என் மலர்
இஸ்லாம்
மசூதிகளில் ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பிறகு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மசூதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி முதல் தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாடுகள் நடந்து வருகிறது. மக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டு வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.
பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று மசூதிகளில் ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பிறகு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மசூதிகளில் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. கைகளில் சானிடைசர் (கிருமிநாசினி) தெளிக்கப்பட்ட பின்னரே மசூதிகளின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று மசூதிகளில் ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பிறகு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மசூதிகளில் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. கைகளில் சானிடைசர் (கிருமிநாசினி) தெளிக்கப்பட்ட பின்னரே மசூதிகளின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
5 மாதங்களுக்கு பின்னர் நாகூர் தர்கா நேற்று திறக்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் தர்காவில் பிரார்த்தனை செய்தனர்.
ஊரடங்கு தளர்வை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முன்தினம் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. ஆனால் நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்கா திறக்கப்படவில்லை. பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் நேற்று முன்தினம் தர்கா திறக்கப்படவில்லை என்று தற்காலிக குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு இருந்த நாகூர் தர்கா பக்தர்கள் பிரார்த்தனை செய்ய நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. முககவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே தர்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தர்காவுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டும் அல்லாது வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து பிரார்த்தனை செய்தனர். தர்காவுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் தெர்மல் கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டனர்.
ஷாகுல் அமீது காதிர் ஒலி, செய்யது முகமது யூசுப் சாஹிப், அவருடைய மனைவி செய்யது சுல்தான் பீவி அம்மா சாஹிபா ஆகிய மூன்று சமாதிகள் திறக்கப்பட்டன. தர்காவுக்கு வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பிரார்த்தனை செய்தனர். மேலும் மயில் ரேகை ஆசீர்வாதம், பெரிய ஆண்டவர் பாதப்பெட்டி தரிசனம் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தர்காவுக்கு வந்த பக்தர்கள், 10 நிமிடங்களில் பிரார்த்தனை செய்துவிட்டு வெளியேறினர்.
5 மாதங்களுக்கு பிறகு நாகூர் தர்கா திறக்கப்பட்டதால் காலையில் பிரார்த்தனை செய்தது மகிழ்ச்சியாக உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு இருந்த நாகூர் தர்கா பக்தர்கள் பிரார்த்தனை செய்ய நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. முககவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே தர்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தர்காவுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டும் அல்லாது வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து பிரார்த்தனை செய்தனர். தர்காவுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் தெர்மல் கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டனர்.
ஷாகுல் அமீது காதிர் ஒலி, செய்யது முகமது யூசுப் சாஹிப், அவருடைய மனைவி செய்யது சுல்தான் பீவி அம்மா சாஹிபா ஆகிய மூன்று சமாதிகள் திறக்கப்பட்டன. தர்காவுக்கு வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பிரார்த்தனை செய்தனர். மேலும் மயில் ரேகை ஆசீர்வாதம், பெரிய ஆண்டவர் பாதப்பெட்டி தரிசனம் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தர்காவுக்கு வந்த பக்தர்கள், 10 நிமிடங்களில் பிரார்த்தனை செய்துவிட்டு வெளியேறினர்.
5 மாதங்களுக்கு பிறகு நாகூர் தர்கா திறக்கப்பட்டதால் காலையில் பிரார்த்தனை செய்தது மகிழ்ச்சியாக உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.
பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய தமிழக அரசின் நெறிமுறைகள் குறித்து குமரி மாவட்ட தலைமை ஹாஜி அபுசாலி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய தமிழக அரசின் நெறிமுறைகள் குறித்து குமரி மாவட்ட தலைமை ஹாஜி அபுசாலி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் இருந்து பள்ளி வாசலுக்கு வர அனுமதி யில்லை. மசூதிக்குள் 6 அடி சமூக இடைவெளிவிட்டு (100 சதுர மீட்டர் பரப்பளவில் 20 நபர்கள் என்ற கணக்கில்) தொழுகை நடத்த வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய் உள்ளவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தொழுகைக்கு வருவதை தவிர்க்கவும்.
தொழுகை நடத்த வருபவர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து, கால்களை கழுவிய பின்னரே பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படுவர். கட்டா யம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மற்றும் கழிவறையை பயன்படுத்த தடை செய்யப் பட்டுள்ளது. உணவுப் பொருட்களை உள்ளே கொண்டு வரவும், உண்ணவும் அனுமதி இல்லை
காலணிகளை தரையில் கழற்றிவிடாமல் அதற்குரிய இடத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். பள்ளி வாசல் வளாகத்தில் எச்சில் உமிழ்வது கூடாது. இருமல், தும்மல் வரும்போது பயன் படுத்தும் கைக்குட்டை, டிஸ்யூ தாள்களை கீழே போடாமல் தங்களிடமே வைத்திருந்து எடுத்துச் செல்ல வேண்டும். மசூதி மிம்பர் (3 படிக்கட்டு கொண்டது), அலமாரி உள் ளிட்ட இடங்களில் புத்தகங் கள், தொப்பி, மிஸ்வாக் தஸ்பீஹ்மணி, செல்போன் போன்ற எதையும் வைக்கக்கூடாது.
மசூதிக்குள் பாய், விரிப்புகள் அகற்றப்பட்டு, மின்விசிறிகள் மட்டுமே இயங்க வேண்டும். பாங்கு சொல்லப்பட்டு 10 நிமிடம் கழிந்ததும் (மக்ரிபு தவிர) ஜமாத் மற்றும் ஜுமூஆ (வெள்ளிக்கிழமை மதிய தொழுகை) ஆரம்பிக்கப்படும். ஜூமுஆவில் மிம்பர் குத்பா மற்றும் பர்ளு தொழுகை மட்டும் சுருக்கமாக நடை பெறும். இரண்டாம் ஜமாத் நடைபெறாது. பயான், சொற்பொழிவு, விழாக்கள், மத்ரஸா மற்றும் வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. மசூதி வளாகத்தில் திருமணத்து என (நிக்காஹ் மஜ்லீஸூ) ஒதுக்கப்படும் இடத்தில் ஒரு நேரத்தில் ஒரு திருமணம் என்ற முறையில் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தாமதமின்றி திருமணம் நடத்த வேண்டும்.
பள்ளிவாசல் வளாகத்தில் ஒருவரையொருவர் கை குலுக்கிக் கொள்வதும், ஆரத்தழுவிக்கொள்வதும் கூடாது. திருமணம் முடிந்த உடன் மசூதி பூட்டப்படும். மறுநேரம் வரும்வரை திறக்கப்படாது. ஒவ்வொரு ஜமாத் முடிந்த உடன் தரையை சுத்தம் செய்ய வேண்டும். வாகனங்களை மசூதிக்குள் ளும், மசூதி அருகிலும் நிறுத்தக்கூடாது. தொழில் முடக்கம், வருவாய் இழப்பு, வேலையின்மை ஆகியவை காரணத்துக்காக தமிழக அரசு சில தளர்வுகளை அறி வித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த காலகட்டத்தில் தொழுகை நடத்தக்கூடியவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசு விதிகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் இருந்து பள்ளி வாசலுக்கு வர அனுமதி யில்லை. மசூதிக்குள் 6 அடி சமூக இடைவெளிவிட்டு (100 சதுர மீட்டர் பரப்பளவில் 20 நபர்கள் என்ற கணக்கில்) தொழுகை நடத்த வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய் உள்ளவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தொழுகைக்கு வருவதை தவிர்க்கவும்.
