என் மலர்
இஸ்லாம்
ஒரு முஸ்லிம் இளைஞன் தன் நற்குணத்தால், பிறருக்கு உதவும் குணத்தால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பான். பலவிதமான மனிதர்கள் வாழும் இந்தப் பன்மைச் சமூகத்தில் ஒரு முஸ்லிம் இளைஞன் தனித்து மிளிர வேண்டும்.
மனித வாழ்வை மூன்று கால கட்டங்களாகப் பிரிக்கலாம். குழந்தைப் பருவமும் முதுமையும் இரண்டு கட்டங்கள். இளமைப் பருவம்தான் அதில் முக்கியமான மூன்றாவது கட்டம். இளைஞர்களில் அனேகமானோர் இதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முற்படுவதில்லை.
இளமையின் முக்கியத்துவத்தைக் குறித்து இளமையிலேயே அறியாமல் இருப்பதுதான் தோல்வியின் நுழைவாயிலாக இருக்கிறது.
ஒரு சமூகத்தின் அல்லது ஒரு தேசத்தின் எழுச்சி அந்த தேசத்தின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்கள் முன்னேற்றம் சமூகத்திலும் தேசத்திலும் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துமோ அவ்வாறே இளைஞர்களின் வீழ்ச்சியும் சமூகத்திலும் தேசத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இளமைக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்று வேறு எந்த மதமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நாளை மறுமையில் ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்காதவரை ஓர் அடியானுடைய பாதம் நின்ற இடத்தை விட்டு ஓரடிகூட நகராது. அந்த ஐந்து கேள்விகளில் ஒன்று தான், “உன் இளமைப் பருவத்தை எவ்வாறு கழித்தாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
மற்றொருமுறை நபி (ஸல்) அவர்கள், “ஐந்து வருவதற்கு முன் ஐந்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, “முதுமை வருமுன் இளமையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டார்கள்.
‘இளமையைக் குறித்து மறுமையில் அல்லாஹ்வின் கேள்விக்கு பதிலளிக்காமல் பாதங்கள் நகராது’ என்று சொன்னால் அந்த இளமையின் மகத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாம் எனும் சூரியன் இந்த பூமிப்பந்தில் உதிக்கத் தொடங்கிய நாள்முதல் இந்த மார்க்கத்திற்காக இளைஞர்கள் செய்த தியாகங்கள் சாதாரணமானதல்ல.
நாயகம் (ஸல்) அவர்களுடன் இளைஞர்கள் சமூகப் பிரச்சினைகளில் பங்கு பெற்றுள்ளனர். போரில், ஆலோசனை சபையில் என்று இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தானதாகவே இருந்துள்ளது.
இஸ்லாமிய உலகிலாகட்டும் அல்லது இன்றைய நவீன உலகிலாகட்டும் வெற்றியாளர்களின் பட்டியலை எடுத்தால் இளைஞர்கள் இல்லாமல் எதுவும் இல்லை.
திருக்குர்ஆன் கூறும் வரலாறுகளில்கூட மாபெரும் புரட்சியாளர்களாக இளைஞர்கள்தான் முன்னிறுத்தப்படுகின்றனர். பெரும் புரட்சிகள் செய்த நபிமார்களில் அனேகமானவர்கள் இளமைத் துடிப்புடன் இருந்தபோதே அதனைச் செய்துள்ளனர் என்று திருக்குர்ஆன் சிறப்பாகக் கூறுகின்றது.
கல்வியில் இளைஞர்கள்
உயிரற்றுக் கிடந்த கல்விக்கு இஸ்லாம்தான் புத்துயிர் ஊட்டியது. ஆகவேதான் இஸ்லாத்தின் முதல் கட்டளையே “ஓதுவீராக” என்று தொடங்குகிறது. இளமைப் பருவத்தில் கல்வி கற்பதை இஸ்லாம் வலியுறுத்துவதுடன், தாமும் கற்று அதை பிறருக்கும் கற்றுக்கொடுக்குமாறு ஊக்கப்படுத்துகிறது.
நபி (ஸல்) கூறினார்கள்: “கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் கடமை”. மற்றொரு முறை, “எவரொருவர் கல்வியைத் தேடி பயணிக்கிறாரோ அவருடைய சுவனப் பாதையை இறைவன் எளிதாக்குகிறான்” என்று நற்செய்தி கூறியுள்ளார்கள்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய சமூகமோ கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்பது வேதனையளிக்கும் செய்தி.
நமது நபித்தோழர்களும் முன்னோர்களும் கல்வியில் சிறந்தவர்களாகவும் அதைத் தேடி வெகு தூரம் பயணம் செய்யக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) இப்னு உமர் (ரலி) ஆகியோர் இளைஞர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் நம்மைப் போன்ற சாதாரண இளைஞர்களாக இருக்கவில்லை. குர்ஆன் துறையில் சிறந்த அறிஞராக இப்னு அப்பாஸும், ஹதீஸ் துறையில் சிறந்த அறிஞராக இப்னு உமரும் இருந்தார்கள்.
அதேபோன்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் 18 நாட்களில் யூத மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். முஆத் பின் ஜபல் (ரலி) 33 வயதில் ஏமன் நாட்டுக்குத் தூதுவராகவும், ஹலால்-ஹராமை பிரித்து விளக்கக் கூடியவராக இருந்தார்.
இன்றைய இளைஞர்கள்
அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்”. (திருக்குர்ஆன் 24:30)
இறைக்கட்டளை இவ்வாறிருக்க இன்றைய இளைஞர்களின் செயல்பாடோ நேர்மாறாக உள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து அரட்டையடிப்பதையும் பெண்களை கேலி கிண்டல் செய்வதையும் ஒரு பகட்டாகவும், பொழுதுபோக்காகவும் நினைக்கிறார்கள். இவ்வாறு செய்யும் கேலியும் கிண்டலும்தான் இறுதியில் பாலியல் வன்கொடுமையில் சென்று முடிகிறது.
பாதையில் ஒரு பெண் செல்கின்றார் என்றால், அவர் யாரோ ஒருவருடைய தாய்.. யாரோ ஒருவருடைய மகள்.. யாரோ ஒருவருடைய சகோதரி.. என்ற சிந்தனை வரவேண்டும். இந்த சிந்தனை வந்துவிட்டால் பெண்களை யார்தான் மோசமாகப் பார்ப்பார்?.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற அடிப்படையில் நமது தாயையும், நமது சகோதரியையும், நமது மனைவியையும் யாரோ ஒருவர் இப்படித்தானே இச்சையுடன் பார்ப்பார் என்று எண்ணம் எழத்தொடங்கிவிட்டாலே போதும், கண்ணியம் காப்பாற்றப்படும். முஸ்லிம் இளைஞர்களின் செயல்பாடுகள் அப்படித்தான் மாறவேண்டும்.
ஒரு முஸ்லிம் இளைஞன் தன் நற்குணத்தால், பிறருக்கு உதவும் குணத்தால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பான். பலவிதமான மனிதர்கள் வாழும் இந்தப் பன்மைச் சமூகத்தில் ஒரு முஸ்லிம் இளைஞன் தனித்து மிளிர வேண்டும்.
ஏரியில் இலை உதிர்ந்தால் தண்ணீரில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஏனெனில், சருகுகளால் சலனங்களை ஏற்படுத்த முடியாது. ஆனால், அதே ஏரியில் ஒரு கல் விழுந்தால்... ஏற்படும் அலைகளும், அதிர்வுகளும் ஏராளம் இல்லையா...? இந்த சமூகத்தில் நற்செயல்கள் மூலம் சலனத்தை ஏற்படுத்துபவனே உண்மையான முன்மாதிரி முஸ்லிம் இளைஞன். சமூகத்திற்குத் தேவை இதுபோன்ற இஸ்லாமிய இளைஞர்களே!
முஹம்மத் உக்காஷா, திருச்சி.
இளமையின் முக்கியத்துவத்தைக் குறித்து இளமையிலேயே அறியாமல் இருப்பதுதான் தோல்வியின் நுழைவாயிலாக இருக்கிறது.
ஒரு சமூகத்தின் அல்லது ஒரு தேசத்தின் எழுச்சி அந்த தேசத்தின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்கள் முன்னேற்றம் சமூகத்திலும் தேசத்திலும் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துமோ அவ்வாறே இளைஞர்களின் வீழ்ச்சியும் சமூகத்திலும் தேசத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இளமைக்கு இஸ்லாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்று வேறு எந்த மதமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நாளை மறுமையில் ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்காதவரை ஓர் அடியானுடைய பாதம் நின்ற இடத்தை விட்டு ஓரடிகூட நகராது. அந்த ஐந்து கேள்விகளில் ஒன்று தான், “உன் இளமைப் பருவத்தை எவ்வாறு கழித்தாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
மற்றொருமுறை நபி (ஸல்) அவர்கள், “ஐந்து வருவதற்கு முன் ஐந்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, “முதுமை வருமுன் இளமையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டார்கள்.
‘இளமையைக் குறித்து மறுமையில் அல்லாஹ்வின் கேள்விக்கு பதிலளிக்காமல் பாதங்கள் நகராது’ என்று சொன்னால் அந்த இளமையின் மகத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இஸ்லாம் எனும் சூரியன் இந்த பூமிப்பந்தில் உதிக்கத் தொடங்கிய நாள்முதல் இந்த மார்க்கத்திற்காக இளைஞர்கள் செய்த தியாகங்கள் சாதாரணமானதல்ல.
நாயகம் (ஸல்) அவர்களுடன் இளைஞர்கள் சமூகப் பிரச்சினைகளில் பங்கு பெற்றுள்ளனர். போரில், ஆலோசனை சபையில் என்று இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தானதாகவே இருந்துள்ளது.
இஸ்லாமிய உலகிலாகட்டும் அல்லது இன்றைய நவீன உலகிலாகட்டும் வெற்றியாளர்களின் பட்டியலை எடுத்தால் இளைஞர்கள் இல்லாமல் எதுவும் இல்லை.
திருக்குர்ஆன் கூறும் வரலாறுகளில்கூட மாபெரும் புரட்சியாளர்களாக இளைஞர்கள்தான் முன்னிறுத்தப்படுகின்றனர். பெரும் புரட்சிகள் செய்த நபிமார்களில் அனேகமானவர்கள் இளமைத் துடிப்புடன் இருந்தபோதே அதனைச் செய்துள்ளனர் என்று திருக்குர்ஆன் சிறப்பாகக் கூறுகின்றது.
கல்வியில் இளைஞர்கள்
உயிரற்றுக் கிடந்த கல்விக்கு இஸ்லாம்தான் புத்துயிர் ஊட்டியது. ஆகவேதான் இஸ்லாத்தின் முதல் கட்டளையே “ஓதுவீராக” என்று தொடங்குகிறது. இளமைப் பருவத்தில் கல்வி கற்பதை இஸ்லாம் வலியுறுத்துவதுடன், தாமும் கற்று அதை பிறருக்கும் கற்றுக்கொடுக்குமாறு ஊக்கப்படுத்துகிறது.
நபி (ஸல்) கூறினார்கள்: “கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் கடமை”. மற்றொரு முறை, “எவரொருவர் கல்வியைத் தேடி பயணிக்கிறாரோ அவருடைய சுவனப் பாதையை இறைவன் எளிதாக்குகிறான்” என்று நற்செய்தி கூறியுள்ளார்கள்.
ஆனால் இன்றைய இஸ்லாமிய சமூகமோ கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்பது வேதனையளிக்கும் செய்தி.
நமது நபித்தோழர்களும் முன்னோர்களும் கல்வியில் சிறந்தவர்களாகவும் அதைத் தேடி வெகு தூரம் பயணம் செய்யக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) இப்னு உமர் (ரலி) ஆகியோர் இளைஞர்களாகத்தான் இருந்தார்கள். ஆனால் நம்மைப் போன்ற சாதாரண இளைஞர்களாக இருக்கவில்லை. குர்ஆன் துறையில் சிறந்த அறிஞராக இப்னு அப்பாஸும், ஹதீஸ் துறையில் சிறந்த அறிஞராக இப்னு உமரும் இருந்தார்கள்.
அதேபோன்று ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் 18 நாட்களில் யூத மொழியை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். முஆத் பின் ஜபல் (ரலி) 33 வயதில் ஏமன் நாட்டுக்குத் தூதுவராகவும், ஹலால்-ஹராமை பிரித்து விளக்கக் கூடியவராக இருந்தார்.
இன்றைய இளைஞர்கள்
அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும்”. (திருக்குர்ஆன் 24:30)
இறைக்கட்டளை இவ்வாறிருக்க இன்றைய இளைஞர்களின் செயல்பாடோ நேர்மாறாக உள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து அரட்டையடிப்பதையும் பெண்களை கேலி கிண்டல் செய்வதையும் ஒரு பகட்டாகவும், பொழுதுபோக்காகவும் நினைக்கிறார்கள். இவ்வாறு செய்யும் கேலியும் கிண்டலும்தான் இறுதியில் பாலியல் வன்கொடுமையில் சென்று முடிகிறது.
பாதையில் ஒரு பெண் செல்கின்றார் என்றால், அவர் யாரோ ஒருவருடைய தாய்.. யாரோ ஒருவருடைய மகள்.. யாரோ ஒருவருடைய சகோதரி.. என்ற சிந்தனை வரவேண்டும். இந்த சிந்தனை வந்துவிட்டால் பெண்களை யார்தான் மோசமாகப் பார்ப்பார்?.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற அடிப்படையில் நமது தாயையும், நமது சகோதரியையும், நமது மனைவியையும் யாரோ ஒருவர் இப்படித்தானே இச்சையுடன் பார்ப்பார் என்று எண்ணம் எழத்தொடங்கிவிட்டாலே போதும், கண்ணியம் காப்பாற்றப்படும். முஸ்லிம் இளைஞர்களின் செயல்பாடுகள் அப்படித்தான் மாறவேண்டும்.
ஒரு முஸ்லிம் இளைஞன் தன் நற்குணத்தால், பிறருக்கு உதவும் குணத்தால் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பான். பலவிதமான மனிதர்கள் வாழும் இந்தப் பன்மைச் சமூகத்தில் ஒரு முஸ்லிம் இளைஞன் தனித்து மிளிர வேண்டும்.
ஏரியில் இலை உதிர்ந்தால் தண்ணீரில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஏனெனில், சருகுகளால் சலனங்களை ஏற்படுத்த முடியாது. ஆனால், அதே ஏரியில் ஒரு கல் விழுந்தால்... ஏற்படும் அலைகளும், அதிர்வுகளும் ஏராளம் இல்லையா...? இந்த சமூகத்தில் நற்செயல்கள் மூலம் சலனத்தை ஏற்படுத்துபவனே உண்மையான முன்மாதிரி முஸ்லிம் இளைஞன். சமூகத்திற்குத் தேவை இதுபோன்ற இஸ்லாமிய இளைஞர்களே!
முஹம்மத் உக்காஷா, திருச்சி.
‘ஒருவருக்கு ஒரு நேரத்தொழுகை தவறிவிடுவது அவருக்கு அவரது குடும்பம், அவரது செல்வம் யாவும் பறிக்கப்பட்டது போன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: இப்னுஹிப்பான்)
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 -க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘உயர்ந்த வணக்கம் தொழுகை’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.
தொழுகை என்பது உடல் ஆரோக்கியத்தின் செயல்வடிவமாக, உடற்பயிற்சியின் களமாக, உடற் கூறுகளை ஒழுங்குபடுத்தும் சாதனமாக அமைந்துள்ளது.
தினமும் ஐந்து முறை இறைவனைத் தொழுது வருவது பருவ வயதை அடைந்த, புத்திசுவாதீனமுள்ள, முஸ்லிமான ஆண்-பெண் இருபாலரின் மீதும் கடமையாகும். இந்தக் கடமையிலிருந்து நிரந்தரமாக விடுபட ஒன்று மரணமாக அமையும். பெண்களுக்கு தற்காலிகமாக விடுபட மாதவிடாயாக அமையும்.
‘உமக்கு மரணம் வரும் வரை உமது இறைவனை (தொழுது) வணங்குவீராக’ என்று திருக்குர்ஆன் (15:99) குறிப்பிடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது மூன்று கட்டளைகள் வழங்கப்பட்டன. அவை: 1) ஐந்து வேளைத் தொழுகைகள், 2) திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமான ‘பகரா’வின் இறுதி மூன்று வசனங்கள், 3) அவர்களின் சமுதாயத்தாரில் இறைவனுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன’ என்று நபித்தோழர் இப்னுமஸ்ஊத் (ரலி), அறிவித்த தகவல் முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ளது.
தொழுகை எனும் வார்த்தை குறித்து திருக்குர்ஆன் கிட்டத்தட்ட 85 இடங்களில் பேசுகிறது. ஐந்து வேளைத் தொழுகை நிறைவேற்றுவது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘(நபியே), சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து, இரவின் இருள் சூழும் வரை (ளுஹர், அஸர், மக்ரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக; இன்னும் ‘பஜ்ர்’ எனும் அதிகாலைத் தொழுகையையும் நிலைநிறுத்துவீராக; நிச்சயமாக பஜ்ர் தொழுகை சான்று கூறுவதாக இருக்கிறது’. (திருக்குர்ஆன் 17:78)
‘பஜ்ர்’ என்பது அதிகாலைத்தொழுகையின் பெயர். ‘ளுஹர்’ என்பது நண்பகல் தொழுகையின் பெயர். ‘அஸர்’ என்பது மாலைநேரத் தொழுகையின் பெயர். ‘மக்ரிப்’ என்பது சூரியன் அஸ்தமிக்கும் நேரத் தொழுகையின் பெயர். ‘இஷா’ என்பது இரவு நேரத் தொழுகையின் பெயர்.
அந்தந்த வேளைகளில் அந்தந்த தொழுகையை நிறைவேற்றுவது இறை நம்பிக்கையாளர்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது. இதை இறைவன் இவ்வாறு உறுதிப்படுத்துகிறான்:
‘நிச்சயமாக தொழுகை நம்பிக்கை கொண்டோர் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது’. (திருக்குர்ஆன் 4:103)
நபிமார்கள், இறைநேசர்கள் அனைவரும் இறைவனிடம் சிறந்த அந்தஸ்தையும், இறைநெருக்கத்தையும் பெற்றது தொழுகையைக் கொண்டுதானே தவிர வேறில்லை.
