என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ஆதி சங்கரர் தனது மாத்ருகா பஞ்சகம் என்ற ஸ்லோகத்தில் தாயை துதிப்பார் பாருங்கள் அப்போது அவரது மாத்ரு பக்தி நம் கண்களை குளமாக்கும்,
    கயாவில் ஸ்ரார்த்தம் செய்யும் பொது ஸ்ரார்த்தை நடத்தும் சுவாமி பிண்ட பிரதானம் கொடுப்பதை பற்றி ஒரு நீண்ட விளக்கம் கொடுப்பார். குறிப்பாக தாயாருக்கு பிண்ட பிரதானம் கொடுக்கும் போது நாம் கர்ப்பத்தில் இருக்கும் போதும் நம்மை வளர்த்து ஆளாக்கும் போதும் தாயாருக்கு எவ்வளவு உபாதைகளை கொடுத்தோம் என்பதை பற்றி ஓர் அரை மணி நேரம் விஷ்த்தாராமாக விளக்குவார். அப்போது நம் கண்கள் தன்னையும் அறியாமல் கண்ணீர் வரும்.

    ஆதி சங்கரர் தனது மாத்ருகா பஞ்சகம் என்ற ஸ்லோகத்தில் தாயை துதிப்பார் பாருங்கள் அப்போது அவரது மாத்ரு பக்தி நம் கண்களை குளமாக்கும்

    1. ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
    நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
    ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
    தாதும் நிஷ்க்ருதிமுந்நதோபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

    தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல், ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத் தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே! அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று செல்ல? அந்த தாய்க்கு நமஸ்காரம்!

    2. குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
    யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
    குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
    ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

    ஹே தாயே!  ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே! உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!

    3. ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
    ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
    ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
    அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

    தாயே! மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது. தாயே! உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!

    4. முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
    ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
    இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
    ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

    என் முத்தல்லவா  ! என் கண் அல்லவா ! என் ராஜா, என் குழந்தை சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !

    5. அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
    ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
    க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -
    த்யஹோ ஜநந்யை ரசிதோயமஞ்ஜலி :II

    அன்று ப்ரஸவ காலத்தில் 'அம்மா' அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன். தாயை போல் ஒரு தெய்வம் இல்லை .

    என் அன்பிற்கினிய நண்பர்களே ! தாயில் சிறந்த கோயில் இல்லை. நமக்கு கண்கண்ட தெய்வமான தாயை போற்றுங்கள். நீவிர் எல்லா வளமும் பெறுவீர்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த சிவ மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
    நங்சிவாயநம - திருமணம் நிறைவேறும்

    அங்சிவாயநம - தேக நோய் நீங்கும்

    வங்சிவாயநம - யோக சித்திகள் பெறலாம்.

    அங்சிவாயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்

    ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.

    கிலிநமசிவாய - வசிய சக்தி வந்தடையும்

    ஹிரீநமசிவாய - விரும்பியது நிறைவேறும்

    ஐயும்நமசிவாய - புத்தி வித்தை மேம்படும்.

    நமசிவாய - பேரருள், அமுதம் கிட்டும்.

    உங்யுநமசிவாய - வியாதிகள் விலகும்
    .
    கிலியுநமசிவாய - நாடியது சித்திக்கும்

    சிங்வங்நமசிவாய - கடன்கள் தீரும்.

