என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
5 மாதங்களுக்கு பிறகு மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
Byமாலை மலர்5 Sep 2020 3:31 AM GMT (Updated: 5 Sep 2020 3:31 AM GMT)
மசூதிகளில் ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பிறகு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மசூதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 1-ந்தேதி முதல் தமிழகத்தில் மத வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாடுகள் நடந்து வருகிறது. மக்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டு வழிபாட்டு தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.
பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று மசூதிகளில் ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பிறகு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மசூதிகளில் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. கைகளில் சானிடைசர் (கிருமிநாசினி) தெளிக்கப்பட்ட பின்னரே மசூதிகளின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பொதுவாகவே வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று மசூதிகளில் ஏறக்குறைய 5 மாதங்களுக்கு பிறகு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். மசூதிகளில் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. கைகளில் சானிடைசர் (கிருமிநாசினி) தெளிக்கப்பட்ட பின்னரே மசூதிகளின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சமூக இடைவெளியை கடைபிடித்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X