என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    எந்த உணவையும் மிக்சியில் அரைத்து ஊட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.அவ்வாறு ஊட்டுவது குழந்தையின் பல் வளர்ச்சியையும் மென்று சாப்பிடும் பழக்கத்தையும் வெகுவாக பாதிக்கிறது.
    ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது முடியும் வரையில் உள்ள கால கட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி வேகம் சற்றே குறைகிறது, அதேநேரத்தில் குழந்தையின் சத்துணவின் தேவை அதிகரிக்கிறது. இப்பொழுது தாய்ப்பாலிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் போதாது.எனவேதான் இணை உணவுத் தேவைப்படுகிறது.இந்த பருவத்தில் நம் வீட்டில் நமது பாரம்பரியத்தில் தொன்றுதொட்டு பழக்கத்திலிருக்கும் வீட்டு உணவு வகைகள் ஒவ்வொன்றாக கொடுத்து பழக்க வேண்டும்.

    நமக்கு பழக்கமான இட்லி, பொங்கல், இடியாப்பம், சாதம், போன்றவைகளை மசித்து கொடுப்பதற்கு பயப்படத் தேவையில்லை. பருப்பு, காய்கறி வேகவைத்த நீர், பழரசம், அரிசிக் கஞ்சி, சத்து மாவுக்கஞ்சி போன்றவை கொடுக்க ஆரம்பிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு புது உணவு தான் தரவேண்டும், அந்த உணவை குழந்தை பழகுவதற்கு குறைந்தது ஐந்திலிருந்து ஏழு நாட்கள் அவகாசம் தந்த பின்னரே மற்றொரு புது உணவை தர வேண்டும். உதாரணமாக ஒரு நாள் காலை உணவாக இட்லி கொடுக்க ஆரம்பித்திருந்தால் அடுத்த சில நாட்களுக்கு இட்லி மட்டுமே காலை உணவாக தரவேண்டும். மற்ற வேளைகளில் தாய்ப்பால் தொடரலாம். இந்த உணவுக்கு குழந்தை பழகிய பின்னர் மற்ற உணவுகளை ஒவ்வொன்றாகத் தொடரலாம்.

    எந்த உணவையும் மிக்சியில் அரைத்து ஊட்டுவதைத் தவிர்க்கவேண்டும். அவ்வாறு ஊட்டுவது குழந்தையின் பல் வளர்ச்சியையும் மென்று சாப்பிடும் பழக்கத்தையும் வெகுவாக பாதிக்கிறது. கரண்டியிலோ/மத்தினாலோ/கையாலோ நன்கு பிசைந்து ஊட்டுவதே மிகவும் சரியானது.

    குழந்தையை மற்றவர்களோடு ஒப்பிடுவது அவர்களது சுயமரியாதையை பாதிக்கும். ஒப்பிடுவதற்கு பதிலாக உங்கள் குழந்தையின் தனிப்பட்ட திறமையை கண்காணித்து அஅதை மேம்படுத்த உதவுகங்கள்.
    உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த நீங்கள் சரியான பெற்றோராக இருக்க விரும்பினாலும், நீங்கள் அறியாமல் சில தவறுகள் செய்யக்கூடும். இது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். பெற்றோர் நிச்சயமாக தவிர்க்க வேண்டிய தவறுகளை இங்கே பார்க்கலாம்.

    * சுயமாக செயல்பட விடாமல் எப்போதும் உங்கள் சிறகுகளுக்குள்ளேயே வைத்து அடைகாப்பது. இதனால் அவர்கள் தனித்து போராட வேண்டிய சூழ்நிலைகளில் அவர்களால் செயல்பட முடியாமல் போகும்.

    * பெற்றோர்கள் பெரும்பாலும் தங்களை அறியாமலே, தங்கள் குழந்தையின் எடை, நிறம் அல்லது நடத்தை ஆகியவற்றை விமர்சிக்கவோ அல்லது கேலி செய்யவோ செய்கிறார்கள். நகைச்சுவையாக செய்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அந்த செயல் உங்கள் பிள்ளைக்கு கவலை அல்லது மனச்சோர்வை ஏற்படுத்தும்.

    * பெற்றோர்கள் குழந்தையை அவரது நண்பர்கள் அல்லது உடன்பிறப்புகளுடன் ஒப்பிடுகிறார்கள். குழந்தையை மற்றவர்களோடு ஒப்பிடுவது அவர்களது சுயமரியாதையை பாதிக்கும். அத்துடன் அவர்களை திறமையற்றவர்களாக உணரச்செய்யும். ஒப்பிடுவதற்கு பதிலாக உங்கள் குழந்தையின் தனிப்பட்ட திறமையை கண்காணித்து அதை மேம்படுத்த உதவுங்கள்.

    * பிள்ளைகள் ஏதேனும் கற்றல் சிரமத்தை எதிர்கொண்டால் சோம்பேறி அல்லது முட்டாள் என்று முத்திரை குத்துவதற்கு பதிலாக அவர்களின் பிரச்சனையை சரியான முறையில் தீர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    * பிள்ளைகளிடம் மிகவும் கண்டிப்பாகவும் முரட்டுதனமாகவும் நடந்துகொள்வது அவர்களை ஒழுங்குபடுத்த உதவும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறானது. இத்தகைய செயல் குழந்தைகளிடம் பதற்றத்தை அதிகப்படுத்தி அவர்களின் ஓட்டு மொத்த வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அத்தகைய குழந்தைகள் மற்றவர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார்கள்.
    குழந்தைகள், பெற்றோரிடையே மனரீதியாக ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்வது எப்படி? பெற்றோர் தங்கள் குழந்தைகளை எவ்வாறு அரவணைப்பது? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாகவே குழந்தைகள் வளர வளர தங்களைச் சுற்றியுள்ள சூழலை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவார்கள். நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ அது அவர்கள் மனதில் பதிந்துவிடும். அதனால், பெற்றோர் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சல், எரிச்சல், கோபத்தைக் குழந்தைகளிடம் பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும். அதைப் புரிந்துகொள்ளும்போது குழந்தைகள் பெற்றோருக்கு உதவ முன்வருவார்கள். மாறாக அவர்களுக்குப் புரியவைக்காவிட்டால் அவர்களிடமிருந்து வரும் எதிர்வினைகள் வேறுவிதமாக இருக்கும்.

    * பயம் – பெற்றோருக்கு ஏற்படும் மனபாதிப்புகள் தங்களை எந்த வகையிலாவது பாதித்துவிடுமோ என்ற பயம் குழந்தைகளிடம் ஏற்படலாம்.

