என் மலர்
சமையல்
- சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- கல்லீரலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வெள்ளை அரிசியை உபயோகப்படுத்துவதைப் போல பண்டைய காலத்தில் பல வகையான அரிசிகளை உபயோகப்படுத்தினார்கள். அவ்வாறு அந்த அரிசிகளை உபயோகப்படுத்தி உண்ணும் பொழுது அவர்களின் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த அரிசிகளில் ஒன்று தான் கருப்பு கவுனி அரிசி. கருப்பு கவுனி அரிசியை வைத்து அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
கருப்பு கவுனி அரிசியை முறையாக உட்கொள்ளும் பொழுது மூளையை சிறப்பாக செயல்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் கல்லீரலில் இருக்கக்கூடிய நச்சுத்தன்மைகளை வெளியேற்றுகிறது. உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் இதய ஆரோக்கியத்திற்கும், நரம்பிற்கும் சிறந்ததாக திகழ்கிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சினைகள் அனைத்தும் நீங்குகிறது.
தேவையான பொருட்கள்:
கருப்பு கவுனி அரிசி -ஒரு கப்
வெல்லம்- அரை கப்
துருவிய தேங்காய் -கால் கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி மற்றும் திராட்சை -தேவையான அளவு
செய்முறை:
அரிசியை சுத்தப்படுத்தி தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் தண்ணீரை வடிகட்டி அதை ஒரு பருத்தித் துணியில் கொட்டி, ஒரு மணி நேரத்துக்கு நிழலில் உலர்த்த வேண்டும். அதன்பிறகு அந்த அரிசியை வாணலியில் கொட்டி வாசனை வரும் வரை 3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுக்க வேண்டும். பின்னர் அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி மீண்டும் 5 நிமிடங்களுக்கு வறுக்க வேண்டும். பின்னர் அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்க வேண்டும்.
மீண்டும் வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரி, திராட்சையைப் போட்டு மிதமான தீயில் வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஏலக்காய் பொடி, துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும்.
அரிசியை மிக்சி ஜாரில் போட்டு மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் வெல்லத்தை சேர்த்து மீண்டும் அரைக்க வேண்டும்.
இந்த கலவையை வாணலியில் இருக்கும் கலவையுடன் கொட்டி மிதமான தீயில் நன்றாகக் கிளறி இறக்க வேண்டும். மீதமிருக்கும் நெய்யை லேசாக சூடுபடுத்தி இந்த கலவையில் ஊற்றி கலக்க வேண்டும். கலவை சூடாக இருக்கும்போதே சிறு சிறு உருண்டைகளாகப்பிடிக்க வேண்டும். இப்போது சுவையான கருப்பு கவுனி அரிசி லட்டு தயார்.
- கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கல்.
- பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக செய்யலாம்.
பொதுவாகவே பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலும் வெண்பொங்கலும் செய்வது வழக்கம் தான். என்னதான் வீட்டில் பொங்கல் செய்தாலும் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலின் சுவைக்கு பல ரசிகர்கள் உண்டு. அதனால் இந்த பொங்கல் பண்டிகைக்கு சற்று வித்தியாசமாக இன்னும் சுவையான கோவில் பிரசாதமாக கொடுக்கப்படும் சர்க்கரை பொங்கலை வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்கள். ரசித்து சாப்பிடுவார்கள்! அப்படி கோவிலில் கொடுக்கப்படும் பொங்கலில் என்ன வித்தியாசமாக சேர்க்கிறார்கள்... நாம் சேர்க்கும் எவற்றை சேர்ப்பதில்லை என்ற ரெசிபி உங்களுக்காக...
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1/4 கிலோ
தேங்காய் - 4 முதல் 5 பத்தை
முந்திரி - தேவைக்கேற்ப
உலர்ந்த திராட்சை - தேவைக்கேற்ப
சுத்தமான பசு நெய் - 7 முதல் 8 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
செய்முறை:
முதலில் அரிசியை நன்றாக கழுவிய பின்னர் நிறைய தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக குழைந்து வெந்த பின்னர் சாதத்தை வடிக்காமல் சல்லடை பாத்திரத்தில் போட்டு வேகவைத்த தண்ணீரை இறுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் சாதத்தை அதே சட்டியில் சிறிது நேரம் அடுப்பில் வைத்து கரண்டியால் மசித்து விட வேண்டும்.