நபி இப்ராகீம் (அலை) அவர்களின் அழகான வேண்டுதலை இறைவன் சிறப்பித்து, பாராட்டி திருக்குர்ஆனில் இவ்வாறு பேசுகின்றான்: ‘என் இறைவா, என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக. எங்கள் இறைவா, எனது பிரார்த்தனையை ஏற்பாயாக’. (திருக்குர்ஆன் 14:40)
நபி இஸ்மாயீல் (அலை): ‘இவ்வேதத்தில் இஸ்மாயீலையும் நினைவூட்டுவீராக. அவர் வாக்கை நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார். அவர் தமது குடும்பத்தாருக்கு தொழுகையையும், ஸகாத்தையும் ஏவுபவராக இருந்தார். தமது இறைவனால் திருப்தி கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்’. (திருக்குர்ஆன் 19:54,55)
நபி ஈஸா (அலை): ‘நிச்சயமாக நான் இறைவனின் அடியானாக உள்ளேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்துள்ளான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியுள்ளான். இன்னும், நான் எங்கிருந்தாலும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு கட்டளையிட்டிருக்கின்றான்; இன்னும் என் தாயாருக்கு நன்றி செய்பவனாக என்னை (ஏவியிருக்கின்றான்) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை’. (திருக்குர்ஆன் 19:30-32)
அனைத்து நபிமார்களும் தொழுகையை சிறந்த வணக்கமாக ஏற்று, இறைவனை தொழுது வந்த செய்தியை இதன்மூலம் அறியலாம். இத்தகைய உன்னதமான தொழுகையை மறதியில் ஆழ்த்தி, அதை நிறைவேற்ற இடையூறாக இருந்த தமது ஆயிரம் குதிரைகளை நபி சுலைமான் (அலை) அவர்கள் அறுத்து குர்பானி கொடுத்தார்கள். அதற்குப் பதிலாக அவருக்கு இறைவன், குதிரையை விட வேகமாகச் செல்லும் காற்றை வசப்படுத்திக் கொடுத்தான்.
தொழுகையை வழமையாக தொழுது வருவோருக்கு இறைவன் அனைத்தையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுப்பான். மேலும் அவரின் வாழ்வாதாரத்தையும் வளமாக்கி வைப்பான். அந்த அளவுக்கு தொழுகை என்பது ஏற்றமான கடமை.
‘நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளை உரியவரிடம் எவர் திருப்பிக் கொடுக்கவில்லையோ, அவருக்கு பரிபூரண இறைநம்பிக்கை கிடையாது. எவருக்கு (உளூ) அங்க சுத்தம் இல்லையோ, அவருக்கு தொழுகை இல்லை. எவருக்கு தொழுகை இல்லையோ, அவருக்கு மார்க்கப்பற்றே கிடையாது. மார்க்கத்தில் தொழுகையின் அந்தஸ்து உடலில் தலையின் அந்தஸ்தைப் போன்றதாகும். (தலையின்றி மனிதன் உயிர் வாழ இயலாதது போல் தொழுகையின்றி மார்க்கம் எஞ்சி இருக்காது) என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: தப்ரானீ)
தொழுகை என்பது இஸ்லாமிய அடிப்படைகளில் இரண்டாவது இடத்தை பெறுகிறது. அதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:
‘இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்) மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1) இறைவன் ஒருவன் என ஏற்பது, 2) தொழுகையைக் கடைப்பிடிப்பது, 3) ஸகாத் வழங்குவது, 4) ரமலான் மாதம் நோன்பு நோற்பது, 5) ஹஜ் செய்வது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)
‘மறுமைநாளில் முதன்முதலாக தொழுகையைப் பற்றிதான் விசாரணை செய்யப்படும். அது சரியாக இருந்தால், மற்ற செயல்களும் சரியாக இருக்கும். அது சீர்குலைந்தால், மற்ற செயல்களும் சீர்குலைந்து இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் குர்த் (ரலி), நூல்: தப்ரானீ).
தொழுகை என்பது மனிதன், இறைவனிடம் ரகசியமாக உரையாடும் நிகழ்வாகும்.
‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும், அவர் தொழும் திசைக்கும் இடையே இறைவன் இருக்கிறான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
தொழுகையை நிறைவேற்றுவதால் அதிகமான நன்மைகள் கிடைக்கின்றன. அது உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக இருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கிறது. தொழுகையை நிறைவேற்றுவதினால் இருஉலக நலன்கள், உடல் நலன்கள் யாவும் சுலபமாக கிடைத்து விடுகிறது. தொழுகை உலக துன்பங்களிலிருந்தும், கவலைகளிலிருந்தும் விடுபடும் களமாகும். அது இறைநேசத்தையும், இறை நெருக்கத்தையும் அதிகப்படுத்தும்.
தொழுகை என்பது இறைவனின் கட்டளைகளை செயல்படுத்துவதின் மீது பொறுமையாக இருக்கிறோமோ? என்று சோதிக்கப்படும் ஒரு களம். மானக்கேடான காரியங்களிலிருந்து தொழுகையாளியை தடுக்கிறது. சிறு பாவங்களுக்கு பரிகாரமாகவும் அமைகிறது..
‘தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்’. (திருக்குர்ஆன் 29:45)
‘ஐவேளைத் தொழுகைகள் அவற்றுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
தொழுகையை விடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. நின்று தொழமுடியாவிட்டால், அமர்ந்தும், அமர்ந்தும் முடியாவிட்டால், படுத்தும், அவ்வாறு முடியாவிட்டால், சமிக்ஞையாகவும் நிறைவேற்ற வேண்டும். தொழுகையை விட்டவன் மீது இறைவனின் கோபம் உண்டாகும்.
‘தொழுகையை விட்ட மனிதன், தன் மீது இறைவன் கடுங்கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவன் இறைவனை சந்திப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: தப்ரானீ)
‘ஒருவருக்கு ஒரு நேரத்தொழுகை தவறிவிடுவது அவருக்கு அவரது குடும்பம், அவரது செல்வம் யாவும் பறிக்கப்பட்டது போன்றாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: இப்னுஹிப்பான்)
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்த நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் தொடக்கமாக கொடி ஊர்வலம் நடந்தது. நாகை மீராப்பள்ளி ரதத்தடியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடிகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மொத்தம் 5 கொடிகள் பெரிய ரதம், சின்ன ரதம், டீஸ்டா கப்பல், செட்டி பல்லக்கு, கப்பல் ஆகியவற்றில் எடுத்து செல்லப்பட்டன. ஊர்வலத்தில் மினரா, சிறிய கப்பல், நகராமேடை, சாம்பிராணிசட்டி, பிறை, படகு போன்ற வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த ரதங்கள் அணி வகுத்து சென்றன.
நாகை புதுப்பள்ளிதெரு வழியாக யாஹுசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காய கடை தெரு, பெரியகடை தெரு, நீலா கீழவீதி, தெற்குவீதி, வடக்கு வீதி, தேரடி தெரு, புதுத்தெரு, சர்அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு, அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூரில் ஊர்வலம் நிறை வடைந்தது.
கொடிகள் வைக்கப்பட்டிருந்த ரதங்கள் நாகை வீதிகளில் ஊர்வலமாக வந்தபோது வீட்டு மாடிகளிலும், வீதிகளிலும் திரண்டிருந்த பொதுமக்கள் பூக்களை தூவி பிரார்த்தனை செய்தனர். குட்டிக்கப்பல் போன்ற ரதங்களை சிறுவர்கள் உற்சாகமாக இழுத்து சென்றனர். அலங்கார ரதங்களில் இருந்து எலுமிச்சை பழம், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஊர்வலம் நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசலை சென்றடைந்ததும், தர்காவின் 5 மினராக்களின் உச்சிக்கு நாகை முஸ்லிம் ஜமாத்தார்கள் கொடிகளை கொண்டு சென்றனர்.
இதையடுத்து தர்காவின் பரம்பரை கலிபா பாத்திஹா ஓதினார். அப்போது மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்த 5 மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. கொடியேற்றத்தை தர்காவை சுற்றி கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்து பிரார்த்தனை செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தர்காவின் தற்காலிக நிர்வாகிகள் அக்பர், அலாவுதீன் மற்றும் நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாபூத்து எனப்படும் சந்தனக்கூடு புறப்பட்டு மறுநாள் 5-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைகிறது. பின்னர் நாகூர் தர்காவில் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும். முன்னதாக வாண வேடிக்கை, பீர்வைக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கந்தூரி விழாவையொட்டி நாகூரில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
விழாவின் தொடக்கமாக கொடி ஊர்வலம் நடந்தது. நாகை மீராப்பள்ளி ரதத்தடியில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடிகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. மொத்தம் 5 கொடிகள் பெரிய ரதம், சின்ன ரதம், டீஸ்டா கப்பல், செட்டி பல்லக்கு, கப்பல் ஆகியவற்றில் எடுத்து செல்லப்பட்டன. ஊர்வலத்தில் மினரா, சிறிய கப்பல், நகராமேடை, சாம்பிராணிசட்டி, பிறை, படகு போன்ற வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த ரதங்கள் அணி வகுத்து சென்றன.
நாகை புதுப்பள்ளிதெரு வழியாக யாஹுசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காய கடை தெரு, பெரியகடை தெரு, நீலா கீழவீதி, தெற்குவீதி, வடக்கு வீதி, தேரடி தெரு, புதுத்தெரு, சர்அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு, அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூரில் ஊர்வலம் நிறை வடைந்தது.
கொடிகள் வைக்கப்பட்டிருந்த ரதங்கள் நாகை வீதிகளில் ஊர்வலமாக வந்தபோது வீட்டு மாடிகளிலும், வீதிகளிலும் திரண்டிருந்த பொதுமக்கள் பூக்களை தூவி பிரார்த்தனை செய்தனர். குட்டிக்கப்பல் போன்ற ரதங்களை சிறுவர்கள் உற்சாகமாக இழுத்து சென்றனர். அலங்கார ரதங்களில் இருந்து எலுமிச்சை பழம், இனிப்புகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஊர்வலம் நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசலை சென்றடைந்ததும், தர்காவின் 5 மினராக்களின் உச்சிக்கு நாகை முஸ்லிம் ஜமாத்தார்கள் கொடிகளை கொண்டு சென்றனர்.
இதையடுத்து தர்காவின் பரம்பரை கலிபா பாத்திஹா ஓதினார். அப்போது மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்த 5 மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. கொடியேற்றத்தை தர்காவை சுற்றி கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்து பிரார்த்தனை செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தர்காவின் தற்காலிக நிர்வாகிகள் அக்பர், அலாவுதீன் மற்றும் நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாகையில் உள்ள அபிராமி அம்மன் திருவாசலில் இருந்து இரவு 7 மணிக்கு தாபூத்து எனப்படும் சந்தனக்கூடு புறப்பட்டு மறுநாள் 5-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைகிறது. பின்னர் நாகூர் தர்காவில் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும். முன்னதாக வாண வேடிக்கை, பீர்வைக்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கந்தூரி விழாவையொட்டி நாகூரில் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
போரின் முடிவு தனக்கு சாதகமாக அமையும் என்றறிந்தும், போர்களை நிறுத்தி மக்கள் உள்ளங்களை வென்று அனைவரையும் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என்பதை வரலாறு பறைசாட்டிக்கொண்டிருக்கிறது.
நபிகளாரின் ஒவ்வொரு சொல்லும் செயலும், எல்லாம் வல்ல அல்லாஹ் காட்டிய வழியில், திருக்குர்ஆன் உரைத்த பாதையில் அமைந்திருந்தது.
இறைவனின் கட்டளைக்கு ஏற்ப அவர்களின் செயல்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் இருந்தன. ஒரு செயலில் இறங்கும் முன்பு அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அறிந்து அதை இறைக்கட்டளைக்கு ஏற்ப செயல்படுத்தினார்கள். அதனால் தான் அவர்களின் சில செயல்கள் வெற்றியை தராதது போல தோன்றினாலும், சில காலம் கழித்து மாபெரும் வெற்றியைத்தந்தது.
அதுகுறித்த சில நிகழ்வுகளை இங்கே காண்போம்.
ஹிஜ்ரி 6-ம் ஆண்டுகளில் மக்காவில் உள்ள கஆபாவை தரிசிக்க நபிகளாரும், அவரது தோழர்களும் புறப்பட்டனர். இவர்களை, ஹுதைய்பிய்யா என்ற இடத்தில் இறை மறுப்பாளர்கள் நிறுத்தினார்கள். மக்காவுக்குள் நுழைய அனுமதிக்க மறுத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் நபிகளாரின் கூட்டத்திற்கு பாதகமான பல அம்சங்கள் இருந்தன. இருந்தாலும் அதை நபிகளார் ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஹிஜ்ரி 8-ம் ஆண்டு. இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் மக்கா நோக்கி பயணமானார்கள். இடைப்பட்ட காலத்தில் மக்காவில் பலர் இஸ்லாத்தை ஏற்று கொள்கிறார்கள். எதிரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் மக்காவை நோக்கி புறப்பட்டவர்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. கத்தியின்றி, ரத்தமின்றி, போரின்றி மக்கா நகரம் மாநபியின் கைகளில் பரிசாய் விழுந்தது.
நபியவர்கள் முரண்பாடான ஒப்பந்தத்தை ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என அன்று எண்ணியவர்கள், இன்று நபியவர்களின் தொலைநோக்கு சிந்தனையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டார்கள்.
அல்லாஹ்வும் அதற்கான காரணத்தை திருக்குர்ஆனில் (48:25) இவ்வாறு சொல்கிறான்:
“அவர்கள்தாம் இறைவனை நிராகரித்தவர்களும், புனிதமிகு இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் உங்களைத் தடுத்தவர்களும், பலியிடப்படும் ஒட்டகங்களை அவற்றின் பலி இடத்தைச் சென்றடையாமல் தடுத்தவர்களும் ஆவர். உங்களுக்குத் தெரிந்திராத இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் (மக்காவில்) இல்லையென்றால் அறியாத நிலையில் அவர்களை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்; அதனால் உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் எனும் அபாயம் இல்லாதிருந்தால் (போர் நிறுத்தப்பட்டிருக்காது. அதே நேரத்தில்) அல்லாஹ் தான் நாடுபவர்களைத் தன்னுடைய கருணையினுள் நுழையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் (போர் நிறுத்தப்பட்டது). அந்த நம்பிக்கையாளர்கள் விலகியிருப்பார்களேயானால் (மக்காவாசிகளில்) எவர்கள் இறைநிராகரிப்பாளர்களாய் இருந்தார்களோ அவர்களுக்கு நாம் நிச்சயம் கடும் தண்டனை அளித்திருப்போம்”.
சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சோதனை. மக்கா வெற்றியின் போது அங்கு இருந்து ‘ஹவாஸன்’ என்ற கூட்டத்தினர் தாயிப் நகருக்கு சென்று விட்டனர். அவர்கள் அம்பெய்வதில் திறன் கொண்டவர்கள். அவர்கள் தாயிப் நகரத்தின் ‘தஹீப்’ என்ற கூட்டத்தினருடன் சேர்ந்து இஸ்லாத்திற்கு எதிராக பெரும் படையினைத்திரட்டி, “ஹுனைன்” என்ற இடத்தில் தங்கியிருந்தனர்.
இந்த செய்தி அண்ணல் எம்பெருமானாருக்கு அறிவிக்கப்பட்டது. சற்றும் தயங்கவில்லை நபிகள் நாயகம் (ஸல்). எதிரிகள் நம்மை தாக்குவதற்கு முன்பாகவே அவர்கள் இடத்திற்குச் சென்று நாம் அவர்களை தாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். எண்ணிக்கையில் அதிகம் இருந்த மக்காவாசிகளும் தங்களுக்கு எளிதில் வெற்றி கிடைத்துவிடும் என்று அல்லாஹ்வின் அருளை எண்ணாமல் புறப்பட்டனர்.
போர்க்களத்தை அடைந்த நபிகளாரின் படையினர் மீது, புதர்களிடையே பதுங்கி இருந்த எதிரிகள் சரமாரியாக அம்புகளை எய்தனர். இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து ஓடினர் மக்காவாசிகள்.
போர்க்கள நிலைமை எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்ற அபாயத்தை உணர்ந்த அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள், ஓடுகின்ற படையினரை நோக்கி உரத்தகுரலில்:
“மக்காவாசிகளே, நீங்கள் எங்கே விரண்டோடுகிறீர்கள்? உங்கள் வசம் இறைத்தூதர் நான் இருக்கையில், அல்லாஹ்வின் உதவியில் நீங்கள் ஏன் நம்பிக்கை இழந்தீர்கள்?. அல்லாஹ் வெற்றியை நமக்கு வாக்களித்திருக்கும் போது நாம் ஏன் பயப்பட வேண்டும். திரும்பி வாருங்கள் எதிரியின் இருப்பிடம் தெரிந்து விட்டது. இலக்கை நோக்கி நாமும் அம்பு எய்வோம்? எதிரிகளை வீழ்த்துவோம்” என்றார்கள்.
அண்ணலாரின் வீர உரையை செவிமடுத்த படையினர் புதிய உத்வேகத்துடன் திரும்பிவந்து போராடி எதிரிகளை வென்றார்கள்.
போரின் நிலவரம் மாறத் தொடங்கியதும், ஹவாஸன் கூட்டத்தினர் அருகில் உள்ள அடர்ந்த பாலைவனத்தில் சென்று ஒளிந்துகொண்டனர். தஹீப் கூட்டத்தார்கள் தங்கள் கோட்டைக்குள் சென்று பதுங்கி கொண்டார்கள்.
நபிகளார், யுத்தகளத்தில் எதிரிகள் விட்டுச்சென்ற பொருட்களை சேகரித்து ‘ஜாரானா’ என்ற இடத்தில் வைத்துவிட்டு, தஹீப் கூட்டத்தார் பதுங்கி இருந்த கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டார்கள். முற்றுகை மூன்று வாரங்கள் தொடர்ந்தன. இன்னும் ஒரிரு நாளில் எதிரிகள் சரண் அடைந்துவிடுவார்கள் என்ற நிலை இருந்தது. அப்போது நபிகளார் திடீரென, முற்றுகையை நிறுத்திவிட்டு திரும்பி சென்று விடலாம் என்று தனது படையினருக்கு உத்தரவு போட்டார்கள்.
நபிகளாரின் படைகள் ஜாரானா என்ற இடத்தை அடைந்தபோது, அங்கே ஏற்கனவே தோற்று ஓடிய ஹவாஸன் கூட்டத்தினர் நபிகளாரின் வருகைக்காக காத்திருந்தனர். ‘எங்களை மன்னித்து எங்களின் பொருட்களை ஒப்படைத்து விட்டால் நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்’ என்று விண்ணப்பித்து நின்றார்கள்.
சற்றும் யோசிக்கவில்லை நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள், “நீங்கள் அனைவரும் மன்னிக்கப்பட்டீர்கள். உங்கள் பொருட்களும் உங்களிடமே ஒப்படைக்கப்படும்” என்றார்கள்.