    * கோபம் - எதற்கெடுத்தாலும் பெற்றோர் கோபமடைந்தால், பதிலுக்குக் குழந்தைகளும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

    * குற்றவுணர்வு – தன்னால்தான் தொந்தரவு ஏற்படுகிறது என்று எண்ணி தன்னைத்தானே குற்றவாளியாகக் கருதும் குழந்தைகளும் உண்டு.
    பயம்

    * சோகம் – குழந்தைகளுக்குப் பெற்றோர்தான் உலகம் என்பதால், அவர்கள்மீது அதீத அன்பு வைத்திருப்பார்கள். எனவே, அவர்கள் சோகமாயிருக்கும்போது குழந்தைகளும் சோகமாகிவிடுவார்கள்.

    * படபடப்பு – பெற்றோரது மாற்றுச் செயல்பாடுகளால் ஒருவித பயத்துக்குள்ளாகி நீண்டநேரம் அழுவது, படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களால் படபடப்பை வெளிப்படுத்துவார்கள்.

    * ஆதரவு – சில புத்திசாலிக் குழந்தைகள் பெற்றோருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். பெரியவர்களைப்போல `நீங்க ரெஸ்ட் எடுங்க; நான் வேலை செய்றேன்... இனிமே குறும்பு செய்யாம இருப்பேன்' என்று கூறுவதும் தங்களது தவறுகளைத் தாங்களே திருத்திக் கொண்டு அதைச் சொல்லி பெற்றோரை உற்சாகப்படுத்துவதும் உண்டு.

    குழந்தைகள் எதையும் உற்றுநோக்கும் திறன் பெற்றவர்கள். குறிப்பாக தங்களின் பெற்றோரின் நடவடிக்கைகளை உளவுத்துறைபோல கவனிப்பார்கள். ஏதேனும் ஒரு கண்ணாடிக் கோப்பை தவறி கீழே விழுந்தாலும் அதற்காகக் கத்தி கூச்சலிடும் பெற்றோரே அதிகம். என்ன கத்தினாலும் உடைந்த கோப்பை திரும்பி ஒட்டப்போவதில்லை. ஆகவே, குழந்தைகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், கவனமாகச் செயல்படக் கற்றுத் தருவது குழந்தையை நிதானமடையச் செய்யும்.

    * குழந்தையின் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.

    * அண்டை வீட்டாரிடமும் ஆரோக்கியமாகப் பழகும் சூழலை உருவாக்கித் தரவேண்டும்.

    * உணர்வுகளை வெளிப்படுத்தக் கற்றுத்தர வேண்டும்.

    * பெற்றோர் தங்களது நட்புகளை ஆரோக்கியமாகப் பேணுவதுடன் தொழிலில் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டு அதனால் எந்தவிதமான மோசமான விளைவும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்!"
    பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘போக்சோ’ சட்டம் குறிப்பிடத்தக்கது. இது குற்றவியல் நடைமுறை சட்டமாக இல்லாமல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் சட்டமாக இயற்றப்பட்டிருக்கிறது.
    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்தவண்ணம் இருக்கின்றன. அத்தகைய வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2012-ம் ஆண்டு இயற்றப்பட்ட ‘போக்சோ’ சட்டம் குறிப்பிடத்தக்கது. அது, 18 வயதுக்கு உள்பட்ட ஆண்-பெண் இருபாலருக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொதுவான சட்டமாகும். இது குற்றவியல் நடைமுறை சட்டமாக இல்லாமல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களை பாதுகாக்கும் சட்டமாக இயற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகளும் நிறுவப்பட்டன. அவைகளில் பெண்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க பெண் வக்கீல்களே அரசு தரப்பில் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டு சிறப்பு அரசு வக்கீலாக நியமிக்கப்பட்டவர் ஜி.டி.ஆர்.சுமதி. இவர் திறம்பட வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுகொடுத்து வருகிறார்.

    சுமதி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஒக்கிலிப்பட்டி ராஜாபாளையம் கிராமத்தில் பிறந்தவர். இவரது தந்தை தங்கவேல். தாயார் சுசீலா. சகோதரிகள் சாந்தி, சாரதி. இவர், பிளஸ்-2 வரை திருச்செங்கோடு அரசு பள்ளிக் கூடத்தில் படித்தார். தூத்துக்குடி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பி.ஏ. படித்து, பல்கலைக்கழக அளவில் பதக்கம் பெற்றவர். பின்பு, சேலம் சட்டக்கல்லூரியில் பி.எல். படித்து தேறி, வழக்கறிஞர் பணியை தொடங்கினார். இவரது கணவர் எஸ்.ரமேஷ். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுமதி மூத்த குற்றவியல் வழக்கறிஞர் பி.சி.பழனிசாமியிடம் பயிற்சி பெற்றவர்.

    பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள்- அதில் சமூகம் பெறவேண்டிய விழிப்புணர்வு பற்றி அரசு வழக்கறிஞர் சுமதியுடன் நமது கலந்துரையாடல்:

    மகளிர் நீதிமன்றங்களின் நோக்கம் என்ன?

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் விதத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரித்து விரைவான தீர்வு காண மகளிர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டது. பின்னர் பெண்களுக்கு எதிரான கொலை வழக்குகள், தற்கொலை வழக்குகளும் அதில் சேர்க்கப்பட்டன. பிற தண்டனை சட்டங்களை விட போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை மிகக்கடுமையானதாக இருக்கும். குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் இருக்கும் பட்சத்தில், விசாரணை இல்லாமலேயே முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய இந்த சட்டம் அனுமதிக்கிறது. அதுபோல் குற்றவாளி ஜாமீன் பெற்று வெளியே சென்று, மீண்டும் புகார்தாரருக்கு தொல்லை கொடுத்தால் ஜாமீனை ரத்து செய்து சிறையில் அடைக்கவும் முடியும். இது குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான சட்டம். அதை அமல்படுத்துவதே மகளிர் கோர்ட்டு களின் நோக்கம்.

    தற்போது எந்த வயதினர் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் யாரால் பாதிக்கப்படுகிறார்கள்?

    பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்களில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் அதிகமாக இருக்கிறார்கள். பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக் கிறார்கள். 60 வயதை கடந்தவர்களும் இதில் அடக்கம். குழந்தை களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை வாங்கிக்கொடுப்பதாக ஆசைகாட்டி பெரும்பாலும் இந்த மிருகத்தனத்தை நடத்துகிறார்கள். குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர் களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரோடு பேசி மகிழ்கிறவர்கள், கடைகள், பூங்காக்களுக்கு அழைத்துச்செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களிடம் ஒழிந்திருக்கும் மிருகம் விழித்துக்கொள்கிறது. இதை உணர்ந்து பெற்றோர், தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இதை நினைத்து எல்லா முதியோர்களையும் தப்பாக பார்க்கக்கூடாது.

    வளரிளம் பருவத்து சிறுமிகளுக்கு பருவக்கோளாறால் பல பிரச்சினைகள் வருகிறது. அதில் காதல் தொல்லையும் ஒன்று. 18 வயது நிரம்பாத சிறுமிகள் இதில் அதிக அளவு ஏமாந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுவும் மிக நெருக்கமானவர்களால்தான் நடக்கிறது. திருமணமாகி மனைவியை பிரிந்த ஆண்கள், மனைவி இருக்கும்போதே மனைவியின் தங்கைகளிடம் சீண்டி விளையாடும் ஆண்கள், பக்கத்து வீட்டில் துடிப்பாக வலம் வரும் சிறுமிகள் மீது கண் வைக்கும் ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். சிறுமிகளிடம் அவர்கள் ‘நீ எனது மனைவியைவிட அழகாக இருக்கிறாய்’ என்று ஆரம்பித்துதான் தூண்டில்போடுகிறார்கள். அப்பாக்களால் பாதிக்கப்பட்ட மகள்களையும் நான் வழக்கில் சந்தித்திருக் கிறேன். நான் ஆண்களை குறைசொல்வதற்காக இதை எல்லாம் கூறவில்லை. நான் சந்தித்த வழக்குகளின் அடிப்படையில் சொல்கிறேன்.

    பெற்றோர் இதில் இரண்டுவிதமான மாறுபட்ட நிலைகளை கையாளுகிறார்கள். தங்கள் மகள் யாருடன் பேசுகிறாள் என்பதை கண்காணித்து கண்டிக்காத பெற்றோர் ஒருபுறம் என்றால், மறு புறம் அவள் யாருடன் பேசினாலும் அதை தவறாக சித்தரித்து மகள்களை அடித்து துன்புறுத்தவும் செய்கிறார்கள். ஒவ்வொரு வழக்கிலும் காதல் என்ற பெயரில் தனது உடலை இழந்து கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள் கூறுவது ஒன்றேதான். ‘தெரியாமல் செய்துவிட்டேன் என்னை காப்பாற்றுங்கள்’ என்கிறார்கள். பெற்றோர், பாலியல்- காதல்- வாழ்க்கை குறித்து சரியான புரிதல்களை தங்கள் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

    பாலியல் பாதிப்புகளை வெளி உலகுக்கு கொண்டு வரும் சிறந்த பணியை செய்பவர்கள் யார்?

    அதிக அளவிலான பாலியல் குற்றங்கள் பள்ளிக்கூட ஆசிரியைகளின் அக்கறையால் வெளிக்கொண்டு வரப்பட்டு இருக்கிறது. பெற்றோரை விட குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவது ஆசிரியர்களிடம்தான். எனவே தங்கள் மாணவிகள் மேல் அதிகம் அக்கறை கொண்ட ஆசிரியைகள் அவர்களின் சிறு மாற்றத்தைக்கூட கவனித்து ஆறுதலுடன் பேசுகிறார்கள். அப்படித்தான் பல குற்றங்கள் வெளி வந்து இருக்கின்றன. இதற்கு உறுதுணையாக இருப்பது சைல்டு லைன் என்கிற குழந்தைகள் பாதுகாப்பு ஹெல்ப்லைன். 1098 என்ற எண்ணில் இலவச தொலைபேசி சேவையுடன் இந்த அமைப்பு இயங்குகிறது. பள்ளிக்கூட ஆசிரியைகள் சைல்டுலைன் அமைப்பை தொடர்பு கொண்டு தெரிவித்தால், குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை சைல்டுலைன் அமைப்பு பார்த்துக்கொள்ளும். மகளிர் போலீஸ் நிலையங்கள் இந்த விஷயத்தில் மிகப்பெரிய பொறுப்புடன் திகழ்கின்றன. போக்சோ சட்டம் என்றாலே வேறு எந்த பேரங்களுக்கோ, பரிந் துரைகளுக்கோ இடம் இல்லாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விடும்.

    சமூகத்துக்கு பயந்து சிலர் புகார் தெரிவிக்க முன்வருதில்லை. ஆனால் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. பாலியல் குற்றங்களால் பாதிப்படைந்த சிறுமிகளின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அவர்களிடம் நடைபெறும் விசாரணை கூட மிக எளிமையாக, பாதுகாப்புடன் நடக்கும். குழந்தைகள் குழந்தைகளாகவே பாவிக்கப்படுவார்கள். அரசு வக்கீலான நானோ, குற்றவாளிகளின் தரப்பு வக்கீலோ பாதிக்கப்பட்ட சிறுமியிடம் எந்த கேள்வியும் கேட்க முடியாது. குறுக்கு விசாரணை நடைமுறைகளே இல்லாமல் நீதிபதியே நேரடியாக வாஞ்சையுடன் விசாரணையை நடத்துவார். எனவே பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. சிறுமிகளின் பாதுகாப்புக்கு கோர்ட்டு எல்லாவிதத்திலும் உத்தரவாதம் அளிக்கும். அத்துடன் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குழந்தைகளின் எதிர் காலத்துக்கு உரிய நிதி உதவி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவையும் கோர்ட்டு பரிந்துரையின் பேரில் அரசு வழங்கும் நிகழ்வுகளும் நடந்து உள்ளன.

    பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?

    சட்டங்களால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியாது. சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு அளிக்கலாம். பாலியல் தொடர்பான குற்றங்கள் என்பது குழந்தைகளின் எதிர்காலத்தை சார்ந்தது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். மாணவ-மாணவிகள் தங்கள் மீது பாலியல்ரீதியாக துன்பத்தை விளைவிக்கின்ற பார்வையை யாராவது செலுத்தினால் கூட அதுபற்றிய புகார்களை விரைந்து தெரிவிக்க வேண்டும். பஸ், பொது இடங்களில் பாலியல் தொல்லை கொடுக்கும் நோக்கத்தில் உடலை உரசி செல்பவர்கள், சைகைகளால் பாலியல் இச்சை ஏற்படுத்துபவர்கள், உடல் மொழியால் அச்சம் தரக்கூடிய வகையில் நடப்பவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கவேண்டும். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தண்டனை பெற்றுத்தர முடியும். எனவே பெண் குழந்தைகளிடம் இதுபற்றி விழிப்புணர்வினை வழங்க வேண்டும்.