அதன்பின்னர் வெல்லத்தை பாகு காய்ச்சி வடிகட்டி அதை குழைந்த சாதத்தில் சேர்த்து நன்றாக கலக்குங்கள். சாதமும் வெல்லமும் நன்றாக கலக்கும் வரை நன்றாக கிளறிக் கொள்ளுங்கள். நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இரக்கலாம்.
பொங்கலை தாளிக்க வேரு ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி உருகியதும் முந்திரி, உலர் திராட்சையை நெய்யில் நன்றாக வறுத்து பொன்நிறமானதும் அதை பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறுங்கள். அதன்பின் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறுங்கள்.
இறுதியாக கோவில் பிரசாதத்தில் மட்டும் சேர்க்கப் படும் பச்சை கற்பூரத்தை ஒரு சிட்டிகை மட்டும் சேர்த்து கிளறினால் கோவில் பிரசாத சுவையில் சர்க்கரை பொங்கல் தயார்.!
குறிப்பு : கோவில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் செய்யும் போது பாசிப்பருப்பு சேர்க்க மாட்டார்கள். கட்டாயம் சேர்க்க வேண்டுமென விரும்பினால் தாராளமாக நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் தற்போது கடைகளில் கிடைக்கும் வெல்லம் உப்பு சேர்த்துதான் தயாரிக்கப்படுகிறது. சுத்தமான வெல்லம் கிடைக்கும் பட்சத்தில் தேவைப்பட்டால் சாதம் வடிக்கும் போதே ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.. மேலும் சர்க்கரை பால் பொங்கலாக செய்ய விரும்புவர்கள் அரிசியை வெந்தது வடித்ததும் 1 கப் காய்ச்சிய பால் வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.!
- உருளைக்கிழங்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.
- உருளைக்கிழங்கு ஃபிரை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.
உருளைக்கிழங்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. உருளைக்கிழங்கு ஃபிரை என்றாலே அனைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளைகிழங்கு சாப்பிடுவதால் நார்ச்சத்து உடம்பில் சேருகிறது. இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது. உருளைகிழங்கை வைத்து வீட்டிலேயே இந்திய-சீன உணவான ஹனி சில்லி பொட்டேடோ ஃபிரை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 6
சோள மாவு – 1 ஸ்பூன்
வெங்காயம் – 1/2 (நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் – கால் கப் (நறுக்கியது)
பூண்டு – 2 ஸ்பூன் பொடியாக (நறுக்கியது)
இஞ்சி – 2 ஸ்பூன் பொடியாக (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
சோயா சாஸ் – 1 ஸ்பூன்
சில்லி சாஸ் – 2 ஸ்பூன்
தக்காளி கெட்சப் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேன் – கால் கப்
வெங்காயத்தாள் கீரை – ஒரு கைப்பிடி
வெள்ளை எள் – 1 ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து தோலை நீக்கி நீளவாக்கில் நறுக்கிக் வைத்து கொள்ளவேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.
சரியான பதத்திற்கு வரும்வரை உருளைக்கிழங்கை வேகவைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து நன்றாக ஆறவிடவேண்டும். உருளைக்கிழங்கு ஆறியவுடன் சோள மாவை சலித்து உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
மேலும் ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் உருளைக்கிழங்கை அதில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் மற்றொரு பெரிய வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க விடவும். அதன்பின் நறுக்கிய பச்சை குடைமிளகாய், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும். அவை அனைத்தும் சிறிது வதங்கியவுடன் அதனுடன் தேவையான அளவு சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அடுப்பை அனைத்து விட்டு சிறிது தேன் சேர்த்து கலந்து அதனுடன் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்த்து மெதுவாக கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள், வெள்ளை எள்ளு சேர்த்து கலந்துவிட்டால் சுவையான ஹனி சில்லி பொட்டேடோ ஃபிரை ரெடி.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
- நீரிழிவு நோயாளிகள் கூட சாப்பிடலாம்.