நபிகளாரின் கருணை உள்ளத்தை அறிந்த அந்த மக்கள் ‘அடிமையாய் வந்த பெண்களையும் கண்ணியமாய் நடத்தினீர்கள், எங்களையும் மன்னித்தீர்கள்’ என்று சொல்லி, அவர்கள் கரம் பற்றி “இஸ்லாம் என்ற தூய மதத்தை நாங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்வோம்” என்றார்கள்.
இதை அறிந்த தாயிப் நகர மக்கள் கோட்டையிலிருந்து வெளிவந்து அவர்களும் நபிகளார் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்த செய்தியைப் பற்றி திருக்குர்ஆன் விவரிக்கும் போது:
“பல போர்களில் உங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்திருக்கிறான். எனினும் ஹுனைன் போர் அன்று உங்களைப் பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த, உங்கள் அதிகமான மக்கள் தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள். இதன் பின்னர் அல்லாஹ் தன் தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் தன் அமைதியை இறக்கி அருள்புரிந்தான்” (திருக்குர் ஆன் 9:25-26)
அல்லாஹ் ஒருவனால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்ற நம்பிக்கையில் உறுதியாய் இருக்கும் வரை வெற்றி நம் பக்கம் தான். நபிகளார் தனது தொலைநோக்கு சிந்தனையால் ஹுதைய்பிய்யா உடன்படிக்கை மூலம் மக்காவை கைப்பற்றியதோடு பலரை இஸ்லாமில் இணையச் செய்தார்கள். அதே சிந்தனைச் செறிவால் ஹுனைன் வெற்றியோடு ஏராளமானவர்களையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள்.
போரின் முடிவு தனக்கு சாதகமாக அமையும் என்றறிந்தும், போர்களை நிறுத்தி மக்கள் உள்ளங்களை வென்று அனைவரையும் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என்பதை வரலாறு பறைசாட்டிக்கொண்டிருக்கிறது.
மு.முஹம்மது யூசுப், உடன்குடி.
இறைவனின் கட்டளைக்கு ஏற்ப அவர்களின் செயல்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் இருந்தன. ஒரு செயலில் இறங்கும் முன்பு அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அறிந்து அதை இறைக்கட்டளைக்கு ஏற்ப செயல்படுத்தினார்கள். அதனால் தான் அவர்களின் சில செயல்கள் வெற்றியை தராதது போல தோன்றினாலும், சில காலம் கழித்து மாபெரும் வெற்றியைத்தந்தது.
அதுகுறித்த சில நிகழ்வுகளை இங்கே காண்போம்.
ஹிஜ்ரி 6-ம் ஆண்டுகளில் மக்காவில் உள்ள கஆபாவை தரிசிக்க நபிகளாரும், அவரது தோழர்களும் புறப்பட்டனர். இவர்களை, ஹுதைய்பிய்யா என்ற இடத்தில் இறை மறுப்பாளர்கள் நிறுத்தினார்கள். மக்காவுக்குள் நுழைய அனுமதிக்க மறுத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் நபிகளாரின் கூட்டத்திற்கு பாதகமான பல அம்சங்கள் இருந்தன. இருந்தாலும் அதை நபிகளார் ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஹிஜ்ரி 8-ம் ஆண்டு. இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்டு மீண்டும் மக்கா நோக்கி பயணமானார்கள். இடைப்பட்ட காலத்தில் மக்காவில் பலர் இஸ்லாத்தை ஏற்று கொள்கிறார்கள். எதிரிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் மக்காவை நோக்கி புறப்பட்டவர்களுக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. கத்தியின்றி, ரத்தமின்றி, போரின்றி மக்கா நகரம் மாநபியின் கைகளில் பரிசாய் விழுந்தது.
நபியவர்கள் முரண்பாடான ஒப்பந்தத்தை ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என அன்று எண்ணியவர்கள், இன்று நபியவர்களின் தொலைநோக்கு சிந்தனையின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டார்கள்.
அல்லாஹ்வும் அதற்கான காரணத்தை திருக்குர்ஆனில் (48:25) இவ்வாறு சொல்கிறான்:
“அவர்கள்தாம் இறைவனை நிராகரித்தவர்களும், புனிதமிகு இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் உங்களைத் தடுத்தவர்களும், பலியிடப்படும் ஒட்டகங்களை அவற்றின் பலி இடத்தைச் சென்றடையாமல் தடுத்தவர்களும் ஆவர். உங்களுக்குத் தெரிந்திராத இறைநம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் (மக்காவில்) இல்லையென்றால் அறியாத நிலையில் அவர்களை நீங்கள் நசுக்கி விடுவீர்கள்; அதனால் உங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் எனும் அபாயம் இல்லாதிருந்தால் (போர் நிறுத்தப்பட்டிருக்காது. அதே நேரத்தில்) அல்லாஹ் தான் நாடுபவர்களைத் தன்னுடைய கருணையினுள் நுழையச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் (போர் நிறுத்தப்பட்டது). அந்த நம்பிக்கையாளர்கள் விலகியிருப்பார்களேயானால் (மக்காவாசிகளில்) எவர்கள் இறைநிராகரிப்பாளர்களாய் இருந்தார்களோ அவர்களுக்கு நாம் நிச்சயம் கடும் தண்டனை அளித்திருப்போம்”.
சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சோதனை. மக்கா வெற்றியின் போது அங்கு இருந்து ‘ஹவாஸன்’ என்ற கூட்டத்தினர் தாயிப் நகருக்கு சென்று விட்டனர். அவர்கள் அம்பெய்வதில் திறன் கொண்டவர்கள். அவர்கள் தாயிப் நகரத்தின் ‘தஹீப்’ என்ற கூட்டத்தினருடன் சேர்ந்து இஸ்லாத்திற்கு எதிராக பெரும் படையினைத்திரட்டி, “ஹுனைன்” என்ற இடத்தில் தங்கியிருந்தனர்.
இந்த செய்தி அண்ணல் எம்பெருமானாருக்கு அறிவிக்கப்பட்டது. சற்றும் தயங்கவில்லை நபிகள் நாயகம் (ஸல்). எதிரிகள் நம்மை தாக்குவதற்கு முன்பாகவே அவர்கள் இடத்திற்குச் சென்று நாம் அவர்களை தாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். எண்ணிக்கையில் அதிகம் இருந்த மக்காவாசிகளும் தங்களுக்கு எளிதில் வெற்றி கிடைத்துவிடும் என்று அல்லாஹ்வின் அருளை எண்ணாமல் புறப்பட்டனர்.
போர்க்களத்தை அடைந்த நபிகளாரின் படையினர் மீது, புதர்களிடையே பதுங்கி இருந்த எதிரிகள் சரமாரியாக அம்புகளை எய்தனர். இந்த திடீர் தாக்குதலில் நிலைகுலைந்து ஓடினர் மக்காவாசிகள்.
போர்க்கள நிலைமை எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்ற அபாயத்தை உணர்ந்த அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள், ஓடுகின்ற படையினரை நோக்கி உரத்தகுரலில்:
“மக்காவாசிகளே, நீங்கள் எங்கே விரண்டோடுகிறீர்கள்? உங்கள் வசம் இறைத்தூதர் நான் இருக்கையில், அல்லாஹ்வின் உதவியில் நீங்கள் ஏன் நம்பிக்கை இழந்தீர்கள்?. அல்லாஹ் வெற்றியை நமக்கு வாக்களித்திருக்கும் போது நாம் ஏன் பயப்பட வேண்டும். திரும்பி வாருங்கள் எதிரியின் இருப்பிடம் தெரிந்து விட்டது. இலக்கை நோக்கி நாமும் அம்பு எய்வோம்? எதிரிகளை வீழ்த்துவோம்” என்றார்கள்.
அண்ணலாரின் வீர உரையை செவிமடுத்த படையினர் புதிய உத்வேகத்துடன் திரும்பிவந்து போராடி எதிரிகளை வென்றார்கள்.
போரின் நிலவரம் மாறத் தொடங்கியதும், ஹவாஸன் கூட்டத்தினர் அருகில் உள்ள அடர்ந்த பாலைவனத்தில் சென்று ஒளிந்துகொண்டனர். தஹீப் கூட்டத்தார்கள் தங்கள் கோட்டைக்குள் சென்று பதுங்கி கொண்டார்கள்.
நபிகளார், யுத்தகளத்தில் எதிரிகள் விட்டுச்சென்ற பொருட்களை சேகரித்து ‘ஜாரானா’ என்ற இடத்தில் வைத்துவிட்டு, தஹீப் கூட்டத்தார் பதுங்கி இருந்த கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டார்கள். முற்றுகை மூன்று வாரங்கள் தொடர்ந்தன. இன்னும் ஒரிரு நாளில் எதிரிகள் சரண் அடைந்துவிடுவார்கள் என்ற நிலை இருந்தது. அப்போது நபிகளார் திடீரென, முற்றுகையை நிறுத்திவிட்டு திரும்பி சென்று விடலாம் என்று தனது படையினருக்கு உத்தரவு போட்டார்கள்.
நபிகளாரின் படைகள் ஜாரானா என்ற இடத்தை அடைந்தபோது, அங்கே ஏற்கனவே தோற்று ஓடிய ஹவாஸன் கூட்டத்தினர் நபிகளாரின் வருகைக்காக காத்திருந்தனர். ‘எங்களை மன்னித்து எங்களின் பொருட்களை ஒப்படைத்து விட்டால் நாங்கள் நன்றியுடையவர்களாய் இருப்போம்’ என்று விண்ணப்பித்து நின்றார்கள்.
சற்றும் யோசிக்கவில்லை நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள், “நீங்கள் அனைவரும் மன்னிக்கப்பட்டீர்கள். உங்கள் பொருட்களும் உங்களிடமே ஒப்படைக்கப்படும்” என்றார்கள்.
நபிகளாரின் கருணை உள்ளத்தை அறிந்த அந்த மக்கள் ‘அடிமையாய் வந்த பெண்களையும் கண்ணியமாய் நடத்தினீர்கள், எங்களையும் மன்னித்தீர்கள்’ என்று சொல்லி, அவர்கள் கரம் பற்றி “இஸ்லாம் என்ற தூய மதத்தை நாங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்வோம்” என்றார்கள்.
இதை அறிந்த தாயிப் நகர மக்கள் கோட்டையிலிருந்து வெளிவந்து அவர்களும் நபிகளார் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்த செய்தியைப் பற்றி திருக்குர்ஆன் விவரிக்கும் போது:
“பல போர்களில் உங்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்திருக்கிறான். எனினும் ஹுனைன் போர் அன்று உங்களைப் பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த, உங்கள் அதிகமான மக்கள் தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள். இதன் பின்னர் அல்லாஹ் தன் தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் தன் அமைதியை இறக்கி அருள்புரிந்தான்” (திருக்குர் ஆன் 9:25-26)
அல்லாஹ் ஒருவனால் தான் எல்லாம் நடைபெறுகிறது என்ற நம்பிக்கையில் உறுதியாய் இருக்கும் வரை வெற்றி நம் பக்கம் தான். நபிகளார் தனது தொலைநோக்கு சிந்தனையால் ஹுதைய்பிய்யா உடன்படிக்கை மூலம் மக்காவை கைப்பற்றியதோடு பலரை இஸ்லாமில் இணையச் செய்தார்கள். அதே சிந்தனைச் செறிவால் ஹுனைன் வெற்றியோடு ஏராளமானவர்களையும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள்.
போரின் முடிவு தனக்கு சாதகமாக அமையும் என்றறிந்தும், போர்களை நிறுத்தி மக்கள் உள்ளங்களை வென்று அனைவரையும் இஸ்லாத்தில் இணைந்தார்கள் என்பதை வரலாறு பறைசாட்டிக்கொண்டிருக்கிறது.
மு.முஹம்மது யூசுப், உடன்குடி.
இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் தமது வெட்கத்தலங்களை மறைப்பது ஒழுக்கம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இறைநம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.
இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘மறைவிடங்களை மறைத்து மானம் காப்பது’ குறித்த தகவல்களை காண்போம்.
மனித உடலில் அந்தரங்கமான சில பகுதிகள் உண்டு. வெளிரங்கமான சில பகுதிகள் உண்டு. அந்தரங்கமான விஷயங்களை நாம் எப்படி வெளிப்படுத்த மாட்டோமோ அவ்வாறே அந்தரங்கமான பகுதிகளையும் நாம் வெளிப்படுத்தக்கூடாது.
அவைகளை மறைத்து வைப்பதுதான் மானம். அவைகளை வெளிப்படுத்துவது அவமானம். மானம் காப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாகவே சேர்க்கப்படுகிறது. மானத்தை காக்கும் ஒரு கேடயம் தான் வெட்கம். மானத்தை காக்கும் ஒரு பொக்கிஷம் தான் ஆடை.
வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளை
வெட்கத்தன்மைதான் மறைவிடங்களை மறைப்பதற்கு தூண்டுகோலாக அமைகிறது. மறைவிடங்களை வெளிப்படுத்துவது வெட்கமற்ற தன்மையின் வெளிப்பாடு. மானம் காப்பதும், மறைவிடங்களை மறைப்பதும் வெட்கத்தின் அடையாளம்.
‘நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம், புகாரி)
‘அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர், தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, ‘அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டுவிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்’ என நபி (ஸல்) உரைத்தார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
ஒருவர் வெட்கப்படுவது நல்ல செயல்தான். வெட்கத்தை ஆடையாக அணிந்தவரிடம் மக்கள் குறை காணவோ, குறை கூறவோ முடியாது. அது மனித வாழ்வின் உயிர்மூச்சு போன்றது. வெட்கமுள்ளவன் நல்ல மனிதனாக வாழ்வான். வெட்கம் கெட்டவன் மிருகமாகவும், பாவியாகவும் மாறிவிடுகின்றான்.
வெட்கத்தால் நன்மை மட்டுமே விளையும். வெட்கம் தவறிவிட்டால், கண்டதும் செய்ய நேரிடும். வெட்கம் ஒரு அருங்குணம். அது நன்மையைத் தூண்டும். வெட்கமின்மை ஒரு துர்குணம். அது தீமையைத் தூண்டும்.
‘வெட்கம் இறைநம்பிக்கையைச் சார்ந்தது. இறைநம்பிக்கை சொர்க்கத்தை நல்கும். வெட்கமற்ற தன்மை முரட்டு சுபாவமாகும். முரட்டு சுபாவம் நரகத்தை நல்கும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)
‘ஒவ்வொரு மார்க்கத்திலும் ஒரு சிறந்த நற்குணம் உண்டு. இஸ்லாத்தின் சிறந்த குணம் வெட்கம் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: இப்னுமாஜா)
‘வெட்கமும், இறைநம்பிக்கையும் இணைபிரியாத இருஅம்சங்கள். அவ்விரண்டில் ஒன்று விலகினால் மற்றொன்றும் விலகிவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: பைஹகீ)
மறைவிடங்களை வெளிப்படுத்துவது இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. மறைவிடங்களை மறைப்பது இறைநம்பிக்கையைச் சார்ந்தது. இறைநம்பிக்கையாளர்கள் தங்களது வெட்கத்தலங்களை வெளிப்படுத்தமாட்டார்கள். மறைத்து வாழ்வார்கள். வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவது மானக்கேடான காரியம் என்று இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு பதிவு செய்கின்றான்.
‘(நம்பிக்கையில்லாத) அவர்கள் மானக்கேடான காரியத்தைச் செய்யும்போது ‘எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்’ என்று கூறுகின்றனர். அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை இறைவனின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?’ என்று கேட்பீராக’. (திருக்குர்ஆன் 7:28)
ஆடை என்பது இறைவன் மனிதகுலத்திற்கு வழங்கிய மகத்தான ஒரு அருட்கொடை. மனித இனம் தவிர வேறெந்த இனமும் ஆடை அணிவதில்லை. நாம் அணியும் ஆடை நமது மறைவிடங்களை மறைத்து, மானம் காக்க வேண்டும். மானம் பறிபோகக்கூடாது.
‘ஆதமுடைய மக்களே, உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். இறையச்சம் எனும் ஆடையே சிறந்தது’. (திருக்குர்ஆன் 7:26)
‘அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்’. (திருக்குர்ஆன் 2:187)
ஆடை எவ்வாறு மறைவிடங்களை மறைத்து மானத்தை காக்கிறதோ, அவ்வாறே கணவன் தமது மனைவியின் மானம், மரியாதையையும்; மனைவி தமது கணவனின் மானம், மரியாதையையும் பேணி பாதுகாக்க வேண்டும்.
இஸ்லாமியர்களை பொறுத்த அளவில் ஆண்களாக இருந்தால் தொப்புளுக்கும், முழங்காலுக்கும் இடையிலுள்ள மேனியை மறைக்க வேண்டும். இது அவர்கள் மறைக்க வேண்டிய அவசியமான பகுதி. பெண்களாக இருந்தால் முகம், மற்றும் மணிக்கட்டு வரையுள்ள இரு முன் கைகளையும் தவிரவுள்ள மற்றவை மறைக்கப்பட வேண்டிய பகுதிகளாகும்.
இது குறித்த விபரங்களை நபிமொழிகளிலும், திருக்குர்ஆன் வசனங்களிலும் தெரிந்து கொள்வோம்.
‘நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களைப் பார்த்து ‘அஸ்மாவே, ஒரு பெண் பருவ வயதை அடைந்துவிட்டால், அவளிடமிருந்து இன்ன இன்ன பகுதியைத் தவிர மற்றவை காண்பதற்கு உடன்பாடு கிடையாது என நபி (ஸல்) கூறிவிட்டு, தமது முகத்தையும், தமது இரு மணிக்கட்டையும் சமிஞ்சை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அபூதாவூத்)
‘(நபியே) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக. இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக. அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களின் தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைந்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே, அனைவரும் இறைவனை நோக்கித் திரும்புங்கள். இதனால் வெற்றியடைவீர்கள்’. (திருக்குர்ஆன் 24:30-31)
‘நம்பிக்கை கொண்டோரே, உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும், அதிகாலை தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா (இரவின்) தொழுகைக்குப் பிறகும் ஆகிய மூன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே இறைவன் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.’
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும்.
திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப்பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்’. (திருக்குர்ஆன் 24:58-60)
இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் தமது வெட்கத்தலங்களை மறைப்பது ஒழுக்கம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இறைநம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இதுவும் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு களமாக அமைந்துள்ளது. உண்மையான வெற்றி இதில்தான் உள்ளது.
‘இறைநம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்.’ (திருக்குர்ஆன் 23:1)
‘அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய வெட்கத்தலங்களைக் காத்துக்கொள்வார்கள்’. (திருக்குர்ஆன் 23:5)
மனித உடலில் அந்தரங்கமான சில பகுதிகள் உண்டு. வெளிரங்கமான சில பகுதிகள் உண்டு. அந்தரங்கமான விஷயங்களை நாம் எப்படி வெளிப்படுத்த மாட்டோமோ அவ்வாறே அந்தரங்கமான பகுதிகளையும் நாம் வெளிப்படுத்தக்கூடாது.