தொழுகை நடத்த வருபவர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து, கால்களை கழுவிய பின்னரே பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படுவர். கட்டா யம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி மற்றும் கழிவறையை பயன்படுத்த தடை செய்யப் பட்டுள்ளது. உணவுப் பொருட்களை உள்ளே கொண்டு வரவும், உண்ணவும் அனுமதி இல்லை
காலணிகளை தரையில் கழற்றிவிடாமல் அதற்குரிய இடத்தில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். பள்ளி வாசல் வளாகத்தில் எச்சில் உமிழ்வது கூடாது. இருமல், தும்மல் வரும்போது பயன் படுத்தும் கைக்குட்டை, டிஸ்யூ தாள்களை கீழே போடாமல் தங்களிடமே வைத்திருந்து எடுத்துச் செல்ல வேண்டும். மசூதி மிம்பர் (3 படிக்கட்டு கொண்டது), அலமாரி உள் ளிட்ட இடங்களில் புத்தகங் கள், தொப்பி, மிஸ்வாக் தஸ்பீஹ்மணி, செல்போன் போன்ற எதையும் வைக்கக்கூடாது.
மசூதிக்குள் பாய், விரிப்புகள் அகற்றப்பட்டு, மின்விசிறிகள் மட்டுமே இயங்க வேண்டும். பாங்கு சொல்லப்பட்டு 10 நிமிடம் கழிந்ததும் (மக்ரிபு தவிர) ஜமாத் மற்றும் ஜுமூஆ (வெள்ளிக்கிழமை மதிய தொழுகை) ஆரம்பிக்கப்படும். ஜூமுஆவில் மிம்பர் குத்பா மற்றும் பர்ளு தொழுகை மட்டும் சுருக்கமாக நடை பெறும். இரண்டாம் ஜமாத் நடைபெறாது. பயான், சொற்பொழிவு, விழாக்கள், மத்ரஸா மற்றும் வேறு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. மசூதி வளாகத்தில் திருமணத்து என (நிக்காஹ் மஜ்லீஸூ) ஒதுக்கப்படும் இடத்தில் ஒரு நேரத்தில் ஒரு திருமணம் என்ற முறையில் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தாமதமின்றி திருமணம் நடத்த வேண்டும்.
பள்ளிவாசல் வளாகத்தில் ஒருவரையொருவர் கை குலுக்கிக் கொள்வதும், ஆரத்தழுவிக்கொள்வதும் கூடாது. திருமணம் முடிந்த உடன் மசூதி பூட்டப்படும். மறுநேரம் வரும்வரை திறக்கப்படாது. ஒவ்வொரு ஜமாத் முடிந்த உடன் தரையை சுத்தம் செய்ய வேண்டும். வாகனங்களை மசூதிக்குள் ளும், மசூதி அருகிலும் நிறுத்தக்கூடாது. தொழில் முடக்கம், வருவாய் இழப்பு, வேலையின்மை ஆகியவை காரணத்துக்காக தமிழக அரசு சில தளர்வுகளை அறி வித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த காலகட்டத்தில் தொழுகை நடத்தக்கூடியவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அரசு விதிகளை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இறைவனின் கட்டளைக்கு ஏற்ப இஸ்லாமிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளை மிகவும் சிரமத்துடன் நபிகளார் செய்து வந்தார்கள்.
அறியாமை இருளில் மூழ்கி இருந்த மக்களை நல்வழிப்படுத்த முகம்மது நபி (ஸல்) அவர்களை தனது தூதராக ஏக இறைவன் அல்லாஹ் அனுப்பினான். இறைவனின் கட்டளைக்கு ஏற்ப இஸ்லாமிய கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்லும் பணிகளை மிகவும் சிரமத்துடன் நபிகளார் செய்து வந்தார்கள்.
அப்போது, அவருக்கு எதிராக அரேபியாவில் உள்ள குரைஷி இன மக்கள் செயல்பட்டனர்.
“நம்மோடு நேற்று வரை சாதாரண மனிதராக இருந்த முஹம்மது இன்று, ‘நான் தான் இறைத்தூதர்; அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனே அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்பவன்; அவன் படைத்த படைப்பினங்களை அவனுக்கு இணையாக்காதீர்கள்’, என்று புதிய கொள்கைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் கொள்கையில் மதிமயங்கி பல இளைஞர்கள் நம் முன்னோரின் சிலை வணக்க முறைக்கு இடையூறு செய்கின்றனர். இதற்கு இப்போதே தடை விதிக்காவிட்டால் நாளை அது விபரீதமாகி விடும்” என்று அரேபிய குரைஷியர்கள் கோபம் கொண்டனர்.
நபிகளாரைக் கொல்லவும் அந்தக்கூட்டம் சதி திட்டம் தீட்டியது. இதற்காக உமர் கத்தாப் என்ற வீரரை அவர்கள் அணுகினார்கள். அரேபிய மண்ணில் தலைச்சிறந்த வீரர் ஆக உமர் கத்தாப் கருதப்பட்டார்.
“நீங்கள் முஹம்மதுவை கொன்று வாருங்கள், பத்து சிகப்பு ஒட்டகம் பரிசாக தருகிறோம்” என்றார்கள். அப்போது சிகப்பு நிற ஒட்டகம் விலை உயர்ந்ததாக கருதப்பட்டது.
உமர் கத்தாப்பும் இதை ஏற்றுக்கொண்டார். வாளை கையில் ஏந்தியபடி முகம்மது நபி அவர்களை கொல்ல வீதியில் நடந்து சென்றார்.
இந்த செய்தியை அறிந்த நபித்தோழர் ஒருவர் உமர் அவர்களை வழி மறித்து “உமரே! நீர் நபி பெருமானை கொல்வதற்கு முன் உம் தங்கை பாத்திமாவை சென்று சந்தியும். ஏனென்றால் அவரும் இஸ்லாத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டு விட்டார்” என்றார்.
“என்ன! நீர் சொல்வது உண்மையா?” என்று கோபமாக கேட்ட உமர், தன் தங்கை வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கதவை தட்ட முயன்ற போது, வீட்டின் உள்ளிருந்து இனிய குரலில் தங்கை பாத்திமா குர்ஆனின் சில வசனங்களை ஓதுவதை செவியுற்றார்கள்.
“நிச்சயமாக நான் தான் அல்லாஹ், என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள், என்னை தியானித் துக் கொண்டு இருக்கும் பொருட்டு தொழுகையை கடைபிடியுங்கள்”.
“நிச்சயமாக மறுமை வந்தே தீரும். ஒவ்வொரு ஆத்மாவும் தன் செயலுக்கு தக்க கூலியை அடையும் பொருட்டு அதனை நான் மனிதர்களுக்கு மறைத்து வைக்க விரும்புகிறேன்” (திருக்குர்ஆன் 20:14-15)
இந்த வசனங்கள் உமர் அவர்களின் காதில் விழுந்த உடன் அவர் மனதில் ஓர் இனம் புரியாத உணர்வுகள் பீரிட்டு எழுந்தன.
“எத்தனை சத்தியமான வார்த்தைகள். இது நிச்சயமாக எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே சொல்லி இருக்க முடியும்” என்று மனதில் உறுதி பூண்டார்கள், அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
நபிகளாரைக் கொல்ல வந்தவர்கள் அவர்களின் கொள்கைப்பிடிப்பாளராக மாறிப்போனார்கள்.
ஏந்திய வாளை எறிந்து விட்டு மீண்டும் வீதியில் இறங்கி நடந்தார்கள். கண்மணி நாயகத்தைச் சந்தித்து நடந்த விபரங் களைச் சொல்லி அவர்கள் கரம் பற்றி கலிமாச் சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
மாமறையின் ஒரு வசனம் உமர் அவர்களின் மனதை மாற்றியது. உமர் அவர்கள் இஸ்லாத்தில் இணைந்த பின் மக்காவில் அதன் வீரியம் மிக வேகமாக பரவ ஆரம்பித்தது.
மு. முகமது யூசுப், உடன்குடி.-
அப்போது, அவருக்கு எதிராக அரேபியாவில் உள்ள குரைஷி இன மக்கள் செயல்பட்டனர்.