    நமசிவாயவங் - பூமி கிடைக்கும்

    சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்

    சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்

    சிவாயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்

    அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்

    அவ்வுஞ் சிவாயநம - சிவ தரிசனம் காணலாம்

    ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்

    லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்

    ஓம் நமசிவாய - வாணிபங்கள் மேன்மையுறும்

    ஓம் அங்உங்சிவாயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்

    ஓம் ஸ்ரீறியும் சிவாயநம - அரச போகம் பெறலாம்

    ஓம் நமசிவாய - சிரரோகம் நீங்கும்

    ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்

    எந்த மந்திரத்தை விரும்புகிறோமோ அந்த மந்திரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு தினமும் 108 முறையோ 1008 முறையோ சொல்லிவர வேண்டும்.
    சோட்டாணிக்கரை பகவதி அம்மனுக்கு உகந்த இந்த துதியை தினமும் பக்தியுடன் சொல்லுபவர்களுக்கு துன்பம் வராது. செல்வம் சேரும்.
    சோட்டாணிக்கரை பகவதியே உன்பாதம் பணிந்து நின்றேன்
    அம்மையே உன்னை நம்பினேன் தினமும்
    தூயவளே என்றும் நீயே துணை
    சாம்பவியே என் தாயே சாமுண்டேஸ்வரியே

    ஞானத்தை அளிக்கும் ஞானாம்பிகையே
    கேட்டவர்க்கு வரமளிக்கும் காலபத்னியே
    சும்ப நிசும்பரை வதைத்த துர்க்கா தேவியே
    அனுக்ரஹ அன்னையே ஆதார சக்தியே

    உயிராய் நின்றவளே உண்மைப் பரம்பொருளே
    உருக்கமே ஒளியே உயர்நெறி தருபவளே
    மாயவன் தங்கையே மந்திரத் தாயே
    நலமெல்லாம் நல்கும் சோட்டாணிக்கரை பகவதியே சரணமம்மா சரணம் .....
    திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரைவில் திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையும்.
    அதிசயமான வடிவுடை
    யாள் அரவிந்த மெல்லாம்
    துதிசய ஆனன சுந்தர
    வல்லி துணை இரதி
    பதிசய மானது அபசய
    மாகமுன் பார்த்தவர்தம்
    மதிசய மாகவன்றோவாம
    பாகத்தை வவ்வியதே

    அபிராமி அந்தாதியில் வரும் இப்பதிகத்தை தினமும் பாடி அம்பாளை வணங்கி வர நல்ல வரன் அமையும்.

    உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.
    உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

    அஸ்வினி
    ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
    சுதாகராயை தீமஹி
    தன்னோ அச்விநௌ ப்ரசோதயாத்

    பரணி
    ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
    தண்டதராயை தீமஹி
    தன்னோ பரணி ப்ரசோதயாத்

    கிருத்திகை
    ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
    மஹாதபாயை தீமஹி
    தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

    ரோஹிணி
    ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
    விச்வரூபாயை தீமஹி
    தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

    மிருகசீரிடம்
    ஓம் சசிசேகராய வித்மஹே
    மஹாராஜாய தீமஹி
    தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

    திருவாதிரை
    ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
    பசும்தநாய தீமஹி
    தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

    புனர்பூசம்
    ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
    அதிதிபுத்ராய தீமஹி
    தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

    பூசம்
    ஓம் ப்ரம்மவர்ச்சஸாய வித்மஹே
    மஹா திஷ்யாய தீமஹி
    தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

    ஆயில்யம்
    ஓம் ஸர்பராஜாய வித்மஹே
    மஹா ரோசனாய தீமஹி
    தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

    மகம்
    ஓம் மஹா அனகாய வித்மஹே
    பித்ரியா தேவாய தீமஹி
    தன்னோ மகஃப்ரசோதயாத்

    பூரம்
    ஓம் அரியம்நாய வித்மஹே
    பசுதேஹாய தீமஹி
    தன்னோ பூர்வபல்குநீ ப்ரசோதயாத்

    உத்திரம்
    ஓம் மஹாபகாயை வித்மஹே
    மஹாச்ரேஷ்டாயை தீமஹி
    தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

    அஸ்தம்
    ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
    ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
    தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

    சித்திரை
    ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
    ப்ரஜாரூபாயை தீமஹி
    தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

    சுவாதி
    ஓம் காமசாராயை வித்மஹே
    மகாநிஷ்டாயை தீமஹி
    தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

