search icon
என் மலர்tooltip icon

    பின்லாந்து

    • ஆபத்து காலத்தில் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
    • பயங்கரவாத தாக்குதல்களுக்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது.

    ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகள் தங்கள் மக்களிடம் போருக்கு தயாராக இருக்கும் படி அறிவுறுத்தி வருகிறது. சமீபத்தில் தான் ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் ஆயிரமாவது நாளை கடந்தது. இதனிடையே ஸ்வீடன், பின்லாந்து, நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் தங்களது நாட்டினருக்கு ஆபத்து காலத்தில் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

    இது தொடர்பாக ஸ்வீடன் மில்லியன் கணக்கான துண்டுப்பிரசுரங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது. அவற்றில் போர், இயற்கை பேரழிவுகள் மற்றும் சைபர் அல்லது பயங்கரவாத தாக்குதல்களுக்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது என்பது பற்றிய தகவல்கள் இடம்பெற்று இருந்துள்ளது. பின்லாந்து பல்வேறு நெருக்கடிகளுக்கான தயார்நிலை குறித்த தகவல்களை சேகரிக்கும் வலைத்தளத்தை தொடங்கியுள்ளது.

    ஸ்வீடன் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தில் "இராணுவ அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மோசமான சூழ்நிலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் - ஸ்வீடன் மீதான ஆயுதமேந்திய தாக்குதலுக்கு" என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    'நெருக்கடி அல்லது போர் வந்தால்' என்ற 32 பக்க சிறு புத்தகத்தில், கெட்டுப்போகாத உணவு மற்றும் தண்ணீரை சேமித்து வைப்பது, கையில் பணத்தை வைத்திருப்பது மற்றும் தோட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பது போன்ற குறிப்புகள் உள்ளன.

    "ஸ்வீடனை வேறொரு நாடு தாக்கினால், நாங்கள் ஒருபோதும் கைவிட மாட்டோம். எதிர்ப்பை நிறுத்த வேண்டும் என்பதற்கான அனைத்து தகவல்களும் தவறானவை" என்று சிறு புத்தகத்தில் ஒரு வரி கூறுகிறது.

    இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஸ்வீடன் ஐந்து முறை வெளியிட்ட துண்டுப்பிரசுரத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். புதிய பதிப்பில் ரஷ்யா, உக்ரைன் அல்லது வேறு எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை.

    துண்டு பிரசுரம் ஸ்வீடிஷ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. இதன் டிஜிட்டல் பதிப்புகள் அரபு, ஃபார்ஸி, உக்ரைனியன், போலிஷ், சோமாலி மற்றும் ஃபின்னிஷ் உட்பட பல மொழிகளில் கிடைக்கின்றன.

    பின்லாந்தின் இணையதளம் அதிகாரிகள் "தற்காப்புக்காக நன்கு தயாராக உள்ளனர்" என்று வலியுறுத்துகிறது. பின்லாந்து நாடு ரஷியாவுடன் 1,340 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதலை தொடர்ந்த பிறகு, பின்லாந்து 200-கிலோமீட்டர் எல்லைப் பகுதி வேலியை 10 அடி உயரம் மற்றும் முட்கம்பிகளால் கட்டும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 2026 ஆம் ஆண்டு முடிக்கப்பட உள்ளது.

    • ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.

    வான்டா:

    ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, கனடா வீராங்கனையான மிச்செல் லீ உடன் மோதினார்.

    இதில் பி.வி.சிந்து 16-21, 10-21 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    பிவி சிந்து இந்தப் போட்டியில் 37 நிமிடங்களில் விளையாடி தோல்வி அடைந்தார்.

    ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு களமிறங்கிய பிவி சிந்துவின் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடந்து வருகிறது.
    • இதில் இந்திய வீராங்கனை பன்சோத் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    வான்டா:

    ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தின் இந்தியாவின் மாளவிகா பன்சோத், சீன தைபே வீராங்கனையான சங் ஷோ யுன் உடன் மோதினார்.