“நம்மோடு நேற்று வரை சாதாரண மனிதராக இருந்த முஹம்மது இன்று, ‘நான் தான் இறைத்தூதர்; அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனே அனைத்தையும் படைத்து பரிபாலனம் செய்பவன்; அவன் படைத்த படைப்பினங்களை அவனுக்கு இணையாக்காதீர்கள்’, என்று புதிய கொள்கைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் கொள்கையில் மதிமயங்கி பல இளைஞர்கள் நம் முன்னோரின் சிலை வணக்க முறைக்கு இடையூறு செய்கின்றனர். இதற்கு இப்போதே தடை விதிக்காவிட்டால் நாளை அது விபரீதமாகி விடும்” என்று அரேபிய குரைஷியர்கள் கோபம் கொண்டனர்.
நபிகளாரைக் கொல்லவும் அந்தக்கூட்டம் சதி திட்டம் தீட்டியது. இதற்காக உமர் கத்தாப் என்ற வீரரை அவர்கள் அணுகினார்கள். அரேபிய மண்ணில் தலைச்சிறந்த வீரர் ஆக உமர் கத்தாப் கருதப்பட்டார்.
“நீங்கள் முஹம்மதுவை கொன்று வாருங்கள், பத்து சிகப்பு ஒட்டகம் பரிசாக தருகிறோம்” என்றார்கள். அப்போது சிகப்பு நிற ஒட்டகம் விலை உயர்ந்ததாக கருதப்பட்டது.
உமர் கத்தாப்பும் இதை ஏற்றுக்கொண்டார். வாளை கையில் ஏந்தியபடி முகம்மது நபி அவர்களை கொல்ல வீதியில் நடந்து சென்றார்.
இந்த செய்தியை அறிந்த நபித்தோழர் ஒருவர் உமர் அவர்களை வழி மறித்து “உமரே! நீர் நபி பெருமானை கொல்வதற்கு முன் உம் தங்கை பாத்திமாவை சென்று சந்தியும். ஏனென்றால் அவரும் இஸ்லாத்தை ஏற்கனவே ஏற்றுக்கொண்டு விட்டார்” என்றார்.
“என்ன! நீர் சொல்வது உண்மையா?” என்று கோபமாக கேட்ட உமர், தன் தங்கை வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கதவை தட்ட முயன்ற போது, வீட்டின் உள்ளிருந்து இனிய குரலில் தங்கை பாத்திமா குர்ஆனின் சில வசனங்களை ஓதுவதை செவியுற்றார்கள்.
“நிச்சயமாக நான் தான் அல்லாஹ், என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள், என்னை தியானித் துக் கொண்டு இருக்கும் பொருட்டு தொழுகையை கடைபிடியுங்கள்”.
“நிச்சயமாக மறுமை வந்தே தீரும். ஒவ்வொரு ஆத்மாவும் தன் செயலுக்கு தக்க கூலியை அடையும் பொருட்டு அதனை நான் மனிதர்களுக்கு மறைத்து வைக்க விரும்புகிறேன்” (திருக்குர்ஆன் 20:14-15)
இந்த வசனங்கள் உமர் அவர்களின் காதில் விழுந்த உடன் அவர் மனதில் ஓர் இனம் புரியாத உணர்வுகள் பீரிட்டு எழுந்தன.
“எத்தனை சத்தியமான வார்த்தைகள். இது நிச்சயமாக எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே சொல்லி இருக்க முடியும்” என்று மனதில் உறுதி பூண்டார்கள், அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.
நபிகளாரைக் கொல்ல வந்தவர்கள் அவர்களின் கொள்கைப்பிடிப்பாளராக மாறிப்போனார்கள்.
ஏந்திய வாளை எறிந்து விட்டு மீண்டும் வீதியில் இறங்கி நடந்தார்கள். கண்மணி நாயகத்தைச் சந்தித்து நடந்த விபரங் களைச் சொல்லி அவர்கள் கரம் பற்றி கலிமாச் சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
மாமறையின் ஒரு வசனம் உமர் அவர்களின் மனதை மாற்றியது. உமர் அவர்கள் இஸ்லாத்தில் இணைந்த பின் மக்காவில் அதன் வீரியம் மிக வேகமாக பரவ ஆரம்பித்தது.
மு. முகமது யூசுப், உடன்குடி.-
நாகையை அடுத்த நாகூர் தர்காவில் முகரம் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பிறகு அனைவருக்கும் தப்ருக் வழங்கப்பட்டது.
நாகையை அடுத்த நாகூர் தர்காவில் முகரம் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
நாகூர் தர்கா உட்புறத்தில் உள்ள யாஹூசைன் பள்ளி மண்டபத்தில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து 7 பரம்பரை டிரஸ்டிகள் முன்னிலையில் தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் சிறப்பு தூவா ஓதினார்.
பிறகு அனைவருக்கும் தப்ருக் வழங்கப்பட்டது.
நாகூர் தர்கா உட்புறத்தில் உள்ள யாஹூசைன் பள்ளி மண்டபத்தில் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து 7 பரம்பரை டிரஸ்டிகள் முன்னிலையில் தர்கா கலிபா மஸ்தான் சாஹிப் சிறப்பு தூவா ஓதினார்.
பிறகு அனைவருக்கும் தப்ருக் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது மரகதபுரம் கிராமத்தில் உள்ள மசூதியில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது மரகதபுரம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி மசூதியை சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 11 மணியளவில் மசூதியின் உள்ளே முஸ்லிம்களும், அய்யப்ப பக்தர்களும் மாலை அணிந்தபடி வெற்றிலை, பாக்கு, ஊதுவர்த்திகள் ஆகியவற்றை வைத்து சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டனர்.
பின்னர் இரவு 11.30 மணியளவில் முஸ்லிம்கள் மேளதாளம் முழங்க அருகில் உள்ள தென்பெண்ணையாற்றுக்கு சென்று புனித நீராடிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர். தொடர்ந்து. மசூதி முன்பு இருந்த தீக்குண்டத்தில் முஸ்லிம் பெரியவர் ஒருவர் இறங்கினார்.
அப்போது அவருக்கு வலதுபுறம் இந்து மதத்தை சேர்ந்த ஒருவரும், இடதுபுறம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரும் அவருடன் தீக்குண்டத்தில் இறங்கினார்கள். இது அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை உணர்த்துவதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். இவர்களை தொடர்ந்து இரு மதத்தினரும் ஜாதி, மதம் பார்க்காமல் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
இதை பார்க்கும்போது நம்மையெல்லாம் புருவங்களை உயர்த்த செய்ததோடு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் மேள, தாளம் முழங்க மரகதபுரத்தில் உள்ள அனைத்து வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது ஊர் மக்கள் அவர்களது காலில் விழுந்து வணங்கினார்கள்.
இவ்விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்துக்கள், முஸ்லிம்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டனர். ஆண்டுதோறும் முகரம் பண்டிகையையொட்டி இந்த விழா 10 நாட்கள் வெகு விமர்சையாக மரகதபுரத்தில் நடைபெறும். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எப்படி விரதமிருந்து கோவிலுக்கு செல்கிறார்களோ அதுபோல் இவ்விழாவில் பங்கேற்ற இந்துக்களும், முஸ்லிம்களும் 10 நாட்கள் விரதமிருந்து கலந்துகொண்டனர்.
இதையொட்டி மசூதியை சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 11 மணியளவில் மசூதியின் உள்ளே முஸ்லிம்களும், அய்யப்ப பக்தர்களும் மாலை அணிந்தபடி வெற்றிலை, பாக்கு, ஊதுவர்த்திகள் ஆகியவற்றை வைத்து சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டனர்.
பின்னர் இரவு 11.30 மணியளவில் முஸ்லிம்கள் மேளதாளம் முழங்க அருகில் உள்ள தென்பெண்ணையாற்றுக்கு சென்று புனித நீராடிவிட்டு மீண்டும் மசூதிக்கு வந்தனர். தொடர்ந்து. மசூதி முன்பு இருந்த தீக்குண்டத்தில் முஸ்லிம் பெரியவர் ஒருவர் இறங்கினார்.
