என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இந்த ஸ்லோகத்தை தினமும் மாலை நேரங்களில் உச்சரித்து வந்தால் திருமகளின் கடைக்கண் பார்வை நம்மீது பட்டு நம் வாழ்வில் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.
    புனிதமே கமல மாதே! புள்ளூர்ந்தான் போற்றும் தேவி!
    இனிய பத்மாசனத்தில் இருப்பவள் நீயே அன்றோ!
    துணிவுடை வைணவீ உன்றன் திருவடி தொழுவதற்கே
    அணுகினோம் நோக்கு தாயே! அவதியை நீக்கு தாயே!
    செல்வமென்று சொன்னால் செல்வி நீதான் ஈவாய்!
    வெல்வது நீயே என்றும்! வேறென அனைத்தும் நீயே!
    பல்குணப் பரந்தாமன்பால் பற்றுடை திருவே உன்னை
    பல்கிய மலர்கொண்டேத்திப் பணிந்தனம் காக்க தாயே!
    கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ அன்னை நீயே!
    கண்ணனின் சாயல் பெற்ற காரிகை நீயே தாயே!

    மந்திரத்தின் பொருளானது புனிதமான தாமரையில் அமர்ந்தவளே! கருடவாகனன் போற்றும் தேவி! பத்மாசனத்தில் அமரப்வளே! வைஷ்ணவியாய் விளங்கி எம் அல்லல்கள் அகற்று தாயே1செல்வம் அருள்பவள், அனைத்தும் நீயாய் விளங்குபவள். பரந்தாமன் மேல் பற்று கொண்டவளே! கண்ணைன் திரு மார்பில் உறைபவளே! தங்களை வணங்குகிறேன். 
    இந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும்.
    ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
    நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
    நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
    ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்

    அனைத்து அம்சங்களையும் தன்னுள் முழுமையாக கொண்ட திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கண்ணனை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் அல்லது எப்போது வேண்டுமானாலும் 108 முறை துதிப்பது நல்லது.

    புதன், சனிக்கிழமைகளிலும், மாதத்தில் வரும் ஏகாதசி தினங்களிலும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் உங்கள் பூஜையறையில் இருக்கும் கண்ணனின் படத்திற்கு சில துளசி இலைகளை சமர்ப்பித்து, இந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும். ஆக்கபூர்வமான ஆற்றல்கள் பெருகும்.

    தினமும் காலையில் இந்த ஸ்லோகத்தை 108 முறை சொல்லி வந்தால் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய கிரகங்களின் தோஷங்களையும் நீக்கும்.
    பலருக்கும் ஒன்பது கோள்களினால் கிரக தோஷங்கள் ஏற்படுகின்றது. இந்த தோஷங்களால் அவர்கள் வாழ்வில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். எத்தகைய வினைகளையும் நீக்கும் நாயகனாக விநாயக பெருமான் இருக்கிறார். அவரை வழிபடுவதற்கான “விநாயகர் ஸ்லோகம்” இதோ.

    ராசிஸ் தாரா திதிர் யோக வார காரண அம்சக
    லக்னோ ஹோரா காலசக்ரோ மேரு சப்தர்ஷயோ த்ருவ
    ராஹூர் மந்த கவிர் ஜீவ புதோ பௌம சசீ ரவிஹி
    கால ஸ்ருஷ்டி ஸ்திதிர் விஸ்வ ஸ்தாவரோ ஜங்கமோ ஜகத்

    விநாயகரின் ஆற்றலை கூறும் மந்திர ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்ததும் குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள வீட்டில் உள்ள விநாயகர் படத்திற்கு முன்போ அல்லது அருகிலுள்ள விநாயகர் கோவிலுக்கோ சென்று, விநாயகருக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி மேற்கண்ட ஸ்லோகத்தை 108 முறை துதித்து வழிபடுவதால் உங்களை பீடித்திருக்கும் எத்தகைய கிரகங்களின் தோஷங்களையும் நீக்கும். நினைத்த காரியங்கள் தடைகள் தாமதங்கள் இன்றி உடனடியாக நிறைவேறும்.
    கால பைரவருக்கு உகந்த இந்த ஸ்தோத்திரத்தை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினங்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    நிர்வாணம் ஸ்வாந வாஹனம்
    த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
    வந்தே பூத பிசாச நாத
    வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்
            
