என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன்.
    1. ஓம் அனுமனே போற்றி
    2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
    3. ஓம் அறக்காவலனே போற்றி
    4. ஓம் அவதார புருஷனே போற்றி
    5. ஓம் அறிஞனே போற்றி
    6. ஓம் அடக்கவடிவே போற்றி
    7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
    8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
    9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
    10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
    11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
    12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
    15. ஓம் இசை ஞானியே போற்றி
    16. ஓம் இறை வடிவே போற்றி
    17. ஓம் ஒப்பிலானே போற்றி
    18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
    19. ஓம் கதாயுதனே போற்றி
    20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
    21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
    22. ஓம் கர்மயோகியே போற்றி
    23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
    24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
    25. ஓம் கடல் தாவியவனே போற்றி
    26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
    27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
    28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
    29. ஓம் கூப்பிய கரனே போற்றி
    30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி
    31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
    32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
    33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
    34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
    35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
    36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
    37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
    38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
    39. ஓம் சூராதி சூரனே போற்றி
    40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
    41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
    42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
    43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
    44. ஓம் சோக நாசகனே போற்றி
    45. ஓம் தவயோகியே போற்றி
    46. ஓம் தத்துவஞானியே போற்றி
    47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
    48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
    49. ஓம் தீதழிப்பவனே போற்றி
    50. ஓம் தீயும் சுடானே போற்றி
    51. ஓம் நரஹரியானவனே போற்றி
    52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
    53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
    54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
    55. ஓம் பண்டிதனே போற்றி
    56. ஓம் பஞ்சமுகனே போற்றி
    57. ஓம் பக்தி வடிவனே போற்றி
    58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
    59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
    60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
    61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
    62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
    63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
    64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
    65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    66. ஓம் பீம சோதரனே போற்றி
    67. ஓம் புலனை வென்றவனே போற்றி
    68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
    69. ஓம் புண்ணியனே போற்றி
    70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
    71. ஓம் மதி மந்திரியே போற்றி
    72. ஓம் மனோவேகனே போற்றி
    73. ஓம் மாவீரனே போற்றி
    74. ஓம் மாருதியே போற்றி
    75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
    76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
    77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
    78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
    79. ஓம் ராமதாசனே போற்றி
    80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
    81. ஓம் ராமதூதனே போற்றி
    82. ஓம் ராம சோதரனே போற்றி
    83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
    84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
    85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
    86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
    87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
    88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
    89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
    90. ஓம் ருத்ர வடிவனே போற்றி
    91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
    92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
    93. ஓம் லங்கா தகனனே போற்றி
    94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
    95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
    96. ஓம் வாயுகுமாரனே போற்றி
    97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
    99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
    100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
    101. ஓம் விஸ்வரூபனே போற்றி
    102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
    103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
    104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
    105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
    106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
    107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
    108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
    உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
    உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

    "ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
    வராஹி மனோகராய தீமஹி
    தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்."

    "ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
    தண்ட ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ வராஹி ப்ரசோதயாத்."
    குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
    குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

    "ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
    லட்சுமி தராய தீமஹி
    தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்

    ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே
    சக்ர ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்."
    சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை இங்கே பார்க்கலாம்.
    சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

    "ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
    மஹாவீராய தீமஹி
    தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்"

    "ஓம் சிகித்வஜாயை வித்மஹே
    வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ கவுமாரி ப்ரசோதயாத்."
    ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இவருக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பார்க்கலாம்.
    ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ‪‎சுக்கிரனின்‬ கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சி விளங்குகிறாள்.

    "ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
    டங்கேஷாய தீமஹி
    தந்நோ ருருபைரவ ப்ரசோதயாத்."

    "ஓம் வருஷத் வஜாய வித்மஹே
    ம்ருக ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ ரவுத்ரி ப்ரசோதயாத்."
    தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அரிய மாற்றங்கள் நிகழும்.
    தீபம் முன்னாடி அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நமது அனைத்து பிரச்சினைகளும் தீர்வதோடு, தோஷங்களும் நிவர்த்தி ஆகும். இதேபோல் மகா லட்சுமி அருள் கிடைக்க வெற்றிலை தீபம் ஏற்றுவது பலன் தரும்.

    தீப மந்திரம்

    ஸோயம் பாஸ்கர வித்யஸ்த
    கிரணோத்கர பாஸ்வா
    தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம்
    சுப்ரபாதம் குருஷ்வமே.

    தீபம் ஏற்றிய பிறகு இந்த மந்திரத்தை 9 முறை கூறுவது நல்லது. அதே போல இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் நமது வாழ்வில் பல அரிய மாற்றங்கள் நிகழும். அதை நம்மால் மிக எளிதில் உணர முடியும். 
    இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து அனுமனை வழிபட்டால், கிரக பீடைகள், கெட்ட கனவுகள் ஆகிய பல்வேறு இன்னல்கள் நீங்கி இனிய நல்வாழ்வும், ஆயுள் ஆரோக்கியமும் இனிதே அமையும்.
    ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
    வாயு புத்ராய மகா பலாய
    சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
    மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
    கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
    சப்த சமுத்ர நிராலங்கிதாய,
    பிங்கள நயனாய அமித விக்ரமாய
    சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
    சஞ்சீவினி சமாநயன
    சமார்த்தாய அங்கதலட்சுமண
    கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
    தசகண்ட வித்வம்ஸனாய
    இராமேஷ்டாய பல்குணசகாய
    சீதா சகித இராமச்சந்திர
    ப்ராசதகாய -ட் ப்ரயோகாங்க
    பஞ்சமுக ஹனுமதே நம:

    - இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரத்தை தினமும் 8 முறை படித்து அனுமனை வழிபட்டால், கிரக பீடைகள், கெட்ட கனவுகள் ஆகிய பல்வேறு இன்னல்கள் நீங்கி இனிய நல்வாழ்வும், ஆயுள் ஆரோக்கியமும் இனிதே அமையும்.
    அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். நவகிரகங்களில் ‪‎குருவின்‬ கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள்.
    அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ‪‎குருவின்‬ கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

    "ஓம் ஞான தேவாய வித்மஹே
    வித்யா ராஜாய தீமஹி
    தந்நோ அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்."

    "ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
    கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ பிராம்ஹி ப்ரசோதயாத்."
    இந்தப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை பிறப்பதால் சுக்கிரன் சன்னிதியில் கீழ்கண்ட பாடலைப் பாடி வழிபட்டு வருவது நல்லது.
    தமிழ் ஆண்டாக இருந்தாலும், ஆங்கில ஆண்டாக இருந்தாலும் ஆண்டின் முதல் நாள் எந்தக் கிழமையில் பிறக்கின்றதோ, அந்தக் கிழமைக்குரிய கிரகத்தின் சன்னிதியில் பாடல் பாடி வழிபட்டால், ஆண்டு முழுவதும் வேண்டிய நற்பலன் கிடைக்கும். அந்த அடிப்படையில் இந்தப் புத்தாண்டு வெள்ளிக்கிழமை பிறப்பதால் சுக்கிரன் சன்னிதியில் கீழ்கண்ட பாடலைப் பாடி வழிபட்டு வருவது நல்லது.

    அள்ளிக் கொடுத்து ஆதரிக்கின்ற
    வெள்ளிச் சுக்ர வேந்தே சரணம்!
    மலர் வெண்தாமரை வைரமாம் ரத்னம்
    நிலத்தில் தந்தால் நின்னருள் கிட்டும்!
    மொச்சை தான்யம் முகமலர்ந் தளித்தால்
    இச்சைகள் அனைத்தும் இனிதே தீர்ப்பாய்!
    திருமண யோகம் சிறப்புடன் வழங்கும்
    அருமைச் சுக்ரா அழைத்தோம் வருக!
    மீன ராசியில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். துன்பங்கள் நீங்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்.
    மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். துன்பங்கள் நீங்கும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறுவீர்கள்.

    ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வாருங்கள். அருகில் உள்ள சிவாலயம் சென்று, சிவனாருக்கு வில்வார்ச்சனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதெல்லாம் தந்தருள்வார் ஈசன். 
    ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.
    ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி. எல்லா யோகிகளுக்கும் யோக முதிர்ச்சியின் போது அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள் என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன

    1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்

    ஓம் ஐம் க்லீம் சௌம்

    இதில் சௌம் என்பதை "சௌஹூம்" என்று சொல்லுவது சிறந்தது.

    ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்),வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

    க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீகரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.

    சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.

    இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அன்னை. இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு வாழ்ந்து ஆன்மீகத்திலும், வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம். 

    2. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம் :

    ஓம்
    ஐம் க்லீம் சௌம்
    சௌம் க்லீம் ஐம்

    3. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம் :

    ஓம்
    ஐம் க்லீம் சௌம்
    சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்

    முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

    வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம்மனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட, உறுதுணையாய் நிற்க வேண்டுகிறேன்.
    இறைவனை வாழ்த்திப் பாடினால், நாமும் நன்றாக வாழ்வோம், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக வாழ்வார்கள். எனவே நாம் வாழ்வாங்கு வாழ, வெற்றிகளைக் குவிக்க சிவன் சேவடியைப் போற்றி வணங்க வேண்டுமென்று மணிவாசகப் பெருமான் எடுத்துரைக்கிறார்.
    “திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவன் சன்னிதியில் திருவாசகம் பாடினால், அவர் தரிசனம் நமக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் கரிசனத்தோடு வந்து காட்சிகொடுத்து அருள் வழங்குவார் என்பது நம்பிக்கை.

    ‘நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

    இமைப்பொழுதும் என்நெஞ்சில்

    நீங்காதான் தாள் வாழ்க!

    கோகழி ஆண்ட குறுமனிதன் தாள் வாழ்க!

    ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!’

    என்று இறைவனை வாழ்த்திப் பாடினால், நாமும் நன்றாக வாழ்வோம், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக வாழ்வார்கள். எனவே நாம் வாழ்வாங்கு வாழ, வெற்றிகளைக் குவிக்க சிவன் சேவடியைப் போற்றி வணங்க வேண்டுமென்று மணிவாசகப் பெருமான் எடுத்துரைக்கிறார். ஆனி உத்திரத்தன்று வழிபட்டால் தேனினும் இனிய வாழ்க்கை அமையும்.
    ×