search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் மதநல்லிணக்க கந்தூரி விழா
    X
    திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் மதநல்லிணக்க கந்தூரி விழா

    திண்டுக்கல் நாகல்நகர் பள்ளிவாசலில் மதநல்லிணக்க கந்தூரி விழா

    திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் முன்தினம் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது.
    திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நேற்று முன்தினம் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கந்தூரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    பின்னர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் அகமது புதாகீர் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து வழங்கினார். இதற்கு செயலாளர் அலாவுதீன் இப்ராகிம் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு 2 முட்டைகளுடன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதில் பலர் பாத்திரங்களில் பிரியாணியை வாங்கி சென்றனர்.
    Next Story
    ×