ஆரோக்கியமான இனிப்பு ஸ்நாக் ரெசிபியான ஓட்ஸ் சாக்லேட் பைட்ஸ் எப்படி செய்வது என தெரிந்துக்கொள்ளுங்கள்…
தேவையான பொருட்கள்
ஓட்ஸ்- 2 கப்
பேரிச்சை- 50 கிராம்
ஆலிவ் விதைகள்- ஒரு ஸ்பூன்
தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்
பாதாம்- 20
சாக்லேட்- 50 கிராம் (உருக்கிக்கொள்ளவும்)
நட்ஸ்-அலங்கரிக்க
செய்முறை:
முதலில் சாக்லேட்டை டபுள் பாய்லிங் முறையில் உருக்கொக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஓட்ஸ் மற்றும் பாதாமை ஒரு வாணலியில் இளம் வறுப்பாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வறுத்த ஓட்ஸ், பாதாம், ஆலிவ் விதைகள், தேங்காய் துருவல், பேரிச்சை போன்றவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதினை ஒரு சாக்லேட் மோல்டில் வைத்து அடுக்க வேண்டும். பின்னர் அதன் ஒவ்வொன்றின் மீதும் மேல்புறமாக உருகிய சாக்லேட் கலவையினை ஊற்றி அதன் மேல் நட்ஸ் வகைகளை தூவ வேண்டும். பின்னர் ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து எடுத்தால் சுவையான அதேநேரம் ஹெல்தியான ஓட்ஸ் சாக்லேட் பைட்ஸ் தயார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இதில் சர்க்கரை இல்லை என்பதால் நீரிழிவு நோயாளிகள் கூட சாப்பிடலாம். ஸ்கூலுக்கு ஸ்நாக்சாகவும் கொடுத்துவிடலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
- இயற்கையானது மற்றும் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது.
- உடல்நலத்துக்கு ஏற்றதா என்பது குறித்து பார்க்கலாம்.
இன்று பெரும்பாலான யூடியூப் சேனல்களில் செய்து காண்பிக்கப்படும் மக்கானா, பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஹெல்த்தான ஸ்நாக்ஸ். இயற்கையானது மற்றும் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என்றும் சொல்லப்படுகிறது. உண்மையில் மக்கானா என்பது என்ன... எங்கிருந்து கிடைக்கிறது... உடல்நலத்துக்கு ஏற்றதா என்பது குறித்து பார்க்கலாம்.
பொதுவாக மக்கானா, வட இந்தியாவில் அதிகம் கிடைக்கும். அப்பகுதி மக்களால் அதிக அளவு விரும்பிச் சாப்பிடப்படுகிறது. நம் ஊரிலும் இப்போது பரவலாகக் கிடைக்கிறது. பார்ப்பதற்கு வெள்ளையாக குட்டி காளான் போல இருக்கும், சுவைக்கும்போது பாப்கார்ன் சாப்பிடுவது போன்று இருக்கும்.

இது, அல்லி மலர்களின் விதையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால் இது முழுக்க முழுக்க சைவம் என்றே சொல்லலாம். இதை, ஆங்கிலத்தில் ஃபாக்ஸ் நட்ஸ் என்பார்கள். இதை அப்படியே சற்று வறுத்து பாப்கார்ன் போல சிலரும், தயிரோடு சேர்த்தும், சிலர் அதில் குழம்பும்கூட செய்து சாப்பிடுவார்கள். தற்போதுதான் தென்னிந்தியாவில் இந்த மக்கானா அறிமுகமாகி உள்ளது. எனவேதான் ஆன்லைன் மற்றும் சூப்பர் மார்க்கெட்டு களில் மட்டுமே கிடைக்கிறது.
