என் மலர்

    நீங்கள் தேடியது "Sanna Marin"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டைக் கடந்துள்ளது.
    • ராணுவ உதவிகள் வழங்கிய பின்லாந்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. ரஷிய படைகளின் தாக்குதல்களை உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

    உக்ரைனின் உள்கட்டமைப்புகளை தகர்க்கும் நோக்கில் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியுள்ளது. சர்வதேச நாடுகளில் தங்களுக்கு மேலும் ராணுவ உதவிகளை வழங்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்து வருகிறார்.

    இந்நிலையில், போர் நடந்து வரும் சூழ்நிலையில் உக்ரைனுக்கு பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்று உரையாடினார்.

    ஓராண்டு கால போரில் உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியதற்காக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பின்லாந்திற்கு நன்றி தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.
    • சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட ஆபாச புகைப்படத்தால் பிரச்சனை எழுந்துள்ளது.

    ஹெல்சின்கி :

    34 வயதில் பின்லாந்தின் பிரதமராக பதவியேற்றதன் மூலம் உலகின் இளம் வயது பிரதமர் என்கிற பெருமையை பெற்ற சன்னா மரின் தனது வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மதுபோதையில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    சன்னா மரின் போதைப்பொருளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள் அவரை பதவி விலக வலியுறுத்தின. எனினும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் சன்னா மரின் எந்தவிதமான போதைப்பொருளையும் உட்கொள்ளவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

    இந்த நிலையில் சன்னா மரின் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது வீட்டில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது.

    சன்னா மரினின் வீட்டில் 2 பெண்கள் மேலாடை இன்றி உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியானது. இந்த புகைப்படத்தில் சன்னா மரின் இல்லை என்ற போதிலும் அது அவரது வீட்டில் எடுக்கப்பட்டது என்பதால் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நாட்டு மக்களிடம் சன்னா மரின் மன்னிப்பு கோரியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், "என் கருத்துப்படி, அந்த புகைப்படம் பொருத்தமானது அல்ல. அப்படி ஒரு புகைப்படத்தை எடுத்திருக்க கூடாது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பின்லாந்து பிரதமரான சன்னா மரீன், உலகின் இள வயது பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர்.
    • சிறந்த பாடகியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாகி விட்டது.

    ஹெல்சிங்கி:

    பின்லாந்து நாட்டின் பெண் பிரதமராக பதவி வகித்து வருபவர் சன்னா மரீன் (34). ஆளும் சோவியத் டெமாக்டிரட்டிவ் கட்சியைச் சேர்ந்த இவர் உலகின் இள வயது பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர்.

    சிறந்த பாடகியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாகி விட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டில் இவர் ஒரு பத்திரிகைக்கு கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவர் இப்படி செய்யலாமா என்ற கண்டன குரல்கள் எழுந்தன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்தனர்.

    இந்நிலையில், பிரதமர் சன்னா மரீன் அங்குள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த மது விருந்தில் அவர் கலந்துகொண்டார். இந்த விருந்தில் அவர் தனது நண்பர்களுடன் குத்தாட்டம் போடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

    இதை பார்த்த பின்லாந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் பதவியை அவமதிக்கும் வகையிலும், களங்கத்தை விளைவிக்கும் வகையிலும் இந்தச் செயலில் ஈடுபடுவதா என அவர்கள் கேள்வி எழுப்பினர். சமூக வலைதளங்களிலும் தங்கள் எதிர்ப்பு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

    அங்குள்ள ஊடகங்களிலும் இது தொடர்பாக படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் அவர் விருந்தின்போது போதை பொருளைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆனால் இதனை பிரதமர் சன்னா மரீன் மறுத்துள்ளார். போதை பொருள் சோதனைக்கும் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லேசான அறிகுறிகளே இருப்பதாக சன்னா மரின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    • அனைத்துக் கட்சிக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேசிய ஒளிபரப்பாளர் அறிவித்தார்.

    ஹெல்சின்கி :

    பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு சன்னா மரின் (வயது 36), உடல் வெப்பநிலை அதிகரித்தது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    ஆனாலும் லேசான அறிகுறிகளே இருப்பதாக அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சன்னா மரின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், "நேற்று முன்தினம் இரவு எனக்கு உடல் வெப்பநிலை அதிகரித்தது. காலையில் நான் கொரோனா பரிசோதனை செய்தேன்.

    அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அறிகுறிகள் லேசானவை மற்றும் நான் நன்றாக உணர்கிறேன். அதிக பயணங்களின் காரணமாக நான் வழக்கமான வீட்டு பரிசோதனைகளை செய்தேன். இந்த வார தொடக்கத்தில் எனது சோதனைகள் எதிர்மறையாக இருந்தன" என்று தெரிவித்துள்ளார்.

    நேற்று முன்தினம் பாராளுமன்ற அமர்வில் மரின் கலந்துகொண்டதாகவும், மாலையில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் அமைச்சரவைக் கட்சிகளின் பாரம்பரிய கோடை கொண்டாட்டத்தை நடத்தினார் என்றும் தேசிய ஒளிபரப்பாளர் தெரிவித்தார்.

    மேலும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து பிரதமரின் அட்டவணையில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் அவசரச் சட்டச் சீர்திருத்தத்தை விரைவுபடுத்துவதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று பிற்பகல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேசிய ஒளிபரப்பாளர் அறிவித்தார்.

    ×