    அதே நேரம் ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் நல்ல மாண்புகளை எடுத்துக்கூறி வளர்க்க வேண்டும். பெண்களை நல்ல தோழிகளாக, சகோதரிகளாக மதிக்கும் வகையில் பழக்க வழக்கத்தை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக செய்யும் சிறு குற்றங்களை கூட உடனடியாக கண்டித்து திருத்த வேண்டும். எதிர்பாலினத்தவரை மதிக்கவும், உண்மையாக இருக்கவும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுப்பது அவசியம். குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்பது ஆண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு மான சட்டமும்தான். எனவே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பற்றியும் புகார் தெரிவிக்கவேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், சமூகமும் இதில் விழிப்புணர்வு பெறவேண்டும். நாட்டில் பாலியல் வன்முறைகள் நிகழாத நிலை ஏற்படவேண்டும். இதுதான் என் ஆசை!'' என்கிறார், அரசு வழக்கறிஞர் ஜி.டி.ஆர்.சுமதி.இவர் சேவைகளுக்காக கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
    பெரியவர்களால்தான் தங்களைவிட வயதில் குறைந்தவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க முடியும் என்றில்லை. பெரியவர்களும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
    பெற்றோர் தான் குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர்களாக விளங்குகிறார்கள். வாழ்க்கைக்கு தேவையான முக்கிய விஷயங்களை பெற்றோரிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர் தாங்கள் கற்றறிந்த அனுபவ பாடங்கள் மூலம் பிள்ளைகளுக்கு வழிகாட்டுகிறார்கள்.

    பெரியவர்களால்தான் தங்களைவிட வயதில் குறைந்தவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க முடியும் என்றில்லை. பெரியவர்களும் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், சிறப்பாகவும் மாற்றக்கூடிய குணங்களை குழந்தைகள் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வழிமுறையை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். தேவையற்ற குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளலாம்.

    குழந்தைகள் தாங்கள் விரும்பிய விஷயங்களை செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அவர்களிடம் எப்போதும் சுறுசுறுப்பு மிகுந்திருக்கும். வேடிக்கையான சுபாவத்தையும் கொண்டிருப்பார்கள். பெரியவர்கள் அப்படி இருப்பதில்லை. தாங்கள் விரும்பிய விஷயங்களை அரிதாகவே செய்வார்கள். ஏதாவதொரு நிர்பந்தத்திற்கு ஆளாகி, கட்டாயத்தின் பெயரில் செய்து முடிக்கவேண்டிய நிலையில் இருப்பார்கள். அது நெருக்கடிக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாக்கும். அதற்கு இடம்கொடுக்காமல் குழந்தைகளை போல விரும்பிய விஷயங்களை செய்வதற்கு பெரியவர்கள் முயற்சிக்க வேண்டும்.

    மற்றவர்கள் என்ன சொல்வார்களோ? என்ன நினைப்பார்களோ? என்று குழந்தைகள் கவலைப்படுவதில்லை. ஆனால் பெரியவர்கள் அடுத்தவர்களை மனதில் வைத்துக்கொண்டுதான் தங்கள் காரியங்களை செய்வார்கள். பெரும்பாலும் அவர்கள் தங்களின் விருப்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு மற்றவர் களின் ஆலோசனைப்படியே செயல்படுவார்கள். குழந்தைகள் அதற்கு இடம் கொடுப்பதில்லை. தாங்கள் விரும்பியபடியே செய்து முடித்து மன நிறைவு அடைவார்கள்.

    குழந்தைகளிடம் நேர்மை குடிகொண்டிருக்கும். அவர்களுடைய மனம் குழப்பமின்றி தெளிவாகவும் இருக்கும். அவர் களிடம் ஏதேனும் கேள்வி கேட்டால் யோசிக்காமல் சட்டென்று பதில் சொல்வார்கள். அந்த பதில் நேர்மையாகவும், சரியாகவும் இருக்கும். அவர்களை போல வாழ்க்கையில் கொஞ்சம் நேர்மையாக இருக்க பெரியவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

    பெரியவர்கள் பெரும்பாலும் மற்றவர்களை மகிழ்விக்க முயற்சி செய்வார்கள். ஆனால் அவர்களிடம் மகிழ்ச்சி தொலைந்து போயிருக்கும். அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் புன்னகையை உதிர்ப்பார்கள். குழந்தைகளின் உள்ளமும், முகமும் மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொண்டிருக்கும்.

    குழந்தைகள் எளிதில் திருப்தி அடைந்துவிடுவார்கள். சின்ன சின்ன விஷயங்களில் கூட மகிழ்ச்சியும், மன நிறைவும் கொள்வார்கள். ஆனால் பெரியவர்கள் நிறைய பேரிடம் எப்போதும் எதிர்பார்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும். ஒரு காரியத்தை செய்து முடித்து மகிழ்ச்சி அடைந்தாலும் கூட, இன்னும் சிறப்பாக செய்திருக்கலாமோ என்று எளிதில் மன திருப்தி அடையமாட்டார்கள். தங்களிடம் இருக்கும் திறமையையும் உணர மாட்டார்கள்.

    குழந்தைகள் புதிதாக ஏதேனும் ஒன்றை காணும்போதெல்லாம் அதனை பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் கொள்வார்கள். அதுபற்றி அறிந்து கொள்ளும் வரை ஓயமாட்டார்கள். அறியும் வரை உற்சாகத்துடன் செயல்படவும் செய்வார்கள். பெரியவர்கள் எந்தவொரு வேலையையும் ஆர்வமாக தொடங்குவார்கள். ஆரம்பத்தில் இருக்கும் உற்சாகம் மெல்ல மெல்ல குறைய தொடங்கிவிடும்.

