என் மலர்
இஸ்லாம்
நாகூரில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவாக மிலாது நபி ஊர்வலம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு மிலாதுநபி விழா ஊர்வலம் நடைபெறுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாகூரில் நபிகள் நாயகம் பிறந்தநாள் விழாவாக மிலாது நபி ஊர்வலம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், தர்காக்கள், ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்கள், ஊர்வலம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தற்போது நாகூரில் உள்ள இஸ்லாமிய பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளும் மிலாதுநபி ஊர்வலம் நடத்த தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஊர்வலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் கவலையில் உள்ளனர்.
மேலும் அரசின் வழிகாட்டுதலின் படி ஊர்வலத்தை பின்னர் நடத்துவது என்று மிலாது கமிட்டி முடிவு செய்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு மிலாதுநபி விழா ஊர்வலம் நடைபெறுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது நாகூரில் உள்ள இஸ்லாமிய பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளும் மிலாதுநபி ஊர்வலம் நடத்த தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு ஊர்வலத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் கவலையில் உள்ளனர்.
மேலும் அரசின் வழிகாட்டுதலின் படி ஊர்வலத்தை பின்னர் நடத்துவது என்று மிலாது கமிட்டி முடிவு செய்துள்ளது. ஆனாலும் இந்த ஆண்டு மிலாதுநபி விழா ஊர்வலம் நடைபெறுமா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாம் சக முஸ்லிம்களிடமும், பிற உயிர்களிடமும் அன்பு காட்டுவோம், கருணையுடன் நடந்துகொள்வோம். இன்ஷா அல்லாஹ், இதன் மூலம் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் நாம் பெற்றுக்கொள்வோம்.
பரந்து விரிந்த இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் படைத்து, பரிபாலனம் செய்பவன் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. அவன் எல்லோருக்கும் பொதுவானவன், எந்த தேவையும் இல்லாதவன். அதேநேரத்தில் தேவைகளை வேண்டி தன்னை நாடி வரும் அடியார்களின் தேவையை நிறைவேற்றும் தாயுள்ளம் கொண்டவன். அவன் மாபெரும் கருணையாளன். அவனிடம் இருகரம் ஏந்திக்கேட்டால் ‘இல்லை’ என்று சொல்லாதவன்.
“அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்” என்று திருக்குர்ஆன் (1:3) விளக்குகிறது.
அத்தகைய சிறப்பு மிக்க இறைவனின் அருளைப்பெற வேண்டும் என்றால் அவன் நமக்கு காட்டிய வழியில் நடக்க வேண்டும். திருக்குர்ஆன் கட்டளைப்படியும், இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றியும் நாம் வாழ வேண்டும். இறையச்சத்துடன் வாழ்ந்து, கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், மற்றும் ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றி வந்தால் அந்த ஏக இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் பெற முடியும்.
சக மனிதர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் விளக்கி இருக்கிறார்கள். இது குறித்து நபிகள் கூறியதாக, நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு இவன் அநீதி இழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ, அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ, அவரது மறுமை நாளின் துன்பத்தை அல்லாஹ்வும்நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ, அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி).
நம்மில் பலர் வசதி, வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்கலாம். சிலருக்கு அந்த நிலை இல்லாமல் இருக்கலாம். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும் என்பதையே இந்த நபி மொழி வலியுறுத்துகிறது. அவ்வாறு ஒரு முஸ்லிம், சக முஸ்லிம்களின் தேவையை கருணையுடன் நிறைவேற்றினால், அல்லாஹ் அவரது தேவையை நிறைவேற்றுவான், துன்பங்களை நீக்குவான் என்பதை இந்த நபி மொழி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
நாம் ஒருவருக்கு ஒருவர் கருணை காட்டுவதிலும், அன்பு செலுத்துவதிலும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்.
“ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.” (அறிவிப்பாளர்: நுஅமான் இப்னு பஷீர் (ரலி), நூல்: புகாரி)
அவ்வாறு நாம் கருணையுடன் மற்றவர்களிடம் நடந்துகொண்டால், இறைவனின் கருணைப்பார்வை நமக்கு கிடைக்கும் என்பதையும் நபிகளார் இவ்வாறு கூறியுள்ளார்கள்:
“(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர், (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்”. (அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி)
“ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை”. (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: புகாரி)
எனவே நாம் சக முஸ்லிம்களிடமும், பிற உயிர்களிடமும் அன்பு காட்டுவோம், கருணையுடன் நடந்துகொள்வோம். இன்ஷா அல்லாஹ், இதன் மூலம் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் நாம் பெற்றுக்கொள்வோம்.
பேராசிரியர் அ.முகமது அப்துல் காதர், சென்னை.
“அல்லாஹ் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன்” என்று திருக்குர்ஆன் (1:3) விளக்குகிறது.
அத்தகைய சிறப்பு மிக்க இறைவனின் அருளைப்பெற வேண்டும் என்றால் அவன் நமக்கு காட்டிய வழியில் நடக்க வேண்டும். திருக்குர்ஆன் கட்டளைப்படியும், இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றியும் நாம் வாழ வேண்டும். இறையச்சத்துடன் வாழ்ந்து, கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், மற்றும் ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றி வந்தால் அந்த ஏக இறைவனின் திருப்பொருத்தத்தை நாம் பெற முடியும்.
சக மனிதர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது குறித்து நபி (ஸல்) அவர்கள் விளக்கி இருக்கிறார்கள். இது குறித்து நபிகள் கூறியதாக, நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு இவன் அநீதி இழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ, அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ, அவரது மறுமை நாளின் துன்பத்தை அல்லாஹ்வும்நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ, அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி).
நம்மில் பலர் வசதி, வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்கலாம். சிலருக்கு அந்த நிலை இல்லாமல் இருக்கலாம். இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் கொடுத்து உதவ வேண்டும் என்பதையே இந்த நபி மொழி வலியுறுத்துகிறது. அவ்வாறு ஒரு முஸ்லிம், சக முஸ்லிம்களின் தேவையை கருணையுடன் நிறைவேற்றினால், அல்லாஹ் அவரது தேவையை நிறைவேற்றுவான், துன்பங்களை நீக்குவான் என்பதை இந்த நபி மொழி மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
நாம் ஒருவருக்கு ஒருவர் கருணை காட்டுவதிலும், அன்பு செலுத்துவதிலும் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்.
“ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.” (அறிவிப்பாளர்: நுஅமான் இப்னு பஷீர் (ரலி), நூல்: புகாரி)
அவ்வாறு நாம் கருணையுடன் மற்றவர்களிடம் நடந்துகொண்டால், இறைவனின் கருணைப்பார்வை நமக்கு கிடைக்கும் என்பதையும் நபிகளார் இவ்வாறு கூறியுள்ளார்கள்:
“(படைப்பினங்களின் மீது) கருணை காட்டாதவர், (படைத்தவனால்) கருணை காட்டப்படமாட்டார்”. (அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி)
“ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது (மற்ற) உயிரினமோ உண்டால் (அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை”. (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: புகாரி)
எனவே நாம் சக முஸ்லிம்களிடமும், பிற உயிர்களிடமும் அன்பு காட்டுவோம், கருணையுடன் நடந்துகொள்வோம். இன்ஷா அல்லாஹ், இதன் மூலம் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் நாம் பெற்றுக்கொள்வோம்.
பேராசிரியர் அ.முகமது அப்துல் காதர், சென்னை.
புகழப்பட வேண்டியவன், புகழுக்குரியவன், புகழாகவே உள்ளவன் அல்லாஹ் ஒருவன் தான். எனவே, கர்வம், ஆணவம் போன்றவற்றை விட்டுவிடுவோம். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று உரத்துச்சொல்வோம்.