அவைகளை மறைத்து வைப்பதுதான் மானம். அவைகளை வெளிப்படுத்துவது அவமானம். மானம் காப்பதும் இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாகவே சேர்க்கப்படுகிறது. மானத்தை காக்கும் ஒரு கேடயம் தான் வெட்கம். மானத்தை காக்கும் ஒரு பொக்கிஷம் தான் ஆடை.
வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளை
வெட்கத்தன்மைதான் மறைவிடங்களை மறைப்பதற்கு தூண்டுகோலாக அமைகிறது. மறைவிடங்களை வெளிப்படுத்துவது வெட்கமற்ற தன்மையின் வெளிப்பாடு. மானம் காப்பதும், மறைவிடங்களை மறைப்பதும் வெட்கத்தின் அடையாளம்.
‘நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம், புகாரி)
‘அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர், தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, ‘அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டுவிடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்’ என நபி (ஸல்) உரைத்தார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி)
ஒருவர் வெட்கப்படுவது நல்ல செயல்தான். வெட்கத்தை ஆடையாக அணிந்தவரிடம் மக்கள் குறை காணவோ, குறை கூறவோ முடியாது. அது மனித வாழ்வின் உயிர்மூச்சு போன்றது. வெட்கமுள்ளவன் நல்ல மனிதனாக வாழ்வான். வெட்கம் கெட்டவன் மிருகமாகவும், பாவியாகவும் மாறிவிடுகின்றான்.
வெட்கத்தால் நன்மை மட்டுமே விளையும். வெட்கம் தவறிவிட்டால், கண்டதும் செய்ய நேரிடும். வெட்கம் ஒரு அருங்குணம். அது நன்மையைத் தூண்டும். வெட்கமின்மை ஒரு துர்குணம். அது தீமையைத் தூண்டும்.
‘வெட்கம் இறைநம்பிக்கையைச் சார்ந்தது. இறைநம்பிக்கை சொர்க்கத்தை நல்கும். வெட்கமற்ற தன்மை முரட்டு சுபாவமாகும். முரட்டு சுபாவம் நரகத்தை நல்கும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)
‘ஒவ்வொரு மார்க்கத்திலும் ஒரு சிறந்த நற்குணம் உண்டு. இஸ்லாத்தின் சிறந்த குணம் வெட்கம் ஆகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: இப்னுமாஜா)
‘வெட்கமும், இறைநம்பிக்கையும் இணைபிரியாத இருஅம்சங்கள். அவ்விரண்டில் ஒன்று விலகினால் மற்றொன்றும் விலகிவிடும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: பைஹகீ)
மறைவிடங்களை வெளிப்படுத்துவது இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. மறைவிடங்களை மறைப்பது இறைநம்பிக்கையைச் சார்ந்தது. இறைநம்பிக்கையாளர்கள் தங்களது வெட்கத்தலங்களை வெளிப்படுத்தமாட்டார்கள். மறைத்து வாழ்வார்கள். வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவது மானக்கேடான காரியம் என்று இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு பதிவு செய்கின்றான்.
‘(நம்பிக்கையில்லாத) அவர்கள் மானக்கேடான காரியத்தைச் செய்யும்போது ‘எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்’ என்று கூறுகின்றனர். அல்லாஹ் வெட்கக்கேடானதை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை இறைவனின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?’ என்று கேட்பீராக’. (திருக்குர்ஆன் 7:28)
ஆடை என்பது இறைவன் மனிதகுலத்திற்கு வழங்கிய மகத்தான ஒரு அருட்கொடை. மனித இனம் தவிர வேறெந்த இனமும் ஆடை அணிவதில்லை. நாம் அணியும் ஆடை நமது மறைவிடங்களை மறைத்து, மானம் காக்க வேண்டும். மானம் பறிபோகக்கூடாது.
‘ஆதமுடைய மக்களே, உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். இறையச்சம் எனும் ஆடையே சிறந்தது’. (திருக்குர்ஆன் 7:26)
‘அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்’. (திருக்குர்ஆன் 2:187)
ஆடை எவ்வாறு மறைவிடங்களை மறைத்து மானத்தை காக்கிறதோ, அவ்வாறே கணவன் தமது மனைவியின் மானம், மரியாதையையும்; மனைவி தமது கணவனின் மானம், மரியாதையையும் பேணி பாதுகாக்க வேண்டும்.
இஸ்லாமியர்களை பொறுத்த அளவில் ஆண்களாக இருந்தால் தொப்புளுக்கும், முழங்காலுக்கும் இடையிலுள்ள மேனியை மறைக்க வேண்டும். இது அவர்கள் மறைக்க வேண்டிய அவசியமான பகுதி. பெண்களாக இருந்தால் முகம், மற்றும் மணிக்கட்டு வரையுள்ள இரு முன் கைகளையும் தவிரவுள்ள மற்றவை மறைக்கப்பட வேண்டிய பகுதிகளாகும்.
இது குறித்த விபரங்களை நபிமொழிகளிலும், திருக்குர்ஆன் வசனங்களிலும் தெரிந்து கொள்வோம்.
‘நபி (ஸல்) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களைப் பார்த்து ‘அஸ்மாவே, ஒரு பெண் பருவ வயதை அடைந்துவிட்டால், அவளிடமிருந்து இன்ன இன்ன பகுதியைத் தவிர மற்றவை காண்பதற்கு உடன்பாடு கிடையாது என நபி (ஸல்) கூறிவிட்டு, தமது முகத்தையும், தமது இரு மணிக்கட்டையும் சமிஞ்சை செய்தார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: அபூதாவூத்)
‘(நபியே) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக. இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக. அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களின் தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைந்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே, அனைவரும் இறைவனை நோக்கித் திரும்புங்கள். இதனால் வெற்றியடைவீர்கள்’. (திருக்குர்ஆன் 24:30-31)
‘நம்பிக்கை கொண்டோரே, உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும், அதிகாலை தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா (இரவின்) தொழுகைக்குப் பிறகும் ஆகிய மூன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே இறைவன் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.’
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும்.
திருமணத்தை நினைத்துப் பார்க்காத முதிய வயதுப்பெண்கள் அலங்காரம் செய்து கொள்ளாது, தமது மேலாடைகளைக் களைந்திருப்பதில் குற்றமில்லை. அவர்கள் பேணிக் கொள்வது அவர்களுக்குச் சிறந்தது. அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்’. (திருக்குர்ஆன் 24:58-60)
இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் தமது வெட்கத்தலங்களை மறைப்பது ஒழுக்கம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. இறைநம்பிக்கை சார்ந்த விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இதுவும் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு களமாக அமைந்துள்ளது. உண்மையான வெற்றி இதில்தான் உள்ளது.
‘இறைநம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர்.’ (திருக்குர்ஆன் 23:1)
‘அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய வெட்கத்தலங்களைக் காத்துக்கொள்வார்கள்’. (திருக்குர்ஆன் 23:5)
திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் முன்தினம் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நேற்று முன்தினம் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அகமது புதாகீர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கினார். இதற்கு செயலாளர் அலாவுதீன் இப்ராகிம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு 2 முட்டைகளுடன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதில் பலர் பாத்திரங்களில் பிரியாணியை வாங்கி சென்றனர்.
பின்னர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அகமது புதாகீர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கினார். இதற்கு செயலாளர் அலாவுதீன் இப்ராகிம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு 2 முட்டைகளுடன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதில் பலர் பாத்திரங்களில் பிரியாணியை வாங்கி சென்றனர்.
இன்றைய உலகில் ஒவ்வொருவரும்; எப்படியேனும் பொருளீட்ட வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும், நாளைய வாழ்வை சிறந்த முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும்,
இன்றைய உலகில் ஒவ்வொருவரும்; எப்படியேனும் பொருளீட்ட வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும், நாளைய வாழ்வை சிறந்த முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும், நன்றாகச் செலவு செய்ய வேண்டும் என்று உலக வாழ்க்கையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
பொருளீட்டும் இந்தப் போராட்டத்தில் மறுமை வாழ்வை மறந்து வாழ்கின்றனர். எதற்காக இவ்வுலக வாழ்வு என அறியாமல் செயல்படுகிறார்கள்.
உலகமே கதி என்று வாழ்ந்த பல சமூகங்களை இறைவன் அழித்துள்ளான். காரணம் உலக மோகத்தில் திளைத்து, மறுமையை மறந்து, குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டமைதான். நாம் எவ்வாறு செயல்படுகின்றோம் என்பதைச் சோதிப்பதற்காகவே நம்மை இறைவன் இந்த உலகத்தில் படைத்துள்ளான்.
இறைவன் கூறுகிறான்: “பின்னர், அவர்களுக்குப் பிறகு பூமியில் அவர்களுடைய இடத்தில் இப்பொழுது உங்களை அமர்த்தினோம்; நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக”. (திருக்குர்ஆன் 10:14)
உலகில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டும், இறந்து கொண்டும் இருக்கின்ற இந்த தொடர் நிகழ்ச்சி இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கான காரணம், அவர்களை சோதித்து யாருடைய செயல் இவ்வுலக வாழ்விற்கும், மறுமை வாழ்விற்கும் உகந்ததாக உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்குத்தான்.
ஆகவே இவ்வுலகில் மனிதன் உடலாலும் பொருளாலும் தொழிலாலும் பலவகையாக சோதிக்கப்படுகிறான். அதில் பொறுமையை மேற்கொண்டு வெற்றி பெறுவோருக்கு நற்செய்தி கூறுவீராக என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:
“மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக”. (திருக்குர்ஆன் 2:155)
சோதனைக்கு ஆளாகாத மனிதர் எவரும் கிடையாது. ஏதோ ஒரு வகையில் மனிதன் சோதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றான். நல்லவனாக இருந்தாலும் சோதிக்கப்படுவான், தீயவனாக இருந்தாலும் சோதிக்கப்படுவான். இது இறைவனின் நியதி. இந்த நியதியை எவராலும் மாற்ற முடியாது.
வெற்றி பெற்ற மாமனிதர்
சோதனைகளை வென்று அவற்றை பொறுமையுடன் சகித்துக்கொண்டவர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கின்றார்கள். மட்டுமல்ல, அவர்கள் அடுத்தவர்களுக்குப் பாடமாகவும் திகழ்கின்றார்கள். ஆயினும் சோதனைகளை தாங்கிக்கொள்ளாமல் அவசர கதியில் வாழ்வை முடித்துக்கொள்பவர்கள் மோசமான முன்னுதாரணமாக விளங்குகின்றார்கள்.
இவ்வுலகில் பல்வேறு சந்தர்பங்களிலும் சூழ்நிலைகளிலும் சோதிக்கப்பட்ட நபர்தான் இறைத்தூதர் இப்ராகிம் (அலை) அவர்கள்.
தூதுத்துவத்தின் ஆரம்பத்தில் இப்ராகிம் (அலை) அவர்கள் தன் தந்தையை நேர்வழியின் பக்கம் அழைத்தபோது அவரது தந்தை, “உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்” என்று பயமுறுத்தினார். பெற்றெடுத்த மகனை வீட்டை விட்டு வெளியேற்றினார். இதனால் அவர் சொந்த நாட்டையும் சொத்து சுகங்களையும் துறந்து வேறு நாடு சென்றார்.
இங்கு சொந்த பந்தங்கள் மூலமாகவும், சொந்த வீடு மற்றும் செல்வத்தின் மூலமாகவும் இப்ராகிம் (அலை) அவர்களை இறைவன் சோதித்தான். அதில் அவர் வெற்றி பெறுகின்றார்.
பின்னர் நம்ரூத் என்ற அரசன் மூலம் இப்ராகிம் (அலை) நெருப்பில் எறியப்படுகின்றார். இங்கு கொள்கை மூலம் இறைவன் அவர்களை சோதித்தான்.
முதுமையான வயதில் குழந்தை பிறக்கும் என்ற நற்செய்தியை இப்ராகிம் (அலை) அவர்களுக்கு கூறி அதன் மூலம் அவர்களுடைய பொறுமையை இறைவன் சோதிக்கின்றான்.
அடுத்து, அல்லாஹ்வின் கட்டளைப்படி இப்ராகிம் (அலை) தன்னுடைய மகனை அறுத்து பலியிட முன்வருகின்றார். இங்கு பெற்றெடுத்த மகனையே தியாகம் செய்வதன் மூலம் இறைவனால் சோதிக்கப்படுகின்றார்.
அல்லாஹ்வின் அனைத்து சோதனைகளிலும் இப்ராகிம் (அலை) அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“மேலும், இப்ராகீமை அவருடைய அதிபதி சில விஷயங்கள் மூலம் சோதித்ததை நினைவுகூருங்கள். இன்னும் அவர், அவற்றில் எல்லாம் முழுமையாகத் தேர்ந்துவிட்டார்”. (திருக்குர்ஆன் 2:124)
இறைவனின் சோதனைகளில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றதன் காரணமாக இப்ராகிம் (அலை) அவர்களுக்கு நற்செய்தி கூறியதைப் போன்று அவருடைய வழித்தோன்றல்களான நமக்கும் அல்லாஹ் நற்செய்தி கூறுகிறான். ஆயினும் நமக்கான சோதனைகளில் நாம் வெற்றி பெறும்போதுதான் அந்த நற்செய்திக்கு முழுமையாகத் தகுதிபெற்றவர்களாக நாம் மாறமுடியும்.
“இப்ராகிமின் வழித்தோன்றல்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் கொடுத்து மாபெரும் அரசாட்சியையும் வழங்கியிருக்கிறோமே”. (திருக்குர்ஆன் 4:54)
தோல்வியடைந்த அலட்சிய கூட்டம்
இவ்வுலகில் இறைவனால் பல்வேறு அருட்கொடைகளாலும் சிறப்புகளாலும் சோதிக்கப்பட்ட சமூகம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எனும் பனீஇஸ்ரவேலர்கள்.
இவர்கள் படைக்கப்பட்ட நோக்கத்தை குறித்து கூறும்போது; ‘இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை சோதிக்க அல்லாஹ் அவர்களை தன் பிரதிநிதிகளாக நியமித்தான்’ என்று திருக்குர்ஆன் (7:129) குறிப்பிடுகிறது.
“உங்கள் இறைவன் உங்களுடைய பகைவனை அழித்துவிட்டு, இப்பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாக்கி நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதைப் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது”.
அதிக அளவில் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்ட சமூகம் என்ற சிறப்புத் தகுதியை வழங்கி பனீ இஸ்ரவேலர்களை அல்லாஹ் சோதித்தான். ஆனால் அவர்கள் ஜகரிய்யா (அலை), யஹ்யா (அலை) போன்ற அனேக இறைத்தூதர்களை அநியாயமாகக் கொன்றார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்களிடையே காலையில் ஓர் இறைத்தூதர் தோன்றுவார். அவரைக் கொலை செய்வார்கள். மாலையில் வேறொரு இறைத்தூதர் தோன்றுவார். அவரையும் கொலை செய்வார்கள்.
பிர்அவ்னிடமிருந்து பனீ இஸ்ரவேலர்களுக்கு விடுதலை கொடுத்து அவர்கள் கண் முன்னே கடலைப் பிளந்து பிர்அவ்னையும் அவன் கூட்டத்தையும் அந்தக் கடலில் மூழ்கச் செய்து சோதித்தான்.
பின்னர், மன்னு சல்வா எனும் சொர்க்கத்து உணவை பனீ இஸ்ரவேலர்களுக்கு இறைவன் உண்ணக் கொடுத்தான். ஆயினும் இதனை சேமிக்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்தான். ஆனால் அவர்கள் அதில் வரம்பு மீறினார்கள்.
எகிப்தில் இருந்து வெளியேறிய பிறகு தங்களுக்கென குடித்தனம் இல்லாத நிலையில், போர் புரிந்து பாலஸ்தீனத்தைக் கைப்பற்றுங்கள் என்ற கட்டளை மூலம் மீண்டும் சோதித்தான்.
ஆனால் அவர்களோ இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களிடம், “வேண்டுமாயின், நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்” (திருக்குர்ஆன் 5:24) என்று கூறி இறைவனின் கட்டளையை அலட்சியப்படுத்தினார்கள்.
இறைச்சோதனைகளுக்கு ஆளான இஸ்ரவேலர்களின் இறுதி நிலையும் அவர்களின் மீது இடப்பட்ட சாபத்தையும் குறித்து பல இடங்களில் திருக்குர்ஆன் விவரிக்கின்றது. இவை அனைத்துமே நமக்கான பாடமும் படிப்பினையும்தான்.
இவ்வுலகம் ஒரு விளைநிலம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்கு சோதனை செல்வம் ஆகும்”. (நூல்: திர்மிதி)
இவ்வுலகில் தோன்றிய அனைத்து சமூகங்களும் பல்வேறு விதங்களில் சோதிக்கப்பட்டார்கள். அதேபோன்று நபி (ஸல்) அவர்களின் சமூகமான நாமும் சோதிக்கப்படுகின்றோம்.
இந்த நிரந்தரமற்ற உலகில் நாளைய வாழ்வாதாரங்களை தேடும் விதத்தில் செல்வங்களின் பின்னால் விரைந்து கொண்டிருக்கிறோம். ஆகவேதான் இவ்வுலக மோகங்கள் அனைத்தும் இம்மை வாழ்வில் மட்டும் பயன்பட்டு நிரந்தரமான மறுமை வாழ்வில் கேள்விக்குறியாகி விடுகிறது.
இவ்வுலகம் நிரந்தரம் என இஸ்ரவேலர்கள் போல் எண்ணி செயல்படாமல் இவ்வுலகம் ஒரு சோதனைக் களம்; அதில் நாம் சோதிக்கப்படுகின்றோம் என எண்ணி இறைத்தூதர் இப்ராகிம் (அலை) அவர்களைப் போல் இறைவனின் சோதனைகளை வெல்ல வேண்டும்.
இவ்வுலகம் மறுமைக்கான ஒரு விளைநிலமே. இதில் நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் மறுமையில் அறுவடை செய்வோம். எனவே சோதனைகளின்போது பொறுமை காத்து நல்லவற்றை விதைத்து மறுமையில் நல்லவற்றையே அறுவடை செய்வோம்.
அப்துல் முக்ஷித், திருச்சி.
பொருளீட்டும் இந்தப் போராட்டத்தில் மறுமை வாழ்வை மறந்து வாழ்கின்றனர். எதற்காக இவ்வுலக வாழ்வு என அறியாமல் செயல்படுகிறார்கள்.