    குழந்தைகள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்கிறார்கள். அவர்களிடம் எதிர்காலம் பற்றிய கவலை எட்டிப்பார்ப்பதில்லை. ஆனால் பெரியவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்காலம் பற்றிய கவலையில் ஆழ்ந்து நிகழ்காலத்தை வீணடிக்கிறார்கள். வாழ்க்கையில் கடந்து போகும் தருணங்கள் எதுவும் திரும்ப வராது என்பதை புரிந்து கொள்ள பெரியவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
    பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது. இந்த குறிப்பு இன்றைய பெற்றோர்களுக்கு மட்டுமல்ல வருங்கால பெற்றோர்களுக்கும் நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில் இதோ....
    பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரை வரை ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றியும் பிறந்த குழந்தைக்கான சுகாதாரத்தினைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம். இந்த குறிப்பு இன்றைய பெற்றோர்களுக்கு மட்டுமல்ல வருங்கால பெற்றோர்களுக்கும் நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில் இதோ....

    குழந்தையின் வளர்ச்சி :

    பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது. பிறந்த குழந்தையானது...

    முதல் மாதத்தில் : சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்

    2-வது மாதத்தில் : மற்றவர்களைப் பார்த்து சிரிக்கும்

    3-வது மாதத்தில் : தலை ஆடாமல் நிற்கும். தாயைத் தெரிந்து கொள்ளும். சத்தங்களை எழுப்பும்.

    5-வது மாதத்தில் : நன்றாகப் புரளும். மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.

    6-வது மாதத்தில் : தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். ‘மா’, ‘பா’ போன்ற ஓர் எழுத்து ஒலிகளை எழுப்பும்.

    7-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் உட்காரும்.

    8-வது மாதத்தில் : தவழும்.

    9-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் நிற்கும் ‘மாமா’, ‘பாபா’ போன்ற இரண்டு எழுத்து சொற்களைச் சொல்லும் ‘டாட்டா’ சொல்லும்.

    10-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் தளர்நடை நடக்கும்.

    12-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நிற்கும். அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்.

    13-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடக்கும்.

    24-வது மாதத்தில் : மாடிப்படி ஏறும். சிறு வாக்கியங்களைப் பேசும்.

    36 வது மாதத்தில் : மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும்.

    * கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் ‘சி’ மற்றும் ‘டி’ அதிகம் உள்ள பால், பழம், பச்சைக் காய்கறிகள் மற்றும் மீன், முட்டை போன்றவற்றை பாலூட்டும் தாய்மார்கள் உட்கொண்டால் குழந்தைக்குப் பல் முளைத்தலில் சிரமம் இருக்காது.

    * பல் முளைக்கும் பருவத்தில் குழந்தையின் கை நகங்களையும், விரல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் விஷக் கிருமிகள் குடலினுள் சென்று வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். பல் துலக்கும் நல்ல பழக்கத்தை இரண்டாம் வயது இறுதியில் துவக்குவது நல்லது. அதுவரையில் உணவு உட்கொண்ட பிறகு – முக்கியமாக செயற்கை இனிப்புப் பண்டங்களை உண்ட பிறகு தண்ணீர் விட்டு வாயைக் கழுவினாலே பற்கள் தூய்மையாகும்.
    நகல் எழுதுதல், மொழி பெயர்ப்பு, விளம்பரம் மற்றும் விற்பனை, கிராபிக் டிசைனிங் , வீடியோக்களை மேம்படுத்துதல் என்று பலவகையான பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் உள்ளது.
    நிற்பதற்கு நேரமில்லாமல் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கும் பலரையும் வீட்டுக்குள் கட்டிப் போட்டு விட்டது கொடிய வைரஸ் கொரோனா. சில நூறு முதலீடு செய்து வயிற்றைக்கழுவும் தெருவோர வியாபாரிகள் முதல் பல நூறு கோடிரூபாய் முதலீடு செய்து தொழிலைப் பெருக்கும் முதலாளிகள் வரை அனைவரும் கொரோனாவின் கெட்ட ஆட்டத்தில்முடங்கிப்போய் விட்டனர்.

    இணைய வெளியில்...

    பலரின் வாழ்வாதாரம் பறி போனது என்று வேதனைப்படுவதா? அல்லது பலரின் வாழ்வே பறி போய் விட்டதே என்று கண்ணீர் விடுவதா? என்று தெரியாமல் அனைவரும் கலங்கி நிற்கும் தருணம் இதுவாகும்.

    இந்தநிலையில் மன உறுதியே மகத்தான மருந்து என்பதும், வீட்டுக்குள் இருப்பதே பாதுகாப்பு என்பதும் அரசாலும், மருத்துவர்களாலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் செல்போன்களைத் தொடாதே என்று பெற்றோரால் எச்சரிக்கப்பட்ட மாணவர்கள் இன்று செல்போனும் கையுமாகவே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தநிலையில் எத்தகைய இடர்பாடுகளையும் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் சில இளைய தலைமுறையினர் இணைய வெளியில் கலக்கி புதிய தொழில் முனைவோராக உருவெடுத்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

    ஏராளமான வழிகள்

    இதுகுறித்து இளைய தலைமுறையினர் கூறியதாவது:-

    ஆரம்ப காலங்களில் பொழுது போகாமல் இணையத்துக்குள் உலா வரத்தொடங்கினோம். காலப்போக்கில் பொழுதை பயனுள்ளதாக கழிக்கலாம் என்று யோசிக்கத்தொடங்கும் போது தான் ஆன்லைன் மூலம் சம்பாதிப்பதற்கு ஏராளமான வழிகள் கொட்டிக் கிடப்பது தெரியவந்தது. அதன்படி ப்ரீலான்ஸ், வேலைகளான நகல் எழுதுதல், மொழி பெயர்ப்பு, விளம்பரம் மற்றும் விற்பனை, கிராபிக் டிசைனிங் , வீடியோக்களை மேம்படுத்துதல் என்று பலவகையான பணம் சம்பாதிப்பதற்கான வழிகள் உள்ளது.

    இதுதவிர வலைத்தளங்கள் மற்றும் யூ டியூப் சேனல்களை உருவாக்கி அதிகப்படியானவர்களைக் கவர முடிந்ததால் அதன் மூலமும் வருமானம் ஈட்ட முடிகிறது. இன்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகப்படியான பின் தொடர்வோரை உருவாக்கி இன்ஸ்ட்டா இன்ப்ளூயன்சராக மாறி ஒவ்வொரு பதிவுக்கும் பணம் சம்பாதிக்கலாம். இதுதவிர ஆன்லைன் மூலம் மூளையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பணம் சம்பாதிக்கும் வழிகள் ஏராளமாக இணையத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    எதிர்பாராத ஒன்று

    ஒட்டுமொத்தமாக அனைத்து கதவுகளையும் அடைத்து வைக்கும் ஊரடங்கு என்பது யாரும் எதிர்பாராத ஒன்றாகும். அதேநேரத்தில் இணையக் கதவுகளை விரியத்திறந்து வைத்துள்ளது இயற்கையின் வழிகாட்டல் என்றுதான் சொல்ல வேண்டும்.

