search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soup Recipes"

    • காய்கறி என்றாலே நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்பவை.
    • நீர்க்காய்கள் மிக முக்கியமானவை.

    பொதுவாகவே காய்கறி என்றாலே நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்பவை. அதிலும் நீர்க்காய்கள் மிக முக்கியமானவை. இதில் அனைவரும் விரும்பி சாப்பிடுவதில் சுரைக்காயும் ஒன்று. சுரைக்காயில் கிட்டத்தட்ட 85 சதவீதம் நீர்தான் இருக்கிறது.

    மேலும் உடலுக்குத் தேவையான பொட்டாசியம், மக்னீசியம், விட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்களும் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைத் தடுக்கும். சரி வாங்க, இவ்வளவு நன்மை செய்யும் சுரைக்காயை பயன்படுத்தி சூப் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    சுரைக்காய்- 1

    தக்காளி- 1

    சீரகம்- கால் டீஸ்பூன்

    மிளகுதூள்- ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி- தேவையான அளவு

    உப்பு- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் குக்கரில் 1 தக்காளி மற்றும் சுரைக்காயை நறுக்கிப் போட்டு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை எடுத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் சேர்த்து, சீரகம் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

    இறுதியில் தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கினால், சூப்பர் சுவையில் எடையை குறைக்கும் சுரைக்காய் சூப் தயார்.

     சுரக்காய் சூப் தினசரி குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். எனவே நாள் முழுவதும் உங்களை நீரேற்றத்துடன் வைத்துக்கொண்டு ஆரோக்கியமாக இருக்க உதவும். மேலும் சுரைக்காய் சூப் குடிப்பதால் உங்கள் சருமம் பொலிவு பெறும்.

    சுரைக்காய் சூப் குடிப்பதால் அதிக நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். இதனால் நீங்கள் கூடுதலாக உணவு எடுத்துக்கொள்வது தடுக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும் தினசரி சுரைக்காய் சூப் குடித்தால் மன அழுத்தம் குறைவதாகவும் சொல்லப்படுகிறது.

    இப்படி சுரைக்காய் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே கட்டாயம் இந்த உணவை அனைவரும் எடுத்துக் கொள்ளுங்கள்.

    • உணவு பழக்க வழக்கத்தால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது.
    • இதற்கு சரியான தீர்வு என்றால் அது பூசணிக்காய் சூப் தான்.

    மாறிப்போன நம் உணவு பழக்க வழக்கத்தால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது. முக்கியமாக இளம் தலைமுறையினர் வயிற்றுப்புண்ணால் அவதிப்படுகின்றனர். அதிக காரம், பாஸ்ட் புட் போன்ற உணவுகளால் வயிற்றில் புண் உருவாகி பெரும் அவஸ்தையை கொடுக்கிறது. இதற்கு சரியான தீர்வு என்றால் அது பூசணிக்காய் சூப் தான்!

    தேவையான பொருட்கள்

    பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப்,

    வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை – சிறிதளவு,

    பால் – ஒரு டம்ளர்,

    மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,

    பூண்டு – 2 பல்,

    சின்ன வெங்காயம் – 4,

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். கடாயில் வெண்ணெயை போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பூசணிக்காய் துண்டுகள், உப்பு சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் 4 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.

    பூசணிக்காய் வெந்ததும் தண்ணீரை வடித்து விட்டு பூசணிக்காயை மட்டும் எடுத்து ஆற வைத்த பின் மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை, காய் வேகவைத்த தண்ணீரில் கலக்கவும். இதனுடன் பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கி அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

    இதனால் கிடைக்கும் பலன்கள்:

    சிறுநீரகப் பிரச்சனைகள், கல் அடைப்புகள் நீங்கும். உடல் பருமன், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் அருந்தலாம். வயிற்றுப்புண், குடல் புண் இருப்பவர்கள் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.

    • சிக்கன் சூப்பை தான் வீட்டில் செய்து சாப்பிட்டிருப்போம்.
    • வீட்டிலும் அருமையான சுவையில் சமைத்து சாப்பிடலாம்.

    அனைவரும் அசைவ சூப் என்று எடுத்துக் கொண்டால் சிக்கன் சூப்பை தான் வீட்டில் செய்து சாப்பிட்டிருப்போம். அப்படி எப்போதும் ஒரே மாதிரி சிக்கன் சூப்பையே செய்து சாப்பிட்டு அழுத்திருந்தால், சிக்கன் நூடுல்ஸ் மற்றும் வெஜிடேபிள் சூப்பை டிரை செய்யுங்கள். பொதுவாக இந்த சூப்பை பெரிய பெரிய ஹோட்டல்களில் தான் சாப்பிடுவோம். ஆகவே இதனை வீட்டிலும் அருமையான சுவையில், ஆரோக்கியமான முறையில் சமைத்து சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    கோதுமை நூடுல்ஸ் - 1 கப்

    காய்கறிகள் -1/2 கப் ( கேரட்-1/2, பீன்ஸ்-2, கேப்ஸிகம் -சிறிது, கோஸ் - சிறிது,

    ஸ்வீட் கார்ன்- சிறிது ,பட்டாணி- சிறிது )

    மிளகுத்தூள் – 1 ஸ்பூன்

    பட்டர்-1 ஸ்பூன்

    சோள மாவு-1 ஸ்பூன்

    சோயா சாஸ் – ஸ்பூன்

    வெங்காயம் – 1

    பூண்டு –1 பல்

    ஸ்ப்ரிங் ஆனியன் – 1/2

    மல்லித் தழை- சிறிது

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    முதலில்ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கோதுமை நூடுல்ஸ் சேர்த்து வேக வைத்து 1 கப் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பட்டர் சேர்த்து உருகிய பின்னர் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டை போட்டு வதக்கி விட வேண்டும். பின்னர் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்துவதக்கி விட்டு அதில் தண்ணீரை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

    தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் அதில் மிளகுத்தூள், வேக வைத்த நூடுல்ஸ் மற்றும் சோயாசாஸ் சேர்க்க வேண்டும். ஒரு கிண்ணத்தில் சோளமாவு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து அதனை சூப்பில் ஊற்றி கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விட்டு மல்லித்தழை, ஸ்ப்ரிங் ஆனியன் சேர்த்து பரிமாறினால் சூப்பரான சத்தான வெஜிடபிள் நூடுல்ஸ் சூப் ரெடி. இதே முறையில் சிக்கன், முட்டை சேர்த்தும் சூப் செய்யலாம்.

    ×