வாங்கும்போதே மக்கானாவை அது ஏற்கெனவே சமைக்கப் பட்டதா இல்லையா எனக் கவனித்து வாங்க வேண்டும். சில இடங்களில் சமைத்து பாப்கார்ன் போல் விற்கிறார்கள். அதை நாம் அப்படியே சாப்பிடலாம். சமைக்காதது எனக் குறிப்பிட்டிருந்தால், அதை வாங்கி நாம் சமைத்து சாப்பிட வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு, அவற்றில் இருந்தே தேவையான அளவு புரதச்சத்து உள்ளிட்ட இதர சத்துகள் கிடைத்துவிடும்.
எப்படி பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை எடுத்துக் கொள்கிறோமோ அதேபோல் இதையும் நமது உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் இதை எடுத்துக் கொள்ளலாம். எல்லாருக்கும் ஏற்ற இதில் மக்னீசியம், வைட்டமின் ஏ, பொட்டாசியம் போன்றவை இருப்பதால் எலும்புகளுக்கு நல்லது.
சிலர் உடல் எடையைக் குறைக்கவும் இதை எடுத்துக்கொள்கிறார்கள். ஏனெனில், இதில் கொழுப்புச்சத்து மிகக்குறைவாகவே இருக்கிறது. நமது சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
- மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி.
- மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.
கோடி வேப்புடு என்பது மிகவும் பிரபலமான ஒரு ஆந்திரா ரெசிபி. இதனை தமிழில் சிக்கன் ப்ரை என்று சொல்லலாம். இது ஆந்திரா ரெசிபி என்பதால் மிகவும் காரமாகவும், வித்தியாசமான ருசியுடனும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
சிக்கன்- 500 கிராம்
வெங்காயம்- 2 (நறுக்கியது)
தக்காளி- 2 (நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தனியா- ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கொத்து
முந்திரி பருப்பு- 10
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
லவங்கம்- 3
பட்டை - 2
ஏலக்காய்- 2
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு கொஞ்சம் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வறுக்க வேண்டும். தற்போது இரண்டு மீடியம் சைஸ் வெங்காயத்தை நுறுக்கி எண்ணெய்யில் போட வேண்டும். வெங்காயம் தங்க பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். பின்னர் தக்காளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
அடுத்ததாகத் தேவையான அளவு மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும். பின்னர் சிக்கனை போட்டு அனைத்தையும் கலந்து வறுக்க வேண்டும். தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு கிளறி விட்டு அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள். வேண்டும் என்றால் சிக்கனை வேக வைக்க சிறிதளவு தண்ணீரும் சேர்க்கலாம்.
மற்றொரு பத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு சிக்கனை அதில் போட்டு பொறிக்க வேண்டும். சிக்கனில் முந்திரி பருப்பு, கொஞ்சம் கறிவேப்பிலை சேர்க்கவும். எண்ணெய்யில் சிக்கன் நன்கு வறுபட்டால் சுவையான கோடி வேப்புடு தயார்.
- பொங்கல் வகைகளை நாம் வீட்டிலேயே ருசிக்க முடியும்.
- கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகையன்று விதவிதமான பொங்கல் வகைகளை நாம் வீட்டிலேயே ருசிக்க முடியும். எப்போதுமே வீடு, கடைகளில் சாப்பிடும் பொங்கல்களில் இருந்து கோயில்களில் பிரசாதமாக வழங்கப்படும் கற்கண்டு பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
சர்க்கரை பொங்கலுக்கு இணையான சுவை கொண்ட பொங்கல் என்றால் கற்கண்டு பொங்கலை குறிப்பிடலாம். கற்கண்டை பொடியாக்கி சிறு பருப்பு மற்றும் அரிசியை வைத்து இந்தப் பொங்கல் செய்யப்படுகிறது. இது சாமிக்குப் படைக்கப்படும் பிரசாதங்களில் முதன்மையானதாகும்.