    விசாகம்
    ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
    மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
    தன்னோ விசாகா ப்ரசோதயாத்

    அனுஷம்
    ஓம் மித்ரதேயாயை வித்மஹே
    மஹா மித்ராய தீமஹி
    தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

    கேட்டை
    ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
    மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
    தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

    மூலம்
    ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
    மஹப்ராஜையை தீமஹி
    தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

    பூராடம்
    ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
    மஹாபிஜிதாயை தீமஹி
    தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

    உத்திராடம்
    ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
    மஹா ஷாடாய தீமஹி
    தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

    திருவோணம்
    ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
    புண்யஸ்லோகாய தீமஹி
    தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

    அவிட்டம்
    ஓம் அக்ர நாதாய வித்மஹே
    வசூபரீதாய தீமஹி
    தன்னோ ஸ்ரவிஷ்டா ப்ரசோதயாத்

    சதயம்
    ஓம் பேஷஜயா வித்மஹே
    வருண தேஹா தீமஹி
    தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

    பூரட்டாதி
    ஓம் தேஜஸ்கராய வித்மஹே
    அஜஏகபாதாய தீமஹி
    தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    உத்திரட்டாதி
    ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
    ப்ரதிஷ்டாபநாய தீமஹி
    தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

    ரேவதி
    ஓம் விச்வரூபாய வித்மஹே
    பூஷ்ண தேஹாய தீமஹி
    தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
    சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர் செவ்வாய் பகவான் காயத்ரியை 54 முறை அல்லது 108 முறை என தினமுமே சொல்லி வழிபடலாம்.
    செவ்வாய் பகவானை, செவ்வாய் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கி வழிபடுங்கள். செவ்வாய்க்கிழமையன்று வணங்குவதும் நவக்கிரகங்களைச் சுற்றி வரும் போது, செவ்வாய் பகவானை மனதில் வேண்டிக்கொண்டு, செவ்வாய் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

    செவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம் :

    ஓம் வீரத்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்

    எனும் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபடுங்கள். செவ்வாய் பகவான் காயத்ரியை 54 முறை அல்லது 108 முறை என தினமுமே சொல்லி வழிபடலாம்.

    சொந்த வீடு வேண்டும் என விரும்புபவர்கள், இடம் வாங்கியும் வீடு கட்ட முடியவில்லையே என்று வருந்துவோர், திருமணம் தள்ளிப் போகிறதே என்று கலங்குவோர் செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியை ஜபித்து வாருங்கள்.

    சொந்த வீட்டு கனவை நிறைவேற்றி அருளுவார் செவ்வாய் பகவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்து அருளுவார். செவ்வாய் முதலான தோஷத்தை நிவர்த்தி செய்து அருளுவார் செவ்வாய் பகவான்.
    இந்த பஞ்சமுக ஆஞ்சநேயா மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து அனுமனை வழிபட்டால், கிரக பீடைகள், கெட்ட கனவுகள் ஆகிய பல்வேறு இன்னல்கள் நீங்கி இனிய நல்வாழ்வும், ஆயுள் ஆரோக்கியமும் இனிதே அமையும்.
    ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
    வாயு புத்ராய மகா பலாய
    சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
    மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
    கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
    சப்த சமுத்ர நிராலங்கிதாய,
    பிங்கள நயனாய அமித விக்ரமாய
    சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
    சஞ்சீவினி சமாநயன
    சமார்த்தாய அங்கதலட்சுமண
    கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
    தசகண்ட வித்வம்ஸனாய
    இராமேஷ்டாய பல்குணசகாய
    சீதா சகித இராமச்சந்திர
    ப்ராசதகாய -ட் ப்ரயோகாங்க
    பஞ்சமுக ஹனுமதே நம:

    - இந்த பஞ்சமுக ஆஞ்சநேயா மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து அனுமனை வழிபட்டால், கிரக பீடைகள், கெட்ட கனவுகள் ஆகிய பல்வேறு இன்னல்கள் நீங்கி இனிய நல்வாழ்வும், ஆயுள் ஆரோக்கியமும் இனிதே அமையும்.
    ஸ்கந்த குரு கவசத்தில் முருகனின் மூல மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை தியானித்து உருஏற்ற முருகனின் அருள் கிடைத்து ஆணவம், கன்மம், மாயை நம்மைவிட்டு அகன்று முக்தி நமக்கு சித்தியாகுமாம், முக்தியை தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று சொல்கிறது கந்த குரு கவசம்.
    ஸ்கந்த குரு கவசத்தில் முருகனின் மூல மந்திரம் உள்ளது. அந்த மந்திரத்தை தியானித்து உருஏற்ற முருகனின் அருள் கிடைத்து மும்மலங்கள் ஆகிய ஆணவம், கன்மம், மாயை நம்மைவிட்டு அகன்று முக்தி நமக்கு சித்தியாகுமாம், முக்தியை தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று சொல்கிறது கந்த குரு கவசம்.

    மூல மந்திரம்:

    ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ

    ஸ்கந்த குரு கவசத்தில் இந்த மந்திரத்தை விளக்கும் பாடல் பகுதி
    பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே

    ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும் க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும் ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா முருகனின் மூலமிது முழுமனத்தோடேத்திட்டால்
    மும்மல மகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம்
    முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம்
    முருகன் இருப்பிடமே முக்தித்தல மாகுமப்பா
    ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
    இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு
    மூலமதை ஏத்துவோர்க்கு காலபய மில்லையடா
    காலனை நீஜயிக்க ஸ்கந்தனைப் பற்றிடடா சொன்னபடிச் செய்தால் ஸூப்ரஹமண்ய குருநாதன்
    தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்
    ஜெகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
    சிவபெருமானுக்கு உகந்த இந்த பக்தி துதியை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். வேண்டுதல்கள் படிப்படியாக நிறைவேறும்.
    அரிய மா ஒளியே அற்புதனே சரணம் சரணம்
    அருள் சுரக்கும் தெய்வமே ஆதியே சரணம் சரணம்
    அனுகூலம் செய்பவனே ஆரமுதே சரணம் சரணம்
    அன்புள்ள அப்பனே ஆரூரானே சரணம் சரணம்
    அற்புத உருவே ஆதியே ஜோதியே சரணம் சரணம்
    அறவழி காட்டுவோனே ஆலவாயனே சரணம் சரணம்
    இணையில்லாத் துணையே ஈங்கோய்மலை தேவனே சரணம்
    இரக்கம் மிகுந்தவனே ஈடில்லா ஈசனே சரணம் சரணம்
    இனிமை தருபவனே இமயத்தில் இருப்பவனே சரணம் சரணம்
    இன்பத்தின் இன்பமே இன்னல் தீர்ப்பவனே சரணம் சரணம்
    எமையாளும் ஈசனே ஏற்றமளிப்பவனே சரணம் சரணம்
    எங்குமுன் திருவருள் எளியவனே சரணம் சரணம்
    எகாம்பரநாதனே என்குணசீலனே சரணம் சரணம்
    ஏகாந்தவாசனே ஏட்டுமானூர் அப்பனே சரணம் சரணம்
    கதியே காருண்யனே கடுத்திருத்தி அப்பனே சரணம் சரணம்
    புனிதனே பெரியோனே பெருவுடையாரே சரணம் சரணம்
    வையகம் காக்கும் வைக்கத்து வள்ளலே சரணம் சரணம்
    சிக்கல் தீர்ப்பவனே சிவகுருநாதனே சரணம் சரணம் சரணம்.
    சப்தகன்னிமார்களை இந்த 108 போற்றியைச் சொல்லி வழிபட்டால் திருமண தடைகள் நீங்கும். வீட்டில் செல்வவளம் கொழிக்கும்.
    சிவாலயங்களில், பிராஹ்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்தமாதருக்கு சன்னதி இருக்கும். இவர்களை இந்த போற்றியைச் சொல்லி வழிபட்டால் செயல்களில் வெற்றி உண்டாகும். நிம்மதி கிடைக்கும். வீட்டில் செல்வவளம் கொழிக்கும். பெண்களின் திருமண தடைகள் நீங்கும்.