    இணையம் மூலம் உலகம் நம் உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது என்று பெருமை பீற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாமல் அதனைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நிச்சயமாக சபாஷ் போடலாம்.

    இனிவரும் காலங்களில் இணையம் என்பது ஒவ்வொருவரோடும் இணைந்த ஒன்று என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இணையத்தில் இணைந்து தொழில் வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பாடம் நடத்தினால் நல்லது என்பது சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
    பழக்க வழக்கங்களை பின்பற்ற வைப்பதில் தவறில்லை. அதற்காக கடுமை காட்டக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எழும் வழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும்.
    குழந்தை பருவத்திலேயே நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும். அவற்றை தவறாமல் பின்பற்ற வைக்கவும் வேண்டும். சில பழக்கவழக்கங்களை முறையாக கடைப் பிடிக்காமல் அசட்டையாக இருப்பார்கள். அதற்காக அவர்கள் மீது கோபமோ, கடுமையோ காண்பிக்கக்கூடாது. அவசியம் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தவும் கூடாது. அப்படி கட்டாயப்படுத்தினால் விரக்தி அடைவார்கள். அடம்பிடிக்கவும் செய்வார்கள். மென்மையான அணுகுமுறையை கையாண்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தி வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு தூக்கம் இன்றியமையாதது. இரவில் குழந்தைகள் தாமதமாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது. சில குழந்தைகள் பகல் பொழுதில் நன்றாக தூங்கிவிட்டு இரவில் தாமதமாக தூங்குவார்கள். அதுவே நாளடைவில் வழக்கமாகிவிடும். இரவில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூங்கவைக்கும் வழக்கத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் அதிகாலையிலேயே குழந்தைகளை எழுப்பி சிரமப்படுத்தக்கூடாது. காலையில் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வைப்பதில் தவறில்லை. அதற்காக கடுமை காட்டக்கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் எழும் வழக்கத்தை பின்பற்ற வைக்க வேண்டும். அது தவறும் பட்சத்தில் அடித்து எழுப்பக்கூடாது. மென்மையாக அணுகி தூக்க நேரத்தை வரைமுறைப்படுத்திவிட வேண்டும்.

    குழந்தைகள் பல் துலக்கும் விஷயத்தில் அலட்சியம் காட்டுவார்கள். பற்களை நன்றாக அழுத்தி தேய்க்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். நன்றாக பல் துலக்குவதால் எந்தெந்த மாதிரியான பல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பதை விளக்கி புரிய வைக்க வேண்டும். தினமும் இரண்டு முறை பல் துலக்கும் வழக்கத்தையும் பின்பற்ற வைப்பது நல்லது.

    குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே ‘டேபிள் மேனர்ஸ்’ எனப்படும் சாப்பிடும் விதம் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும். நேர்த்தியாக அமர்ந்து சாப்பாட்டை கீழே சிந்தாமல் சாப்பிடுவதற்கு பழக்க வேண்டும். சாப்பாட்டை வீணாக்குவதற்கும் அனுமதிக்கக்கூடாது.

    சிறுவயதிலேயே உடல் தூய்மையை கடைப்பிடிப்பதற்கு பழக்கிவிட வேண்டும். சாப்பிட செல்லும் முன்பு கை, கால்களை கழுவுவது, வெளியே சென்று விளையாடிவிட்டு வந்தால் கை, கால், முகம் கழுவுவது, விளையாட்டு பொருட்களை அந்தந்த இடத்தில் வைப்பது, சாப்பிட்ட பிறகு அந்த இடத்தை சுத்தப்படுத்துவது என சுத்தம், சுகாதாரத்தை பின்பற்றுவதற்கு பழக்கிவிட வேண்டும். வாரம் ஒருமுறை அவர்கள் பயன்படுத்தும் அறையை சுத்தம் செய்யும் வழக்கத்தையும் பின்பற்ற வைக்க வேண்டும்.

    சிறுவயது முதலே குடும்ப பொறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்க்க வேண்டும். குடும்பத்தின் நிதி நிலையை அவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அவசியம் தேவைப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும். அப்படி செய்தால் வெளி இடங்களுக்கு செல்லும்போது பிடித்தமான பொருட்களை அழுது அடம்பிடித்து வாங்குவதற்கு முயற்சிக்க மாட்டார்கள். அதேவேளையில் அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொடுக்கும் வழக்கத்தை பெற்றோரும் பின்பற்ற வேண்டும். சேமிப்பு பழக்கத்தையும் சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்துவிட வேண்டும்.

    தங்களிடம் இருக்கும் விளையாட்டு பொருட்களை பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் பகிர்ந்து விளையாடும் பழக்கத்தையும் பின்பற்ற வைக்க வேண்டும். மற்ற பொருட்களையும் பிறருக்கு பகிர்ந்து கொடுக்கும் வழக்கத்தையும் கடைப்பிடிக்க வைக்க வேண்டும். யாராவது ஒருவர் உதவி செய்யும்போது நன்றி சொல்லும் வழக்கத்தையும் பின்பற்ற வைக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    குழந்தைகள் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதற்குத்தான் விரும்புவார்கள். சிறு வயதிலேயே அவர்கள் கேட்கும் நொறுக்குத்தீனிகளை வாங்கிக்கொடுப்பதுதான், அவர்களின் உடல் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சில குழந்தைகள் வயதுக்கு பொருத்தமில்லாமல் உடல் பருமனாக காணப்படுவார்கள். சிறுவயதிலேயே உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வைக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதற்கு பழக்கிவிட வேண்டும்.

    டி.வி., வீடியோ கேம், செல்போன் போன்ற மின் சாதனங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டன. அவற்றை கையாள்வதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும். கண்களுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவைகளை உபயோகப்படுத்துவதற்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
    ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நல்லதும் அல்லதும் நம்மிடம் இருந்து தான் அவர்களுக்கு தொடர்கிறது.
    இந்த உலகமே தன் பிள்ளையைப் புகழ வேண்டும் என விரும்பும் பெற்றோர்கள் அவர்களை தட்டிக் கொடுத்து வளர்த்து அதை சாதிப்பதில்லை. கொட்டிக் கொட்டியே வளர்க்கிறார்கள் என்கிறது மன இயல் ஆய்வுகள். இந்த ஆய்வுகள் ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத பிரச்னையாக இருப்பது பெற்றோருக்கும் பிள்ளைக்குமான கருத்து வேறுபாடும், பெற்றோரின் கண்டிப்பும் தான் எனக் கூறுகிறது.
     
