ல மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.
பீட்ருட் ஃபேஸ் மாஸ்க்
பீட்ருட்டை எடுத்து துருவி அதனை சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பீட்ருட் சாறுடன், 2ஸ்பூன் அரிசிமாவு, ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்துகொள்ள வேண்டும். பீட்ருட் மாஸ்க் தயார். இந்த கலவையினை வாரம் இருமுறை இரவில் மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது வெயிலினால் முகம், கைகளில் ஏற்படும் கருமை நீங்கவும், முகம் பளபளப்பாகவும், சருமம் பொலிவாகவும் காணப்படும்.
டீ-டேன் ஃபேஸ் பேக்
ஒரு கப்பில் கடலைமாவு 3 ஸ்பூன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து பேக்காக செய்து இதனை கை, கால்களில் தினமும் தேய்த்து வரலாம். இவ்வாறு பயன்படுத்தி வரும் போது நாம் ஒவ்வொரு நாளும் வெளியின் சென்று வரும் போது சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதற்கும், கருமை நிறம், இறந்த செல்களை களைவதற்கும் இந்த பேக் பெரிதும் பயன்படுகிறது.
குளியல் பொடி
ஆரஞ்சு பழ தோல்கள் ஒரு கப், கடலைமாவு அரை கப், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், காய்ந்த ரோஜா இதழ்கள் ஒரு கப் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மிக்சி ஜாரில் நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த பொடியை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். இந்த பொடியுடன் தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வர அன்றைய நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம்.
க்ரீன் டீ ஃபேஸ் பேக்
ஒரு பவிலில் க்ரீன் டீ பேக்கை போட்டு அது மூழ்கும் அளவிற்கு சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். 15 நிமிடம் கழித்து டீ பேக்கை எடுத்துவிட்டு அந்த தண்ணீரில் கடலைமாவு, காபி தூள் ஒரு ஸ்பூ, தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து பேஸ் போல கலந்து பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் பளபளப்பாகவும், வலுவலுப்பாகவும் மாறும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற கரும்புள்ளிகள் மறையும்.
- தேனை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
- இளநீர் அடிக்கடி குடிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.
* தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது சருமத்திற்கு நல்லது.
* வைட்டமின் சி நிறைந்த பழச்சாறுகளை அதிகம் குடித்து வந்தால், சருமம் பொலிவடையும்.
* ஊறவைத்த பாதாமை தினமும் 5 என்ற எண்ணிக்கையில் உட்கொள்வது சரும வறட்சியை தடுக்கும்.
* தேனை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
* வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயால் தோலை முழுவதும் மசாஜ் செய்து குளித்து வந்தாலும் உடல் சூடு குறைந்து சருமம் பொலிவு பெறும்.
* கற்றாழையை வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தில் தடவி குளித்து வந்தால் பலன் கிடைக்கும்.
* எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து சருமத்தில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
* பப்பாளி, வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
* இளநீர் அடிக்கடி குடிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது.
* வைட்டமின் சி உள்ள எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் போன்ற புளிப்பு பழங்களை உட்கொள்வது சருமத்தைப் பாதுகாக்கும்.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல்.
- இளமை பொலிவைத் தக்கவைக்க உதவும்.
இயற்கையான அணுகுமுறைகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம், உங்களை அழகாகக் காட்டலாம். உங்கள் சருமத்தைப் பாதுகாத்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் சீரான தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுதல் ஆகியவை உங்கள் இளமை பொலிவைத் தக்கவைக்க உதவும். என்றும் இளமையுடன் அழகாக இருப்பதற்கு உதவும் இயற்கை முறைகளை குறித்து இங்கு காணலாம்.
* பப்பாளி பழத்தை எடுத்து துருவிக்கொள்ள வேண்டும். அதில் காபி தூள் கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், தேன் கால் டீஸ்பூன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து மிதமான தண்ணீரில் கழுவ வேண்டும்,
* ஒரு பவுலை அடுப்பில் வைத்து அதில் 100 கிராம் பாலை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அந்த கலவை கெட்டியானதும் இறக்கி வைத்து அதில் கால் டீஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கற்றாலை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கி பயன்படுத்தலாம்.