உலகமே கதி என்று வாழ்ந்த பல சமூகங்களை இறைவன் அழித்துள்ளான். காரணம் உலக மோகத்தில் திளைத்து, மறுமையை மறந்து, குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபட்டமைதான். நாம் எவ்வாறு செயல்படுகின்றோம் என்பதைச் சோதிப்பதற்காகவே நம்மை இறைவன் இந்த உலகத்தில் படைத்துள்ளான்.
இறைவன் கூறுகிறான்: “பின்னர், அவர்களுக்குப் பிறகு பூமியில் அவர்களுடைய இடத்தில் இப்பொழுது உங்களை அமர்த்தினோம்; நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்று பார்ப்பதற்காக”. (திருக்குர்ஆன் 10:14)
உலகில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டும், இறந்து கொண்டும் இருக்கின்ற இந்த தொடர் நிகழ்ச்சி இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதற்கான காரணம், அவர்களை சோதித்து யாருடைய செயல் இவ்வுலக வாழ்விற்கும், மறுமை வாழ்விற்கும் உகந்ததாக உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்குத்தான்.
ஆகவே இவ்வுலகில் மனிதன் உடலாலும் பொருளாலும் தொழிலாலும் பலவகையாக சோதிக்கப்படுகிறான். அதில் பொறுமையை மேற்கொண்டு வெற்றி பெறுவோருக்கு நற்செய்தி கூறுவீராக என்று இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:
“மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக”. (திருக்குர்ஆன் 2:155)
சோதனைக்கு ஆளாகாத மனிதர் எவரும் கிடையாது. ஏதோ ஒரு வகையில் மனிதன் சோதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றான். நல்லவனாக இருந்தாலும் சோதிக்கப்படுவான், தீயவனாக இருந்தாலும் சோதிக்கப்படுவான். இது இறைவனின் நியதி. இந்த நியதியை எவராலும் மாற்ற முடியாது.
வெற்றி பெற்ற மாமனிதர்
சோதனைகளை வென்று அவற்றை பொறுமையுடன் சகித்துக்கொண்டவர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கின்றார்கள். மட்டுமல்ல, அவர்கள் அடுத்தவர்களுக்குப் பாடமாகவும் திகழ்கின்றார்கள். ஆயினும் சோதனைகளை தாங்கிக்கொள்ளாமல் அவசர கதியில் வாழ்வை முடித்துக்கொள்பவர்கள் மோசமான முன்னுதாரணமாக விளங்குகின்றார்கள்.
இவ்வுலகில் பல்வேறு சந்தர்பங்களிலும் சூழ்நிலைகளிலும் சோதிக்கப்பட்ட நபர்தான் இறைத்தூதர் இப்ராகிம் (அலை) அவர்கள்.
தூதுத்துவத்தின் ஆரம்பத்தில் இப்ராகிம் (அலை) அவர்கள் தன் தந்தையை நேர்வழியின் பக்கம் அழைத்தபோது அவரது தந்தை, “உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவேன்” என்று பயமுறுத்தினார். பெற்றெடுத்த மகனை வீட்டை விட்டு வெளியேற்றினார். இதனால் அவர் சொந்த நாட்டையும் சொத்து சுகங்களையும் துறந்து வேறு நாடு சென்றார்.
இங்கு சொந்த பந்தங்கள் மூலமாகவும், சொந்த வீடு மற்றும் செல்வத்தின் மூலமாகவும் இப்ராகிம் (அலை) அவர்களை இறைவன் சோதித்தான். அதில் அவர் வெற்றி பெறுகின்றார்.
பின்னர் நம்ரூத் என்ற அரசன் மூலம் இப்ராகிம் (அலை) நெருப்பில் எறியப்படுகின்றார். இங்கு கொள்கை மூலம் இறைவன் அவர்களை சோதித்தான்.
முதுமையான வயதில் குழந்தை பிறக்கும் என்ற நற்செய்தியை இப்ராகிம் (அலை) அவர்களுக்கு கூறி அதன் மூலம் அவர்களுடைய பொறுமையை இறைவன் சோதிக்கின்றான்.
அடுத்து, அல்லாஹ்வின் கட்டளைப்படி இப்ராகிம் (அலை) தன்னுடைய மகனை அறுத்து பலியிட முன்வருகின்றார். இங்கு பெற்றெடுத்த மகனையே தியாகம் செய்வதன் மூலம் இறைவனால் சோதிக்கப்படுகின்றார்.
அல்லாஹ்வின் அனைத்து சோதனைகளிலும் இப்ராகிம் (அலை) அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“மேலும், இப்ராகீமை அவருடைய அதிபதி சில விஷயங்கள் மூலம் சோதித்ததை நினைவுகூருங்கள். இன்னும் அவர், அவற்றில் எல்லாம் முழுமையாகத் தேர்ந்துவிட்டார்”. (திருக்குர்ஆன் 2:124)
இறைவனின் சோதனைகளில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றதன் காரணமாக இப்ராகிம் (அலை) அவர்களுக்கு நற்செய்தி கூறியதைப் போன்று அவருடைய வழித்தோன்றல்களான நமக்கும் அல்லாஹ் நற்செய்தி கூறுகிறான். ஆயினும் நமக்கான சோதனைகளில் நாம் வெற்றி பெறும்போதுதான் அந்த நற்செய்திக்கு முழுமையாகத் தகுதிபெற்றவர்களாக நாம் மாறமுடியும்.
“இப்ராகிமின் வழித்தோன்றல்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் கொடுத்து மாபெரும் அரசாட்சியையும் வழங்கியிருக்கிறோமே”. (திருக்குர்ஆன் 4:54)
தோல்வியடைந்த அலட்சிய கூட்டம்
இவ்வுலகில் இறைவனால் பல்வேறு அருட்கொடைகளாலும் சிறப்புகளாலும் சோதிக்கப்பட்ட சமூகம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எனும் பனீஇஸ்ரவேலர்கள்.
இவர்கள் படைக்கப்பட்ட நோக்கத்தை குறித்து கூறும்போது; ‘இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை சோதிக்க அல்லாஹ் அவர்களை தன் பிரதிநிதிகளாக நியமித்தான்’ என்று திருக்குர்ஆன் (7:129) குறிப்பிடுகிறது.
“உங்கள் இறைவன் உங்களுடைய பகைவனை அழித்துவிட்டு, இப்பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாக்கி நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்பதைப் பார்க்கும் காலம் நெருங்கிவிட்டது”.
அதிக அளவில் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்ட சமூகம் என்ற சிறப்புத் தகுதியை வழங்கி பனீ இஸ்ரவேலர்களை அல்லாஹ் சோதித்தான். ஆனால் அவர்கள் ஜகரிய்யா (அலை), யஹ்யா (அலை) போன்ற அனேக இறைத்தூதர்களை அநியாயமாகக் கொன்றார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்களிடையே காலையில் ஓர் இறைத்தூதர் தோன்றுவார். அவரைக் கொலை செய்வார்கள். மாலையில் வேறொரு இறைத்தூதர் தோன்றுவார். அவரையும் கொலை செய்வார்கள்.
பிர்அவ்னிடமிருந்து பனீ இஸ்ரவேலர்களுக்கு விடுதலை கொடுத்து அவர்கள் கண் முன்னே கடலைப் பிளந்து பிர்அவ்னையும் அவன் கூட்டத்தையும் அந்தக் கடலில் மூழ்கச் செய்து சோதித்தான்.
பின்னர், மன்னு சல்வா எனும் சொர்க்கத்து உணவை பனீ இஸ்ரவேலர்களுக்கு இறைவன் உண்ணக் கொடுத்தான். ஆயினும் இதனை சேமிக்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்தான். ஆனால் அவர்கள் அதில் வரம்பு மீறினார்கள்.
எகிப்தில் இருந்து வெளியேறிய பிறகு தங்களுக்கென குடித்தனம் இல்லாத நிலையில், போர் புரிந்து பாலஸ்தீனத்தைக் கைப்பற்றுங்கள் என்ற கட்டளை மூலம் மீண்டும் சோதித்தான்.
ஆனால் அவர்களோ இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களிடம், “வேண்டுமாயின், நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்” (திருக்குர்ஆன் 5:24) என்று கூறி இறைவனின் கட்டளையை அலட்சியப்படுத்தினார்கள்.
இறைச்சோதனைகளுக்கு ஆளான இஸ்ரவேலர்களின் இறுதி நிலையும் அவர்களின் மீது இடப்பட்ட சாபத்தையும் குறித்து பல இடங்களில் திருக்குர்ஆன் விவரிக்கின்றது. இவை அனைத்துமே நமக்கான பாடமும் படிப்பினையும்தான்.
இவ்வுலகம் ஒரு விளைநிலம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்கு சோதனை செல்வம் ஆகும்”. (நூல்: திர்மிதி)
இவ்வுலகில் தோன்றிய அனைத்து சமூகங்களும் பல்வேறு விதங்களில் சோதிக்கப்பட்டார்கள். அதேபோன்று நபி (ஸல்) அவர்களின் சமூகமான நாமும் சோதிக்கப்படுகின்றோம்.
இந்த நிரந்தரமற்ற உலகில் நாளைய வாழ்வாதாரங்களை தேடும் விதத்தில் செல்வங்களின் பின்னால் விரைந்து கொண்டிருக்கிறோம். ஆகவேதான் இவ்வுலக மோகங்கள் அனைத்தும் இம்மை வாழ்வில் மட்டும் பயன்பட்டு நிரந்தரமான மறுமை வாழ்வில் கேள்விக்குறியாகி விடுகிறது.
இவ்வுலகம் நிரந்தரம் என இஸ்ரவேலர்கள் போல் எண்ணி செயல்படாமல் இவ்வுலகம் ஒரு சோதனைக் களம்; அதில் நாம் சோதிக்கப்படுகின்றோம் என எண்ணி இறைத்தூதர் இப்ராகிம் (அலை) அவர்களைப் போல் இறைவனின் சோதனைகளை வெல்ல வேண்டும்.
இவ்வுலகம் மறுமைக்கான ஒரு விளைநிலமே. இதில் நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் மறுமையில் அறுவடை செய்வோம். எனவே சோதனைகளின்போது பொறுமை காத்து நல்லவற்றை விதைத்து மறுமையில் நல்லவற்றையே அறுவடை செய்வோம்.
அப்துல் முக்ஷித், திருச்சி.
‘உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவழியில் நீங்களும் அறப்போர்புரியுங்கள், வரம்பு மீறாதீர்கள். வரம்பு மீறியோரை இறைவன் நேசிக்கமாட்டான்’. (திருக்குர்ஆன் 2:190)
இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘அறப்போர் புரிவது’ குறித்த தகவல்களை காண்போம்.
போரை இஸ்லாம் எந்த இடத்திலும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றதும் இல்லை; போரை தானாக, சுயமாக, விரும்பி துவங்கியதும் இல்லை. அதை ‘புனிதப்போர்’ என்று அறைகூவல் விடுத்ததும் இல்லை.
விலை மதிக்க முடியாத மாண்புமிகு மனித உயிர்களை பறிக்கும் செயல் எப்படி புனிதம் நிறைந்ததாக ஆகும்?. புனிதப்போர் எனும் சொல் குர்ஆனிலும் பயன்படுத்தப்படவில்லை, நபிமொழிகளிலும் உபயோகப்படுத்தப்படவில்லை.
போர்க்களத்தை விரும்பாதே
‘நபி (ஸல்) அவர்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாட்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை போர்க்களத்தில் இறங்காமல் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, ‘எதிரிகளைப் போர்க்களத்தில் சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம், போரின் அழிவுகளிலிருந்து பாதுகாக்கும்படி கேளுங்கள். வேறுவழியின்றி போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால், போரின் துன்பங்களைச் சகித்துப் பொறுமையாக இருங்கள். மேலும், சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு, இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிக்க இருப்பவனே! இவர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!’ என்று பிரார்த்தனை புரிந்தார்கள்’. (அறிவிப்பாளர்: சாலிம் அபுந் நள்ர் (ரஹ்), நூல்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் போரை வலிய வந்து செய்ய விரும்பியது இல்லை. எதிரிகளைப் போர்க் களத்தில் சந்திக்கவும் ஆசைப்படவில்லை. போரின் அழிவுகளிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோரும்படி தமது தோழர்களிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறார்கள். போர் என்பதே அழிவுதான் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் தமது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்கிறார்கள். ஒருவேளை போர்தான் முடிவு, அதுதான் தீர்வு என்று வந்து, நம் மீது திணிக்கப்பட்டால் மனங்களால் பொறுமை கொண்டு, வாட்களால் அதை எதிர்கொண்டு துணிந்து நில்லுங்கள். போரில் பட்ட காயங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் சொர்க்கம் அருமருந்தாக அமையும் என்று சில ஆறுதலான வார்த்தை களையும் உதிர்த்திருக்கிறார்கள்.
அறப்போர் புரிவது நாவாலும் முடியாது; மனதாலும் முடியாது. உடல் பலத்தால்தான் முடியும். எனவே அறப்போர் புரிவதை இஸ்லாம் உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக தேர்வு செய்துள்ளது.
போர் என்பதை ஒரு அரசாங்கம்தான் தமது நாட்டின் பாதுகாப்பு கருதி தொடுக்க முடியும். தனிநபரோ, தனிக்குழுவினரோ, தனிஅமைப்போ தொடுக்க முடியாது. இவர்கள் தொடுப்பது போராக கருதமுடியாது. அதை வன்முறையாகத்தான் பாவிக்க முடியும். அறப்போருக்கு இஸ்லாத்தில் இடமுண்டு, வன்முறைக்கு இஸ்லாத்தில் எள் அளவு கூட இடம் கிடையாது.
நற்செயல்களில் சிறந்தது...
அறப்போர் குறித்த நபிமொழிகள் வருமாறு:
“இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்: நான் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே, நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன்.
‘தொழுகையை அதன் நேரத்தில் தொழுவது’ என்றார்கள்.
‘பிறகு எது?’ என்று கேட்டேன்.
‘தாய்-தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள்.
‘பிறகு எது?’ என்று கேட்டேன்.
‘இறைவழியில் அறப்போர் புரிவது’ என்று பதில் சொன்னார்கள்.’ (நூல்: புகாரி)
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ‘மக்களில் சிறந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘இறைவழியில் தன் உயிராலும், தன் பொருளாலும் போராடுபவரே’ என்று பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி)
‘இறை பாதையில் காலை நேரத்தில் சிறிது நேரம், அல்லது மாலை நேரத்தில் சிறிது நேரம் அறப்போர் புரியச் செல்வது; உலகம், அதிலுள்ள பொருட்கள் யாவற்றை விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
‘நபி (ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்து வந்த ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே, நான் முதலில் இறைவழியில் அறப்போர் புரிந்து விட்டு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், முதலில் நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பிறகு போரிடு’ என்று கூறினார்கள். எனவே, அவர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, இறைவழியில் போரிட்டு, அதில் வீரமரணமும் அடைந்தார். இவர் குறித்து நபி (ஸல்) கூறுகையில்: ‘இவர் சிறிதளவே செயல்பட்டு அதிகளவு நற்பலனைப் பெற்றார்’ என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: பராஉ (ரலி), நூல்: புகாரி)
இந்த மனிதர் தொழவில்லை; நோன்பு நோற்கவுமில்லை; ஜகாத்தும் வழங்கவில்லை; ஹஜ் செய்யவுமில்லை. நேராக நபியிடம் வந்தார், இஸ்லாத்தை ஏற்றார், அறப்போர் செய்து அதில் வீரமரணமும் அடைந்தார். இந்த இரண்டு செயல்களை மட்டுமே செய்தார். சொர்க்கம் உட்பட அபரிமிதமான பலன்களை அடைந்து விட்டார்.
அறப்போர் குறித்து திருக்குர்ஆன் கூறியிருப்பதாவது:
‘(நபியே!) அறப்போர் புரியம்படி இறை நம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக’. (திருக்குர்ஆன் 8:65)
‘நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி அறப்போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்களாலும் மற்றும் உயிர்களாலும் இறைவழியில் அறப்போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் அறப்போரிடுவோருக்கு, அறப்போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். அறப்போருக்குச் செல்லாதோரை விட அறப்போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தமது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். இறைவன் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 4:95-96)
இப்படிப்பட்ட பலவிதமான உயர் அந்தஸ்து இறைவழியில் அறப்போர் புரிவோருக்கு உண்டு. போரில் அறம் பேணும்படியும், வரம்பு மீறாமல் இருக்கும்படியும் இஸ்லாம் போதிக்கிறது.
‘உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவழியில் நீங்களும் அறப்போர்புரியுங்கள், வரம்பு மீறாதீர்கள். வரம்பு மீறியோரை இறைவன் நேசிக்கமாட்டான்’. (திருக்குர்ஆன் 2:190)
போரில் வரம்பு மீறுவது என்றால் இஸ்லாம் தடை செய்த செயல்களை யுத்தத்தின் போது செய்வது. அவை: போர்க்களத்தில் எதிரிகளை சித்ரவதை செய்யக்கூடாது. பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும், மதகுருமார்களையும், மடாதிபதிகளையும் கொல்லக்கூடாது. மரங்களை வெட்டவோ, எரிக்கவோ கூடாது. தேவையில்லாமல் உயிரினங்களை கொல்லக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் போரில் அறத்தையும், மனித நேயத்தையும் கடைபிடித்தார்கள். மதீனாவில் 10 ஆண்டுகளில் பலவிதமான போர்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டது. வேறுவழியின்றி அவர்களும் பலவிதமான போர்களை சந்திக்க நேரிட்டது.
அவற்றில் 1) பத்ர் போர், 2) உஹது, 3) அஹ்ஸாப், 4) முரைசீ, 5) தாயிப், 6) கைபர், 7) மக்கா, 8) ஹுனைன், 9) பனூகுரைளா ஆகிய ஒன்பது போர்களில் நபி (ஸல்) அவர்கள் நேரடியாகவே கலந்து கொண்டு அறப்போர் புரிந்திருக்கிறார்கள்.
மீதி பத்து போர்களில் படையை வழி நடத்திச் சென்றிருக்கிறார்கள். இதுபோக 38 சிறுபடைகளையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 57 போர்களில் இருதரப்பிலும் சேர்ந்து 1018 நபர்கள் மட்டுமே இறந்திருக்கிறார்கள். இதிலிருந்தே தெரியவருவது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடத்தியது அறப்போர்தான் என்று நிரூபணமாகிறது.