    அதீத குறை கூறி வளர்க்கப்படும் பிள்ளைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும், தைரியமற்றவர்களாகவும் வளர்வதோடு, மனஅழுத்ததிற்கும் ஆளாகிறார்கள். குறைகளையே கேட்டு கேட்டு வளரும் அவர்கள் பாஸிட்டிவான சிந்தனைகள் இல்லாமல் நெகட்டிவான சிந்தனை மிக்கவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் குறை காணக் கூடியவர்களாகவும் வளர்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவல் தருகிறது.
     
    பிரெஞ்ச் நாட்டின் புகழ் பெற்ற கட்டுரையாளரான “ஜோசப் யுபர்ட்” குழந்தைகளுக்கு குறை சொல்லிக் கொண்டே இருக்கும் விமர்சகர்கள் தேவையில்லை, அவர்களுக்கு நல்ல முன் மாதிரியே தேவை என நச்சென்று முன் வைக்கிறார். நம் பிள்ளைகளை நாம் குறை சொல்லாவிட்டல் பின் எப்படி திருந்துவார்கள்? இது ஒவ்வொரு பெற்றோரின் அசைக்க முடியாத நம்பிக்கை.உண்மையில் ஒரு மாற்றுக் குறையில்லா பிள்ளையை நான் உருவாக்கி இருக்கிறேன் என்று இந்த உலகிற்கு மார் தட்டிச் சொல்ல வேண்டும் என்று நாம் நினைப்பது தவறில்லை தான்.
     
    ஆனால் அதனால் நம்மையுமறியாமல் என்ன செய்கிறோம். அவர்களிடம் இருக்கும் நிறைகளையெல்லாம் நாம் மிக இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். அதைப் பற்றி சிறிதளவு கூட அவர்களிடம் சிலாகித்துப் பேசுவதில்லை. ஆனால் இதுவே குறைகளைக் கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு துருவித் துருவி பார்த்து சரி செய்ய வேண்டும் என்று முனைகிறோம்.
     
    இதில் அந்தக் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறோம்? உன்னிடம் குறையே இருக்கக் கூடாது என்று மட்டுமா சொல்லித் தருகிறோம். நீயும் இப்படித் தான் மற்றவரிடம் என்ன குறை இருக்கிறது என்று உற்றுப் பார்த்து சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத் தானே அந்த பிஞ்சு மனதில் விதைக்கிறோம்.
     
    ஏனென்றால் ஒரு குழந்தை பிறந்து ஏழு வயது வரை தன்னைச் சுற்றி நடப்பவற்றிலிருந்தே எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது.

    படிப்பில் ஒரு குழந்தை கொஞ்சம் மார்க் குறைத்து வாங்கி விட்டால் போதும், அது என்ன செய்தாலும் குற்றம். எது கேட்டாலும் சாடைப் பேச்சு. அது சற்று நேரம் டி.வி பார்த்தால் கூட, “இப்போது என்ன டி.வி. கேட்கிறது முதலில் மார்க் அதிகம் வாங்கப் பார்” என்கிறோம்.
     
    அந்தக் குழந்தை சட்டை வாங்கிக் கேட்டாலும், ஸ்வீட் வாங்கிக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பதில் நாம் தவறுவதில்லை. ஆனால் நம் செயலின் முடிவு அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் அதை அவர்கள் மறந்துவிடக் கூடாது என்பதிலும் தான் முடிகிறது.
    சாலையோரங்களில் தங்கி உள்ள குடும்பங்கள் அன்றாட உணவுக்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
    இன்று ஓடி விளையாட வேண்டிய இளமையில்- பள்ளிக்கூடம் போக வேண்டிய பருவத்தில் கூலி வேலைக்குச் செல்கின்ற சிறுவர்களைக் கண்டால் நெஞ்சு பொறுக்கவில்லை. அவர்களது நிலையையும் அதனைப் போக்கும் வழி வகைகளையும் இங்கு காண்போம்.

    இளமையில் கல் என்பது அவ்வையார் கூறும் அறிவுரை. ஆனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு போவதால் கல்வி பாதிக்கப்படுகிறது. மகிழ்ச்சியான நிலை மாறிவிடுகிறது. பழக்க வழக்கங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. மூளை வளர்ச்சி குன்றி சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் போய்விடுகிறது.

    சத்துணவு, ஓய்வு, சுகாதார வசதி ஆகிய பற்றாக்குறைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் தொழிற்சாலைகளில் வேலை செய்வதால் ரத்தசோகை, இளைப்பு, காசநோய் ஆகியவற்றிற்கு ஆளாகின்றனர். நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. தோல் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

    1986-ம் ஆண்டு அரசு குழந்தை தொழிலாளர் சட்டம் இயற்றியுள்ளது. அதன் மூலம் கட்டிட வேலை, சாயம் ஏற்றுதல், நெசவாலை, தீப்பெட்டி தயாரித்தல், சுவரொட்டி ஒட்டுதல், உணவு விடுதிகளில் மேசை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

    குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிற்சாலைகளில் அவ்வப்போது ஆய்வு செய்து குழந்தை தொழிலாளர்களை யாரும் வேலைக்கு வைக்கவில்லை என உறுதி செய்து வருகிறது.

    எல்லா குழந்தைகளும் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என்று ஏட்டளவில் இல்லாது அதனை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளவேண்டும். பெற்றோர்களும் தாம் பெற்ற குழந்தைகளுக்கு உணவும், கல்வியும் அளிப்பதே கடமை என்று உணரவேண்டும். வறுமையை காரணம் காட்டியோ, பணத்தேவையை காரணம் காட்டியோ குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது. குழந்தைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம் என்பதை உணரவேண்டும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது தொண்டு நிறுவனங்களின் கடமை ஆகும்.