முகத்தில் உள்ள கருமை நீங்கவும், முகம் பொலிவு பெறவும், சருமம் வறண்டு விடாமல் இருப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம். முகத்திற்கு நல்ல பளபளப்பு கிடைக்கும்.
* 2 ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து ஒரு வாணலியில் போட்டு அதனை நன்றாக நிறம் மாறி வருகிற அளவுக்கு வறுத்து எடுக்க வேண்டும். அது பார்ப்பதற்கு மஞ்சள் நிறம் மாறி காபி பொடி கலரில் இருக்கும். இதனை ஒரு கின்னத்தில் போட்டு அதில் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். இதனை முகம், கை, கழுத்து பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவ வேண்டும். இது ஒரு சிறப்பான டீடேன் பேக்காக இருக்கும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது வெயிலினால் ஏற்படும் கருமை மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மாறி முகம் மென்மையாக இருக்கும்.
* உதடு கருமை நீங்க பீட்ருட்டை மிக்சி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை வடிகட்டி அதில் நெய் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த கலவை கெட்டியானதும் அதனை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இப்போது இயற்கையான முறையில் லிப் பாம் தாயார்.
* முதலில் உதட்டை ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இதனை உதட்டில் ஸ்க்ரப்பாக பயன்படுத்தி தேய்த்து எடுக்க வேண்டும். அதன்பிறகு தயார் செய்து வைத்துள்ள லிப் பாமை பயன்படுத்தலாம்.
* முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை அகற்றுவதற்கு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், காய்ச்சாத பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் மாதிரி தயார் செய்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து ஒரு ஈரமான துணிகொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகள் நீங்கி விடும்.
- குங்குமாதி க்ரீம் முகத்துக்கு பல நன்மைகளை அளிக்கிறது.
- 6 மாதத்திற்கு கெடாமல் இருக்கும்.
முகம் எப்போதும் ஒளிர வேண்டும். நமது சருமத்துக்கு ஊட்டச்சத்து வேண்டும். பராமரிப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குங்குமப்பூ க்ரீமை பயன்படுத்தலாம்.
கடைகளில் குங்குமாதி தைலம் என்று பல புராடக்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெயருக்கேற்றபடி இது சற்று கூடுதலான விலைதான். அதேநேரம் நாம் வீட்டிலேயே தயார்செய்யும் குங்குமாதி க்ரீம், பார்லருக்கு சென்று அழகை பராமரிக்க செய்வதை காட்டிலும் குறைந்த விலை தான். இந்த குங்குமாதி க்ரீம் முகத்துக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கற்றாலை ஜெல்
குங்குமப்பூ
ஆலிவ் ஆயில்
பாதாம் ஆயில்
ரோஸ் வாட்டர்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
செய்முறை:
ஒரு சிறிய டப்பாவில் குங்குமப்பூவை போட்டு அது மூழ்கும் அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்து 10 நிமிடத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் கற்றாலை ஜெல்லை போட்டு அதில் பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதில் நாம் ஏற்கனவே கலந்து வைத்துள்ள குங்குமப்பூ கலவை மற்றும் வைட்டமின் ஈ எண்ணை, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக க்ரீம் பதத்திற்கு கலக்க வேண்டும். இல்லை என்றால் பிளெண்டர் கொண்டும் பேஸ்ட் மாதிரி அடித்து எடுத்துக்கொள்ளலாம். இப்போது குங்குமாதி க்ரீம் தயார்.
இதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். 6 மாதத்திற்கு கெடாமல் இருக்கும். இதனை முகம், கை, கழுத்து என அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.
முகத்தில் இறந்த செல்கள் இருக்கும் போது முகம் எப்போது மந்தமாக இருக்கும். முகத்தில் சருமத்தை பழுப்பு நிறமாக காண்பிக்கும். குங்குமாதி க்ரீம் பயன்படுத்தும் போது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு சருமத்துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றுகிறது.
குங்குமாதி க்ரீம் முகத்தில் இருக்கும் சரும பிரச்சனைகளை வெளியேற்ற உதவுகிறது. சரியான முறையில் இதை பயன்படுத்தினால் நீங்கள் விரும்பும் பேரழகை பெறமுடியும்.
- அழகு பராமரிப்பில் இன்று பல புதுமைகள் வந்துவிட்டன.