அப்போது அவருக்கு வலதுபுறம் இந்து மதத்தை சேர்ந்த ஒருவரும், இடதுபுறம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவரும் அவருடன் தீக்குண்டத்தில் இறங்கினார்கள். இது அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை உணர்த்துவதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். இவர்களை தொடர்ந்து இரு மதத்தினரும் ஜாதி, மதம் பார்க்காமல் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
இதை பார்க்கும்போது நம்மையெல்லாம் புருவங்களை உயர்த்த செய்ததோடு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் மேள, தாளம் முழங்க மரகதபுரத்தில் உள்ள அனைத்து வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது ஊர் மக்கள் அவர்களது காலில் விழுந்து வணங்கினார்கள்.
இவ்விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்துக்கள், முஸ்லிம்கள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்துகொண்டனர். ஆண்டுதோறும் முகரம் பண்டிகையையொட்டி இந்த விழா 10 நாட்கள் வெகு விமர்சையாக மரகதபுரத்தில் நடைபெறும். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எப்படி விரதமிருந்து கோவிலுக்கு செல்கிறார்களோ அதுபோல் இவ்விழாவில் பங்கேற்ற இந்துக்களும், முஸ்லிம்களும் 10 நாட்கள் விரதமிருந்து கலந்துகொண்டனர்.
நமக்கு ஏற்படும் துன்பங்களை பொறுத்துக்கொண்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்தினால், தங்கத்தை உருக்கி அழுக்கு நீக்கி சுத்தம் செய்வது போல், நம் பாவங்கள் களையப்படும்.
ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே என்ற கொள்கையை நிலைநாட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கடுமையாக போராடினார்கள். அவர்களது சொல்லிலும், செயலிலும் இருந்த சத்தியத்தை உணர்ந்த மக்கள், கூட்டம் கூட்டமாக தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டனர். அப்போது அவர்களுக்கு எதிராக வாள் ஏந்தி போர்புரிய எதிரிகள் திரண்டு இருந்தனர். அல்லாஹ்வின் கட்டளைப்படியே அனைத்து தர்ம யுத்தங்களிலும் நபிகளாரும், அவரது தோழர்களும் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். அதுபோன்ற ஒரு போர்க்களம் தான் உஹது போர்.
அல்லாஹ்வின் அருளால் உஹது போரில் நபிகளாரின் படைகளுக்கு வெற்றி கிடைத்தது. எதிரிகள் புறமுதுகிட்டு ஓடினர். போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச்சென்ற பொருட்களை சேகரிப்பதில் நபித்தோழர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். உஹது மலையின் உச்சியில் நின்று ‘எதிரிப்படைகள் திரும்பி வருகிறார்களா?’ என்று கண்காணித்துக்கொண்டிருந்த நபிகளாரின் படையைச்சேர்ந்த வில்வித்தை வீரர்கள் இதைப் பார்த்தனர். போர் முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் அவர்களும் மலையில் இருந்து இறங்கி போர்க்களத்தில் சிதறிக்கிடந்த பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினர்.
அப்போது, எதிரிகள் திரும்பி வந்து நபிகளாரின் படைகளை பின்புறமிருந்து தாக்கினார்கள். இதனை சற்றும் எதிர்பாராத நபித்தோழர்கள் நிலைகுலைந்து போனார்கள். படைகள் அங்கும் இங்குமாக சிதறின, பெரும் குழப்பம் நிலவியது. தாறுமாறாக வீரர்கள் வெட்டி கொல்லப்பட்டனர்.
அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். தலையில் பெரும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. பல் ஒன்றும் உடைக்கப்பட்டது. இந்த திடீர் தாக்குதலில் நபிகளின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) கொல்லப்பட்டார். இதைக்கேட்டு நபிகளார் துடித்துப் போனார்கள்.
துக்கம் சூழ்ந்த அந்த சூழ்நிலையில் அல்லாஹ் இறைச்செய்தியை இறக்கி வைக்கின்றான்.
“(நபியே!) நீர் பொறுமையுடன் பணியாற்றிக் கொண்டிருப்பீராக! மேலும், உம்முடைய இந்தப் பொறுமை அல்லாஹ்வின் பேருதவியினால்தான் கிடைக்கின்றது. அவர்களின் செயல்கள் குறித்து நீர் வருந்த வேண்டாம். அவர்களின் சூழ்ச்சிகளைக் குறித்து நீர் மனம் நொந்து போகவும் வேண்டாம்”. (திருக்குர்ஆன் 16:127).
நபிகளார் மனம் புண்பட்டிருந்த அந்த நேரத்தில் அல்லாஹ், ‘நபியே! நீங்கள் பொறுமையைக் கையாளுங்கள்’ என்கின்றான். மனிதர்கள், மனதாலும், எண்ணங்களாலும் பலவீனமானவர்கள். எனவே அல்லாஹ்வின் உதவியின்றி பொறுமை சாத்தியப்படாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றான். நிகழ்வின் யதார்த்தத் தையும், விதியின் வலிமையையும் சொல்லிக்காட்டிவிட்டு, ‘எதிரிகளின் சூழ்ச்சியைப்பற்றி கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு பக்கபலமாய் உள்ளேன்’ என்று இந்த திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் ஆறுதலும் சொல்கின்றான்.
பின்னர் அல்லாஹ் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நபிகளாருக்கு வெற்றியையும் வழங்கினான்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம், ‘நமக்கு ஏற்படும் துன்பங்களை பொறுத்துக்கொண்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்தினால், தங்கத்தை உருக்கி அழுக்கு நீக்கி சுத்தம் செய்வது போல், நம் பாவங்கள் களையப்படும். அல்லாஹ் வாக்குறுதி செய்த நன்மைகளை இவ்வுலகில் பெற்றுக்கொள்வோம், மறுமையில் சொர்க்கத்தைப் பெற்றுக்கொள்வோம். ஏனென்றால் அத்தகைய பொறுமையாளர்களோடு தான் அல்லாஹ் இருக்கின்றான். அந்த பொறுமையாளர்களோடு அல்லாஹ் நம்மையும் சேர்த்தருள்வானாக’, ஆமின்.
ஜாபிர் அலி, சென்னை.
அல்லாஹ்வின் அருளால் உஹது போரில் நபிகளாரின் படைகளுக்கு வெற்றி கிடைத்தது. எதிரிகள் புறமுதுகிட்டு ஓடினர். போர்க்களத்தில் எதிரிகள் விட்டுச்சென்ற பொருட்களை சேகரிப்பதில் நபித்தோழர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். உஹது மலையின் உச்சியில் நின்று ‘எதிரிப்படைகள் திரும்பி வருகிறார்களா?’ என்று கண்காணித்துக்கொண்டிருந்த நபிகளாரின் படையைச்சேர்ந்த வில்வித்தை வீரர்கள் இதைப் பார்த்தனர். போர் முடிந்து விட்டது என்ற எண்ணத்தில் அவர்களும் மலையில் இருந்து இறங்கி போர்க்களத்தில் சிதறிக்கிடந்த பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கினர்.
அப்போது, எதிரிகள் திரும்பி வந்து நபிகளாரின் படைகளை பின்புறமிருந்து தாக்கினார்கள். இதனை சற்றும் எதிர்பாராத நபித்தோழர்கள் நிலைகுலைந்து போனார்கள். படைகள் அங்கும் இங்குமாக சிதறின, பெரும் குழப்பம் நிலவியது. தாறுமாறாக வீரர்கள் வெட்டி கொல்லப்பட்டனர்.
அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். தலையில் பெரும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. பல் ஒன்றும் உடைக்கப்பட்டது. இந்த திடீர் தாக்குதலில் நபிகளின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) கொல்லப்பட்டார். இதைக்கேட்டு நபிகளார் துடித்துப் போனார்கள்.
துக்கம் சூழ்ந்த அந்த சூழ்நிலையில் அல்லாஹ் இறைச்செய்தியை இறக்கி வைக்கின்றான்.
“(நபியே!) நீர் பொறுமையுடன் பணியாற்றிக் கொண்டிருப்பீராக! மேலும், உம்முடைய இந்தப் பொறுமை அல்லாஹ்வின் பேருதவியினால்தான் கிடைக்கின்றது. அவர்களின் செயல்கள் குறித்து நீர் வருந்த வேண்டாம். அவர்களின் சூழ்ச்சிகளைக் குறித்து நீர் மனம் நொந்து போகவும் வேண்டாம்”. (திருக்குர்ஆன் 16:127).