    சாலையோரங்களில் தங்கி உள்ள குடும்பங்கள் அன்றாட உணவுக்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இன்னும் சிலர் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுத்து அவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கி, தினமும் உணவு கிடைப்பதற்கு நமது அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

    பெற்றோர்கள் எத்தகைய வறுமை வந்தாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்புதல் கூடாது. தொழில் நிறுவனங்களும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். இதை கருத்தில் கொண்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்கவேண்டும். மாணவ செல்வங்களாகிய நீங்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் மனிதனை மிகவும் வசிகரப்படுத்தியது செல்போனாகத் தான் இருக்க முடியும். அதிலும் குறிப்பாக இன்றைய தலைமுறைகள் மிகவும் நேசிக்க கூடிய கையடக்க காதலியாகவும், காதலனாகவும் மாறிவிட்டது எனலாம்.
    உலகத்தில் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் பேச கண்டுபிடிக்கப்பட்ட கருவி தான் செல்போன். முன்பு எல்லாம் நாம் ஒருவரிடம் பேச வேண்டும் என்றால் தொலைபேசி மூலம் தான் பேச முடியும். முகம் பார்த்து பேச முடிவதில்லை. குரல் ஒலி மட்டும் கேட்கும். ஆனால் இன்று செல்போன் மூலம் குறுஞ்செய்தி, கேமரா, வீடியோ, விளையாட்டுகள், முகம் பார்த்து பேசுதல் என இதன் செயல்பாட்டை பெருக்கி கொண்டே போகிறது தயாரிப்பு நிறுவனங்கள்.

    முகம் சுளிக்க வைக்கும்

    செல்போன், உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்ததை அற்புத படைப்பு எனலாம். தொலைபேசியை நாம் ஒரு இடத்தில் வைத்து தான் பயன்படுத்த முடியும். ஆனால் செல்போன் நாம் எங்கு சென்றாலும் நம்முடன் எடுத்து செல்ல முடியும். அதன் உருவ அளவு, எடை, அமைப்பு மிகவும் குறைவாகவும், அழகாகவும் அமைந்திருக்கும். இவ்வாறெல்லாம் பயன் உள்ளதாக இருக்கும் செல்போனை, நம் இளைய சமுதாயம் நல்வழிகளில் பயன்படுத்தாமல், தீய வழிகளில் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.

    பொதுவாக இன்று இளைஞர்களும், இளம் பெண்களும் அதிகம் செல்போன் பயன்படுத்துகின்றனர். பொது இடங்களிலும், பஸ்களிலும் போட்டிபோட்டு சத்தமாக ஒலிக்க செய்யும் தரம் குறைந்த சினிமா பாடல்கள், மேலும் செல்போனில் தேவையற்ற மற்றும் ஆபாச பேச்சுகளை யாரிடமாவது பேசுவதை இளைஞர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இது அனைவரையும் முகம் சுளிக்க வைக்கும்.

    உயிர்கொல்லி நோய்

    இன்றைய இளம் தலைமுறைகளின் உடலில் ஓர் முக்கிய அங்கமாக மாறி விட்டது செல்போன். 80 சதவீத இன்றைய இளைய தலைமுறையினர் இரவு நேர நீண்ட பேச்சு, மறைந்து இருந்து பேசுவது, பாலியல் படங்களை வைத்திருப்பது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். அணுகுண்டை நல்வழியில் பயன்படுத்தவே கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதனை தீய வழிகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அதே போல் செல்போனும் தவறான வழிக்கு பயன்படுத்தப்படுகிறது. செல்போனில் தொடர்ந்து விளையாடுவதால் இளைஞர்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. கழுத்து வலி, மனநோய், முதுகுவலி, கண்பார்வை கோளாறு ஏற்படுகிறது. ஆகவே செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.


    பயம், வெளிப்படுத்த முடியாத கவலைக்கு ஆளாகும் குழந்தைகளும் விரல் சப்பும் பழக்கத்தை தொடருகிறார்கள். குழந்தைகள் விளையாடும்போது தீங்குவிளைவிக்கும் நுண்ணுயிர்கள் அவைகளின் கைகளில் படியும்.
    குழந்தைகள் விரல் சப்பும் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். விரல் சப்பும்போது அவைகள் பாதுகாப்பாக இருப்பதுபோல் உணர்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பயம், வெளிப்படுத்த முடியாத கவலைக்கு ஆளாகும் குழந்தைகளும் விரல் சப்பும் பழக்கத்தை தொடருகிறார்கள்.

    குழந்தைகள் விளையாடும்போது தீங்குவிளைவிக்கும் நுண்ணுயிர்கள் அவைகளின் கைகளில் படியும். அந்த சூழலில் அவைகள் விரலை சப்புவது சுகாதார பிரச்சினைகளை உண்டாக்கிவிடும். குழந்தை பருவத்தில் அவைகளின் ஈறுகள் மென்மையாக இருக்கும். தொடர்ச்சியாக கட்டை விரலை சப்பிக்கொண்டிருந்தால் அது ஈறுகளில் பாதிப்பை ஏற்படுத்தி பற்களின் கட்டமைப்பை சிதைத்துவிடும். தொடர்ந்து விரலை சூப்பும்போது விரல் எலும்புகளிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

    குழந்தைகளின் விரல் சப்பும் பழக்கத்திற்கு தீர்வு என்ன?

    விரலை சப்ப தொடங்கும்போதெல்லாம் அவைகளின் கவனத்தை திசைத்திருப்பும் விதமாக பெற்றோரும் அவர்களுடன் சேர்ந்து விளையாட வேண்டும். சுவாரசியமான கதைகளை சொல்லுங்கள். விரல் சப்புவதால் ஏற்படும் பாதிப்புகளை கதைகள் வழியாகவும் புரியவைக்கலாம். விரலை சப்பாமல் இருக்கும் சமயத்தில் அவர்களை பாராட்டலாம்.

    குழந்தைகளுக்கு பிடித்தமான விளையாட்டு பொருட்கள் உருவத்தில் பலகாரங்களும் தயாரிக்கப்படுகின்றன. தொடர்ந்து விரல் சப்பிக்கொண்டிருந்தால் அப்படி மென்று சாப்பிடக்கூடிய உணவுகளை கொடுத்து, விரல் சப்புவதை தவிர்க்கச் செய்யலாம்.

    விரல் சப்பும் பழக்கத்தில் இருந்துவிடுபட்டு விட்டு, மீண்டும் அந்த பழக்கம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். மன அழுத்தத்தில் இருக்கும்போதும், தங்களுக்கு சவுகரியமான சூழல் இல்லாத போதும் குழந்தைகள் விரல் சப்புகின்றன. அதனால் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு குழந்தைகளின் உணர்வுகளை புரிந்துகொண்டு பெற்றோர் செயல்பட வேண்டியது அவசியமானது.
    ×