எந்த ஒரு பொருளுக்கும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த ஒரு சக்தியும் இல்லை. அனைத்தும் இறைவனின் கட்டளைப்படியே நடக்கிறது என்பதை கீழ்க்கண்ட இந்த திருக்குர்ஆன் வசனங்கள் உறுதியாக கூறுகிறது:
“எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்விற்கே உரித்தானது”. (திருக்குர்ஆன் 1:2)
“வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:126)
வான்கோள்கள், கிரகங்கள் என அண்டசராசரம் அனைத்தும் கட்டுக்கோப்பாக இயங்க வேண்டும் என்றால் அதற்கு அல்லாஹ்வின் அருள் இருந்தால் மட்டுமே முடியும். அதுபோல அனைத்து கிரகங்களில் வாழும் உயிரினங்கள் இயங்குவதற்கும் அல்லாஹ்வே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
எந்த ஒரு உயிரினத்தின் வாழ்வும், இயக்கமும், வீழ்ந்து மடிவதும், அவன் இரத்தக்கட்டியாய் உருவான நிமிடத்திலேயே நிர்ணயிக்கப்பட்டு விட்டன. அவன் வாழும் காலத்தில் கொடுக்கப்பட உள்ள செல்வங்கள், கல்வித்திறன், பெறப்போகிற புகழ், உயர்வுகள், இகழ்வுகள் அனைத்துமே பதியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மனிதன் தன் செயல் குறித்து பெருமை கொள்வதற்கு முகாந்திரமே இல்லை. இருந்தாலும் முயற்சிகள் செய்வதற்கு முட்டுக்கட்டை போடவில்லை இஸ்லாம். அதே சமயம், ‘நான்தான் சாதித்தேன், என்னால் தான் எதுவும் முடியும்’ என்ற இறுமாப்பு கொள்வதைதான் அது ஏற்றுக்கொள்வதில்லை.
“அல்லாஹ்வின் அருளால் முயன்றேன், அவன் உதவி கொண்டு சாதித்தேன்” என்று கூறினால் அது நன்றி செலுத்தும் நற்செயலாக மாறி விடுகின்றது.
அத்தனைப் பொருட்களின் இயற்கையான இயல்பு தன்மை கூட அவன் கட்டளையில்லாமல் செயல்படுத்த முடியாது. இனிய தென்றலை இடியோசையோடு கூடிய சூறாவளியாய் மாற்றவும் அவனால் முடியும், சிறிய விதையில் பெரும் விருட்சங்களை அவனால் கொண்டு வரவும் முடியும். சிறுதுளியாய் விந்துவிலிருந்து வித்தைகள் பல கற்ற விந்தை மனிதனை உருவாக்க முடியும். அதில் அகிலம் ஆளும் அரசனும், ஆண்டியும் அடக்கம்.
ஆனாலும் மனிதனின் பாவத்தின் மிகைப்பால் ஓஸோன் படலத்தில் ஓட்டைகள், எரிமலைகளின் எகிறல்கள், ஆழ்கடலின் ஆர்ப்பரிப்புகள், காட்டுத் தீயின் கொடூரங்கள், இயற்கையின் சீற்றங்கள், மாறுபட்ட விளைவுகள் எல்லாம் ஏற்படுகின்றன.
இவை அனைத்தும் அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் என்பதை ஏனோ மனிதன் உணர மறுக்கின்றான்.
சிறிய, கண்ணுக்குப் புலப்படாத ஒரு கிருமியைக் கொண்டு உலகத்தையே கால நிர்ணயம் இல்லாமல் முடக்கிப் போடும் அல்லாஹ்வின் ஆற்றலின் முன்னால் மனிதனின் அறிவு என்ன செய்ய முடிந்தது, முடிவில்லா தொடர்கதையாய் இன்றும் தொடந்து கொண்டிருக்கிறதே?
“பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உங்களால் முடியாது” (திருக்குர்ஆன் 17:37).
திருக்குர்ஆனின் இந்த படிப்பினை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளத்தக்கது. இறைவனால், நெருப்பால் படைக்கப்பட்டவன் இப்லீஸ், களிமண்ணால் படைக்கப்பட்ட வன் மனிதன். அந்த மனிதனுக்கு அடிபணிந்து நடக்கும்படி கூறப்பட்டபோது அதை ஏற்க இப்லீஸ் மறுத்தான். ‘நான் நெருப்பால் படைக்கப்பட்டவன், மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டவன். என்னை விட மனிதன் உயர்ந்தவன் அல்ல. எனவே மனிதனுக்கு அடிபணிய மாட்டேன்’ என்று ஆணவத்துடன் கூறினான்.
இறைவன் கட்டளைக்கு அடிபணிய மறுத்ததால் இழிநிலைக்குத் தள்ளப்பட்டான். உலகம் அழியும் வரை ‘இப்லீஸ் ஒரு ஷைத்தான்’ என்ற சாபத்திலேயே நிலைத்து விட்டான்.
பெருமை பாராட்டும் மனிதனை அல்லாஹ் ஒருபோதும் விரும்புவதில்லை. ‘மனிதர்களில் எந்த வகையிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை’ என்பதே அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் போதித்த தத்துவம். ‘விண்ணகமும், மண்ணகமும் கோலோச்சும் அவன் அருளின்றி இயக்கம் இல்லை’ என்று அறிந்திருந்தும் மனிதன் பெருமை கொள்ளலாமா?. அந்த உரிமை இறைவனுக்கு மட்டும் சொந்தமல்லவா?.
புகழப்பட வேண்டியவன், புகழுக்குரியவன், புகழாகவே உள்ளவன் அல்லாஹ் ஒருவன் தான். எனவே, கர்வம், ஆணவம் போன்றவற்றை விட்டுவிடுவோம். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று உரத்துச்சொல்வோம்.
மு. முகமது யூசுப், உடன்குடி.
“எல்லாப் புகழும் அகிலம் அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்யும் அல்லாஹ்விற்கே உரித்தானது”. (திருக்குர்ஆன் 1:2)
“வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் எல்லாம் அல்லாஹ்வுக்கே சொந்தம்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தறிபவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:126)
வான்கோள்கள், கிரகங்கள் என அண்டசராசரம் அனைத்தும் கட்டுக்கோப்பாக இயங்க வேண்டும் என்றால் அதற்கு அல்லாஹ்வின் அருள் இருந்தால் மட்டுமே முடியும். அதுபோல அனைத்து கிரகங்களில் வாழும் உயிரினங்கள் இயங்குவதற்கும் அல்லாஹ்வே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
எந்த ஒரு உயிரினத்தின் வாழ்வும், இயக்கமும், வீழ்ந்து மடிவதும், அவன் இரத்தக்கட்டியாய் உருவான நிமிடத்திலேயே நிர்ணயிக்கப்பட்டு விட்டன. அவன் வாழும் காலத்தில் கொடுக்கப்பட உள்ள செல்வங்கள், கல்வித்திறன், பெறப்போகிற புகழ், உயர்வுகள், இகழ்வுகள் அனைத்துமே பதியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மனிதன் தன் செயல் குறித்து பெருமை கொள்வதற்கு முகாந்திரமே இல்லை. இருந்தாலும் முயற்சிகள் செய்வதற்கு முட்டுக்கட்டை போடவில்லை இஸ்லாம். அதே சமயம், ‘நான்தான் சாதித்தேன், என்னால் தான் எதுவும் முடியும்’ என்ற இறுமாப்பு கொள்வதைதான் அது ஏற்றுக்கொள்வதில்லை.
“அல்லாஹ்வின் அருளால் முயன்றேன், அவன் உதவி கொண்டு சாதித்தேன்” என்று கூறினால் அது நன்றி செலுத்தும் நற்செயலாக மாறி விடுகின்றது.
அத்தனைப் பொருட்களின் இயற்கையான இயல்பு தன்மை கூட அவன் கட்டளையில்லாமல் செயல்படுத்த முடியாது. இனிய தென்றலை இடியோசையோடு கூடிய சூறாவளியாய் மாற்றவும் அவனால் முடியும், சிறிய விதையில் பெரும் விருட்சங்களை அவனால் கொண்டு வரவும் முடியும். சிறுதுளியாய் விந்துவிலிருந்து வித்தைகள் பல கற்ற விந்தை மனிதனை உருவாக்க முடியும். அதில் அகிலம் ஆளும் அரசனும், ஆண்டியும் அடக்கம்.