தேவையான பொருட்கள்
அரிசி- 200 கிராம்
பால்- 200
கற்கண்டு - 200 கிராம்
சிறு பருப்பு- 50 கிராம்
நெய்- தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்
பச்சை கற்பூரம்- ஒரு சிட்டிகை
சர்க்கரை- 100 கிராம்
முந்திரி பருப்பு- 10
உலர் திராட்சை- 10
செய்முறை:
அரிசி மற்றும் சிறு பருப்பை (பாசிப் பருப்பு) தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். அரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். சிறு பருப்பை கொஞ்சம் நேரம் ஊற வைத்தால் போதுமானது. 200 கிராம் அரிசிக்கு 100 கிராம் சிறு பருப்பு என்பதே சரியான அளவீடு இதற்கு 200 கிராம் அளவு கொண்ட கப் பயன்படுத்தவும்.
ஒரு பெரிய குக்கரில் இவை இரண்டையும் ஒன்றாகப் போட்டு ஒன்றரை கப் பால் ஊற்ற வேண்டும். பால் பயன்படுத்தும் அளவிற்கு தண்ணீரும் பயன்படுத்த வேண்டும். அதாவது ஒன்றரை கப் தண்ணீர். பெரிய குக்கரில் கற்கண்டு பொங்கல் சமைப்பது நல்லது. ஏனென்றால் சமைக்கும்போது பால் பொங்கி வெளியே வரக்கூடாது.
இதையடுத்து மூன்று ஸ்பூன் நெய் சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கி விடுங்கள். நான்கு விசில் அடிக்கும் வரை காத்திருக்கவும். அதிக தீ வைத்து இரண்டு விசில் அடிக்கும் படியும், குறைந்த தீ வைத்து இரண்டு விசில் அடிக்கும் படியும் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு கப் அளவிற்கு கற்கண்டு எடுத்து அதை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். தற்போது குக்கரில் அரை ஸ்பூன் ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்க்க வேண்டும்
அடுத்ததாக மிக்சியில் அரைத்த கற்கண்டு பவுடரை அப்படியே சேர்க்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கிண்டவும். தேவைப்பட்டால் 50 கிராம் சர்க்கரை சேர்க்கவும். இதனிடையே மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி அது சூடான பிறகு தேவையான அளவு முந்திரி, உலர் திராட்சை சேர்க்கவும். முந்திரி பருப்பு பொன்னிறத்திற்கு மாறி இருக்க வேண்டும். உலர் திராட்சை சேர்க்க வேண்டும். இறுதியாக ஒரு சிட்டிகை உப்பு மற்றும் பச்சை கற்பூரம் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
- சூப்பரான ஸ்வீட் செஞ்சு அசத்தலாம்.
- வாயில் வைத்தவுடன் கரைந்துவிடும்.
நாம வீட்ல இருக்குற எல்லாரையும் எப்படி ஒரு சூப்பரான ஸ்வீட் செஞ்சு அசத்தலாம்னு பார்க்கலாம். ஹெல்த்தியான மற்றும் நாக்கில் வைத்தவுடன் கரையக் கூடிய ஒரு ஸ்வீட் தான் `பிஸ்தா பர்ஃபி' வாங்க செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர்,
பால் பவுடர் – ½ கப்,
சர்க்கரை – 250 கிராம்,
நெய் – தேவையான அளவு,
நறுக்கப்பட்ட பிஸ்தா – தேவையான அளவு,
பிஸ்தா எஸ்ட்ராக்ட் – 2 தேக்கரண்டி.
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் நெய்யை உருக்கவும். பால் பவுடரை சேர்த்து, கலவையை கிளறவும். இந்தக் கலவையில் பாலை ஊற்றி நன்கு கலக்கவும். மெதுவாக பால் சேர்க்கவும். கலவை ஒரு மென்மையான மாவாக ஒன்றாக திரண்டு வரும். கலவை கெட்டியாக இருந்தால், மற்றொரு தேக்கரண்டி பால் சேர்க்க வேண்டும்.
பின்னர் அதில் பொடித்த சர்க்கரை, பிஸ்தா எஸ்ட்ராக்ட் சேர்த்து கலக்க வேண்டும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும், விரைவில் கலவை கெட்டியாகத் தொடங்கும். அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது ஆறவிடவும். கலவையில் பிஸ்தாவை சேர்த்து அதை ஒரு பேக்கிங் பாத்திரத்தில் ஊற்றி, மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பச்சை பிஸ்தா துண்டுகளை மேலே சேர்க்கவும். 4 முதல் 6 மணி நேரம் கழித்து துண்டுகளாக்கலாம். சுவையான பிஸ்தா பர்ஃபி தயார்.
- மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று மோமோஸ்.
- மோமோஸ் நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த உணவு.
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று மோமோஸ். தற்போது இது தென் இந்தியாவிலும் பிரபலமாகி உள்ளது. இது சைவம், அசைவம், வேகவைத்த அல்லது வறுத்தது என பல வகைகளில் கிடைக்கிறது. மோமோஸ் நம்மில் பலருக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கும். எப்போது வெளியில் சென்றாலும், பானிப்பூரி மற்றும் மோமோஸ் சாப்பிடாமல் வீடு திரும்புவதே இல்லை.
சிறியவர் முதல் பெரியவர் அவரை அனைவருக்கும் பிடித்த மோமோஸ் ஐ வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாவு தயார் செய்ய
மைதா – 1 கப்
உப்பு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
ஸ்டப்பிங் செய்ய
சிக்கன் கீமா – 300 கிராம்
வால்நட் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2 சிறிதளவு
பூண்டு – 3 பற்கள்
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
வெங்காயத்தாள், வெங்காயம் – 1/2 கப் நறுக்கியது
வெங்காயத்தாள் கீரை – 1/4 கப்
உப்பு – 1/2 ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
சோயா சாஸ் – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில், மைதா மாவில் உப்பு சேர்த்து கலந்து பின்னர் தண்ணீர் ஊற்றி பரோட்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர், அதில் எண்ணெய் ஊற்றி 5 நிமிடம் நன்கு பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும். இப்போது, வாணலியில் வால்நட் சேர்த்து வறுத்து ஆறவிட்டு மிக்சியில் அரைத்து தனியே வைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில், நறுக்கிய வால்நட், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, சிக்கன் கீமாவில் உப்பு, மிளகு, சோயா சாஸ், வால்நட் கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்த மோமோஸ் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தில் போல மெல்லிசாக தேய்த்து கொள்ளவும். மாவின் நடுவில் சிக்கன் சேர்மத்தை வைத்து மாவின் முனைகளை மடிக்கவும். அடுத்து, மூங்கில் ஸ்டிமரில் முட்டைகோஸ் இலையை வைத்து அதன் மேல் தயார் செய்த மோமோசை வைத்து மூடி 15 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் சுவையான சிக்கன் மோமோஸ் தயார். ஸ்டீமர் இல்லையெனில், இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கலாம்.
- தினமும் என்ன டிபம் செய்ய வேண்டும் என்று குழப்பமாக இருக்கும்.
- வித்தியாசமாக காலிஃபிளவர் சப்பாத்தி செய்யலாம் வாங்க.
பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் மாலை என இரண்டு வேலையிலும் இட்லி மற்றும் தோசை என இந்த இரண்டு வகையான ரெசிபிகளை தான் செய்கிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு நாள் ஏன் ஒரு வேளைக்கு இட்லி மாவு அல்லது தோசை மாவு இல்லை என்றால் என்ன சாப்பாடு செய்வது என்று தெரியாமலே குழப்பத்தில் இருப்பார்கள். அதேபோன்று தினமும் சப்பாத்தியே செய்து சாப்பிட்டு பழகியவர்களுக்காக வித்தியாசமாக காலிஃபிளவர் சப்பாத்தி செய்யலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
காலிஃப்ளவர் துருவியது - 1 கப்,
வெங்காயம்- 1 நறுக்கியது
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - 1/2 டீஸ்பூன்,
ஆம்சூர் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்த மல்லித்தழை - சிறிது.
செய்முறை
பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும். கொஞ்சம் தளர்வாக பிசைந்துகொள்ள வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் துருவிய காலி ஃப்ளவர், வெங்காயம், மிளகாய்தூள், சீரகத்தூள், கரம்மசாலாதூள், ஆம்சூர் பவுடர், உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிசைந்த சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை அளவு எடுத்து சப்பாத்தியாக திரட்டி நடுவில் பூரணத்தை வைத்து மூடி மீண்டும் திரட்டி சூடான தவாவில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும். இதனுடன் நெய் அல்லது வெண்ணெய் தேய்த்து சுவைத்தால் இன்னும் அருமையாக இருக்கும். இதனுடன் தயிர், ஊறுகாய் வைத்து சேர்த்து சாப்பிடலாம்.