இஸ்லாமும் போரை விரும்பவில்லை. அவ்வாறு அது திணிக்கப்பட்டால் அதிலும் அறமும், மனித நேயமும், கடைபிடிக்கும்படி வற்புறுத்துகிறது. இனி உலகில் மூன்றாம் உலகப்போர் தேவையில்லை. உலகப் பொறுமைதான் தேவை. அறம் தான் தேவை. மனித நேயம் தான் தேவை. போர் இல்லாத உலகம் மலர வேண்டும். அழிவில்லாத உலகம் அமைய வேண்டும். போர் இல்லாத உலகை படைப்போம். உலக அமைதி பெற்று நலமாக வாழ்வோம். சமாதானம், சகோதரத்துவம், சமத்துவம் பேணி சமரசமாக வாழ்வோம். புறப்படுவீர், புது உலகை படைக்க.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
போரை இஸ்லாம் எந்த இடத்திலும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றதும் இல்லை; போரை தானாக, சுயமாக, விரும்பி துவங்கியதும் இல்லை. அதை ‘புனிதப்போர்’ என்று அறைகூவல் விடுத்ததும் இல்லை.
விலை மதிக்க முடியாத மாண்புமிகு மனித உயிர்களை பறிக்கும் செயல் எப்படி புனிதம் நிறைந்ததாக ஆகும்?. புனிதப்போர் எனும் சொல் குர்ஆனிலும் பயன்படுத்தப்படவில்லை, நபிமொழிகளிலும் உபயோகப்படுத்தப்படவில்லை.
போர்க்களத்தை விரும்பாதே
‘நபி (ஸல்) அவர்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாட்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை போர்க்களத்தில் இறங்காமல் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, ‘எதிரிகளைப் போர்க்களத்தில் சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம், போரின் அழிவுகளிலிருந்து பாதுகாக்கும்படி கேளுங்கள். வேறுவழியின்றி போர்க்களத்தில் எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால், போரின் துன்பங்களைச் சகித்துப் பொறுமையாக இருங்கள். மேலும், சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு, இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிக்க இருப்பவனே! இவர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!’ என்று பிரார்த்தனை புரிந்தார்கள்’. (அறிவிப்பாளர்: சாலிம் அபுந் நள்ர் (ரஹ்), நூல்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் போரை வலிய வந்து செய்ய விரும்பியது இல்லை. எதிரிகளைப் போர்க் களத்தில் சந்திக்கவும் ஆசைப்படவில்லை. போரின் அழிவுகளிலிருந்து இறைவனிடம் பாதுகாப்புக் கோரும்படி தமது தோழர்களிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறார்கள். போர் என்பதே அழிவுதான் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்கள் தமது கருத்தை ஆணித்தரமாக பதிவு செய்கிறார்கள். ஒருவேளை போர்தான் முடிவு, அதுதான் தீர்வு என்று வந்து, நம் மீது திணிக்கப்பட்டால் மனங்களால் பொறுமை கொண்டு, வாட்களால் அதை எதிர்கொண்டு துணிந்து நில்லுங்கள். போரில் பட்ட காயங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் சொர்க்கம் அருமருந்தாக அமையும் என்று சில ஆறுதலான வார்த்தை களையும் உதிர்த்திருக்கிறார்கள்.
அறப்போர் புரிவது நாவாலும் முடியாது; மனதாலும் முடியாது. உடல் பலத்தால்தான் முடியும். எனவே அறப்போர் புரிவதை இஸ்லாம் உடல் சார்ந்த இறைநம்பிக்கையாக தேர்வு செய்துள்ளது.
போர் என்பதை ஒரு அரசாங்கம்தான் தமது நாட்டின் பாதுகாப்பு கருதி தொடுக்க முடியும். தனிநபரோ, தனிக்குழுவினரோ, தனிஅமைப்போ தொடுக்க முடியாது. இவர்கள் தொடுப்பது போராக கருதமுடியாது. அதை வன்முறையாகத்தான் பாவிக்க முடியும். அறப்போருக்கு இஸ்லாத்தில் இடமுண்டு, வன்முறைக்கு இஸ்லாத்தில் எள் அளவு கூட இடம் கிடையாது.
நற்செயல்களில் சிறந்தது...
அறப்போர் குறித்த நபிமொழிகள் வருமாறு:
“இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்: நான் இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே, நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன்.
‘தொழுகையை அதன் நேரத்தில் தொழுவது’ என்றார்கள்.
‘பிறகு எது?’ என்று கேட்டேன்.
‘தாய்-தந்தையருக்கு நன்மை செய்வது’ என்றார்கள்.
‘பிறகு எது?’ என்று கேட்டேன்.
‘இறைவழியில் அறப்போர் புரிவது’ என்று பதில் சொன்னார்கள்.’ (நூல்: புகாரி)
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ‘மக்களில் சிறந்தவர் யார்?’ என்று கேட்கப்பட்டதற்கு, ‘இறைவழியில் தன் உயிராலும், தன் பொருளாலும் போராடுபவரே’ என்று பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி)
‘இறை பாதையில் காலை நேரத்தில் சிறிது நேரம், அல்லது மாலை நேரத்தில் சிறிது நேரம் அறப்போர் புரியச் செல்வது; உலகம், அதிலுள்ள பொருட்கள் யாவற்றை விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)
‘நபி (ஸல்) அவர்களிடம் இரும்பு முகமூடி அணிந்து வந்த ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே, நான் முதலில் இறைவழியில் அறப்போர் புரிந்து விட்டு இஸ்லாத்தை ஏற்கட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், முதலில் நீர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, பிறகு போரிடு’ என்று கூறினார்கள். எனவே, அவர் முதலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, இறைவழியில் போரிட்டு, அதில் வீரமரணமும் அடைந்தார். இவர் குறித்து நபி (ஸல்) கூறுகையில்: ‘இவர் சிறிதளவே செயல்பட்டு அதிகளவு நற்பலனைப் பெற்றார்’ என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: பராஉ (ரலி), நூல்: புகாரி)
இந்த மனிதர் தொழவில்லை; நோன்பு நோற்கவுமில்லை; ஜகாத்தும் வழங்கவில்லை; ஹஜ் செய்யவுமில்லை. நேராக நபியிடம் வந்தார், இஸ்லாத்தை ஏற்றார், அறப்போர் செய்து அதில் வீரமரணமும் அடைந்தார். இந்த இரண்டு செயல்களை மட்டுமே செய்தார். சொர்க்கம் உட்பட அபரிமிதமான பலன்களை அடைந்து விட்டார்.
அறப்போர் குறித்து திருக்குர்ஆன் கூறியிருப்பதாவது:
‘(நபியே!) அறப்போர் புரியம்படி இறை நம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக’. (திருக்குர்ஆன் 8:65)
‘நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி அறப்போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்களாலும் மற்றும் உயிர்களாலும் இறைவழியில் அறப்போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் அறப்போரிடுவோருக்கு, அறப்போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். அறப்போருக்குச் செல்லாதோரை விட அறப்போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தமது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். இறைவன் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 4:95-96)
இப்படிப்பட்ட பலவிதமான உயர் அந்தஸ்து இறைவழியில் அறப்போர் புரிவோருக்கு உண்டு. போரில் அறம் பேணும்படியும், வரம்பு மீறாமல் இருக்கும்படியும் இஸ்லாம் போதிக்கிறது.
‘உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவழியில் நீங்களும் அறப்போர்புரியுங்கள், வரம்பு மீறாதீர்கள். வரம்பு மீறியோரை இறைவன் நேசிக்கமாட்டான்’. (திருக்குர்ஆன் 2:190)
போரில் வரம்பு மீறுவது என்றால் இஸ்லாம் தடை செய்த செயல்களை யுத்தத்தின் போது செய்வது. அவை: போர்க்களத்தில் எதிரிகளை சித்ரவதை செய்யக்கூடாது. பெண்களையும், குழந்தைகளையும், முதியவர்களையும், மதகுருமார்களையும், மடாதிபதிகளையும் கொல்லக்கூடாது. மரங்களை வெட்டவோ, எரிக்கவோ கூடாது. தேவையில்லாமல் உயிரினங்களை கொல்லக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் போரில் அறத்தையும், மனித நேயத்தையும் கடைபிடித்தார்கள். மதீனாவில் 10 ஆண்டுகளில் பலவிதமான போர்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டது. வேறுவழியின்றி அவர்களும் பலவிதமான போர்களை சந்திக்க நேரிட்டது.
அவற்றில் 1) பத்ர் போர், 2) உஹது, 3) அஹ்ஸாப், 4) முரைசீ, 5) தாயிப், 6) கைபர், 7) மக்கா, 8) ஹுனைன், 9) பனூகுரைளா ஆகிய ஒன்பது போர்களில் நபி (ஸல்) அவர்கள் நேரடியாகவே கலந்து கொண்டு அறப்போர் புரிந்திருக்கிறார்கள்.
மீதி பத்து போர்களில் படையை வழி நடத்திச் சென்றிருக்கிறார்கள். இதுபோக 38 சிறுபடைகளையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 57 போர்களில் இருதரப்பிலும் சேர்ந்து 1018 நபர்கள் மட்டுமே இறந்திருக்கிறார்கள். இதிலிருந்தே தெரியவருவது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடத்தியது அறப்போர்தான் என்று நிரூபணமாகிறது.
இஸ்லாமும் போரை விரும்பவில்லை. அவ்வாறு அது திணிக்கப்பட்டால் அதிலும் அறமும், மனித நேயமும், கடைபிடிக்கும்படி வற்புறுத்துகிறது. இனி உலகில் மூன்றாம் உலகப்போர் தேவையில்லை. உலகப் பொறுமைதான் தேவை. அறம் தான் தேவை. மனித நேயம் தான் தேவை. போர் இல்லாத உலகம் மலர வேண்டும். அழிவில்லாத உலகம் அமைய வேண்டும். போர் இல்லாத உலகை படைப்போம். உலக அமைதி பெற்று நலமாக வாழ்வோம். சமாதானம், சகோதரத்துவம், சமத்துவம் பேணி சமரசமாக வாழ்வோம். புறப்படுவீர், புது உலகை படைக்க.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
இறைவனின் படைப்பில் ஆண், பெண் என பாலின வேறுபாடுகள் இல்லை. அவன் பார்வையில் அனைவரும் சமமே. இஸ்லாமும் இவர்களை ஒரே கண் கொண்டு தான் பார்க்கிறது.
இறைவனின் படைப்பில் ஆண், பெண் என பாலின வேறுபாடுகள் இல்லை. அவன் பார்வையில் அனைவரும் சமமே. இஸ்லாமும் இவர்களை ஒரே கண் கொண்டு தான் பார்க்கிறது.
‘மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 4:1)
‘மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 49:13)
மேற்கண்ட இரு வசனங்களும் மனிதப்படைப்பின் ஆரம்ப நிலையை அழகாக சுட்டிக்காட்டுகின்றன. கூடவே பெண்ணின்றி ஆணும் இல்லை, அகிலமும் இல்லை என்றறிய முடிகிறது. ஆணை விட சற்று தாழ்ந்தவள் பெண் என்று இஸ்லாம் எங்குமே சொல்லவில்லை. இருவரையும் சமப்படுத்தித்தான் திருக்குர்ஆனும், நபிமொழியும் பேசுகின்றன. பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை வாசித்துப் பாருங்கள் உண்மைகள் பல உங்களுக்குப் புரியும்:
‘நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும், இறைவனை வழிபடும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 33:35)
இவ்வசனம் முழுவதும் ஒன்றுக்குப் பலமுறை ‘பெண்கள்’ என்ற சொல் இடம் பெற்றிருப்பதில் இருந்தே பெண்கள் குறித்த மகத்துவத்தை புரிந்துகொள்ளலாம். பெண்களை பற்றி அல்லாஹ் தனியாக ஒன்றுமே கூறவில்லையே, என்று அன்னை உம்மு சல்மா (ரலி) கூறிய போது தான் இவ்வசனமே இறங்கத் தொடங்கிற்று.
பெண்களை மதிக்காத காலம் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில் இருந்தது. அந்த நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிய பெருமை புனித இஸ்லாமிய மார்க்கத்திற்கு உண்டு. நபிகள் நாயகம் தமது இறுதி உயிர்மூச்சை விடும் முன் தமது அன்புத்தோழர்களிடம் “நீங்கள் பெண்கள் விஷயத்தில் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். அவர்களின் கன்னத்தில் அறையாதீர்கள், அவர்கள் உங்களிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டவர்கள். எனவே நீங்கள் பெண்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள்” என்று கூறினர்கள் என்பது அவர்களது வாழ்வியல் காட்டும் வரலாறு.
பெண்களைக் குறித்து நபிகள் நாயகம் கூறிய ஒவ்வொரு சொற்களும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. குறிப்பாக பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துப் பேசும் இறைமறை வசனம் ஒன்றும் மிகவும் கவனிக்கத்தக்கதே.
‘(நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக்கொள்ளவும். தவிர, தங்கள் தேகத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர தங்கள் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக்கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக்கொள்ளவும். பெண்கள் தங்களுடைய கணவர்கள், தங்களுடைய தந்தைகள், தங்களுடைய கணவர்களின் தந்தைகள், தங்களுடைய பிள்ளைகள், தங்களுடைய கணவர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரர்கள், தங்களுடைய சகோதரர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரிகளின் பிள்ளைகள், அல்லது (முஸ்லிமாகிய) தங்களுடைய இனத்தாரின் பெண்கள், தங்களுடைய அடிமைகள் அல்லது பெண்களின் விருப்பமற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயங்களை அறிந்து கொள்ளாத சிறுவயதையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்றெவர் முன்பும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களை போன்ற) மறைந்திருக்கும் தங்களுடைய அலங்காரத்தை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்களுடைய கால்களை (பூமியில்) தட்டித்தட்டி நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! (இதில் எதிலும் உங்களால் தவறு ஏற்பட்டு விட்டால்) நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்பைக் கோரி (உங்கள் மனதைத்) திருப்புங்கள். (திருக்குர்ஆன் 24:31)
பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அவர்கள் தங்கள் அழகை, அலங்காரத்தை எப்படி காட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் தான் பிரச்சினையே எழுகிறது. அவை சரியாக, முறையாக இருந்தால் போதும் நகை பறிப்பு, பலாத்காரம் போன்ற எந்தப் பிரச் சினையும் ஏற்படுவதற்கு வழியில்லை.
எனவே பெண்கள் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டிய காலமிது. அவர்களது சுய அழகையும், புற அழகையும் காட்டும் செயலே அவர்களுக்கு பெரும்பாதிப்பாக அமைந்து விடக்கூடும் என்பதில் பெண்கள் என்றைக்கும் வெகு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தற்கால நடைமுறை வாழ்க்கை குறித்த தெளிவும், புரிந்துணர்வும், சுயக்கட்டுப்பாடும் நம்மிடம் வராதவரை நமது இலக்குகள் வெகு தூரம் தான்.
பெண்களின் பெருமைகளைப் போற்றுவோம், பெண்கள் மீதான கொடுமைகளை தடுப்போம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
‘மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக் கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 4:1)
‘மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற்கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர் தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 49:13)
மேற்கண்ட இரு வசனங்களும் மனிதப்படைப்பின் ஆரம்ப நிலையை அழகாக சுட்டிக்காட்டுகின்றன. கூடவே பெண்ணின்றி ஆணும் இல்லை, அகிலமும் இல்லை என்றறிய முடிகிறது. ஆணை விட சற்று தாழ்ந்தவள் பெண் என்று இஸ்லாம் எங்குமே சொல்லவில்லை. இருவரையும் சமப்படுத்தித்தான் திருக்குர்ஆனும், நபிமொழியும் பேசுகின்றன. பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை வாசித்துப் பாருங்கள் உண்மைகள் பல உங்களுக்குப் புரியும்:
‘நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும், இறைவனை வழிபடும் ஆண்களும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய திருப்பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 33:35)
இவ்வசனம் முழுவதும் ஒன்றுக்குப் பலமுறை ‘பெண்கள்’ என்ற சொல் இடம் பெற்றிருப்பதில் இருந்தே பெண்கள் குறித்த மகத்துவத்தை புரிந்துகொள்ளலாம். பெண்களை பற்றி அல்லாஹ் தனியாக ஒன்றுமே கூறவில்லையே, என்று அன்னை உம்மு சல்மா (ரலி) கூறிய போது தான் இவ்வசனமே இறங்கத் தொடங்கிற்று.
பெண்களை மதிக்காத காலம் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டில் இருந்தது. அந்த நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிய பெருமை புனித இஸ்லாமிய மார்க்கத்திற்கு உண்டு. நபிகள் நாயகம் தமது இறுதி உயிர்மூச்சை விடும் முன் தமது அன்புத்தோழர்களிடம் “நீங்கள் பெண்கள் விஷயத்தில் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். அவர்களின் கன்னத்தில் அறையாதீர்கள், அவர்கள் உங்களிடம் அமானிதமாக ஒப்படைக்கப்பட்டவர்கள். எனவே நீங்கள் பெண்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள்” என்று கூறினர்கள் என்பது அவர்களது வாழ்வியல் காட்டும் வரலாறு.
பெண்களைக் குறித்து நபிகள் நாயகம் கூறிய ஒவ்வொரு சொற்களும் கூர்ந்து கவனிக்கத்தக்கவை. குறிப்பாக பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துப் பேசும் இறைமறை வசனம் ஒன்றும் மிகவும் கவனிக்கத்தக்கதே.
‘(நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள்: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக்கொள்ளவும். தவிர, தங்கள் தேகத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர தங்கள் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக்கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக்கொள்ளவும். பெண்கள் தங்களுடைய கணவர்கள், தங்களுடைய தந்தைகள், தங்களுடைய கணவர்களின் தந்தைகள், தங்களுடைய பிள்ளைகள், தங்களுடைய கணவர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரர்கள், தங்களுடைய சகோதரர்களின் பிள்ளைகள், தங்களுடைய சகோதரிகளின் பிள்ளைகள், அல்லது (முஸ்லிமாகிய) தங்களுடைய இனத்தாரின் பெண்கள், தங்களுடைய அடிமைகள் அல்லது பெண்களின் விருப்பமற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயங்களை அறிந்து கொள்ளாத சிறுவயதையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்றெவர் முன்பும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களை போன்ற) மறைந்திருக்கும் தங்களுடைய அலங்காரத்தை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்களுடைய கால்களை (பூமியில்) தட்டித்தட்டி நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! (இதில் எதிலும் உங்களால் தவறு ஏற்பட்டு விட்டால்) நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வின் பக்கமே பாவ மன்னிப்பைக் கோரி (உங்கள் மனதைத்) திருப்புங்கள். (திருக்குர்ஆன் 24:31)
பெண்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்தில்லை. அவர்கள் தங்கள் அழகை, அலங்காரத்தை எப்படி காட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் தான் பிரச்சினையே எழுகிறது. அவை சரியாக, முறையாக இருந்தால் போதும் நகை பறிப்பு, பலாத்காரம் போன்ற எந்தப் பிரச் சினையும் ஏற்படுவதற்கு வழியில்லை.