ஆனாலும் மனிதனின் பாவத்தின் மிகைப்பால் ஓஸோன் படலத்தில் ஓட்டைகள், எரிமலைகளின் எகிறல்கள், ஆழ்கடலின் ஆர்ப்பரிப்புகள், காட்டுத் தீயின் கொடூரங்கள், இயற்கையின் சீற்றங்கள், மாறுபட்ட விளைவுகள் எல்லாம் ஏற்படுகின்றன.
இவை அனைத்தும் அல்லாஹ்வின் எச்சரிக்கைகள் என்பதை ஏனோ மனிதன் உணர மறுக்கின்றான்.
சிறிய, கண்ணுக்குப் புலப்படாத ஒரு கிருமியைக் கொண்டு உலகத்தையே கால நிர்ணயம் இல்லாமல் முடக்கிப் போடும் அல்லாஹ்வின் ஆற்றலின் முன்னால் மனிதனின் அறிவு என்ன செய்ய முடிந்தது, முடிவில்லா தொடர்கதையாய் இன்றும் தொடந்து கொண்டிருக்கிறதே?
“பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உங்களால் முடியாது” (திருக்குர்ஆன் 17:37).
திருக்குர்ஆனின் இந்த படிப்பினை மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளத்தக்கது. இறைவனால், நெருப்பால் படைக்கப்பட்டவன் இப்லீஸ், களிமண்ணால் படைக்கப்பட்ட வன் மனிதன். அந்த மனிதனுக்கு அடிபணிந்து நடக்கும்படி கூறப்பட்டபோது அதை ஏற்க இப்லீஸ் மறுத்தான். ‘நான் நெருப்பால் படைக்கப்பட்டவன், மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டவன். என்னை விட மனிதன் உயர்ந்தவன் அல்ல. எனவே மனிதனுக்கு அடிபணிய மாட்டேன்’ என்று ஆணவத்துடன் கூறினான்.
இறைவன் கட்டளைக்கு அடிபணிய மறுத்ததால் இழிநிலைக்குத் தள்ளப்பட்டான். உலகம் அழியும் வரை ‘இப்லீஸ் ஒரு ஷைத்தான்’ என்ற சாபத்திலேயே நிலைத்து விட்டான்.
பெருமை பாராட்டும் மனிதனை அல்லாஹ் ஒருபோதும் விரும்புவதில்லை. ‘மனிதர்களில் எந்த வகையிலும் ஏற்றத்தாழ்வுகள் இல்லை’ என்பதே அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் போதித்த தத்துவம். ‘விண்ணகமும், மண்ணகமும் கோலோச்சும் அவன் அருளின்றி இயக்கம் இல்லை’ என்று அறிந்திருந்தும் மனிதன் பெருமை கொள்ளலாமா?. அந்த உரிமை இறைவனுக்கு மட்டும் சொந்தமல்லவா?.
புகழப்பட வேண்டியவன், புகழுக்குரியவன், புகழாகவே உள்ளவன் அல்லாஹ் ஒருவன் தான். எனவே, கர்வம், ஆணவம் போன்றவற்றை விட்டுவிடுவோம். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று உரத்துச்சொல்வோம்.
மு. முகமது யூசுப், உடன்குடி.
நாகையை அடுத்த நாகூர் நூர்சா தைக்கால் தெருவில் நூர்சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்காலில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகையை அடுத்த நாகூர் நூர்சா தைக்கால் தெருவில் நூர்சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்கால் உள்ளது. இந்த தைக்காலில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. தைக்கால் கலிபா உபைத்துல் ரஹ்மான் சாஹிப் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார்.
இதில் சாதி, மத, பேதமின்றி பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தைக்கால் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. தைக்கால் கலிபா உபைத்துல் ரஹ்மான் சாஹிப் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார்.
இதில் சாதி, மத, பேதமின்றி பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தைக்கால் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
“எவர்கள் நம் வசனங்களை ஏற்று நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் நுழைவிப்போம். அங்கு அவர்கள் என்றென்றும் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்”. (திருக்குர்ஆன் 4:57).
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த உலகைப்படைத்து அதில் மனிதர்கள் மற்றம் பிற உயிரினங்கள் வாழ வழிசெய்தான். மனிதர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் அன்புடனும், நேசத்துடனும், பாசத்துடனும் வாழவேண்டும் என்பது இறைவனின் விருப்பமாகும். குறிப்பாக இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து வாழவேண்டும் என்று வழிகாட்டினான்.
இறைவன் அருளிய திருக்குர்ஆனில் ஒற்றுமையுடன் வாழ்வது குறித்த வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ஒற்றுமையுடன் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், பிரிந்து கிடந்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி இருக்கின்றான்.
“அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 8:46).
முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கவேண்டும், அவர்களுக்குள் கருத்துவேறுபாடு எதுவும் வரக்கூடாது என்பதை இந்த திருக்குர்ஆன் வசனம் அழகாக வலியுறுத்துகிறது. அதேநேரத்தில் கருத்துவேறுபாடு கொண்டால் என்ன ஆபத்து காத்திருக்கிறது என்பதையும் இந்த வசனம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. ஆம் நமக்குள் கருத்து வேறுபாடு வந்தல் பலம் குன்றிவிடுவோம். பலம் குறைந்தால் எதிரிகள், இறைமறுப்பாளர்கள் நம்மை வெற்றிகொள்ளும் நிலை ஏற்படும்.
இதனால் தான் அல்லாஹ் மனிதர்களிடம் கூறுகிறான், நீங்கள் பொறுமையுடன் இருங்கள், கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள், அனைவரிடமும் நேசத்துடன் வாழுங்கள். இவ்வாறு செய்யும் போது அத்தகைய பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்ற நற்செய்தியும் வலியுறுத்தப்படுகிறது.
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்த கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். முஸ்லிம்கள் ஒருவர் மற்றவரை நேசிக்க வேண்டும். இது அவர்களின் இறைநம்பிக்கையின் அம்சங்களில் ஒன்றாகும். இந்த நேசத்தின் தொடக்கம் ‘ஸலாம்’ கூறுவதில் இருந்து தொடங்க வேண்டும். ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற சொல்லின் பொருள் ‘உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்பதாகும். இந்த வாழ்த்துச்சொல்லை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ளும் போது இயல்பாகவே அங்கு உள்ளவர்கள் இடையே சாந்தியும், சமாதானமும் நிலவத்தொடங்கிவிடும். அன்பு மலரும்போது, நேசம் வளரத்தொடங்கும்.
இதுபற்றிய நபிமொழி வருமாறு:
“அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: நீங்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாய் திகழாதவரை சுவனம் புகமுடியாது. நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நேசிக்காதவரை உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக விளங்க முடியாது. நீங்கள் எதனைச்செய்தால் உங்களிடையே நேசம் வளருமோ அத்தகைய ஒரு செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? உங்களிடையே ஸலாமை பரப்புங்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).
இது தொடர்பான இன்னொரு நபி மொழி வருமாறு:
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமனிதர் இஸ்லாத்தில் எந்த செயல் சிறந்தது? என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார், ஏழை, எளியவர்களுக்கு உணவளிப்பதும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஸலாம் சொல்வதுமாகும். அவர் உமக்கு தெரிந்தவராக இருப்பினும் சரி, தெரியாதவராக இருப்பினும் சரியே. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்).
நாம் அனைவரிடமும் நேசத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இந்த திருக்குர் ஆன் வசனம் இவ்வாறு வலியுறுத்துகிறது:
“நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள்! மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், மற்றும் வழிப்போக்கர், உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடனும் நயமாக நடந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 4:36).
திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளபடி நாம் நடந்தால் நமக்கு சுவனம் நிச்சயம் என்றும் அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் உறுதி கூறுகின்றான்.
“எவர்கள் நம் வசனங்களை ஏற்று நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் நுழைவிப்போம். அங்கு அவர்கள் என்றென்றும் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்”. (திருக்குர்ஆன் 4:57).
நாம் அனைவரிடமும் நேசத்துடன் நடந்து கொண்டு இறைவனின் அருளைப்பெறுவோம்,
மவுலவி வடகரை முஹம்மது இஸ்மாயீல் காஷிஃபி, தாங்கல், சென்னை.