    - காலபைரவ ஸ்தோத்திரம்

    பொதுப்பொருள்: சிவப்பு நிறத்துடன் பிரகாசிக்கும் ஜடாமுடியை உடையவரும், தூய்மையானவரும், ஒளியே வடிவான ரக்த வர்ண அங்கங்களைக் கொண்டவரும், முறையே கைகளில் சூலம், மண்டை ஓடு, பாசக்கயிறு, டமருகம் போன்றவற்றை ஏந்தி, இந்த உலகத்தைக் காப்பவரும், நாயை வாகனமாகக் கொண்டவரும், எப்பொழுதும் பேரானந்தத்துடன் திகழ்பவரும், பூத பிசாசங்களுக்குத் தலைவனானவரும், ப்ரம்மச்சாரியானவரும், முக்கண்களுடன் சிவாம்சமாகத் திகழ்பவரும், காசி திருத்தலத்தை பரிபாலிப்பவரும், திகம்பரருமான கால பைரவரை வணங்குகிறேன்.
    கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.
    இன்பத்தை கண்டால் மகிழ்ச்சியடையும் மனம், துன்பத்தைக் கண்டால் வாடி விடுகிறது. மனிதனுக்கு ஏன் துன்பம் உண்டாகிறது என்பது குறித்து, பாரததேசத்தை ஆண்ட போஜ மகாராஜன் தனது நீதி நூலில் குறிப்பிட்டுள்ளார்.

    அதில், ஒருவன் தவறாமல் முன்னோர் வழிபாடு செய்யாவிட்டால் அவனை துன்பம் விரட்டும். இது தவிர, தெய்வ நிந்தனை செய்வது, ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவியைப் பிரிப்பது, கோள் சொல்லி குடும்ப ஒற்றுமையைக் குலைப்பது, வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களை எந்தப் பிறவியில் செய்திருந்தாலும், அது விரட்டி வந்து துன்பத்தைத் தரும்,’’ என்று சொல்லியிருக்கிறார்.

    ஆனால், பாவம் செய்யாத மனிதர் யார் இருக்கிறார்கள்? ஏதோ, ஒரு பாவத்தை செய்து தொலைத்ததால் தான், இப்போது கஷ்டம் நம்மை வாட்டுகிறது. இவ்வாறு, அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களால், கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். “பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை’ என்ற முழுமையான நம்பிக்கையுடன், நரசிம்மரின் திருவடிகளில் சரணாகதி அடைவது, தண்டனையில் இருந்து விடுதலை தரும்.
    தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் அவர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள்.

    தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள். அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோவிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.

    நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.
    சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
    அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
    எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
    இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
    எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
    நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை
    அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

    பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.
    இந்த லக்ஷ்மி கணபதி மந்திரத்தை, தினமும் அரை மணி நேரம் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, வீட்டில் செல்வ வளம் பெருகும்.
    இந்த லக்ஷ்மி கணபதி மந்திரத்தை, தினமும் அரை மணி நேரம் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி, வீட்டில் செல்வ வளம் பெருகும்.
     
    சதுர்புஜம் பாசதரம் கணேசம்
    ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
    லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
    ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
     
    பெருமாளின் பூரண அருள் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை பெருமாளுக்கு உகந்த நாட்களில் மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம்.
    பெருமாளுக்கு உகந்த திதி ஏகாதசி. இந்த திதியில் விரதம் இருப்பவர்களுக்கு பெருமாளின் பூரண அருள் கிடைப்பதுடன், அவன் மார்பில் நீங்காமல் உறைந்து நிற்கும், திருமகளின் அருளும் கிடைக்கும். இந்த துதிகளை ஏகாதசி அன்று மட்டுமின்றி சனிக்கிழமைகளிலும் சொல்லி வரலாம்.

    ஓம் கேசவாயநம,
    ஓம் நாராயணாயநம,
    ஓம் மாதவாயநம,
    ஓம் கோவிந்தாயநம,
    ஓம் விஷ்ணுவேநம,

    திருப்பரங்குன்றம் தொடங்கி வயலூர் வரை உள்ள முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்த படைவீட்டு வாரப்பாடல்களை தினந்தோறும் கந்தவேலை நினைத்துப் பாடினால் எந்த வினையும் நம்மை நெருங்காது.
    ஞாயிற்றுக்கிழமை

    தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
    சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
    மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
    ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

    திங்கட்கிழமை

    துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
    சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
    சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
    திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

    செவ்வாய்க்கிழமை

    செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
    எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
    தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
    செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

    புதன்கிழமை

    மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
    பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
    உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

    வியாழக்கிழமை

    மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
    தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
    தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
    வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

    வெள்ளிக்கிழமை


    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
    வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
    வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
    வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

    சனிக்கிழமை

    கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
    முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
    இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
    சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

    வேலுண்டு வினையில்லை...
    மயிலுண்டு பயமில்லை...
    சனிபகவானின் தண்டனையில் இருந்து விடுபட அவரிடம் மனமுருகி வேண்டி கீழே உள்ள தமிழ் மந்திரத்தை சனிக்கிழமை அன்று ஜபித்து வாருங்கள்.
    சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
    சச்சரவின்றி சாகா நெறியில்
    இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

