search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகூர் சில்லடி தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி
    X
    நாகூர் சில்லடி தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி

    நாகூர் சில்லடி தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி

    நாகை அருகே உள்ள நாகூர் சில்லடி தர்காவில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    நாகை அருகே உள்ள நாகூர் சில்லடி தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் முன்னிலையில் கலிபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார். இதில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவு பெற்றது.
    Next Story
    ×