இறைவன் அருளிய திருக்குர்ஆனில் ஒற்றுமையுடன் வாழ்வது குறித்த வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ஒற்றுமையுடன் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், பிரிந்து கிடந்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி இருக்கின்றான்.
“அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 8:46).
முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கவேண்டும், அவர்களுக்குள் கருத்துவேறுபாடு எதுவும் வரக்கூடாது என்பதை இந்த திருக்குர்ஆன் வசனம் அழகாக வலியுறுத்துகிறது. அதேநேரத்தில் கருத்துவேறுபாடு கொண்டால் என்ன ஆபத்து காத்திருக்கிறது என்பதையும் இந்த வசனம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. ஆம் நமக்குள் கருத்து வேறுபாடு வந்தல் பலம் குன்றிவிடுவோம். பலம் குறைந்தால் எதிரிகள், இறைமறுப்பாளர்கள் நம்மை வெற்றிகொள்ளும் நிலை ஏற்படும்.
இதனால் தான் அல்லாஹ் மனிதர்களிடம் கூறுகிறான், நீங்கள் பொறுமையுடன் இருங்கள், கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள், அனைவரிடமும் நேசத்துடன் வாழுங்கள். இவ்வாறு செய்யும் போது அத்தகைய பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்ற நற்செய்தியும் வலியுறுத்தப்படுகிறது.
இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்த கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். முஸ்லிம்கள் ஒருவர் மற்றவரை நேசிக்க வேண்டும். இது அவர்களின் இறைநம்பிக்கையின் அம்சங்களில் ஒன்றாகும். இந்த நேசத்தின் தொடக்கம் ‘ஸலாம்’ கூறுவதில் இருந்து தொடங்க வேண்டும். ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற சொல்லின் பொருள் ‘உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்பதாகும். இந்த வாழ்த்துச்சொல்லை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ளும் போது இயல்பாகவே அங்கு உள்ளவர்கள் இடையே சாந்தியும், சமாதானமும் நிலவத்தொடங்கிவிடும். அன்பு மலரும்போது, நேசம் வளரத்தொடங்கும்.
இதுபற்றிய நபிமொழி வருமாறு:
“அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: நீங்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாய் திகழாதவரை சுவனம் புகமுடியாது. நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நேசிக்காதவரை உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக விளங்க முடியாது. நீங்கள் எதனைச்செய்தால் உங்களிடையே நேசம் வளருமோ அத்தகைய ஒரு செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? உங்களிடையே ஸலாமை பரப்புங்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).
இது தொடர்பான இன்னொரு நபி மொழி வருமாறு:
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமனிதர் இஸ்லாத்தில் எந்த செயல் சிறந்தது? என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார், ஏழை, எளியவர்களுக்கு உணவளிப்பதும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஸலாம் சொல்வதுமாகும். அவர் உமக்கு தெரிந்தவராக இருப்பினும் சரி, தெரியாதவராக இருப்பினும் சரியே. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்).
நாம் அனைவரிடமும் நேசத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இந்த திருக்குர் ஆன் வசனம் இவ்வாறு வலியுறுத்துகிறது:
“நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள்! மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், மற்றும் வழிப்போக்கர், உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடனும் நயமாக நடந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 4:36).
திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளபடி நாம் நடந்தால் நமக்கு சுவனம் நிச்சயம் என்றும் அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் உறுதி கூறுகின்றான்.
“எவர்கள் நம் வசனங்களை ஏற்று நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் நுழைவிப்போம். அங்கு அவர்கள் என்றென்றும் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்”. (திருக்குர்ஆன் 4:57).
நாம் அனைவரிடமும் நேசத்துடன் நடந்து கொண்டு இறைவனின் அருளைப்பெறுவோம்,
மவுலவி வடகரை முஹம்மது இஸ்மாயீல் காஷிஃபி, தாங்கல், சென்னை.
நாகை அருகே உள்ள நாகூர் சில்லடி தர்காவில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகை அருகே உள்ள நாகூர் சில்லடி தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் முன்னிலையில் கலிபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். இதில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவு பெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் முன்னிலையில் கலிபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். இதில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவு பெற்றது.
கோபம் கொள்வதினால் பிறரின் அன்பை இழப்பதோடு, நமது உடல்நலமும் பாதிக்கப்படுவதாக மருத்துவம் எச்சரிக்கின்றது. கோபத்தை தவிர்ப்போம், சாந்தியும், சமாதானம் நிறைந்த வார்த்தைகளைப்பேசி நலம் பெறுவோம், ஆமின்.
இன்றைக்கு பலரும் அடிக்கடி சொல்லும் வார்த்தை, “எனக்கு கோபம் வந்தால் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது”.
இதை சிலர் பெருமையாக கூறுவது தான் வேதனைக்குரியது.
ஒரு மனிதரிடம் அடிக்கடி கோபம் கொள்ளும் குணம், ஆத்திரப்படும் வழக்கம், பழிவாங்கும் நோக்கம் இருந்தால், அவரிடம் எத்தனை நற்குணங்கள் இருந்தாலும் அதனால் அவருக்கு எந்தப்பயனும் கிடைக்காது.
“அவர் நல்லவர் தான், ஆனால் கோபக்காரர்” என்ற விமர்சனம், அவரது நற்குணங்களை எல்லாம் அழித்துவிடும்.
கோபத்தை தவிர்ப்பது குறித்தும், கோபம் ஏற்படுவதில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வது குறித்தும் இஸ்லாம் பல்வேறு தளங்களில் வலியுறுத்தி வருகிறது. ஏக இறைவனாம் அல்லாஹ்வின் திருத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களும், கோபத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்கள். இது குறித்த ஒரு நிகழ்வை காண்போம்:
அடிக்கடி கோபம் கொள்ளக்கூடிய குணம் கொண்ட மனிதர் ஒருவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சந்தித்தார். அந்த மனிதர், “நாயகமே, எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அண்ணல் நபி அவர்கள், “கோபம் கொள்ளாதீர்கள்” என்று பதில் அளித்தார்கள்.
அந்த மனிதர் நபிகளாரிடம் மீண்டும், அண்ணலாரே, “எனக்கு அறிவுரை கூறுங்கள்” என்றார்.
இவ்வாறு அவர் மீண்டும் மீண்டும் பல முறை கேட்டபோதும், “நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள்” என்றே அவருக்கு நபிகளார் பதில் அளித்தார்கள்.
நபி மொழிகள் தொகுப்பான புகாரி நூலிலே, நபித்தோழர் அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக மேற்சொன்ன இந்த நிகழ்வு பதிவாகி இருக்கிறது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று”. (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: புகாரி.
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன்; மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக்கொள்பவனே உண் மையான வலிமை வாய்ந்தவன் ஆவான்”.
அதாவது, கோபம் வரும்போது இறைவனுக்கும், அவனுடைய தூதருக்கும் விருப்பம் இல்லாத செயலை தவிர்ப்பவன்தான் வலிமை மிக்கவன் என்பது இந்த நபிமொழி மூலம் வலியுறுத்தப்படுகிறது.
‘கோபம் ஷைத்தானின் தூண்டுதலால் வரக்கூடியது’ என்று நபிகளார் தெரிவித்துள்ளதாக அபூதாவூத் நூலிலே அத்தியா அஸ் ஸஅதி (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்:
“கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டு இருக்கின்றான். நெருப்பு நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கு கோபம் வந்துவிட்டால் அவர் ‘ஒளு’ (அங்கசுத்தி) செய்துகொள்ளட்டும்”.
ஒரு மனிதருக்கு கோபம் ஏற்படும்போது அவர் என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் மேற்கண்ட இந்த நபிமொழி போன்று மிஷ்காத் நூலிலே இன்னொரு நபிமொழியும் இடம்பெற்றுள்ளது. இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்.
“உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படி செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக்கொள்ளட்டும்”.
‘ஒருவர் தனக்கு ஏற்படும் கோபத்தை தடுத்துக்கொண்டால் அல்லாஹ் அவனது மறுமைநாளின் வேதனையை அகற்றிவிடுவான்’ என்று நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள். இதுகுறித்து மிஷ்காத் நூலில் அனஸ் (ரலி) இவ்வாறு கூறியுள்ளார்.
“அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: உண்மைக்கு மாறாக பேசுவதைவிட்டு, தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக்கொள்பவனை விட்டு மறுமைநாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறை வனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான்”.
கோபம் கொள்வதினால் பிறரின் அன்பை இழப்பதோடு, நமது உடல்நலமும் பாதிக்கப்படுவதாக மருத்துவம் எச்சரிக்கின்றது. கோபத்தை தவிர்ப்போம், சாந்தியும், சமாதானம் நிறைந்த வார்த்தைகளைப்பேசி நலம் பெறுவோம், ஆமின்.
பேராசிரியர் அ.முகமது அப்துல்காதர், சென்னை.
இதை சிலர் பெருமையாக கூறுவது தான் வேதனைக்குரியது.
ஒரு மனிதரிடம் அடிக்கடி கோபம் கொள்ளும் குணம், ஆத்திரப்படும் வழக்கம், பழிவாங்கும் நோக்கம் இருந்தால், அவரிடம் எத்தனை நற்குணங்கள் இருந்தாலும் அதனால் அவருக்கு எந்தப்பயனும் கிடைக்காது.
“அவர் நல்லவர் தான், ஆனால் கோபக்காரர்” என்ற விமர்சனம், அவரது நற்குணங்களை எல்லாம் அழித்துவிடும்.
கோபத்தை தவிர்ப்பது குறித்தும், கோபம் ஏற்படுவதில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வது குறித்தும் இஸ்லாம் பல்வேறு தளங்களில் வலியுறுத்தி வருகிறது. ஏக இறைவனாம் அல்லாஹ்வின் திருத்தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களும், கோபத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்கள். இது குறித்த ஒரு நிகழ்வை காண்போம்:
அடிக்கடி கோபம் கொள்ளக்கூடிய குணம் கொண்ட மனிதர் ஒருவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை சந்தித்தார். அந்த மனிதர், “நாயகமே, எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். அதற்கு அண்ணல் நபி அவர்கள், “கோபம் கொள்ளாதீர்கள்” என்று பதில் அளித்தார்கள்.
அந்த மனிதர் நபிகளாரிடம் மீண்டும், அண்ணலாரே, “எனக்கு அறிவுரை கூறுங்கள்” என்றார்.
இவ்வாறு அவர் மீண்டும் மீண்டும் பல முறை கேட்டபோதும், “நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள்” என்றே அவருக்கு நபிகளார் பதில் அளித்தார்கள்.
நபி மொழிகள் தொகுப்பான புகாரி நூலிலே, நபித்தோழர் அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக மேற்சொன்ன இந்த நிகழ்வு பதிவாகி இருக்கிறது.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று”. (அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), நூல்: புகாரி.
அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன்; மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக்கொள்பவனே உண் மையான வலிமை வாய்ந்தவன் ஆவான்”.
அதாவது, கோபம் வரும்போது இறைவனுக்கும், அவனுடைய தூதருக்கும் விருப்பம் இல்லாத செயலை தவிர்ப்பவன்தான் வலிமை மிக்கவன் என்பது இந்த நபிமொழி மூலம் வலியுறுத்தப்படுகிறது.
‘கோபம் ஷைத்தானின் தூண்டுதலால் வரக்கூடியது’ என்று நபிகளார் தெரிவித்துள்ளதாக அபூதாவூத் நூலிலே அத்தியா அஸ் ஸஅதி (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்:
“கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டு இருக்கின்றான். நெருப்பு நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கு கோபம் வந்துவிட்டால் அவர் ‘ஒளு’ (அங்கசுத்தி) செய்துகொள்ளட்டும்”.
ஒரு மனிதருக்கு கோபம் ஏற்படும்போது அவர் என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் மேற்கண்ட இந்த நபிமொழி போன்று மிஷ்காத் நூலிலே இன்னொரு நபிமொழியும் இடம்பெற்றுள்ளது. இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்.
“உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படி செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி, இல்லாவிட்டால் அவர் படுத்துக்கொள்ளட்டும்”.
‘ஒருவர் தனக்கு ஏற்படும் கோபத்தை தடுத்துக்கொண்டால் அல்லாஹ் அவனது மறுமைநாளின் வேதனையை அகற்றிவிடுவான்’ என்று நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள். இதுகுறித்து மிஷ்காத் நூலில் அனஸ் (ரலி) இவ்வாறு கூறியுள்ளார்.
“அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: உண்மைக்கு மாறாக பேசுவதைவிட்டு, தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக்கொள்பவனை விட்டு மறுமைநாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறை வனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான்”.
கோபம் கொள்வதினால் பிறரின் அன்பை இழப்பதோடு, நமது உடல்நலமும் பாதிக்கப்படுவதாக மருத்துவம் எச்சரிக்கின்றது. கோபத்தை தவிர்ப்போம், சாந்தியும், சமாதானம் நிறைந்த வார்த்தைகளைப்பேசி நலம் பெறுவோம், ஆமின்.
பேராசிரியர் அ.முகமது அப்துல்காதர், சென்னை.
நபி பெருமான் தனக்கு வந்த சோதனையை, வேதனையை தாங்கினாலும் “கடன் கொடுத்தவரிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். கடனைத் திருப்பித் தர முடியாத ஒரு நிலை இருக்குமேயானால் அதனை மன்னித்து விட்டுவிடுங்கள்.
ஒரு முறை அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள், சுயதேவை கருதி தன் யூத நண்பர் ஸஹான் என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார்கள். கடன் உடன்படிக்கையும் எழுதப்பட்டது. ‘இன்றிலிருந்து மூன்று மாத கால தவணையில் கடன் தொகை திருப்பி செலுத்தப்பட வேண்டும்’ என்று ஒப்பந்தம் முடிவானது.
ஆனால் கடன் கொடுத்த சில நாட்களிலேயே ஸஹான், அண்ணலாரிடம் வந்து “என் கடன் தொகையை உடனே திருப்பித்தாருங்கள்” என்று வற்புறுத்தினார்.
“இன்னும் கால அவகாசம் இருக்கிறதே” என்று நபிகள் நாயகம் கேட்டதற்கு, “இல்லை, எனக்கு உடனே வேண்டும்” என்றதோடு, தன் கையில் இருந்த துண்டால் நபிகளாரின் கழுத்தை இறுக்கினார்.
அருகில் நின்றிருந்த உமர் கத்தாப் (ரலி) அவர்கள், அவரை அடிப்பதற்காக கையை ஓங்கினார்கள். உடனே கண்மணி நாயகம் அவர்களைத் தடுத்து “அவர் கடன் கொடுத்தவர். அவருக்கு அதனை திருப்பி வாங்குவதில் எல்லா உரிமைகளும் உண்டு” என்றார்கள்.
இந்த நிகழ்வைப் பற்றி கேள்விப்பட்ட அப்துல் ரஹ்மான் ஆவ்ஃப் (ரலி) அவர்கள் ஓடோடி வந்து, நபி பெருமானுக்கு உதவிக்கரம் நீட்டினார்கள்.
அப்போது நபிகளார், “ஆவ்ஃபே! அவர் ஏதோ ஒரு சிரமத்தில் இருக்கிறார். அதனால்தான் கெடு முடிவதற்கு முன்பாகவே என்னை நெருக்குகிறார். எனவே நான் வாங்கியதை விட சற்று அதிகமாகவே அளந்து கொடுங்கள்” என்றார்கள்.
இந்த வார்தையை கேட்ட மாத்திரத்தில் ஸஹான் என்ற யூத நண்பர் கண்மணி நாயகத்தின் கைகளைப் பற்றி “லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதற் ரஸூலுல்லாஹ்” என்ற கலிமாவைச் சொல்லி இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.