    இதில் பன்சோத் 21-19, 24-22 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    மாளவிகா பன்சோத் இந்தப் போட்டியை 57 நிமிடங்களில் விளையாடி வெற்றியைக் கைப்பற்றினார்.

    சீன தைபேயின் சங் ஷோ யுன் தரவரிசையில் உலகின் 23-வது நிலை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

    • காயமடைந்தவர்களில் 15 பேர் ஹெல்சின்கி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • விபத்துக்கான சாத்தியமான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பின்லாந்து நாட்டில் உள்ள தெற்கு பின்னிஷ் நகரமான எஸ்பூவில் அமைந்துள்ள தற்காலிக நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர்கள் உள்பட 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    எஸ்பூவின் டாபியோலா பகுதியில் கட்டுமான தளத்தை கடக்கும் பாலம் நேற்று நள்ளிரவு இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், படுகாயமடைந்தவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"பாலம் இடிந்து விழுந்ததில் பலர் சில மீட்டர் தூரத்தில் விழுந்தனர். காயமடைந்தவர்களில் 15 பேர் ஹெல்சின்கி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காயங்கள் பெரும்பாலும் மூட்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    இதுகுறித்து பின்லாந்து அதிபர் சௌலி நினிஸ்டோ தனது டுவிட்டர் பக்கத்தில், "டாபியோலாவில் நடந்த விபத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஆதரவு மற்றும் உதவி வழங்குவது முக்கியம். போலீசார் அப்பகுதியில் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்துக்கான சாத்தியமான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்" என்றார்.

    • 2020ம் ஆண்டில் சன்னா மரின் மற்றும் மார்கஸ் ரைக்னோனன் ஆகியோர் திருமணம் செய்துக் கொண்டனர்.
    • 19 வருடங்கள் ஒன்றாக இருந்ததற்கும், எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

    பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் தனது மூன்று வருட கணவரான மார்கஸ் ரைக்கோனனுடன் இணைந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    2020ம் ஆண்டில் சன்னா மரின் மற்றும் மார்கஸ் ரைக்னோனன் ஆகியோர் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் மகள் உள்ளார்.இந்நிலையில், மூன்று வருட திருமண வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தின் தனித்தனி பக்கத்தில், "19 வருடங்கள் ஒன்றாக இருந்ததற்கும், எங்கள் அன்பு மகளுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் சிறந்த நண்பர்களாக இருப்போம். நாங்கள் எங்கள் இளமையில் ஒன்றாக வாழ்ந்தோம், ஒன்றாக இளமைப் பருவத்தில் நுழைந்தோம், எங்கள் அன்பான மகளுக்கு ஒன்றாக பெற்றோராக வளர்ந்தோம்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

    • பிரதமர் சன்னா மரினின் சமூக ஜனநாயக கட்சி நூலிழையில் ஆட்சியை தவறவிட்டது.
    • உக்ரைனுக்கு ஆதரவாக பிரதமர் சன்னா மரின் குரல் கொடுத்தது சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

    ஹெல்சிங்கி:

    பின்லாந்தில் நேற்று பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 22 கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2,400 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.

    நாட்டின் பொருளாதாரம், அதிகரித்து வரும் கடன், காலநிலை மாற்றம், கல்வி, குடியேற்றம் மற்றும் சமூக நலன்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் தேர்தல் பிரசாரத்தின்போது அதிகமாக விவாதிக்கப்பட்டன.

    பிரதமர் சன்னா மரின் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, பெட்டேரி ஓர்போ தலைமையிலான மத்திய-வலது தேசிய கூட்டணி கட்சி மற்றும் ரிக்கா புர்ரா தலைமையிலான தி ஃபின்ன்ஸ் கட்சி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

    வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. நள்ளிரவில் முதல் கட்ட முடிவுகள் வெளியாகின.

    இந்நிலையில், பின்லாந்து தேர்தலில் பெட்டேரி ஓர்போ தலைமையிலான மத்திய-வலது தேசிய கூட்டணி கட்சி 20.7 சதவீதத்துடன் முதலிடம் பிடித்தது. சன்னா மரின் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி 20.1 சதவீதம் பிடித்து நூலிழையில் வெற்றியை தவறவிட்டது.