- சிக்கன் சூப்பை தான் வீட்டில் செய்து சாப்பிட்டிருப்போம்.
- வீட்டிலும் அருமையான சுவையில் சமைத்து சாப்பிடலாம்.
அனைவரும் அசைவ சூப் என்று எடுத்துக் கொண்டால் சிக்கன் சூப்பை தான் வீட்டில் செய்து சாப்பிட்டிருப்போம். அப்படி எப்போதும் ஒரே மாதிரி சிக்கன் சூப்பையே செய்து சாப்பிட்டு அழுத்திருந்தால், சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வெஜிடேபிள் சூப்பை டிரை செய்யுங்கள். பொதுவாக இந்த சூப்பை பெரிய பெரிய ஹோட்டல்களில் தான் சாப்பிடுவோம். ஆகவே இதனை வீட்டிலும் அருமையான சுவையில், ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை நூடுல்ஸ் - 1 கப்
காய்கறிகள் -1/2 கப் ( கேரட்-1/2, பீன்ஸ்-2, கேப்ஸிகம் -சிறிது, கோஸ் - சிறிது,
ஸ்வீட் கார்ன்- சிறிது ,பட்டாணி- சிறிது )
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
பட்டர்-1 ஸ்பூன்
சோள மாவு-1 ஸ்பூன்
சோயா சாஸ் – ஸ்பூன்
வெங்காயம் – 1
பூண்டு –1 பல்
ஸ்ப்ரிங் ஆனியன் – 1/2
மல்லித் தழை- சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில்ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கோதுமை நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து 1 கப் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பட்டர் சேர்த்து உருகிய பின்னர் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டை போட்டு வதக்கி விட வேண்டும். பின்னர் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்துவதக்கி விட்டு அதில் தண்ணீரை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் அதில் மிளகுத்தூள், வேக வைத்த நூடுல்ஸ் மற்றும் சோயாசாஸ் சேர்க்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் சோளமாவு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து அதனை சூப்பில் ஊற்றி கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு மல்லித்தழை, ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து பரிமாறினால் சூப்பரான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் ரெடி. இதே முறையில் சிக்கன், முட்டை சேர்த்தும் சூப் செய்யலாம்.
- உருளைக்கிழங்கை மசித்து கலந்தால் வடை எண்ணெய் குடிக்காது.
- தேங்காய் பால் ஊற்றிக் சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையாக இருக்கும்.
1. ஏலக்காய் தூள் அரைக்கும்பொழுது ஏலக்காய் நமத்து போய்விட்டால் வெறும் வாணலியில் ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின்னர் அரைத்து பாருங்கள். நைசாக அரைபடும்.
2. உளுந்து வடை செய்யும்போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.
3. சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
4. பாயசத்திற்கு திராட்சைக்குப் பதிலாக பேரிச்சம் பழத்தை பொடிதாக நறுக்கி, நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.
5. ரவா தோசை செய்யும்போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.
6. கனமில்லாத மெலிதான தோசைக்கல்லை சப்பாதிக்கும், அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும் பயன் படுத்த வேண்டும்.
7. புளித்த மோர் வீட்டில் இருந்தால் சிறிதளவு வெண்டைக்காயில் சேர்த்து பொறியல் செய்தால், வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.
8. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்த பின்பு அதிக நேரம் வதக்க கூடாது. அது பச்சையாக இருந்தால் தான் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
9. புடலங்காய் கசப்பாக இருந்தால், அவை பாம்பு ஏறிய காய் என்பார்கள். ஆகவே சிறிது கிள்ளி சுவைத்து பார்த்து வாங்க வேண்டும்.
10. அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அருகம்புல்லில் அதிகம்.