ஸஹான், தனது இந்த வினோதமான செயல்பாடுகளைப் பற்றி இவ்வாறு கூறினார்:-
“நான் தவ்ராத் வேதத்தை கற்றுத்தேர்ந்தவன். அந்த வேதத்தில், முகம்மது நபியவர்களின் அடையாளங்கள் பற்றி மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களோடு பழகிய இத்தனைக் காலங்களில் அவர்களின் பல அடையாளங்கள் ஒத்துப்போவதை அறிந்து கொண்டேன். ஆனால் ஒரே ஒரு குணாதிசயத்தை மட்டும் தெரிந்து கொள்வதற்கு பல காலங்கள் காத்திருந்தும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. எனவே நானே நபிகள் நாயகத்திடம் சற்று கடுமையாக நடந்து, எப்படி அதை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிய நாடினேன். எங்கள் வேதத்தில் குறிப்பிட்டது போல் கடுமையாய் நடந்த என்னிடம் கருணையைக் காட்டினார்கள். எதிர்க்க வந்த உமரைத் தடுத்து நீதி செலுத்தினார்கள். நான் கொடுத்ததற்கு மேல் அள்ளித்தந்தார்கள். இந்த அரிய அடையாளத்தை உண்மைப்படுத்தியதும், ‘இவர்தான் உண்மையான இறைத்தூதர்’ என்று அறிந்துகொண்டேன். எங்கள் வேதத்தில் சொன்ன அத்தனை அடையாளங்களும் ஒத்துப்போனதால் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”.
இவ்வாறு அவர் தனது மனமாற்றத்திற்கு விளக்கம் அளித்தார்.
நபி பெருமான் தனக்கு வந்த சோதனையை, வேதனையை தாங்கினாலும் “கடன் கொடுத்தவரிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். கடனைத் திருப்பித் தர முடியாத ஒரு நிலை இருக்குமேயானால் அதனை மன்னித்து விட்டுவிடுங்கள். அதனையே அல்லாஹ் விரும்புகிறான். அதற்கு பல மடங்கு அதிகமான நற்கூலியை வழங்குகிறான்” என்றார்கள்.
நபிகளாரின் போதனையை ஏற்று நடப்போம்.. நன்மைகளை அதிகமாக பெற்றுக்கொள்வோம்.
எம்.எச்.எம்.முஹம்மது முஹைதீன்.
ஆனால் கடன் கொடுத்த சில நாட்களிலேயே ஸஹான், அண்ணலாரிடம் வந்து “என் கடன் தொகையை உடனே திருப்பித்தாருங்கள்” என்று வற்புறுத்தினார்.
“இன்னும் கால அவகாசம் இருக்கிறதே” என்று நபிகள் நாயகம் கேட்டதற்கு, “இல்லை, எனக்கு உடனே வேண்டும்” என்றதோடு, தன் கையில் இருந்த துண்டால் நபிகளாரின் கழுத்தை இறுக்கினார்.
அருகில் நின்றிருந்த உமர் கத்தாப் (ரலி) அவர்கள், அவரை அடிப்பதற்காக கையை ஓங்கினார்கள். உடனே கண்மணி நாயகம் அவர்களைத் தடுத்து “அவர் கடன் கொடுத்தவர். அவருக்கு அதனை திருப்பி வாங்குவதில் எல்லா உரிமைகளும் உண்டு” என்றார்கள்.
இந்த நிகழ்வைப் பற்றி கேள்விப்பட்ட அப்துல் ரஹ்மான் ஆவ்ஃப் (ரலி) அவர்கள் ஓடோடி வந்து, நபி பெருமானுக்கு உதவிக்கரம் நீட்டினார்கள்.
அப்போது நபிகளார், “ஆவ்ஃபே! அவர் ஏதோ ஒரு சிரமத்தில் இருக்கிறார். அதனால்தான் கெடு முடிவதற்கு முன்பாகவே என்னை நெருக்குகிறார். எனவே நான் வாங்கியதை விட சற்று அதிகமாகவே அளந்து கொடுங்கள்” என்றார்கள்.
இந்த வார்தையை கேட்ட மாத்திரத்தில் ஸஹான் என்ற யூத நண்பர் கண்மணி நாயகத்தின் கைகளைப் பற்றி “லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதற் ரஸூலுல்லாஹ்” என்ற கலிமாவைச் சொல்லி இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.
ஸஹான், தனது இந்த வினோதமான செயல்பாடுகளைப் பற்றி இவ்வாறு கூறினார்:-
“நான் தவ்ராத் வேதத்தை கற்றுத்தேர்ந்தவன். அந்த வேதத்தில், முகம்மது நபியவர்களின் அடையாளங்கள் பற்றி மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களோடு பழகிய இத்தனைக் காலங்களில் அவர்களின் பல அடையாளங்கள் ஒத்துப்போவதை அறிந்து கொண்டேன். ஆனால் ஒரே ஒரு குணாதிசயத்தை மட்டும் தெரிந்து கொள்வதற்கு பல காலங்கள் காத்திருந்தும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. எனவே நானே நபிகள் நாயகத்திடம் சற்று கடுமையாக நடந்து, எப்படி அதை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை அறிய நாடினேன். எங்கள் வேதத்தில் குறிப்பிட்டது போல் கடுமையாய் நடந்த என்னிடம் கருணையைக் காட்டினார்கள். எதிர்க்க வந்த உமரைத் தடுத்து நீதி செலுத்தினார்கள். நான் கொடுத்ததற்கு மேல் அள்ளித்தந்தார்கள். இந்த அரிய அடையாளத்தை உண்மைப்படுத்தியதும், ‘இவர்தான் உண்மையான இறைத்தூதர்’ என்று அறிந்துகொண்டேன். எங்கள் வேதத்தில் சொன்ன அத்தனை அடையாளங்களும் ஒத்துப்போனதால் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்”.
இவ்வாறு அவர் தனது மனமாற்றத்திற்கு விளக்கம் அளித்தார்.
நபி பெருமான் தனக்கு வந்த சோதனையை, வேதனையை தாங்கினாலும் “கடன் கொடுத்தவரிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். கடனைத் திருப்பித் தர முடியாத ஒரு நிலை இருக்குமேயானால் அதனை மன்னித்து விட்டுவிடுங்கள். அதனையே அல்லாஹ் விரும்புகிறான். அதற்கு பல மடங்கு அதிகமான நற்கூலியை வழங்குகிறான்” என்றார்கள்.
நபிகளாரின் போதனையை ஏற்று நடப்போம்.. நன்மைகளை அதிகமாக பெற்றுக்கொள்வோம்.
எம்.எச்.எம்.முஹம்மது முஹைதீன்.
நாகை அருகே நாகூர் சில்லடி தர்காவில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் இல்லாமல் எளிமையான முறையில் சில்லடி தர்காவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகை அருகே நாகூர் சில்லடி தர்காவில் ஆண்டுதோறும் விமர்சையாக கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் இல்லாமல் எளிமையான முறையில் சில்லடி தர்காவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். சந்தனம் பூசும் நிகழ்ச்சி வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் பிறர் குறைகளைத் துருவி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம். இன்னும் உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேசிக்கொண்டிருக்க வேண்டாம்”. (திருக்குர்ஆன் 49:12)
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் பிறர் குறைகளைத் துருவி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம். இன்னும் உங்களில் சிலர் சிலரைப்பற்றி புறம் பேசிக்கொண்டிருக்க வேண்டாம்”. (திருக்குர்ஆன் 49:12)
இந்த இறைவசனம் இறைவனை ஏற்றுக்கொண்ட ஓர் நல்லடியான் இவ்வுலகில் மற்ற சகோதரர்களோடு எப்படி வாழவேண்டும் என்பதற்கு சரியான வழிகாட்டுதலையும், அதன் அளவுகோலையும் மிகத் தெளிவாக கூறுகிறது.
ஆதிபிதா ஆதம் அவர்களின் தவறால் தோன்றியது தான் இப்புவியுலகம். அதனால் மனிதன் தவறு செய்யும் இயல்புடையவன் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. குற்றமற்ற ஒருவனை உலகில் காண்பது அரிதிலும் அரிது. ஏனென்றால் வெளித்தோற்றத்திற்குப் புலப்படாத எத்தனையோ விஷயங்களை, அல்லாஹ் மட்டுமே அறிந்தவனாக இருக்கின்றான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவன் நம்மோடு பழகும் மேலோட்டான நிலைமையை ஏற்றுக்கொண்டு, அவனிடம் உள்ள நல்ல பண்புகளுக்காக அவனை மதிக்கத் தெரிந்தவனே உண்மையான நண்பன். அதை விடுத்து, அவன் குணநலன்களில் உள்ள நிறைகுறைகளை எடை போட்டு பார்த்து குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிருப்பது ஒரு ஆரோக்கியமான சமுதாய கட்டுக்கோப்பை ஏற்படுத்தி தராது. மாறாக சிதலம் பட்ட ஓர் வாழ்க்கைச் சூழலைத் தான் ஏற்படுத்தும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் நயவஞ்சகத்தனத்திற்கு அது ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். அதற்கு சைத்தானின் அனுக்கிரகமும் கிடைக்கும்.