எனவே பெண்கள் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டிய காலமிது. அவர்களது சுய அழகையும், புற அழகையும் காட்டும் செயலே அவர்களுக்கு பெரும்பாதிப்பாக அமைந்து விடக்கூடும் என்பதில் பெண்கள் என்றைக்கும் வெகு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தற்கால நடைமுறை வாழ்க்கை குறித்த தெளிவும், புரிந்துணர்வும், சுயக்கட்டுப்பாடும் நம்மிடம் வராதவரை நமது இலக்குகள் வெகு தூரம் தான்.
பெண்களின் பெருமைகளைப் போற்றுவோம், பெண்கள் மீதான கொடுமைகளை தடுப்போம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
பரமக்குடி வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் சமூக நல்லிணக்க ஐம்பெரும் விழா பரமக்குடி கீழப்பள்ளிவாசலில் நடைபெற்றது.
பரமக்குடி வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் சமூக நல்லிணக்க ஐம்பெரும் விழா பரமக்குடி கீழப்பள்ளிவாசலில் நடைபெற்றது.
வட்டார உலமா சபைத் தலைவர் வலியுல்லா தலைமை தாங்கினார். பரமக்குடி வட்டார அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உலமா பெருமக்கள் முன்னிலை வகித்தனர்.
வட்டார உலமா சபை செயல் தலைவர் ஜலாலுதீன் வரவேற்றார். சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மதுரை நிலையூர் ஆதீனம் சுப்பிரமணிய சுவாமிகள், சிவகங்கை மறை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் மாணாக்கர் பணிக்குழு செயலாளர் பிரிட்டோ ஆகியோர் பேசினர்.
குரான் ஓதும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வட்டார உலமா சபை செயலாளர் அப்துல் வஹாப் நன்றி கூறினார்.
விழாவில் பரமக்குடி, நயினார்கோவில், போகலூர் வட்டாரத்தைச் சார்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
வட்டார உலமா சபைத் தலைவர் வலியுல்லா தலைமை தாங்கினார். பரமக்குடி வட்டார அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உலமா பெருமக்கள் முன்னிலை வகித்தனர்.
வட்டார உலமா சபை செயல் தலைவர் ஜலாலுதீன் வரவேற்றார். சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மதுரை நிலையூர் ஆதீனம் சுப்பிரமணிய சுவாமிகள், சிவகங்கை மறை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் மாணாக்கர் பணிக்குழு செயலாளர் பிரிட்டோ ஆகியோர் பேசினர்.
குரான் ஓதும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. வட்டார உலமா சபை செயலாளர் அப்துல் வஹாப் நன்றி கூறினார்.
விழாவில் பரமக்குடி, நயினார்கோவில், போகலூர் வட்டாரத்தைச் சார்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நியாயமான வழியில் சம்பாதித்து, நியாயமான முறையில் செலவு செய்வது’ குறித்த தகவல்களை காண்போம்.
நல்ல வழியில் சம்பாதிப்பதும், அதை நல்ல வழியில் செலவளிப்பதும் இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. குடும்பத்திற்காக, ஆதரவற்றோருக்காக பாடுபடுவது, அவர்களுக்காக செலவு செய்வது யாவுமே இறைநம்பிக்கைதான். இதை இஸ்லாம் உடல்சார்ந்த இறைநம்பிக்கையின் ஒரு அங்கமாக தேர்வு செய்கிறது. இந்த உழைப்பும், வரவும், செலவும் முறையான வழியில் அமைந்திருக்க வேண்டும். முறையற்ற வழியில் அமைந்தால் அது இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிடும்.
நமது வரவும், செலவும் இஸ்லாம் வலியுறுத்தும் நல்ல வழியில் (ஹலாலாக) அமைய வேண்டும். இறைவன் தடுத்துள்ள (ஹராமான) வழியில் இருக்கக்கூடாது.
ஹராமான தொழில், வருமானம், செலவினங்கள் இவற்றை விட்டும் உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் தவிர்த்து நடக்கும்படி இறைவன் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
‘அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான்’. (திருக்குர்ஆன் 2:275)
‘அளவில் மோசடி செய்பவர்களுக்கு கேடுதான்’. (திருக்குர்ஆன் 83:1)
இதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:
‘நிச்சயமாக அல்லாஹ் ஒரு பொருளை ஹராமாக்கினால், அதன் மூலம் கிடைக்கும் கிரயத்தையும் ஹராமாக்கி விடுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்: தாரகுத்னீ)
‘வட்டி சாப்பிடுபவன், சாப்பிடக் கொடுப்பவன், அதை எழுதுபவன், அதன் இரு சாட்சிகள் ஆகியோரை நபி (ஸல்) சபித்துள்ளார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
‘லஞ்சம் வாங்குபவன், அதை கொடுப்பவன் ஆகியோர் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: இப்னுமாஜா).
ஹலாலான தொழில் செய்து, அதன் வாயிலாக பொருளீட்ட வேண்டும். இவ்வாறு பொருளீட்டுவதற்கு இறைவனே ஆர்வமூட்டுகின்றான்.
‘அவனே பூமியை (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதி களிலும் நீங்கள் செல்லுங்கள். அவனது உணவை உண்ணுங்கள். அவனிடமே மீளுதல் உள்ளது’. (திருக்குர்ஆன் 67:15)
ஹலாலான தொழில் எதுவாக இருந்தாலும் அதில் ஈடுபட்டு ஆகுமான முறையில் சம்பாதிக்க வேண்டும். அதிலிருந்து தானும் உண்ண வேண்டும். பிறருக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும். அதன் வருமானத்தை தமக்கும், தமது குடும்பத்தாருக்கும், தேவைப்படுவோருக்கும் செலவு செய்ய வேண்டும்.
ஆதம் (அலை) அவர்கள் ஆரம்பித்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்கும் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து, பொருளீட்டித் தான் வாழ்ந்துள்ளார்கள்.
‘அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை’ என நபி (ஸல்) கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘நீங்களுமா?’ என்று கேட்டார்கள். ‘ஆம், மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்’ என்று நபி (ஸல்) பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் இளைஞராக இருந்தபோது வியாபாரத்தில் ஈடுபட்டு பொருளீட்டியுள்ளார்கள்.
‘ஒருவர் தம் கையால் உழைத்து, உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ணமுடியாது. நபி தாவூத் (அலை) அவர்கள் தங்களின் கையால் உழைத்து, உண்பவராக இருந்தார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: மிக்தாம் (ரலி), நூல்: புகாரி)
நபி தாவூத் (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு சிறப்பித்து கூறப்படுவதற்கு காரணம் அவர்கள் மன்னராக இருந்தபோதிலும் போர்க்கவசங்களை தமது கையால் செய்து, அதிலிருந்து வரும் வருமானத்தில் தான் அவர் உண்பார்.
‘தாவூதுக்கு (அலை) நாம் நமது அருளை வழங்கினோம். மலைகளே, பறவைகளே, அவருடன் சேர்ந்து துதியுங்கள் (எனக் கூறினோம்). போர்க் கவசங்களைச் செய்வீராக, அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக’ என (கூறி) அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம். ‘நல்லறத்தைச் செய்யுங்கள், நீங்கள் செய்பவற்றை நான் பார்ப்பவன்’ எனவும் கூறினோம்’. (திருக்குர்ஆன் 34:10,11)
நியாயமான சம்பாத்தியத்தின் மூலம் கிடைத்த உணவினால் தான் நல்ல உணர்வு ஏற்படும்; நல்ல செயலும் ஏற்படும். இதனால்தான் இறைவன் தமது திருமறையில் நபிமார்களைப் பார்த்தும், இறைநம்பிக்கையாளர்களைப் பார்த்தும் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
‘இறைத்தூதர்களே, (ஹலாலான) ஆகுமான உணவை உண்ணுங்கள். நற்செயல் புரியுங்கள். நீங்கள் செய்கின்ற செயலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்.’ (திருக்குர்ஆன் 23:51)
‘இறைநம்பிக்கை யாளர்களே, நாம் உங்களுக்கு வழங்கிய (ஹலாலான) ஆகுமானவற்றையே உண்ணுங்கள்’. (திருக்குர்ஆன் 2:172)
இறைத்தூதர்களான நபிமார்கள் ஆகுமான உணவை உண்பதற்காக, தமது குடும்பத்தாரின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக யாரிடமும் கையேந்தவில்லை. தமக்கு தெரிந்த, தம்மால் முடிந்த கைத்தொழில்களின் மூலம் சம்பாதித்து பொருளீட்டினார்கள்.
‘எது தூய்மையான சம்பாத்தியம்?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஒருவர் தமது கையால் உழைப்பதே’ என்று பதில் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ரிபாஆ பின் ராபிஉ (ரலி), நூல்: பஸ்ஸார்)
‘உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக்கொண்டு, காலைப்பொழுதில் மலைக்குச்சென்று, விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது மக்களிடம் யாசிப்பதை விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
‘நாளை மறுமையில் பின்வரும் நான்கு கேள்விகளுக்கு பதில் கூறாமல் எந்த ஒரு அடியானின் இரண்டு பாதங்களும் நகர முடியாது. 1) உனது ஆயுளை நீ எவ்வாறு கழித்தாய்?, 2) உனது வாலிபத்தை நீ எவ்வாறு அமைத்தாய்?, 3) உனது பொருளாதாரத்தை நீ எவ்வாறு சம்பாதித்தாய்?, அதை எந்த விதத்தில் செலவளித்தாய்?, 4) நீ கற்றதின் படி எவ்வாறு நடந்தாய்? என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி)
வரவும் முக்கியம், செலவும் முக்கியம். இரண்டுக்குமே இறைவனிடம் பதில் சொல்லியே தீர வேண்டும். இரண்டுமே நியாயமான வழியில் அமைய வேண்டும்.
‘யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதை இறைவன் தமது வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
‘ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளின் கணவனுக்கும் கிடைக்கும். அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
‘தேவை போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்தது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
ஆகுமான வழியில் நமது பொருளாதாரத்தை செலவு செய்வதும் இறைநம்பிக்கைதான். அதனடிப்படையில் கல்விக்காக, மருத்துவத்திற்காக, மக்களின் உயிர்நாடியான குடிநீருக்காக, மக்களின் அத்தியாவசிய தேவைக்காக, நாம் நிதி ஆதாரத்தை செலவிட வேண்டும். பசியில் வாடுபவருக்காக அன்னதானம், நோயில் சிரமப்படுவோருக்காக இலவச மருத்துவமனை, தாகத்தால் தவிப்பவருக்காக குடிநீர் தொட்டிகள் போன்றவற்றை அமைப்போம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
நமது வரவும், செலவும் இஸ்லாம் வலியுறுத்தும் நல்ல வழியில் (ஹலாலாக) அமைய வேண்டும். இறைவன் தடுத்துள்ள (ஹராமான) வழியில் இருக்கக்கூடாது.
ஹராமான தொழில், வருமானம், செலவினங்கள் இவற்றை விட்டும் உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் தவிர்த்து நடக்கும்படி இறைவன் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.
‘அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி, வட்டியைத் தடுத்து (ஹராமாக்கி) விட்டான்’. (திருக்குர்ஆன் 2:275)
‘அளவில் மோசடி செய்பவர்களுக்கு கேடுதான்’. (திருக்குர்ஆன் 83:1)
இதுகுறித்த நபிமொழிகள் வருமாறு:
‘நிச்சயமாக அல்லாஹ் ஒரு பொருளை ஹராமாக்கினால், அதன் மூலம் கிடைக்கும் கிரயத்தையும் ஹராமாக்கி விடுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (நூல்: தாரகுத்னீ)
‘வட்டி சாப்பிடுபவன், சாப்பிடக் கொடுப்பவன், அதை எழுதுபவன், அதன் இரு சாட்சிகள் ஆகியோரை நபி (ஸல்) சபித்துள்ளார்கள்’. (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்)
‘லஞ்சம் வாங்குபவன், அதை கொடுப்பவன் ஆகியோர் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுஉமர் (ரலி), நூல்: இப்னுமாஜா).
ஹலாலான தொழில் செய்து, அதன் வாயிலாக பொருளீட்ட வேண்டும். இவ்வாறு பொருளீட்டுவதற்கு இறைவனே ஆர்வமூட்டுகின்றான்.
‘அவனே பூமியை (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதி களிலும் நீங்கள் செல்லுங்கள். அவனது உணவை உண்ணுங்கள். அவனிடமே மீளுதல் உள்ளது’. (திருக்குர்ஆன் 67:15)
ஹலாலான தொழில் எதுவாக இருந்தாலும் அதில் ஈடுபட்டு ஆகுமான முறையில் சம்பாதிக்க வேண்டும். அதிலிருந்து தானும் உண்ண வேண்டும். பிறருக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும். அதன் வருமானத்தை தமக்கும், தமது குடும்பத்தாருக்கும், தேவைப்படுவோருக்கும் செலவு செய்ய வேண்டும்.
ஆதம் (அலை) அவர்கள் ஆரம்பித்து இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வரைக்கும் ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து, பொருளீட்டித் தான் வாழ்ந்துள்ளார்கள்.
‘அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை’ என நபி (ஸல்) கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘நீங்களுமா?’ என்று கேட்டார்கள். ‘ஆம், மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்’ என்று நபி (ஸல்) பதிலளித்தார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
நபி (ஸல்) அவர்கள் இளைஞராக இருந்தபோது வியாபாரத்தில் ஈடுபட்டு பொருளீட்டியுள்ளார்கள்.
‘ஒருவர் தம் கையால் உழைத்து, உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ணமுடியாது. நபி தாவூத் (அலை) அவர்கள் தங்களின் கையால் உழைத்து, உண்பவராக இருந்தார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: மிக்தாம் (ரலி), நூல்: புகாரி)
நபி தாவூத் (அலை) அவர்களைப் பற்றி இவ்வாறு சிறப்பித்து கூறப்படுவதற்கு காரணம் அவர்கள் மன்னராக இருந்தபோதிலும் போர்க்கவசங்களை தமது கையால் செய்து, அதிலிருந்து வரும் வருமானத்தில் தான் அவர் உண்பார்.
‘தாவூதுக்கு (அலை) நாம் நமது அருளை வழங்கினோம். மலைகளே, பறவைகளே, அவருடன் சேர்ந்து துதியுங்கள் (எனக் கூறினோம்). போர்க் கவசங்களைச் செய்வீராக, அவற்றின் வளையங்களை ஒழுங்குபடுத்துவீராக’ என (கூறி) அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம். ‘நல்லறத்தைச் செய்யுங்கள், நீங்கள் செய்பவற்றை நான் பார்ப்பவன்’ எனவும் கூறினோம்’. (திருக்குர்ஆன் 34:10,11)
நியாயமான சம்பாத்தியத்தின் மூலம் கிடைத்த உணவினால் தான் நல்ல உணர்வு ஏற்படும்; நல்ல செயலும் ஏற்படும். இதனால்தான் இறைவன் தமது திருமறையில் நபிமார்களைப் பார்த்தும், இறைநம்பிக்கையாளர்களைப் பார்த்தும் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
‘இறைத்தூதர்களே, (ஹலாலான) ஆகுமான உணவை உண்ணுங்கள். நற்செயல் புரியுங்கள். நீங்கள் செய்கின்ற செயலை நான் அறிந்தவனாக இருக்கின்றேன்.’ (திருக்குர்ஆன் 23:51)
‘இறைநம்பிக்கை யாளர்களே, நாம் உங்களுக்கு வழங்கிய (ஹலாலான) ஆகுமானவற்றையே உண்ணுங்கள்’. (திருக்குர்ஆன் 2:172)
இறைத்தூதர்களான நபிமார்கள் ஆகுமான உணவை உண்பதற்காக, தமது குடும்பத்தாரின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்காக யாரிடமும் கையேந்தவில்லை. தமக்கு தெரிந்த, தம்மால் முடிந்த கைத்தொழில்களின் மூலம் சம்பாதித்து பொருளீட்டினார்கள்.
‘எது தூய்மையான சம்பாத்தியம்?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஒருவர் தமது கையால் உழைப்பதே’ என்று பதில் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ரிபாஆ பின் ராபிஉ (ரலி), நூல்: பஸ்ஸார்)
‘உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக்கொண்டு, காலைப்பொழுதில் மலைக்குச்சென்று, விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தர்மம் செய்வது மக்களிடம் யாசிப்பதை விடச் சிறந்ததாகும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
‘நாளை மறுமையில் பின்வரும் நான்கு கேள்விகளுக்கு பதில் கூறாமல் எந்த ஒரு அடியானின் இரண்டு பாதங்களும் நகர முடியாது. 1) உனது ஆயுளை நீ எவ்வாறு கழித்தாய்?, 2) உனது வாலிபத்தை நீ எவ்வாறு அமைத்தாய்?, 3) உனது பொருளாதாரத்தை நீ எவ்வாறு சம்பாதித்தாய்?, அதை எந்த விதத்தில் செலவளித்தாய்?, 4) நீ கற்றதின் படி எவ்வாறு நடந்தாய்? என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: திர்மிதி)
வரவும் முக்கியம், செலவும் முக்கியம். இரண்டுக்குமே இறைவனிடம் பதில் சொல்லியே தீர வேண்டும். இரண்டுமே நியாயமான வழியில் அமைய வேண்டும்.
‘யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. அதை இறைவன் தமது வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
‘ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளின் கணவனுக்கும் கிடைக்கும். அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
‘தேவை போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்தது என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
ஆகுமான வழியில் நமது பொருளாதாரத்தை செலவு செய்வதும் இறைநம்பிக்கைதான். அதனடிப்படையில் கல்விக்காக, மருத்துவத்திற்காக, மக்களின் உயிர்நாடியான குடிநீருக்காக, மக்களின் அத்தியாவசிய தேவைக்காக, நாம் நிதி ஆதாரத்தை செலவிட வேண்டும். பசியில் வாடுபவருக்காக அன்னதானம், நோயில் சிரமப்படுவோருக்காக இலவச மருத்துவமனை, தாகத்தால் தவிப்பவருக்காக குடிநீர் தொட்டிகள் போன்றவற்றை அமைப்போம். அல்லாஹ்வின் அருளைப் பெறுவோம்.
நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எப்படி வாழவேண்டும்? என்பதற்கான பதில்களை எல்லாம் இறைவழிகாட்டுதல்கள் மட்டுமே அழகாகச் சொல்லித்தரும்.
மகிழ்ச்சியும் மனநிறைவும் மிக்க வாழ்வு குறித்தே ஒவ்வொரு மனிதனும் கனவு காணுகின்றான். அதனைச் செயல்வடிவில் கொண்டுவருவதற்காக ‘எலி ஓட்டம்’ ஓடுகின்றான்.