நபிகளார் மனம் புண்பட்டிருந்த அந்த நேரத்தில் அல்லாஹ், ‘நபியே! நீங்கள் பொறுமையைக் கையாளுங்கள்’ என்கின்றான். மனிதர்கள், மனதாலும், எண்ணங்களாலும் பலவீனமானவர்கள். எனவே அல்லாஹ்வின் உதவியின்றி பொறுமை சாத்தியப்படாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றான். நிகழ்வின் யதார்த்தத் தையும், விதியின் வலிமையையும் சொல்லிக்காட்டிவிட்டு, ‘எதிரிகளின் சூழ்ச்சியைப்பற்றி கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு பக்கபலமாய் உள்ளேன்’ என்று இந்த திருக்குர்ஆன் வசனத்தின் மூலம் ஆறுதலும் சொல்கின்றான்.
பின்னர் அல்லாஹ் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நபிகளாருக்கு வெற்றியையும் வழங்கினான்.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம், ‘நமக்கு ஏற்படும் துன்பங்களை பொறுத்துக்கொண்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்தினால், தங்கத்தை உருக்கி அழுக்கு நீக்கி சுத்தம் செய்வது போல், நம் பாவங்கள் களையப்படும். அல்லாஹ் வாக்குறுதி செய்த நன்மைகளை இவ்வுலகில் பெற்றுக்கொள்வோம், மறுமையில் சொர்க்கத்தைப் பெற்றுக்கொள்வோம். ஏனென்றால் அத்தகைய பொறுமையாளர்களோடு தான் அல்லாஹ் இருக்கின்றான். அந்த பொறுமையாளர்களோடு அல்லாஹ் நம்மையும் சேர்த்தருள்வானாக’, ஆமின்.
ஜாபிர் அலி, சென்னை.
இறைவன் தரும் பாதுகாப்பு... மனித இனம் படைக்கப்பட்ட பிறகு அவர்களில் இருந்தே நபிமார்களையும் அல்லாஹ் படைத்தான். அந்த நபிமார்களும் மனிதர்கள் போல வறுமையிலும், நோயிலும் சோதிக்கப்பட்டார்கள். இதற்கு காரணமும் உள்ளது.
மனித இனம் படைக்கப்பட்ட பிறகு அவர்களில் இருந்தே நபிமார்களையும் அல்லாஹ் படைத்தான். அந்த நபிமார்களும் மனிதர்கள் போல வறுமையிலும், நோயிலும் சோதிக்கப்பட்டார்கள். இதற்கு காரணமும் உள்ளது.
அதாவது, மனிதன் நபிமார்களை நோக்கி, ‘நீங்கள் வலிமை பெற்றவர்களாக, நோய் நொடியில்லாத சிறப்பான அந்தஸ்தில் வாழ்ந்ததால் அல்லாஹ்வின் கட்டளையை உங்களால் நிறைவேற்ற முடிந்தது. ஆனால் நாங்கள் அப்படியல்ல. அதனால் எங்களால் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற முடியாத நிலை’ என்று சொல்ல வாய்ப்பு உள்ளது.
அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காகவே நபிமார்களும் சாதாரண மனிதர்கள்போல நடத்தப்பட்டு, இறைவனின் சோதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
இதற்கு உதாரணமாக ஐயூப் நபி அவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளலாம். செல்வத்திலும், ஆரோக்கியத்திலும் சிறந்த நிலையில் ஐயூப் நபிகளின் வாழ்க்கை இருந்தது. அவர்களின் இறைநம்பிக்கையை சோதிக்கும் நிலை உருவானது. முதலில் அவர்களிடம் இருந்து செல்வம் பறிக்கப்பட்டது. பின்னர் அவர் தீராத நோய் கொண்டு சோதிக்கப்பட்டார். அவரது உடல் முழுவதும் புண் ஏற்பட்டு அவதிப்பட்டார்கள். இருப்பினும் அந்த கொடிய நோயைப் பொருட்படுத்தாமல் இறைசேவை செய்து வந்தார்கள்.
நோய் தாக்கிய நிலையிலும் இறைவன் மீது வைத்த நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. “நிச்சயமாக என்னை நோய் தீண்டியிருக்கிறது. இறைவனே! நீ கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ‘நோயை நீக்கி விடு’ என்று கூட சொல்லவில்லை. அதனை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள்.
நோயைத் தந்தவன் அல்லாஹ், அதனை நீக்குபவனும் அவனே. எனவே நோயை பொறுமையோடு சகித்துக்கொண்டு பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ்வும் அவர்களின் நோயை நீக்கி குணப்படுத்தினான்.
இதையே திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
“(நபியே!) ஐயூப்பையும் (நினைவு கூர்வீராக!) அவர், தன் இரட்சகனிடம், ‘நிச்சயமாகத் துன்பம் என்னைப் பீடித்துக் கொண்டது, நீயோ கிருபையாளர்களில் எல்லாம் மிகக் கிருபையாளன்’ என்று (பிரார்த்தனை செய்து) அழைத்தபோது, நாம் அவருக்கு பதிலளித்து, பின்னர், அவருக்கிருந்த துன்பத்தையும் நீக்கிவிட்டோம், அவருடைய குடும்பத்தையும், அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு நாம் கொடுத்தோம், இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும், (நம்மை) வணங்குவோருக்கு நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.” (திருக்குர்ஆன் 21:83,84)
எனவே, நமக்கு ஏதேனும் துன்பம், சோதனை, நோய் ஏற்பட்டிருந்தால், நாம் ஐயூப் நபியின் வழிமுறையைப் பின்பற்றி அதை பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும். ஐயூப் நபிகள் போல நாமும் நம்பிக்கையோடு பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். அப் போது, நிச்சயமாக அல்லாஹ் நோய்களை விட்டும், துன்பங்களை விட்டும் நம்மை காத்தருள்வான். நாம் எதற்கும் கவலைப்பட தேவையே இல்லை. நமக்கு துன்பங் களில் இருந்து பாதுகாப்பு தருவதற்கு அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.
பாதில் அமீன், அதிரை
அதாவது, மனிதன் நபிமார்களை நோக்கி, ‘நீங்கள் வலிமை பெற்றவர்களாக, நோய் நொடியில்லாத சிறப்பான அந்தஸ்தில் வாழ்ந்ததால் அல்லாஹ்வின் கட்டளையை உங்களால் நிறைவேற்ற முடிந்தது. ஆனால் நாங்கள் அப்படியல்ல. அதனால் எங்களால் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற முடியாத நிலை’ என்று சொல்ல வாய்ப்பு உள்ளது.
அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காகவே நபிமார்களும் சாதாரண மனிதர்கள்போல நடத்தப்பட்டு, இறைவனின் சோதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
இதற்கு உதாரணமாக ஐயூப் நபி அவர்களின் வாழ்க்கையை எடுத்துக்கொள்ளலாம். செல்வத்திலும், ஆரோக்கியத்திலும் சிறந்த நிலையில் ஐயூப் நபிகளின் வாழ்க்கை இருந்தது. அவர்களின் இறைநம்பிக்கையை சோதிக்கும் நிலை உருவானது. முதலில் அவர்களிடம் இருந்து செல்வம் பறிக்கப்பட்டது. பின்னர் அவர் தீராத நோய் கொண்டு சோதிக்கப்பட்டார். அவரது உடல் முழுவதும் புண் ஏற்பட்டு அவதிப்பட்டார்கள். இருப்பினும் அந்த கொடிய நோயைப் பொருட்படுத்தாமல் இறைசேவை செய்து வந்தார்கள்.
நோய் தாக்கிய நிலையிலும் இறைவன் மீது வைத்த நம்பிக்கையை அவர் இழக்கவில்லை. “நிச்சயமாக என்னை நோய் தீண்டியிருக்கிறது. இறைவனே! நீ கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். ‘நோயை நீக்கி விடு’ என்று கூட சொல்லவில்லை. அதனை அல்லாஹ் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள்.