    ஓம் பிராமியே போற்றி
    ஓம் பிரம்மசக்தியே போற்றி
    ஓம் அன்னவாகினியே போற்றி
    ஓம் அபயகரத்தானே போற்றி
    ஓம் இந்தளூர் தேவியே போற்றி
    ஓம் ஈர்த்து அருள்பவனே போற்றி
    ஓம் சடைமுடியாளே போற்றி
    ஓம் ஜபமாலை ஏந்தியவளே போற்றி
    ஓம் நான்முகியே போற்றி
    ஓம் நால்வேத மாதாவே போற்றி
    ஓம் பத்மாசினியே போற்றி
    ஓம் பயநாசினியே போற்றி
    ஓம் மலர்விழியாளே போற்றி
    ஓம் மான்தோலுடையாளே போற்றி
    ஓம் மாகேஸ்வரியே போற்றி
    ஓம் மகேஸ்வரன் ரூபியே போற்றி
    ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
    ஓம் அசுரநிக்ரகம் செய்தாய் போற்றி
    ஓம் கருணாபுரத்தேவியே போற்றி
    ஓம் காளை வாகினியே போற்றி
    ஓம் திரிசூலதாரியே போற்றி
    ஓம் திரைலோக்ய மோகினியே போற்றி
    ஓம் பஞ்சமுகியே போற்றி
    ஓம் பல்லாயுதம் ஏந்தியவளே போற்றி
    ஓம் படர் சடையாளே போற்றி
    ஓம் பாம்பணியாளே போற்றி
    ஓம் முக்கண்ணியே போற்றி
    ஓம் முக்தி நாயகியே போற்றி
    ஓம் வெண்ணிற மேனியளே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவளே போற்றி
    ஓம் கவுமாரியே போற்றி
    ஓம் குமாரசக்தியே போற்றி
    ஓம் அகந்தை அழிப்பவளே போற்றி
    ஓம் அசுர சம்காரியே போற்றி
    ஓம் உண்மை உணர்த்துபவளே போற்றி
    ஓம் உடும்ப மரத்தடி இருப்பவளே போற்றி
    ஓம் கஞ்சனூர் தேவியே போற்றி
    ஓம் குங்குமவல்லியே போற்றி
    ஓம் சண்முகியே போற்றி
    ஓம் சக்தி ஆயுததாரியே போற்றி
    ஓம் மயில்வாகினியே போற்றி
    ஓம் மகுடம் அணிந்தவளே போற்றி
    ஓம் வீரசக்தியே போற்றி
    ஓம் வசதி தருபவளே போற்றி
    ஓம் வைஷ்ணவியே போற்றி
    ஓம் விரிகண்ணாளே போற்றி
    ஓம் கருடவாகினியே போற்றி
    ஓம் கதாயுததாரியே போற்றி
    ஓம் சங்கேந்தியவளே போற்றி
    ஓம் சக்கரமும் ஏற்றவளே போற்றி
    ஓம் சுந்தரவதனியே போற்றி
    ஓம் சேந்தன்குடி தேவியே போற்றி
    ஓம் பெருமுலையாளே போற்றி
    ஓம் பேரழகியே போற்றி
    ஓம் மகாமாயையே போற்றி
    ஓம் மஞ்சள் நிற ஆடையளே போற்றி
    ஓம் வனமால்தாரியே போற்றி
    ஓம் விஷ்ணு அம்சதேவியே போற்றி
    ஓம் வாராகியே போற்றி
    ஓம் வழுவூர்த்தேவியே போற்றி
    ஓம் அஸ்திர வாராகியே போற்றி
    ஓம் ஆபரணதாரியே போற்றி
    ஓம் கதாயுததாரியே போற்றி
    ஓம் கபாலமாலை அணிந்தவளே போற்றி
    ஓம் கலப்பை ஏந்தியவளே போற்றி
    ஓம் கார்முகில் வண்ணியே போற்றி
    ஓம் சக்திசேனாபதியே போற்றி
    ஓம் ஸ்வப்ன வாராகியே போற்றி
    ஓம் துஷ்டநிக்ரஹியே போற்றி
    ஓம் தூப்ர வாராகியே போற்றி