அதனால் தான் பிறரிடம் இருப்பதைவிட மிக அதிகமாக தன்னிடம் உள்ள குறைகளை சுயபரிசோதனை செய்து அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டுமேயன்றி, பிறரின் குறைகள் பற்றி கணக்கெடுப்பதற்கு நமக்கு எந்த தார்மீக பொறுப்பும் கிடையாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
எங்கெல்லாம் நல்லவைகள் தென்படுகிறதோ அதனில் இருந்து தேவையானவற்றை எடுத்துக்கொள், தீயவை எதிர்வந்தால் அதனைத் தவிர்ந்துவிடு, இரண்டிலும் உள்ள சிறந்ததை பாடமாக கற்றுக்கொள் என்பது தான் திருக்குர்ஆனின் சித்தாந்தம்.
நம்மில் பலர், ‘பிறரிடமுள்ள குறைகளை பிறரிடம் சுட்டிக்காட்டுவது புறம் ஆகாது. ஏனென்றால் அவனிடம் உள்ள குறையைத் தானே சொல்கிறேன்’ என்ற கருத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் உள்ளதைச் சொல்வது தான் புறம், அவனிடம் இல்லாததைச் சொல்வது இட்டுக்கட்டுதல், அவதூறு செய்தல் என்ற அடைமொழிக்குள் வரும், அபாண்டம், பழிசுமத்துதல் என்ற வரையறைக்குள்ளும் அது பொருந்தும்.
எனவே தான் புறம் பேசுதலை குற்றமாக சித்தரிக்கும் திருக்குர்ஆன்; இட்டுக்கட்டுதல், பழிசுமத்துதல் என்பதை மன்னிக்க முடியாத பாவமாக எடுத்துரைக்கிறது. பாவத்திற்கு அஞ்சி நம் வாழ்வை சரிசெய்து கொள்வோம், புறம் தவிர்த்து அறம் வளர்ப்போம்.
-மு.முகமது யூசுப், உடன்குடி
இந்த இறைவசனம் இறைவனை ஏற்றுக்கொண்ட ஓர் நல்லடியான் இவ்வுலகில் மற்ற சகோதரர்களோடு எப்படி வாழவேண்டும் என்பதற்கு சரியான வழிகாட்டுதலையும், அதன் அளவுகோலையும் மிகத் தெளிவாக கூறுகிறது.
ஆதிபிதா ஆதம் அவர்களின் தவறால் தோன்றியது தான் இப்புவியுலகம். அதனால் மனிதன் தவறு செய்யும் இயல்புடையவன் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. குற்றமற்ற ஒருவனை உலகில் காண்பது அரிதிலும் அரிது. ஏனென்றால் வெளித்தோற்றத்திற்குப் புலப்படாத எத்தனையோ விஷயங்களை, அல்லாஹ் மட்டுமே அறிந்தவனாக இருக்கின்றான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவன் நம்மோடு பழகும் மேலோட்டான நிலைமையை ஏற்றுக்கொண்டு, அவனிடம் உள்ள நல்ல பண்புகளுக்காக அவனை மதிக்கத் தெரிந்தவனே உண்மையான நண்பன். அதை விடுத்து, அவன் குணநலன்களில் உள்ள நிறைகுறைகளை எடை போட்டு பார்த்து குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிருப்பது ஒரு ஆரோக்கியமான சமுதாய கட்டுக்கோப்பை ஏற்படுத்தி தராது. மாறாக சிதலம் பட்ட ஓர் வாழ்க்கைச் சூழலைத் தான் ஏற்படுத்தும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் நயவஞ்சகத்தனத்திற்கு அது ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். அதற்கு சைத்தானின் அனுக்கிரகமும் கிடைக்கும்.
அதனால் தான் பிறரிடம் இருப்பதைவிட மிக அதிகமாக தன்னிடம் உள்ள குறைகளை சுயபரிசோதனை செய்து அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பதில் கவனம் செலுத்த வேண்டுமேயன்றி, பிறரின் குறைகள் பற்றி கணக்கெடுப்பதற்கு நமக்கு எந்த தார்மீக பொறுப்பும் கிடையாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
எங்கெல்லாம் நல்லவைகள் தென்படுகிறதோ அதனில் இருந்து தேவையானவற்றை எடுத்துக்கொள், தீயவை எதிர்வந்தால் அதனைத் தவிர்ந்துவிடு, இரண்டிலும் உள்ள சிறந்ததை பாடமாக கற்றுக்கொள் என்பது தான் திருக்குர்ஆனின் சித்தாந்தம்.
நம்மில் பலர், ‘பிறரிடமுள்ள குறைகளை பிறரிடம் சுட்டிக்காட்டுவது புறம் ஆகாது. ஏனென்றால் அவனிடம் உள்ள குறையைத் தானே சொல்கிறேன்’ என்ற கருத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் உள்ளதைச் சொல்வது தான் புறம், அவனிடம் இல்லாததைச் சொல்வது இட்டுக்கட்டுதல், அவதூறு செய்தல் என்ற அடைமொழிக்குள் வரும், அபாண்டம், பழிசுமத்துதல் என்ற வரையறைக்குள்ளும் அது பொருந்தும்.
எனவே தான் புறம் பேசுதலை குற்றமாக சித்தரிக்கும் திருக்குர்ஆன்; இட்டுக்கட்டுதல், பழிசுமத்துதல் என்பதை மன்னிக்க முடியாத பாவமாக எடுத்துரைக்கிறது. பாவத்திற்கு அஞ்சி நம் வாழ்வை சரிசெய்து கொள்வோம், புறம் தவிர்த்து அறம் வளர்ப்போம்.
-மு.முகமது யூசுப், உடன்குடி
நாகையை அடுத்த பாப்பாவூரில் உள்ள ஹலரத் செய்யதினா ஹாஜா ஷெய்ஹூ அலாவுதீன் தர்காவின் 416-வது ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகையை அடுத்த பாப்பாவூரில் உள்ள ஹலரத் செய்யதினா ஹாஜா ஷெய்ஹூ அலாவுதீன் தர்காவின் 416-வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினரும் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.
‘உம்ரா’ செய்ய வேண்டும் என்ற நிய்யத்தில் கடமையை நிறைவேற்றாமல், இஹ்ராம் களைந்தால் நிய்யத்திற்கு மாற்றம் செய்த குற்றம் நிகழ்ந்து விடுமே என்று அத்தனை சஹாபாக்களும் இஹ்ராம் களையாமல் காத்திருந்தனர்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டு மதீனா நகருக்கு வந்து ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட காலம் கட்டம் அது. அப்போது, மக்காவில் உள்ள இறை இல்லமான காபாவை கண்குளிர காண வேண்டும் என்ற ஆவல் நபிகளின் மனதில் ஆழமாய் பதிந்து இருந்தது. அந்த ஆர்வத்தில் மக்கா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்கள். இதை அறிந்த நபிகளாரின் தோழர்களும் இந்த பயணத்தில் அவருடன் செல்லத்தயார் ஆனார்கள். கிட்டத்தட்ட 1500 பேருக்கும் மேலாக அவர்கள் திரண்டனர்.
மக்காவில் நபிகளாரை எதிர்த்த குரைஷி இனத்தவர்களுக்கு இந்த செய்தி எட்டியது. ஆனால் அவர்கள், ’நபிகளார் தலைமையில் மதீனாவாசிகள் நம் மீது படையெடுத்து வருகிறார்கள்’ என்று தவறாக கருதினார்கள். எனவே நபிகளார் தலைமையில் வந்த மக்களை, மக்காவின் எல்லையில் ஹூதைய்பிய்யா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தினர்கள்.