நோயைத் தந்தவன் அல்லாஹ், அதனை நீக்குபவனும் அவனே. எனவே நோயை பொறுமையோடு சகித்துக்கொண்டு பிரார்த்தனை செய்தார்கள். அல்லாஹ்வும் அவர்களின் நோயை நீக்கி குணப்படுத்தினான்.
இதையே திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
“(நபியே!) ஐயூப்பையும் (நினைவு கூர்வீராக!) அவர், தன் இரட்சகனிடம், ‘நிச்சயமாகத் துன்பம் என்னைப் பீடித்துக் கொண்டது, நீயோ கிருபையாளர்களில் எல்லாம் மிகக் கிருபையாளன்’ என்று (பிரார்த்தனை செய்து) அழைத்தபோது, நாம் அவருக்கு பதிலளித்து, பின்னர், அவருக்கிருந்த துன்பத்தையும் நீக்கிவிட்டோம், அவருடைய குடும்பத்தையும், அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு நாம் கொடுத்தோம், இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும், (நம்மை) வணங்குவோருக்கு நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.” (திருக்குர்ஆன் 21:83,84)
எனவே, நமக்கு ஏதேனும் துன்பம், சோதனை, நோய் ஏற்பட்டிருந்தால், நாம் ஐயூப் நபியின் வழிமுறையைப் பின்பற்றி அதை பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும். ஐயூப் நபிகள் போல நாமும் நம்பிக்கையோடு பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். அப் போது, நிச்சயமாக அல்லாஹ் நோய்களை விட்டும், துன்பங்களை விட்டும் நம்மை காத்தருள்வான். நாம் எதற்கும் கவலைப்பட தேவையே இல்லை. நமக்கு துன்பங் களில் இருந்து பாதுகாப்பு தருவதற்கு அல்லாஹ் ஒருவனே போதுமானவன்.
பாதில் அமீன், அதிரை
பல சந்தர்ப்பங்களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள், இறைவன் கட்டளைகளைக் கொண்டு வந்து நபிகளிடம் சொன்னார்கள். அத்தனை கட்டளைகளும் ஒருசேர தொகுக்கப்பட்ட வேதநூலே ‘திருக்குர்ஆன்’ ஆகும்.
அண்ணல் அஹ்மது முஸ்தபா அவர்கள் ‘நபி’ பட்டம் பெறுவதற்கு முன்பாகவே அரேபியர்களிடம் ‘அல்அமீன்’ (நன்நம்பிக்கையாளர்) என்ற சிறப்பை பெற்றிருந் தார்கள். எப்போதும், எந்த நிலையிலும் நபிகளார் உண்மையையே பேசினார்கள். எனவே அரேபியர்கள், நபிகளார் எதைச்சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொண்டார்கள், நம்பினார்கள்.
ஆனால், ’இறைவன் ஒருவன்தான், நான் அவனின் தூதன்’ என்று சொன்ன போது மட்டும் அதனை எதிர்த்தார்கள். காரணம் தங்கள் அந்தஸ்தை, கவுரவத்தை அது பாதிப்பதாக அவர்கள் கருதினார்கள்.
காருண்ய நபி, அதனை தானாக சொல்லவில்லை. அவ்வாறு சொல்லச்சொல்லி அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்டார்கள்.
நபி அவர்கள் 40-ம் வயதை அடைந்த போது அவர்கள் உள்ளத்தில் பெரும் வினா ஒன்று எதிரொலித்துக் கொண்டிருந்தது. ‘உலகில் இத்தனைப் படைப்புகள் தோன்றியதன் காரணம் என்ன?, நான் எந்த நோக்கத்திற்காக பிறந்தேன்?’ என்று எண்ணி அதற்கான விடையைத் தேடுவதில் ஆர்வம் காட்டினார்கள்.
உலக வாழ்வில் உழன்று கொண்டிருக்கும் வரை இதற்கான விடையை தெரிந்து கொள்ள முடியாது என்று எண்ணினார்கள். எனவே மக்காவின் அருகில் உள்ள ஹீரா என்ற குகையில் சென்று தன்னை தனிமைப்படுத்தி சிந்தனையில் ஆழ்ந்தார்கள்.
நாட்கள் செல்லச்செல்ல மனதின் குழப்பங்கள் தெளிவடைய ஆரம்பித்தன. ஒருநாள் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளார் முன்பு தோன்றினார்கள். “நான் ஏக இறைவன் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட வானவ தூதர். அல்லாஹ் உங்களை தனது நபியாக (தூதராக) ஏற்றுக்கொண்டான். அல்லாஹ்வின் இறைச்செய்தியை உங்களுக்கு அறிவிக்கும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்றார்கள்.
அப்போது நபிகளார் “நான் எழுதப்படிக்கத் தெரியாதவன். நான் எப்படி இறைச்செய்தியை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்?” என்றார்கள்.
“இறைவன் நாடினால் அது அப்படியே நிகழும்” என்று சொல்லிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் கண்மணி நாயகத்தை கட்டித்தழுவினார்கள்.
“ஓதுவீராக! நபியே ஓதுவீராக! அனைத்தையும் படைத்த அல்லாஹ்வின் பெயரால், அவனது கட்டளைகள் அடங்கிய திருகுர்ஆனை ஓதுவீராக! அவனே மனிதனை இரத்த கட்டியிலிருந்து படைக்கின்றான். அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். அதன்மூலம் மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்கு கற்றுக்கொடுத்தான்”, என்று திருக்குர்ஆன் (96:1-5) வசனங்களை அறிவிக்க, தொடர்ந்து நபிகளார் ஓதினார்கள்.
இப்படி பல சந்தர்ப்பங்களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள், இறைவன் கட்டளைகளைக் கொண்டு வந்து நபிகளிடம் சொன்னார்கள். அத்தனை கட்டளைகளும் ஒருசேர தொகுக்கப்பட்ட வேதநூலே ‘திருக்குர்ஆன்’ ஆகும்.
உலகில் இறைக்கட்டளையின் முதல் செய்தி மனிதன் படைப்பின் ரகசியம். அதைத் தொடர்ந்து கல்வியின் மேன்மையைப் பற்றி விவரிக்கின்றது. இதன் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். எனவே இறைமறையின் அறிவுரையைப் பின்பற்றி கல்வியில் கவனம் செலுத்துவோம், அறிவை வளர்த்து உலகில் உயர்ந்து வாழ்வோம்.
அஸ்லம் ஷஹீல், குளத்தூர், சென்னை.
ஆனால், ’இறைவன் ஒருவன்தான், நான் அவனின் தூதன்’ என்று சொன்ன போது மட்டும் அதனை எதிர்த்தார்கள். காரணம் தங்கள் அந்தஸ்தை, கவுரவத்தை அது பாதிப்பதாக அவர்கள் கருதினார்கள்.
காருண்ய நபி, அதனை தானாக சொல்லவில்லை. அவ்வாறு சொல்லச்சொல்லி அல்லாஹ்வால் கட்டளையிடப்பட்டார்கள்.
நபி அவர்கள் 40-ம் வயதை அடைந்த போது அவர்கள் உள்ளத்தில் பெரும் வினா ஒன்று எதிரொலித்துக் கொண்டிருந்தது. ‘உலகில் இத்தனைப் படைப்புகள் தோன்றியதன் காரணம் என்ன?, நான் எந்த நோக்கத்திற்காக பிறந்தேன்?’ என்று எண்ணி அதற்கான விடையைத் தேடுவதில் ஆர்வம் காட்டினார்கள்.
உலக வாழ்வில் உழன்று கொண்டிருக்கும் வரை இதற்கான விடையை தெரிந்து கொள்ள முடியாது என்று எண்ணினார்கள். எனவே மக்காவின் அருகில் உள்ள ஹீரா என்ற குகையில் சென்று தன்னை தனிமைப்படுத்தி சிந்தனையில் ஆழ்ந்தார்கள்.