    ஓம் பட்டு உடுத்தவளே போற்றி
    ஓம் பகை பொடிப்பவளே போற்றி
    ஓம் மகிஷ வாகினியே போற்றி
    ஓம் மகா வாராகியே போற்றி
    ஓம் இந்திராணியே போற்றி
    ஓம் இன்னல் களைபவளே போற்றி
    ஓம் அங்குசதாரியே போற்றி
    ஓம் ஆயிரம் கண்ணாளே போற்றி
    ஓம் கஜவாகினியே போற்றி
    ஓம் கதாயுதபாணியே போற்றி
    ஓம் கலக்கம் தீர்ப்பவளே போற்றி
    ஓம் கல்பமரத்தடியில் இருப்பவளே போற்றி
    ஓம் தயாபரியே போற்றி
    ஓம் தருமபுரத்தேவியே போற்றி
    ஓம் யமபயநாசினியே போற்றி
    ஓம் யானைக்கொடியுடையவளே போற்றி
    ஓம் சாமுண்டீஸ்வரியே போற்றி
    ஓம் சண்டனை அழித்தவளே போற்றி
    ஓம் ஆந்தை வாகினியே போற்றி
    ஓம் அஷ்டயோகினி சூழ்ந்தவளே போற்றி
    ஓம் அதிகந்தரியே போற்றி
    ஓம் ஆடியருள்பவளே போற்றி
    ஓம் ஊர்த்துவகேசியே போற்றி
    ஓம் உத்திரமாயூர தேவியே போற்றி
    ஓம் கர்ஜிப்பவளே போற்றி
    ஓம் கனல் ஏந்தியவளே போற்றி
    ஓம் பத்மாக்ஷியே போற்றி
    ஓம் பிரளயரூபியே போற்றி
    ஓம் வாருணி சாமுண்டியே போற்றி
    ஓம் வடவிருஷம் அமர்ந்தவளே போற்றி
    ஓம் ரக்த சாமுண்டியே போற்றி
    ஓம் ராட்சஷ நிக்ரஹியே போற்றி
    ஓம் எழுபெருந்தேவியரே போற்றி
    ஓம் எளியோரைக் காப்போரே போற்றி
    ஓம் சிவாலயத்தேவியரே போற்றி
    ஓம் சீக்கிரமே அருள்பவரே போற்றி
    ஓம் வடதிசை நோக்குபவரே போற்றி
    ஓம் வரம்யாவும் அருள்பவரே போற்றி போற்றி
    “யட்சிணி தேவதை வசிய மந்திரம்” மிகவும் பிரபலமானது. நாம் விரும்பும் பல விடயங்களை வழங்க வல்லது. இந்த யட்சிணி தேவதை வசிய மந்திரம் உபாசனை முறைகளை தெரிந்து கொள்வோம்.
    யட்சிணி மந்திரத்தை உபாசனை செய்வதற்கு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலில் சொந்த வீடு உள்ளவர்கள் அவர்கள் வீட்டின் பூஜையறையில் இந்த மந்திர உபாசனை செய்ய வேண்டும். வாடகை வீட்டிலிருப்பவர்கள் யட்சணி உபாசனையில் ஈடுபட்டு அதில் சித்தி ஏற்பட்டால், மந்திர சித்தியின் பாதி சக்தி அந்த நிலம் அல்லது வீட்டின் உரிமையாளருக்கு சென்று விடும். உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நீங்கள் யட்சிணி மந்திர உபாசனை செய்வதை பற்றியோ அல்லது அந்த மந்திரத்தையோ சொல்லக்கூடாது. இந்த உபாசனை செய்யும் காலத்தில் போதை வஸ்துக்கள், பெண்கள் தொடர்பு, மாமிச உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்ல பலனை தரும். இம்மந்திரத்தை உங்கள் பூஜையறையில் உபாசிக்கும் போது இறந்து போன உங்கள் முன்னோர்களின் எந்த ஒரு புகைப்படங்களும் இருக்க கூடாது.