- பேஷியலுக்கு ஈடாக, குறைந்த நேரத்தில் அதே பலனை கொடுக்கக்கூடியது
அழகு பராமரிப்பில் இன்று பல புதுமைகள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் 'பேஸ் ஷீட்' மாஸ்க். இது பல்வேறு வகைகளில், சருமத்தின் பொலிவை அதிகரிக்கக்கூடிய திரவங்களை உள்ளடக்கி தயாரிக்கப்படும் ஒருவகை காகிதம் போன்ற தாளாகும். அழகு நிலையங்களில் செய்யப்படும் பேஷியலுக்கு ஈடாக, குறைந்த நேரத்தில் அதே பலனை கொடுக்கக்கூடியது பேஷியல் ஷீட் மாஸ்க். யார், எதை தேர்வு செய்யலாம்? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வறண்ட சருமம்:
வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் ஈரப்பதம் நிறைந்த மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும். எலுமிச்சை மாஸ்க், கற்றாழை மாஸ்க், கடற்பாசி மாஸ்க் என இதில் பல வகைகள் உள்ளன. எலுமிச்சை மாஸ்க் ஷீட், சருமத்தை ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் மாற்றும். கடற்பாசி மாஸ்க் இறந்த செல்களை அகற்றி சருமத்தை சுத்தமாக்குவதுடன், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். கற்றாழை ஷீட் மாஸ்க் உபயோகித்தால், கற்றாழையின் முழு பலனும் கிடைக்கும். இதில் உள்ள ஜெல் முகத்தில் ஆழமாக ஊடுருவி சருமத்தை மென்மையாக மாற்றும்.
இது தவிர, பாதாம் எண்ணெய்யின் சத்துக்கள் நிறைந்த மாஸ்க்கையும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தேர்வு செய்யலாம்.
எண்ணெய்ப் பசை சருமம்:
எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்தினர், எண்ணெய் பசையை நீக்கி பொலிவை அதிகரிக்கும் வகையிலான மாஸ்க் ஷீட்டை பயன்படுத்த வேண்டும். இதற்கு டி ஃபிரீ ஷீட் மாஸ்க், இயற்யைான தேன் நிறைந்த ஹனி மாஸ்க்குகளை தேர்வு செய்யலாம். டீ ட்ரீ மாஸ்க் முகத்தை மென்மையாக்குவதுடன். அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கி பளபளப்பாக்கும். ஹனி மாஸ்க்கில், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி, திறந்திருக்கும் துளைகளையும் அடைக்கும்.
சென்சிடிவ் சருமம்:
சென்சிடிவ் சருமத்தினருக்கு. சிலவகை பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவர்கள் உருளைக்கிழங்கை அடிப்படையாக கொண்ட ஷீட் மாஸ்க்கை பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்கில் வைட்டமின் சி, பி6, காப்பர், ஜிங்க் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கும். இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்கச்செய்யும்.
முகப்பரு உள்ள சருமம்:
முகப்பரு மற்றும் அதன் தழும்புகள் உள்ள சருமத்தினர் அரிசி ஷீட் மாஸ்க், அவகோடா ஷீட் மாஸ்க் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அரிசி ஷீட் மாஸ்க்கில் ஸ்டார்ச், புரதம், வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. அவகோடாவில் வைட்டமின் ஈ, லெசித்தன் ஆகிய சத்துக்கள் உள்ளது. இது முகத்தை சுத்தமாக்கி புத்துணர்வூட்டும். முகத்தில் உள்ள தழும்பு, கருந்திட்டுக்கள் ஆகியவற்றை குறைக்கும். முகத்தில் அதிகப்படியான சுருக்கங்கள் இருப்பவர்கள் ரெட் ஒயின் ஷீட் மாஸ்க், புளுபெர்ரி ஷீட் மாஸ்க், மாதுளம் பழ ஷீட் மாஸ்க் ஆகியவற்றை பயன்படுத்துவது சிறந்தது.
எப்படி பயன்படுத்துவது?
ஷீட் மாஸ்க்கை போடுவதற்கு முன்பு முகத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் உங்களுடைய முக வடிவத்திற்கு சரியாக பொருந்தும் வகையில் மாஸ்க்கை பொருத்த வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அதை நீக்கலாம். இந்த ஷீட் மாஸ்க்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.