நாட்கள் செல்லச்செல்ல மனதின் குழப்பங்கள் தெளிவடைய ஆரம்பித்தன. ஒருநாள் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபிகளார் முன்பு தோன்றினார்கள். “நான் ஏக இறைவன் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட வானவ தூதர். அல்லாஹ் உங்களை தனது நபியாக (தூதராக) ஏற்றுக்கொண்டான். அல்லாஹ்வின் இறைச்செய்தியை உங்களுக்கு அறிவிக்கும் படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்றார்கள்.
அப்போது நபிகளார் “நான் எழுதப்படிக்கத் தெரியாதவன். நான் எப்படி இறைச்செய்தியை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும்?” என்றார்கள்.
“இறைவன் நாடினால் அது அப்படியே நிகழும்” என்று சொல்லிய ஜிப்ரீல் (அலை) அவர்கள் கண்மணி நாயகத்தை கட்டித்தழுவினார்கள்.
“ஓதுவீராக! நபியே ஓதுவீராக! அனைத்தையும் படைத்த அல்லாஹ்வின் பெயரால், அவனது கட்டளைகள் அடங்கிய திருகுர்ஆனை ஓதுவீராக! அவனே மனிதனை இரத்த கட்டியிலிருந்து படைக்கின்றான். அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக்கொடுத்தான். அதன்மூலம் மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்கு கற்றுக்கொடுத்தான்”, என்று திருக்குர்ஆன் (96:1-5) வசனங்களை அறிவிக்க, தொடர்ந்து நபிகளார் ஓதினார்கள்.
இப்படி பல சந்தர்ப்பங்களில் ஜிப்ரீல் (அலை) அவர்கள், இறைவன் கட்டளைகளைக் கொண்டு வந்து நபிகளிடம் சொன்னார்கள். அத்தனை கட்டளைகளும் ஒருசேர தொகுக்கப்பட்ட வேதநூலே ‘திருக்குர்ஆன்’ ஆகும்.
உலகில் இறைக்கட்டளையின் முதல் செய்தி மனிதன் படைப்பின் ரகசியம். அதைத் தொடர்ந்து கல்வியின் மேன்மையைப் பற்றி விவரிக்கின்றது. இதன் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். எனவே இறைமறையின் அறிவுரையைப் பின்பற்றி கல்வியில் கவனம் செலுத்துவோம், அறிவை வளர்த்து உலகில் உயர்ந்து வாழ்வோம்.
அஸ்லம் ஷஹீல், குளத்தூர், சென்னை.
தப்பவே முடியாது என்ற ஆபத்தின் உச்சகட்டத்தை அடைந்த நிலையிலும் நம்மைக் காப்பதற்கு அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
மேன்மை மிகுந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களில் குறிப்பிடத்தக்கவர் அபூபக்கர் சித்தீக் (ரலி). அண்ணல் நபிநாதர் (ஸல்) அவர்கள் மீது இவர் கொண்ட அன்பையும், நட்பையும் எதனாலும் கணக்கிட்டு அறிந்து விட முடியாது. இவர், தன் உயிரை விட அதிகமாக நபிகளாரை நேசித்தார். நபிகளாரின் கட்டளையை ஏற்று செயல்படும் தளபதியாகவும், உற்ற தோழராகவும் இவர் விளங்கினார்.
அல்லாஹ்வின் கட்டளைப்படி நண்பர்கள் இருவரும் மக்காவை விட்டு புலம் பெயர்ந்து மதீனாவிற்குச் சென்றனர். வழிநெடுகிலும் எதிரிகளால் ஆபத்து சூழ்ந்திருந்தது. எதிரிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மலை உச்சியில் இருந்த ஒரு பாழடைந்த குகையில் தஞ்சம் அடைந்தார்கள்.
முதலில் குகைக்குள் சென்ற அபூபக்கர் (ரலி) அவர்கள், குகையை நன்றாக சுத்தம் செய்தார். அந்தக்குகையில் ஆங்காங்கே ஓட்டைகள் காணப்பட்டன. எனவே, தன் ஆடையைக் கிழித்து குகையில் உள்ள ஓட்டைகளை அடைத்தார். இதன் பின்னரே நபிகளாரை குகைக்குள் அழைத்தார். நபிகளார் உள்ளே சென்றதும் களைப்பின் மிகுதியால் அப்படியே கண்ணயர்ந்து விட்டார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள், உறங்கும் நபிகளாரின் தலையை தன் மடியில் ஏந்திக்கொண்டார்.
சிறிதுநேரத்தில் துணியால் அடைக்கப்பட்டு இருந்த ஓட்டையில் இருந்து துணியை தள்ளிவிட்டுக்கொண்டு ஒரு பாம்பு தலையை நீட்டியது.
இதை அபூபக்கர் (ரலி) அவர்கள் பார்த்து திடுக்கிட்டார். நபிகள் பெருமானை (ஸல்) அந்தப்பாம்பு தீண்டி விடுமோ என்று அச்சப்பட்டார்கள்.
உடனே தன் கால் விரலால் அந்த துவாரத்தை மூடினார்கள். அப்போது அந்த பாம்பு அபூபக்கர் (ரலி) அவர்களின் கால்விரல்களை கடித்தது. பாம்பின் கொடிய விஷம் உடலில் ஏறியதால் ஏற்பட்ட வலியின் காரணமாக அபூபக்கர் (ரலி) அவர்களால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் அவரது மடியில் படுத்திருந்த அண்ணல் நபியின் கன்னங்களில் விழுந்து தெறித்தது.
விழித்துக் கொண்ட நபியவர்கள் “என்ன நிகழ்ந்தது?” என்று வினவினார்கள். விபரம் அறிந்து கொண்ட கண்மணி நாயகம் தன் உமிழ்நீரை பாம்பு கடித்த இடத்தில் தடவினார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு வலி இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விட்டது.
சிறிது நேரத்தில் எதிரிகள் குகையின் வாசல் அருகே வந்து விட்டார்கள். சற்று குனிந்து பார்த்தால் இருவரும் பிடிபட்டு விடுவார்கள். இதனால் அபூபக்கர் (ரலி) பயந்து விட்டார்கள். ஆனால் அண்ணல் நபியவர்கள் சிறிதும் கவலை கொள்ளவில்லை.
தைரியமாக அபூபக்கர் (ரலி) அவர்களை நோக்கி, ‘நீர் அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான். அவனே நமக்குப் போதுமானவன், பாதுகாப்பவன்’ என்றார்கள்.
குகையின் வாசலில் நின்ற எதிரிகள் அங்கே பறவைகள் கூடு கட்டி இருப்பதையும், சிலந்தி வலை பின்னியிருப்பதையும் பார்த்து விட்டு, ‘அவர்கள் இங்கே இருப்பதற்கு வாய்ப்பில்லை’ என்று கருதி சென்று விட்டார்கள்.
இதையே திருக்குர்ஆன் வசனம் (9:40) இவ்வாறு குறிப்பிடுகிறது: “நிராகரிப்பாளர்கள் அவரை (நபிகளாரை) வெளியேற்றியபோது திண்ணமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்துள்ளான். அவர்கள் இருவரும் (நபிகளாரும், அபூபக்கரும்) குகையில் தங்கியிருந்தபோது, இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தன் தோழரை நோக்கி “கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வைக்குத் தென்படாதிருந்த படைகளின் மூலம் அவருக்கு உதவி செய்தான். மேலும், இறை நிராகரிப்பாளர்களின் வாக்கைத் தாழ்த்தினான். மேலும், அல்லாஹ்வின் வாக்குதான் மேலானதாக இருக்கிறது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான்”.
இனி தப்பவே முடியாது என்ற ஆபத்தின் உச்சகட்டத்தை அடைந்த நிலையிலும் நம்மைக் காப்பதற்கு அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நாம் நினைத்திராத திசையிலிருந்தும் எண்ணியிராத விதத்திலும் அல்லாஹ் நம்மை காப்பாற்றுவான். அல்லாஹ் நம் எண்ணங்களையும் நம்பிக்கையின் உறுதியையும் தான் உற்று நோக்குகின்றான்.