    யட்சிணி மந்திரம் – காலை

    “ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா
    வா ஐயும் க்லீம் சிவசிவ மோகினிநசி நசி மசி மசிசுவாகா“

    யட்சிணி மந்திரம் – மாலை

    ”ஓம் ஸ்ரீம் க்லீம் சர்வயட்சிணி ஆகர்சணி சௌம் க்லீம் ஓம்
    மோகினியட்சணி யஷ குல நாயகி மமவசம் குருகுரு சுவாகா

    யட்சிணி உபாசனையை ஒரு முழு பௌர்ணமி தினத்தன்றே தொடங்க வேண்டும். அன்று அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, உங்கள் குலதெய்வத்தை வணங்க வேண்டும். பின்னர் உங்கள் பூஜையறையில் நெய்தீபங்கள் ஏற்றி, பழங்கள், பூக்கள் மற்றும் ஏதேனும் ஒரு உணவு பண்டத்தை படையல் வைத்து, பலா மரம் அல்லது வில்வ மர பீடத்தில் ஒரு வெள்ளை துணி பரப்பி, அதில் கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில் இம்மந்திரத்தை 1008 எண்ணிக்கையில் உரு ஜெபிக்க வேண்டும். மாலை வேளையில் மேற்சொன்ன முறையில் மேற்கு திசையை நோக்கி அமர்ந்தவாறு மந்திர உரு ஜெபிக்க வேண்டும்.

    குழந்தைகள் கல்வியில் பிரச்சினையே ஞாபக சக்தியின்மைதான். இதற்குப் பலவகைப் பயிற்சிகள் இருந்தாலும், இறையுணர்வும் மிகவும் முக்கியம். ஞாபகசக்தி அதிகமாக சரஸ்வதி துதி மந்திரத்தைப் படிக்க வேண்டும்.
    ஸ்ரீ வித்யா ரூபிணி சரஸ்வதி!
    சகலகலாவல்லி சாரபிம்பாதரி!
    சாரதாதேவி சாஸ்திரவல்லி!
    வீணா புஸ்தகராணி வாணி!
    கமலபாணி வாக்தேவி வரநாயகி!
    புஸ்தகஹஸ்தே நமோஸ்துதே!

    பொருள்: கல்வி என்ற செல்வத்தின் வடிவமான சரஸ்வதியே! சகல கலைகளுக்கும் தலைவியே! பால் போன்ற வெண்ணிற ஆடை அணிந்த மாசற்றவளே! 'சாரதை' என்னும் வீணையை ஏந்தியவளே! சாஸ்திரங்களுக்கு அரசியே! இசைக்கும், இனிய நூல்களுக்கும், பாட்டுக்கும் தலைவியே! வெள்ளைத் தாமரையில் அமர்ந்தவளே! நல்ல சொற்களுக்குரியவளே! விரும்பிய வரங்களைக் கொடுப்பவளே! புத்தகத்தைக் கையில் உடையவளே, நல்லறிவு தருபவளே! உன்னை வணங்கி போற்றுகின்றேன்.
    ×