செல்வம், அதிகாரம், அறிவு இவைதான் மகிழ்ச்சியான வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகள் என்று தவறாகப் புரிந்து வைத்துள்ளோம். மகிழ்ச்சியைத் தேடி செல்வத்திற்குப் பின்னால் ஓடி, மிச்சம் மீதி இருக்கும் கொஞ்சநஞ்ச மகிழ்ச்சியையும் தொலைத்தவர்கள் ஏராளம்.
அதிகார அரியணைகளைக் கைப்பற்றி உலகையே அடக்கி ஆண்ட பலரும் தனிப்பட்ட வாழ்வில் நிம்மதியைத் தொலைத்தவர் களாகவே இருந்துள்ளனர். ‘பிரபலம்’ எனும் கொடிக்கம்பத்தில் ஏறிய பலரும் வாழ்வில் நிராசையடைந்தவர்களாகவே இருந்துள்ளனர்.
‘நிம்மதியான வாழ்வு’ என்பது பஞ்சு மெத்தையிலும், பட்டு விரிப்பிலும் கிடைப்பதல்ல. அரண்மனை போன்ற வீடும், வானுயர்ந்த கட்டிடங்களும் சாந்திமிக்க வாழ்வின் உறைவிடமாக ஒருபோதும் அமையாது. ருசிகரமான உணவுப் பதார்த்தங்கள் யதார்த்த வாழ்வில் ஏற்படும் வெறுமையை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.
உயர் பதவிகளும் பெரும் பொறுப்புகளும் நிம்மதி நிறைந்த வாழ்வை பரிசாக வழங்காது. அறிவு இருப்பதன் காரணத்தால் மட்டும் வாழ்வு மகிழ்ச்சிகரமாக ஒருபோதும் மாறாது.
வாழ்க்கை என்றால் என்ன?
‘சப்தமும் கோபமும் நிறைந்த பொருளற்ற முட்டாள்தனமான கதைதான் வாழ்வு’ என்று ஷேக்ஸ்பியருடைய காதாபாத்திரம் மாக்பத் கூறுவதைப் போன்று, வாழ்வு என்பது அர்த்தமற்ற ஒன்றல்ல. மனிதன் வெறுமனே வாழ்ந்து மடிவதற்காகப் படைக்கப்பட்டவனுமல்ல. உண்டு, குடித்து, ரசித்து, ருசித்து கடந்துசெல்ல வேண்டியதல்ல வாழ்க்கை.
மாறாக வாழ்வு என்பது கடமைகளும், உரிமைகளும், கொள்வினை கொடுப்பினைகளும், சுகமும் துக்கமும் நிறைந்தது. வாழ்வின் ஒவ்வொரு அசைவுக்கும் படைத்தவனிடம் நாம் பதில் சொல்லியாக வேண்டும்.
‘எனக்கான கடமைகளை நிறைவேற்றியிருக்கின்றேன்’ என்ற உணர்வுடன் வாழ்க்கையை நகர்த்துவதே அபார மகிழ்ச்சி தரும் விஷயம்தான். அதேசமயம் சொந்தக் கவலைகளை அகற்றி வைத்து, அடுத்தவருடைய மகிழ்ச்சிக்காக தியாகம் செய்ய முடியும் என்றிருந்தால் அந்த வாழ்வு தரும் சுகமே தனிதான்.
சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், ‘வாழ்வு என்பது அறிந்து அனுபவிக்க வேண்டிய ஒரு சுகந்த அனுபவம்’. அவ்வாறு வாழ முற்படுகின்றவர்களுக்கு மரணம்கூட நிம்மதியான அனுபவமாக மாறலாம்.
மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு ஒருசில வழிகாட்டுதல்களும் வழிமுறைகளும் அவசியம் தேவைப்படுகின்றன. ஏனைய உயிரினங்களைப் போன்று சுதந்திரமாக அவனை விட்டுவிட்டால், அதன் பலாபலன் சர்வ நாசமாக இருக்கும். பெரும் குழப்பங்களே எஞ்சி நிற்கும். எனவே இந்த வழிகாட்டுதல்களை வழங்குவது யார்? இதுதான் தலையாய வினா.
ஒவ்வொருவரும் தங்களது மனோஇச்சையின் அடிப்படையில் வாழ்வுக்கான வியாக்கியானங்களைக் கொடுக்க முயன்றால், சிலபோது மானுட வர்க்கம் நிலைத்திருப்பதே பேராபத்தில் சென்று முடியலாம். மனித வாழ்வுக்கான வழிகாட்டுதல்களை மனிதனே வழங்கினால் அவற்றில் மனிதப் பலவீனங்கள் கண்டிப்பாகக் கலந்திருக்கும். இங்குதான் மனிதனுக்கு தெய்வீக வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.
வாழ்வு குறுகிய காலம் மட்டுமே
வாழ்வு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வாறே மரணமும் சத்தியமானது. எல்லா உடல்களும் மரணத்தின் சுவையை சுவைத்தே தீருகின்றன என்று குர்ஆன் மரணத்தைக் குறித்து இவ்வாறு குறிப்பிடுகின்றது: “ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்க வேண்டியதாய் இருக்கின்றது” (29:57)
சுவை என்றால் என்ன? இனிப்பு, கசப்பு, சிலபோது உவர்ப்பு, இந்த ருசிகளையே நாம் சுவை என்கிறோம். எனவே மரணம் சிலருக்கு இனிப்பாக இருக்கலாம். சிலருக்குக் கசப்பாக இருக்காலாம். வேறுசிலருக்கு உவர்ப்பாகவும் இருக்கலாம். வாழ்வு எவ்வாறு இருந்தது என்பதன் அடிப்படையில்தான் மரணத்தின் சுவையும் அமையும்.
சுவை எவ்வாறு இருந்தாலும் வாழ்வின் இறுதி முடிவல்ல மரணம். மாறாக வாழ்வின் தொடர்ச்சிதான் மரணம் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. மறுமை வாழ்வின் விசாலமான கதவுகளை திறந்து தருவதுதான் மரணம். மரணத்துக்கு வரம்புகள் கிடையாது. சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடோ, ஆண்-பெண் என்ற பாகுபாடோ கிடையாது.
மரணம் வந்துவிட்டால் அனைத்தையும் விட்டுவிட்டுச் சென்று விடவேண்டியதுதான். நம்முடைய மரணத்துக்காக உலகம் தவித்துப்போகும் என்பதோ, உலகமே அழும் என்பதோ கிடையாது. நமக்காக அழும் ஒருசிலர்கூட கொஞ்ச நாட்கள்தான் அழுவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நமக்காகக் கண்ணீர் சிந்தவோ, நம்மைக் குறித்து நினைக்கவோகூட யாரும் இருக்க மாட்டார்கள்.
மனிதனுக்கு அறிவும் தேவை, ஆன்மிகமும் தேவை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்க வேண்டும். இரண்டையும் தனித்தனியாகப் பிரிக்கும்போதுதான் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
‘அறிவும் மட்டும் போதும், ஆன்மிகம் தேவையில்லை’ என்று கூறும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கின்றார்கள். ‘ஆன்மிகம் மட்டும் போதும், அறிவு தேவையில்லை’ என்று கூறும் வேறொரு மக்கள் கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அறிவும் ஆன்மிகமும் ஒன்றாக இணையும்போதுதான் இறைவழிகாட்டுதலை புரிந்துகொள்ள முடியும். இறைவழிகாட்டுதல்கள், மனிதனை மனிதனுக்கு அழகாக அறிமுகம் செய்து வைக்கும்.
நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எப்படி வாழவேண்டும்? என்பதற்கான பதில்களை எல்லாம் இறைவழிகாட்டுதல்கள் மட்டுமே அழகாகச் சொல்லித்தரும்.
மனிதக் கொள்கைகளும், தத்துவங்களும் மாற்றத்திற்கு உள்ளாகும். காலத்தால் மாறலாம். இடத்தால் மாறலாம். மனிதப்பலவீனங்களால் மாறலாம். ஆனால் இறைவழிகாட்டுதல்கள் அவ்வாறல்ல. ஒருபோதும் மாறாதவை.
மேலை நாடுகளைப் பாருங்கள். வசதியற்ற மக்களுக்கு அரசே உணவு கொடுக்கிறது. வேலை கொடுக்கிறது. வருமானத்திற்கு வழி செய்து கொடுக்கிறது. எல்லாம் கிடைக்கிறது. எல்லாம் கிடைத்த பின்பும் கவலையும், விரக்தியும் மக்களைப் பீடித்திருக்கின்றன.
எல்லாம் கிடைத்த பின்னரும் மணவிலக்குகள் பெருகின. எல்லாம் கிடைத்த பின்னரும் பெற்றோர் இல்லாத குழந்தைகள் பெருகினர். எல்லாம் கிடைத்த பின்னரும் ஆதரவற்ற நிலையில் விடப்படும் பெற்றோர்கள் பெருகினர். எல்லாம் கிடைத்த பின்னரும் ஓராயிரம் பிரச்சினைகள் பெருகிக்கொண்டே போயின. இறுதியில் மனிதன் திகைத்து நிற்கின்றான்.
ஆக, மனிதனுக்குத் தேவை இறைவழிகாட்டுதல் அடிப்படையிலான வாழ்க்கை. அந்த வாழ்க்கைதான் மனநிம்மதியைத் தரும்.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
செல்வம், அதிகாரம், அறிவு இவைதான் மகிழ்ச்சியான வாழ்வுக்கான அடிப்படைத் தேவைகள் என்று தவறாகப் புரிந்து வைத்துள்ளோம். மகிழ்ச்சியைத் தேடி செல்வத்திற்குப் பின்னால் ஓடி, மிச்சம் மீதி இருக்கும் கொஞ்சநஞ்ச மகிழ்ச்சியையும் தொலைத்தவர்கள் ஏராளம்.
அதிகார அரியணைகளைக் கைப்பற்றி உலகையே அடக்கி ஆண்ட பலரும் தனிப்பட்ட வாழ்வில் நிம்மதியைத் தொலைத்தவர் களாகவே இருந்துள்ளனர். ‘பிரபலம்’ எனும் கொடிக்கம்பத்தில் ஏறிய பலரும் வாழ்வில் நிராசையடைந்தவர்களாகவே இருந்துள்ளனர்.
‘நிம்மதியான வாழ்வு’ என்பது பஞ்சு மெத்தையிலும், பட்டு விரிப்பிலும் கிடைப்பதல்ல. அரண்மனை போன்ற வீடும், வானுயர்ந்த கட்டிடங்களும் சாந்திமிக்க வாழ்வின் உறைவிடமாக ஒருபோதும் அமையாது. ருசிகரமான உணவுப் பதார்த்தங்கள் யதார்த்த வாழ்வில் ஏற்படும் வெறுமையை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது.
உயர் பதவிகளும் பெரும் பொறுப்புகளும் நிம்மதி நிறைந்த வாழ்வை பரிசாக வழங்காது. அறிவு இருப்பதன் காரணத்தால் மட்டும் வாழ்வு மகிழ்ச்சிகரமாக ஒருபோதும் மாறாது.
வாழ்க்கை என்றால் என்ன?
‘சப்தமும் கோபமும் நிறைந்த பொருளற்ற முட்டாள்தனமான கதைதான் வாழ்வு’ என்று ஷேக்ஸ்பியருடைய காதாபாத்திரம் மாக்பத் கூறுவதைப் போன்று, வாழ்வு என்பது அர்த்தமற்ற ஒன்றல்ல. மனிதன் வெறுமனே வாழ்ந்து மடிவதற்காகப் படைக்கப்பட்டவனுமல்ல. உண்டு, குடித்து, ரசித்து, ருசித்து கடந்துசெல்ல வேண்டியதல்ல வாழ்க்கை.
மாறாக வாழ்வு என்பது கடமைகளும், உரிமைகளும், கொள்வினை கொடுப்பினைகளும், சுகமும் துக்கமும் நிறைந்தது. வாழ்வின் ஒவ்வொரு அசைவுக்கும் படைத்தவனிடம் நாம் பதில் சொல்லியாக வேண்டும்.
‘எனக்கான கடமைகளை நிறைவேற்றியிருக்கின்றேன்’ என்ற உணர்வுடன் வாழ்க்கையை நகர்த்துவதே அபார மகிழ்ச்சி தரும் விஷயம்தான். அதேசமயம் சொந்தக் கவலைகளை அகற்றி வைத்து, அடுத்தவருடைய மகிழ்ச்சிக்காக தியாகம் செய்ய முடியும் என்றிருந்தால் அந்த வாழ்வு தரும் சுகமே தனிதான்.
சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், ‘வாழ்வு என்பது அறிந்து அனுபவிக்க வேண்டிய ஒரு சுகந்த அனுபவம்’. அவ்வாறு வாழ முற்படுகின்றவர்களுக்கு மரணம்கூட நிம்மதியான அனுபவமாக மாறலாம்.
மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு ஒருசில வழிகாட்டுதல்களும் வழிமுறைகளும் அவசியம் தேவைப்படுகின்றன. ஏனைய உயிரினங்களைப் போன்று சுதந்திரமாக அவனை விட்டுவிட்டால், அதன் பலாபலன் சர்வ நாசமாக இருக்கும். பெரும் குழப்பங்களே எஞ்சி நிற்கும். எனவே இந்த வழிகாட்டுதல்களை வழங்குவது யார்? இதுதான் தலையாய வினா.
ஒவ்வொருவரும் தங்களது மனோஇச்சையின் அடிப்படையில் வாழ்வுக்கான வியாக்கியானங்களைக் கொடுக்க முயன்றால், சிலபோது மானுட வர்க்கம் நிலைத்திருப்பதே பேராபத்தில் சென்று முடியலாம். மனித வாழ்வுக்கான வழிகாட்டுதல்களை மனிதனே வழங்கினால் அவற்றில் மனிதப் பலவீனங்கள் கண்டிப்பாகக் கலந்திருக்கும். இங்குதான் மனிதனுக்கு தெய்வீக வழிகாட்டுதல்கள் தேவைப்படுகின்றன.
வாழ்வு குறுகிய காலம் மட்டுமே
வாழ்வு என்பது எவ்வளவு உண்மையோ அவ்வாறே மரணமும் சத்தியமானது. எல்லா உடல்களும் மரணத்தின் சுவையை சுவைத்தே தீருகின்றன என்று குர்ஆன் மரணத்தைக் குறித்து இவ்வாறு குறிப்பிடுகின்றது: “ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்க வேண்டியதாய் இருக்கின்றது” (29:57)
சுவை என்றால் என்ன? இனிப்பு, கசப்பு, சிலபோது உவர்ப்பு, இந்த ருசிகளையே நாம் சுவை என்கிறோம். எனவே மரணம் சிலருக்கு இனிப்பாக இருக்கலாம். சிலருக்குக் கசப்பாக இருக்காலாம். வேறுசிலருக்கு உவர்ப்பாகவும் இருக்கலாம். வாழ்வு எவ்வாறு இருந்தது என்பதன் அடிப்படையில்தான் மரணத்தின் சுவையும் அமையும்.
சுவை எவ்வாறு இருந்தாலும் வாழ்வின் இறுதி முடிவல்ல மரணம். மாறாக வாழ்வின் தொடர்ச்சிதான் மரணம் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. மறுமை வாழ்வின் விசாலமான கதவுகளை திறந்து தருவதுதான் மரணம். மரணத்துக்கு வரம்புகள் கிடையாது. சிறியவர், பெரியவர் என்ற வேறுபாடோ, ஆண்-பெண் என்ற பாகுபாடோ கிடையாது.
மரணம் வந்துவிட்டால் அனைத்தையும் விட்டுவிட்டுச் சென்று விடவேண்டியதுதான். நம்முடைய மரணத்துக்காக உலகம் தவித்துப்போகும் என்பதோ, உலகமே அழும் என்பதோ கிடையாது. நமக்காக அழும் ஒருசிலர்கூட கொஞ்ச நாட்கள்தான் அழுவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பின் நமக்காகக் கண்ணீர் சிந்தவோ, நம்மைக் குறித்து நினைக்கவோகூட யாரும் இருக்க மாட்டார்கள்.
மனிதனுக்கு அறிவும் தேவை, ஆன்மிகமும் தேவை. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்க வேண்டும். இரண்டையும் தனித்தனியாகப் பிரிக்கும்போதுதான் பிரச்சினைகள் ஏற்படுகிறது.
‘அறிவும் மட்டும் போதும், ஆன்மிகம் தேவையில்லை’ என்று கூறும் ஒரு மக்கள் கூட்டம் இருக்கின்றார்கள். ‘ஆன்மிகம் மட்டும் போதும், அறிவு தேவையில்லை’ என்று கூறும் வேறொரு மக்கள் கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அறிவும் ஆன்மிகமும் ஒன்றாக இணையும்போதுதான் இறைவழிகாட்டுதலை புரிந்துகொள்ள முடியும். இறைவழிகாட்டுதல்கள், மனிதனை மனிதனுக்கு அழகாக அறிமுகம் செய்து வைக்கும்.
நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எப்படி வாழவேண்டும்? என்பதற்கான பதில்களை எல்லாம் இறைவழிகாட்டுதல்கள் மட்டுமே அழகாகச் சொல்லித்தரும்.
மனிதக் கொள்கைகளும், தத்துவங்களும் மாற்றத்திற்கு உள்ளாகும். காலத்தால் மாறலாம். இடத்தால் மாறலாம். மனிதப்பலவீனங்களால் மாறலாம். ஆனால் இறைவழிகாட்டுதல்கள் அவ்வாறல்ல. ஒருபோதும் மாறாதவை.
மேலை நாடுகளைப் பாருங்கள். வசதியற்ற மக்களுக்கு அரசே உணவு கொடுக்கிறது. வேலை கொடுக்கிறது. வருமானத்திற்கு வழி செய்து கொடுக்கிறது. எல்லாம் கிடைக்கிறது. எல்லாம் கிடைத்த பின்பும் கவலையும், விரக்தியும் மக்களைப் பீடித்திருக்கின்றன.
எல்லாம் கிடைத்த பின்னரும் மணவிலக்குகள் பெருகின. எல்லாம் கிடைத்த பின்னரும் பெற்றோர் இல்லாத குழந்தைகள் பெருகினர். எல்லாம் கிடைத்த பின்னரும் ஆதரவற்ற நிலையில் விடப்படும் பெற்றோர்கள் பெருகினர். எல்லாம் கிடைத்த பின்னரும் ஓராயிரம் பிரச்சினைகள் பெருகிக்கொண்டே போயின. இறுதியில் மனிதன் திகைத்து நிற்கின்றான்.
ஆக, மனிதனுக்குத் தேவை இறைவழிகாட்டுதல் அடிப்படையிலான வாழ்க்கை. அந்த வாழ்க்கைதான் மனநிம்மதியைத் தரும்.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.