நபிகள் கோமான் அந்த மக்களை நோக்கி “நாங்கள் காபத்துல்லாவை ‘உம்ரா’ செய்து (தரிசித்து) விட்டு போகவே வந்துள்ளோம். ‘இஹ்ராம்’ என்ற ஆடை அணிந்துள்ளோம். இஸ்லாமிய கொள்கையின்படி இந்த ஆடையில் இருக்கும் போது நாங்கள் போர் செய்யமாட்டோம். இதை நீங்களும் அறிவீர்கள். எனவே எங்களுக்கு அனுமதி தாருங் கள். நாங்கள் காபாவை தவாபு செய்து விட்டு சென்று விடுகிறோம்” என்றார்கள்.
ஆனால் மக்காவாசிகள் இதற்கு அனுமதி தர மறுத்து விட்டனர். நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு இரு பிரிவினரும் உடன்படிக்கை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். அன்று தான் உலகின் தலைசிறந்த உடன்படிக்கையாக கருதப்படும் ‘ஹூதைய்பிய்யா உடன்படிக்கை’ கையெழுத்தாயிற்று.
அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் அனைத்தும் தங்களுக்கு எதிராக அமைந்திருந்த போதிலும் நபிகள் நாயகம் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு காரணம் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையே. இந்த இடைப்பட்ட காலத்தில் மக்காவாசிகள் அனைவரும் இஸ்லாத்தில் இணைந்து விடுவார்கள் என்று அவர்கள் நம்பினார்கள்.
உடன்படிக்கை கையெழுத்தாகி விட்டது, ஆனால் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. காபாவை தவாபு செய்யாமல் எப்படி இஹ்ராம் ஆடையை களைவது என்ற கேள்வி எழுந்தது. ‘உம்ரா’ செய்ய வேண்டும் என்ற நிய்யத்தில் கடமையை நிறைவேற்றாமல், இஹ்ராம் களைந்தால் நிய்யத்திற்கு மாற்றம் செய்த குற்றம் நிகழ்ந்து விடுமே என்று அத்தனை சஹாபாக்களும் இஹ்ராம் களையாமல் காத்திருந்தனர்.
அடுத்து என்ன செய்வது என்று நபிகள் நாயகம் யோசித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது அவரோடு பயணம் வந்திருந்த மனைவி உம்மு ஸல்மா (ரலி) ஒரு யோசனை தெரிவித்தார்கள்.
உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நாயகமே! உங்கள் தோழர்கள் அனைவரும் உங்களின் ஒவ்வொரு செயலையும் வழிமுறையாய் ஏற்றுக்கொள்பவர்கள். எனவே நீங்கள் முதலில் இஹ்ராம் களைந்து, குர்பானி கொடுத்து, தலைமுடியை இறக்கி விடுங்கள். நிச்சயமாக மற்றவர்களும் உங்களை பின்பற்றி அவர்களும் இஹ்ராம் களைந்து குர்பானி கொடுப்பார்கள்” என்றார்.
நபி பெருமானார் எந்தவித ஆட்சேபனையும் இன்றி அந்த ஆலோசனைக்கு உடன்பட்டார்கள். நபியைத் தொடர்ந்து அத்தனை சஹாபாக்களும் இஹ்ராம் களைந்து, குர்பானி கொடுத்து கடமையை நிறைவேற்றினார்கள். பெரிதாக உருவெடுக்க இருந்த பிரச்சினை மிக எளிதாக தீர்ந்து விட்டது. தன் மனைவியாய் இருந்தாலும் அவர்களையும் பெரிதாய் மதித்து மரியாதை கொடுத்ததால் அவர்கள் கூறிய யோசனை மூலம் இந்த பிரச்சினைக்கு சிறந்த இணக்கமான தீர்வை எட்ட முடிந்தது.
ஜயான் அஸ்லம், காலங்குடியிருப்பு
மக்காவில் நபிகளாரை எதிர்த்த குரைஷி இனத்தவர்களுக்கு இந்த செய்தி எட்டியது. ஆனால் அவர்கள், ’நபிகளார் தலைமையில் மதீனாவாசிகள் நம் மீது படையெடுத்து வருகிறார்கள்’ என்று தவறாக கருதினார்கள். எனவே நபிகளார் தலைமையில் வந்த மக்களை, மக்காவின் எல்லையில் ஹூதைய்பிய்யா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தினர்கள்.
நபிகள் கோமான் அந்த மக்களை நோக்கி “நாங்கள் காபத்துல்லாவை ‘உம்ரா’ செய்து (தரிசித்து) விட்டு போகவே வந்துள்ளோம். ‘இஹ்ராம்’ என்ற ஆடை அணிந்துள்ளோம். இஸ்லாமிய கொள்கையின்படி இந்த ஆடையில் இருக்கும் போது நாங்கள் போர் செய்யமாட்டோம். இதை நீங்களும் அறிவீர்கள். எனவே எங்களுக்கு அனுமதி தாருங் கள். நாங்கள் காபாவை தவாபு செய்து விட்டு சென்று விடுகிறோம்” என்றார்கள்.
ஆனால் மக்காவாசிகள் இதற்கு அனுமதி தர மறுத்து விட்டனர். நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு இரு பிரிவினரும் உடன்படிக்கை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். அன்று தான் உலகின் தலைசிறந்த உடன்படிக்கையாக கருதப்படும் ‘ஹூதைய்பிய்யா உடன்படிக்கை’ கையெழுத்தாயிற்று.
அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் அனைத்தும் தங்களுக்கு எதிராக அமைந்திருந்த போதிலும் நபிகள் நாயகம் அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். இதற்கு காரணம் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையே. இந்த இடைப்பட்ட காலத்தில் மக்காவாசிகள் அனைவரும் இஸ்லாத்தில் இணைந்து விடுவார்கள் என்று அவர்கள் நம்பினார்கள்.
உடன்படிக்கை கையெழுத்தாகி விட்டது, ஆனால் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. காபாவை தவாபு செய்யாமல் எப்படி இஹ்ராம் ஆடையை களைவது என்ற கேள்வி எழுந்தது. ‘உம்ரா’ செய்ய வேண்டும் என்ற நிய்யத்தில் கடமையை நிறைவேற்றாமல், இஹ்ராம் களைந்தால் நிய்யத்திற்கு மாற்றம் செய்த குற்றம் நிகழ்ந்து விடுமே என்று அத்தனை சஹாபாக்களும் இஹ்ராம் களையாமல் காத்திருந்தனர்.
அடுத்து என்ன செய்வது என்று நபிகள் நாயகம் யோசித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது அவரோடு பயணம் வந்திருந்த மனைவி உம்மு ஸல்மா (ரலி) ஒரு யோசனை தெரிவித்தார்கள்.
உம்மு ஸல்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நாயகமே! உங்கள் தோழர்கள் அனைவரும் உங்களின் ஒவ்வொரு செயலையும் வழிமுறையாய் ஏற்றுக்கொள்பவர்கள். எனவே நீங்கள் முதலில் இஹ்ராம் களைந்து, குர்பானி கொடுத்து, தலைமுடியை இறக்கி விடுங்கள். நிச்சயமாக மற்றவர்களும் உங்களை பின்பற்றி அவர்களும் இஹ்ராம் களைந்து குர்பானி கொடுப்பார்கள்” என்றார்.
நபி பெருமானார் எந்தவித ஆட்சேபனையும் இன்றி அந்த ஆலோசனைக்கு உடன்பட்டார்கள். நபியைத் தொடர்ந்து அத்தனை சஹாபாக்களும் இஹ்ராம் களைந்து, குர்பானி கொடுத்து கடமையை நிறைவேற்றினார்கள். பெரிதாக உருவெடுக்க இருந்த பிரச்சினை மிக எளிதாக தீர்ந்து விட்டது. தன் மனைவியாய் இருந்தாலும் அவர்களையும் பெரிதாய் மதித்து மரியாதை கொடுத்ததால் அவர்கள் கூறிய யோசனை மூலம் இந்த பிரச்சினைக்கு சிறந்த இணக்கமான தீர்வை எட்ட முடிந்தது.
ஜயான் அஸ்லம், காலங்குடியிருப்பு