     சனிக்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று நவகிரக சந்நிதியில் இந்த மந்திரத்தை ஜபித்து மனதார வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும். அதோடு உங்களால் முடிந்தவரை ஏழை எளியோருக்கு உதவுங்கள். நாம் பிறருக்கு உதவினால் நிச்சயம் இறைவன் நம்மை தேடி வந்து நமக்கு உதவுவார்.
    சீரடி சாய்பாபா தன் வாழ்நாளில் செய்த அற்புதங்களுக்கு அளவே இல்லை. சாய்நாதருக்கு உகந்த இந்த திருவடி மகிமை (தியானச் செய்யுள்)யை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    ஸாயி நாதர் திருவடியே
    ஸம்பத்தளிக்கும் திருவடியே
    நேயம் மிகுந்த திருவடியே
    நினைத்ததளிக்கும் திருவடியே
    தெய்வ பாபா திருவடியே
    தீரம் அளிக்கும் திருவடியே
    உயர்வையளிக்கும் திருவடியே

    நம் உலகத்தை இருளில் இருந்து நீக்கி வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் தமிழில் உள்ள இந்த மந்திரத்தைக் கூறி வழிபடுவோம்.
    சூரியனுக்கு நன்றியை சொல்லி, அவரைப் போற்றும் வகையில் சூரியபகவானின் காயத்ரி மந்திரத்தை சொல்லி வணங்குவது இன்னும் சிறந்தது. அதிகாலை வேளையில் சூரிய உதயத்தை பார்த்து, இரண்டு கைகளையும் சேர்த்து, நம் உலகத்தை இருளில் இருந்து நீக்கி வெளிச்சத்திற்கு கொண்டு வரும் அந்த பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்த மந்திரத்தைக் கூறி வழிபடுவோம்.

    ‘காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை
    நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
    தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி’
    சொத்து அல்லது பொருள் விரயத்துக்கான வழக்குகளில் வெற்றி கிடைக்க இந்த ஸ்லோகத்தை திங்கள், வியாழக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதி, ஜென்ம நட்சத்திர நாட்களிலும் சொல்லி வழிபாடு செய்யலாம்.
    ஓம்பாசேநா பத்தசாத்யாம் ஸ்மரசர விவசாம்
    வாமதோஷ்ணா நயந்தீம் ஸெளவர்ணாம்
    வேத்ரயஷ்டீம் நிஜகர கமலயனா பரேணா
    ததானாம் ரக்தாம் ரக்தாங்க ராகாஸ்மர
    குஸும யுதாம் அஸ்வ சம்ஸ்தாம் ப்ரசன்னாம்
    தேவீம் பாலேந்து சூடாம் மனசி முனிநுதாம்

    பார்வதீம் பாவயாமி!

    பஞ்சாங்க சுத்தியுடைய திங்கள், வியாழக்கிழமைகளிலும், பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதி, ஜென்ம நட்சத்திர நாட்களிலும் சொத்து அல்லது பொருள் விரயத்துக்கான வழக்குகளைப் பொறுத்து, குறிப்பிட்ட தினங்களிலும் வழிபடலாம்.

    முதலில் கலச ஸ்தாபனம் செய்து, கிழக்கு முகமாக தேவியை கலசத்தில் எழுந்தருளச் செய்யவேண்டும். யாகாக்னி மேடை செய்து கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்தவாறு, ஐவகைப் பழங்கள், எள், புளிச்சாதம் ஆகிய நிவேதனங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். பின்பு நவதானியங்கள், கொள்ளு, சிவப்பு நிற மலர்கள், நவ சமித்துக்கள் சமர்ப்பித்து, பசு நெய்யுடன் தாமரை மலர் சேர்த்து மூலமந்திரம் கூறி யக்ஞம் செய்யலாம்.

    மேலும் சிவன், விஷ்ணு, அம்மன் சந்நிதிகளிலும், விசேஷமாக ஐயனார், முனீஸ்வரன் சந்நிதிகளின் எதிரில் உள்ள குதிரைச் சிலைகளில், முன் செல்லும் பாவனையில் உள்ள காலுக்கு எதிரில் அமர்ந்து தேவியின் மூலமந்திரத்தை ஜபம் செய்தும் வழிபடலாம். 90 நாட்களுக்கு மேல் ஜபம் தொடரக்கூடாது ஒரு நாளுக்கு 108 தடவை ஜபிக்கலாம். ஜபம் தொடங்குவதற்கு முன்பாக தகுந்த குருவின் மூலம் உபதேசம் பெற்றுச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஜபம் செய்பவர்கள் முதலில் தியானத்தை ஒருமுறை சொன்ன பிறகு, யந்திர ஸ்தாபனம், சக்தி ஊட்டல் செய்துவிட்டு ஜபம் தொடங்க வேண்டும்.
    ×