அல்லாஹ்வை நம்பியவருக்கு அவன் எப்போதும் துணையிருப்பான்.
மு. முகமது யூசுப், உடன்குடி.
அல்லாஹ்வின் கட்டளைப்படி நண்பர்கள் இருவரும் மக்காவை விட்டு புலம் பெயர்ந்து மதீனாவிற்குச் சென்றனர். வழிநெடுகிலும் எதிரிகளால் ஆபத்து சூழ்ந்திருந்தது. எதிரிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மலை உச்சியில் இருந்த ஒரு பாழடைந்த குகையில் தஞ்சம் அடைந்தார்கள்.
முதலில் குகைக்குள் சென்ற அபூபக்கர் (ரலி) அவர்கள், குகையை நன்றாக சுத்தம் செய்தார். அந்தக்குகையில் ஆங்காங்கே ஓட்டைகள் காணப்பட்டன. எனவே, தன் ஆடையைக் கிழித்து குகையில் உள்ள ஓட்டைகளை அடைத்தார். இதன் பின்னரே நபிகளாரை குகைக்குள் அழைத்தார். நபிகளார் உள்ளே சென்றதும் களைப்பின் மிகுதியால் அப்படியே கண்ணயர்ந்து விட்டார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள், உறங்கும் நபிகளாரின் தலையை தன் மடியில் ஏந்திக்கொண்டார்.
சிறிதுநேரத்தில் துணியால் அடைக்கப்பட்டு இருந்த ஓட்டையில் இருந்து துணியை தள்ளிவிட்டுக்கொண்டு ஒரு பாம்பு தலையை நீட்டியது.
இதை அபூபக்கர் (ரலி) அவர்கள் பார்த்து திடுக்கிட்டார். நபிகள் பெருமானை (ஸல்) அந்தப்பாம்பு தீண்டி விடுமோ என்று அச்சப்பட்டார்கள்.
உடனே தன் கால் விரலால் அந்த துவாரத்தை மூடினார்கள். அப்போது அந்த பாம்பு அபூபக்கர் (ரலி) அவர்களின் கால்விரல்களை கடித்தது. பாம்பின் கொடிய விஷம் உடலில் ஏறியதால் ஏற்பட்ட வலியின் காரணமாக அபூபக்கர் (ரலி) அவர்களால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் அவரது மடியில் படுத்திருந்த அண்ணல் நபியின் கன்னங்களில் விழுந்து தெறித்தது.
விழித்துக் கொண்ட நபியவர்கள் “என்ன நிகழ்ந்தது?” என்று வினவினார்கள். விபரம் அறிந்து கொண்ட கண்மணி நாயகம் தன் உமிழ்நீரை பாம்பு கடித்த இடத்தில் தடவினார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு வலி இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விட்டது.
சிறிது நேரத்தில் எதிரிகள் குகையின் வாசல் அருகே வந்து விட்டார்கள். சற்று குனிந்து பார்த்தால் இருவரும் பிடிபட்டு விடுவார்கள். இதனால் அபூபக்கர் (ரலி) பயந்து விட்டார்கள். ஆனால் அண்ணல் நபியவர்கள் சிறிதும் கவலை கொள்ளவில்லை.
தைரியமாக அபூபக்கர் (ரலி) அவர்களை நோக்கி, ‘நீர் அச்சம் கொள்ளாதீர். நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான். அவனே நமக்குப் போதுமானவன், பாதுகாப்பவன்’ என்றார்கள்.
குகையின் வாசலில் நின்ற எதிரிகள் அங்கே பறவைகள் கூடு கட்டி இருப்பதையும், சிலந்தி வலை பின்னியிருப்பதையும் பார்த்து விட்டு, ‘அவர்கள் இங்கே இருப்பதற்கு வாய்ப்பில்லை’ என்று கருதி சென்று விட்டார்கள்.
இதையே திருக்குர்ஆன் வசனம் (9:40) இவ்வாறு குறிப்பிடுகிறது: “நிராகரிப்பாளர்கள் அவரை (நபிகளாரை) வெளியேற்றியபோது திண்ணமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்துள்ளான். அவர்கள் இருவரும் (நபிகளாரும், அபூபக்கரும்) குகையில் தங்கியிருந்தபோது, இருவரில் இரண்டாமவராய் இருந்த அவர் தன் தோழரை நோக்கி “கவலை கொள்ளாதீர்; அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை இறக்கி அருளினான். மேலும், உங்களின் பார்வைக்குத் தென்படாதிருந்த படைகளின் மூலம் அவருக்கு உதவி செய்தான். மேலும், இறை நிராகரிப்பாளர்களின் வாக்கைத் தாழ்த்தினான். மேலும், அல்லாஹ்வின் வாக்குதான் மேலானதாக இருக்கிறது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான்”.
இனி தப்பவே முடியாது என்ற ஆபத்தின் உச்சகட்டத்தை அடைந்த நிலையிலும் நம்மைக் காப்பதற்கு அல்லாஹ் நம்மோடு இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நாம் நினைத்திராத திசையிலிருந்தும் எண்ணியிராத விதத்திலும் அல்லாஹ் நம்மை காப்பாற்றுவான். அல்லாஹ் நம் எண்ணங்களையும் நம்பிக்கையின் உறுதியையும் தான் உற்று நோக்குகின்றான்.
அல்லாஹ்வை நம்பியவருக்கு அவன் எப்போதும் துணையிருப்பான்.
மு. முகமது யூசுப், உடன்குடி.
இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாகூர் தர்கா ஆட்கள் நடமாட்டமின்றி களை இழந்து காணப்பட்டது.
இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையை விமரிசையாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பக்ரீத் பண்டிகை களை இழந்தது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் கூட்டமாக கூடி தொழுகை நடத்த தமிழக அரசு தடை விதித்தது. பக்ரீத் பண்டிகை தொழுகையை அவரவர் வீட்டில் நடத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியது. அதன்படி நாகூர் பகுதியில் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே நேற்று பக்ரீத் தொழுகை மேற்கொண்டனர்.
உலக பிரசித்திப்பெற்ற நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை நாளில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகை மேற்கொள்வார்கள். அப்போது ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள். சிறியவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாகூர் தர்கா ஆட்கள் நடமாட்டமின்றி களை இழந்து காணப்பட்டது. சிலர் தர்கா வெளிப்புறத்தில் நின்று முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பிரார்த்தனை செய்தனர்.
பக்ரீத் பண்டிகையில் நாகூர் தர்காவில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை, விளக்க உரை, பாத்திஹா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
உலக பிரசித்திப்பெற்ற நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை நாளில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகை மேற்கொள்வார்கள். அப்போது ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வார்கள். சிறியவர்கள், பெரியவர்களிடம் ஆசி பெற்றுக்கொள்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நாகூர் தர்கா ஆட்கள் நடமாட்டமின்றி களை இழந்து காணப்பட்டது. சிலர் தர்கா வெளிப்புறத்தில் நின்று முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பிரார்த்தனை செய்தனர்.
பக்ரீத் பண்டிகையில் நாகூர் தர்காவில் நடைபெறும் கூட்டு பிரார்த்தனை, விளக்க உரை, பாத்திஹா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக மசூதிகளில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தாருடன் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் பண்டிகை ஆகும். இதனையொட்டி நேற்று நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் உள்ள முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். புத்தாடை அணிந்து ஆண்களும், பெண்களும் தனித்தனியே சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால் தற்போது கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக மசூதிகளில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தாருடன் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் தொழுகையின் முடிவில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து பக்ரீத் வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்தனர்.
செல்போனில் குறுஞ்செய்தி மூலமாகவும் பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.
ஆனால் தற்போது கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு காரணமாக மசூதிகளில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தாருடன் தங்களது வீடுகளிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் தொழுகையின் முடிவில் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து பக்ரீத் வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்தனர்.
செல்போனில் குறுஞ்செய்தி மூலமாகவும் பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.