    • பிரதமர் சன்னா மரினின் சமூக ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியைப்பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றியது.
    • கடந்த ஆண்டு உக்ரைனுக்கு ஆதரவாக பிரதமர் குரல் கொடுத்தது சர்வதேச கவனத்தை அதிகரித்துள்ளது.

    ஹெல்சிங்கி:

    பின்லாந்தில் இன்று பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 22 கட்சிகளைச் சேர்ந்த சுமார் 2400 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    எனினும் பிரதமர் சன்னா மரின் தலைமையிலான சமூக ஜனநாயக கட்சி, பெட்டேரி ஓர்போ தலைமையிலான மத்திய-வலது தேசிய கூட்டணி கட்சி மற்றும் ரிக்கா புர்ரா தலைமையிலான தி ஃபின்ன்ஸ் கட்சி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி உள்ளது. பிரதமர் சன்னா மரினின் சமூக ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியைப்பிடிக்க தீவிரமாக களப்பணியாற்றியது.

    வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இன்று நள்ளிரவில் முதற்கட்ட முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐரோப்பாவின் இளம் தலைவர்களில் ஒருவரான மரின் (வயது 37), கொரோனா தொற்றுநோயை அவரது அமைச்சரவை திறமையாக கையாண்டதற்காகவும், நேட்டோவில் சேருவற்காக அதிபர் சவுலி நினிஸ்டோவுடன் இணைந்து அவர் அளித்த பங்களிப்பாலும் மக்களிடையே பாராட்டுகளைப் பெற்றார். மேலும், கடந்த ஆண்டு உக்ரைனுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தது சர்வதேச கவனத்தை அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என பிரதமர் மரின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    நாட்டின் பொருளாதாரம், அதிகரித்து வரும் கடன், காலநிலை மாற்றம், கல்வி, குடியேற்றம் மற்றும் சமூக நலன்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் தேர்தல் பிரசாரத்தின்போது அதிகமாக விவாதிக்கப்பட்டன.

    • அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
    • சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட ஆபாச புகைப்படத்தால் பிரச்சனை எழுந்துள்ளது.

    ஹெல்சின்கி :

    34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பிரதமர் என்கிற பெருமையை பெற்ற சன்னா மரின் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மதுபோதையில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சன்னா மரின் போதைப்பொருளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் அவரை பதவி விலக வலியுறுத்தின. எனினும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் சன்னா மரின் எந்தவிதமான போதைப்பொருளையும் உட்கொள்ளவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் சன்னா மரின் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

    சன்னா மரினின் வீட்டில் 2 பெண்கள் மேலாடை இன்றி உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தில் சன்னா மரின் இல்லை என்ற போதிலும் அது அவரது வீட்டில் எடுக்கப்பட்டது என்பதால் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நாட்டு மக்களிடம் சன்னா மரின் மன்னிப்பு கோரியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "என் கருத்துப்படி, அந்த புகைப்படம் பொருத்தமானது அல்ல. அப்படி ஒரு புகைப்படத்தை எடுத்திருக்க கூடாது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தான் போதை பொருளை பயன்படுத்த வில்லை என்றும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
    • பிரதமர் சன்னா மரினுக்கு கடந்த 19-ந் தேதி போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது.

    ஷெல்சின்கி:

    பின்லாந்து நாட்டின் பெண் பிரதமர் சன்னா மரின். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது 34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பிரதமர் என்ற சிறப்பை பெற்றார்.

    இதற்கிடையே சன்னா மரின் சர்ச்சை ஒன்றில் சிக்கினார். தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து சன்னா மரின் உற்சாகமாக பாடி, நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இதில் அவர் போதை பொருளை உட்கொண்டு குத்தாட்டம் போட்டதாக விமர்சனம் எழுந்தது. அவருக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சியினர் பதவி விலக வலியுறுத்தினர். இதற்கு விளக்கமளித்த சன்னா மரின், தான் எந்த போதை பொருளையும் பயன்படுத்த வில்லை என்றும் சட்டத்துக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

    மேலும், போதை பொருள் தொடர்பான சோதனைக்கு தயார் என்றும் அறிவித்தார். இதையடுத்து சன்னா மரினுக்கு கடந்த 19-ந் தேதி போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் போதை மருந்து சோதனைகள் முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் சன்னா மரின் போதை மருந்து உட்கொள்ளவில்லை என்று தெரியவந்தது.

    இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் சன்னா மரினிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சன்னா மரினின் பிரதமர் பதவி தப்பியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா தொற்று விதிமுறைகளை மீறி சன்னா மரின் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றதால் சர்ச்சையில் சிக்கினார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பின்லாந்து பிரதமரான சன்னா மரீன், உலகின் இள வயது பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர்.
    • சிறந்த பாடகியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாகி விட்டது.

    ஹெல்சிங்கி:

    பின்லாந்து நாட்டின் பெண் பிரதமராக பதவி வகித்து வருபவர் சன்னா மரீன் (34). ஆளும் சோவியத் டெமாக்டிரட்டிவ் கட்சியைச் சேர்ந்த இவர் உலகின் இள வயது பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர்.

    சிறந்த பாடகியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாகி விட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டில் இவர் ஒரு பத்திரிகைக்கு கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவர் இப்படி செய்யலாமா என்ற கண்டன குரல்கள் எழுந்தன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்தனர்.

    இந்நிலையில், பிரதமர் சன்னா மரீன் அங்குள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த மது விருந்தில் அவர் கலந்துகொண்டார். இந்த விருந்தில் அவர் தனது நண்பர்களுடன் குத்தாட்டம் போடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

    இதை பார்த்த பின்லாந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் பதவியை அவமதிக்கும் வகையிலும், களங்கத்தை விளைவிக்கும் வகையிலும் இந்தச் செயலில் ஈடுபடுவதா என அவர்கள் கேள்வி எழுப்பினர். சமூக வலைதளங்களிலும் தங்கள் எதிர்ப்பு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

    அங்குள்ள ஊடகங்களிலும் இது தொடர்பாக படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் அவர் விருந்தின்போது போதை பொருளைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால் இதனை பிரதமர் சன்னா மரீன் மறுத்துள்ளார். போதை பொருள் சோதனைக்கும் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

    • ஒலிம்பிக் தங்க பதக்கத்திற்கு பின் அவர் கலந்து கொண்ட முதல் போட்டியிலேயே தங்கம் வென்றுள்ளார்.
    • தொடர் மழைக்கு இடையே பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

    ஹெல்சின்கி:

    பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

    அவர் முதல் முயற்சியில் 86.69 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார். இந்த இலக்கை பின்னர் வந்த பிற போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை.

    2வது முயற்சியில் சோப்ரா தவறு செய்தார்.

    3வது முயற்சியின்போது அவர் தவறி கீழே விழுந்தார். அது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. எனினும் அதில் இருந்து மீண்டு, அவர் காயமின்றி எழுந்து சென்றார்.

    போட்டியின்போது தொடர் மழை பெய்ததால் ஈட்டி எறியும் வீரர்கள் அனைவருக்கும் சற்று சிரமம் ஏற்பட்டது. இந்தப் போட்டியில் அதிக தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் கிடைத்தது.

    • பின்லாந்து விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்
    • டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார்.

    பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 89.30 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்தார். இதன் மூலம் அவர் இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த போட்டியில் 89.83 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து பின்லாந்தின் ஆலிவர் ஹெலாண்டருக்க தங்கப் பதக்கம் கிடைத்தது.

    நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றிருந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.

    முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாட்டியாலாவில் நடைபெற்ற போட்டியில் 88.07 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தேசிய சாதனை படைந்திருந்தார். பின்லாந்தில் நடைபெற்ற போட்டியின் மூலம் பழைய சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையை அவர் படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நீரஜ் சோப்ரா தற்போதுதான் பின்லாந்து போட்டியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×